Jump to content

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 50

ஓர் அரிசியில் பெயர் எழுத

ஓர் அரிசியில்

என் பெயர் எழுத

இருபது ரூபாய்

கட்டணம் என்பது

ரொம்ப அநியாயமாகப் பட்டது.

ஒவ்வொரு அரிசியிலும்

உண்பவன் பெயர்

எழுதப்பட்டிருக்குமென்று

அம்மா அடிக்கடி சொல்வாள் –

ஊறவைக்கும்போது பார்த்திருக்கலாம்.

வேக வைத்ததில் அழிந்து போயிருக்கலாம்.

மட்டமான அரிசியில்

ஏழைகளின் பெயர்களையும்

பாசுமதி அரிசியில்

பணக்காரன் பெயரையும்

ஆண்டவனே எழுதும்போது

நாமென்ன செய்யமுடியும் நடுவே?

அரசுக் கிடங்குகளில்

வீணாகும் அரிசிகளில்

புழுக்களின் பெயரை

எழுதியவன்

காருண்யமூர்த்தி

Link to comment
Share on other sites

  • Replies 228
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 51

எதற்கு?

 

ஒவ்வொரு

கணப்பொழுதும்

ஏதாவதொரு மீன்

தூண்டிலில் மாட்டிக்கொண்டுதானிருக்கிறது

ஒவ்வொரு

கணப்பொழுதும்

எவனாவதொருவன்

மீன் எதுவும் சிக்காத விரக்தியில்

தூண்டிலை சுருட்டிக்கொண்டும் இருக்கிறான்

மீன் கிடைத்தவன்

கடவுளுக்கு நன்றி சொல்கிறான்

மீன் கிடைக்காதவன்

கடவுளைச் சபிக்கிறான்

சிக்கிய மீன்

கடவுளை சபிப்பதுமில்லை

தப்பிய மீன்

கடவுளுக்கு நன்றி சொல்வதுமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 52

 

நான் கவிஞன் ஆன கதை

 

என் நாவில் குடியிருந்த

சரஸ்வதி வெளியேறினாள்

நாற்றம் பொறுக்காமல்

பின்பொரு நாள்

என் கனவில் வந்த

காளி சொன்னாள்

என் மனைவிபோல் காதருகே -

வாசிக்கும் நண்பர்களை வைத்திருக்கிறாய்.

நீயேன் எழுதக்கூடாது?

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 53

இந்தப் பிறவியில்

போன பிறவியில்

நாயாய் நரியாய்

புலியாய் சிங்கமாய்

என்னவாக வேண்டுமானாலும்

இருந்துவிட்டுப் போ.

இந்தப் பிறவியில்

இருக்காதே

ஒரு

புழுவாய்

காக்கையாய்

பச்சோந்தியாய்

நரியாய்

கருநாகமாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 54

நிழல்கள்

 

ங. 

ஒளி நிழல்களைத் தோற்றுவிக்கிறது

இருள் நிழல்களை அழித்துவிடுகிறது

 

ஙா. 

இருள் என்பது

பூமியின் நிழல்

பூமியிலேயே விழுவது

 

ஙி. 

காலடியில் துவங்கும் நிழல்

வானம்வரை கூட

வளர்ந்துவிடுவதுண்டு

 

ஙீ.

உச்சி வேளையில்

வெப்பம் தாளாமல்

நிழல்

கால்களுக்கு அடியில்

ஒளிந்துகொள்கிறது

 

ஙு. 

மூடிய கதவுகளின்

மேல் படியும்

நிழல்கள்

கதவு திறந்ததும்

வீட்டுக்குள் வந்துவிடுகின்றன

 

ஙூ. 

மற்றெதையும் விட

தங்கள் நிழல்களைப் பார்த்தே

குழந்தைகள்

அதிகமாக பயப்படுகிறார்கள்

 

ஙெ. 

நிழல் உலகில்

நிஜ மனிதர்களும்

நிஜ உலகில்

நிழல் மனிதர்களும்

உலவுவது விந்தைதான்

 

ஙே. 

பேய்களுக்கு

நிழல் இல்லை

பேய்களை யாரும்

பார்த்திராததால்

அதை இன்னும்

உறுதிப்படுத்த இயலவில்லை

 

ஙை. 

ஒளி முன்னே

செல்கையில்

நிழல் பின்னால் வருகிறது

ஒளி பின்னால் வருகையில்

நிழல் முன்னால் செல்கிறது

 

ஙொ. 

தலைவர்களின்

நிழல்கள்

ஒரு கட்டத்தில்

தலைவர்களாக

விஸ்வரூபம் எடுக்கின்றன

 

ஙோ. 

சந்திர கிரகணத்தின் போது

பூமியின் நிழல்

நிலவின் மீது விழுகிறது.

சூரிய கிரகணத்தின் போது

நிலவின் நிழல்

சூரியனில் விழுவதில்லை

சூரியன் எரித்துவிடும் என்பதால்.

 

ஙௌ. 

அசோகர்

நிழல் தரும் மரங்களை

நடவில்லை -

அவர் மரங்களை நட்டார்

அவை நிழல் தந்தன

 

ஙங. 

சட்டமன்றங்களும்

நீதிமன்றங்களும்

குற்றவாளிகளுக்கு

நிழல் தருகின்றன

 

ஆங்....

நிற்கையிலோ நடக்கையிலோ

ஒருவர் நிழல்

இன்னொருவர் நிழல் மீது படர்வது

சட்டப்படி குற்றமில்லை,

எனினும்

படுக்கையில் அவ்வாறு நிகழ்வது

பாவமென்று கருதப்படுகிறது.                           21.11.14  1.34 am

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 55

மரம் வளர்த்தது

 

விதை விதைத்து

நீர் விட்டு

முளைவிட்டதும்

அரண் அமைத்து

செடியாக்கி

மரமாக்கினேன்

அதன் நிழலில் அமர்ந்திருக்கும்

பொழுதெல்லாம்

நான் தான்

அதை வளர்த்தவன் என்ற

கர்வத்துடன் நிமிர்ந்து பார்ப்பேன்.

ஒரு நாள்

மெல்லிய குரலில் மரம்

என்னிடம் சொன்னது –

விதையாக இருந்த காலத்திலிருந்தே

நான் தான் உன்னை

வளர்த்து வருகிறேன்.

seyonyazhvaendhan@gmail.com  (நன்றி. திண்ணை 13.4.15)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 56

மணல் இட்லி

 

குவித்திருக்கும்

ஈர மணலை

சைக்கிள் சக்கரத்தால்

நறநறவென்று

கிழித்துச் செல்லும்

இச்சிறுவர் சிறுமியர்

கற்பனை கூட

செய்து பார்த்திருக்கமாட்டார்கள் -

கொட்டாங்குச்சியில்

நீ ஈர இட்லி சுட்டதையும்

பச்சை வேப்பங்காயை

பால் துளியுடன்

மையத்தில் பதிய வைத்து

நான் பகடி செய்ததையும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 57

விரும்பியதை வெறுப்பது

 

இந்த நேரத்தில்

இது

இப்படி

நிகழ வேண்டுமென

ஏற்பாடு செய்தது நான்தான்

அதுவும் எனக்காகத்தான்

அந்த நேரத்தில்

அது

அப்படி நிகழும்போது

வேறு யாரையும் விட

அதை அதீதமாக

வெறுப்பதும் நான்தான்

இந்த அலாரம் போல்தான்

பலவும்.

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 58

வெறுமை

 

வெறுங்கையென்று

சும்மா நினைத்துவிடாதே.

மூடிய கைக்குள் இருக்கிறது

காற்றின் ஒரு துளி

ஆகாயத்தின் ஒரு துண்டு

பிரபஞ்சத்தின் ஒரு துணுக்கு

வெறுமையின் முழுமை.

 

(நன்றி: வலைத்தமிழ்.காம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 59

எந்தக் கட்சி

 

பட்டப் பகலில்

இருட்டுக் கடையை

கண்டுபிடிப்பது

கடினமாக இருந்தது.

'நீ வேற

எல்லாக் கடையிலேயும்

அதே அல்வாதான்' என்றான்

நெல்லைக்காரன்.

 

 

(பி.கு. தமிழ்நாட்டில் திருநெல்வேலி (நெல்லை) இருட்டுக்கடை அல்வா என்பது பிரபலம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 60

இது ஆரு தலை?

ஊருக்கு வெளியில்

ஓடைக்கற்களை அடுக்கி

சுற்றுச்சுவர் எழுப்பியிருந்த

அய்யனார் கோயிலில்

ஆடிக்காற்றுக்கு ஒடிந்த

வேப்பமரக் கிளைக்கடியில்

ஒரு தலை!

அய்யா இது ஆரு தலை?

பூசாரியிடம் கேட்டான்

பேரப்பிள்ளை.

பூசாரி பதறினான் -

அய்யோ இது

ஆறுதலை அளிக்கும்

ஆறுதலை முருகனின்

ஆறாவது தலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 61

சொல்லாததை இப்போதா சொல்வது?

 

நான் உன்னிடம்

சொல்லாததை

நீ என்னிடம்

சொல்லாததை

நீ உன் அப்பாவிடம்

இப்போது சொல்கிறாய்

ஏம்மா நீ அப்பவே

சொல்லியிருக்கலாமில்ல என்று

அப்பாவே கேட்கிறார் -

புரிந்தவன்

துணையாகி இருந்தால்

நீ இப்போதும்

சொல்லியிருக்கமாட்டாய்

என்பதை அறியாத

அப்பா(வி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 62
(ஹைகூ 1)

 

'தட்டுங்கள் திறக்கப்படும்'
வாசகம் எழுதப்பட்டிருந்த 
தேவாலயக் கதவு உடைந்திருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 63

(ஹைகூ 2)

 

பசுவையும் கன்றையும் பிரித்துக்கட்டி

பால்காரி அமர்ந்தாள்

மார்பில் குழந்தையுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 64


(ஹைகூ 3)

 

திருட்டுப் பூனை

குடித்துவிட்டது

கன்றிடமிருந்து திருடிய பாலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 65

விடை பெறுதல்

 

ஒரு தொட்டிக்குள்

தன் வேர்களைச் சுருக்கிக் கொண்ட

ரோஜாச் செடி

ஒற்றை மலர்ச் சிரிப்புடன்

முன்னிருக்கையில் உட்கார்ந்து கொண்டது
 

மண்ணில் ஊடுருவி

வேரூன்றிவிட்ட

இன்னொரு செடி

கொஞ்சம் வாடிய நிலையில்

வண்டியில் ஒதுங்கியிருந்தது

அந்த மண் மார் பிளந்து கிடந்தது

 

துணிக்கொடியை

அவிழ்க்க முடியாத அவசரத்தில்

அறுத்தபோது

தொப்புள் கொடியை

அறுப்பது போல் துடித்தாள்

 

அவனின் கையசைத்தல்

போக வேண்டாம் என்றது

அவளின் கையசைத்தல்

மறந்துவிட வேண்டாம் என்றது

அவள் அம்மாவின் கையசைத்தல்

வந்துவிடாதே என்றது.

வண்டிக்குள் பின்புறத்தில் நின்ற

அவள் நாய்

என்ன சொல்ல வாலாட்டியதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை புனைவதுதான் உங்கள் முழுநேர வேலை போல. எழுதித் தள்ளுகிறீர்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை புனைவதுதான் உங்கள் முழுநேர வேலை போல. எழுதித் தள்ளுகிறீர்கள் :D

 

அப்படியில்லை, இன்று எழுதிய கவிதையையும் பத்து வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதைகளையும் கலந்து பதிகிறேன்.  8 மணி நேர வேலை, 6 மணி நேர உறக்கம், 1 1/2 மணி நேரம் விளையாட்டு, பின் நண்பர்களுடன் ஒரு மணி நேர அரட்டை, குழந்தைகளுடன் குடும்பத்துடன் கழிக்கும் நேரம் போக, கவிதைகளை தட்டச்சு செய்வதற்கு ஒரு மணி நேரம் கிடைப்பதே அரிது.  பெரும்பாலான கவிதைகள் உறங்கி விழிக்கும் நள்ளிரவிலும், அதிகாலை 5 மணியிலும் கிறுக்கி வைக்கப்பட்டு, பின் தட்டச்சு செய்வேன். நான் முன்பே சொன்னபடி யாழ் போன்ற களங்களும், மற்றும் பல இணைய இதழ்களும், உங்களைப் போன்ற தமிழ் உறவுகளின் அன்பும் சமீப காலத்தில் நான் அதிகம் எழுதுவதற்குக் காரணிகளாகியிருக்கின்றன.  நன்றி என்றென்றும்.

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 66

உன் கடவுளின் விருப்பத்துக்கு எதிராக

 

நீ பிரார்த்தனை செய்கிறாய்

உன் கடவுளின் விருப்பத்துக்கு எதிராக.

இது இப்படி நிகழ வேண்டுமென

விரும்புபவன் அவன்

தீர்மானிப்பவன் அவன்

எழுதியிருப்பவன் அவன் என்று

தெரிந்திருந்தும்

நீ பிரார்த்தனை செய்கிறாய்

உன் கடவுளின் விருப்பத்துக்கு எதிராக.

பிரார்த்தனைகள்

நடக்கும் இடங்களில்

அவன் எழுப்பிய

புயல்கள் ஓய்வதில்லை

வெள்ளம் வடிவதில்லை

பூகம்ப அதிர்வுகள் குறைவதில்லை

நீ

உன் கடவுளுக்கு

நன்றி சொல்லவேண்டும்.

அவன் எப்போதாவதுதான்

சுனாமியை விரும்புகிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 67

(ஹைகூ 4)

 

எனக்குப் புரிவதேயில்லை

என்ன மொழியில்

சிரிக்கிறாய்?

Link to comment
Share on other sites

தங்கள் கவிதையைத் தொடர்ந்து வாசித்து மூச்சு முட்டுகிறது. 

விமர்சனம் எழுத முடியவில்லை. நன்று.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கள் கவிதையைத் தொடர்ந்து வாசித்து மூச்சு முட்டுகிறது. 

விமர்சனம் எழுத முடியவில்லை. நன்று.

நன்றி.

 

"நான் கவிஞன் ஆன கதை" என்றொரு கவிதையைப் படித்தீர்கள் அல்லவா, அது போலத்தான் என் கதை.  உங்களைப் போன்றவர்களின் வாசிப்பும் நேசிப்பும் வாழ்த்துமே என்னைப் படைக்கின்றன.  நல்ல கவிதைகளை நான் படிக்கிறேன்.  நான்கு நல்ல கவிதைகளைப் படித்தால் ஒன்றாவது சுமாராகவாவது எழுத முடிகிறது.  தமிழால் இணைந்திருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 68

கனவில் வந்த பிள்ளையார்

 

எலி மேல் ஏறி

கணபதி பூசாரியின்

கனவில் வந்த

பிள்ளையார் சொல்லித்தான்

அரசமரத்தடியில்

அவருக்குக் கோயில் கட்டினார்கள்

பிள்ளையாரை மட்டும்

தூர தேசத்திலிருந்து

திருடிக்கொண்டு வந்தார்கள்

பின்பொருநாள்

தர்மகர்த்தாவின்

கனவில் வந்து

பிள்ளையார் சொல்லித்தான்

அவரின் மேற்பார்வையில்

தங்கத்தில் காப்பு செய்து போட்டார்கள்

அதே எலி மீது ஏறி

மூக்கையனின் கனவில் வந்த

அதே பிள்ளையார்

தங்கக் காப்போடு

என்னைத் தூக்கிக் கொண்டு போய்

என் சொந்த ஊரில்

வைத்து விடு என்று

அழுது புலம்பியதைக் கண்டிரங்கி

பாதித் தூக்கத்தில் எழுந்து

பிள்ளையாரை

தங்கக் காப்போடு

அவன் தூக்கிக்கொண்டு

போகும்போது

கட்டிவைத்து உதைத்து

கைது பண்ண வைத்தார்கள்.

கனவில்

கடவுளைக் காண்பதற்கும்

ஒரு தகுதி வேண்டாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கக் காப்புப் போடுமுன் மூக்கையன் கனவு கண்டிருக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கக் காப்புப் போடுமுன் மூக்கையன் கனவு கண்டிருக்க வேணும்.

கனவுகளுக்கு கட்டளையிட முடியாதே.  கருத்துப் பதிவுக்கு நன்றி.

 

இது மற்றவர்களுக்காக....

 

மூவரின் கனவிலும் பிள்ளையார் வரவில்லை.

பூசாரி கோயிலைக் கட்ட வைத்துப் பிழைக்கிறான்.

தர்மகர்த்தா கமிஷன் அடிக்க தங்கக் காப்பு செய்கிறான்.

மூக்கையன் களவாடுகிறான்.

முன்னவர் இருவரும் பிள்ளையார் தம் கனவில் வந்ததாகச் சொன்னதும் நம்புபவர்கள்,

மூக்கையன் சொல்வதை மட்டும் ஏன் நம்ப மறுக்கிறார்கள்? என்பதே கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 69

கடல்

 

கரையிலேயே நின்று

ரசிக்கின்றனர் சிலர்

கொஞ்சம் இறங்கி வந்து

கால் நனைக்கின்றனர் சிலர்

அளவோடு நீந்தி

அலை மீதேறித் திரும்புகின்றனர் சிலர்

முத்தெடுக்கும் மோகத்தில்

மூழ்கிச் சாகின்றனர் சிலர்

செத்தவர்களின் செய்தியைத்தான்

அலைகளாக்கி கரை அனுப்புகிறதோ

காதல் கடல்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 70

மீட்சி 

 

முதன்முதலாக

பிணத்தைப் புதைத்தவர்கள்

மீண்டும் முளைப்பானென

நம்பியிருக்கலாம்

 

புதைக்கப்பட்டு

மீண்டுவரும்

உற்சாகத்தோடு

ஒவ்வொரு முறையும்

வெளியேறுகிறேன்

சுரங்கப்பாதையிலிருந்து

Link to comment
Share on other sites

............. மரம்

............ சொன்னது –

விதையாக இருந்த காலத்திலிருந்தே

நான் தான் உன்னை

ளர்த்து வருகிறேன்.

2

மட்டமான அரிசியில்

ஏழைகளின் பெயர்களையும்

பாசுமதி அரிசியில்

பணக்காரன் பெயரையும்

ஆண்டவனே எழுதும்போது

நாமென்ன செய்யமுடியும் நடுவே

 

congratulations 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.