Jump to content

சமுகசேவை


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழைப்புமணி யின் சத்தம் கேட்டு போய் கதவை திறந்தேன் கனகர் வாசலில் நின்றார்.வெளிநாட்டு சம்பிராதயம் பார்க்காமல் பழகிற மனுசன் என்றால் எங்கன்ட கனகர்தான்.தொலைபேசியில் அழைத்து உங்கன்ட வீட்டை வரப்போகிறேன் என்று முன் அனுமதி கேட்டு கனகர் வீட்டை போற பழக்கம் எனக்கும் இல்லை அதேபோல கனகர் என்ட வீட்டை வாறதற்க்கும் முன்னனுமதி கேட்காமல் வருவார்.கனகர் ஒரு சமுகசேவகர் என்று சொல்லலாம் .இளைப்பாறிவிட்டார் அதனால் முழுநேர சமுக சேவையில் ஈடுபடுகிறார்.நானும் பகுதி நேரமாக அவருடன் சமுக சேவையில ஈடு படுவதுண்டு.சமுக சேவை என்றால் நீங்கள் பெரிதாக ஒன்றும் நினைக்க கூடாது.என்ட ஆககூடிய சமுக சேவை எங்கன்ட சனத்திற்க்கு ,பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு டிக்கட் விற்கிறதுதான்.

அதுவும் ஒரு சமூக சேவை என நானே தீர்மானிச்சு தொடர்ந்து செய்துகொண்டுவாறன்.ஏன் சமூக சேவை என்றால் கனகரைப் போன்ற இளைப்பாறிய ஆட்கள்,என்னைபோன்ற இளைப்பாற இருக்கின்ற ஆட்களுக்கு தங்களது பொழுதை எப்படி கழிக்கிறது என்பது ஒரு சர்வதேச பிரச்சனையாக இருக்கும், இருக்கின்றது என்றுபோட்டுத்தான் நானும் கனகரும் இந்த சமுக சேவையில் இறங்கினோம் .வெளிநாடுகளில் பப்,டப்,கிளப்,மற்றும் விளையாட்டு மைதானங்கள்,தீம் பார்க்,சினிமா என பல களியாட்ட வசதிகள் இருந்தாலும் எங்கன்ட சனத்தோட பொழுதை கழித்தால்தான் ஒரு பூரணதிருப்தி கிடைக்கும் எங்களுக்கு, என்ற ஒரு நல்ல நோக்குடன் இந்த சமுக சேவையில நாங்கள் இறங்கினோம்.

ஏற்கனவே பலர் இந்த சமூகசேவையை செய்யினம் அவையளுக்கு ஒரு ஆதரவு கொடுக்க நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம்.

இப்படிதான் ஒருநாள் நானும் கனகரும் 'பப்' போயிருந்து பியர் அடிக்க ஒரு வெள்ளை "ஹாய் மயிட்" என்றான் கனகரும் பதிலுக்கு ஹாய் என்றுபோட்டு பியரை உறிஞ்ச பக்கத்தில நின்ற வெள்ளை தன்னுடைய நண்பனுடன் இரண்டு ஆங்கில தூஷண வார்த்தை பாவிக்க கனகர் கடுப்பாயிற்றார்.உதுக்குத்தான் நான் உவங்களின்ட இடத்துக்கு வாறதில்லை என கதிரையை தள்ளிபோட்டு வெளிவந்திட்டார். நானும் அவருக்கு பின்னால வந்திட்டன். அதற்கு பிறகு அவர் "பப் பக்கம் தலை வைச்சு படுக்கிறதில்லை"

இன்னோரு நாள் டப்புக்கு போய் குதிரையில காசை கட்டினோம் நாங்கள் கட்டின குதிரை கடைசியாக வந்தது.தொடர்ந்து இரண்டு நாள் போய் பணத்தை இழந்த பின்பு தொடர்ந்து போவதை நிறுத்திக்கொண்டோம்.

கொல்வ் கிளப்,போலிங்க் கிளப்,கிரிக்கட் கிளப் என சகல கிளப்பிலும் அங்கத்துவராக சேர்ந்து கொண்டோம். இப்படித்தான் ஒரு கிரிக்கட் கிளப்பில சினேக பூர்வமான ஒரு மட்ச் விளையாட வெளிக்கிட்டோம் ,கனகர் மற்றவன்கள் விளையாடும் பொழுது மைதானத்திற்க்கு வெளியே நின்று கொண்டு கொமான்ட் கொடுத்துக்கொண்டிருப்பார் .லெக்கில் போடு,ஒவில் போடு என பந்துவீச்சாளருக்கும்.ரைட்டில் அடி லெவ்டில் அடி என துடுப்பாட்ட காரருக்கும் கட்டளை போடுவார்,ஆனால் அது அவர்களுக்கு புரியாது ஆனால் மைதனத்திற்க்கு வெளியே கனகருக்கு பக்கத்தில் நிற்பவர்களுக்கு மட்டும் விளங்கும்,அத்துடன் கனகர் சகல மட்ச்களையும் பார்த்து கிரிக்கட்டில் கலாநிதிபட்டத்திற்க்கு தகுதி உடையவர் என்று சொன்னால் மிகையாகாது. தொலக்காட்சியில் ஒரு ஆட்டத்தை பார்க்கும் பொழுது பிரபல அவுஸ்ரேலியா ஆட்டக்காரன் விளையாட மட்டையை தூக்கினான் பந்து நேரடியாக விக்கட்டில் பட்டு அவுட்டாக கனகர் உணர்ச்சி வசப்பட்டு ,ஆங்கிலத்தில் திட்ட தொட்டங்கிவிட்டார் அவன் ஓவ்வில் போடுறான் உவன் விசரன் மட்டையை தூக்கி விலாசமல் சும்மா அவுட்டாகிவிட்டான் இடியட் ..இப்படி பல விமர்சனங்களை கனகர் வைப்பதை பார்த்து நானும் வேறு சில வயசு போன வெள்ளையும் கனகர் விசயகாரன் என நினைத்து அவரை எமது டீம்மில் சகலகலா வல்லவன் என நியமித்தோம் .அதாவது துடுப்பாட்டம்,பந்துவீச்சு இரண்டும் தெரிந்த வீரன் என முத்திரை குத்தினோம்.

அடுத்து விளையாடிய நாலு மட்சிலும் கனகர் ஒரு ஒட்டமோ,விக்கட்டோ எடுக்கவில்ல.இந்த அவமானத்தால் அவர் தொடர்ந்து தான் டீம்மில் இருக்கவிரும்பவில்லை என விலகி கொண்டார்.அவருக்கு பக்க பலமாக நானும் விலகி கொண்டேன்.

சின்ன வயசிலயிருந்து விளையாடிய வெள்ளைகளுடன் எங்களுக்கு இடு கொடுக்க முடியாத நிலையில் தொடர்ந்து இந்த கிளப்புக்களுக்கு போவதை தவிர்த்து கொண்டோம்.இப்படியான கசப்பான அனுபவங்களினால் எங்கன்ட சனத்திட்ட எங்கன்ட திறமையை காட்டி பொழுதை களித்து கொள்ள த்தான் நாங்கள் இந்த சமுக சேவையில் கடந்த பத்து வருடமாக ஈடுபடுகிறோம். ஆரம்ப காலங்களில் எங்கன்ட சமுக சேவைகள் மக்களிடையே எடுபடவில்லை ,ஆனால் கடந்த ஐந்து வருடமாக சனத்திடம் நல்ல வரவேற்பு கிடைக்குது. சமுக சேவை விடயமாகத்தான் இப்ப கனகர் என்ட வீட்டை வந்தவர் .

"வாறசனிக்கிழமை ...முழக்கம்,அதற்கு அடுத்த சனி .....இன்னிசை,ஞாயிற்றுக்கிழமை....பன் விழா.,நடக்க இருக்குது இந்தா டிக்கட்" என மூன்று டிக்கட்டை கிழித்து தந்தார்.

"இப்ப எங்கன்ட் சனம் ஞாயிற்றுக்கிழமையிலும் புரோகிறம்களை வைக்குது ,அடுத்த நாள் வேலைக்கு போகவேணும் அண்ணே"

"அது பத்து மணிக்கு முடிஞ்சிடும் நீ டிக்கட்டை பிடி"

"உங்களுக்கு என்ன ரிட்டயர் பண்ணிட்டியள் சொல்லிவியள்"

"நீ மட்டும் என்ன இப்படியே மார்க்கண்டேயர் மாதிரி இருக்கப்போறீயே "

"சரி அண்ணே,உங்களோட கதைச்சு காலத்தை தள்ளஏலாது இப்ப எவ்வளவு காசு நான் தரவேணும்"

"நான் உன்னட போனமாதம் எடுத்த டிக்கட்டுக்கு காசு தரவில்லை அதை இதில கழிச்சு விடு"

இப்படித்தான் எங்கன்ட டிக்கட் வியாபாரம் பண்டமாற்றிலயே போய்விடும்.

இலவச நிகழ்ச்சிகளையும் நாங்கள் விட்டு வைப்பதில்லை.கனகருக்கு இரவு நேரங்களில் கார் ஒடுவதற்கு கண் தெரியுதில்லை என்று சகல நிகழ்சிகளுக்கும் என்னோடுதான் வாறவர்.பக்கதிலிருந்து சிட்னி விடுப்புக்கள்,தன்னுடைய வீட்டு விடுப்புக்களை சொல்லி கொண்டு வருவார்.சில நேரத்தில மனுசன் அரைவாசி கதையை சொல்லி போட்டு கொரட்டை விட்டு நித்திரை கொள்வார்.அண்ணே என்ன நித்திரையோ என்று கேட்டா சீ ,சீ சும்மா கண் அயர்ந்து போய்யிட்டேன் என்பார்.

கனகரை கோயிலில்தான் முதல்முதல் சந்திச்சனான்.கோவில் வாசலில் நின்ற கனகர் "தம்பி எந்தப்பக்கம் போறீர்"

"பென்டில் கில் போரன்"

"என்னை ஒருக்கா அங்க இறக்கி விடுவீரோ ,கடையில இடியப்பம் வாங்க வேணும்"

"சரி வாங்கோ"

"தாங்க்ஸ் டா தம்பி"

காரில வந்து ஏறினவுடன்.முருகா உனக்குதான் நன்றி சொல்ல வேணும் இந்த வெய்யிலில் எப்படி போறது என்று நினைச்சு கொண்டு நிற்கும்பொழுது நீ தான் இந்த தம்பியை எனக்கு காட்டினனீ....என்ட பெருமான் முருகன் என்னை கைவிடமாட்டான்....இப்படி முருகனுக்கு நன்றிகடனை சொல்லிபோட்டு தனது பேச்சை தொடங்கினார்.

"தம்பி யாழ்ப்பாணம் தானே"

"ஓம் எப்படி கண்டுபிடிச்சியள்"

"உம்மட கதையில தெரியுதுதானே,யாழ்ப்பாணத்தில எவ்வடம்"

"மானிப்பாய்"

"மானிப்பாயோ! மருதடிக்கு பக்கத்திலயோ "

"இல்லை பள்ளிக்கூடத்திற்கு முன்னாலா, நீங்கள் மானிப்பாயோ"

"சீ சீ நான் கோண்டாவில் ,என்ட ஒன்றைவிட்ட அக்கா அங்கதான் கலியாணம் கட்டினவ,ஒவசியர் சிவப்பிரகாசத்தின் மகனைத்தான் கட்டினவ ஆட்களை தெரியுமோ?"

"ஓமோம் தெரியும் அவையள் என்ட சொந்தகாரர் "

"பிறகென்ன நீர் என்ட சொந்தகாரார் நல்லதாய் போச்சு"

இப்படிதான் எங்களது அறிமுகம் 10 வருசத்திற்கு முதல் தொடங்கினது இப்பவும் தொடருது.நாட்டில எப்ப பிரச்சனை முடியுதோ அப்ப திரும்பி நாட்டுக்கு போய்விடுவேன் உவங்கன்ட நாட்டில ஒரு நாளும் இருக்க மாட்டேன் ,அங்க போய் எங்கன்ட சனத்திற்கு சமூகசேவை செய்ய வேணும் என்று சொன்ன கனகர் இன்னும் நாட்டுக்கு போகவில்லை.சிட்னி தமிழருக்கு சமூகசேவை செய்யிறார்.

கோவில் கொமிட்டியிலும் அங்கத்துவராக இருக்கின்றார்.கனகர் மகனுடன் இருந்தாலும் எதாவது உதவிகள் வேணுமென்றால் என்னிடம்தான் கேட்பார்.

சைவமும் தமிழும் எங்களுடைய இரு கண்கள் என்றும் அதை புலம் பெயர்ந்த பிரதேசத்திலும் எமது சந்ததிக்கு புகட்ட வேணும் அதற்காகத்தான் அவர் கோவில் கொமிட்டியிம் அங்கத்துவராகவும்,தமிழ்பாடசாலையில் ஆசிரியர் தொழில் ஈடுபடுவதாக சொல்லிக் கொள்வார்.

தம்பி நீ உன்ட பிள்ளைகளை தமிழ் பாடசாலைக்கு அனுப்பும் .நாங்களே தமிழை படிக்காவிடில் வெள்ளையோ வந்து தமிழ்படிக்க போகுது என்று ஒரு நாள் ஆதங்கப்பட்டார்.

" என்னுடைய இரண்டு மகள்மாரும் உயர்தரத்தில் தமிழ் எடுத்து சித்தியடைந்திட்டினம் ,உங்கன்ட பேரப்பிள்ளைகள் எப்படி தமிழ் கதைப்பினமே?"

".சும்மாபோடம்பி அவள் தாய்காரி என்ட மருமகள் வீட்டிலயே தமிழில் பேசமாட்டாள் பிறகு எப்படி பிள்ளைகள் தமிழில் கதைக்கபோகுது?தமிழில் பேசினால் ஆங்கில உச்சரிப்பு வடிவாக வராமாட்டுதாம் என்று போட்டு தான் குடும்பமே ஆங்கிலத்தில பேசுதுகள்,அதுசரி உன்ட பிள்ளைகள் இங்கயே பிறந்தவை "

"ஒமோம் இங்கதான் பிறந்தவை,அவர்கள் தமிழ்பாடாசலைக்கு மட்டுமல்ல ,அதுகள் சைவபாடசாலைக்கும் சின்னனிலிருந்து போனதுகள்,தேவாரமும் நல்லாய் பாடுவினம் ,"

"என்ட பேரப்பிள்ளைகளை மருமகள்காரி சாய் பஜனுக்கு கூட்டிக்கொண்டு போறவ ,அதுகள் தெலுங்கு பஜனையும் ,ஹிந்தி பஜனையும் நல்லாய் பாடுங்கள்,அவையளுடன் சேர்ந்து மகனும் ,மருமகளும் பஜனை பாடுவினம்"

"அப்ப குடும்பத்திற்கே ஹிந்தி தெரியும் என்று சொல்லுங்கோ,"

"சும்மா போடாம்பி அதுகள் இங்கிலிஸில வசனத்தை எழுதிவைச்சிட்டு அங்க போய் இருந்து பாடுதுகள்"

"என்ன அண்ணே நீங்கள் தமிழும் சைவமும் நம் இருகண்கள் என்று சமுகசேவை செய்யிறீங்கள் ஆனால் உங்கன்ட வாரிசுகள் தெலுங்கும் சாய்ராமும் நம்மிரு கண்கள் என்று திரியினம்,,,அண்ணே இந்த முறை உயர்தர பரீட்சைக்கு தமிழை ஒரு பாடமாக எடுத்த ஆறு பிள்ளைகள் மருத்துவ பீடத்திற்கு தெரிவிசெய்யப்பட்டிருக்கினம்....என்ற செய்தியை.உங்கன்ட மருமகளிட்டையும் மகனிட்டையும் சொல்லுங்கோ...,"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்  கொஞ்சம் இடைவெளி விட்டு பதிந்தீர்கள் என்றால் வாசிக்க வசதியாக இருக்கும் :)

 

சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிகள் நவீனன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பதிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சமூகசேவைக்கு நன்றி புத்தன்! அதுசரி கனகருக்கு இப்ப எத்தினை வயது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு

 

வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றிகள் smkonli

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தான கதை புத்தன்...!

 

இங்கு பிரான்சில் அவரவர் தத்தம் தாய் மொழியில் ஒரு பரீட்சை எழுதலாம். அதில் வரும் மதிப்பெண்கள் அவர்கள் பல்கலைக் கழகம் செல்லும்போது சேர்த்துக் கணக்கெடுக்கப் படும். சிலருக்கு ஏதாவது பாடம் கடினமாய் இருக்கும் பட்சத்தில் தாய் மொழி சுமாராகத் தெரிந்தால் கூடப் போதும். சுலபமாய் பத்துக்கு மேல் எடுக்கலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சமூகசேவைக்கு நன்றி புத்தன்! அதுசரி கனகருக்கு இப்ப எத்தினை வயது?

 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் .....65 வயது க்கு மேல்...:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தான கதை புத்தன்...!

 

இங்கு பிரான்சில் அவரவர் தத்தம் தாய் மொழியில் ஒரு பரீட்சை எழுதலாம். அதில் வரும் மதிப்பெண்கள் அவர்கள் பல்கலைக் கழகம் செல்லும்போது சேர்த்துக் கணக்கெடுக்கப் படும். சிலருக்கு ஏதாவது பாடம் கடினமாய் இருக்கும் பட்சத்தில் தாய் மொழி சுமாராகத் தெரிந்தால் கூடப் போதும். சுலபமாய் பத்துக்கு மேல் எடுக்கலாம். :)

 

வெளிநாட்டு அரசுகள் சலுகைகளை வழங்கினாலும் நாம் தமிழை பாடாமாக படிக்க தயங்குகிறோம்.....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் 'அனுபவப் பகிர்வு' நல்லாயிருக்கு! :lol:

 

உங்கள் கதை, எங்களுக்கும் ஒரு ' ஓய்வுக்காலம்' என்று வரப்போவதை நினைவு படுத்துகின்றது! ஓரளவு பயத்தையும் தருகின்றது!

 

கோயில் பக்கம் போய்க் கும்பிட்டு வருவதுடன்.. மட்டும் நின்று கொள்வதானால், 'கனகர்' தரவழி ஆக்களிடம் மாட்டுப்படுவது குறைவு!

 

ஒன்றிரண்டு முறை.. தவிர்க்க முடியாமல்.. மாட்டிக்கொண்டும்.. எனது கதையைப் பார்த்த பிறகு... ஆள் 'ஒரு மாதிரி' என்று சில 'கனகர்கள்' விலகிச் சென்றதை அவதானித்துள்ளேன்!

 

அதே வேளை.. கோவில் வெளிக்கு அப்பால், பல 'கனகர்களுடன்' தொடர்புகள் உண்டு!

 

உங்களைப் போல... நீண்ட நாட்கள் புலத்து வாழ்வில் காலங்களைத் தொலைத்தாலும்.' ஒரிஜினாலிட்டி' மாறாத ஆக்களைக் கண்டால்..எப்போதுமே ஒரு வித 'மகிழ்ச்சி' ஏற்படுகின்றது வழக்கம்!

 

தொடருங்கள் புத்தன்... இன்னும் ஆயிரம் அனுபவங்கள் உங்களிடமிருந்து வர வேண்டும்! :icon_idea: . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வு நன்றாகவே இருந்தது. தொடருங்கள் புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  புத்தர்

 

அனுபவம்  மற்றும் குட்டுதல் சார்ந்து உங்கள் பதிவுகள் வரவேற்கத்தக்கவை...

 

மற்றும் பொதுச்சேவைகளில் ஈடுபடுவோர் படும் இன்னல்கள்

அவர்களது பணம் மற்றும் நேரவிரயம்

அவர்களாலேயே அவர்களது குடும்பத்தை சீர் செய்யமுடியாமை.....

யாவற்றையும்  ஊடறுத்து செல்லும் தங்களது பதிவுக்கும் நேரத்துக்கும் நன்றிகள்..

 

தொடருங்கள்

Link to comment
Share on other sites

வெளிநாட்டு  பொது  சேவை  எல்லாம்  பெரும்பாலும்  இலாப  நோக்கம்  கொண்டது  அதனால்  உண்மையான  பொது சேவை  செய்பவர்களும்  பாதிக்கபடுவது  பல  நடந்திருக்கு புத்தன் அண்ணே தொடருங்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் 'அனுபவப் பகிர்வு' நல்லாயிருக்கு! :lol:

 

உங்கள் கதை, எங்களுக்கும் ஒரு ' ஓய்வுக்காலம்' என்று வரப்போவதை நினைவு படுத்துகின்றது! ஓரளவு பயத்தையும் தருகின்றது!

 

கோயில் பக்கம் போய்க் கும்பிட்டு வருவதுடன்.. மட்டும் நின்று கொள்வதானால், 'கனகர்' தரவழி ஆக்களிடம் மாட்டுப்படுவது குறைவு!

 

ஒன்றிரண்டு முறை.. தவிர்க்க முடியாமல்.. மாட்டிக்கொண்டும்.. எனது கதையைப் பார்த்த பிறகு... ஆள் 'ஒரு மாதிரி' என்று சில 'கனகர்கள்' விலகிச் சென்றதை அவதானித்துள்ளேன்!

 

அதே வேளை.. கோவில் வெளிக்கு அப்பால், பல 'கனகர்களுடன்' தொடர்புகள் உண்டு!

 

உங்களைப் போல... நீண்ட நாட்கள் புலத்து வாழ்வில் காலங்களைத் தொலைத்தாலும்.' ஒரிஜினாலிட்டி' மாறாத ஆக்களைக் கண்டால்..எப்போதுமே ஒரு வித 'மகிழ்ச்சி' ஏற்படுகின்றது வழக்கம்!

 

தொடருங்கள் புத்தன்... இன்னும் ஆயிரம் அனுபவங்கள் உங்களிடமிருந்து வர வேண்டும்! :icon_idea: . 

 

நன்றிகள் புங்கையூரன்...உங்கள் போன்றோரின் ஊக்கம் தான் என்னை அதிகம் கிறுக்க வைக்கின்றது...அனுபவம் தொடரும் ...மீண்டும் நன்றிகள்...

அனுபவப் பகிர்வு நன்றாகவே இருந்தது. தொடருங்கள் புத்தன்.

 

நன்றிகள் சுமே வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...

நன்றி  புத்தர்

 

அனுபவம்  மற்றும் குட்டுதல் சார்ந்து உங்கள் பதிவுகள் வரவேற்கத்தக்கவை...

 

மற்றும் பொதுச்சேவைகளில் ஈடுபடுவோர் படும் இன்னல்கள்

அவர்களது பணம் மற்றும் நேரவிரயம்

அவர்களாலேயே அவர்களது குடும்பத்தை சீர் செய்யமுடியாமை.....

யாவற்றையும்  ஊடறுத்து செல்லும் தங்களது பதிவுக்கும் நேரத்துக்கும் நன்றிகள்..

 

தொடருங்கள்

 

நன்றிகள் விசுகு வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் உங்களின் ஊக்கம்தான் என்னை தொடர்ந்து கிறுக்க வைக்கின்றது...

வெளிநாட்டு  பொது  சேவை  எல்லாம்  பெரும்பாலும்  இலாப  நோக்கம்  கொண்டது  அதனால்  உண்மையான  பொது சேவை  செய்பவர்களும்  பாதிக்கபடுவது  பல  நடந்திருக்கு புத்தன் அண்ணே தொடருங்கள் ..

 

நீங்கள் சொல்வதில் உண்மையுண்டு....இலாபநோக்கு மட்டுமல்ல ....புகழ்நோக்கும் உண்டு ...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருந்தது. தொடருங்கள் புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சுவைப்பிரியன் வருகைக்கும் வாசிப்புக்கும்...

Link to comment
Share on other sites

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2015 at 10:30 PM, putthan said:

 

" என்னுடைய இரண்டு மகள்மாரும் உயர்தரத்தில் தமிழ் எடுத்து சித்தியடைந்திட்டினம் ,உங்கன்ட பேரப்பிள்ளைகள் எப்படி தமிழ் கதைப்பினமே?"

சிட்னியில் பிறந்த சில பிள்ளைகள்  உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாக எடுத்து அதிக புள்ளிகள் பெற்று சித்தி அடைந்து பல்கலைக்கழகங்களில் மருத்துவ, சட்ட , நிதித்துறையில் கல்விகற்கிறார்கள். இவர்களில் சிலர் சனிக்கிழமைகளில் நடைபெரும் தமிழ்ப்பாடசாலையில் தமிழ் ஆசிரியராகவும் கடமையாற்றுகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்மை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.