Jump to content

கொஞ்சம் பேசலாம் வாங்க - 10 - படிப்பு - பட்டம் - கறிக்குதவாதா??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு - பட்டம் - கறிக்குதவாதா??

 

சில நாட்களாக யாழில் சில பதிவுகளில் இந்த விடயம் அடிபடுகிறது.

அதில் பங்கு கொண்டு கருத்து வைத்தவர்கள்

படித்து பட்டம் பெற்று 

தமது வாழ்வியலில் அனுபவத்தின் அடிப்படையில் 

அனுபவரீதியாக  எழுதப்பட்டதாகவே பார்க்கமுடிகிறது...

 

இது பற்றி  பேசலாம்....

அதற்கு முன்

கிருபன்

 

அந்தப் படத்தைப் பார்த்த பிறகு நான் படித்ததெல்லாம் வேஸ்ற் என்ற சிந்தனை வந்தது. பங்குச் சந்தையிலும், முதலீட்டு வங்கிகளிலும் வேலை செய்யாமல் innovating technology களில் வேலை செய்ய ஆசைப்பட்டது வாழ்வில் எப்போதும் பற்றாக்குறைப் பொருளாதாரத்தை உண்டாக்கிவிட்டது. மிடில் கிளாஸ் மாதவன்தான் இப்போது எனது குருவாக இருக்கின்றார்!

 

 

நிழலி

 

எனக்கும் இதே எண்ணம் தான் இப்படத்தினை பார்த்த பின் ஏற்பட்டது. சேம் பிளட்

 

 

Justin

 

எஞ்சினியருக்கும் கம்பியூட்டர் நிபுணருக்குமே இந்தக் கவலையெண்டால், சாதாரண உயிரியல் விஞ்ஞானியின்ர நிலைமையை யோசிச்சுப் பாருங்கோவன்! ஆனாலும் இரவில் நிம்மதியாக நித்திரை கொள்ளுறன்! கிரடிட் கார்ட் கொம்பனிகள் என்னை நம்புகின்றன! நம்பிக்கை தான் பற்றாக் குறையை நிரப்புகின்றது! (உங்களுக்கும் இப்படித் தான் இருக்கும் எண்டு ஒரு ஊகம் தான்!)  :D
 

 

நெடுக்கு...

 

விட்டால்.. கிருபண்ணா.. பெற்றோல் ஸ்ரேசன் நடத்திறவரை.. அப்பிள் CEO லெவலில வைச்சு கதை புனைவார் போல இருக்குது.  :lol:

 

 

இவர்கள் எழதிய கருத்து இவை..

 

 

 

இன்றல்ல

என்றுமே பணம் ஒரு குறியாகவே இருக்கிறது

அதேநேரம் ஒரு காலத்தில்

பணம் குவிக்கும் பட்டமாக இருந்த

வைத்திய மற்றும் பொறியியலாளர் பட்டங்கள் இன்று லாபகரமானதாக இல்லையா??

அல்லது வேறு பட்டங்கள்

அல்லது பட்டங்களே இல்லாத படிப்புக்கள் 

லாபகரமாக ஓடுகின்றனவா.....??

இங்கும் குறி  பணம் மட்டும்  தானா??

 

எங்கள் அனுபவங்களையும்  பேசலாம் வாங்க...

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் தான் முக்கிய குறிக்கோள் ...அந்த பணத்தை நேர்மையாக பெறுவதற்க்கு (80%) பட்டத்தை நம்புகிறார்கள்.....பலருக்கு அவர்கள் தெரிவுசெய்த பட்டப்படிப்புக்கள் கை கொடுத்துள்ளன ...சிலருக்கு வேதனையை தான் கொடுத்துள்ளது....அரசாங்கம் சகல பிரஜைகளுக்கும் ஒரே வகையான சம்பளம் கொடுக்குமென்றால் ஒருத்தரும் பாடசாலைக்கு செல்லமாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பணம் அவசியம். பணத்தை பல வழிகளில் சம்பாதிக்கலாம் ஆனால் அதை மனேஜ் பண்ண அறிவு தேவை. எங்கடை அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பணத்தையே தினமும் நாம் வங்கிகளில், கிரெடிட் மட்டைகளில் பார்கின்றோம். மீதமுள்ள பணம் எங்கே?, அந்தக் காலம் என்றால் பணம் பெருக்க வட்டிக்கு போயிருக்கும். இப்ப முதலீட்டு வங்கி அல்லது பங்கு சந்தையில் எழுத்து வடிவில் (1/0) பணத்தை பெருக்கும். திறமை இருந்தால் இந்தப் பணத்தை சரியான நேரத்தில் சரியான இடத்தில முதலீடு செய்தால் அதை பல மடங்கு பெருக்கலாம்.

இதில் கடை காரன், டாக்டர், பொறியியலாளர், கணக்காளர் எனப் பலர் முதலிடுகிறார்கள். ஒரு முக்கிய விடயம் எந்தத் துறையில் உழைத்தாலும், செலவுகள் போக மிஞ்சும் காசுதான் பணத்தை பெருக்கும். எல்லாத் துறைகளிலும் ஓரளவு காசு மிச்சம் பிடிக்கலாம் (அளவு மாறலாம்), அந்த மிச்சம் பிடித்த காசை பல மடங்கு ஆக்குவனே பணக் காரன் ஆகிறான். இங்கு தேவையானது எல்லாம் தகவலும் அதை சரியான நேரத்தில் பயன்படுத்துவதே.

ஒரு படத்தில் செந்தில் பிச்சைக்கார சாமி, கையில் ஒரு குறிப்பு புத்தகம். கோவில் மடத்தில் இருந்த படியே தினமும் உணவை வரவழைத்து சாப்பிடுவார். அந்தப் புத்தகத்தில் எந்தெந்த கோவில்களில் எந்த நாட்களில் உணவு கொடுப்பார்கள் என்ற தகவல் இருக்கும். எடுத்துவரும் பயனுக்கும் அவருக்கும் தினமும் அன்னம் கிடைக்கிறது. இங்கு தகவலும் அதை சரியான நேரத்தில் உபயோகப் படுத்தும் செந்தில் அறிவைப் பயன்படுத்தி பிழைக்கிறார்.

நாம் இன்னமும் சமுக அந்தஸ்து உள்ள துறைசார் தொழில்களுக்காக, விசாலமாக வளர வேண்டிய எமது அறிவை முடக்கி வைத்திருகின்றோம். ஆனால் டாக்டர் போன்ற தொழில்கள் பொருளாதார பாதுகாப்பானவை. அதாவது மாதாந்த வருமானம் நிச்சயம். அதனால்தான் பெற்றோர்கள் பலர் தம் பிள்ளைகள் டாக்டருக்கு படிக்க வேண்டும் அல்லது டாக்டர் மாப்பிள்ளைக்கு கலியாணம் கட்டி கொடுக்க வேண்டும் என்று நினைகிறார்கள் போலும்.

எங்கள் மூதாதையர் கருத்து: கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு. செய்யும் தொழிலே தெய்வம். தான் தேர்ந்தெடுத்த துறையில் படித்து, அதிலேயே வேலையும் செய்யும்மாப்போல் போல் திருப்தி வேறெங்கும் இல்லை. இந்த அனுபவத்தை சுவாசித்துக்கொன்றே இப்பவும் என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

விசுகு உங்கள் திரியை சரியான பாதையில் எழுதுகிறேனா?

Link to comment
Share on other sites

பூட்டன் ( அம்மம்மாவின் அப்பா) ஆங்கிலேயர் காலத்தில் கொழும்பு வந்து வியாபாரம் ஆரம்பித்தார். அவர் காலத்தில் பம்பலப்பிட்டி வெள்ளவத்தை எல்லாம் காடுகள். பின் பேரன் (அம்மம்மாவின் கணவர்) அவரும் சிறிது காலத்தில் கொழும்பு வந்து வியாபரம் ஆரம்பித்து கொடிகட்டி பறக்க ஆரம்பித்தார்கள். இருவரும் படித்தது மிகச் சொற்பம். 
 
கடந்த 30 வருசத்துக்கு மேல் யாழ்ப்பாணத்திற்கு உணவு மற்றும் ஏனைய பொருட்களை மொத்தமாக அனுப்பிவரும் மிகச் சிலரில் என் உறவினர் ஒருவர். முதன் முதலாக லொறி ஒன்றை வாங்கி கொழும்பில் அம்மம்மா வீட்டில் தான் நிறுத்தியிருந்தார். அம்மம்மா வீட்டில்  நான்கு வாகனத்தரிப்பிடம் உள்ளது. அதை விட வளவும் பெரிசு. இவர் கூட முன்பு ஊரில் எங்கள் உறவினர் வீடு வீடாகச் சென்று பால் விற்றவர். கல்வி அறிவு மிகச் சொற்பம்.  யாழ்ப்பாண உணவு மற்றும் ஏனைய பொருட்களின் வின‌யோகத்தில் 70% மேல் அவர் கையில் இருந்தது.
 
பிற்பாடு யாழ்ப்பாணத்திற்கான தரைவழி போக்குவரத்து தடைப் பட்டபோது கப்பல் மூலம் பொருட்களை அனுப்பும் நிலை தோன்றியது. இந்தக்காலத்தில் தான் மகேஸ்வரன் மேல் வரக் கூடிய சந்தர்ப்பமாக அமைந்தது. மகேஸ்வரனும் படித்தவர் அல்ல. சிங்களம் பழகிய படியால் வியாபரம் செய்யக் கூடியதாக இருந்தது.
 
யாழ் நகரில் இருக்கும் அனேக வியாபார நிலையங்கள் என் ஊரைச் சேர்ந்தவர்கள் ஒரு காலத்தில் நடத்தினார்கள். உடுதுணிகள் சீலை, சைக்கிள், உணவு குறோசரிகள், பார்மசிகள் போன்றவை. அதைவிட  சிங்கள நாட்டின் பல பகுதிகளில் அடைவு கடைகளும் நடத்தினார்கள். இவர்கள் யாருமே படித்தவர்கள் அல்ல.
 
நீர்கொழும்பில் கொச்சிக்கடைப் பகுதியில் எங்கள் ஊர் அயலவர் ஒருவர் வீதி நீளத்திற்கு கடைகள் வைத்திருந்தார். அந்த வீதியின் பெயரே அவர் பெயர் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. 83 கலவரத்தின் பின் ஊர் வந்த போது அவர்கள் குளிக்கச் செல்வது பென்ஸ் காரில் தான். இவரும் படித்தவர் அல்ல. 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு

பாடம் படிக்காத மேதைகளும் பாரில் உண்டு.

 

வெளிநாடுகளில் நிறைய படித்துவிட்டு வியாபாரம் செய்து கோடீர்வரராக இருக்கிறார்கள்.

 

சிலர் கோழி மேய்த்தாலும் கொர்ணமந்தில் மேய்க்க வேண்டும் என்று குறைந்த வளத்துடனே கஸ்டப்பட்டு வாழ்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபையில் படித்தவன் பணக்காரன் என்று முன்னுரிமை அளிப்பது அதிகமாக ஆசிய நாட்டு மக்களின் வழமை.
மேற்கு நாட்டவர்கள் அந்த நிலையில் இருந்து மீண்டு விட்டார்கள்.
நாங்கள் இன்னும் மீழ முயற்சிக்கவில்லை.

 

வாழ்க்கைக்கு படிப்பு உதவுமா ? அதாவது பட்டப்படிப்பு உதவுமா என்றால் இல்லை என்று அடித்துக் கூறலாம்.
பணம் உள்ளவர்களும் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்கள் என்றால்
அதுவும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
அனுபவம் மட்டும் ஒன்றே வாழ்க்கையைச் சீராக்க மனிதர்களுக்கு உதவி நிற்கின்றது.

ஈசன் சொன்னது மாதிரி எத்தனையோ மனிதர்கள் பள்ளிக்கூட அறிவில்லாமலே தங்களைத்  தொழில் சார்ந்து உயரும் அளவிற்கு தொழிலுக்கு முன்னுரிமை அளித்து வாழ்க்கையில் வெற்றி (?)பெற்றிருக்கின்றார்கள். குறை இல்லாத வாழ்க்கை கிடைத்த மனிதர்கள் அரிது.அது படித்தவர்களாக இருக்கலாம். அல்லது பணம் படைத்தவர்களாக இருக்கலாம். நாங்கள் வெற்றி என நினைத்தால் அது எங்களுக்கு வெற்றியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு.. அந்தந்த படலைக்குள்ள இருக்கனும். அதைத் தாண்டி அதை பந்தாவா காட்ட நினைக்கிறது தான் தப்பு.

 

நாங்க படிச்சம் என்றதுக்காக... எந்த வேலையையும் தட்டிக்கழிப்பதில்லை. எது அவசிமோ.. அதை செய்வம்.

 

அடிக்கடி நினைச்சுக் கொள்வது.. படிச்சது கைமண் அளவு. படிக்காதது.. உலக அளவு.  :)

 

படிப்பு பற்றிய எங்கட சொந்த அளவுகோல்..

 

GCE O/L (GCSE) (=primary) ; GCE A/L (AS,A2)(= secondary); Degree (=real O/L).. Masters (=real A/L).. PhD (=real degree)

 

அதோட சின்னனில சொல்லித் தந்திருக்கினம்.. தம்பி கரடியா இருந்துக்கப்பு.. வெளவாலா இருந்துக்காத என்று.

 

கரடி.. தனக்கு எதிரே உள்ளவரின் பலத்துக்கு அதிகமாக பலத்தை பிரயோகிக்காதாம்.

 

வெளவால்..  திண்றதை கண்ட இடத்திலும் கக்கி அசிங்கப்படுத்திடும். படிப்பு.. பிரயோகிக்க வேண்டிய இடத்தில் பிரயோகித்தால் தான்.. அதுக்கு சிறப்பு பயன். அதை கண்ட இடத்திலும் பந்தாவுக்கு கக்க வெளிக்கிட்டா வெளவால் நிலை தான்.

 

இன்னொன்று சொல்லி தந்திருக்காங்க.. ஊருடன் கூடி வாழ்... குரங்குக்கு வாழ்கைப்பட்டா.. தாவத் தெரிஞ்சிருக்கனும் என்று. படிப்பு... படிப்புன்னு நின்றுகிட்டா.. வயிறு தாங்காது. அதுக்கு உழைக்க எது நியாயமோ.. எது சாத்தியமோ.. அதைச் செய்து பிழைச்சிடனும். வெட்கப்படக் கூடாது. கூச்சப்படக் கூடாது. செரியா. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் தான் முக்கிய குறிக்கோள் ...அந்த பணத்தை நேர்மையாக பெறுவதற்க்கு (80%) பட்டத்தை நம்புகிறார்கள்.....பலருக்கு அவர்கள் தெரிவுசெய்த பட்டப்படிப்புக்கள் கை கொடுத்துள்ளன ...சிலருக்கு வேதனையை தான் கொடுத்துள்ளது....அரசாங்கம் சகல பிரஜைகளுக்கும் ஒரே வகையான சம்பளம் கொடுக்குமென்றால் ஒருத்தரும் பாடசாலைக்கு செல்லமாட்டார்கள்

 

 

பணம் தான் குறிக்கோள் என்றால்  எதற்கு

5 வருடம்

8 வருடம் என்று யூனியில் படிக்கணும்

சாதாரண வகுப்புடன் நிறுத்திவிட்டு வேலைக்கு போகத்தொடங்கினால்

பணம் சேர்க்கலாமே..

 

அத்துடன்

நீங்கள் சொல்வது போல் அரசு ஒரே சம்பளத்தை எல்லோருக்கும் கொடுத்தால்...

 

அதற்கு நல்லதொரு உதாரணம் பிரெஞ்சு அரசு.

இவர்களது காலணி ஆட்சி நடந்த இடங்களில் இவ்வாறு செய்தார்கள்

அத்துடன் பிறக்கும் பிள்ளைகளுக்கும் பணம் கொடுத்தார்கள்

விளைவு படிக்காத ஒரு சமூகம் உருவாகிவிட்டது

அது பிரெஞ்சு அரசுக்கு தேவைப்பட்டது

படித்தால் தானே சிந்திப்பான்

கேள்வி கேட்பான்...

 

ஆனால் இதற்கு இன்னொரு பக்கமிருக்கு

எல்லோருக்கும் ஒரே சம்பளம் என்றாலும்

ஒருவரிலிருந்து தான் உயர்ந்தவன் எனக்காட்டத்தான் மனிதர்கள் முயல்வார்கள்..

அந்தவகையில் ஆபிரிக்கர்களுடன் அதிகம் பழகுவதால்

அவர்களுள் சிலருக்கு ஒன்று இரண்டு என கணக்குப்பார்க்கத்தெரிந்தாலே

அவர் ஒரு தனி...............வழியெடுப்பார்... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பணம் அவசியம். பணத்தை பல வழிகளில் சம்பாதிக்கலாம் ஆனால் அதை மனேஜ் பண்ண அறிவு தேவை. எங்கடை அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பணத்தையே தினமும் நாம் வங்கிகளில், கிரெடிட் மட்டைகளில் பார்கின்றோம். மீதமுள்ள பணம் எங்கே?, அந்தக் காலம் என்றால் பணம் பெருக்க வட்டிக்கு போயிருக்கும். இப்ப முதலீட்டு வங்கி அல்லது பங்கு சந்தையில் எழுத்து வடிவில் (1/0) பணத்தை பெருக்கும். திறமை இருந்தால் இந்தப் பணத்தை சரியான நேரத்தில் சரியான இடத்தில முதலீடு செய்தால் அதை பல மடங்கு பெருக்கலாம்.

இதில் கடை காரன், டாக்டர், பொறியியலாளர், கணக்காளர் எனப் பலர் முதலிடுகிறார்கள். ஒரு முக்கிய விடயம் எந்தத் துறையில் உழைத்தாலும், செலவுகள் போக மிஞ்சும் காசுதான் பணத்தை பெருக்கும். எல்லாத் துறைகளிலும் ஓரளவு காசு மிச்சம் பிடிக்கலாம் (அளவு மாறலாம்), அந்த மிச்சம் பிடித்த காசை பல மடங்கு ஆக்குவனே பணக் காரன் ஆகிறான். இங்கு தேவையானது எல்லாம் தகவலும் அதை சரியான நேரத்தில் பயன்படுத்துவதே.

ஒரு படத்தில் செந்தில் பிச்சைக்கார சாமி, கையில் ஒரு குறிப்பு புத்தகம். கோவில் மடத்தில் இருந்த படியே தினமும் உணவை வரவழைத்து சாப்பிடுவார். அந்தப் புத்தகத்தில் எந்தெந்த கோவில்களில் எந்த நாட்களில் உணவு கொடுப்பார்கள் என்ற தகவல் இருக்கும். எடுத்துவரும் பயனுக்கும் அவருக்கும் தினமும் அன்னம் கிடைக்கிறது. இங்கு தகவலும் அதை சரியான நேரத்தில் உபயோகப் படுத்தும் செந்தில் அறிவைப் பயன்படுத்தி பிழைக்கிறார்.

நாம் இன்னமும் சமுக அந்தஸ்து உள்ள துறைசார் தொழில்களுக்காக, விசாலமாக வளர வேண்டிய எமது அறிவை முடக்கி வைத்திருகின்றோம். ஆனால்

டாக்டர் போன்ற தொழில்கள் பொருளாதார பாதுகாப்பானவை. அதாவது மாதாந்த வருமானம் நிச்சயம். அதனால்தான் பெற்றோர்கள் பலர் தம் பிள்ளைகள் டாக்டருக்கு படிக்க வேண்டும் அல்லது டாக்டர் மாப்பிள்ளைக்கு கலியாணம் கட்டி கொடுக்க வேண்டும் என்று நினைகிறார்கள் போலும்.

எங்கள் மூதாதையர் கருத்து: கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு. செய்யும் தொழிலே தெய்வம். தான் தேர்ந்தெடுத்த துறையில் படித்து, அதிலேயே வேலையும் செய்யும்மாப்போல் போல் திருப்தி வேறெங்கும் இல்லை. இந்த அனுபவத்தை சுவாசித்துக்கொன்றே இப்பவும் என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

விசுகு உங்கள் திரியை சரியான பாதையில் எழுதுகிறேனா?

 

 

மிகச்சரியாக புரிந்து கொண்டிருக்கின்றீர்கள்..

 

வைத்தியர்துறை என்பது ஒருவித உத்தரவாதம் தருவதாகும்

ஒருவர் படித்து வைத்தியராகிவிட்டால்

சாகும்வரை ஏன் செத்தபின்பும் அவர் வைத்தியர்தான்...

அதேநேரம் வைத்தியருக்கு படித்த ஒருவர் வேலையில்லாது இருந்ததுமில்லை

பிரான்சிலும் வைத்தியர்களுக்கு தட்டுப்பாடுண்டு

காரணம் மாணவர்கள் அதிக காலப்படிப்பையும்

நிச்சயமாக இலக்கை அடைவோமா என்ற சந்தேகத்திலும் வைத்தியத்துறையை  தவிர்க்கின்றனர்..

 

இதே  உத்தரவாதமும் மதிப்பும் பொறியியலாளர்களுக்கும் இருந்தது

தற்பொழுது 

அதில்  ஏற்பட்ட பெருக்கம் 

அதனை சற்று மதிப்பற்றதாக

அல்லது பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளது போல் தெரிகிறது..

அது பற்றி அதில் படித்து வேலை செய்யும் உறவுகள் சொன்னால் தான் சரியாக இருக்கும்...

தொடரலாம்....

Link to comment
Share on other sites

அதற்கு நல்லதொரு உதாரணம் பிரெஞ்சு அரசு.

இவர்களது காலணி ஆட்சி நடந்த இடங்களில் இவ்வாறு செய்தார்கள்-விசுகு 

 

சற்று விளக்கமாக எந்தெந்த நாடுகளில் என்று உதாரணமும் தந்தால் உதவியாக இருக்கும் .

 

படிக்காமல் உழைக்கலாம் என்று எவரும் எழுதவில்லை என்றே நினைக்கின்றேன் .The Wolf of Wall Street பார்த்தபின் தமது மிடில் கிளாஸ் மாதவன் வாழ்கையை பற்றித்தான் எழுதினார்கள் .

நன்றாக படித்து ஒரு நிரந்தர வேலையில் நிரந்தர வருமானத்தில் வாழவே பெரும்பான்மையானவர்கள் விரும்புகின்றார்கள் . அதுதான் பாதுகாப்பான வாழ்க்கையும் கூட .இவர்களில் பலர் மிக வசதியாக வாழ்ந்தாலும் உச்சத்திற்கு போகின்றவர்கள் மிக குறைவு . 

மற்றப்படி ரிஸ்க் எடுத்து செய்ய நினைக்கும் தொழில்கள் உச்சத்திற்கும் கொண்டு போகும் இல்லை குப்பிற விழுத்தியும் விடும் .அது அவரவர் கெட்டிதனத்திலும் பிரையாசையிலும் அதிஸ்டத்திலும் தங்கியுள்ளது .அனேக மல்டி மில்லியனர்கள் இந்த பிரிவிற்குள் தான் வருவார்கள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
படித்தவருக்கும் பாமரருக்கும் குறிக்கோள் பணம்தான்.
அதை அவரவர் சம்பந்தப்பட்ட துறைகளில் சிரமப்பட்டோ அல்லேல் சுலபமாகவோ சம்பாதிக்கின்றார்கள்.
 
எமது ஊர்களில் பரவலாக ஒரு சில நற்சிந்தனைகள் என்னவென்றால் ஒருவர் சரளமாக ஆங்கிலம் கதைத்தால் அவர் கனக்க படித்தவர்/எஞ்சினியர்/டொக்டர்/எக்கவுண்டன்/அப்புக்காத்து/பெரியவாத்தியார் என்றொரு  நிலையில் இருப்பார்கள். இதே சிந்தனையில் அந்த பெரியவர்களின் பிள்ளைகளும் தொடர்கின்றார்கள்.
 
படிக்காதவன் ஒன்றும் தெரியாதவன் எனப்படும் ஒருவன் இங்கிலாந்திற்கு வந்து கைப்பாசை கதைத்து பின்னர் காலம்போகப்போக சரளமாக ஆங்கிலம் கதைத்து......ஓரளவு உயர் நிலைக்கு வந்து விடுகின்றான்.
இது பல மேட்டுக்குடிகளுக்கு தாங்கமுடியா அவமானங்கள். இஞ்சை பார் அங்கை ஒரு பிடி சோத்துக்கும் வழியில்லாததுகள்....என அவர்களின் விளிப்புரை வேறு விடயம்.
 
மேலைநாடுகளில் என்ன படிப்பு படித்தாய் என்பதை விட வேலைசெய்கின்றாயா என்பதுதான் முக்கியம். :icon_idea:  :icon_idea:
 
Link to comment
Share on other sites

 
படிக்காதவன் ஒன்றும் தெரியாதவன் எனப்படும் ஒருவன் இங்கிலாந்திற்கு வந்து கைப்பாசை கதைத்து பின்னர் காலம்போகப்போக சரளமாக ஆங்கிலம் கதைத்து......ஓரளவு உயர் நிலைக்கு வந்து விடுகின்றான்.
இது பல மேட்டுக்குடிகளுக்கு தாங்கமுடியா அவமானங்கள். இஞ்சை பார் அங்கை ஒரு பிடி சோத்துக்கும் வழியில்லாததுகள்....என அவர்களின் விளிப்புரை வேறு விடயம்.
 
மேலைநாடுகளில் என்ன படிப்பு படித்தாய் என்பதை விட வேலைசெய்கின்றாயா என்பதுதான் முக்கியம். :icon_idea:  :icon_idea:

 

 

மிக்க சரி கு. சா

 

பிறர் வாழ பொறுக்காத எம்மவருக்கு என்ன மருந்து ? அடுத்த தலைமுறை யாவது இதில் இருந்து மீளடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த படிப்பாக இருந்தாலும் கற்ற கல்வியை மூலதனமாக வைத்து செல்வம் ஈட்டுவதே குறிக்கோள். சிலருக்கு கற்க வாய்ப்பு சரியாக அமைகிறது..சிலருக்கு அமைவதில்லை..

 

கற்ற கல்வி ஏணியின் மூலம் உலக சந்தையில் பொருளீட்டும் சந்தையை & வாய்ப்புக்களை சற்று விசாலமாக பார்க்க இயலுகின்றது.  நேர்வழியில் நிச்சயம் சம்பாதிக்க முடியும் என்ற துடிப்பிலும் கற்றுக்கொண்டே இருந்ததில், ஒருநாள் அதற்கு உரிய பலனும் கிட்டியது..என்னை இங்கே  கரை சேர்த்தது..

கற்காமலும் பொருளீட்ட முடியும், அதிர்ஷ்ட தேவதை அருளும் இருந்தால்.. !

 

ஆனால் கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பதில் உண்மையில்லாமலில்லை.. கற்ற மூளையை எப்படி சந்தையில் புத்திசாதுர்யமாக பயன்படுத்தி மேலெழுகிறோம் என்பதில் தான் ஒவ்வொருத்தரின் திறமை. என்னுடன் படித்த பொறியாளர்கள் சிலர் செக்கு மாடுகள் போல் அரசாங்கத்தில் உழல, சிலர் மேலும் படித்து சந்தையை சரியாக பயன்படுத்தி மிகச் சிறந்த தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.. ஒரே படிப்பு படித்தாலும், கற்றதை பயன்படுத்தியதில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை இன்றும் காண முடிகிறது..

Link to comment
Share on other sites

படிப்பு நிரந்தர வருமானத்திற்கு உதவுகிறது - உண்மை

எந்தச் சமூகத்திலும் உயர்வாகப் பார்க்கப்படுகிறது - உண்மை

ஆனால் படிப்பு இருப்பதால் மட்டும் அறிவு அல்லது ஞானம் இருப்பதாகக் கருத முடியாது. முனைவர் பட்டம் பெற்ற ஒருவர்கூட வேலையை விட்டு அகற்றப்பட்டதையும் கண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது முக்கியமானதுதான். ஆனால் சிலரால் தொடர்ந்தும் கற்க முடியாமல் தடைகள் ஏற்பட, பலரும் கற்று  முடிக்கும் சூழல் எமது நாட்டை விட  நாம் புலம் பெயர்ந்த நாடுகளில் நூறு வீதம் உத்தரவாதம் என்று கூறலாம். ஆனாலும் படித்தவர்கள் எல்லோரும் பண்புள்ளவர்களாகவோ, மூளை உள்ளவர்களாகவோ, தந்திரசாலிகளாகவோ இருப்பதில்லை. அத்துடன் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல படித்தவர்கள் தம் வாழ்வை உயர்த்திக் கொண்டாலும் படிக்காத பலரும் கூட அந்த நிலையை எட்டியபடி இருக்கிறார்கள். ஆனபடியால் கல்வி மட்டுமே ஒருவரின் நிலையை உயர்த்துவதர்க்கு காரணமாகாது. அவரின் முயற்சியும் நிட்சயம் வேண்டும். கற்றவர் நாம் என்னும் தலைக்கனம் ஒருவரிடம் இருக்குமானால் நிட்சயமாக ஒரு குறிப்பிட்ட எல்லை தாண்டிச் செல்ல முடியாது. கல்வி அறிவு அதிகம் அற்றவர்கள் தான் சில வேளைகளில் மிகப் பெரிய விடயத்தையும் இலகுவாகக் கையாள்வதைப் பார்த்துள்ளேன். எமது இனத்தில் உள்ள பொறாமைக் குணம் தான் ஒரு உயர்ந்த நிலையில் இருப்பவரை கல்வி என்னும் ஆயுதத்தைக் காட்டிக் கீழே தள்ள முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் எனது படிப்பு (இலங்கையில் பெற்றுக்கொண்டது) என்னை அவுஸ்த்திரேலியாவுக்கு Skilled Migration இல் வருவதற்கு மட்டுமே பயன்பட்டது. வேலை தேடியபோதெல்லாம் இலங்கைப் பட்டம் என்பதை அவர்கள் கணக்கிலேகூட எடுக்கவில்லை. எல்லாமே சிறுபுள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. ஆனால் வேலைத்தளத்தில் முன்னேறுவதற்கு எங்களின் கடிண உழைப்பும், படித்த படிப்பின பாவித்த முறையுமே காரணமாயிற்று என்றால் மிகையாகாது. 

 

இன்றும்கூட Promotion என்று வரும்போது தங்கள் நாட்டவர்களுக்குத்தான் (அவர்கள் எம்மை விடப் படிப்பில் குறைந்தவர்களாக இருந்தாலும் கூட) முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதற்கான காரணத்தை அவர்களால் வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை. ஒரு சிலர் மட்டும், "உங்களுக்கு எங்களின் ஆங்கில உச்சரிப்பு சரியாக வராது, எங்களின் சமூக வாழ்வுபற்றி உங்களுக்கு இன்னும் பரீட்சயம் வேண்டும்" என்று ஏதேதோ சொல்லி மழுப்புவார்கள். இனவாதமும் ஒரு சிறு காரணமாக இருக்கலாம். 

 

சிலவேளை இந்த சிக்கல் எங்களின் இரண்டாவது சந்ததியினர்க்கு இல்லாமலிருக்கலாம். பார்ப்போம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D நானும் சிலரும் எழுதிய கருத்துகள் "படிப்பு பயனற்றது" என்ற தவறான புரிதலை ஏற்படுத்தி இருப்பது போல படுகிறது. உண்மையில் அதுவல்ல நான் சொல்ல வந்தது! ஒரு துறையில் ஆழக் கற்றவர்கள் அள்ளு கொள்ளையாகப் பணம் ஈட்ட முடியாமல் இருக்கும் நிலை எல்லாத் துறைகளிலும் இருக்கும் நிலை தான். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இதைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம், அடுத்த மாதம் நேரம் வரும் போது செய்வேன்.

 

சுருக்கமாக நாம் கேட்க வேண்டிய கேள்விகள் "ஆழக் கற்பது  மில்லியனராக மட்டும் தானா?"  பணம் பெரிதாக ஈட்ட முடியாவிட்டால் ஒரு துறையின் மீதுள்ள காதலைத் துறந்து விட மனம் வருமா?". இதற்குப் பல பதில்களை எங்கள் வாழ்க்கைத் தெரிவுகளுக்கேற்ப நாம் கண்டு பிடிக்கலாம். என்னைக் கேட்டால், என் துறைத் தெரிவு ஆய்வுத் தொழில் தொடர்பாக எதையும் நான் மாற்ற விரும்ப மாட்டேன். இதற்குப் பிரதான காரணம் இது எனக்குப் பிடித்த வேலை, தனிப் பட்ட சுதந்திரம் நிறைய உள்ள தொழில், ஒவ்வொரு நாளும் வித்தியாசமானது... எனக்கு அதிசய உலகங்களைக் காட்டி,  இவ்வளவு தூரம் கொண்டு வந்ததால் என் முறை சார் கல்வி எனக்கு மில்லியன் டொலரை விடப்பெறுமதியானது என்று நினைக்கிறேன். "இவர் ஒன்றும் சாதிக்கவில்லை, அதனால் இவரின் முறை சார் கல்வி பயனற்றது" என்று யாராவது நினைத்தால் கவலைப் படும் வயதும் எனக்கு இல்லை! :D

Link to comment
Share on other sites

படிப்பும் பட்டங்களும் தொழில்ரீதியாகவும் சமுதாய அந்தஸ்திற்காகவுமே ஆசியநாடுகளில் தவமிருந்து படிக்கின்றார்கள்.

நல்ல எண்ணங்கள் இல்லாத கல்வி தனிநபர் வாழ்க்கைக்கும் பல சந்தர்ப்பங்களில் உதவிசெய்யாமல் போனதுண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.