Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரக்கத்தனமானது அல்ல உன் முகம்

அன்பு கலந்த குறுநகைப்பார்வை உனது

வாய்ச்சொல்லில் வீரன் அல்ல ஆனால்

வாய்மை தவறாமல் பேசுவதில் வல்லவன் நீ

சினந்து கொள்வதில் மன்னன் நீ ஆனால்

சினக்காமல் கருமமாற்றுவதில் தொண்டன் நீ

கனவினை நிஜமாக்கி நனவினை கற்பனையாய்

கவி சொற்களுடனே கவிதையாக்குவதில் கவிஞன் நீ

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

நீ என்ன செய்கிறாய் அம்மா...

சாப்பிட்டாயா....

பேசும்போது இருமிக்கொண்டிருந்தாயாமே...

பெற்றவர் நால்வரையும்

நாடொன்றிற்காக அனுப்பிவைத்துவிட்டு..

ஆதரவிற்கும் பணிவிடைக்கும்..

ஆளில்லாமல் அல்லலுறுகிறாயா அம்மா...

எந்தத் துயரையும் தாங்கி...

எதிர்நீச்சல் போடும் என் தாயே..

உன்னையும் முதுமையின்

இயலாமை சூழ்ந்து கொண்டதா அம்மா...

வறுமை வாட்டிய காலங்களில்

உன் கடைசிக்குழந்தை எனக்காய்..

எங்காவது அலைந்து

ஏதாவது உணவு தேடி

என்னைக் காத்த அம்மா..

உன் வயோதிப எல்லையில்

உன்னைக் தாங்க முடியாமல்

ஆனானே அம்மா..

வருந்தாமல் இரு என்று

நீ சொன்னாலும்..

ஓடும் இரத்தம் உன்னதுதானே...

அது அழுகின்றது...

இங்கே துடிக்கும் இதயம் உன்னுதுதானே

அது தவிக்கின்றது..

என் எண்ணமும் நடத்தையின்

உன்போல்தானே...அன்பால் வாடுகிறது...

அம்மா.. உலகின் அன்பு தெய்வமே...

என்ன செய்கிறாய் அம்மா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா.. உலகின் அன்பு தெய்வமே...

என்ன செய்கிறாய் அம்மா..

Link to comment
Share on other sites

சுமப்பேன் என்று சொன்னாலும்....

சுமந்தே நடந்து போகயில்..

வலிகள் முளைத்து வாட்ட...

நம்பிக்கையும் நெஞ்சுரமும்..

நடையின் வேகம் போல குறைந்து செல்ல...

சுரீரென விழுந்த பிரம்படியால்...

இறுகிய கால்களால்...அழுக்குத்துணியோட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் புது வேகம்

இணைந்திருக்கும் பொழுதுகளிலும்

இதயத்துடிப்பிலும் வேகம்

சின்னதாய் காட்டும் அன்பிலும்

பின்னி பின்னி மெழுகாய் கரையும்

மனதிலும் வேகம்

வெறுமைகள் விழுங்கித்

தவிக்கும் மனதிலும் வேகம்

வேகமிங்கே தேடல்களாக

தேடல்களே தேவைகளாக

தேயாமல் இருக்கும்

இதயத்தின் எதிர்பார்ப்பு

Link to comment
Share on other sites

எதிர்பார்ப்பு

ஏதுமில்லை எனக்குள்

கண்ணே உன் கை விரல்

பிடித்து நடப்பதுவும்

கண்ணசைவில் காலங்கள்

மறப்பதுவுமல்லால்

வேறெந்த எதிர்பார்ப்பும்

இல்லை எனக்குள்!

புதிர்போல இவ்வாழ்க்கை

முடிச்சுக்கள் அவிழ்கின்ற போது

அர்த்தங்கள் புரியும்!

எதிர்படும் இடர் எல்லாம்

என் அருகில் நீ

இருந்தால் விரைந்தே

ஓடுமடி!

கண்ணே கடைசிவரை

காதலிப்போம்

கட்டிலறைப் போர்

தொடுப்போம்!

Link to comment
Share on other sites

தொடுப்போம் எனத்

தோழியர்கள்

தொடுத்த விழியம்பில்

வீழ்ந்த காளைகளே...

விட்டில் பூச்சிபோல்...

விடலாமோ வாழ்வைப்

பெரும் பொய்யழகின்

காலடியில்..அது

மடமை மடமை

என பட்டவர்கள்

மாரடித்துச் செப்பினாலும்..

மாட்டாது மனம் ஏற்க...

மறக்காது மனசறுக்க..

கடலாக பொறுப்பிருக்கும்..

கல்வியிலே சிறப்பிருக்கும்..

பாட்டான் பெருமை

பட்iடாளி வீசிப்

பறந்திருக்கும்

தந்தை பெயருக்கு தரணியிலே..

மதிப்பிருக்கும்..எல்லாம் இருக்கும்..

பெண்பார்வை பின்

காளை மயங்கித்

திரியும் வரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரையறை ஏதும் இல்லை

வாழ்க்கையில் பிடிப்பும் இல்லை

வந்து விழும் வசைமாரிகள்

வாய்க்கு வந்தபடி எதிரொலிக்கையில்

வாழ்வதே ஒரு சுமையாய்

வாழ்ந்திட்டு விட்டுப் போகையில்

வாழ்வின் சுமைகள் சுகங்களாய்

வந்ததே வசந்தம் உன்னைக் கண்டபோது

வசம் இழந்தேன் நான் இங்கே

வாழ்வது ஒருமுறை என்றே

வசந்த காலத்தை தேடி

Link to comment
Share on other sites

வசந்த காலத்தை தேடி

வானத்தில் இருந்து

மண்ணை நாடி வந்த

என் கண்களுக்கு

குளிர்ச்சியாக கிடைத்த

வாசமான முல்லைப்பூவே

நீ நலமா?

Link to comment
Share on other sites

நீ நலமா என நீ கேட்க

நான் நலம் என வார்த்தையில்

உரைத்தை போதிலும்!!

நீயில்லாத உலகில்

நான் மட்டும் நலமா

இருப்பது எப்படி தோழி!! :unsure:

Link to comment
Share on other sites

தோழி...ஆனாலும்..

தோளில் தூங்கமுடியாது நீ...

ஏனென்றால்....

நீ தூளி தூங்கும் தோழி அல்ல...

இரு சேலைகளை இணைத்துச்

சுற்றும் தோழி..

உனக்காக.. இளைக்கும்

கலைகளைக் கற்றுக் கற்று

நான் களைத்துவிட்டேன்..

நன்று இளைத்தும் விட்டேன்..

நீதான் நாளொரு கிலோவும்

பொழுதொரு இறாத்தலுமாக எடை

ஏறிக்கொண்டே போகிறாய்..

உணவைக் குறைக்கச்சொன்னால்..

உரக்ககுரைத்துவிட்டு..

என்னை முறைக்கிறாய்..

பத்திய உணவென்று..

பலர்பந்தியை.. எளிதாக

ஏப்பம் விடுகிறாய்..

ஏய்.. தோழி..

நீ ஏன் உண்ணாவிரதம் இருக்ககூடாது..

சாகும் வரை வேண்டாம்..

கொஞசம் உடல் குறையும் வரை

Link to comment
Share on other sites

உடல் குறையும் வரை உண்ணாவிரதம்

இருக்க சொல்லும் இந்த உலகம்!!

நீ கலங்காதடி!!

உடல் குறைந்தா வருத்தம் என்றும்

அதையும் ஏளனம் செய்யும் உலகம் அம்மா!!

உன் மனதை பார்க்க சொன்னா உடலை

பார்க்கும் உலகம்

ஆனால் என் கண்னுக்கு தெரிவதோ

உன் அழகிய மனதம்மா!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அழகிய மனதம்மா உன்னது

அடுக்களை விறகாய் எரிவாய்

நிதம்... நிதம்.... எனக்கென

விதம் விதமாய் தீனிகள் செய்வாய்! :(

கொளு...கொளுவெனக் கொளுத்தும்

நான் - மக்டோனால்ஸ்

கென்ரக்கியெனத் திரிவேன்...!

கொடிதெனும் ஏழ்மையில் வீழ்ந்தும்

மடிந்திடும் மனிதரை பார்த்தும்

அவர் வாய்க் கரிசிக்காயேனும் ...

ஒரு பெனி கொடுத்திட மனம் வரா.....! :D

கூடிடும் நண்பர்களோடும்

கும்மாளம் கும்மிகள் போட்டு

கதையிலும் கவியிலும்

காட்டுவேன் நம் நாட்டினின் நிலமை!

கானங்கள் பாடுவேன்

காட்டுவேன் வித்தை

விடிந்திடும் பாரு ஈழம் நாளை....! :unsure:

Link to comment
Share on other sites

நாளை என்ற சிந்தனை

நம்மோடு...

பழி வாங்கும் எண்ணமேன்தானோ..

பின்போடு...

ஆறும்..வயலும்.. கோவிலும்..

ஊரோடு...

ஆறுகடல் தாண்டினும் போகாதே..

மனதோடு...

நீயும் நானும் வாழ்வோமே

நட்போடு..

நம் நிலைகளும் மாறிடுமென்ற

நினைப்போடு..

அன்பும் பண்பும் கொண்டால்..

உன்னோடு..

வாழ்வும் வளமும் சேரும்..

அழகோடு...

நீயா நானா போருக்கு

தடை போடு..

நியாயங்கள் வெல்லும்..நாளை

எம்மோடு...

எம்மோடு...

எம்மோடு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மோடு வாழ்ந்த காலம்

என்றும் குளிரவைத்த

சுகமான நினைவுகள்

சுற்றத்தாருடன் முத்தத்தில்

சூழ்ந்திருந்தே

சுகங்கள் புதினங்கள் பல பேசி

சுதந்திரமாய் மகிழ்ந்திருந்த

மாலைப் பொழுதுகள்

Link to comment
Share on other sites

மாலைபபொழுதுகள்..

மயங்கும்வேளைகள்..

மடியில் விழிமலர்கள்..

மலரும் பொழுதுகள்.

இளவேனில் என்னவளே...

இவளழகில் முன்னவளே..

இளமான்போல்சின்னவளே...

இராத்தூக்கங்கள் தின்னவளே...

சிறிய நிலவென மிதக்கிறாள்..

சிற்றாடை கட்டியே...பறக்கிறாள்..

சிரிக்கும்போதெல்லாம்..கரைக்க

Link to comment
Share on other sites

மாலைப் பொழுதுகள்

தரும் மயக்கங்கள்...!

வானச் சிவப்பை

முகத்தில் பூசி

தேனொழுக

என்னென்னமோ பேசி

உன்னிரு கண்ணாலே

வலை வீசி

எனைச் சிறைப்பிடிப்பாயே

ஒரு கணம் யோசி

அவ் பொழுதுகளை!

விருப்பமாய் நானும்

சிறைப்பட்டு

கிறக்கமாய் கிடப்பேனே

உன் மடி மெத்தை மீது!

வருமா கண்ணே

அந்தப் பொழுதுகள்

மீண்டும்?

சாபமா வேண்டி

வந்தோம்

தமிழனாய் பிறப்பதற்கு?

திக்கெட்டும் சிதறினோம்

எம் காதல் நினைந்து

நெக்குருகி அழுகிறோம்!

விலகுமா இருள்?

விந்தைகள் ஏதும்

நடக்குமா?

கலங்காதிரு கண்ணே

கரிகாலன் ஆட்சியில்

ஈழம் விடியும்

எம் பிள்ளை

ஈழத் தெருக்களில்

ஓடித் திரியும்!

Link to comment
Share on other sites

வராந்தாவில்

ஓடித்திரியும் உன் கால்கள்..

வெறுமையாக

இருக்கிறதென்றுதானே...

கொலுசு வாங்கி வந்தேன்..

மகளே...இப்போது..

குமரியாகி நீ..

பறக்க ஆசை கொண்டால்..

ஏழை தந்தை..

இறக்கைகளை வாங்க

எங்கே போவேன்?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே போவேன் உன்னை விட்டு

அன்பைத்தேடும் என் மனம் பட்டு

விடப்போகிறதே ஒரு நொடிக்குள்

துன்பத்தில் துடித்து துவண்டிடும் மனதினை

வார்த்தைகளால் பரிந்துரை செய்து

ஆற்றுவிக்கும் உன் தோழமையை விட்டு விட்டு

ம்.... ம்... ஒருபோதும் போகமாட்டேன்

Link to comment
Share on other sites

போகமாட்டேன்..

உன்னைவிட்டு

எங்கேயும் என்று

சொன்னேனே அன்னையே...

அங்கு நீ..ஆதரவிழந்து

அல்லலுறுவதை...

யாரோ சொல்லி..

நானறிந்தும்...

ஏதும் செய்ய முடியாத

இயலாதவனாக...

வெறும்..பணம்

உன்னை தேற்றாதே...

அன்புக்கு அருகில்..

ஆளில்லாமல்..

வெற்று பூமியில்;..

வெளிரிய

வானம் நோக்கி..

மங்கிய பார்வையும்..

தளர்ந்த நாடியும்..

தாயே..

என் கடமைகள்

பாக்கி இருக்கிறது..

காலங்களை..

எனக்காக பாக்கி

வைத்திருக்க மாட்டாயா..

என் வரவுக்காக உன்

அன்பைத் தேக்கி

வைத்திருக்கமாட்டாயா..

விதி போட்ட வேலி

தாண்ட முடியாத பாவி..

அம்மா..உன் காதுக்கு

என் அழுகை சத்தம்

கேட்டிருக்கும்..

ஏனென்றால்..

என் நெஞ்சுக்குள்..

உன் மனக்குமுறல்

கேட்குதே....அம்மா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா அம்மா

என்றழைத்தாலே

என் நாடி நரம்பெல்லாம்

துடிக்கின்றதே

என் மூச்சுக்காற்று

ஒவ்வொரு துடிப்பிலும்

அம்மா உன் நலம் வேண்டியே

என்னுயிர் துடித்திருக்கும்

அம்மா உன் முகம் காண

இத்தனை மைல்கள் தடுக்கின்றதே

Link to comment
Share on other sites

தடுக்கின்ற சுவர்கள்

தரையோடு அழிழ

குறுக்கே விழும் கரங்கள்

குருதியுறைந்து கூனும்

அடுக்கடுக்காய் எதிரி வீழ

அண்ணனவன் படைதான்

வெல்லும் கதை சொல்லும்

Link to comment
Share on other sites

கதை சொல்லும் பாட்டி

சாமியாய் போன பின்பும்

அவள் சொன்ன கதைகள்

இன்றும் என் நெஞ்சினில் நிற்கும்....!

காக்காவை ஏமாத்தும் குள்ளநரி

அசுரரை அழித்திட

கடவுள்கள் அவதாரம்...

இன்னும் எத்தனை எத்தனையோ....

கதைகளும் நொடிகளும்...

பாக்களும்.... பல பல

விளையாட்டுக்களும்...!

கதைகளின் கருவை அன்று

அறிந்திடேன் - கைதட்டி

அச்சாக் கதைகளென்று

ஆர்ப்பரிப்பேன்.....!

இன்று - எம் வாழ்வில்

நரிகள் போலவும்.... அசுரர் போலவும்....

இறைவன் அவதாரம் போலவும்...

மனிதர்கள் பார்ப்பேன்...!

:wub:

சாமியான உன் படத்தைப் பார்த்து

கையெடுத்துக் கும்பிடுவேன்...!

அன்று சங்கம் வைத்து

தமிழ் வழர்த்தார் உந்தன் மூதாதையர்...!

இன்றும் சங்கம் வைத்து

குழுப்பிரித்து சண்டை செய்வார்

எங்கள் தமிழர்..! :o

Link to comment
Share on other sites

தமிழர்..தமிழர்..தமிழர்..

நாமா ஐயா.. தமிழர்

வேட்டி கட்டத் தெரியாது..

விட்டுத்தள்ளு...

தமிழுக்கு விளக்கம் சொல்லத்தெரியாது..

வேண்டாம் விடு...

பிள்ளையின் பெயர்.. ப்ரெட்டி.

பெரிய கொடுமை..

அன்னலட்சுமி பெயரிப்போ அனா..

கந்தசாமி இப்போது கண்டா..

வெள்ளையர் வாய்க்கு இலகுவாம்..

போகட்டும் பொறுத்துக்கொள்வோம்...

பிள்ளைக்கு தமிழ் தெரியாதாம்..

வைபவங்களில் அம்மாவின் பெருமை..

"ஐ கான்ட் ஸ்பீக் டமில்"

பிள்ளையின் பெருமை

கொடுமையிலும் கொடுமை..

தமிழர்..தமிழர்..தமிழர்..

நாமா ஐயா.. தமிழர்

எல்லாம் மாறினாலும்..

பலபல அரங்கேற்றங்கள்..

சந்தோசப்படலாம்..

அதற்கு போகாத வரை

அங்கே..பேச்சிலிருந்து..

மூச்சு வரை.. ஆங்கில அலட்டல்..

பெருமைக்கும்.. நாகரீகத்திற்கும்..

பெரிய வைபவம்...அரங்கேற்றம்..

ஒரு நாள் முன் வரிசையில்

இரு வெள்ளை ஆசாமிகள்..

என் போதாத காலம் பக்கத்தில்

நான்.. ஒரு பூ முடித்த பெண்..

"அன்ட் நௌ சிவா கெட்ஸ் ஆங்கிரி

ஒன் பார்வரி அன்ட் கீ இஸ் கோயிங் டு டான்ஸ்

கால்ட் ருட்ர டாண்டவம்"

இவ்வளவும் அவர்களுக்காகவாம்..

அரை மணி நேரத்தில்

ஒருவர் மற்றவரிடம்..

"இட்ஸ் குட்..இட்ஸ்ரஜயலஜ சூபர்ப்.

பட் மை பாக் பெயின் இஸ் கில்லிங் மீ..

ஐ நீட் டு கெட் ஓப் பிரம் திஸ் சீட்.."எனவும்.

மற்றவர் "மீ ரூ "

என்னை ஏதோ பிடுங்கித்தின்றது..

விருப்பமில்லாமல் விருந்து..

யாருக்காகவோ.. நாடகம்..

தமிழ் பேசத்தெரியாத பிள்ளை..

சங்கீத அரங்கேற்றம்..

தமிழ்ப்பாட்டை..

ஆங்கிலத்தில் எழுதிப் பாடும்.

மேலை நாட்டு வாழ்க்கை..

சுய அடையாளம் இழந்த

தமிழர்..தமிழர்..தமிழர்..

நாமா ஐயா.. தமிழர்

Link to comment
Share on other sites

நாமா ஐயா.. தமிழர்

என்று கேட்ட

விகடகவி

கவி நன்று!

நாமம் மட்டும்

தமிழய்யா

வேறென்ன சொல்ல ?

வேட்டி கட்டினால்

குளிருக்காகாது என்று

வேட்டியை மறந்திருக்கலாம்...

தமிழில் பேசினால்

'இங்க வந்தும்

இங்கிலீஸ் தெரியாது போல'

என்று சனம் புறு புறுப்பினம் என்று

இங்கிலீஸில் பேசியிருக்கலாம்

மற்றது

அரகேற்றமெல்லாம்

சும்மா வீட்டிலிருக்கிற

சேலை நகையை காட்ட

ஒரு இடம் வேண்டாமோ?

இப்படித் தானய்யா

எங்கட சனம் சும்மா

வறட்டுக் கவுரத்தில

அடையாளம் தொலைக்குதுகள்...

வேறென்ன சொல்ல

விகடகவி

ஆனாலும்

உம் கவி பிடிச்சிருக்கு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.