Jump to content

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 104

 

புதிய கோடங்கிகள்

 

சதியை ஒழித்த தீரர்கள்

சாதியை ஒழிக்கத் துணிகையில்

தார்ச்சாலைகளால் நிலங்களை இணைத்து

மலைகளின் சிகரம் வரை இரும்புச்சாலைகள் அமைத்தவர்கள்

கல்விச்சாலைகளால் மனங்களை இணைக்கத் தலைப்படுகையில்

சுதந்தரம் வந்தால் நல்ல காலம் பிறக்குமென்று

கொடியில் சுற்றிய குடுகுடுப்பைகளுடன்

கிளம்பிய புதிய கோடங்கிகளால்

தொடங்கியது எங்கள் கெட்டகாலம்.

Link to comment
Share on other sites

  • Replies 228
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 104

 

கேள்வி

பதில்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

கேள்வி

எதையாவது

கேட்டுக்கொண்டுதானிருக்கிறது

பதில்

எதற்கும்

பதிலளிக்காத போதும்

ஆதியில்

ஒரு கேள்வி

ஒரு பதில்தான்

இருந்ததாம்

ஒரு கேள்வி

விளங்காமல்

இத்தனை கேள்விகள்

ஒரு பதிலும்

விளங்காமல்தான்

இத்தனை பதில்கள் -

கேள்வி தான்

பதில்.

பதில் கேள்வி

கேளாமல் போ.

seyonyazhvaendhan@gmail.com  (நன்றி: திண்ணை.காம் 27.7.15)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 106

கற்பு நிலை

 

 

கற்றறிந்த சான்றோர்கள்

 

யாருமில்லாத சபையொன்றில்

 

ஒரு கட்டத்தில் என்னைக் கட்டங்கட்டி

 

நாக்கில் நரம்பில்லாத சிலர்

 

தாக்குதலைத் தொடுத்தபோது

 

உன் சொல்வன்மை

 

என் உதவிக்கு வருமென்று

 

ஒருபாடு நம்பிக்கையோடு

 

கலங்காது நின்றிருந்தேன்

 

ஆனாலும் நண்பா உன் நாக்கு

 

இறுகிய உதடுகளுக்கு உள்ளே

 

பற்களின் அரணுக்குப் பின்னால்

 

பதுங்கியே இருந்தது

 

அதுகூடப் பரவாயில்லை,

 

அன்று அகம் பேசாத உன் நாக்கு

 

பின்பு புறம் பேசிய செய்தி

 

பிறர் கூறத் தெரிந்துகொண்டேன்

 

நேருக்கு நேர் நின்று

 

நான் கேட்கும்போது கூட

 

உன் நாக்கு என் கண் முன்னே

 

இரண்டாகப் பிளந்து

 

இரண்டு மொழி பேசியது.

 

பிளவுண்ட நாக்கின் விஷம்

 

பெருந்துயர் செய்யும் நண்பா.

 

கற்பு நிலையென்று சொல்ல வந்தால்

 

நட்புக்கும் நாவுக்கும்

 

பொதுவில் வைப்போம் இனி.

 

(நன்றி. திண்ணை.காம் 3.8.15)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 107

பயன்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

இலைகள் உணவு தயாரிக்கின்றன

இலைகள் உணவாகின்றன

இலைகள் உணவு பரிமாறுகின்றன

இலைகள் எரிபொருளாகின்றன

இலைகள் உரமாகின்றன

இலைகள் நிழல் தருகின்றன

இலைகள் சருகாகி சப்தம் செய்து எச்சரிக்கின்றன

இலைகள் குடையாகின்றன

இலைகள் கூரையாகின்றன

இலைகள் ஆடையாகின்றன

இலைகள் பாடையாகின்றன

இலைகள் வர்ணங்கள் செய்கின்றன

இலைகள் தோரணாமாகின்றன

இலைகள் எழுதும் மடலாகின்றன

இலைகள் மருந்தாகின்றன

இலைகள் படுக்கையாகின்றன

இலைகள்  புகைக்கப்படுகின்றன

இலைகள்  போதை தருகின்றன

இலைகள் பூசாரிகளால் மந்திரிக்கப்படுகின்றன

இலைகள் மந்திரிகளாக்குகின்றன

இலைகளின் பயன்களைப் பட்டியலிட்ட கல்வி

இறுதிவரை சொல்லவே இல்லை

இலைகள் கனிகளை மறைப்பதையும்

கவிதைகள் சமைப்பதையும்

seyonyazhvaendhan@gmail.com  நன்றி திண்ணை.காம் 10.8.15

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 108

டெங்கூஸ் மரம்

-    சேயோன் யாழ்வேந்தன்

அதோ

தூரத்தில் தெரிகிற

டெங்கூஸ் மரத்தில்

நேற்றொரு மிண்டோ அமர்ந்திருந்ததைப்

பார்த்தேன் என்றான்

பக்கத்து வீட்டுப் பொடியன் -

வெகு தொலைவிலிருக்கிற மரம்

இன்னதென்றே தெரியவில்லை

தவிரவும் டெங்கூஸ் என்றொரு

மரமே இல்லையென்றேன் -

டெங்கூஸ் மரங்கள்

தூரத்து மலைகளில் மட்டுமே இருக்கின்றன

அவற்றை யாரும் அருகினில் பார்த்ததில்லை

டெங்கூஸ் என்றால்

தூரம் என்றொரு பொருளும் உண்டு

இன்னும் பெயரிடப்படாத

ஒரு மொழியில்  - அது

டெங்கூஸ் மரந்தான்

என்றான் மறுபடியும் -

நேற்று அதில்

அமர்ந்திருந்தது என்னவென்று

மறுபடியும் அவனிடம் கேட்கவில்லை

(நன்றி திண்ணை.காம் 17.8.15)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 109

விலை

-    சேயோன் யாழ்வேந்தன்

 

ஊருக்குப் போனபோது

கருப்பட்டி மணக்க

வறக்காப்பி கொடுத்தாள்

பொன்னம்மாக் கிழவி

எல்லாவற்றுக்கும்

விலை கேட்டுப்

பழகிவிட்ட மகன்

திரும்புகையில் கேட்டான் -

என்ன விலை இருக்கும் இந்த

கருப்பட்டிக் காப்பி என்று -

வாழ்க்கை என்று

மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்

(நன்றி. திண்ணை.காம் 24.8.15)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 107

பயன்

 

-    சேயோன் யாழ்வேந்தன்

 

 

 

இலைகள் உணவு தயாரிக்கின்றன

 

இலைகள் உணவாகின்றன

 

இலைகள் உணவு பரிமாறுகின்றன

 

இலைகள் எரிபொருளாகின்றன

 

இலைகள் உரமாகின்றன

 

இலைகள் நிழல் தருகின்றன

 

இலைகள் சருகாகி சப்தம் செய்து எச்சரிக்கின்றன

 

இலைகள் குடையாகின்றன

 

இலைகள் கூரையாகின்றன

 

இலைகள் ஆடையாகின்றன

 

இலைகள் பாடையாகின்றன

 

இலைகள் வர்ணங்கள் செய்கின்றன

 

இலைகள் தோரணாமாகின்றன

 

இலைகள் எழுதும் மடலாகின்றன

 

இலைகள் மருந்தாகின்றன

 

இலைகள் படுக்கையாகின்றன

 

இலைகள்  புகைக்கப்படுகின்றன

 

இலைகள்  போதை தருகின்றன

 

இலைகள் பூசாரிகளால் மந்திரிக்கப்படுகின்றன

 

இலைகள் மந்திரிகளாக்குகின்றன

 

இலைகளின் பயன்களைப் பட்டியலிட்ட கல்வி

 

இறுதிவரை சொல்லவே இல்லை

 

இலைகள் கனிகளை மறைப்பதையும்

 

கவிதைகள் சமைப்பதையும்

 

seyonyazhvaendhan@gmail.com  நன்றி திண்ணை.காம் 10.8.15

இலைகளைப் பற்றி இத்தனை தகவல்களை  ஒரு கவிதையில் தந்தமைக்கு நன்றி  சேயோன்.
இலை என்றவுடன் சிறுவயதில் பூவரசம் இலையைச் சுற்றி பீப்.. பீப்.... என்று
ஊதுவது தான் எனக்கு ஞாபகம் வரும்  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலைகளைப் பற்றி இத்தனை தகவல்களை  ஒரு கவிதையில் தந்தமைக்கு நன்றி  சேயோன்.
இலை என்றவுடன் சிறுவயதில் பூவரசம் இலையைச் சுற்றி பீப்.. பீப்.... என்று
ஊதுவது தான் எனக்கு ஞாபகம் வரும்  tw_blush:

உண்மையில் வியக்கிறேன்,  இத்தனை பயன்களைப் பட்டியலிட்டும், அதில் விடுபட்ட ஒன்றைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள், நன்றி!  

உங்கள் அனுமதியுடன், கவிதையின் அடுத்த பதிப்பில் (அல்லது பதிவில்)  இந்தப் பயனையும் சேர்த்துக்கொள்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வார  (27.8.15 - 4.9.15) ஆனந்தவிகடனில் சொல்வனம் பகுதியில் "மந்திரக்காரி" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை, யாழ் களத்  தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

மந்திரக்காரி! 

என்னை ஒரு நாய்க்குட்டியாக
இருட்டில் உருட்டும் திருட்டுப் பூனையாக
தலையணை மெத்தையாக
கண்ணீர்த்துளிகளை ஒற்றி
மூக்கைச் சிந்தும் கைக்குட்டையாக
மாற்றிக்கொள்ளும் மந்திரக்கோல்
அவளிடம் இருக்கிறது.
பிறர் காணும்போது
அவளை ஆட்டுவிக்கும் மந்திரவாதியாகவும்
என்னை மாற்றிக்காட்டும்
மாயவித்தைக்காரி அவள்.
வார நாட்களில்
என்னை நானாக்கி
வாசல் நிலையில் சாய்ந்து நின்று
வழியனுப்பிவைப்பாள்
மந்திரக்கோலை முதுகில் மறைத்து!
- சேயோன் யாழ்வேந்தன்

 

 

நன்றி. ஆனந்தவிகடன்.

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109675#sign_in_paid

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 110

 

சிகாகோவிலிருந்து சரவணன்

 

அவனேதான்

சிகாகோவிலிருந்து சரவணன் என்று

சிரிக்கிறான் முகநூலில்

அவனேதான்

பெட்ரோல் பங்குகளுக்கு அடியில்தான்

பெட்ரோல் எடுக்கிறார்களென்றான்

ஆரம்பப் பள்ளி நாட்களில்

அவனேதான்

தமிழ் நாடு

இந்தியா என்ற

இன்னொரு நாட்டுக்குள்

எப்படி இருக்கமுடியுமென்றான்

உயர்பள்ளி நாட்களில்

அவனேதான்

தை ஒன்றா

சித்திரை ஒன்றா

தர்க்கம் எதற்கு

தமிழ்ப்புத்தாண்டு

சனவரி ஒன்று

என்பதில் என்ன தவறென்றான்

கல்லூரி நாட்களில் -

அவனேதான்

சிகாகோவில்

கோடிங் எழுதுகிறான்

நான் சொந்த மண்ணில்

கவிதை எழுதுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 111

எமக்குத் தொழில்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

ஒரு கடனைப்போல்தான்

இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது

ஒரு கட்டாயத்தின் பேரில் தான்

இக்கவிதைக்கு தலைப்பு இடப்பட்டிருக்கிறது

இக்கவிதை உணர்த்தும் சேதி

வேண்டுமென்றே ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது

இக்கவிதை பேசப்படவேண்டுமென்பதற்காக

தன் இயல்பான மொழி மறந்து

வேறுமொழி பேசவைக்கப்பட்டிருக்கிறது

இக்கவிதை சுட்டும் இலக்கு

உங்களைக் குழப்ப வேண்டும் என்பதற்காகவே

சுழற்றி வைக்கப்பட்டிருக்கிறது

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி : கீற்று இணைய தளம்.)

Link to comment
Share on other sites

எல்லாவற்ரையும் உடனே வாசிக்க முடியாது 
வாசித்தவை அருமை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாவற்ரையும் உடனே வாசிக்க முடியாது 
வாசித்தவை அருமை 

நன்றி தோழரே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வார ஆனந்த விகடனில் (17.9.15-23.9.15) சொல்வனம் பகுதியில் "உள்ளுறையும் ஈரம்" என்ற  எனது கவிதைவெளியாகியுள்ளதை, யாழ் களத்  தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.  உங்கள் ஊக்கத்துக்கும் வாசிப்புக்கும் நன்றி!

உள்ளுறையும் ஈரம்

ஊருக்கு வரும்போதெல்லாம்

அம்மாவிடம் நான்

வழக்கமாகக் கேட்கும் கேள்வி

மழையேதும் பெய்துச்சா?

 

அம்மா கூடுதலாக

இன்னொரு பதிலும் சொல்வாள்

விடுப்பில் வந்தபோது நீயும்

வீட்டுக்கு வந்து போனாய்

வழக்கம்போல் என் நலத்தை

விசாரித்துச் சென்றாய் என்று.

 

நான் இல்லாதபோதும்

என் மண்ணில் மழை பொழிவதும்

என் மனையில் நீ புகுவதும்

எனக்கு மகிழ்ச்சியே.

 

பிடிவாதம் என்ற செல்லாக்காசின்

இரு பக்கங்களாய்

நீயும் நானும்!

-சேயோன் யாழ்வேந்தன்

நன்றி:  ஆனந்த விகடன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 112

 

கடவுளைச் செய்பவள்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

நிலாக்குட்டிக்கு ஒரு பழக்கம்

பூரி சப்பாத்திக்கு மாவு பிசையும்போதெல்லாம்

கடவுளைச் செய்வாள்

பூரிக்கட்டையில் கடைசியில் நசுங்குவது

கடவுளாகத்தான் இருக்கும்

பின்பு உனக்கு எனக்கு என்று

எங்களுக்குள் போட்டி

கடவுளைப் புசிக்க.

(நன்றி கீற்று இணைய இதழ்)

seyonyazhvaendhan@gmail.com

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 113

மராயணம்

 

சுயநலத்துடன் வளர்த்தாலும்

பொதுநலத்துடன் தான்

வளர்கிறது மரம்

*

அறுக்கப்பட்டு செதுக்கப்பட்டு

அடுக்கப்பட்டு

பயணம் செய்வதைவிட

நின்ற இடத்தில்

நிற்பதொன்றும்

குறையில்லை மரங்களுக்கு

*

வளர்க்க வக்கற்ற வாழ்க்கை

வருடியாவது கொடு

இறந்த மரங்களை

வாசிக்கும்போதாவது

*

மக்கட் பண்பில்லா

மரங்களால்

நிரம்பி வழிகிறது

கான்கிரீட் வனம்

****

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 114

அனிச்சம்

விருந்தாளியை

கதவுக்குப் பின்னிருந்து

பயமுறுத்தும் குழந்தைகள்

முன்பைப் போல் இப்போது

எந்த வீட்டிலும் இல்லை

கதவைத் திறக்கும்போதே

நீங்கள் காட்டும் முகம்

பயமுறுத்துவதால் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 115

49ஓ-வுக்கு முதல் வாக்கு

பெண்பார்க்க வந்தபோது

மாப்பிள்ளை என்ன செய்கிறார் என்று கேட்டதற்கு

சும்மாதான் இருக்கிறேனென்று சொன்னதால்தான்

பரவாயில்லை என்று சம்மதம் சொன்னாளாம்,

கவிதை எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தால்

கல்யாணமே நடந்திருக்காதாம்.

என்னிடம் வாக்குக் கேட்ட இருவரில்

யாருக்குச் சம்மதம் சொல்வதென்று தெரியாமல்

49ஓவுக்கு வாக்களித்ததுபோல்தான்

நான் சொன்ன சம்மதம் என்று

நான் ரோஷப்பட்டுப் பதில் சொன்னது

நல்லவேளை அவளுக்கு இன்றுவரை புரியவில்லை.

-சேயோன் யாழ்வேந்தன்  

(நன்றி : வலைத்தமிழ் இணைய இதழ்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 116

சிறு தெய்வம்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

பால் செம்புடன்

பக்தை ஒருத்தி

திரும்பிச் செல்கிறாள்.

 

மரத்தடிக் கருப்பனை

நான்கு நாய்க்குட்டிகள்

நக்க ஆரம்பிக்கின்றன

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி: கீற்று.காம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 117

 

புனிதம் வளரும் மனிதம்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

புனிதமென்று இப்போது சொல்லுவதை

புசித்தபடிதான் இம்மண்ணில் நுழைந்தனர்

புனிதமென்று சொல்லும் நதியை

பிணக்காடாக்கினர்

புனிதமென்று சொல்லும் மண்ணை

மலடாக்கினர்

புனிதமென்று சொல்லும் நாட்டை

விலைபேசினர்

மனித உயிரும் புனிதமென்று

அவர்கள் சொல்லும்வரை

பொறுமையுடன் காத்திருங்கள்!

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி: கீற்று)

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 118

சிவசக்தி

-    சேயோன் யாழ்வேந்தன்

 

மனிதம் கடந்த

சக்தி ஏதுமில்லாத சிவா

தன் இளநீர் வண்டியை

சாக்கைப் போட்டு மூடி

காவலரைப் பற்றியும் பயமின்றி

சாலையோர மரத்தடியில் விட்டுச்செல்கிறான்.

பக்கத்தில் ஓர் அறையில்

சக்தியை உள்ளே வைத்து,

வெளிப்பக்கம் பூட்டிச் சொல்கிறான் பூசாரி.

seyonyazhvaendhan@gmail.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 119

 

பிரிவின் சொற்கள்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

விடைபெற்ற கடைசிக் கணத்தில்

ரயில் நகரும்போது கிடைத்த

சொற்ப அவகாசத்தில்

‘திரும்பி வருவேன்’ என்றாய்

எப்போதென்று சொல்லவில்லை

நான் இங்கு வந்து

காத்திருக்கவேண்டுமா என்று சொல்லவில்லை

தனியாகத்தான் வருவாய் என்றும் சொல்லவில்லை.

பிரிவின் கடைசிக் கணங்களில்
பரிமாறப்படும் சொற்கள்

பிரிவை விடத் துயரம் தருகின்றன.

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி. திண்ணை.காம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 120

இறுதி விண்ணப்பம்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

சிறுபிள்ளை விளையாட்டுபோல்

எளிதான அந்தச் சிறு உதவியைக்கூட

நான் அவளுக்குச் செய்யவில்லை.

கண்ணீர் மல்க என் கைகளைப் பிடித்து

ஒன்றே ஒன்றைத்தான் அவள் கேட்டாள்

“உன் கவிதைகளில்

என்னையும் ஒரு

கதாபாத்திரமாக்கிவிடாதே”

(நன்றி. திண்ணை.காம்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 121

 

தனக்கென்று

-    சேயோன் யாழ்வேந்தன்

 

தமக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல்

பொழிந்து போகின்றன மேகங்கள்

தமக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல்

கனிகள் தந்து வாழ்கின்றன மரங்கள்

தமக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல்

பயிர்களை உயிர்களை வாழவைக்கின்றன நதிகள்

தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாத

தங்கத் தாரகையின் ஜொலிப்பில்

ஒளி(ர்)கிறது தமிழ் மண்.

(நன்றி: கீற்று.காம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 122

 

புரட்சித்தாய்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

ஒரு பெரிய புரட்சிதான்

சிறிய புரட்சிகளைத் தோற்றுவித்தது

சிறிய புரட்சிகள்

தத்தம் குட்டிப் புரட்சிகளைப் பெற்றெடுத்தன.

குட்டிப் புரட்சிகள்

தம் பங்குக்கு

துளித்துளிப் புரட்சிகளைப் பிரசவித்தன

சிறு துளிகள் பல்கிப் பெருவெள்ளமாகி

புரட்சித்தாயை அடித்துக்கொண்டுபோய்விட்டது!

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி: திண்ணை.காம்)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.