Jump to content

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதியுதவியுடன் வன்னியில் ஆடைத்தொழில்சாலை


Recommended Posts

On 2016-03-10 at 2:04 AM, விசுகு said:

உறவுகளே

ஏற்கனவே இங்கு நான் குறிப்பிட்ட

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலையின் 

அடுத்த கட்டம் ஈடேறியிருக்கிறது.

எமது கட்டமைப்பையும்

அதன் நோக்கத்தையும் நண்பர்களுக்கு கொண்டு சென்றதன் பலனாக

நண்பரொருவர் இரண்டு மில்லியன் ரூபாக்களை முதலீடு செய்து

சாவகச்சேரியில் (ஏற்கனவே இணுவில் என எழுதியிருந்தேன். ஆனால் இடம் இங்கு தான் கிடைத்தது) உருவாக்கியுள்ளார்.

அந்த நண்பர் தனது பெயரை தற்பொழுது எங்கும் வெளியிடவேண்டாம் என அறிவுறுத்தியதால்

அவரது பெயரை மட்டும் தவிர்க்கின்றேன்.

உங்கள் யாருக்காவது இது போன்ற திட்டங்களில்

அல்லது அவர்களிடமிருந்து இறக்கமதி செய்யும் விருப்பமிருந்தால் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

அதுவே இப்பதிவின் முக்கிய நோக்கமாகும்.

நன்றி.

 

[நண்பரொருவர் இரண்டு மில்லியன் ரூபாக்களை முதலீடு செய்து

சாவகச்சேரியில் (ஏற்கனவே இணுவில் என எழுதியிருந்தேன். ஆனால் இடம் இங்கு தான் கிடைத்தது) உருவாக்கியுள்ளார்.]

 

முதலீடுசெய்தால் ஏதாவது லாபம் கிடைக்குமா (~1%/month)?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

செயல் வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்!

ஆண்டுக்கான மொத்த வருமானத்தையும் தெரிவித்து விட்டால்...முதலில் இடப்பட்ட மூலதனம்..எவ்வாறு அதிகரித்துள்ளது அல்லது குறைந்துள்ளது என மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியுமல்லவா?

இலாப நோக்கமற்ற நிறுவனம் எனினும்...இதனைப் பார்க்கும் மற்றையவர்கள்  இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஒரு ஊக்குவிப்பாக அமையும் அல்லவா?

மேலுள்ளவாறு எழுதுவதையும் வருங்காலங்களில் குறைக்கச் சொல்லுங்கள்!

இது அவர்களது உழைப்பால் விளைந்தது என்று அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்! அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க இது உதவும் எனக் கருதுகின்றேன்!

நன்றி அண்ணா

இலாப நோக்கமற்றது என்பதுடன்

எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு என்பதே இலக்காக இருப்பதால் அதனுடன்  முதலாண்டு கணக்கறிக்கை நிற்கிறது அண்ணா.

எமது நிர்வாகக்கூட்டத்தில் இது பற்றி விவாதித்தபோது

1 மில்லியன் ரூபா முதலீட்டுடன் பரீட்சார்த்தமாக 6 பேருடன் தொடங்கி

ஒரு வருடத்தில் 13 பேருக்கு வேலை வாய்ப்பும் நிர்வாகச்செலவுமாக 1.1 மில்லியன் ரூபாக்களை அது இலாபமாக பெற்றிருப்பது கருத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் முதலீட்டின் பற்றாக்குறை சார்ந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கும் இந்தவருடம் மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்கிளப்பில் இதன் கிளையாக ஒரு நிறுவனத்தை அமைக்கவும் குறைந்தது 10 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

1 மில்லியன் ரூபா முதலீட்டுடன் பல இடைஞ்சல்கள் தடைகள் குறுக்கீடுகளுக்கிடையில்

ஒரு சிலரின் தைரியப்படுத்தலில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் 

வெற்றிகரமாக 3வது கிளை பரப்பி கிட்டத்தட்ட 5 மில்லியன் ரூபா முதலீட்டுடன் 

போரால் குடும்பத்தலைவர்களை இழந்த

பெண்கள் தலமை தாங்கும் 50 குடும்பங்களுக்கு அவர்களின் சொந்தக்காலில் நின்று வாழும் வாழ்வாதாரத்தை  கொடுத்து நிற்பது தான் எமது இலக்கு அண்ணா.

அதை நாம் அடைந்துள்ளோம்.

இத்துடன் நின்றுவிடாது. தொடர்வோம்.

முடிந்தவர்கள் தொடருங்கள் என்பதே எமது முன்னுதாரணத்துடனான கோரிக்கை.

 

(மேலுள்ளவாறு எழுதுவதையும் வருங்காலங்களில் குறைக்கச் சொல்லுங்கள்! 

பலமுறை சொல்லியாச்சண்ணா. அவர்களின் வலியோ அல்லது எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் நாம் வந்ததன் விளைவோ கேட்கிறார்களில்லை. அந்த வரிகள் எம் இதயங்களை மிகவும் கூச வைக்கின்றன.)

 

 

 

28 minutes ago, Knowthyself said:

 

[நண்பரொருவர் இரண்டு மில்லியன் ரூபாக்களை முதலீடு செய்து

சாவகச்சேரியில் (ஏற்கனவே இணுவில் என எழுதியிருந்தேன். ஆனால் இடம் இங்கு தான் கிடைத்தது) உருவாக்கியுள்ளார்.]

 

முதலீடுசெய்தால் ஏதாவது லாபம் கிடைக்குமா (~1%/month)?

 

வணக்கம் சகோதரா

மேலே புங்கை அண்ணாவுக்கு எழுதியதை வாசித்தால் எமது நிலை தெரியும்

இலாபம் எவ்வாறு உள்ளது என்பதையும் அறிவீர்கள்

சாவகச்சேரியில் ஆரம்பித்த நண்பரும் போட்ட ஒரேயொரு கண்டிசன்

எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பளிக்கின்றீர்கள் என்று தான் பார்ப்பேன் என்பதாகும்.

எனவே அவருக்கும் இலாபநோக்கமில்லை.

உங்களுக்கு ஆவலிருப்பின்

சசிகரனின் தொலைபேசி இலக்கம் தருகின்றேன் பேசுங்கள்.

நன்றி  ஆர்வத்துக்கும் நேரத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் 
ஒருவனுக்கு மீனை கொடுப்பதை விட
அவனுக்கு மீனை பிடிக்க கற்றுக் கொடு

என்று மாவோ இரண்டு வரிகளில் மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

கள உறவுகளை வாழவைக்கும் நல்ல உள்ளம் கொண்டோர்க்கு பாராட்டுக்கள்.நீழீழி வாழ்க.

Link to comment
Share on other sites

5 hours ago, விசுகு said:

வணக்கம் சகோதரா

மேலே புங்கை அண்ணாவுக்கு எழுதியதை வாசித்தால் எமது நிலை தெரியும்

இலாபம் எவ்வாறு உள்ளது என்பதையும் அறிவீர்கள்

சாவகச்சேரியில் ஆரம்பித்த நண்பரும் போட்ட ஒரேயொரு கண்டிசன்

எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பளிக்கின்றீர்கள் என்று தான் பார்ப்பேன் என்பதாகும்.

எனவே அவருக்கும் இலாபநோக்கமில்லை.

உங்களுக்கு ஆவலிருப்பின்

சசிகரனின் தொலைபேசி இலக்கம் தருகின்றேன் பேசுங்கள்.

நன்றி  ஆர்வத்துக்கும் நேரத்துக்கும்...

 

(நண்பர்) முதலீடு என்று எழுதினீர்கள் அதுதான் கேட்டேன், குறைவிளங்காதீர்கள், எனக்கு 2 millions அளவில் செய்ய சிலகாலம் எடுக்கும்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே...

 

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையை மேலும் பலமாக்குதல்

கிழக்கில் மட்டக்கிளப்பில் இதேபோல் ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்தல் என 

செக்டா நிறுவனத்தால் வைக்கப்பட்ட கோரிக்கை

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகசபையால் ஆராயப்பட்டு

2016க்கான தாயகத்துக்கான கொடுப்பனவாக

10 லட்சம் ரூபா ஒதுக்குவதென தீர்மானிக்கப்பட்டு

அதற்கு செக்டா தலைவர் சசிகரனின் ஒப்புதல் பெறப்பட்டு

திங்கட்கிழமை (23-05-2016)

5 லட்சம் ரூபாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

மேலும் திட்டத்தின் முன்னேற்ற நடவடிக்கைகளின் பதில்கள் கிடைத்ததும்

மீதி 5 லட்சம் அனுப்பி வைக்கப்படும்.

 

நன்றிக்கடிதம் இணைக்கப்படுகிறது.

 

தலைவர்
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
25/05/2016

அன்புடையீர் வணக்கம்

அண்ணா

ஆடைத் தொழிற்சாலை அனுசரனைக்கான நன்றி மடல்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு கிளிநொச்சியில் அமைந்திருக்கும் ஆடைத் தொழிற்சாலை செயல் திட்டத்திற்காக 2016ம் ஆண்டுக்கான அனுசரணை நிதியாக ஐந்து இலட்சம் ரூபா நிதியினை வழங்கியமைக்கு செக்டா நிறுவனத்தின் சார்பிலும் ஆடைத் தொழிற்சாலை யின் சார்பிலும் பயனாளிகள் சார்பிலும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றோம்.

தங்கள் மனித நேயப் பணிக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.

நன்றி
ச.சசிகரன்
தலைவர்
செக்டா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மட்டக்களப்பிலா வாழ்த்துக்கள் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு இது உதவும் என நினைக்கிறேன் 

மீண்டும்  வாழ்த்துகள் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பிரான்ஸ் மக்கள் புங்குடுதீவு ஒன்றியத்தை"  வாழ்த்த வரிகள் கிடைக்கவில்லை.
தமது ஊருக்கு உதவி செய்து, வன்னி, கிளிநொச்சி, மட்டக்களப்பு என்று... இவர்களின் உதவி பரந்து விரிந்து செல்வதுடன்...
"நாவலர் குறும்பட போட்டி" என்றும் வைத்து... கலைஞர்களை ஊக்குவிக்கும் பணியையும்... சிறப்பே செய்யும்,
அந்த நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். sLove_100-108-101

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

ஓ மட்டக்களப்பிலா வாழ்த்துக்கள் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு இது உதவும் என நினைக்கிறேன் 

மீண்டும்  வாழ்த்துகள் ???

நன்றி முனிவர் ஜீ

போரினால் கணவன்மாரை இழந்து

பெண்கள் தலமை தாங்கும் குடும்பங்களுக்கு

வேலை வாய்ப்பை வளங்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட இந்த திட்டம் 

எதிர்பார்த்ததைவிட வளர்ச்சி கண்டு

இன்று 50 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை தருவதாக செயற்ப்பட ஆரம்பித்திருக்கிறது.

இந்த இலக்கை இவ்வளவு விரைவில் அடைவோம் என கனவிலும் நினைக்கவில்லை.

இது மேலும் வளரும்

பயன் தரும்.

 

 

1 hour ago, தமிழ் சிறி said:

"பிரான்ஸ் மக்கள் புங்குடுதீவு ஒன்றியத்தை"  வாழ்த்த வரிகள் கிடைக்கவில்லை.
தமது ஊருக்கு உதவி செய்து, வன்னி, கிளிநொச்சி, மட்டக்களப்பு என்று... இவர்களின் உதவி பரந்து விரிந்து செல்வதுடன்...
"நாவலர் குறும்பட போட்டி" என்றும் வைத்து... கலைஞர்களை ஊக்குவிக்கும் பணியையும்... சிறப்பே செய்யும்,
அந்த நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். sLove_100-108-101

நன்றி  சிறி

உங்களது சிமிலியைப்பார்த்ததும்

எல்லாக்களைப்பும் தீர்ந்து போனது போலிருக்கு...

நான் அடிக்கடி சொல்வதை அப்படியே ஒரு சிமிலியில் கொண்டு வர உங்களால் மட்டுமே முடியும்

நாலு பேர் சேர்ந்தால்

எவ்வளவோ செய்யலாம்...

எத்தனையோ பேர் வாழ உதவலாம்..

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அருமையான முயற்சி, மிகவும் சிறப்பாக வளர்வது ஆனந்தத்தை தருகிறது.  
 

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இடம் மாற்றம் தொடர்பாக

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பின் அனுசரணையுடன் செக்டா தொண்டு நிறுவனத்துடன் கூட்டிணைந்து முன்னெடுக்கப்பட்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டம் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இயங்கிய தொழிற்சாலை தற்போது நரசிம்மர் வைரவர் கோவிலடி A9 வீதி, பளை நகரம், பளை, கிளிநொச்சி என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். (பளை, A9 வீதியிலிருந்து 2வது காணி)

கிளிநொச்சி பளை பிரதேச செயலகத்தில் சமுர்த்திப் பிரிவுடன் இணைந்து அவர்களின் நிர்வாக ரீதியான அனுசரனையுடன் செயற்திட்டம் இயங்கி வருகின்றது என்பதனையும் அறியத்தருகின்றோம்.

நன்றி

இவ்வண்ணம்

ச.சசிகரன்

செக்டா

ஆடைத் தொழிற்சாலை 23 மே – 2௦16

அனுசரனைக்கான கணக்கறிக்கை

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் கிளிநொச்சி மாவட்டத்தில் செக்டா தொண்டு நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆடைத் தொழிற்சாலை செயற்திட்ட அபிவிருத்திக்கு 23 மே – 2௦16ல் அனுப்பிவைக்கப்பட்ட 500,000.00 (ரூபா ஐந்து இலட்சம்) நிதிக்கான கணக்கறிக்கை விபரத்தினை தங்கள் பார்வைக்கு அனுப்பிவைக்கின்றேன்.

திகதி

விபரம்

வீதம்

தொகை

12.3.2016

ரெனிம் துணி 365m

362.5X320

116000.00

30.7.2016

பயனாளிகளுக்கான விசேட கொடுப்பனவு

 

36000.00

14.11.2016

சோக்கோத் துணி

275m x 320

88000.00

14.11.2016

சேட் துணி

225m x 210

67000.00

14.11.2016

பஞ்சாவித்துணி

200 x 600

120000.00

14.11.2016

நூல் கட்டை

120 x 90

18000.00

14.11.2016

லேஸ் வகைகள்

 

15500.00

14.11.2016

கொழும்பு போக்குவரத்து செலவு

 

6250.00

16.11.2016

2 தையல் இயந்திர மோட்டர்

720 x 2

14500.00

 

வர்த்தக விளம்பரம்

 

5000.00

 

புதிய நிலையஇயந்திரத்திற்கு மின் இணைப்பு

 

7450.00

 

வரவுகள்

 

500000.00

 

செலவுகள்

 

493700.00

 

மீதி

 

6300.00

 

12.3.2௦16ல் கடன் கொள்வனவாக 116௦௦௦ துணிகள் கொள்வனவு செய்யப்பட்டது. இதற்கான கடன் 26 மே 2௦16ல் செலுத்தப்பட்டது.

3௦.7.2௦16 ஆடைத் தொழிற்சாலை பயனாளிகளுக்கு விசேட கொடுப்பனவுகளுக்காக ரூபா 36௦௦௦ பயன்படுத்தப்பட்டது. இந்த நிதி பயன்பாடு அவசரகால சூழ்நிலை காரணமாக பயன்படுத்தப்பட்டது.

ரூபா 92௦௦௦ நிதி சாவகச்சேரி செயற்திட்டத்திற்கு கடனாக பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்த நிதி 12.11.2௦16 மீளப் பெறப்பட்டு கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைக்கு மீண்டும் பயன்படுத்தப்பட்டு செயற்திட்டம் மீண்டும் இயங்குநிலைக்கு கொண்டுவரப்பட்டது.

15.௦6.2௦16 பயனாளிகள் சம்பளங்களுக்காக தாங்கள் அனுப்பிய நிதியில் ரூபா 13௦௦௦௦ பயன்படுத்தப்பட்டது. அந்த நிதியும் கடன் விற்பனைகள் மூலம் மீள் திரும்பிய நிதி மூலம் மீள் நிரப்பப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து மீளப் பெறப்பட்டது.

ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டத்திற்காக தாங்கள் அனுப்பிய நிதி மாற்றீட்டு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டாலும் மீண்டும் மூலதன இருப்பினை மேம்படுத்துவதற்காக அல்லது சொத்து மதிப்பினை அதிகரிப்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதனை இதய சுத்தியுடன் அறியத்தருகின்றேன்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 2௦16ம் ஆண்டுக்காக முதலாம் கட்டமாக அனுப்பப்பட்ட நிதி ரூபா 5௦௦,௦௦௦வும் கிளிநொச்சி செயற்திட்டத்திற்காகவே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவானதினால் கிளிநொச்சி செயற்திட்டதிற்கே பயன்படுத்தப்பட்டது.

கிளிநொச்சி செயற்திட்டம் இயங்கு நிலையில் ஏற்பட்ட தடங்கலினால் மீண்டும் அதனை இயல்பு நிலைக்கு கொண்டுவரவேண்டிய தேவை இருந்ததினால் தாங்கள் அனுப்பிய நிதி கிளிநொச்சி செயற்திட்டதிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

கணக்கறிக்கை அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் மாற்றீட்டு தேவைக்கு பயன்படுத்தப்பட்ட நிதி மீள் திரட்ட ஏற்பட்ட கால தாமதமும் செயற்திட்டத்தை மீள் இயங்குநிலைக்கு கொண்டுவருவதற்கு எடுத்தகால அவகாசமும் காரணமும் ஆகும்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் இனால் 23 மே 2௦16ல் செக்டா தொண்டு நிறுவனத்தின் ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்ட ரூபா 5௦௦,௦௦௦,௦௦ நிதிக்கான கணக்கறிக்கையினை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம். மேற் கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் இதய சுத்தியுடன் அளிக்கப்படுகின்றது என்பதனை அறியத்தருகின்றோம்.

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சின் செக்டா நிறுவனத்துடன் கூட்டிணைந்த ஆடைத் தொழிற்சாலையின் சொத்துமதிப்பு 21 இலட்சம் சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டு காலப் பகுதியிலும் தேறிய 3 இலட்சம் ரூபா தேறிய இலபாமீட்டியுள்ளோம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

 

கடந்த 4 மாதங்கள் ஏற்பட்ட இடையூறுகள் அனைத்தும் இயல்பு நிலையை எட்டியுள்ளது என்பதனையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

செயற்திட்டத்தின் இடையே ஏற்ப்பட்ட இடயூறுகளுக்காக மன்னிப்பு கோருவதுடன் எனது உள்ளம் சார்ந்த வருத்தத்தினையும் தெருவிக்கின்றோம். தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

 

நன்றி

இவ்வண்ணம்

ச.சசிகரன்

தலைவர்  

செக்டா

அன்புடையீர் வணக்கம்

 சுயமான முறையில் தனித்துவத்துடன் இயங்கும்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் செக்டா தொண்டு நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டம் ஆடைத் தொழிற்சாலைகளின் பிரதான (தலைமை) நிலையமாகவும் இயங்கும் மட்டக்களப்பு, சாவகச்சேரி செயற்திட்டங்கள் சகோதர நிறுவனங்களாக செயற்படும்.எதிர்காலத்தில் கைமாற்று நடவடிக்கைகள் அனைத்தும் உத்தியோக பூர்வமாகவும் கடன் அடிப்படையிலும் இடம்பெறும். தங்கள் அனுசரணையுடனான திட்டம் சுயமான முறையில் இயங்கும் தனித்துவத்துடன் இயங்கும் என்பதை அறியத்தருகின்றேன்.

நன்றி

இவ்வண்ணம்

ச.சசிகரன்

தலைவர்  

செக்டா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.