Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Oil-well-2-600x450.jpg

 

 

 

ஜீவா எண்ணியும் பார்த்ததில்லை தமக்கும் இப்படி ஒரு நிலை வரும் என்று. வழமையாக அதிகாலையில் நித்திரையால் எழுவதுதான். பாடசாலைக்குச் செல்லும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் காலை உணவு செய்து பாடசாலைக்கும் கட்டி ஒழுங்கு செய்ய எப்பிடியும் ஒன்றை மணி நேரம் கடந்துவிடும். அதன்பின் எல்லோரையும் எழுப்பி பால் காச்சித் தேத்தண்ணியும் போட்டு எல்லாருக்கும் சேவகம் செய்யவே நாரிப்பூட்டு விண்டுவிடும்.

 

இப்ப மேலதிகமாக டாங்கிகளில் வரும் தண்ணீரைப் பிடிப்பதற்கு அரை மணி முன்னதாக எழுந்து வேலைகளை முடித்துவிட்டுக் காத்திருக்க வேண்டும். கொஞ்சம் பிந்தினாலும் பிறகு அரைவாசி தண்ணீர்தான் கிடைக்கும். எதோ தான் மட்டுமே தண்ணீர் பாவிப்பதுபோல கணவன் ஒருநாள் கூட உதவி செய்வதில்லை. சரி அவர் படிப்பிக்கப் போகவேணும்தான். அதுக்காக இந்த உதவியை ஆவது செய்யலாம் தானே என்று மனம் அங்கலாய்க்க, வேறு வழியின்றி அலுமினியப் பானைகளை எடுத்துக்கொண்டு விமலா வீட்டுப் பக்கம் போனாள். அந்த நாற்சந்தியில் தான் இவர்களுக்குத் தண்ணீர் வழங்கும் லொறி வரும்.

 

இவளுக்கு முன்னரே ஆறு பேர் வந்து நின்றனர். டிவியில இப்பிடித் தண்ணிக்கு நிண்டு அடிபடுறதைப் பாத்திருக்கிறம். இப்ப நாங்களே நிக்கவேண்டி வந்திட்டுது என்றாள் சந்திரா. நீயுந்தானே சேர்ந்து சுண்ணாகத்தாரைத் திட்டினனி என்று கடுப்புடன் சொல்லிவிட்டு விமலா முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கோபத்துடன். தன்னாலே ஊறும் நீரைக் கொடுக்கவே எத்தனை வசைகளும் கோபமும் திட்டும் பெருமூச்சுடன் அவர்கள் தர்க்கத்தைப் பார்த்துக்கொண்டு நின்றாள்  ஜீவா சலிப்புடன்.

 

ஆறு மாதங்களின் முன் சுண்ணாகத்தில் இருந்து ஒவ்வொருநாளும் ஐந்து ஆறு பெரிய பரல்களில் இணுவிலுக்கு வந்து நீரை எடுத்துக்கொண்டு போகவாரம்பித்தனர். வரவர தண்ணி எடுப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க, ஒவ்வொரு கிணத்தடியும் அவர்களை தண்ணீர் எடுக்க வேண்டாம் என்று கொஞ்சம் கூட இரக்கமின்றி வேறு கிணற்றுக்குப் போகச் சொன்னதை நினைக்க இப்ப கூசியது. யாருக்குத் தெரியும் எங்கட கிணறும் எண்ணை கலக்கும் என்று.

 

முதலில இவர்களும் எதுவும் தெரியாமல் தான் தண்ணியைக் குடித்துக்கொண்டிருந்தார்கள். தண்ணீரில் எந்த எண்ணையும் வரவில்லை. மூத்தவளுக்கும் இரண்டாவதுக்கும் ஒண்டா வயிற்றோட்டமும் காச்சலும் வந்த உடன பாலாவிடம் கொண்டோடினது. டொக்டர் பாலா தான் சிலவேளை இங்க்கத்தேத் தண்ணியிலும் எண்ணெய் கலந்திட்டுதோ எண்டு குண்டைத்த் தூக்கிப் போட்டவர்.

 

ஜீவாவுக்கு எதோ எல்லாம் நினைச்சு வயித்தைக் கலக்க, அப்ப இனிமேல் தண்ணியை நாங்களும் குடிக்கக் கூடாதோ எண்டு ஆதங்கத்துடன் கேட்டாள். சூடாக்கிக் குடிச்சால் பிரகுச்சனை இல்லைத்தானே எண்டு தானே பதிலையும் சொல்லிக்கொண்டாள். சூடாக்கியும் குடிக்கக் கூடாது. ஆனால் உடன என்ன செய்யிறது. குடிக்கிறது சாப்பாட்டுக்கு நீங்களும் போத்தில் தண்ணியை வாங்கிப் பாவியுங்கோ. நான் ஒருக்கா AGA ஓட கதைக்கிறன் என்று கூறி அனுப்பினார்.

 

அயலட்டை எல்லாம் கதை பரவினாலும் ஒருத்தரும் நம்பேல்ல. ஜீவா வீடு மட்டும் போத்தில் தண்ணி பாவிக்க மற்றவை கிணத்துத் தண்ணியையே கொதிக்கவச்சுக் குடிக்கத் தொடங்கிச்சினம். மற்றவைக்கு எந்த வருத்தமும் வராததால ஜீவா பொய் சொன்ணாளோ எண்டும் தங்களுக்குள்ள குசுகுசுத்திச்சினம்.

 

ஒரு கிழமை கழிய இரண்டுபேர் வந்து எதோ சாமான்கள் எல்லாம் கொண்டுவந்து வச்சு தண்ணியையும் எடுத்துப் பாத்திட்டு எண்ணை கலந்திடுது போல தான் இருக்கு. எதுக்கும் நாளைக்கு அறிவிப்பம் என்டுவிட்டுப் போய் அடுத்த நாள் விதானையார் வீடுவீடா ஆட்களை அனுப்பியைக் குடிக்க வேண்டாம் எண்டு சொன்னாலும் பலர் அதைச் சட்டை செய்யாமல் குடிச்சபடிதான்.

 

ஒரு கிழமை கழியத்தான் லொறியில குடிநீர் தாறம் எண்டு சொல்லி கொண்டுவரத் தொடங்கிச்சினம். அப்பவும் எல்லாரும் வந்து வாங்கேல்ல. வந்தாப் பிறகு பாப்பம் எண்ட நிலை தான் எல்லார் வீட்டிலையும்.

 

ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குத்தான் தண்ணீர் கொண்டு வருவார்கள் என்றில்லை. கிட்டத்தட்ட அரை மணித்தியாலமாவது காத்திருக்கவேண்டி வந்தது. ஆனாலென்ன செய்வது. நல்ல காலம் எங்கடை ஊர் தோட்டக் கிணறுகளுக்கு இன்னும் எண்ணெய் கலந்து கறுப்பா வரேல்லை.அதுவரையும் தோட்டங்கள் பிளைச்சுது என்று எண்ணிச் சிறிய சந்தோசமும் ஏற்பட்டது அவளுக்கு.  இப்பிடி எத்தினை நாள் தண்ணி பிடிக்க நிக்கவேணுமோ எண்டு எண்ணியபடி காத்திருக்கிறாள் ஜீவா.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி வாதவூரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான நேரத்தில் சரியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட , சமூகத்துக்கு தேவையான கருத்து...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவையறிந்த ஒரு பதிவு!

 

சில காசித்தும்பைகளுக்கும், கல்யாணி மரங்களுக்கும் ( பட்டிப் பூக்கள்) தண்ணீர் விடுவதற்காகவே,  காலையும் மாலையும்.. ஐந்து கிலோ மீற்றர்கள் நடந்து தண்ணீர் சுமந்திருக்கிறேன்!

 

எனினும், இப்போது நினைக்கும் போதும்.. அது 'வீண்' போலத் தெரியவில்லை!

 

இன்றும் தேவை ஏற்படின்... திரும்பவும் செய்வேன் என்றே எண்ணுகிறேன்!

 

தண்ணீரின் அருமை அவ்வளவுக்குப் பெரிது.. !

 

தொடருங்கள் சுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் நவீனன்,சுவி அண்ணா,புங்கை, ஆகிய உறவுகளுக்கும் பச்சை வழங்கிய உறவுகள் ஆரதி, வாதவூரன்,நிலாமதி அக்கா, தமிழினி, நவீனன்,சுவி அண்ணா, புங்கை ஆகிய உறவுகளுக்கும் நன்றி.

 

என்ன கவலை என்றால் மூன்று வீடு தள்ளி எண்ணெய் கலந்த நீர். தம் வீட்டில் இன்னும் நஞ்சு கலக்கவில்லை என்று இன்னும் அந்தக் கிணற்று நீரைக் குடிப்பவர்களை என்ன செய்வது ??? ஒவ்வொருவர் ஒவ்வொருவராக எடுத்து விடயத்தைக் கூறினாலும் அவர்களால் அதன் முழுப் பாதிப்பையும் உணர முடியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.