Jump to content

சிறு வயதுக்காதல் -- இப்ப வேண்டாமே..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதுக்காதல் -- இப்ப வேண்டாமே..

 

இளம் வயசில் ஆயிரம் பூக்கள் பூக்கும்

அப்படித்தான் காதலுமா?

யாருக்குத்தெரியும்

அதை காதல் என்பதா?

உணர்வா?

காமமா?....

இன்றும் தெரியவில்லை...

 

இப்படித்தான் அவளுக்கும் எனக்கும் ஒரு இது இருந்தது...

பகிடி விடுவது

நக்கலடிப்பது

நுள்ளப்போவது (தொட்டது கிடையாது)

 

இப்படித்தான் நேரம் போச்சு..

ஒரு நாள் கேட்டாள்

என்னை  பிடிச்சிருக்கா.....?

பதில் சொல்லவரவில்லை

அதற்கு நான் தயாரில்லை........

அதை நான் எதிர்பார்க்கவுமில்லை.....

 

 

ஒன்றும் சொல்லாது  விலகிச்சென்று விட்டேன்

வீட்டுக்கு போன எனக்கு இதே யோசனை...

 

அவளுக்கும் எனக்கும் ஒரே வயசு

நான் படித்து முடித்து வர......??

ஆனால் அவளைப்பிடித்திருந்தது

அதேநேரம் எனக்காக இன்னும் குறைந்தது 10 வருடங்களாவது காக்கணும்

அதற்கு அவளவு குடும்பநிலை இடம் தராது..

 

ஆனால் ஒன்று மட்டும் அன்று தெரிந்திருக்கவில்லை

அவள் எதற்கு தானே அவசரமாக இதைக்கேட்டாள் என்று...??

தொடரும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசுகர்!.... நுள்ள போனீர்களா?  z49.gif:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆனால் ஒன்று மட்டும் அன்று தெரிந்திருக்கவில்லை அவள் எதற்கு தானே அவசரமாக இதைக்கேட்டாள் என்று...??
உங்களுக்கு அவள் மேல் வந்த கவர்ச்சி போன்று அவளுக்கும் உங்கள் மீது ஒரு கவர்ச்சி வந்திருக்கும்......அதுதான் அப்படி கேட்டிருப்பாள்(ர்) தொடரட்டும் ...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவவின் காதலுக்கு கண் இல்லை பட்டென்று கேட்டுட்டா...!

 

உங்களின் காதலுக்கு , லுக்கு இருந்திருக்கு.... அதுதான் படிப்புக்கு 10 வருடம், குடும்ப நலவரம் எல்லாம்  70 எம் . எம் . மில் விரிஞ்சிருக்கு...!!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒன்று மட்டும் அன்று தெரிந்திருக்கவில்லை

அவள் எதற்கு தானே அவசரமாக இதைக்கேட்டாள் என்று...??

தொடரும்....

 
அடுத்த நாள் விடிய நேரத்துக்கு எழும்பி
எனது நண்பரிடம் சென்று விசயத்தை சொன்னேன்..
(அவர் நண்பர் என்பதற்கு அப்பால் எனது ஒன்றுவிட்ட அண்ணர்.  யாழ்ப்பாணத்தில் கடை வைத்திருந்தார். 
என் மீது ரொம்ப பாசம். என் மீது தூசி படவும் விடமாட்டார். நான் என்ன ஆசைப்பட்டாலும் வாங்கித்தருவார். )
அவர் சொன்னது  இன்று இரவு அவளவு வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோயில் திருவிழாவுக்கு வரச்சொல்லி
பனைகள் உள்ள இடத்துக்கு கூட்டிக்கொண்டு   போய் அலுவலைக்கொடுத்திடு என்று....
 
நண்பர்கள் என்றாலே எம்மீது இவ்வாறு தான் அன்பு வைக்கிறார்கள்.
இது போன்று தான் வழி காட்டுகிறார்கள்
இதுவும் ஒருவித பாசமா? இதுவரை புரியாதது இதுவும் தான்.
இப்போ நம்ம தம்பி  சுண்டல் வந்து
இவ்வாறு தான் சொல்வார்... :icon_mrgreen:
 
அவர் இவ்வாறு சொன்னதும்
வயதுக்கோளாறோ என்னமோ
சிறகுகள் முளைத்தது போலவும்
வானத்தில் பஞ்சு போல பறப்பது போலவும்
இன்று இரவு வேறு ஒரு உலகத்தை தரிசிக்க இருப்பது   போலவும்
பறக்க ஆரம்பித்தேன்..
உடம்பில் ஒரு முறுக்கும் மிடுக்கும் வந்தது தெரிந்தது..
அவரிடமிருந்து விலகும் போது
இன்றிரவு போவது என்ற முடிவோடுதான் புறப்பட்டேன்...
 
அநேகமாக கதை எழுதுவோர் இவ்விடத்தில் தொடரும்  போடுவார்கள்...
வாசகரின் கற்பனையைத்தூண்டுவது..
கண்டபடி நினைக்கவைப்பது..
 
நான் நிச்சயம் அதைச்செய்யமாட்டேன்
காரணம் அவள் மீது ஒரு தூசி  படக்கூடாது என இன்றும் நினைக்கின்றேன்....
 
வீட்டுக்கு திரும்ப  வரவர
மனம் குரங்கிலிருந்து இறங்க ஆரம்பித்திருந்தது....
நன்றாக யோசித்தேன்
மனம் இரண்டு முடிவுகளைத்தந்தது
1- போகாதே
2- போனால் தொட்டால் ...கட்டுவேன் என்ற முடிவெடுத்துப்போ..
 
இரண்டாவதே முடிவானது
போகவில்லை...
அன்றிலிருந்து அவளைப்பார்ப்பதை தவிர்க்கத்தொடங்கினேன்............
தொடரும்....
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா தொடவில்லையே ....ச்சே கதை சப்பின்டு போயிட்டுது.....தொடருங்கள் தொடுதலை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இரண்டாவதே முடிவானது
போகவில்லை...
அன்றிலிருந்து அவளைப்பார்ப்பதை தவிர்க்கத்தொடங்கினேன்............
தொடரும்....
 
தவிர்க்கத்தொடங்கியதற்கு இன்னுமொரு காரணமுண்டு..
நண்பர்கள் சிலருடன்   பேசியபோது
என்னையும் அவளையும் இணைத்து ஏற்கனவே ஒரு கதை ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது
அது எனது குடும்பத்தார் வரை தெரிந்தும் இருந்தது....
சின்ன வயது 
அல்லது சிறுபிள்ளை விளையாட்டு என்று நினைத்தார்களோ என்னவோ
என்னோடு எதுவும் பேசவில்லை...
 
அப்படியே
படிப்பு
வகுப்பில் பெட்டைகளுடன் பகிடி
தனகல்
நுள்ளல் என எனது காலம் வேறு ஒரு பக்கமாக   போகத்தொடங்கியது..
 
இடைக்கிடை அவள் பற்றிய செய்திகள் காதுக்கு எட்டும்....
கடைசியாக வந்தது
அவள் திருமணம் முற்றாகி வெளிநாடு போய்விட்டாள் என்று.
ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும்
கொஞ்சம் வலித்தது
காரணம் அவருக்கு அதிக வயசு
குடிகாரர்.....
இவர் தான் வேண்டும் என்று கேட்டு வெளிநாட்டுக்கு அழைத்தாராம்....
 
காலப்போக்கில் எல்லாம் மறைந்து போனாலும் 
இடைக்கிடை அவள் பற்றிய செய்திகள் காதுக்கு எட்டும்.
நன்றாக இருக்கிறார் என்ற செய்திகள் தான் வரும்
நிம்மதி......
 
83 கலவரத்தால் பாதிக்கப்பட்டு நானும் வெளிநாடு புறப்படும் போது
மீண்டும் வந்தது
அவர் வாழ்ந்த நாட்டின் ஊடாக
அவரது வீட்டுக்கு  போய்
அவரது உதவியினால் தான் எமது உறவுகள் எல்லோரும்  வெளிநாடுகளுக்கு வந்து கொண்டிருந்தநிலையில்
எனக்கும் அப்படியொரு ஒழுங்கு செய்தார்கள்
மறுத்துவிட்டேன்
அதேநேரம் பிடியும் கொடுக்கக்கூடாது
இதைத்தவிர்ப்பதற்காக
அகதி முகாம் என்றும்
குளிரும் மழையும் என நான் பட்ட வேதனைகள் கொஞ்சம் அதிகம் தான்..
இருந்தாலும் இந்த அவதி பரவாயில்லை என்று தான்  தோன்றியது..
 
அப்புறம் சந்திப்பு என்று ஒன்று  உண்டல்லவா...
அத்துடன் முடியும்..
இப்ப நேரமின்மையால் தொடரும்...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா. நானும் எதோ முடித்துப்போட்டுத்தான் நிறுத்துவீர்கள் என்று நினைத்தால் இடையில் நிறுத்திவிட்டு .......... சரி நேரம் கிடைத்தால் மிகுதியையும் இன்றே எழுதி முடியுங்கள் :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருடங்கள் ஓடின

நானும் திருமணமாகி கிளை பரப்பி  வளர்ந்திருந்தேன்.....

அவருக்கும் பிள்ளைகள் வளர்ந்து

படிப்புக்கருதி கணவர் அங்கேயே இருக்க

பிள்ளைகளுடன் நாடு மாறியிருந்தார்....

பிள்ளைகள் கொஞ்சம் குளப்படி அப்படி இப்படி என கேள்விப்பட்டேன்...

 

ஒரு பெரிய மனிதரின் இறப்புக்காக அவரது  நாட்டுக்கு  போகவேண்டிவந்தது

சொந்தக்காரர் அல்ல என்பதால் இவரது வருகையை  எதிர்பார்க்கவில்லை...

 

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப்பின் அங்கு கண்டேன்

ஓடி வந்தார்

25 வருடத்தில் அவரில் பெரிதாக மாற்றெமெதுவுமில்லை

பக்கத்தில் வந்ததும் கண்ணைப்பார்த்தேன்

கலங்கியிருந்தது

அந்தக்கண்கள் ஆயிரம் கேள்விகள் கேட்டன...

அந்த பார்வைக்கு பதில் சொல்லமுடியாது

அதற்கு அத்தனை வலிமை

தண்ணி அடிப்பவனாக இருந்தால்

அவ்வளவு தான்........

 

கிட்டத்தட்ட 6 மணி நேரம் அந்த இடத்தில் நின்றேன்

அதிகம் பேசவில்லை

பேச எதுவும் இல்லை

பேசித்தான் என்ன.....?

என்னுடனேயே நின்றார்

.

கொடுமையான சந்திப்பு அது

ஒருவாறு விடை பெற்று வந்தேன்..

 

வழியில் என்னுடன் சேர்ந்து வந்த நண்பன் கேட்டான்

என்ன பழைய ....... ? என

இல்லை சிறிய வயதிலிருந்து தெரியும் என மழுப்பினேன்...

அவன் நம்பியிருக்கமாட்டான் என்று தெரியும்...

 

 

வந்ததும் மனைவியிடம் விடயத்தை சொன்னேன்..

அவருக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும் என்பதால்  எப்படியுள்ளா?

பிள்ளைகள் என்ன செய்கிறார்களாம் என்ற வழமைக்கேள்வியுடன் சரி...

எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்..

யாவும் கற்பனை

முற்றும்...

 

இதை இங்கு எழுத காரணமான ரகுவுக்கு  நன்றிகள்.

இதை எழுதவேண்டாம் எனத்தான் நேற்றுவரை நினைத்திருந்தேன்.

ஆனால் நான் அடிக்கடி இங்கு  சொல்லவதுண்டு

கட்டையில் என்னுடன் சிலதுகள்  போகும் என்று..

சரி

இது அதிலொன்று யாழில் இருக்கட்டுமே  சாட்சியாக..

நன்றி.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மனம் கொஞ்சம் இலேசாகி இருக்கும் அண்ணா. எமக்காக விதிக்கப்பட்டிருப்பதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது என்பது மட்டும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மட்டுந்தானா அல்லது இன்னும் இருக்கா?
தொடர்ந்து எழுதுங்கள் விசுகு அண்ணா
வாசிக்க நன்றாக  இருக்கின்றது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா தொடவில்லையே ....ச்சே கதை சப்பின்டு போயிட்டுது.....தொடருங்கள் தொடுதலை :D

 

இதுக்கு 2  பேர் பச்சை போட்டிருக்கிறார்கள்..

ஒன்றுமே புரியலே உலகத்திலே..... :lol:  :D

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஞாபகப் பூக்கள் பூத்துக் குலுங்கும் காலம் இதுபோலும். அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே என்றொரு பாட்டு நினைவுக்கு வருகுது. விசுகு நல்ல அழகாக ஞாபகச்சிறகை விரித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த நாள் பசுமையான ஞாபகங்கள் உங்களிடம் அலை மோதுகின்றனவே விசுகு அண்ணா .

மிகவும் சுவாரசியமாக எழுதியிருந்தீர்கள் . உங்கள் மற்றைய காதல் அனுபவங்களையும் எங்களுடன் பகிருங்களேன் .  :wub: நன்றி

Link to comment
Share on other sites

அனுபவங்கள் எழுத்தையும் உயிர்ப்புடன் விரித்தன!

 

அது சரி.. பிறகேன் 'யாவும் கற்பனை' என்றொரு வசனம்!!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையோ பொய்யோ கதாசிரியர் தன்னுடைய பெயரைக் கெடுக்காதவண்ணம் எழுதியிருக்கிறார்.

 

 

அண்ணா இதெல்லாம் காதலே அல்ல.. யஸ்ட் ஒரு சம்பவம் அல்லது ஒரு உரையாடல் அவ்வளவே.... உங்களுக்கு அவர் திருமணம் செய்தபோது வலித்தது என்று எழுதியுள்ளீர்கள் அது காதலின் அடையாளம் அல்ல ஒரு மனிதாபிமான ரீதியான இரக்கம் மட்டுமே... அத்தோடு இல்லாத ஒன்றை வெளிப்படையாக எழுதும்போது சில தரவுகளை கொடுப்பதை தவிர்த்திருக்கலாம். உங்களை நன்கு அறிந்தவர்கள் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நபரை அறிய வாய்ப்பளித்துள்ளீர்கள். பெண்ணின் பார்வை உங்களைப்பாதித்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள்..... இயல்பாகவே பெண்களின் பார்வை ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கவரக்கூடியது. உங்கள் மனதிற்குள் உங்களுடன் பேசியவள் என்ற நினைவு விட்டகுறை தொட்டகுறையாகத் தேங்கிக் கிடந்ததனால் அக்கணம் அவையே உங்கள் மனதை வியாபித்திருக்கக்கூடும் .......... அசைபோடல் எழுத்தாக பரிணமித்திருக்கிறது. வாழ்த்துக்கள் அண்ணா. :rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதுகிறீர்கள். உங்களின் மற்றைய ஆக்கங்களை நேரம் கிடைக்கும்போது வாசிப்பேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.