Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோகங்கள் வாட்டி-நான்

அழுதபோதெல்லாம்

அம்மாவை நிநைத்துக் கொள்வேன்,

இன்று

அம்மாவை நினைக்கும் போதெல்லாம்

நான்

அழுதுவிடுகிறேன்

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

ஆயிரம் ஆண்டுகள் வாழும் பனைமரம்

ஆணியும் ஏறாதது  ஆணிவேரும் இல்லாதது _ இங்கு

ஆணிவேரோடு ஒரு மரம் மோகனமாய் அசைகிறது

அன்பு ஆள்வதால் ஆணிகளையும் சுமக்கிறது !

 

அன்பு ஆள்வதால் யாழ் என் உள்ளத்தையும் ஆள்கிறது !!

Link to comment
Share on other sites

சோகங்கள் வாட்டி-நான்

அழுதபோதெல்லாம்

அம்மாவை நிநைத்துக் கொள்வேன்,

இன்று

அம்மாவை நினைக்கும் போதெல்லாம்

நான்

அழுதுவிடுகிறேன்

 

அம்மா என்ற வார்த்தையை வாசித்ததுமே உள்ளம் நெகிழ்ந்து விடுகிறதே...

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அழுதுவிடுகிறேன்..யாருமறியாமல் ஆற்றாமையால்-அன்புடையார் யாரும் தேற்றாமையால்..என்ன தடுத்தும் மனம் கேளாமையால் அம்மா அம்மா என ஏங்கும் அம்மாவின் குழந்தைக்கு அம்மா இவ்வுலகிலே இல்லாமையால்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இல்லாமையால்

விகடகவி நீ

இவ்வந்தாதியை 

இவ்வளவு நாளாய் 

தீண்டாமையால் 

சொல்லாமல் எங்கோ 

போனார் பலர் என 

எண்ணி 

சுற்றி வந்து பார்த்துச் 

செல்வேன்...! 

 

இறங்கி நடக்கும் 

சூழல் ஒன்று 

இனித் தொடரும் 

வாடிக் கிடக்கும் 

என் தமிழ் வேட்கை 

ஓடிக் களிக்கும்! 

 

காணாமல் போனோர் 

பற்றிய செய்திகளை 

வாசிக்கின்ற போதெல்லாம் 

யாழ் களத்தில் கூட வந்து 

விளையாடிய பலர் 

இருந்தும்

இங்கு வந்து இளைப்பாற 

மனமின்றி காணாமல் போனாரே 

என்று மனம் துணுக்குறும்! 

 

அவ்வகையில் 

உன்னைக் கண்டேன்

விகடகவி 

சொல்லாலே அடித்து விளையாடியவன் 

முன்னாலே வந்து நிற்கின்றாய் 

என்னாலே என்ன சொல்லமுடியும்

தன்னாலே இனி நடக்கும் பாரிங்கு 

தமிழுக்கு திருவிழா! 

Link to comment
Share on other sites

தமிழுக்குத் திருவிழா... திருவிழாவில் தொலைந்த சிறுவன் நானும்தான் மீண்டு வந்தேன் நண்பா நீ..நான்..நாம்.. இணைந்தோம்..வரைந்தோம் மகிழ்ந்தோம்..மனம் மலர்ந்தோம்..நம் சோலை செஞ்சோலையானதில்.. வாடிப்போனோம்..கவி பாடிப்போன உறவைக்கூட வந்து வந்து தேடிப்போனோம்... காணவில்லையே..விதியைச் சாடிப்போனோம்.. வாழ்க்கை சக்கரம்.. வேரைத்தேடி மழைநீர் வாராது எங்கு போகும்.. பிறந்த இடைத்தில் கரைவதுதானே நியதி தமிழாய் ஜனித்தோம் தமிழால் இனித்தோம்.... இனி...தமிழே.. உறவே தினமும் சந்திப்போம்

Link to comment
Share on other sites

//

விகடகவி தாங்கள் இடும் கவிதைகள் ஏன் நீண்டு வருகின்றன. பத்திகளாக பிரிக்கப்படவில்லை. ஏதோ சிறு பிழை நடப்பதாக கருதுகிறேன். கவனிக்கவும். 

 

நன்றி. 

//

 

சந்திப்போம்

என்று சொல்லிப் 

போன அத்தான் 

கிஞ்சித்தும் என் நினைவின்றி 

இத்தனை நாள் 

இருந்து விட்டு 

முன் வந்து நின்றார் 

பேச்சிழந்து விட்டேன்!

 

 

அத்தான் அருகில் 

வெள்ளைத் தோல் காரி 

வெள்ளந்தியாய் சிரித்து நின்றாள்! 

 

 

Link to comment
Share on other sites

நின்றாள் கதவு நிலையோடு முகிலில் ஒழியும் நிலவு போல பாதி முகம் நாணம் கொப்புளிக்க இதழ்களில் இன்பம் புன்னகையாய் பூ விரிக்க ... விரல்களால் கோலோமிட்டு ஏக்கமும் காதலும் எனக்குள்ளும் ஒட்ட வைத்து ஓடி சென்றாள் உள்ளே..பாதங்கள் சிணுங்க ..பின்னே பின்னால் தலையசைத்த ...."என்ன காத்து செவிடா" இவளின் பேச்சில் மறைந்த அந்த மலராத காதல்..

Link to comment
Share on other sites

காதல்

காமம் 

கல்யாணம் 

கவலை 

கண்ணீர் 

கடைசியில் 

கல்லறை! 

Link to comment
Share on other sites

கல்லறை மேல் பூ வைத்து போபவளே. நீ. வைத்த ஒற்றை ரோஜாதான் பெண்ணே இவனை கல்லறைக்கனுப்ப. காரணமென்பதை. நீ மட்டுமே அறிவாய்

Link to comment
Share on other sites

அறிவாய் பெண்ணே 

அரிதாய் பூத்த 

காதல் பூவைக் கிள்ளி 

கள்ளி நீ மனதில் வைப்பாய் 

என்றிருந்தேன்...

தள்ளிக் காலால் மிதித்து 

எள்ளி நகைக்கின்றாய்

சொல்லி அழ 

சோகம் 

கிள்ளி எறிய 

துள்ளி அருகில் வராயோ 

நீயே

புள்ளி மான் போல்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 புள்ளி மான்  போல்

துள்ளி ஓடும் கன்னிமானே - ஓர்

புண்ணகையால் உரசிப் போவாயே

பொன்மானே - உன்

கடைக்கண் நோக்க

கால் கடுக்க  காத்திருக்கும்

அம்மானும்  நானே...!

Link to comment
Share on other sites

நானே குழம்பிக் கிடக்கேன்... அச்சில எத அடிச்சாலும் சும்மா நச்சுன்னு வருமே..... இப்ப வரி வரியா அடிச்சாலும் கூட்டம் கூட்டமா வருது... இறைவா..தமிழனுக்கும் சோதனை தமிழுக்கும் சோதனையா?

Link to comment
Share on other sites

சோதனையா தமிழுக்கு

என்று சோகம் வளர்க்கும் 

கவியே 

தட்டச்சு செய்யும் வேளை 

திரை வெட்டு ஒன்று எடுத்து 

அடியேனுக்கு அனுப்பினால்

ஆராய்ந்து ஏதேனும் 

ஆவன செய்யப்படும்! 

Link to comment
Share on other sites

ஆவன செய்யப்படும் என நம்பி..நண்பா உன்னை நம்பி.. உன் வார்த்தை நம்பி அனுப்புகிறேன் அஞ்சல்..சரி செய் இதை அதுவே என் கெஞ்சல்

Link to comment
Share on other sites

 

 கெஞ்சல்  கொஞ்சல் கொண்டு

கொஞ்சும்கிளியோடு

போன மாப்பிள்ளை

 கொஞ்சி கெஞ்சி  களைத்து

வந்தார் அப்பா மறுவீடு  

ஆரத்தி தட்டெடுத்து

வந்தேனப்பா வரவேற்க.....

 

Link to comment
Share on other sites

வரவேற்க வந்த 

மச்சாள் 

சுவடே இல்லாமல் 

மறைந்தே போனாள்! 

 

காதலில் களைப்பும் இல்லை 

களைத்துக் கலைந்து போனால்

அது காதலும் இல்லை! 

 

என்றும் உள்ள இக்காதல் 

உதட்டு முத்தத்தில் மட்டும் 

பூப்பதில்லை 

மௌனமாய் உள்ளங்கள் 

இளைப்பாறும் பொழுதில் 

தள்ளியிருந்து வேடிக்கை 

பார்க்கும் இக் காதல்! 

 

 

Link to comment
Share on other sites

காதல்   வந்து இன்பம்
கொண்டு துன்பம் வென்று
துயரம் மறந்து வானில்
பறந்த என் ஆசை மச்சான்
 சுமைகள் கூடி
சுயம்பரம் வெறுத்து  தனியாய்
புலம்பிட வந்தானோ!!என
எண்ணி தவித்து அக்கரையாய்
கேட்டேன்  இதில் தப்பில்லை
தவறில்லை  கிண்டலில்லை
கேலியில்லை அக்கரை  தான்
ஆசை மச்சான்
Link to comment
Share on other sites

ஆசை மச்சான் 

என்று முடித்தவுடனே 

எந்த மச்சானும் 

வந்து எழுதவில்லையே 

ஒரு கவி! 

 

பொறுமை இழந்து 

வந்தேன் நானும் 

அருமை அந்தாதியை 

அடுத்து நகர்த்தும் 

பொறுப்பில் எழுதுகிறேன் 

 

மூலைக் ஒருவராய் 

போனவர்களே 

பாலைக்கு நீர் வார்த்த 

புண்ணியவான் 

நீங்களே ஆவீர் 

 

வாருங்கள் ஐயா 

கவிதையில் கருத்தாடலாம் 

குதிரையே இல்லாது 

குதித்து ஓடலாம்

சண்டித்தனம் பண்ணலாம் 

சிண்டு முடியலாம் 

பெண்டு பிள்ளை கதையெல்லாம் 

இங்கே வந்து 

காவியமாக்கலாம்! 

சீவியம் முடியும் மட்டும் 

உம்மையே நினைத்து வாடும் 

ரசிகா் கூட்டம் பெறலாம்! 

 

பார்ப்போம் 

எத்தனை பேருக்கு 

வால் முளைக்கிறது என்று 

'கவி'க்கு வால் முக்கியம் தானே!!!

Link to comment
Share on other sites

தானே வாழக்கிழவி

தனியே வாழக்கிழவி

கொட்டைப்பாக்கை ண்டால்

உரலைத்தேடும் கிழவி

பாரதிதேடிய புமைதேடாக்கிழவி

கண்ணம்மாவாய் கண்கள்கசக்கும்கிழவி

அடுப்போடு அடிக்கடிசண்டையிடும் கிழவி

அரிசி பருப்பைின்றி அடிவயிற்றுக்கு

தண்ணீகொடுத்து வாழும்கிழவி

காவிபடிந்த பொக்கைவாய்

பாரதிராஐா கிராமத்தின்

வெள்ளைத்தலைக்கிழவி

வெறும்வாயை மென்று

மண்ணின்வாசலில் காத்திருக்கும் கிழவி

மண்ணுக்குள் புதைந்திட

 மரணத்தை சுமக்கும்கிழவிக்கு!

மாமனென்ன மச்சானென்ன

சந்தேகம் வேண்டாம் என் தேகமே

மருகள் அடிக்க மாமியார் வாங்க

மகனுக்கு பெண்தேடும்கிழவி

பெண்தேகத்தை சந்தேகம்

கொள்வது ஆண்தேகதிற்கு அழகல்ல!!

காதல் மச்சானோ கவிபாடு

சந்தேகவிட்டு சந்தோஷமாய்!!

 

Link to comment
Share on other sites

  • 4 months later...

சந்தோசமாய் 

தமிழோடு விளையாடி 

கவிதை பல 

இவ்வரங்கில் தந்த இவன் 

என் தேசமாய் 
இவ்வந்தாதி இருண்டது 

கண்டு 

வருந்திக் கிடக்கிறேன்!

 

எங்கே ஐயா

போனீர்? 

 

தமிழ் மறந்த 

தமிழர் போல் 

தேசம் மறந்த 

மக்கள் போல்

பாசம் மறந்த 

பிள்ளைகள் போல் 

 

எங்கே ஐயா 

போனீர்?

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 5 months later...

                                                                                          போனீர் போனயிடம்

போகநானும் முடியாது!!

பொறுப்பை  பொறுப்பற்று

பொறுப்பாய் என்னிடம் கொடுத்து!!

பொறுமை வாழ்வை சுமக்க வைத்து

போதிப்பர் சுற்றிட போதனை கசந்திட

என்னை தனியா விட்டு ஏன் போனீர்!!

சபைக்கு ஓர்செய்தி  தனியே ஓர்வாழ்வு

தலைக்கு பலதகவல் தனித்தனி கதையாக்கி

வாழ்பவர்மத்தியில்தனியாவிட்டு

ஏன்போனீர் !சரிந்து விழுந்த

இருளுக்குள் சரிசெய்யா கார்காலதிற்குள்

சொஞ்சமும் அன்பில்லா  நஞ்சுக்குள் வஞ்சகமாய்

தொலைத்துவிட்டு ஏன் போனீர் மாமா!!

                                                                                                    என்னைவிட்டு!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை விட்டு போகாதே  இளங்காற்றே  உயிர் மூச்சே

மண்ணை விட்டு  மரஞ் செடிதான் உயிர் வாழுமோ தலை சாயுமோ

பண்ணை விட்டு மாங்குயில்தான் பண்பாடுமோ தரை சேருமோ

உன்னை விட்டு என்னுளந்தான் பேதலித்திடுமோ விண்ணேகுமோ

 

கார்முகில் நீங்கி  விழும் துளிகள் முத்தாடுதே புவிமீதிலே

வண்டுவர நறுமலர்தான் இதழ் விரித்தே  தேன் சிந்துதே

மழைவர வண்ண மயில்தான் தோகை அசைத்து நடனமாடுதே

கலைமானோடு பெண்மானும் கலந்துறவாடுதே

 

 

பசும்புல் நிலங் கண்ட  பசுக் கூட்டம் போலே

ஓடும் அருவி கண்ட  களிறுகளின் களிப்புப் போலே

அம்மாவைக் கண்ட குழவி அணைக்கத் தாவுதல் போலே

உச்சிமோந்து உன்னிடம் உறவாடிட உள்ளம் ஏங்குதே...!!

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 months later...

ஏங்குதே என் உள்ளம் 

என்றோ பேசித் திரிந்த 

நாட்களை எண்ணி ஏங்குதே...

 

வாழ்க்கை வண்டியின் 

அச்சாணி முறியுமளவு சுமைகள்! 

 

அச்சாணி முறியும் தருணத்திலும் 

கழற்றி எறிந்து விட்டு 

புதிதாய் ஒன்றைப் போட்டு 

சுமக்கின்ற சாமத்தியசாலிகள் நாங்கள்! 

 

போதும் என்று ஓடிப் போகும் 

ஞானம் வந்து கூடவில்லை

 

குறை கூறிக் கொண்டே 

வாழும் வகையில் 

வாழ்க்கையோடு சமரசம் 

செய்து கொண்டோம்! 

 

அருகில் இருப்பது 

சொர்க்கமே எனினும் 

நரகமாக்கிக் கொள்ளும் சமத்தர் 

நாங்கள்! 

 

பல சமயங்களில் 

அருகில் இருப்பது 

மனைவி என்று உணர்ந்தவர் 

பாவ நிவர்த்தி செய்ய 

பகவானுக்கு கற்பூரம்

ஏற்றிக் கொள்க! ;-)

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.