Jump to content

மதிப்புக்குமுரிய சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து சில நினைவுக் குறிப்புகள்


Recommended Posts

 kanapathipillai-tribute_CI.jpg
 
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களின்  மறைவு  குறித்து சில நினைவுக் குறிப்புகள் :-
 
எஸ் எம் வரதராஜன் 
 
 " ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம் பலவன் ஞானகுரு வாணியை முன்னாடு.." 
 
என்று  தாயகம் முதல் புலம்பெயர் தேசம் எங்கும் மேடைகளில் கம்பீரமாக ஆரம்பித்த அந்தக் குரல் இன்று ஓய்ந்துவிட்டது!  
 
நான் மட்டுமல்ல எனது வயதைச் சேர்ந்தவர்கள் பாடசாலை நாட்களில் வில்லிசையை இரசிக்கக் காரணமானவர் சின்னமணி. எண்கள் பாடசாலை  நாட்களில்   கோவில் திருவிழாக்களின் பொழுது  நாதஸ்வரக் கச்சேரி தொடங்கிச் சிலநிமிடங்களில் உறங்கும் நாம் மேளச் சமா விறுவிறு ப்பாயிருந்தால் எழும்புவது வழக்கம். அல்லது  சின்னமணி   வந்தால் தான்  உஷா ருடன்  எழும்பியிருப்போம். 
 
எனது காலத்தில் நாம் ஒன்றாயிருந்து வில்லுப்பாடுப் பார்த்தவர்கள் இன்று என்னுடன் இல்லை. சுக்லா என்று போராளியாக   இருந்த எனது ஒன்றுவிட்ட சகோதரன், விசு என்று பிற்காலத்தில் அழைக்கப்பெற்ற  அரவிந்த்ராம் ; நியூட்டன் என்று பிற்காலத்தில் அழைக்கப்பெற்ற  சிவகுமார்     என நாங்கள் ஒன்றாக மாலுசந்தி யிலும் கரணவாய் மூத்த  விநாயகர் கோவிலிலும் பாடசாலை நாட்களில் ஒன்றாக இருந்து சின்னமணி வில்லுப்பாட்டுப் பார்த்த  நினைவு கடந்த சிலநாட்கள் என் கண் முன்னே வந்தன. 
 
அப்படி நினைக்கும்போது ஒன்று என் மனதில் பட்டது-  எத்தனையோ பேரை அவர் வயது பால் வித்தியாசமின்றி வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தார். அவருக்கு முன்னர் அவரை ரசித்த பலர் போய்  விட்டனர்.  அவர் இப்பொழுதுதான் மேடையிலிருந்து இறங்கிப் போகிறார். 
 
அதுமட்டுமல்ல - நான்கு தலைமுறைக்கு மேலாக இவராலும்  மற்றும் அச்சுவேலி  ராஜ் நாடகக் கலாமன்ற சக்கடத்தார்  போன்றவர்களால் தமிழ்ச் சமூகம் சிரித்துச் சுவைத்து மகிழமட்டும் முடிந்தது .ஆனால் அரசியல் ரீதியாக அதற்கு இன்னமும்  சிரிக்க முடியவில்லை -என்பதையும் அன்னாரது பிரிவு ஒரு சமூகம் சார் செய்தியாக நமக்குத் தந்துள்ளது. 
 
நெல்லியடி முருகன் கோவிலுக்கு அடிக்கடி வருவார் சின்னமணி.  நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி  ஆலய உறசவம் போல யாழ் குடாநாட்டின் பல ஆலயங்களின் முன்றல்கள்  தோறும்  அவரது வில்லிசை நிகழ்சிகள் இடம்பெற்றிருக்கின்றன . சிறந்த நாடகக் கலைஞர் என்பதால் வில்லடிப் பவராக மட்டுமன்றி  அந்த அரங்கத்தை ஒரு கலையரங்கமாகவே தமது முக  அங்க அசைவுகளால்  மாற்றி  ரசனையை  தம்மீது  வசீகரித்துக் கொண்டு தமது வில்லிசையால் அந்தக் கணங்கள்  முழுவதையும் ஆட்சி செய்தவர்  சின்னமணி!  தூங்கியவர்கள் எல்லோரையும்  தமது நகைச்சுவையால் எழுப்பி வைத்து அடுத்த நிகழ்ச்சியான ராஜன் கோஷ்டி அல்லது கண்ணன் கோஷ்டியைப்  பார்ப்பதற்கு அவர்களைத் தயார்ப்படுத்திச் சென்றவர் சின்னமணி!  
 
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கவலைகளில் ஒன்று தாம் பெண் வேடம் போட்டு நடிக்க முடியவில்லை என்று . பெண்ணாக ஆண்  ஒருவர் நடித்தால் அவர் ஒரு சிறந்த கலைஞர் என்பதுண்டு. 
சின்னமணி வில்லிசையின் பொழுது  சொல்ல வந்த கதையின் பாத்திரங்களாகவே தாம் மாறுவதுடன் வள்ளி ,சீதை ,சந்திரமதி போன்ற பாத்திரங்களாகவே மாறி ரசிகர் மனங்களில்  கதையினைப் புகுத்திய காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.  இதில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால் அன்னாரது சந்திரமதியும் சாவித்திரியும்  அங்க அசைவில் முக பாவனையில் வித்தியாசமானவர்கள் என்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஒருமுறை சொன்னது ஞாபகம். 
 
அதுபோல கிறிஸ்துராஜா பற்றிய தமது வில்லிசைக்கு  கிறிஸ்து பிறந்த செய்தியைக் கேட்ட ஏரோதுவின் அங்க அசைவுகள் எப்படி இருக்கும் என்பதை தமது ஊரிலிருந்த தாவீது அடிகளாரிடம் (யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைக் கண்டபின்னர்  மறுநாள் உயிர் நீத்தவர்)  
 
 
எனது தாயார் தந்தையாருடன் அவர்கள் ஆசிரியர்கள்  என்பதாலும்  எனது தாயார் ஒரு இசைக் கலைஞர்  என்பதாலும்   நட்புடன் பழகியவர். நான் ரூபவாஹினிக்குச் சென்றபின்னர்  கொழும்பிற்கு வந்தால் எனக்கு தொலைபேசி எடுப்பார். "தம்பி வந்திருகிறேனடா ..விக்கியுடன் கதைத்து ஒரு ஸ்டூடியோ புக் பண்ண முடியுமெண்டால்  கேட்டுச் சொல் இரண்டு  அல்லது மூன்று  வில்லுப்பாட்டு செய்துவிட்டுப் போவேன்   " என்பார். அப்போ நான் கல்விச் சேவையில் பணியாற்றிய காலம்.  என்   பெற்றோரின் நட்பால்  வந்த உரிமை என்னைத் தொடர்பு கொள்ள வைத்தது. 
 
நான் தமிழ் பிரிவுக்குப் போன பின்னர்- அங்கு பணிப்பாளராக இருந்த திரு விஸ்வநாதன்  சின்னமணி அவர்களின்  வில்லுப்பாட்டை அவர் கொழும்புக்கு வரும்போதெல்லாம் செய்வதற்கு எனக்கு ஊக்கம் தந்தார். 
 
சின்னமணி அவர்கள் கொழும்புக்கு வந்தால் அவரைப் போய்ச் சந்தித்துப் பேசுவதில் அலாதியின்பம் ! பல கதைகள் பேசுவார். அறிவுக்குகந்த அவரது நகைச்சுவை மிக்க அனுபவப் பகிர்வுகள் எனது கலை வாழ்வுக்கு வளமூட்டியவை என்றால் மிகையல்ல. 
 
நேரம்முகாமைத்துவம்  என்ற விடயத்தில் அவர் அக்காலத்திலேயே எவ்வளவு  திடமாக இருந்தார் என்பதற்கு இரண்டு உதாரணங்களைக் குறிக்கலாம் 
 
1. ரூபவாஹினிக்கு கலையரங்கம் நிகழ்ச்சிக்கு வில்லிசை வழங்கும்போது அவற்குக் கொடுக்கப்படும்  நேர அளவு 23 நிமிடங்கள்  கடைசி எழுத்தோ ட்டத்தையும் போட்டு முடிக்க 25 நிமிடங்கள் வரும். ஒரு செக்கண்ட் கூட கூடக்கூடாது என்பது நிலைய முறைமை. அரை மணி நேர நிகழ்சிகளுக்கு அதுவே நேர அளவு ஆகும்.  சின்னமணி எமக்கு வழமைபோல ஐந்து நிமிடம் வர முன்னர் ஒரு "சிக்னல்"  (சைகை) மட்டும் தந்தாள் போதும் என்பார் .அதுபோலவே 22க்கும் 23 மூன்றுக்கும் இடையில் சரியாக முடித்திருப்பார். திருவிழாவில் இரண்டு மூன்று மணி நேரம் செய்த நிகழ்ச்சியை தொலைகாட்சிக்கு இரண்டு  அங்கமாக ஒரு மணி நேரத்தில் செய்து தருவார். மீண்டும் எடிட் செய்கின்ற  வேலை எமக்கு இருப்பதில்லை. 
 
2. அந்த நாட்களில் யாழ் குடா நாட்டில் பல ஆலயங்களில் திருவிழாவுக்கு இவரை அழைத்திருப்பார்களாம்    ஒருவருக்கும் குறை வைக்காமல் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டே வீடு திரும்புவார் என்றார். அதற்கேற்றபடி சில இடங்களில் வில்லிசையில் பாடல்கள் குறைந்து நகைச்சுவை கூடி விடயதானம் வழுவாமல்  ரசிகர் மனங்களை குறை சொல்லவிடாமல் தமது கலைப் பணியைச் செய்துள்ளார். 
 
சின்னமணி  ஏன்  கொழும்புக்கு வந்தார்  அதற்குப் பின்தான் எம்மைத் தொடர்பு கொண்டார்.. என்று நீங்கள் கேட்கலாம். 
 
நான் ரூபவாஹினியில் பின்னர் ஐ ரி என்  பின்னர் சக்தியில் பணியாற்றிய காலத்தில் வெளிநாட்டிலுள்ள பிள்ளைகளுடன் கதைப்பதற்கு  யாழ்ப்பாணப் பெற்றோரெல்லாம்  கொழும்புக்கே வரவேண்டியிருந்தது.   இப்படிக் கலைஞர்கள் யாரும் வரும்போது நாம் தேடிக் கண்டுபிடித்து நிகழ்ச்சி செய்யும்  காலத்தை அன்றைய தயாரிப்பாளர்களான நாம் கண்டோம். 
 
அவர் இப்படி கொழும்பு வந்த காலை சக்தியிலும் ஒரு தீபாவளி வில்லிசை தயாரித்த  நினைவு உண்டு!   
 
அவரது வில்லிசைகளை  மாதனையூரைச் சேர்ந்த தொழிலதிபர்  சதா அவர்கள் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் ஒளிப்பதிவு செய்திருந்தார். அத்துடன் அவருக்கு மணி விழா ஒன்றையும் நடத்தி மலர் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இவை ஆவண மாக்கப்படவேண்டியவை.  தேசிய அரசால் முடியாத காரியமாயினும் மாகாண சபை அல்லது  பிரதேச சபை ஒன்றாவது அன்னாரின் கலைப் படைப்புக்களையும் அவரது ஆவணங்களையும் பதிவு செய்தல் வேண்டும் என்பது எனது அவா! 
 
அவரது நகைச்சுவைகள் பல யதார்த்த மானவை  பார்க்கும் ரசிகப் பெருமக்களின் அன்றாட வாழ்வுடன் இணைந்தவை ! 
 
அவற்றில் ஒன்றை மட்டும் இங்கு சொல்லி  இக்குறிப்பை முடிக்கிறேன்:- 
 
ஒரு வில்லிசையில் சொன்னார்:- 
 
தபாற்சேவை பற்றிய அவரது நகைச்சுவை. கொழும்பிலிருந்து   சின்னமணி க்கு ஒரு தந்தி  வந்ததாம். தந்தியில்  முகவரி சின்னமணி , அச்சுவேலி என்று இருக்கவேண்டும் ஆனால் தந்திய எழுதிய தபால் ஊழியர் " அச்சுமணி , சின்ன வேலி " என்று  எழுதிவிடாராம். எப்படியோ தந்தி தமக்கு வந்து சேர்ந்ததாம் . ஏனெனில் தலைமைக் கந்தோரில் உள்ள தபால் அதிபர் சொல்லியிருப்பராம் .. அச்சுமணி என்று ஒரு பெயர் இல்லை "சின்ன  வேலி"  என்று ஒரு ஊரும் யாழ்பாணத்தில் இல்லை. அதால இது எங்கட "சின்னமணி" க்குத்தான்  அதால இது " அச்சுவேலி" க்குத்தான் -போகவேண்டும் ...என்று !
 
ஆம் ! "சின்னமணி"  என்றாலே அவர் ஒருவர் தான் என்பதை தமது கலைத் திறத்தால் நிலைநாட்டிச் சென்றவர் . அப் பெயரே  அவருக்கு உரிய பெரும் விருதாக அமைந்தது 
 
அவரது மரண அறிவித்தல் தெரிந்ததும் எங்கு நடைபெறுகிறது என்று முதலில் பார்த்தேன். 
 
அன்னாரின்  மரணச் செய்தியில் அச்சுவேலியைச் சேர்ந்த கலாவிநோதன்  கணபதிப்பிள்ளை  என்றும்  அச்சுவேலியில் நடைபெறும் என்றும்  அறிவிக்கப்படுகையில்  எனக்கு அவர் தம் ஊர் பற்றிச் சொன்ன அந்த நகைச்சுவை தான் நினைவுக்கு வந்தது. 
 
பெற்ற தாயும் பிறந்த பொன்  நாடும் நற்ற  வானிலும் நனி சிறந்தனவே ! என்பதை நினைவூட்டி நிற்கும் ஒரு கலைஞராக நம் முன் இன்று நிற்கிறார்  பெரியார்  சின்னமணி  கணபதிப்பிள்ளை அவர்கள்! 
 
நீண்ட நேரம் கதை சொல்லிய தமது வில்லிசையின் இறுதியில் அவர் தமது கண்ணீர்க் குரலில் "...நமபார்வதி பதயே! ஹர ஹர மஹாதேவா! " என்ற குரல் இன்னமும் ஒலி த்துக் கொண்டிருக்கிறது!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்ற தாயும் பிறந்த பொன்  நாடும் நற்ற  வானிலும் நனி சிறந்தனவே ! என்பதை நினைவூட்டி நிற்கும் ஒரு கலைஞராக நம் முன் இன்று நிற்கிறார்  பெரியார்  சின்னமணி  கணபதிப்பிள்ளை அவர்கள்! 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.