Jump to content

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 146

கிளியாகிப் பறக்கும் கனி

-    சேயோன் யாழ்வேந்தன்

மரத்தின் கனியொன்று

இலையோடு பறந்து போவது போல்

இதோ கிளி  பறந்து போகிறது

இந்த உலகமே நான் தான் என்பதுபோல்

அந்த மரம் ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது

காரணத்தோடு எதுவும் நடப்பதில்லை

காரணமின்றியும் எதுவும் நடப்பதில்லை

அது நடக்கிறது அவ்வளவே.

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி: திண்ணை)

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • Replies 228
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/10/2015 at 5:24 PM, seyon yazhvaendhan said:

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 100

 

ஸ்டிக்கர்

மாபெரும் தீர்க்கதரிசிகள் மறைந்துவிட்டார்களென்று

நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்

உங்கள் கண்முன் உலவும் தீர்க்கதரிசிகளைத் தவறவிடுகிறீர்கள்!

இப்போதெல்லாம் தீர்க்கதரிசிகள்

வெளிப்படையான நீதிபோதனைகளை வழங்குவதில்லை.

நவீன உலகுக்கேற்ப நீதிகளை

மறைபொருளாக வழங்குகிறார்கள்.

மதுக்கோப்பைகளில் நீங்கள் ஒட்டிக்கொள்ளும்

இஷ்ட தேவதையின் ஸ்டிக்கர்

குடிநோயாளி ஆவதிலிருந்து காக்கும்.

குறைந்தபட்சம் கோபத்தில்

கோப்பை உடைபடுவதையாவது தடுக்கும்.

சிகரெட் பெட்டிகளின் மீது

நீங்கள் ஒட்டி வைக்கும் உங்கள்

குழந்தைகளின் ஸ்டிக்கர்

கொஞ்சமேனும் புகைப்பழக்கத்தைக் குறைக்கும்

தலை நசுங்கிய ஒருவனின் படத்தை

ஸ்பீடா மீட்டரில் ஒட்டிக்கொள்வது

சாலையில் கவனமாக இருக்கவைக்கும்.

சக்தி மிக்க கடவுள்களின் ஸ்டிக்கர்களை

முதியவர்கள் மீது நிரந்தரமாக ஒட்டிவிடுவது

பூஜையறையில் இடம் கிடைக்கும்வரை

புழக்கடையிலாவது அவர்களது இருப்பை உறுதி செய்யும்!

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 99

எனக்குப் பேய் பிடித்திருக்கிறது

அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்கிறார்கள்

இருக்கிறதா இல்லையாவென்று தெரியாவிட்டாலும்

எனக்கும் பேய் பிடித்திருக்கிறது

அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமின்றி,

பேய்களுக்குக் கோயில் இல்லை

வேளா வேளைக்குப் பூஜை இல்லை

அபிஷேகம் அலங்காரம்

காணிக்கை உண்டியல் அறவே இல்லை

தேர் இல்லை திருவிழா இல்லை

சப்பார பவனி கூட இல்லை

கடவுளைப் போல் பேய்கள்

சாதி மதம் பார்ப்பதில்லை.

ஓட்டத்தான் வேண்டுமெனில்

கடவுள்களை ஓட்டிவிட்டு

பேய்களை ஓட்டுங்கள்

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 98

பாத்திரமறிந்து

 

பிச்சையிடுகிறது

தெய்வம்

தங்கத்தட்டில்

வைரக்கற்களையும்

அலுமினியத் தட்டில்

சில்லரைக் காசுகளையும்

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 97

 

சட்டெனப் பரவும் வெறுமை

 

யாருடனாவது

பேசிக்கொண்டிருக்கையில்

நடந்து சென்று கொண்டிருக்கையில்

வாகனம் ஓட்டிச்செல்கையில்

சட்டென்று

ஒரு வெறுமை கவ்வுகிறதா?

சுற்றிலும் பலர் இருந்தும்

யாரும் இல்லாததுபோல்

ஏதேதோ சப்தம் இருந்தும்

எதுவுமே இல்லாத

மௌனம் நிலவுவது போல்

உணர்வு மேலோங்குகிறதா?

ஆரம்பத்திலேயே நீங்கள்

கண்டுபிடித்துவிட்டதால்

அச்சப்படத் தேவையில்லை.

இந்த வெறுமை

விரவிப்

பரவி

உங்கள் உலகத்தையே

முற்றிலும்

ஆக்கிரமித்து

அதனால் நீங்கள்

முற்றிலும் தனிமைப்பட்டு

அந்த ஏகாந்தத்தை

நீங்கள் அனுபவிப்பது

மற்றவர்களுக்கு

பைத்தியக்காரத்தனமாகத் தெரிவது

உங்களுக்குப்

பிரச்சனையில்லையென்றால்

நீங்கள்

இப்போது செய்துகொண்டிருப்பதை

அப்படியே தொடருங்கள்.

அப்படி இல்லையென்றால் ...

நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்

புத்தகத்தை

மூடிவைத்துவிடுங்கள்

எழுதிக்கொண்டிருக்கும்

கவிதையை

இத்துடன் முடித்துக்கொள்ளுங்கள்.

மலைகள்

மரங்கள்

பறவைகளுடன்

தனிமையில்

இருக்கும்

பொழுதுகளைத்

தவிர்த்துவிடுங்கள்

தொடர்ந்து சில நாட்கள்

எல்லாத் தொலைக்காட்சி

நிகழ்ச்சிகளையும்

ரசித்துப் பாருங்கள்

குறிப்பாக

சமீபத்திய

தமிழ் சினி மாக்களைப் பாருங்கள்

மனைவியோடு ஒரு முறை

மாமியார் வீட்டுக்குப்

போய் வாருங்கள்

இந்தக் கூட்டு சிகிச்சையை

தொடருங்கள்

கொஞ்சநாளில்

அந்த வெறுமை

பரவுவது

நின்று

மெல்ல மறைய

ஆரம்பித்திருக்கும்

உங்கள் வாழ்க்கை

பழைய வண்ணங்களுக்குத்

திரும்பியிருக்கும்

உங்கள் பழைய

வாழ்க்கையை

தொடருங்கள்,

மறுபடி வெறுமை

தென்படும் வரை.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

கொஞ்சம் பிசகினாலும்

நீங்கள் காலி.

 

 

கவிஞன் சாதாரணன். ஒரு கவிஞனாக நானும் சாதாரணன். மானுடத்தைப் பாடுவது, மானுடத்துக்குத் துணை நிற்கும் இயற்கையின் கூறுகளைப் பாடுவது கவிஞனின் பணி.

ஒரு புல்லும் ஒரு பறவையும் வேறொரு மனிதனும் தமக்கான கவிதைகளை ஒரு கவிஞன் மூலமாக எழுதிச் செல்கிறார்கள். கவிஞன் கவிதைக்கு ஒரு கருவி. கவிதையும் கவிஞனுக்கு ஒரு கருவி.

கவியரசர்கள், கவிச்சிற்றரசர்கள், மஹாகவிகள் என்று கவிஞர்களில் படிநிலைகள் தேவையில்லை என்பது என் கருத்து. 

ஆனால் சாதாரணனான கவிஞனின் கவிதைகள் சாதாரணமாகவும், சிறந்தவையாகவும் இருக்கலாம். ஒரு சாதாரணக் கவிஞனான எனது சாதாரணக் கவிதைகளுக்கு இடையில் நான் தேர்ந்தெடுக்கும் சில கவிதைகள் எனக்கு அசாதாரணமாகத் தோன்றும். மற்றவர்களுக்கு அப்படித் தோன்ற வேண்டுமென்ற கட்டாயமில்லை.

அப்படி எனக்குத் தோன்றும் கவிதைகளே இப்பதிவுகளில் இடம்பெறுகின்றன. (“ஒரு சாதாரணக் கவிஞனின் சாதாரணக் கவிதைகள்” என்றும் கொள்ளலாம் இவற்றை. இல்லையெனில் பிற கவிதைகளை பதிக்க “ஒரு சாதாரணக் கவிஞனின் சாதாரணக் கவிதைகள்” என்றொரு பக்கத்தையும் தொடங்கலாம்)

இந்தப் பக்கத்தில் பதிக்கப்படும் என் (அ)சாதாரணக் கவிதைகளைப் படித்துப் பகிருங்கள் இயன்றவரை. பகருங்கள் உங்கள் கருத்துகளை.

 

On 11/9/2016 at 12:54 PM, seyon yazhvaendhan said:

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 147

 

ஸ்டிக்கர்

மாபெரும் தீர்க்கதரிசிகள் மறைந்துவிட்டார்களென்று

நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்

உங்கள் கண்முன் உலவும் தீர்க்கதரிசிகளைத் தவறவிடுகிறீர்கள்!

இப்போதெல்லாம் தீர்க்கதரிசிகள்

வெளிப்படையான நீதிபோதனைகளை வழங்குவதில்லை.

நவீன உலகுக்கேற்ப நீதிகளை

மறைபொருளாக வழங்குகிறார்கள்.

மதுக்கோப்பைகளில் நீங்கள் ஒட்டிக்கொள்ளும்

இஷ்ட தேவதையின் ஸ்டிக்கர்

குடிநோயாளி ஆவதிலிருந்து காக்கும்.

குறைந்தபட்சம் கோபத்தில்

கோப்பை உடைபடுவதையாவது தடுக்கும்.

சிகரெட் பெட்டிகளின் மீது

நீங்கள் ஒட்டி வைக்கும் உங்கள்

குழந்தைகளின் ஸ்டிக்கர்

கொஞ்சமேனும் புகைப்பழக்கத்தைக் குறைக்கும்

தலை நசுங்கிய ஒருவனின் படத்தை

ஸ்பீடா மீட்டரில் ஒட்டிக்கொள்வது

சாலையில் கவனமாக இருக்கவைக்கும்.

சக்தி மிக்க கடவுள்களின் ஸ்டிக்கர்களை

முதியவர்கள் மீது நிரந்தரமாக ஒட்டிவிடுவது

பூஜையறையில் இடம் கிடைக்கும்வரை

புழக்கடையிலாவது அவர்களது இருப்பை உறுதி செய்யும்!

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 146

கிளியாகிப் பறக்கும் கனி

-    சேயோன் யாழ்வேந்தன்

மரத்தின் கனியொன்று

இலையோடு பறந்து போவது போல்

இதோ கிளி  பறந்து போகிறது

இந்த உலகமே நான் தான் என்பதுபோல்

அந்த மரம் ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது

காரணத்தோடு எதுவும் நடப்பதில்லை

காரணமின்றியும் எதுவும் நடப்பதில்லை

அது நடக்கிறது அவ்வளவே.

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி: திண்ணை)

 

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 147

அடையாளம் தெரியாத நபரின் உடல்

                   - சேயோன் யாழ்வேந்தன்

இன்றும் ஓர் அடையாளம் தெரியாத நபரின்
சடலம் கிடைத்திருக்கிறது.
அவர் அடையாளம் தெரியாத நபர்களால்
சுடப்பட்டிருக்கிறார்
அடையாளம் தெரியாத நபர்தான் 
சடலத்தை முதலில் பார்த்திருக்கிறார்.
இன்னொரு அடையாளம் தெரியாத நபர்
அந்தச் செய்தியை அனைவருக்கும் சொல்கிறார்.
அடையாளம் தெரியாத நான்
இன்றும் என்ன செய்வதென்று தெரியாமல் 
அடையாளம் தெரியாத உங்களிடம்
சொல்லிக்கொண்டிருக்கிறேன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடையாளம் இல்லாத கவிதையை அடையாளம் உள்ளவர்கள் நின்று ரசித்து செல்கின்றார்கள்.....!  ?

எல்லாக் கவிதைகளும் அருமை சேயோன்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.