Jump to content

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 34

ஈழம் 

 

ஈழம் -

ஒரு தீவு;

ஒரு தீர்வு;

ஒரு கனவு;

கட்சிகளுக்கு ஒரு பிழைப்பு.

Link to comment
Share on other sites

  • Replies 228
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 35

ஒத்தி வைப்பு

 

மூணு நாள் என்றால்

மூணு நாளேவா

அஞ்சாவது நாள் தான் என்று

அஞ்சாது சொல்வாள்

மூணு வருசம் என்றாள்

மூணு வருசமேவா என்று

இரண்டாவது பிள்ளையை

ஏழு வருசம் தள்ளிவைத்தாள்

அவள் கொண்டு வரும்

ஒத்திவைப்புத் தீர்மானங்கள்

எதிர்க்கட்சி

பலமில்லாததால்

ஏக மனதாக

நிறைவேற்றப்படுகின்றன

Link to comment
Share on other sites

நீ குடை கொண்டுவர விரும்பாத
ஒரு நாளில்
திடீரென்று மழை வந்தது.
எனது குடையில்
இருவருக்கும் இடமிருந்தபோதும்
நாகரிகமும் கூடவர
இடமில்லாததால்
குடையை உன்னிடம் தந்து
நனைந்தபடி நானும் நடந்தேன்.

 

ரணம் பெயர்க்க

 

பெண் குழந்தை பிறந்தால்

உன் நிறைவேறாத

காதலுக்குச் சொந்தக்காரியின்

பெயரை வைப்பதென்னவோ

நியாயந்தான்

 

ஆனால்

ஆண்குழந்தை பிறந்தால்

பெயர் வைக்கும் உரிமையை

மனைவிக்குக் கொடுத்துவிடு

பின் பெயர்க்காரணம் கேட்காதே.

 

 

உண்மைச்  சம்பவத்தின் பதிவுகள்.   வாழ்த்துகள். தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 36

எல்லாவற்றையும்

 

சொற்களின்

சுவடொன்றுமில்லை

உதடுகளில்

கேட்டதன்

கறையொன்றுமில்லை

செவிகளில்

பார்த்ததன்

பதிவொன்றுமில்லை

விழிகளில்

எதையும்

மறுக்கவும்

மறைக்கவும்

மறக்கவும்

முடிகிறது

எளிதாக 

 

-சேயோன் யாழ்வேந்தன் (நன்றி.  www.valaitamil.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 37

பச்சை

வளமான ஊரில்தான்

வாழ்க்கைப்பட்டு இருக்கிறாய்

ஆலப்புழையில்

வீட்டு வாசற்படியில்

தண்ணீர் ஓடுமாமே,

எல்லாவற்றையும் கழுவி

சுத்தமாய் வைத்துக்கொள்ளலாம்.

சுடுமணல் ஓடுகிற ஆற்றில்

நான் போய்

எதைக் கழுவ முடியும்?

எங்கு பார்த்தாலும் பச்சை எனில்

உனக்கு வேறெந்த நினைவும் வராது.

மொட்டைத் தென்னைகளையே

பார்க்கும் எனக்குத்தான்

இளநீர்க்காலங்கள் நினைவிலாடுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 38

பின் நவீனத்துவக் கவிதை

பின் நவீனத்துவக் கவிதை

என்றால் என்னவென்று

போயும் போயும்

என்னிடம் கேட்டான் ஒருவன்.

நான் சொன்னேன்

இரு சக்கர வாகனத்தில்

முன் செல்லும்

பெண்ணொருத்தியின்

பின் நவீனத்துவம் பார்த்து

வேகத்தை நீ அதிகரித்து

முன் சென்று பார்த்து

ஏமாறுவது போல்தான் இதுவும்.

விளங்காத வாழ்வு பற்றி

விளங்காத கவிதை எழுதி

அவன் பெயர் விளங்க,

நீ விளங்காமல் நின்றிருப்பாய்

நூறாவது முறை படித்து.

 

கவிதையில் புதுசாக

புகுத்த இனி ஏதுமில்லை என்பதனால்,

வழக்கமான ‘பின்’ தவிர்த்து

தங்கம் வெள்ளியில்

பின் அடிப்பதும்,

வழக்கமான இடம் தவிர்த்து

மற்ற மூன்று மூலைகளில்

பின் அடிப்பதும்,

பல வண்ணங்களில்

பின் அடிப்பதும்,

இன்னும் முற்றிப் போனால்

ஒற்றைத்தாளுக்குப்

பின் அடிப்பதும்

பின் நவீனத்துவம் தான் என்றேன்.

பாவம் அவனோ

காதலிக்காக கவிதை எழுதும்

புதுக்கவிஞன்

அவள் இவனைக்

கைகழுவினால் தான்

மற்ற கவிதைகளைப் பற்றி

அவனால் யோசிக்கவே முடியும்.

நல்ல வேளை

அவன் என்னிடம் வந்தான்.

வேறொரு நவீனக்கவிஞனிடம்

சென்றிருந்தால்

விளக்கம் சொல்லியே

கொன்றிருப்பான்.

எடுத்துக்காட்டாய் அவனுடைய

நவீனக்கவிதை ஒன்று சொல்லியிருந்தால்,

இடிவிழுந்து செத்திருப்பான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 39

அன்பானவர்களுக்கு

 

இலக்கியமும் கவிதையும்

இன்னும் பலவும்

காலம் கடந்து நாம்

பேசிக்கொண்டிருந்ததில்

கணவன் சந்தேகிப்பான் என்பதையோ

மனைவி சபித்துக்கொண்டே

சமைத்துக்கொண்டிருப்பாள் என்பதையோ

மறந்தேபோனோம்

வீடு திரும்ப மனமில்லாதது போல்

ரயில் வாராத

நடைமேடையில்

அமர்ந்திருந்தோம்

இன்னும் பேசவேண்டியது

மிச்சமுள்ளது போல்.

சட்டென எழுந்து நின்றோம்

விடைபெறும் வேளையில்

மனதில் வினா எழுந்தது

மறுபடி எப்போது

சந்திப்போம் என்று.

எதுவும் பேசாமல்

எதிரெதிர் திசை பிரிந்தோம்.

என்ன செய்ய,

அன்பில்லாதவர்களுக்கு

எளிதாக இருக்கும் விஷயங்கள்

அன்பு கொண்டவர்களுக்கு

மிகக் கடினமாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 40

வீடு

‘வாடகைக்கு’ என்றும்

‘விற்பனைக்கு’ என்றும்

அறிவிப்புகள் தொங்குகின்றன

ஒரு வீடு

தேடிக்கொண்டிருக்கிறேன்

வாழ்வதற்கு

Link to comment
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 40

வீடு

‘வாடகைக்கு’ என்றும்

‘விற்பனைக்கு’ என்றும்

அறிவிப்புகள் தொங்குகின்றன

ஒரு வீடு

தேடிக்கொண்டிருக்கிறேன்

வாழ்வதற்கு

சிறு துரும்பும் பல்குத்த உதவுவதை, முதுமொழியில் கண்டேன்.
சிறு விடயமும் கவிதையாக மலர்வதை, யாழ்வேந்தனிடம் கண்டேன். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைகளை வாசித்து மனதாரப் பாராட்டும் தாய்த்தமிழ் உறவுகள் Paanch மற்றும் கவிப்புயல் இனியவனுக்கு நன்றி.


ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 41

அற்புதம்

 

பாத்தி கட்டி

உரமிட்டு

நீர் பாய்ச்சி

நீ வளர்த்திருக்கும்

ரோஜாக்கூட்டத்திலிருந்து

சற்றே விலகி

உன் மண்வெட்டியிலிருந்து தப்பி

வேலியில் ஒளிந்திருந்து

எட்டிப் பார்க்கிறது

ஒரு காட்டுச் செடியின்

அற்புத மலர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 42

விரதம்  

 

சென்ற முறை

மௌனம் பழகலாமென்று

இந்த மலைச்சரிவுக்கு வந்திருந்தோம்

நீ ஓயாமல் பேசிக்கொண்டிருந்தாய்

இந்த முறை

பிரம்மச்சரியம் பேணலாம்

என்று வந்திருக்கிறோம்


 


ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 43

சூத்திரனின் பிறப்பு

 

வழக்கம் போல்

நகர் உலாச் சென்ற கடவுள்

தெரியாத்தனமாக

ஒரு வேசியின்

வீட்டுக் கதவைத் தட்டிவிட்டார்

 

ஏதுமறியாத வேசிக்கு

வந்திருப்பது கடவுளென்று

தெரியாவிட்டாலும்

யாவுமறிந்த கடவுளுக்கு

அவள் வேசியென்பது

தெரிந்துவிட்டது

உள்ளே வாருங்கள் என்றாள் வேசி.

கடவுள் தயங்கினார் –

இல்லை, நான் அதற்காக வரவில்லை.

வேசி சிரித்தாள் -

நேற்றுந்தான் ஒருவன்

கவிஞன் நான்

கவிதை எழுதத்தான் வந்தேன்

என்று சொல்லிக்கொண்டு

காகிதம் பேனாவோடு வந்தான்

காகிதத்தில் ஒரு வரியும் எழுதவில்லை

காலையில் தான் போனான் என்றாள்.

கடவுள் திக்கினார் -

நான் அப்.....

அதற்கு மேல்

கடவுளைப் பேசவிடவில்லை வேசி.

ஆட்கொல்லி ஆண்டவன்

ஆட்கொள்வதற்கு

வேசிகள் ஒன்றும்
விலக்கல்லவே.

சூத்திரனின்

பிறப்பை

வேதங்கள் அறிவித்தன,

பிரபஞ்சம் கொண்டாடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் வித்தியாசமான அருமையான கவிதைகள் .

நன்றாக இருக்கிறது . என் மனமார்ந்த பாராட்டுகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் வித்தியாசமான அருமையான கவிதைகள் .

நன்றாக இருக்கிறது . என் மனமார்ந்த பாராட்டுகள் .

 

உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி.   பாராட்டுகள் கவிதைக்கு வித்துகள்.  தாய்த்தமிழால் இணைந்திருப்போம்.

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 44

வேறு ஆகமம் 

 

அடிவாங்கியே

புனிதராகிவிட்டீர்

அடித்தவனை

பாவியாக்கி

ஒரு கன்னத்தில்

அறைந்தவனை

மேலும் பாவியாக்க

யாம் விரும்பவில்லை

பிதாவே

 

வண்டி இழுத்து வந்த

குதிரை

வாய்ப்பூட்டோடு

வாசலிலே நிற்கிறது

பாவிகளை

உம்மிடம்

சுமந்து வரும்

பாரம் அழுத்துகிறது

பரம பிதாவே

உண்மையிலேயே

வருத்தப்பட்டு

பாரம் சுமப்பவர்களுக்கு

எப்போது

இளைப்பாறுதல் தரப்போகிறீர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 45

இன்னும் அவகாசம் இருக்கிறது

 

யாரும்

அவசரப்பட்டு

எந்த முடிவுக்கும்

வந்துவிட வேண்டாம்

அவர்கள்

உங்களைக் கொல்வது கூட

உங்களைக் காப்பாற்றுவதற்காக இருக்கலாம்

மூன்றாம் நாள்

நீங்கள்

உயிர்த்தெழவில்லையெனில்

அவர்கள் மீது

வழக்குத் தொடுக்கலாம்

உங்களை அறிந்தவர்

எவரும்

உயிரோடிருந்தால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 46

அவநம்பிக்கையின் மேல் நம்பிக்கை

வீட்டுக் கூரையினின்று 
காகம் கரைந்தால் 
விருந்து வருமென்று 
அம்மா சொல்வதை 
நான் நம்புவதேயில்லை 

இன்று ஞாயிற்றுக்கிழமை 
நீ வருவாய் என்ற 
நம்பிக்கை இருக்கிறது 

காகத்தின் மேல் ஏன் 
மூட நம்பிக்கை வைக்க வேண்டும்? 

பொழுது சாயச் சாய 
நம்பிக்கையும்... 

வேறு வழியறியாமல் 
வாசலில் காகத்துக்கு 
சோறு வைத்தேன் 

சோற்றைத் தின்ற காகம் 
கூரையில் அமர்ந்தது 
அமைதியாக 
 

நீ வரும் நேரம்

கடந்ததும்

காகம் பறந்தது


எனது நம்பிக்கையைப் பொய்யாக்கி 
நீ என்னை ஏமாற்றிவிட்டதாக 
நினைக்கவில்லை 

எனது அவநம்பிக்கையைப் பொய்யாக்கி 
இந்தக் காகம்தான் என்னை ஏமாற்றிவிட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 47

தேள் புராணம்

 

தெருவிளக்கடியில் படித்த

நான்காண்டுகளில்

தேள்களின் வாழ்க்கை முறையை

தெரிந்துகொண்டேன்

 

தேள்கள் சுவர்களில்

ஏறுவதில்லை என்பதால்

கால்வாய் சிமென்டுக் கட்டையில்

கால்களைத் தூக்கிக் கொண்டு

ஆபத்தின்றி உட்கார்ந்துகொள்வேன்

 

தேள்கள் மனிதர்களிடமிருந்து

விலகி இருக்கவே

விரும்புகின்றன

 

நள்ளிரவு வேளைகளில்

பெரும்பாலும் 

தனித் தனியாகவே

அவை வருகின்றன

 

 

இருளில் நடக்கும்போது

நிலவொளியை

முதுகில் சுமந்து செல்லும்

தேள்கள்

அழகுணர்ச்சி மிக்கவை

 

செந்தேள் கருந்தேள்

எருமைத்தேள் நட்டுவாக்கலி என்று

வகைகள் உண்டு அவற்றில்

 

புணர்ச்சி முடிந்தவுடன்

துணையைக்கொன்று தின்றால்

அது பெண்தேள் என்று

தெரிந்துகொள்ளலாம்

பெண்தேளை இனங்காண

வேறு அம்சங்களை

அந்த வயதில்

நான் அறிந்திருக்கவில்லை

 

 

உயிரியல் ரெக்கார்டு நோட்டில்

அச்சு அசலாக

தேள் வரைந்ததைப் பாராட்டி

லட்சுமி டீச்சர்

முதுகில் தட்டிக்கொடுத்தது

இன்னும் மெத்து மெத்தென்றிருக்கிறது

 

ஓவியப் போட்டியில்

இயற்கைக்காட்சி என்ற தலைப்பில்

தேள் வரைந்ததற்கு

பரிசு கிடைக்கவில்லை

 

தெருவிளக்கடியில் படித்ததால்

தேள்களைப்பற்றி அறிந்துகொண்டேன்

தேள்களன்னியில்

தெருவிளக்கடியில்

படித்தது எதுவும்

நினைவில் இல்லை.

-சேயோன் தேள்வேந்தன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 48

பவனி

நானும் அவளும்

எத்தனை விதமான

உடைகளில் 

பவனி வந்தோம்

அந்த இறுதி நிர்வாணத்திற்காக

Link to comment
Share on other sites

அற்புதம்

 

பாத்தி கட்டி

உரமிட்டு

நீர் பாய்ச்சி

நீ வளர்த்திருக்கும்

ரோஜாக்கூட்டத்திலிருந்து

சற்றே விலகி

உன் மண்வெட்டியிலிருந்து தப்பி

வேலியில் ஒளிந்திருந்து

எட்டிப் பார்க்கிறது

ஒரு காட்டுச் செடியின்

அற்புத மலர்

 

தலைப்பை போலவே மிக அற்புதமான கவிதை !!!.   

 

 பள்ளி, வீட்டுப்பாடம், இசை வகுப்பு, நடன வகுப்பு என நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பணக்கார வீட்டு குழந்தையை ரோஜாச்செடியும் , புழுதியில் புரண்டு விளையாடி, வாழ்கையை வாழ்ந்து, எந்த கட்டுப்பாடும் இல்லாது சுதந்திரமாய் சுற்றி தெரியும் ஏழை வீட்டு குழந்தையை காட்டுச்செடியின் அற்புத மலரும்  பிரதிபலிக்கிறது. 

 

- செந்தமிழன் அன்புச்செல்வன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பை போலவே மிக அற்புதமான கவிதை !!!.   

 

 பள்ளி, வீட்டுப்பாடம், இசை வகுப்பு, நடன வகுப்பு என நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பணக்கார வீட்டு குழந்தையை ரோஜாச்செடியும் , புழுதியில் புரண்டு விளையாடி, வாழ்கையை வாழ்ந்து, எந்த கட்டுப்பாடும் இல்லாது சுதந்திரமாய் சுற்றி தெரியும் ஏழை வீட்டு குழந்தையை காட்டுச்செடியின் அற்புத மலரும்  பிரதிபலிக்கிறது. 

 

- செந்தமிழன் அன்புச்செல்வன் 

 

செந்தமிழன் அன்புச்செல்வனின் நுண்ணிய வாசிப்புத் திறன் இன்னும் யோசிக்க வைக்கிறது.  தங்கள் கருத்துரைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 49

ஒளி ஊடுருவும் முகங்கொண்ட எதிரியே 

 

நான் எல்லை மீறிவிட்டதாக

நிரூபிப்பதற்காக

சுவர் ஓவியங்களை

தலைகீழாக மாட்டியிருக்கிறாய்

கதவு நிலையை

கூரையில் தொங்கவிட்டிருக்கிறாய்

சிரசாசனம் செய்தபடி

பேசப்பழகியிருக்கிறாய்

உன் அறியாமையை எண்ணிச் சிரித்தபடி

இன்னொரு கோப்பையை நிறைக்கிறேன்

 

கடைசிக் கோப்பையின்

கடைசிச் சொட்டுக்குமுன்

உன் தோல்வியைப்

பொறுக்க முடியாமல்

விளக்கணைக்கிறாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக இருக்கின்றன கவிதைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையாக இருக்கின்றன கவிதைகள்

 

 

நன்றி கவிதாயினி. யாழ் இணையத்தில் இணைந்த பிறகு, உங்களைப் போன்ற கவிகளின் பாராட்டுகளால், என் எழுத்துத் திறன் கூடியிருப்பதாக உணர்கிறேன். நன்றி. யாழ் இணையத்துக்கும் தமிழ் உறவுகளுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதாயினி. யாழ் இணையத்தில் இணைந்த பிறகு, உங்களைப் போன்ற கவிகளின் பாராட்டுகளால், என் எழுத்துத் திறன் கூடியிருப்பதாக உணர்கிறேன். நன்றி. யாழ் இணையத்துக்கும் தமிழ் உறவுகளுக்கும்.

 

நக்கலுக்கும் ஒரு அளவு வேணும் சேயோன். உங்களைக் கவிஞன் என்று கூறலாம். நான் கவிதை எழுத இப்பதான் பயில்கிறேன். அதுகூட ஒழுங்காக வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. நீங்கள் வேறு ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உண்மையாகத் தான் சொன்னேன். 

 

எல்லோரிடமும் இருக்கிறது கவிதை

என்ன கழுதை

எழுதாமல் கிடக்கிறது

அவ்வளவுதான்.

 

உங்களிடம் இருக்கும் நல்ல கவிதைகள் ஒவ்வொன்றாக வெளிப்படும்,  அதற்கான காலமும் சூழலும் வாய்க்கும்போது.

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.