Jump to content

தமிழ் மொழியின் இந்தச் சகரச் சிக்கலுக்கு தீர்வே இல்லையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியின் இந்தச் சகரச் சிக்கலுக்கு தீர்வே இல்லையா?

 
tamil-Language.jpg
கொஞ்ச நாளாகவே, இங்கு வெளிநாட்டிலேயே பிறந்த வளரும் தமிழ் சிறுமி ஒருத்திக்கு தமிழ் கற்றுக் கொடுத்து வருகின்றேன். உண்மையில், கற்பிக்கத் தொடங்கும் போதே உண்மையான ஆசிரியன் ஒருவன் உருவாகுகின்றான் என்பதை நான் உணர்ந்தேன். அவளுக்கு தமிழ் எழுத்துக்களைக் காட்டி கற்பிக்கத் தொடங்கிய போது தான், அவள் கேட்ட கேள்வி ஒன்றினால்? எனக்கே சில விடயங்கள் புரிந்தன. 
உலகத்தில் ஏழாயிரம் மொழிகள் இருக்கிறதாம், ஒவ்வொரு மொழியும் ஒருவிதத்தில் அழகு தான். உலகத்தில் எத்தனையோ தாய் இருந்தாலும், அவங்கவங்களுக்கு அவங்கவங்க தாய் தானே ஒசத்தி. அது போலத் ஒவ்வொரு மொழி பேசுகிற மக்களுக்கும் அவரவர் மொழி ஒசத்தி தான். 
 
நமக்கு நம் தமிழ் மொழி எப்போதுமே ஒசத்தி தான். ஒசத்தியாக நினைக்காதவரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியது கிடையாது. இந்தியாவில் எத்தனையோ மொழி இருக்கிறது, ஆனால் தமிழ் மொழிக்கு தனிச் சிறப்புக்கள் நிறையவே உள்ளன. 
 
தமிழ் மொழி மிகப் பழமையானது, செம்மையானது, இனிமையானது. இன்று இந்தியாவில் பேசப்படுகின்ற எல்லா மொழிகளுமே 10-ம் நூற்றாண்டுக்கு பின்னர் உருவானவை, ஆனால் தமிழ் மொழி மட்டுமே கிமு 500-களிலேயே செம்மைப்படுத்தப்பட்டு, இன்று வரை அதிகளவு மாற்றமின்றி இருந்து வருகின்றது. நிச்சயமாகப் பழந்தமிழ், சங்கத்தமிழ், இடைத்தமிழ் எனத் தமிழ் மொழியும் மாறி வந்திருக்கின்றது, ஆனால் பழந்தமிழுக்கும் தற்காலத் தமிழுக்கும் இடையிலான வேறுபாடு என்பது மிகக் குறைவே. 
 
தமிழ் மொழியின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? தமிழில் நிறைய எழுத்துக்கள் கிடையாது, மொத்த எழுத்துக்களே 31 மட்டுமே. அது மட்டுமில்லை இந்திய மொழிகளில் க்க், ங்க் என வரும் பல கூட்டொலிகளை தனியாக எழுதுவதில்லை, இதைச் சேர்த்து எழுதுவதோடு அதற்கு என தனி எழுத்துக்கள் இருக்கின்றன. இதனால் அந்தந்த மொழிகளைக் கற்போர் நூற்றுக் கணக்கான எழுத்துக்களை கற்று நியாபகம் வைத்திருக்க வேண்டியும் இருக்கிறது. தமிழில் அந்த சிக்கல் இல்லை, தமிழில் மட்டுமே எழுதுவதும், வாசிப்பதும் மிகச் சுலபம். 
 
ஆனால் ! தொல் தமிழில் மிகவும் குறைவான ஒலிகள் மட்டுமே இருந்தன, அதனால் மிகவும் குறைவான எழுத்துக்களை மட்டுமே உருவாக்கினார்கள். தொல்காப்பியர் காலத்தில் முதன்மை எழுத்துக்களாக 12 உயிரெழுத்துக்கள், 18 மெய்யெழுத்துக்கள் இருந்தன. 
 
அதோடு குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்று சார்பு எழுத்துக்களும் இருந்தன. ஐகாரம், ஒளகாரம், குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகியவைக்கு தனி வரிவடிவம் இருந்திருக்கவில்லை. ஐகாரம் -அஇ எனவும், ஒளகாரம் அஉ எனவும், குற்றியலிகரம் - இ எனவும், குற்றியலுகரம் உ எனவுமே எழுதப்பட்டன.
 
ஆனால் பிற்காலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியால் ஐகாரம், ஒளகாரத்துக்கு தனி வரிவடிவம் வந்ததோடு. சார்பு எழுத்துக்கள் மூன்றில் இருந்து பத்தாக பெருகியதை 12-ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட நன்னூல் காட்டுகின்றது. அதன் பிறகு தமிழ் மொழி எவ்வளவோ வளர்ச்சி பெற்றுவிட்டன, இன்று தமிழ் மொழியில் பல ஒலிகள் பேச்சு வழக்கில் இருந்து வருகின்றன. சில ஒலிகள் தமிழ் மொழியில் இன்று விலக்கவே இயலாத அளவுக்கு இணைந்துவிட்டன. ஆனால், அந்த ஒலிகளை முறையாக எழுதும் வண்ணம் தமிழ் மொழி எழுத்துக்கள் வளர்ச்சியடையவில்லை. 
 
இதனால் தமிழில் இருக்கின்ற முதன்மையான எழுத்துக்களைக் கொண்டும், சில சமயங்களில் ஜ, ஸ, ஷ, ஹ போன்ற பல்லவ எழுத்துக்களை சேர்த்தும் எல்லா ஒலிகளையும் எழுதி வருகின்றோம். ஆனால் ! இங்கு தான் ஒரு பிரச்சனை கிளம்பியது. 

கடந்த முப்பதாண்டுகளில், தமிழ் மொழியானது அதிகளவு சிதைவுக்கு உள்ளாகி வருவதும், பெருமளவில் தமிழ் மயமாக்கப்படாமல் அப்படியே வேற்று மொழிச் சொற்களை ஏற்றுப் பயன்படுத்தி வருவதாலும், அதன் அடிப்படை இலக்கணத்தில் இருந்து பேச்சு மொழி அழியத் தொடங்கிவிட்டதோ என்ற எண்ணமும் எழுகின்றது.

ஆனால் ! தமிழ் மொழியானது அதன் உண்மையான வடிவங்கள் அதன் வட்டார மொழிகளில் இன்றளவும் தொடர்ந்து நிலைத்து வருவது ஒரு ஆறுதலான விடயம். அவ்வாறான ஒரு சிறப்பாம்சமே தென் தமிழகத்துப் பேச்சுக்களில் மொழி முதலில் வருகின்ற சகரம் சகரமாகவே ஒலிக்கப்படுவது. 

 
தமிழ் மெய்யெழுத்துக்களில் மூன்றாவது எழுத்தான சகர மெய் ( ச் ) என்ற எழுத்தை இன்று பலரும் மெய்யாக வரும் போது "ச்" எனச் சொன்னாலும், உயிர் மெய்யாக மாற்றும் போது ( ச, சா, சி, சீ, செ, சே, சை, சொ, சோ, சௌ ) அவற்றை ஸ என ஒலிக்கின்றார்கள்.

வல்லின ஒலியனான சகரத்திற்கு மூன்று மாற்றொலிகள் உள்ளன. சொல் முதலிலும் இடையிலும் இரட்டித்தும் மெல்லின எழுத்துகளுக்கு அடுத்தும் வரும்பொழுது இந்தச் சகரத்தின் ஒலிப்பில் மாற்றம் இருப்பதை உணர/கேட்க முடியும்.

  •  [Ch] சகரம், சொல் முதலில் வரும் போதும், நடுவில் இரட்டித்து வரும்பொழுதும் சொல் நடுவில் வல்லினத்தை அடுத்து வரும்பொழுதும் இம்மாற்றொலியைக் கேட்க முடியும். எடுத்துக்காட்டு. பச்சை, மொச்சை, கட்சி, பட்சி. 
  • [ J ] சகரத்தின் மற்றொரு மாற்றொலியைச் சொல் நடுவில் மெல்லினத்தை அடுத்து வருகின்றபொழுது கேட்க முடியும் எடுத்துகாட்டு மஞ்சள், பஞ்சு, கொஞ்சு, கெஞ்சு.
  • [ S ] சகரத்தின் மூன்றாவது மாற்றொலியைச் சகரம் சொல் முதலிலும் சொல் நடுவில் இரண்டு உயிர்களுக்கு இடையிலும், ல் ஒலியனுக்கும் ஒரு உயிருக்கும் இடையிலும் வருகின்றபொழுதும் உணர முடியும். எடுத்துகாட்டு சாப்பிடு. சட்டை, பசி, ஊசி, வல்சி.
ஏன் இந்தக் குழப்பம் ? 
 
தொடக்கக் காலங்களில் பல பிராகிருத, சமற்கிருதம் போன்ற வடமொழி சொற்கள் தமிழுக்கு வந்து சேர்ந்தன. இவற்றை எழுத தமிழில் தனி எழுத்துக்கள் கிடையாது, அதனால் தமிழில் இருக்கின்ற எழுத்துக்களையே பயன்படுத்தினார்கள். உதாரணத்துக்கு SEVA என்ற வடசொல் தமிழில் சேவை என ஏற்கப்பட்டது. ஆனால் தமிழில் SA என எழுத தனி எழுத்துக் கிடையாது, அதனால் அதனை ஒத்த CHA ( ச ) -வை SA என எழுதவும் பயன்படுத்தினார்கள். ASHRAM என்பதை தமிழில் ஆச்ரமம் என எழுதினார்கள். இவ்வாறு வடமொழியின் ஸகர ஒலி எழுத்துக்கள் அனைத்தையும் தமிழில் சகரம் கொண்டு எழுதினார்கள். காலப் போக்கில், ச என்பதே ஸ என்ற நிலையானது. ச் மட்டும் பிழைத்துக் கொண்டது. இன்று தமிழர்கள் பலரும் CHA ( ச )- வை மறந்துவிட்டனர். நல்லகாலமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, யாழ்ப்பாணம் போன்ற தென் தமிழக வட்டார வழக்குகளில் CHA ( ச ) இன்றளவும் உயிரோடு இருக்கின்றது. மலையாளத்தில் CHA, SA வேறுபாடுகளைக் காட்ட தனித் தனி எழுத்துக்கள் உள்ளதால், தொல் தமிழ் CHA ( ச )-கர சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. 
 
எடுத்துக்காட்டுக்கு: சோறு, சேறு, சொல், செல் போன்ற பச்சைத் தமிழ்ச் சொற்கள் முறையே CHORU, CHERU, CHOL, CHEL எனத் தான் ஒலிக்க வேண்டும். ஆனால் இன்றைய பெரும்பாலான தமிழர்கள் இதனை SORU, SERU, SOL, SEL என ஒலிக்கின்றார்கள். கொடுமையல்லவா? ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டின கதையாகிவிட்டது, தமிழின் சகர ஒலி. சந்தனம், சந்திரன், சர்க்கரை போன்றவைகள் கூட முறையே CHANDANAM, CHANDIRAN, CHARKKARAI என ஒலிக்கப்படாமல் SANDANAM, SANDIRAN, SARKKARAI என்றாகிவிட்டது. சேர, சோழ பாண்டியர் என்பதை CHERA, CHOLA, PANDIYAR என ஒலிக்காமல் SERA, SOLA, PANDIYAR எனச் சொல்வதே பிழையானது. 
 
இவ்வாறு CHA ( ச )-கர ஒலிகள் ஒவ்வொன்றும் தமிழில் இருந்து அழிந்து வருவதை தடுக்கவோ, காக்கவோ தமிழறிஞர்கள் ஒருவரும் முயலவே இல்லை என்பது தான் வேதனையான மற்றுமொரு உண்மையாகும். 
 
"சகார ஞகாரம் இடைநா அண்ணம்"  என்னும் நூற்பா தொண்ணூற்றில் அடிவயிற்றிலிருந்து மேலேழுந்து வருகின்ற ஓசைக் காற்றை மேல்வாய்ப் பகுதியின் நடுவில் நாவின் இடைப்பகுதியைப் பொருந்தி தடுப்பதால் ‘ச்’, ‘ஞ்’ ஆகிய மெய் எழுத் துகள் பிறந்து ஒலிக்கின்றன.
 
"மெய்யின் வழிய துயிர் தோன்று பிழையே" என்னும் நூற்பா பதினெட்டில் உயிர் மெய் எழுத்துகளில் முதழில் மெய்யும் பின்பு உயிரும் ஒழிக்கின்றன என விளக்கு வதால் சகர உயிர்மெய் எழுத்துகள் யாவையும் முதழில் மெய்யின் ஒசையை ஒழிந்து பின்பு உயிரின் ஓசையை ஒலிக்க வேண்டும்.
 
அதாவது ச்+அ = ச என்பதை CH+A = CHA என்றே ஒலிக்க வேண்டுமே ஒழிய, CH+A = SA என்று ஒலிப்பதே மிகப் பெருந்தவறாகும். மெய் எழுத்தான ‘ச்’ (சகரம்) வல்லின வகையைச் சார்ந்ததால் அதை எப் பொழுதும் நன்கு பொருந்தி (அழுத்தமாக) வன்மையாக ( CHA ) என ஒலிக்க வேண்டும். 
 
ஆனால் இன்று என்ன நடந்திருக்கின்றது, தமிழின் மெய்யொலியான CHA ( சகரம் )- முற்றாக அழியும் ஆபத்தில் இருக்கின்றது. அதனை மிகச் சரியாக உச்சரிப்பவர்களைக் கூட தமிழாசிரியர்கள் உட்பட பலரும் தவறாக ஒலிக்க வழி வகுக்கின்றனர், அல்லது கிண்டலும் கேலியும் செய்யப்படுகின்றனர்.

இன்று CHA ஒலியை தமிழில் குறிப்பாக இணையத்தில் எழுத பலரும் முயல்கின்றனர், அவர்கள் யாவரும் ச்ச என எழுத முற்படுகின்றனர். தமிழில் ச் என்பது CH என்றே ஒலிப்பதால் ச் என்பதற்கு அடுத்து வரும் ச என்பது SA என ஒலிக்காமல் CHA என ஒலிக்கப்படுகின்றது, அதனால் ச்ச என்பதை CHA -வுக்கு எழுதுகின்றனர். ஆனால் தமிழ் இலக்கணத்தில் மெய்யெழுத்தில் சொற்கள் தொடங்குவதில்லை. சென்னை என்பதை CHENNAI எனச் சொல்கின்றோம், பழக்கப்பட்டு விட்டதால் அதற்காக ச்சென்னை என எழுதுவதில்லை. ஒரே எழுத்து என்பதால் தமிழின் மெய்யொலியான CHA என்பது மறைந்து SA ஒலியால் நிரப்பப்பட்டு வருவது வேதனையான உண்மையாகும்.

 
ஆனால் உண்மையில் "ச" என்று எழுத்தின் உண்மையான ஒலி CHA என்பதே. சென்னை என்று எழுதும் போது அதனை SENNAI என்று சொல்வது பிழையானது, அதனை CHENNAI என்றே சொல்ல வேண்டும். ஆனால், தமிழில் SA என்ற ஒலிக்கு தனி எழுத்துக் கிடையாது, இடைக்காலங்களில் SA என்ற ஒலிக்கும் ச என்றே எழுதத் தொடங்கியதன் பின்விளைவு, இன்று இந்த SA ஒலி CHA ஒலியை முற்றாக விழுங்கிவிட்டது எனலாம். CHANDRAN என்ற வடசொல்லை சந்திரன் என எழுதி அதனை SANTHIRAN என ஒலிப்பவர்கள் பலரும் இருக்கின்றனர். 
 
வசனம் என்ற வடமொழிச் சொல்லை தமிழில் VACHANAM என்று ஒலிக்காமல் VASANAM என ஒலிக்கின்றோம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் சினிமாக்களில் கதாப்பாத்திரங்கள் வசனம் என்பதை VACHANAM என ஒலித்திருப்பார்கள்.

சந்தேகம், சந்தோசம், சமூகம் என்பதன் சகரமும் ஒரே எழுத்தில் இருந்தாலும் மூன்றும் முறையே SANDEGAM, SANDOSAM, SAMOOGAM எனவும் உச்சரிக்க வேண்டும்,

ஆனால் தமிழில் இன்றுள்ளதைப் போன்றே ( ச ) எழுதினால் எது CHA, எது SA என்பதை அறியவே இயலாது. 

 
அதற்காகத் தமிழில் புதிய எழுத்துக்களைச் சேர்த்துவிடுங்கள் என நான் கூறவில்லை, ஏனெனில் கிரந்தப் பிரியர்கள் பலரும் தமிழில் இருக்கின்ற எழுத்துகள் போதாது எனக் கூறி ஒருங்குறி வரை சென்று வடமொழிக்கான கிரந்த எழுத்துக்களைத் தமிழில் சேர்க்க முயன்று, அதனைத் தடுக்கத் தமிழர்கள் பட்டபாடு பெரும்பாடு என்பதை நன்கு அறிவோம். ஏற்கனவே தமிழின் வட்டார மொழியாகத் திகழ்ந்த மலையாளத் தமிழ் இவ்வாறு கிரந்த எழுத்துக்களை ஏற்று எழுதத் தொடங்கியதன் விளைவு இன்று அது தனி மொழியாகிப் போனது, அவ்வாறான நிலை இனி ஏற்படும் வாய்ப்புக் குறைவு என்றாலும், கிரந்த எழுத்துக்களைக் கொண்டு வருவது தமிழ் இலக்கணத்தின் சிறபாம்சமான தமிழ் மயமாக்கல் முறையைச் சிதைத்துவிடும் அபாயமும் இருக்கின்றது.  
 
இதனை எவ்வாறு நிறுத்துவது, தமிழ் மொழியைக் கற்பிக்கும் போது CHA, SA வேறுபாடுகளை எவ்வாறு எடுத்துக் காட்டுவது. எந்த இடத்தில் CHA வர வேண்டும் எந்த இடத்தில் SA வரவேண்டும் என்பதை எவ்வாறு வெளிக்காட்டுவது? 
 
தமிழில் எழுத்துவடிவத்திற்கும் உச்சரிப்புக்கும்  மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எழுதுவதை மாற்றொலி விதிகளோடு அப்படியே வாசிக்கமுடியும். ஆங்கில எழுத்துமுறை வேறு.  எழுத்துகளுக்கும் உச்சரிப்புக்கும் நெருங்கிய தொடர்பு கிடையாது. சில வேளைகளில் தொடர்பே இருக்காது. அங்கு எழுதுவதை அப்படியே உச்சரிக்கமுடியாது.  
 
தமிழ் மொழியின் இனிமைக்குக் குறைபாடு வாராமல் தமிழ் மொழியிலே பிற மொழி ஒலிப்புகளை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதே கேள்வி. இதற்கான தீர்வு மிக எளிமையானது, மக்கள் அறியாத புதிய எழுத்தைக் கொண்டு வருவதை விடவும், புதிய எழுத்துகள் இல்லாமல் 2-3 குறியீடுகளைக் கொண்டு தமிழில் பேசப்படும் எல்லா ஒலிகளையும், அது தவிர வேறு சில ஒலிகளையும் குறிக்க இயலும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் எழுத்திலேயே சிறிய மாற்றம் செய்து ஒலிப்பு வேறுபாடுகளைக் காட்டலாம். இது ஒன்றும் புதிய முறையல்ல, ஏற்கனவே ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும், இந்தி உட்பட இந்திய மொழிகளில் கூடவும் இவ்வாறான உத்தி கையாளப்படுகின்றது. இதன் மூலம் நெடுங்கணக்கு மாற்றப்படுவதில்லை, ஒலிப்பு முறைகளில் வேறுபாட்டை வாசிப்பவர் அறிய உதவுகின்றது. 
 
‘மாற்றொலிகள் வேறுபடுத்தி ஒலிக்கப்படாவிட்டாலும் பொருள்கொள்வதில் குழப்பம் விளைவதில்லை. ஆனால் அவ்வகை உச்சரிப்பு தமிழ்மொழியின் இயல்பு வழக்கினின்றும் வேறுபட்டு அயற்றன்மை உடையதுபோல் ஆகிவிடும். இயல்பான தமிழ்ப்பேச்சாக அமையாது’ என்று ஒலியியல் பேராசிரியர் க. முருகையன் கூறுவார். 
 
ஆங்கிலத்தில் Diacritics என்பார்கள், ஏற்கனவே உள்ள எழுத்துக்கள் மேலோ, கீழோ ஒரு சிறிய புள்ளியையோ, கோடையோ இடுவதாகும். பிரஞ்சு மொழியை வாசிப்பவர்கள் இதனை நன்கு அறிவார்கள், இதனைத் தமிழில் பயன்படுத்துவதில் எந்தவிதச் சிக்கலும் இருக்கப் போவதில்லை. ஏற்கனவே நாம் மெய்யெழுத்துக்களைக் குறிக்க எழுத்தின் மேலே புள்ளியிட்டு வருகின்றோம். அதைப் போலவே ச எழுத்தின் கீழே ஒரு குறியீட்டை இடுவதன் மூலம் SA, CHA வேறுபாடுகளை வாசிப்பவர்களுக்கு உணர்த்தலாம். இதன் மூலம் ஒலிப்பு மயக்கம் என்பது வராது, அது மட்டுமின்றிப் பழந்தமிழ் ஒலிப்பான CHA அழிந்து விடாமல் காக்க இயலும். 
 
ஒரு மொழியானது செம்மையாகப் பேசப்படும் போதே அது உயிர்வாழும், ஏடுகளில் எழுதி வைத்து எழுத்துக்களைப் பொத்தி பொத்தி காப்பாற்றுவதால் உயிர் வாழ்ந்திடாது. இன்று கிரேக்கமும், லத்தீனும், சமஸ்கிருதமும், பிராகிருதமும் ஏடுகளில் மட்டுமே வாழ்கின்றது. ஆனால் பேச்சு முறையில் அழிந்து விட்டன. 
 
CHA-SA%2BTAMIL.png
‘தமிழ்மொழியினைத் தெளிவாக உச்சரிக்கும்போது அது மேலும் அழகு பெறுகிறது. உச்சரிப்பு சரியில்லை என்றால் மொழியின் பொருளும் மாறுகிறது. ‘ஒரு மொழியின் பொருள்தரு ஒலிகளை – ஒலியன்களை அத்தாய்மொழியாளர் நன்குணர்ந்திருப்பர். இஃது அன்னாரின் உளவறிவு (Psychological image).  ஆனால் அவ்வொலியன்கள் இடம், சூழல்களுக்கு ஏற்ப மாறிவருவதனை அவர் யாரும் சாதாரண நிலையில் அறிந்திருப்பதில்லை. காரணம் மனிதமூளை ஒலிகளை, அவை மொழியில் பொருள் அல்லது இலக்கணக் கூறுகளை வெளிப்படுத்தும் பணிபினைக்கொண்டே தேர்வே செய்கிறது. அலகுகளாகக் கொள்கிறது. மற்ற ஒலிகளைப் பிறர் கூற்றாலோ ஒலியியல் அறிவாலோதான் அறிகின்றது’ என்று ஒலியியல் பேராசிரியர் க. முருகையன் கூறுவார்.
 
நாம் எழுத்துக்களை இன்று சீர்திருத்தம் செய்யாவிட்டால், பேச்சின் மெய்யொலிகளை இழக்க நேரிடும், இதன் மூலம் தமிழின் தனித்துவமான ஒலிப்புக்கள் அழிந்தே போய்விடும். அவற்றில் முதன்மையானது சகர ஒலி என்பதை நாம் அறிய வேண்டும். 
 
முதலில் தமிழறிஞர்கள் CHA - SA ஒலிகள் உடைய சொற்களை அதன் செவ்வியல் வடிவில் வேறுபடுத்திப் பட்டியலிட வேண்டும். அவ்வாறு பட்டியலிடும் போது ச என்பதை SA எனவும் ச எழுத்தின் கீழ் ஒரு குறியையிட்டு அதனை CHA எனவும் வேறுபடுத்திக் காட்ட வேண்டும். பின்னர் அந்தப் பட்டியலை ஒரு நூலாக வெளியிடலாம். அந்த நூலின் பின்பற்றலில் முறையாகச் செய்திதாள்கள், நூல்கள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் பின்பற்றலாம். இந்த வேறுபாட்டை ஒருங்குறியில் காட்டவும் இந்த முயற்சியில் கணினி வல்லுநர்களும் மென்பொருள் தயாரிப்பாளர்களும் ஈடுபட்டு உதவுகின்றபொழுது தமிழ் மொழி மேன்மேலும் வளம் பெறுவதோடு, கிரந்தத்தின் உதவியின்றியே தமிழை எழுதவும், வாசிக்கவும் முக்கியமாக பேசுவது போல எழுதவும், எழுதுவது போல வாசிக்கவும் முடியும்.

http://www.managaran.com/2015/02/tamil-cha-sa-letter-pronunciation-script-issues1.html

செய் என்பதை CHEI என்பீர்களா? SEI என்பீர்களா?  சரி என்பதை SARI என்பீர்களா? CHARI என்பீர்களா? எது சரியானது என்பதை அறிவீர்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான பதிவு. பகிர்விற்கு நன்றி..

நான் ஆரம்ப பள்ளியில் படிக்கும்போது தமிழின் எழுத்துக்களோடு வடமொழி எழுத்துக்களையும் ( ஹ, ஸ, ஷ், ஜ, ஸ்ரீ ) சேர்த்தே கற்பித்தனர்..ஆனால் ஈழத்தமிழர்கள் இந்த வடமொழி எழுத்தே இல்லாமல், அழகாக தமிழ் எழுத்துக்களை மட்டுமே உபயோகிப்பதைக் கண்டு பெருமையாகவும், அதே சமயம் எம்மை இப்படி கலப்படமாக தமிழில் பயன்படுத்த கற்பித்துவிட்டார்களே என வருத்தமாகவும் இருக்கும். எழுதியே பழகிவிட்டதால் தவிர்க்கவும் இயலவில்லை.. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான பயனுள்ள கட்டுரை. புலம்பெயர் நாடுகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் நடைபெறும் போதெல்லாம், நான் நினைக்கிறேன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக திரு தாசீசியஸ் அவர்கள் இந்த ச உச்சரிப்புப் பற்றி தெளிவாகக் கூறியபடிதான் இருக்கின்றார். ஆனாலும் தவறாகவே தமிழை உச்சரித்துப் பழகிய பல ஆசிரியர்கள் இன்னும் மாறாமலே இருக்கிறார்கள். உண்மையில் ச வை சரியாக உச்சரித்தால் அதன் அழகே தனி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரயோசனமான பதிவு, சிறு வகுப்புகளிலிருந்தே உச்சரிப்புகளுக்கு பிள்ளைகலின் நாவைப் பழக்கி வந்தால்தான் இது சாத்தியமாகும். அத்துடன் மேல் வகுப்புகளுக்கும் கூடவே தமிழும் கட்டாயமான பாடமாக வரவேண்டும்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.