Jump to content

நோர்வே மாணவர்களின் உதவியில் சாதிக்கும் சந்ததி - 8. பாரதி வித்தியாலயத்தை சேர்ந்த 130 மாணவர்கள் உள்ளீர்ப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே மாணவர்களின் கைகொடுப்பில் சாதிக்கும் சந்ததி செயற்திட்டத்தின் எட்டாம் கட்டம் விசுவமடு பாரதி வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. 130 மாணவர்களை உள்ளடக்கிய இக்கட்டத்தில் 119 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு 11 மாணவர்களுக்கு மிதி வண்டிகளும் வழங்கப்பட்டிருந்தன.
 
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

sathikkum_manavar_01.png

 
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் முன்னெடுப்பில் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாதிக்கும் சந்ததி செயற்திட்டத்தின் எட்டாம் கட்டமானது 2015-02-05 அன்று காலை 9 மணியளவில் றெட்பானா பாரதி வித்தியாலயத்தில் நடைபெற்றிருந்தது.

sathikkum_manavar_02.png

 
இதுவரை நடைபெற்ற ஏழு கட்டங்கள் ஊடாகவும் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்த அல்லது காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள 352 மாணவர்கள் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்வின் மூலம் மொத்தமாக 482 மாணவர்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

sathikkum_manavar_04.png

 
நோர்வே கம்மர் பாடசாலையில் (Hammer School) கல்வி பயிலும் மாணவர்களின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்ட நேற்றைய நிகழ்வில் 119 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களாக புத்தகப்பை, தைத்தபடி சீருடை, கணிகருவிப்பெட்டி மற்றும்  குறிப்பு நூல்கள் 10 என்பன வழங்கப்பட்டதோடு தொலைவில் இருந்து பாடசாலைக்கு வருகைதரும், ஊக்குவிக்கப்படவேண்டிய, வறுமைச்சவாலை தினம் எதிர்நோக்கும் 11 மாணவர்களுக்கு மிதிவண்டிகளும் வழங்கப்பட்டிருந்தன.

sathikkum_manavar_05.png

 
இந்நிகழ்வில் உரையாற்றிய வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,
 
பாடசாலை இடைவிலகலை தாயகத்தில் தவிர்க்கவேண்டும் பாடசாலை கல்வியை அனைத்து மாணவர்களும் பெறவேண்டும்; வறுமை நிலையோ அல்லது வேறு சவால்களோ அவர்களது கல்விக்கு தடையாக இருக்க கூடாது என்ற நோக்கத்தைக்கொண்டே இச்செயற்திட்டம் மெல்ல மெல்ல புலம்பெயர் தமிழ் உறவுகளின் கைகொடுப்பில் சாத்தியப்பட்டு வருகிறது.

sathikkum_manavar_06.png

 
இம்முறை இந்த சாதிக்கும் சந்ததியின் எட்டாம் கட்டமானது நோர்வேயில் உள்ள கம்மர் பாடசாலை (Hammer Skole) மாணவர்கள் சேகரித்து அனுப்பிய நிதியின் மூலம் சாத்தியப்பட்டிருக்கிறது. கண்காட்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகளை அங்கு ஒழுங்குசெய்து பணம் சேகரித்து அதனை எமது மாணவர்களின் நலனுக்காக, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சேகரித்த அந்த பாடசாலை மாணவர்களுக்கும் இதனை ஒழுங்குபடுத்திய நாதன் செல்லையா அவர்களுக்கும் (Tech Norway அமைப்பு) நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

sathikkum_manavar_07.png

 
பிள்ளைகளின் கல்வி தொடர்பில் பெற்றோரும் அதிக கவனம் எடுக்கவேண்டும். வளரும் இந்த இளைய தலைமுறையினரே வளமான தாயகத்தை கட்டியெழுப்ப முன்னிற்பர். கல்வி கொண்ட அச்சமூகமே எமது எதிர்காலத்தை இன்னும் பலனுள்ள வகையில் செதுக்குவதற்கு முன்னிற்கும். பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு என்னால் எந்ததெந்தவகையில் கைகொடுக்க முடியுமோ அந்த வழிகளில் என்றும் எமது தேசத்தின் வளர்ச்சிக்கான செயற்திட்டங்கள் தொடரும். 

sathikkum_manavar_08.png

 
பாடசாலை மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை தாயகத்தில் இல்லாமல் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் எம்முடன் கைகோர்த்து சாதிக்கும் சந்ததி செயற்தி;டடத்தில் இணைந்து தேசத்தின் வளர்ச்சிக்காய் முன்னிற்கும் புலம்வாழ் ஈழத்தமிழர்க்கு நன்றிகளை தெரிவிப்பதோடு தொடர்ந்தும் ஒருங்கிணைந்த ஈழத்தமிழர் முயற்சிகள் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

sathikkum_manavar_09.png

 
பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரதி வித்தியாலயத்தின் நிறுவுனர் பங்குத்தந்தை மைக்கல் ஞானப்பிரகாசம், பாடசாலை ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

sathikkum_manavar_10.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

 

எம்மைவிட

எவராலும் அவர்களைத்தூக்கிவிடமுடியாது

இவ்வாறான செயல்களே இன்று தேவை....

 

நன்றி  உறவுகளே

தொடரட்டும் தங்கள் பணி

இறைவன் உங்களுடன் இருப்பாராக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்வாழ் ஈழத்தமிழர்க்கு நன்றிகளை தெரிவிப்பதோடு தொடர்ந்தும் ஒருங்கிணைந்த ஈழத்தமிழர் முயற்சிகள் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நன்றி தெரிவித்தமைக்கு நன்றிகள் ...தொடரட்டும் உங்கள் பணி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செயல்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.