Jump to content

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 91

ஏழையின் சிரிப்பு

 

சரக்கடிக்கும்போது

மட்டும்

கொஞ்சம் சிரிக்கிறான்

மாரி

சுற்றி நின்று

சிரிக்கிறது

சுற்றம்

ஏழையின் சிரிப்பில்

இறைவனைக் காண்கிறது

அரசு

Link to comment
Share on other sites

  • Replies 228
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 92

அன்பானவர்களுக்கு

இலக்கியமும் கவிதையும்

இன்னும் பலவும்

காலம் கடந்து நாம்

பேசிக்கொண்டிருந்ததில்

கணவன் சந்தேகிப்பான் என்பதையோ

மனைவி சபித்துக்கொண்டே

சமைத்துக்கொண்டிருப்பாள் என்பதையோ

மறந்தேபோனோம்

வீடு திரும்ப மனமில்லாதது போல்

ரயில் வாராத

நடைமேடையில்

அமர்ந்திருந்தோம்

இன்னும் பேசவேண்டியது

மிச்சமுள்ளது போல்.

சட்டென எழுந்து நின்றோம்

விடைபெறும் வேளையில்

மனதில் வினா எழுந்தது

மறுபடி எப்போது

சந்திப்போம் என்று.

எதுவும் பேசாமல்

எதிரெதிர் திசை பிரிந்தோம்.

என்ன செய்ய,

அன்பில்லாதவர்களுக்கு

எளிதாக இருக்கும் விஷயங்கள்

அன்பு கொண்டவர்களுக்கு

மிகக் கடினமாக இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 93

கொடியிது கொடியது

 

பச்சைக் கொடியேற்றி

பரதேசிக் கோலங்கொண்டு

சிவப்புக் கொடியேற்றி

சேதாரம் மிகவும் பட்டு

வெள்ளைக் கொடியேற்றி

விற்றுக்கொண்டிருக்கிறான்

மனைகளாக்கி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 94

கொஞ்சமாவது

 

பின்னிரவில் மழை பெய்ததை

இன்னும் குழந்தையாய் இருப்பதை

வீட்டுக்கு விலக்கப்பட்டுவிட்டதை

உழைத்திருப்பதை

முயக்கம் முடிவுக்கு வருவதை

முதலில் தெரிவிப்பது இது தான்

எங்கில்லையென்றாலும்

நெஞ்சில்

கொஞ்சமாவது

இருக்கவேண்டுமாம்

இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 95

சாவு செய்திக்காரன்

 

சாவு செய்தி

சொல்ல வந்தவன்

செத்துப் போனான்

ரெண்டு மைல் தொலைவில்

பஸ் விட்டிறங்கியிருப்பான்

மூச்சிரைக்க நடந்துவந்ததை

வேடிக்கை பார்த்தேன்

நம் வீட்டுக்குத்தான்

ஏதோ இழவு செய்தி

சொல்ல வருகிறானென்று

அம்மா உறுதியாகச் சொன்னாள்

அழுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த

அவளை நோக்கி

நடந்து வந்த அவன்

கால்கள் பின்ன

காம்பவுன்ட் சுவரில்

சாய்ந்து உட்கார்ந்தான்

நெஞ்சைப் பிடித்தபடி

சாவு செய்தி சொல்லாமலே

செத்துப்போனான்

கண்முன்னே

செத்து விழுந்தவனைவிட

அவன் நாவில் செத்துப்போனது

யாருடைய சாவு செய்தி என்பதுதான்

அம்மாவின் கவலையாக இருந்தது

பத்து மைல் தொலைவிலிருந்த

காவல் நிலையம் மூலமாக

சாவு செய்திக்காரனின்

ஊரைக் கண்டுபிடித்து

சாவு செய்தியைச் சொல்வதற்கு

இரண்டு நாள் ஆகிவிட்டது

ஒரு சாவு செய்திக்காரனின்

கவிதையில் இடம் பிடிக்க

அவனுக்கு

முப்பது வருஷமாகியிருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 96

மழையென்பது யாதென - 5

 

நேற்றைய மழையில்

வெளுத்து

சுத்தமாகியிருந்தது

அழுக்கு வண்ணாத்தி

நீர் தெளித்திருந்த

வாழையிலை

பசிபெருக்கியது

ஒட்டாமல் உருண்டிருந்த

நீர்த்திவலைகளைத்

தாங்கிய பப்பாளி

நானும் ஆளான தாமரையென்றது

தெளித்திருந்த

மழை

வாசலில்

மஞ்சள் சரக்கொன்றை

கோலமிட்டிருந்ததால்

மறுபடியும் தூங்கப் போய்விட்டாள்

சீண்டாதே என்று உத்தரவிட்டு.

ஒரு கவிதையாவது

பதியலாமென்று

கணிணியைத் திறந்தால்

மழையென்பது யாதெனக் கேட்டு

மெயில் அனுப்பியிருந்தான்

ஒருவழிப் பயணத்தில்

செவ்வாய்க்குப் போன

சினேகிதனின் மகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 97

சட்டெனப் பரவும் வெறுமை

 

யாருடனாவது

பேசிக்கொண்டிருக்கையில்

நடந்து சென்று கொண்டிருக்கையில்

வாகனம் ஓட்டிச்செல்கையில்

சட்டென்று

ஒரு வெறுமை கவ்வுகிறதா?

சுற்றிலும் பலர் இருந்தும்

யாரும் இல்லாததுபோல்

ஏதேதோ சப்தம் இருந்தும்

எதுவுமே இல்லாத

மௌனம் நிலவுவது போல்

உணர்வு மேலோங்குகிறதா?

ஆரம்பத்திலேயே நீங்கள்

கண்டுபிடித்துவிட்டதால்

அச்சப்படத் தேவையில்லை.

இந்த வெறுமை

விரவிப்

பரவி

உங்கள் உலகத்தையே

முற்றிலும்

ஆக்கிரமித்து

அதனால் நீங்கள்

முற்றிலும் தனிமைப்பட்டு

அந்த ஏகாந்தத்தை

நீங்கள் அனுபவிப்பது

மற்றவர்களுக்கு

பைத்தியக்காரத்தனமாகத் தெரிவது

உங்களுக்குப்

பிரச்சனையில்லையென்றால்

நீங்கள்

இப்போது செய்துகொண்டிருப்பதை

அப்படியே தொடருங்கள்.

அப்படி இல்லையென்றால் ...

நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்

புத்தகத்தை

மூடிவைத்துவிடுங்கள்

எழுதிக்கொண்டிருக்கும்

கவிதையை

இத்துடன் முடித்துக்கொள்ளுங்கள்.

மலைகள்

மரங்கள்

பறவைகளுடன்

தனிமையில்

இருக்கும்

பொழுதுகளைத்

தவிர்த்துவிடுங்கள்

தொடர்ந்து சில நாட்கள்

எல்லாத் தொலைக்காட்சி

நிகழ்ச்சிகளையும்

ரசித்துப் பாருங்கள்

குறிப்பாக

சமீபத்திய

தமிழ் சினி மாக்களைப் பாருங்கள்

மனைவியோடு ஒரு முறை

மாமியார் வீட்டுக்குப்

போய் வாருங்கள்

இந்தக் கூட்டு சிகிச்சையை

தொடருங்கள்

கொஞ்சநாளில்

அந்த வெறுமை

பரவுவது

நின்று

மெல்ல மறைய

ஆரம்பித்திருக்கும்

உங்கள் வாழ்க்கை

பழைய வண்ணங்களுக்குத்

திரும்பியிருக்கும்

உங்கள் பழைய

வாழ்க்கையை

தொடருங்கள்,

மறுபடி வெறுமை

தென்படும் வரை.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

கொஞ்சம் பிசகினாலும்

நீங்கள் காலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதை எழுதுவது ??

Link to comment
Share on other sites

பாஸ் நாங்க எப்பவோ காலி, 

 

இனி எப்படி மீளுவது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேயோன் நிறைய கவிதைகள் பதிவிட்டுள்ளீர்கள் ஒற்றைத் தலைப்பிலேயே பல கோணத்தில் உங்கள் கவிதைகள் மிளிர்கின்றன. நீங்கள் எழுதாத விடயமே இல்லைப்போல் இருக்கிறது. இலகுவாக எல்லோராலும் விளங்கிக் கொள்ளக்கூடியதாக உங்கள் படைப்பு. அத்தோடு 7ஆம் வகுப்பில் கற்கும் உங்கள் மகன் எழுதிய fவிதையையையும் பதிவிட்டுள்ளீர்கள். ஒரு படைப்பாளித்தந்தையின் மனக்குமுறலை நன்றாக உணர முடிகிறது. ஒரு படைப்பாளியின் திறன் முடக்கி அவனைக் கற்பனை வெளிகளிலிருந்து அகற்றி சமூகவாழ்வின் கட்டாயதேவைகள் என்ற வட்டத்திற்குள் நிறுத்தி வைப்பது ஒரு படைப்பாளித்தந்தைக்கு மனமகிழ்வைத்தராதுதான் இருப்பினும் அந்தப்படைப்பாளித் தந்தையும் சமூகம் என்ற வட்டத்திற்குள் நின்றுதானே ஆகவேண்டும்.

 

உங்களுக்கும் இளையகவிஞனான உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள் பல. உங்கள் பதிவுகள் தொடரட்டும். நன்றி :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் நின்று நிதானமாக ஒவ்வொரு கவிதைகளாகப்படித்தேன்..

காண்பது கேட்பது உணர்வது என்று அத்தனையும் கவிதையாக்குகிறீர்கள்.. மிக அழகாக அசத்தவைக்கின்றன ஒவ்வொரு கவிதையும்.. மிக ரசித்து படித்தேன்.. தொடர்ந்து எழுதுங்கள் சேயோன்.. ரசித்து ரசித்து வாசிக்க நானும் இங்கு இணைந்திருப்பேன்..

Link to comment
Share on other sites

என் கவனத்திற்கு வரும்போது உங்கள் கவிதைகளை முழுவதும் படித்துவருகிறேன். ஊக்கிவிப்புத்தான் ஒருவரை உற்சாகப்படுத்தும் என்பது தெரிந்திருந்தும் அதனைச் செய்யமுடியாமைக்கு இந்த வெறுமைதான் காரணமோ? என்னசெய்வது வெறுமையிலிருந்து மீளமுடியாது போர்வை எருமைமாட்டுத் தோல்போன்று கனதியாகிவிடுகின்றது. நாடற்ற இனமாக தமிழினம் இருக்கும் வேளையில், அதனை மீட்கவலுவற்ற நிலையில் நானும் அங்குவந்து பிறந்திருப்பது காரணமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் கவனத்திற்கு வரும்போது உங்கள் கவிதைகளை முழுவதும் படித்துவருகிறேன். ஊக்கிவிப்புத்தான் ஒருவரை உற்சாகப்படுத்தும் என்பது தெரிந்திருந்தும் அதனைச் செய்யமுடியாமைக்கு இந்த வெறுமைதான் காரணமோ? என்னசெய்வது வெறுமையிலிருந்து மீளமுடியாது போர்வை எருமைமாட்டுத் தோல்போன்று கனதியாகிவிடுகின்றது. நாடற்ற இனமாக தமிழினம் இருக்கும் வேளையில், அதனை மீட்கவலுவற்ற நிலையில் நானும் அங்குவந்து பிறந்திருப்பது காரணமாக இருக்கலாம்.

  

தாய்த்தமிழ் உறவுகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்ச்சி /நம்பிக்கை ஒன்று போதும் தொடர்ந்து எழுதுவதற்கு.   உங்களது கருத்து உண்மையிலேயே மனதின் அடியாழத்துக்குள் சென்று ஒரு விலைமதிப்பற்ற கல் போலக் கிடக்கிறது.   தமிழ் படைப்பாளிகளிடம் இருக்கும் ஈகோ உலகறிந்தது. நானும் அதில் விலக்கல்ல.

 

(ஆனாலும் இதுபோன்று எப்போதாவது ஒரு முறை வந்து உங்களைப் போல் யாராவது கருத்திடும்போது தான், எனது படைப்பு சரியான பாதையில் செல்கிறதா என நான் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்).

மாறாத அன்புடன்

சேயோன் யாழ்வேந்தன்படித்தேன்.. தொடர்ந்து எழுதுங்கள் சேயோன்.. ரசித்து ரசித்து வாசிக்க நானும் இங்கு இணைந்திருப்பேன்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுதான் நின்று நிதானமாக ஒவ்வொரு கவிதைகளாகப்படித்தேன்..

காண்பது கேட்பது உணர்வது என்று அத்தனையும் கவிதையாக்குகிறீர்கள்.. மிக அழகாக அசத்தவைக்கின்றன ஒவ்வொரு கவிதையும்.. மிக ரசித்து படித்தேன்.. தொடர்ந்து எழுதுங்கள் சேயோன்.. ரசித்து ரசித்து வாசிக்க நானும் இங்கு இணைந்திருப்பேன்..

 

 

தம்பியின் அன்புக்கும், ரசனைக்கும் வந்தனம்.  இதுபோன்ற ஊக்குவிப்புகளை எதிர்பார்க்கும் குழந்தையாகவே என்றும் இருக்கிறது கவி மனசு.

தாய்த்தமிழால் இணைந்திருப்போம்.

அன்புடன்

சேயோன் யாழ்வேந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேயோன் நிறைய கவிதைகள் பதிவிட்டுள்ளீர்கள் ஒற்றைத் தலைப்பிலேயே பல கோணத்தில் உங்கள் கவிதைகள் மிளிர்கின்றன. நீங்கள் எழுதாத விடயமே இல்லைப்போல் இருக்கிறது. இலகுவாக எல்லோராலும் விளங்கிக் கொள்ளக்கூடியதாக உங்கள் படைப்பு. அத்தோடு 7ஆம் வகுப்பில் கற்கும் உங்கள் மகன் எழுதிய fவிதையையையும் பதிவிட்டுள்ளீர்கள். ஒரு படைப்பாளித்தந்தையின் மனக்குமுறலை நன்றாக உணர முடிகிறது. ஒரு படைப்பாளியின் திறன் முடக்கி அவனைக் கற்பனை வெளிகளிலிருந்து அகற்றி சமூகவாழ்வின் கட்டாயதேவைகள் என்ற வட்டத்திற்குள் நிறுத்தி வைப்பது ஒரு படைப்பாளித்தந்தைக்கு மனமகிழ்வைத்தராதுதான் இருப்பினும் அந்தப்படைப்பாளித் தந்தையும் சமூகம் என்ற வட்டத்திற்குள் நின்றுதானே ஆகவேண்டும்.

 

உங்களுக்கும் இளையகவிஞனான உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள் பல. உங்கள் பதிவுகள் தொடரட்டும். நன்றி :rolleyes:

 

 

அன்பு சகோதரி,  என்ன ஆயிற்று இந்த ஜூன் 13க்கு என்று தெரியவில்லை. என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் ஒரு சேர என்னைத் தாலாட்டி, சீராட்டி, பாராட்டி, என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறீர்கள்.  நன்றி.

 

கவிதை வாளால் காற்றைத் துண்டுபோடும் இந்தச் செயலை நானொன்றும் விருப்பத்துடன் செய்யவில்லை. கையறு நிலை, வேறென்ன செய்ய,  ஆனாலும் என் படைப்பின் பலம் எதுவென்றால், அவை உண்மையானவை. என் மூத்த மகன் ஆழிவேந்தன் தமிழ்வழியில் தமிழக அரசு உதவி பெறும் பள்ளியில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, இப்போது தாவரவியல் படிக்கிறான். இளையவன் ஆழிமுகிலன் தமிழ்வழிப் பள்ளியில் இப்போது 8 ஆம் வகுப்பு படிக்கிறான்.  சும்மா தமிழ் என்று முழங்கும் போலி படைப்பாளியோ அரசியல்வாதியோ நான் இல்லை என்பதற்காக இந்த எடுத்துக்காட்டு (தற்பெருமை கூட).  1983ல் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளி புறக்கணித்து ஊர்வலம் போய், எனக்குள் பற்றிக்கொண்ட ஈழ ஆதரவுத் தீ இன்றும் தீவிரம் குறையாமல் எரிந்துகொண்டுதான் இருக்கிறது.

 

தமிழுக்கும் தமிழனுக்கும் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் நகர்ந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை.

 

நன்றியுடன்

 

சேயோன் யாழ்வேந்தன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாஸ் நாங்க எப்பவோ காலி, 

 

இனி எப்படி மீளுவது ?

 

கவிதைத் தோழா, கவிதை வாளால் காற்றைத் துண்டுபோடும் இந்தச் செயலை நாமென்ன  விருப்பத்துடனா செய்துகொண்டிருக்கிறோம்.  கையறு நிலை, வேறென்ன செய்ய, 

 

என் படைப்புகளைவிட கவித்துவம் மிகுந்திருக்கும் உங்களைப்போன்ற மூத்த கவிஞர்களின் படைப்புகளில் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

நமது படைப்பின் பலம் எதுவென்றால், அவை உண்மையானவை. 

 

கவிதை மனதின் மீள்பயணம். கவிஞன் மீள்வதில்லை ஒருபோதும். என் கருத்து சரியா தோழா?

எதை எழுதுவது ??

 

 

"என்னத்தைச் சொல்றது" என்பதிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிடும் இளைய கவியல்லவா நீர்?

நன்றி வரவுக்கு.

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 98

பாத்திரமறிந்து

 

பிச்சையிடுகிறது

தெய்வம்

தங்கத்தட்டில்

வைரக்கற்களையும்

அலுமினியத் தட்டில்

சில்லரைக் காசுகளையும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 99

எனக்குப் பேய் பிடித்திருக்கிறது

அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்கிறார்கள்

இருக்கிறதா இல்லையாவென்று தெரியாவிட்டாலும்

எனக்கும் பேய் பிடித்திருக்கிறது

அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமின்றி,

பேய்களுக்குக் கோயில் இல்லை

வேளா வேளைக்குப் பூஜை இல்லை

அபிஷேகம் அலங்காரம்

காணிக்கை உண்டியல் அறவே இல்லை

தேர் இல்லை திருவிழா இல்லை

சப்பார பவனி கூட இல்லை

கடவுளைப் போல் பேய்கள்

சாதி மதம் பார்ப்பதில்லை.

ஓட்டத்தான் வேண்டுமெனில்

கடவுள்களை ஓட்டிவிட்டு

பேய்களை ஓட்டுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 100

 

கவி ருது வான போது

 

இலக்கியத்துக்கான மிக உயரிய விருது

எனக்கு வழங்கப்பட்ட இரவில்

பெய்த மழை

நிற்கவே இல்லை

முழு உலகமும் அழிந்து

அப்போதுதான் உருவாகின

இன்றைய பெருங்கடல்கள்

நோவாவின் தெப்பக்கட்டையில்

ஏறித் தப்பிய என்னிடம்

இப்போது சான்றுகள் இல்லை

கனவா நனவா என்றென்னை

எல்லோரும் கிள்ளிப் பார்த்த

தழும்புகள் மட்டும் இன்னும் உள்ளன

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 101

அவன்

அமைதி வழியில் போராடி
பட்டினிப் போராட்டம் நடத்தி
உங்கள் கண் முன்னே

அவன் அடிபட்டு இறந்திருக்க வேண்டும்
சிலை வைத்து நீங்கள்
அரசியல் செய்திருப்பீர்கள்

உங்களிடம்
ஓட்டுப் பிச்சையெடுத்து
உங்கள் முதுகிலேயே
சவாரி செய்திருக்கவேண்டும்
அவன் காலை நக்கி
புரட்சித் தலைவன் என்றிருப்பீர்கள்

அடிமை விலங்கொடிக்க
ஆயுதமேந்திப்
போராடியதால்
அவன் ஒண்டிப்புலியாகிவிட்டான்
உங்கள் காமாலைக் கண்களுக்கு

Link to comment
Share on other sites

 

மழையென்பது யாதென - 5

நேற்றைய மழையில்

வெளுத்து

சுத்தமாகியிருந்தது

அழுக்கு வண்ணாத்தி

நீர் தெளித்திருந்த

வாழையிலை

பசிபெருக்கியது

 

அழுக்கு  வண்ணாத்தி  என்ற பதம் தரும் பொருள் அபத்தமானது... திருத்தி விடுங்கள் சேயோன் அண்ணா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அழுக்கு  வண்ணாத்தி  என்ற பதம் தரும் பொருள் அபத்தமானது... திருத்தி விடுங்கள் சேயோன் அண்ணா :)

தம்பி விஷ்வா,

தெற்காசியாவிலும் இந்தியாவிலும் பரவலாகக் காணப்படும் நாகணவாய்ப்புள் இலக்கியங்களில் ‘பூவை’  என்றும் ‘ சிறுபூவாய் ‘ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நகர மக்கள் பேச்சுவழக்கில் மைனா என்பார்கள்.  கிராமங்களில் இந்தப்பறவை பரவலாக “அழுக்கு வண்ணாத்தி” என்றே சொல்லப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் பெரும்பாலான மக்களுக்கு இந்தப் பறவைக்கு “அழுக்கு வண்ணாத்தி” என்ற பெயரைத் தவிர வேறு பெயர் இருப்பது தெரியாது.


வலைப்பக்கத்தில் தேடிய போது கிடைத்த சில பதிவுகளை இத்துடன் இணைத்துள்ளேன்.

 

http://maniyinpakkam.blogspot.in/2010/02/blog-post_02.html


https://moonampalli.wordpress.com/2011/04/18/ நான்-அறிந்த-பறவைகள்/

 சிறுவயதில் எங்கள் வீட்டின் கருவேப்பில்லை மரத்தில் கூடு கட்டியிருந்த அழுக்கு வண்ணாத்தி பறவை, வீட்டின் மொட்டை மாடியிலும், கிராமத்தில் தானியம் உலரவைக்கையில் வந்து போகும் சிட்டு குருவிகள், மேய்ச்சல் காட்டில் கண்ட செம்பூத்து, சூர்ய காந்தி விதையை திண்ண வந்து பாட்டியால் விரட்டபடும் பச்சைக் கிளிகள், வீட்டிலேயே வளர்ந்த கோழி கூட்டம், அதன் குஞ்சுகளை வேட்டையாடிட வட்டமிடும் பருந்துகள், இடம் பெயர்ந்து செல்கையில் தற்காலிக ஓய்வெடுத்து செல்லும் ஒரு வகை நாரைகள், இப்படி நம்மோடு பழகபட்டிருந்த சில பறவைகளும் இன்று விலகிச் சென்று விட்டதாகவே தோன்றுகிறது.

 

THURSDAY, NOVEMBER 5, 2009

நொள்ளை மடையான்!


பொதுவா, நொள்ளைக் கண்ணன், நொள்ளை வாயன்னு எல்லாம் ஏசுறதைப் பார்த்து இருப்போம் நாம! அதென்ன அந்த நொள்ளைக் கண்ணன்?


கிராமப்புறத்துல பாருங்க, பறவைகளுக்கு பல விதமான பேர் வெச்சி சொல்வாங்க, அழுக்கு வண்ணாத்தி, துடுப்பு மூக்கன், அரிவாள் மூக்கன், உள்ளான், துடுப்புநாரை, கோசிவாயன் இப்படி எல்லாம்... அந்த வரிசையில ஒன்னுதாங்க இந்த நொள்ளை மடையான் அப்படீங்கற பறவையும்!

 

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் நீங்கள் குறிப்பிட்ட  பெயரை நான் கேள்விப்பட்டதில்லை, தேடி பார்த்ததில் அது மைனாவின் இன்னொமொரு பெயர் என்று தெரிந்து கொண்டேன்.  எனவே தான் அப்படி சொல்லியிருந்தேன், தகவலுக்கு நன்றி அண்ணா..  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பியின் புரிதலில் மகிழ்ச்சி. வருத்தம் ஏதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 102

  • சாகசம்

    -    சேயோன் யாழ்வேந்தன்

     

    பழுத்த இலை காத்திருக்கிறது

    காற்றின் சிறு வருகைக்கு

    ஒரு பறவையின் அமர்வுக்கு

    அல்லது காம்பின் தளர்வுக்கு

    தன்னை விடுவித்துக் கொள்ள.

     

    பென்டுலம் போல் அசைந்துகொண்டோ

    உருளையைப் போல் சுழன்றுகொண்டோ

    தரையிறங்கும் இறுதி சாகசப் பயணத்தை

    யாரேனும் பார்த்து வியக்கக்கூடுமென

    அது காத்திருக்கிறது

     

    தன்னிடத்தை விட்டு

    இவ்வளவு தூரம் வந்ததை

    சிலர் வியந்து பேசவும் கூடும்

    ஓர் எறும்பைச் சுமந்து

    அது இறங்கும் அதிசயத்தை

    இரு கூரிய கண்கள்

    வியந்து பாடவும் கூடும்.

     

    பழுத்த இலை காத்திருக்கிறது

    தன் இறுதி சாகசப் பயணத்துக்கு.

     

    seyonyazhvaendhan@gmail.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 103

வழி தவறிய பறவை

 

மனசுக்குள் புகுந்துவிட்ட

வழி தவறிய பறவை ஒன்று

வெளியேற மறுத்து முரண்டுபிடிக்கிறது

அதன் சிறகடிப்பு

மனப்புழுக்கத்தைக் குறைத்தாலும்

படபடப்பது சில சமயம்

பதற்றத்தைத் தருகிறது

கவிதைகளைக் கேட்டபின்பே

உறங்கச் செல்லும் அது

இரவுப் பூச்சிகளின்

ஜல்ஜல் ஒலியை

கொலுசொலியினின்றும்

வேறுபடுத்தத் தெரியாமல்

இரவெல்லாம் விழித்திருக்கிறது

இப்படியொரு பறவையை

எப்போதும் நெஞ்சில் சுமப்பதில்

சிரமமொன்றுமில்லை

எச்சங்களைத் தவிர.

seyonyazhvaendhan@gmail.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.