Jump to content

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 34

ஈழம் 

 

ஈழம் -

ஒரு தீவு;

ஒரு தீர்வு;

ஒரு கனவு;

கட்சிகளுக்கு ஒரு பிழைப்பு.

Link to comment
Share on other sites

  • Replies 228
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 35

ஒத்தி வைப்பு

 

மூணு நாள் என்றால்

மூணு நாளேவா

அஞ்சாவது நாள் தான் என்று

அஞ்சாது சொல்வாள்

மூணு வருசம் என்றாள்

மூணு வருசமேவா என்று

இரண்டாவது பிள்ளையை

ஏழு வருசம் தள்ளிவைத்தாள்

அவள் கொண்டு வரும்

ஒத்திவைப்புத் தீர்மானங்கள்

எதிர்க்கட்சி

பலமில்லாததால்

ஏக மனதாக

நிறைவேற்றப்படுகின்றன

Link to comment
Share on other sites

நீ குடை கொண்டுவர விரும்பாத
ஒரு நாளில்
திடீரென்று மழை வந்தது.
எனது குடையில்
இருவருக்கும் இடமிருந்தபோதும்
நாகரிகமும் கூடவர
இடமில்லாததால்
குடையை உன்னிடம் தந்து
நனைந்தபடி நானும் நடந்தேன்.

 

ரணம் பெயர்க்க

 

பெண் குழந்தை பிறந்தால்

உன் நிறைவேறாத

காதலுக்குச் சொந்தக்காரியின்

பெயரை வைப்பதென்னவோ

நியாயந்தான்

 

ஆனால்

ஆண்குழந்தை பிறந்தால்

பெயர் வைக்கும் உரிமையை

மனைவிக்குக் கொடுத்துவிடு

பின் பெயர்க்காரணம் கேட்காதே.

 

 

உண்மைச்  சம்பவத்தின் பதிவுகள்.   வாழ்த்துகள். தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 36

எல்லாவற்றையும்

 

சொற்களின்

சுவடொன்றுமில்லை

உதடுகளில்

கேட்டதன்

கறையொன்றுமில்லை

செவிகளில்

பார்த்ததன்

பதிவொன்றுமில்லை

விழிகளில்

எதையும்

மறுக்கவும்

மறைக்கவும்

மறக்கவும்

முடிகிறது

எளிதாக 

 

-சேயோன் யாழ்வேந்தன் (நன்றி.  www.valaitamil.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 37

பச்சை

வளமான ஊரில்தான்

வாழ்க்கைப்பட்டு இருக்கிறாய்

ஆலப்புழையில்

வீட்டு வாசற்படியில்

தண்ணீர் ஓடுமாமே,

எல்லாவற்றையும் கழுவி

சுத்தமாய் வைத்துக்கொள்ளலாம்.

சுடுமணல் ஓடுகிற ஆற்றில்

நான் போய்

எதைக் கழுவ முடியும்?

எங்கு பார்த்தாலும் பச்சை எனில்

உனக்கு வேறெந்த நினைவும் வராது.

மொட்டைத் தென்னைகளையே

பார்க்கும் எனக்குத்தான்

இளநீர்க்காலங்கள் நினைவிலாடுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 38

பின் நவீனத்துவக் கவிதை

பின் நவீனத்துவக் கவிதை

என்றால் என்னவென்று

போயும் போயும்

என்னிடம் கேட்டான் ஒருவன்.

நான் சொன்னேன்

இரு சக்கர வாகனத்தில்

முன் செல்லும்

பெண்ணொருத்தியின்

பின் நவீனத்துவம் பார்த்து

வேகத்தை நீ அதிகரித்து

முன் சென்று பார்த்து

ஏமாறுவது போல்தான் இதுவும்.

விளங்காத வாழ்வு பற்றி

விளங்காத கவிதை எழுதி

அவன் பெயர் விளங்க,

நீ விளங்காமல் நின்றிருப்பாய்

நூறாவது முறை படித்து.

 

கவிதையில் புதுசாக

புகுத்த இனி ஏதுமில்லை என்பதனால்,

வழக்கமான ‘பின்’ தவிர்த்து

தங்கம் வெள்ளியில்

பின் அடிப்பதும்,

வழக்கமான இடம் தவிர்த்து

மற்ற மூன்று மூலைகளில்

பின் அடிப்பதும்,

பல வண்ணங்களில்

பின் அடிப்பதும்,

இன்னும் முற்றிப் போனால்

ஒற்றைத்தாளுக்குப்

பின் அடிப்பதும்

பின் நவீனத்துவம் தான் என்றேன்.

பாவம் அவனோ

காதலிக்காக கவிதை எழுதும்

புதுக்கவிஞன்

அவள் இவனைக்

கைகழுவினால் தான்

மற்ற கவிதைகளைப் பற்றி

அவனால் யோசிக்கவே முடியும்.

நல்ல வேளை

அவன் என்னிடம் வந்தான்.

வேறொரு நவீனக்கவிஞனிடம்

சென்றிருந்தால்

விளக்கம் சொல்லியே

கொன்றிருப்பான்.

எடுத்துக்காட்டாய் அவனுடைய

நவீனக்கவிதை ஒன்று சொல்லியிருந்தால்,

இடிவிழுந்து செத்திருப்பான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 39

அன்பானவர்களுக்கு

 

இலக்கியமும் கவிதையும்

இன்னும் பலவும்

காலம் கடந்து நாம்

பேசிக்கொண்டிருந்ததில்

கணவன் சந்தேகிப்பான் என்பதையோ

மனைவி சபித்துக்கொண்டே

சமைத்துக்கொண்டிருப்பாள் என்பதையோ

மறந்தேபோனோம்

வீடு திரும்ப மனமில்லாதது போல்

ரயில் வாராத

நடைமேடையில்

அமர்ந்திருந்தோம்

இன்னும் பேசவேண்டியது

மிச்சமுள்ளது போல்.

சட்டென எழுந்து நின்றோம்

விடைபெறும் வேளையில்

மனதில் வினா எழுந்தது

மறுபடி எப்போது

சந்திப்போம் என்று.

எதுவும் பேசாமல்

எதிரெதிர் திசை பிரிந்தோம்.

என்ன செய்ய,

அன்பில்லாதவர்களுக்கு

எளிதாக இருக்கும் விஷயங்கள்

அன்பு கொண்டவர்களுக்கு

மிகக் கடினமாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 40

வீடு

‘வாடகைக்கு’ என்றும்

‘விற்பனைக்கு’ என்றும்

அறிவிப்புகள் தொங்குகின்றன

ஒரு வீடு

தேடிக்கொண்டிருக்கிறேன்

வாழ்வதற்கு

Link to comment
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 40

வீடு

‘வாடகைக்கு’ என்றும்

‘விற்பனைக்கு’ என்றும்

அறிவிப்புகள் தொங்குகின்றன

ஒரு வீடு

தேடிக்கொண்டிருக்கிறேன்

வாழ்வதற்கு

சிறு துரும்பும் பல்குத்த உதவுவதை, முதுமொழியில் கண்டேன்.
சிறு விடயமும் கவிதையாக மலர்வதை, யாழ்வேந்தனிடம் கண்டேன். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைகளை வாசித்து மனதாரப் பாராட்டும் தாய்த்தமிழ் உறவுகள் Paanch மற்றும் கவிப்புயல் இனியவனுக்கு நன்றி.


ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 41

அற்புதம்

 

பாத்தி கட்டி

உரமிட்டு

நீர் பாய்ச்சி

நீ வளர்த்திருக்கும்

ரோஜாக்கூட்டத்திலிருந்து

சற்றே விலகி

உன் மண்வெட்டியிலிருந்து தப்பி

வேலியில் ஒளிந்திருந்து

எட்டிப் பார்க்கிறது

ஒரு காட்டுச் செடியின்

அற்புத மலர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 42

விரதம்  

 

சென்ற முறை

மௌனம் பழகலாமென்று

இந்த மலைச்சரிவுக்கு வந்திருந்தோம்

நீ ஓயாமல் பேசிக்கொண்டிருந்தாய்

இந்த முறை

பிரம்மச்சரியம் பேணலாம்

என்று வந்திருக்கிறோம்


 


ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 43

சூத்திரனின் பிறப்பு

 

வழக்கம் போல்

நகர் உலாச் சென்ற கடவுள்

தெரியாத்தனமாக

ஒரு வேசியின்

வீட்டுக் கதவைத் தட்டிவிட்டார்

 

ஏதுமறியாத வேசிக்கு

வந்திருப்பது கடவுளென்று

தெரியாவிட்டாலும்

யாவுமறிந்த கடவுளுக்கு

அவள் வேசியென்பது

தெரிந்துவிட்டது

உள்ளே வாருங்கள் என்றாள் வேசி.

கடவுள் தயங்கினார் –

இல்லை, நான் அதற்காக வரவில்லை.

வேசி சிரித்தாள் -

நேற்றுந்தான் ஒருவன்

கவிஞன் நான்

கவிதை எழுதத்தான் வந்தேன்

என்று சொல்லிக்கொண்டு

காகிதம் பேனாவோடு வந்தான்

காகிதத்தில் ஒரு வரியும் எழுதவில்லை

காலையில் தான் போனான் என்றாள்.

கடவுள் திக்கினார் -

நான் அப்.....

அதற்கு மேல்

கடவுளைப் பேசவிடவில்லை வேசி.

ஆட்கொல்லி ஆண்டவன்

ஆட்கொள்வதற்கு

வேசிகள் ஒன்றும்
விலக்கல்லவே.

சூத்திரனின்

பிறப்பை

வேதங்கள் அறிவித்தன,

பிரபஞ்சம் கொண்டாடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் வித்தியாசமான அருமையான கவிதைகள் .

நன்றாக இருக்கிறது . என் மனமார்ந்த பாராட்டுகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் வித்தியாசமான அருமையான கவிதைகள் .

நன்றாக இருக்கிறது . என் மனமார்ந்த பாராட்டுகள் .

 

உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி.   பாராட்டுகள் கவிதைக்கு வித்துகள்.  தாய்த்தமிழால் இணைந்திருப்போம்.

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 44

வேறு ஆகமம் 

 

அடிவாங்கியே

புனிதராகிவிட்டீர்

அடித்தவனை

பாவியாக்கி

ஒரு கன்னத்தில்

அறைந்தவனை

மேலும் பாவியாக்க

யாம் விரும்பவில்லை

பிதாவே

 

வண்டி இழுத்து வந்த

குதிரை

வாய்ப்பூட்டோடு

வாசலிலே நிற்கிறது

பாவிகளை

உம்மிடம்

சுமந்து வரும்

பாரம் அழுத்துகிறது

பரம பிதாவே

உண்மையிலேயே

வருத்தப்பட்டு

பாரம் சுமப்பவர்களுக்கு

எப்போது

இளைப்பாறுதல் தரப்போகிறீர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 45

இன்னும் அவகாசம் இருக்கிறது

 

யாரும்

அவசரப்பட்டு

எந்த முடிவுக்கும்

வந்துவிட வேண்டாம்

அவர்கள்

உங்களைக் கொல்வது கூட

உங்களைக் காப்பாற்றுவதற்காக இருக்கலாம்

மூன்றாம் நாள்

நீங்கள்

உயிர்த்தெழவில்லையெனில்

அவர்கள் மீது

வழக்குத் தொடுக்கலாம்

உங்களை அறிந்தவர்

எவரும்

உயிரோடிருந்தால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 46

அவநம்பிக்கையின் மேல் நம்பிக்கை

வீட்டுக் கூரையினின்று 
காகம் கரைந்தால் 
விருந்து வருமென்று 
அம்மா சொல்வதை 
நான் நம்புவதேயில்லை 

இன்று ஞாயிற்றுக்கிழமை 
நீ வருவாய் என்ற 
நம்பிக்கை இருக்கிறது 

காகத்தின் மேல் ஏன் 
மூட நம்பிக்கை வைக்க வேண்டும்? 

பொழுது சாயச் சாய 
நம்பிக்கையும்... 

வேறு வழியறியாமல் 
வாசலில் காகத்துக்கு 
சோறு வைத்தேன் 

சோற்றைத் தின்ற காகம் 
கூரையில் அமர்ந்தது 
அமைதியாக 
 

நீ வரும் நேரம்

கடந்ததும்

காகம் பறந்தது


எனது நம்பிக்கையைப் பொய்யாக்கி 
நீ என்னை ஏமாற்றிவிட்டதாக 
நினைக்கவில்லை 

எனது அவநம்பிக்கையைப் பொய்யாக்கி 
இந்தக் காகம்தான் என்னை ஏமாற்றிவிட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 47

தேள் புராணம்

 

தெருவிளக்கடியில் படித்த

நான்காண்டுகளில்

தேள்களின் வாழ்க்கை முறையை

தெரிந்துகொண்டேன்

 

தேள்கள் சுவர்களில்

ஏறுவதில்லை என்பதால்

கால்வாய் சிமென்டுக் கட்டையில்

கால்களைத் தூக்கிக் கொண்டு

ஆபத்தின்றி உட்கார்ந்துகொள்வேன்

 

தேள்கள் மனிதர்களிடமிருந்து

விலகி இருக்கவே

விரும்புகின்றன

 

நள்ளிரவு வேளைகளில்

பெரும்பாலும் 

தனித் தனியாகவே

அவை வருகின்றன

 

 

இருளில் நடக்கும்போது

நிலவொளியை

முதுகில் சுமந்து செல்லும்

தேள்கள்

அழகுணர்ச்சி மிக்கவை

 

செந்தேள் கருந்தேள்

எருமைத்தேள் நட்டுவாக்கலி என்று

வகைகள் உண்டு அவற்றில்

 

புணர்ச்சி முடிந்தவுடன்

துணையைக்கொன்று தின்றால்

அது பெண்தேள் என்று

தெரிந்துகொள்ளலாம்

பெண்தேளை இனங்காண

வேறு அம்சங்களை

அந்த வயதில்

நான் அறிந்திருக்கவில்லை

 

 

உயிரியல் ரெக்கார்டு நோட்டில்

அச்சு அசலாக

தேள் வரைந்ததைப் பாராட்டி

லட்சுமி டீச்சர்

முதுகில் தட்டிக்கொடுத்தது

இன்னும் மெத்து மெத்தென்றிருக்கிறது

 

ஓவியப் போட்டியில்

இயற்கைக்காட்சி என்ற தலைப்பில்

தேள் வரைந்ததற்கு

பரிசு கிடைக்கவில்லை

 

தெருவிளக்கடியில் படித்ததால்

தேள்களைப்பற்றி அறிந்துகொண்டேன்

தேள்களன்னியில்

தெருவிளக்கடியில்

படித்தது எதுவும்

நினைவில் இல்லை.

-சேயோன் தேள்வேந்தன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 48

பவனி

நானும் அவளும்

எத்தனை விதமான

உடைகளில் 

பவனி வந்தோம்

அந்த இறுதி நிர்வாணத்திற்காக

Link to comment
Share on other sites

அற்புதம்

 

பாத்தி கட்டி

உரமிட்டு

நீர் பாய்ச்சி

நீ வளர்த்திருக்கும்

ரோஜாக்கூட்டத்திலிருந்து

சற்றே விலகி

உன் மண்வெட்டியிலிருந்து தப்பி

வேலியில் ஒளிந்திருந்து

எட்டிப் பார்க்கிறது

ஒரு காட்டுச் செடியின்

அற்புத மலர்

 

தலைப்பை போலவே மிக அற்புதமான கவிதை !!!.   

 

 பள்ளி, வீட்டுப்பாடம், இசை வகுப்பு, நடன வகுப்பு என நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பணக்கார வீட்டு குழந்தையை ரோஜாச்செடியும் , புழுதியில் புரண்டு விளையாடி, வாழ்கையை வாழ்ந்து, எந்த கட்டுப்பாடும் இல்லாது சுதந்திரமாய் சுற்றி தெரியும் ஏழை வீட்டு குழந்தையை காட்டுச்செடியின் அற்புத மலரும்  பிரதிபலிக்கிறது. 

 

- செந்தமிழன் அன்புச்செல்வன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பை போலவே மிக அற்புதமான கவிதை !!!.   

 

 பள்ளி, வீட்டுப்பாடம், இசை வகுப்பு, நடன வகுப்பு என நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பணக்கார வீட்டு குழந்தையை ரோஜாச்செடியும் , புழுதியில் புரண்டு விளையாடி, வாழ்கையை வாழ்ந்து, எந்த கட்டுப்பாடும் இல்லாது சுதந்திரமாய் சுற்றி தெரியும் ஏழை வீட்டு குழந்தையை காட்டுச்செடியின் அற்புத மலரும்  பிரதிபலிக்கிறது. 

 

- செந்தமிழன் அன்புச்செல்வன் 

 

செந்தமிழன் அன்புச்செல்வனின் நுண்ணிய வாசிப்புத் திறன் இன்னும் யோசிக்க வைக்கிறது.  தங்கள் கருத்துரைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 49

ஒளி ஊடுருவும் முகங்கொண்ட எதிரியே 

 

நான் எல்லை மீறிவிட்டதாக

நிரூபிப்பதற்காக

சுவர் ஓவியங்களை

தலைகீழாக மாட்டியிருக்கிறாய்

கதவு நிலையை

கூரையில் தொங்கவிட்டிருக்கிறாய்

சிரசாசனம் செய்தபடி

பேசப்பழகியிருக்கிறாய்

உன் அறியாமையை எண்ணிச் சிரித்தபடி

இன்னொரு கோப்பையை நிறைக்கிறேன்

 

கடைசிக் கோப்பையின்

கடைசிச் சொட்டுக்குமுன்

உன் தோல்வியைப்

பொறுக்க முடியாமல்

விளக்கணைக்கிறாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக இருக்கின்றன கவிதைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையாக இருக்கின்றன கவிதைகள்

 

 

நன்றி கவிதாயினி. யாழ் இணையத்தில் இணைந்த பிறகு, உங்களைப் போன்ற கவிகளின் பாராட்டுகளால், என் எழுத்துத் திறன் கூடியிருப்பதாக உணர்கிறேன். நன்றி. யாழ் இணையத்துக்கும் தமிழ் உறவுகளுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதாயினி. யாழ் இணையத்தில் இணைந்த பிறகு, உங்களைப் போன்ற கவிகளின் பாராட்டுகளால், என் எழுத்துத் திறன் கூடியிருப்பதாக உணர்கிறேன். நன்றி. யாழ் இணையத்துக்கும் தமிழ் உறவுகளுக்கும்.

 

நக்கலுக்கும் ஒரு அளவு வேணும் சேயோன். உங்களைக் கவிஞன் என்று கூறலாம். நான் கவிதை எழுத இப்பதான் பயில்கிறேன். அதுகூட ஒழுங்காக வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. நீங்கள் வேறு ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உண்மையாகத் தான் சொன்னேன். 

 

எல்லோரிடமும் இருக்கிறது கவிதை

என்ன கழுதை

எழுதாமல் கிடக்கிறது

அவ்வளவுதான்.

 

உங்களிடம் இருக்கும் நல்ல கவிதைகள் ஒவ்வொன்றாக வெளிப்படும்,  அதற்கான காலமும் சூழலும் வாய்க்கும்போது.

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.