Jump to content

UK ல் சொந்த கடை / பெட்ரோல் ஸ்டேஷன் நடத்த என்ன தகுதி வேண்டும்?


M.P

Recommended Posts

நான் இலங்கையில் இருக்கும் போது, என் உறவினன் ஒருவன் UK ல் பெட்ரோல் செட் மேனேஜர் ஆக இருக்கிறான் என கேக்கும்போது அவனை உடனே என் மனம் இலங்கையில் உள்ள ஒரு வங்கி மேனேஜர் உடன் ஒப்பிட்டு பார்த்து அவன் மீது ஒரு வகை பொறுமை கொள்கிறேன். நான் அப்போது ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டு இருந்தேன். அவனுக்கு இரண்டு வயது தான் கூட. அவன் இலங்கையில் இருக்கும் போது படிப்பில் ஒரு மட்டமானவன் தான். எனக்கு வியப்பு. எப்படி இவனால் ஒரு மேனேஜர் ஆக முடிந்தது. இவன் தான் காதலித்த ஒரு பெண்ணை லவ் பண்ணி கலியாணம் கட்டியும் விட்டான். அவள் அவனை இலங்கையில் திரும்பியும் பார்க்கவில்லை. அவள் அவனை விட படிக்க கூடியவள். அவள் படித்து பல்கலைக்கழகம் போக அவன் ஏஜென்ட் மூலம் UK போட்டான். அங்க கிரேடுட் காட் போட்டு ஒரு பெட்ரோல் ஸ்டேஷன் வாங்கி அதுக்கு தானே மேனேஜர் பட்டம் சூட்டி நடாத்தி வந்தான். அவனுக்கு அந்த UK பெட்ரோல் மேனேஜர் பதவி, விசிறிய UK பவுண்டஸ் தான் அவளை காதலிக்க வைத்தது. இன்னொரு விடயம் என்னவென்றால் அவளுக்கு கம்பஸ் படிக்கும் போது இன்னொரு காதல் அவளுடன் படிக்கும் ஒருவனுடன் இருந்தது. அதுக்கு டாடா சொல்லிபோட்டு UK பறந்து போட்டாள். நானும் ஸ்டுடென்ட் விசா எடுத்து கடைசியாக UK வந்து சேந்தேன். வந்த பிறகு தான் விளங்கியது UK’ல் பெட்ரோல் ஸ்டேஷன் மேனேஜரை இலங்கை சங்க கடை மேனேஜர்க்கு கூட பக்கத்துல வைக்க முடியாது. சங்கக்கடைல ஸ்டாக் எடுக்க, பில் போட தெரிய வீணும். UK’ல் பெட்ரோல் கம்பெனி பெட்ரோல் அனுப்பும். கடை சாமான் முடிய பக்கத்தில உள்ள காஷ் அண்ட் கரி (Cash and carry) ல வேண்டி வந்து விக்கவேண்டும். மொத்ததில இலங்கையில் உள்ள ஒரு தெரு கடைக்காரனுக்கு தான் UK பெட்ரோல் கடைக்காரன் சமன். அன்பான பெண்களே! உங்களுக்கு வெளிநாடு போக வேணும், UK பவுண்டஸ் வேணும் என்று உண்மையை சொல்லிபோட்டு போங்கோ. தகப்பன் மார்களே! தாய் மார்களே! தனயன் தம்பி மார்களே! UK பெட்ரோல் கடை மேனேஜரை இலங்கை படிச்சவனுக்கு ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். இலங்கையில் படிக்காதன் தான் UK போய் கள்ள கிரெடிட் காட் போட்டு மேனேஜர் ஆக இருக்கிறான்.

Link to comment
Share on other sites

  • Replies 175
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு என்ன பிரச்சினை??

 

பாவம்

ரொம்ப ஏமாந்து போனீர்களோ....??

 

படிப்பு

பணம்

வேலை

சொந்த முயற்சி....

 

எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக புரிந்து கொள்ளுங்கள்

ஒவ்வொன்றும் பெறுமதியானவை

ஆனால் ஒன்றோடொன்று கலந்தால்.....

கவனமாக இருங்கள்

 

பதிவுக்கு நன்றிகள்..

தொடர்ந்து எழுதுங்கள்

 

Link to comment
Share on other sites

உங்கள் வேதனையை புரிந்துகொள்ளமுடியுது. அனேகமாக நீங்கள் 90 க்கு பிற்பட்ட காலங்களில்தான் உங்கள் பதின்ம பருவத்தை கடந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். உள்ளூர் பட்டபடிப்புக்கள் டாலரிடம்/பவுண்சிடம் போட்டி போடமுடியாமல் இழந்தவற்றை இப்பவும் மனதின் எங்கோ சுமந்தபடி உலவும் பலரில் நானும் ஒருவந்தான்.

யத்த கால  தாயக வாழ்வியலில், புலம் பெயர்ந்த சமூகமாற்றிய பொருளாதார பங்களிப்பு முதன்மையானது. நீங்கள் குறிப்பிடும் மனேஜர்மார்கள் தன் துணையின் குடும்பத்திற்கு செய்தவற்றை உள்ளூர் வருமானத்தில் உங்களால் செய்திருக்கமுடியுமா? யாருமே தம் முடிவுகளை நியாயபடுத்தவே அல்லது ஒரு போலி சமூக தராதரத்தை பேணவே முயல்வார்கள்.அந்த் வகையில் பெண் பெற்றோர்கள் உள்ளூர் பட்டதாரிகளையும், வெளிநாட்டு மாப்பிள்ளைகளையும் எதோ ஒரு வகையில் சமப்ப்டுத்திவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

M.P. என்பவருக்கு பொறாமை கூடிவிட்டது. எவராலோ நன்றாகத்தான் பாதிக்கப்பட்டு.. அவற்றை இங்கே கொட்டவென்று அங்கத்தவராகி, 2வது கருத்திலேயே கொட்டோ கொட்டென்று கொட்டியிருக்கிறார் குழவியாக! இன்னம் இருந்தால் அதையும் கொட்டி விடணை.. கொஞ்சத்தை மனசுக்கை வைச்சிருந்து கஸ்டப்படாமை!!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

வெளி நாட்டு மாப்பிள்ளைகள், உள்ளூரில் படித்தவனை பணம் இல்லையென்ற காரணதிற்காக ஒரு தோல்வியடைந்தவனாக பார்ப்பது பிழையானதுதான். உங்கள் பிரச்சனை அந்த வகையை சார்ந்ததா?

நீங்கள் உங்கள் குடும்பதிலுள்ள ஒருவருக்கு, சங்ககடை மனேஜருக்கா UK பெற்றோல் மனேஜருக்கா கட்டிக்குடுக்க முடிவெடுப்பீர்கள்? மனதை தொட்டு சொல்லுங்கோ!

Link to comment
Share on other sites

படிப்பது பணம் ஈட்ட என்பதை மறந்து விடாதீர்கள். வேலை என்பது கூட நன்றாக படித்தால் நல்ல வேலை கிடைக்கும். இம் மூன்றும் ஒன்றாக பிணைந்தவை. படிப்பு என்பது பணம் இல்லாமல் கிடைக்கும். ஆனால் நன்றாக உழைப்பதுக்கு. சொந்த முயற்சி சற்று வித்தியாசமானது. நான் உட்பட அனேகமான ஆண்கள் படிப்பது பெண்களுக்கு கலர் காட்ட தான். ஆனால் அதை ஒரு ருமு கிரெடிட் கார்டு காரன் பரிசுகொண்டு போனால்இ படிப்புக்கு எங்கே மரியாதையை? கிரெடிட் கார்டு காரன் என்ன பிள்ளைக்கு ருமு ல் கார்டு அடிக்கவா பழககிறான்???? அவனுக்கு விழங்கியது அவளுக்கு விளங்கலியே? எல்லாம் UK பவுண்ட்ஸ்ன் மாயை?

Link to comment
Share on other sites

எங்கட ஊரில் சுப்பர் கடை என்று ஒன்று இருந்தது. அவர் கார், மாடி வீடு என ஒகோ என வாழ்ந்தவர். ஊரிலுள்ள வாத்திமாருக்கு இருந்த மரியாதை அவருக்கு இருக்கவில்லை என்று தாத்தா சொன்னவர். சுப்பருக்கு ஊரில் அந்த நாளில் யாருமே பெண் கொடுக்கவில்லை. கஸ்டப்பட்டு வெளியூரில்தான் எடுத்தார். இது நடந்து ஒரு 50 - 60 வருசம் இருக்கும்.

சுப்பர் ஒரு 60 வருடம் கழித்து பிறந்திருந்தால், அவற்ற கதை வேறு. என்ன செய்வது சுப்பருக்கு அளந்தது அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

M.P. என்பவருக்கு பொறாமை கூடிவிட்டது. எவராலோ நன்றாகத்தான் பாதிக்கப்பட்டு.. அவற்றை இங்கே கொட்டவென்று அங்கத்தவராகி, 2வது கருத்திலேயே கொட்டோ கொட்டென்று கொட்டியிருக்கிறார் குழவியாக! இன்னம் இருந்தால் அதையும் கொட்டி விடணை.. கொஞ்சத்தை மனசுக்கை வைச்சிருந்து கஸ்டப்படாமை!!  :o  :icon_idea:

 

ஸ்டுடென்ட் விசாவில் UK வந்து, காசு கட்டி படித்து, முழு நேரமும் பெட்ரோல் செட்ல வேலை செய்து ஒன்றும் மிச்சமில்லை. இப்பதான் ஆஸ்திரேலியா வந்து நிம்மதியாய் ஒரு நல்ல வேலை கிடைச்சு இருக்கு படிச்சதுக்கு. சற்று நேரமும் கிடைக்குது யாழில் எழுத. இப்பதான் தமிழ் எழுத பழகிறேன். என் எடுத்து பிழைகளை மன்னிக்கவும். இங்க எங்கட ஆட்கள் UK மாதிரி ஒன்றும் களவு பண்ணி கடை போட்டு இல்லை. படிச்சவன் நல்லா இருக்கிறான்.

Link to comment
Share on other sites

வெளி நாட்டு மாப்பிள்ளைகள், உள்ளூரில் படித்தவனை பணம் இல்லையென்ற காரணதிற்காக ஒரு தோல்வியடைந்தவனாக பார்ப்பது பிழையானதுதான். உங்கள் பிரச்சனை அந்த வகையை சார்ந்ததா?

நீங்கள் உங்கள் குடும்பதிலுள்ள ஒருவருக்கு, சங்ககடை மனேஜருக்கா UK பெற்றோல் மனேஜருக்கா கட்டிக்குடுக்க முடிவெடுப்பீர்கள்? மனதை தொட்டு சொல்லுங்கோ!

 

மானம் கெட்ட UK கிரெடிட் கார்டு காரன் பெண்ணையும் பார்த்து, மச்சினிச்சிக்கும் சீதனம் கொடுத்து, மச்சானையும் UK கூபபிட்டு, பிள்ளை பெத்துக்கு மாமியையும் மாமாவையும் கூப்பிடால், எங்கட சனம் / எங்கடை பெண்கள் கூட அவனைதான் விரும்பும்.

Link to comment
Share on other sites

மட்டை மன்னர்மார் தங்கள் பிள்ளைகளை  கட்டாயம் படிக்க வைப்பினம். இன்னுமொரு மட்டை இளவரசனுக்கு தங்களின் மகளை கட்டிகொடுக்கமாட்டினம். வடிவா பிளான் போட்டு மட்டை மன்னன் மகளை '' தோற்றவன்'' படித்த மகன் கட்டினால், எல்லா இடைவெளிகளும் நிரம்பிவிடும். யாவரும் சந்தோசமக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

மானம் கெட்ட UK கிரெடிட் கார்டு காரன் பெண்ணையும் பார்த்து, மச்சினிச்சிக்கும் சீதனம் கொடுத்து, மச்சானையும் UK கூபபிட்டு, பிள்ளை பெத்துக்கு மாமியையும் மாமாவையும் கூப்பிடால், எங்கட சனம் / எங்கடை பெண்கள் கூட அவனைதான் விரும்பும்.

 

யதார்தம் புரிந்தால் சரி. சும்மா உணர்சிவசப்பட்க்கூடாது. உடம்புக்கு நல்லதல்ல.

Link to comment
Share on other sites

யதார்தம் புரிந்தால் சரி. சும்மா உணர்சிவசப்பட்க்கூடாது. உடம்புக்கு நல்லதல்ல.

 

UK போகாமல் இருந்திருந்தால் பெட்ரோல் செட் காரன் ஏதோ பெரிய ஆழ்தான் என் நினைத்து வாழ்ந்து இருப்பேன். இது UK போய், எங்கட பொடியலிண்ட மானக்கேட்ட பிழைப்பையும் அதை நம்பி ஏமாந்து போன எங்கள் சீமட்டியளையும் பாத்து மனம் பொறுக்குது இல்லை

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

புதிய உறவாக யாழில் இனைந்தமைக்கு முதலில் எம் நன்றி.

 

கருத்துகள் / பதிவுகள் எழுதும் முன் யாழ் கள விதிகளை ஒரு முறை பார்க்கவும். கருத்துக்கள விதிகளின் படி அவன் / இவன் / அவள் என்று ஒருமையில் எழுதுவதை முற்றாகத் தவிர்க்கவும். அத்துடன் ஒருவரின் படிப்பை தொழிலை வைத்து மட்டம்தட்டுவதும் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. அத்துடன் அரிச்சுவடியில் அறிமுக பதிவினைத் தவிர்த்து இத்தகைய பதிவுகளை இடுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

 

களத்தில் தொடர்ந்து இணைந்து இருக்க நாகரீகமானதும் ஆரோக்கியமானதுமான உரையாடல்கள் அவசியம்.

 

நன்றி,

 

நிர்வாகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எழுதுவது கொத்து குண்டுகள் போடுவது (Cluster-bombs)போன்று உள்ளது -அல்லது யாருக்கோ உள்குத்தா ?

குறுக்கு வழியில் காசு பார்ப்பது ,எத்திப் பிழைப்பது,ஏமாற்றுவது எல்லாம் அறனுக்கு அப்பாற் பட்டது தான் அதற்காக அனைத்து

எரிபொருள் நிலைய முகவர்கள் எல்லோரையும் ஒரே தும்புத்தடி வைத்து கூட்டமுடியாது . நான் இந்தத் துறையை சேர்ந்தவன் அல்லன் எனினும் இந்த கொத்து குண்டு விளையாட்டை ஏனோ என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MP அண்ணே... உங்களை வரவேற்கிறோம்.

 

உங்களின் மிச்சக் கருத்துக்களை களத்தின் உள்ளே வைத்தால் நன்றே அமையும். நிர்வாகம் அதுக்கு உதவலாமே..?!

 

மேலும்..

 

ஈழத்தில் இவ்வளவு அடக்குமுறைகளையும் தாங்கி.. கஸ்டப்பட்டு படிச்ச ஒருவன்.... வெளிநாட்டில் இருந்து பவிசு காட்டும் ஒருவர் மீது கொண்டுள்ள பார்வை.. இப்படித்தான் அநேகமாக இருக்கும். இதில்..பொறாமை என்று சொல்வதிலும்.. உங்களுக்கு கிடைக்க வேண்டியது.. அவனுக்கு கிடைக்க... உங்களது....தூர இருப்பதின் தோற்றமாகவே இதை நோக்க வேண்டும்.

 

நீங்கள் பெற்றோல் செட்டோட நிற்கிறேள்.. இன்னும் உள்ள இறங்கி விசாரிச்சிங்கன்னா தெரியும்.. இங்கிலாந்தில் உள்ள எம்மவர்கள் பலரின்.. மொத்த குடும்ப வருமானத்தில்..60% ம் பிரித்தானிய அரசால்  உதவித் தொகைகள் வடிவில்.. உழைப்பவனிடம் வறுகிக் கொடுக்கப்படுவதை. அதற்காக உழைப்பவன்.. பொறாமைப்படுவதில்லை. கோபத்தை.. ஆற்றாமையை வெளிப்படுத்துவதுண்டு. அதற்காக உழைக்காமல்.. ஓசியில் வாழ்பவர்கள்.. தங்களை திருத்திக் கொள்வார்கள் என்றில்லை. அவர்களுக்கு அது சுகம். :lol:

 

எங்கட சனம்...ஒட்டுமொத்தமா.... உழைச்சு முன்னேறிற சனம் என்றால்.. இப்ப தமிழீழம் அமைஞ்சு அது சிங்கப்பூரை விட உயர்ந்திருக்கும்.

 

எனிவே ஊருடன் கூடி வாழப் பழகிக்குங்க. வெளவாலுக்கு வாழ்க்கைப்பட்டால்.. கவுண்டு தான் கிடந்தாகனும்.  :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வேதனையை புரிந்துகொள்ளமுடியுது. அனேகமாக நீங்கள் 90 க்கு பிற்பட்ட காலங்களில்தான் உங்கள் பதின்ம பருவத்தை கடந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். உள்ளூர் பட்டபடிப்புக்கள் டாலரிடம்/பவுண்சிடம் போட்டி போடமுடியாமல் இழந்தவற்றை இப்பவும் மனதின் எங்கோ சுமந்தபடி உலவும் பலரில் நானும் ஒருவந்தான்.

யத்த கால  தாயக வாழ்வியலில், புலம் பெயர்ந்த சமூகமாற்றிய பொருளாதார பங்களிப்பு முதன்மையானது. நீங்கள் குறிப்பிடும் மனேஜர்மார்கள் தன் துணையின் குடும்பத்திற்கு செய்தவற்றை உள்ளூர் வருமானத்தில் உங்களால் செய்திருக்கமுடியுமா? யாருமே தம் முடிவுகளை நியாயபடுத்தவே அல்லது ஒரு போலி சமூக தராதரத்தை பேணவே முயல்வார்கள்.அந்த் வகையில் பெண் பெற்றோர்கள் உள்ளூர் பட்டதாரிகளையும், வெளிநாட்டு மாப்பிள்ளைகளையும் எதோ ஒரு வகையில் சமப்ப்டுத்திவிடுவார்கள்.

 

அதுதானே அண்ணே பார்க்கிறமில்ல.. அப்பாக்கு பிள்ளை என்ன படிக்குதுன்னே தெரியாத.. புலம்பெயர் வாழ்கையை. இதில.. துணைவிக்கு.. எல்லாம் போதுமா செய்யப்படுகுது என்று நீங்க நினைச்சுக்கிறீங்க... அல்லது காண்பிக்க விரும்புறீங்க. கோவில் கடா மாதிரி.. திருவிழாவுக்கு சோடிப்பது போல.. சாறியும்.. நகையும்.. நாலு பேர்த்டே பார்ட்டியும் அல்ல அண்ணே வாழ்க்கை. புலம்பெயர் மண்ணில்.. இதை விட்டா நீங்க அப்படி என்ன பெரிய வாழ்க்கையை வாழ்த்துக்கிட்டு இருக்கீங்கண்ணு சொல்லுவியளா..?! :D:icon_idea:

 

இங்க துணைவன்.. துணைவிக்குள் உள்ள அந்நியோன்னியத்தை விட.. ஊரில குடிசையில்.. அது அதிகம் உள்ளது. :icon_idea::)

 

Link to comment
Share on other sites

வெள்ளைக்காரன் சும்மா கொடுத்தாலும் எங்கடையளூக்கு பொறுக்காது.. ஏனெண்டால் தங்களுக்குப் பக்கத்திலை வந்தீடுவினம் எண்ட பொறாமை.. தாங்கள் ஏன் வந்தவை.. என்னத்துக்கு இதுக்கை சக்கைப்பணியத் தேய்ச்சுக் கொண்டு இருக்கினமெண்டதை சிந்திக்கிறேலை...  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60 குட்டியை போட்டு சைல்ட் பெனிபெட் எடுத்தாலும்.... எம்மவர்கள் மேற்கு நாட்டு வறுமைக் கோட்டில் தான் நிற்கிறார்கள். இங்கு சிலர்.. மேற்கு நாட்டில் தாங்கள் வசதியாக இருப்பதாக ஊருக்கு காட்டுகிறார்களே தவிர... உண்மையில் அவர்கள் வறுமைக் கோட்டில் இருப்பதால் தான் அரசு உதவித் தொகையை கேட்ட வேண்டிய நிர்ப்பந்தம். அல்லது கள்ள வழியில்.. அதனை பெற்றுக் கொள்கிறார்கள். வெள்ளைக்காரன்.. சும்மா இல்ல.. அவனின் உழைப்பை தான் வரியாக்கி.. உதவித் தொகையாக யாருக்கோ கொடுக்கிறான். அதனால் தான் மேற்கு நாடுகளில்.. வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருகிறது.

 

எம்மவர்கள்.. ஊரிலும் வெறுப்பை சம்பாதித்தப்படிதான்.. வெளிநாட்டிலும்.. அதே. காரணம்.. எம்மவர்களின் சோம்பேறித்தனமும்.. உழைக்காமல்.. படிக்காமல்.. கஸ்டப்படாமல்.. பவிசு காணனும் என்ற கள்ளப் புத்தி தான். அதற்கு தாயக சோகத்தில்.. அகதி அந்தஸ்து உதவி நிற்கிறது. இதற்கு வக்காளத்து வேறு. :lol::)

Link to comment
Share on other sites

அரசு தொகையில் இருப்பவர்கள் புதிதாக வந்தவர்களும்... நோயாளிகளும்.. பிரசா உரிமை எடுத்துக் கொண்டு யூகேக்குள் நுழைபவர்களும்... இதுதான் தற்போதைய நிலைமை.

சிற்றிசன் எடுக்கும்போது அரச உதவிகளில் வாழ முடியாது.. எடுத்துவிட்டும் சுலபமாக அரச உதவிகளுக்கு செல்ல முடியாது. ஆனால் யூகேல பிரச்சினை இல்லையாம்.. சும்மா இங்கிலீசில படிப்பெண்டு சொல்லிக்கொண்டு சனம் அங்கைதான் ஓடுது!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யு கே யின் வறிய மக்களுக்கான இலகு உதவித் திட்டங்களை எம்மவர்கள் தவறான நோக்கங்களோடு பயன்படுத்துகிறார்கள். யு கேயில் உள்ளவர்களை காட்டிலும்.. பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் எம்மவர்கள் இந்த விடயத்தில் பலே கில்லாடிகள். அதிலும் சுவிஸ்காரர்... இரட்டை உதவித் தொகைகளை எடுக்கிறார்கள்.. இரண்டு அரசுகளையும் ஏய்த்து. :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் M .P

 

எரிபொருள் வங்கி முகாமையாளர் நல்ல தொழில் தானே
ஐரோப்பாவில் இருக்கும் வேலையில்லாப் பிரச்சனைக்குள்
கிடைக்கும் வேலையைத் தக்க வைப்பதே பெரும் பிரச்சனை.
நீங்கள் படிப்பு அதற்கான வேலை என்றால் அவர்கள் எங்கே செல்வது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MP தம்பி,

முறையான பெற்றோல் செட் மனேஜரிட்ட மாட்டி வதை பட்டிருக்கிறார்.

ஒன்டு, இரண்டு அப்படி இப்படிதான். அதுக்காக எல்லாரும் அப்படி என்றாகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MP தம்பி,

முறையான பெற்றோல் செட் மனேஜரிட்ட மாட்டி வதை பட்டிருக்கிறார்.

ஒன்டு, இரண்டு அப்படி இப்படிதான். அதுக்காக எல்லாரும் அப்படி என்றாகாது.

 

அதற்கும் மேல......

முறையான பெற்றோல் செட் மனேஜரிட்ட பறி கொடுத்திருக்கிறார். :( 

Link to comment
Share on other sites

MP யின் ஆளைத்தான் அவர் பெற்றோல் ஸ்டேசனை காட்டி மயக்கிவிட்டார் போலிருக்கு . :icon_mrgreen: அல்லது இவ்வளவு கோவம் வராது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் வேலை செய்த 3 பெட்ரோல் செட்டும் நல்ல மேனேஜர்களே.
ஒருவர் மொரட்டுவ பல்கழைகளக இன்சினீயர், இன்னோருவ யூ.கேயில் ‍‍‍‍PHD   செய்த சிவில் இன்சினீர், (சில்லறை கடை செய்தார்) 3வது BP-Marks & Spencers. மூவரும் தமிழர்கள்
 
எல்லேரும் தாங்கள் சுய முயற்சியால் முன்னேறி வந்தவர்கள். ஆனல் நான் வேலை செய்த  ACCA accounting firm  சொந்தக்காரர், 40 வருடம் யூ.கே யில் வசிப்பவர் மிகவும் உலோபி, கடைசிவரை தன்னுடைய வேலைகளுக்கு சுயநலமாக என்னை பயன்படுத்திக்கொண்டார்.
ஐந்து விரல்களும் ஒன்றல்ல.
 
எனவே இப்படி மற்றவரை பார்த்து பொச்செரிச்சல் படாமல், நாங்கள் முயற்சி செய்து முன்னேற வழியப்பாக்க வேண்டும்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.