Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோகங்கள் வாட்டி-நான்

அழுதபோதெல்லாம்

அம்மாவை நிநைத்துக் கொள்வேன்,

இன்று

அம்மாவை நினைக்கும் போதெல்லாம்

நான்

அழுதுவிடுகிறேன்

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

ஆயிரம் ஆண்டுகள் வாழும் பனைமரம்

ஆணியும் ஏறாதது  ஆணிவேரும் இல்லாதது _ இங்கு

ஆணிவேரோடு ஒரு மரம் மோகனமாய் அசைகிறது

அன்பு ஆள்வதால் ஆணிகளையும் சுமக்கிறது !

 

அன்பு ஆள்வதால் யாழ் என் உள்ளத்தையும் ஆள்கிறது !!

Link to comment
Share on other sites

சோகங்கள் வாட்டி-நான்

அழுதபோதெல்லாம்

அம்மாவை நிநைத்துக் கொள்வேன்,

இன்று

அம்மாவை நினைக்கும் போதெல்லாம்

நான்

அழுதுவிடுகிறேன்

 

அம்மா என்ற வார்த்தையை வாசித்ததுமே உள்ளம் நெகிழ்ந்து விடுகிறதே...

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அழுதுவிடுகிறேன்..யாருமறியாமல் ஆற்றாமையால்-அன்புடையார் யாரும் தேற்றாமையால்..என்ன தடுத்தும் மனம் கேளாமையால் அம்மா அம்மா என ஏங்கும் அம்மாவின் குழந்தைக்கு அம்மா இவ்வுலகிலே இல்லாமையால்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இல்லாமையால்

விகடகவி நீ

இவ்வந்தாதியை 

இவ்வளவு நாளாய் 

தீண்டாமையால் 

சொல்லாமல் எங்கோ 

போனார் பலர் என 

எண்ணி 

சுற்றி வந்து பார்த்துச் 

செல்வேன்...! 

 

இறங்கி நடக்கும் 

சூழல் ஒன்று 

இனித் தொடரும் 

வாடிக் கிடக்கும் 

என் தமிழ் வேட்கை 

ஓடிக் களிக்கும்! 

 

காணாமல் போனோர் 

பற்றிய செய்திகளை 

வாசிக்கின்ற போதெல்லாம் 

யாழ் களத்தில் கூட வந்து 

விளையாடிய பலர் 

இருந்தும்

இங்கு வந்து இளைப்பாற 

மனமின்றி காணாமல் போனாரே 

என்று மனம் துணுக்குறும்! 

 

அவ்வகையில் 

உன்னைக் கண்டேன்

விகடகவி 

சொல்லாலே அடித்து விளையாடியவன் 

முன்னாலே வந்து நிற்கின்றாய் 

என்னாலே என்ன சொல்லமுடியும்

தன்னாலே இனி நடக்கும் பாரிங்கு 

தமிழுக்கு திருவிழா! 

Link to comment
Share on other sites

தமிழுக்குத் திருவிழா... திருவிழாவில் தொலைந்த சிறுவன் நானும்தான் மீண்டு வந்தேன் நண்பா நீ..நான்..நாம்.. இணைந்தோம்..வரைந்தோம் மகிழ்ந்தோம்..மனம் மலர்ந்தோம்..நம் சோலை செஞ்சோலையானதில்.. வாடிப்போனோம்..கவி பாடிப்போன உறவைக்கூட வந்து வந்து தேடிப்போனோம்... காணவில்லையே..விதியைச் சாடிப்போனோம்.. வாழ்க்கை சக்கரம்.. வேரைத்தேடி மழைநீர் வாராது எங்கு போகும்.. பிறந்த இடைத்தில் கரைவதுதானே நியதி தமிழாய் ஜனித்தோம் தமிழால் இனித்தோம்.... இனி...தமிழே.. உறவே தினமும் சந்திப்போம்

Link to comment
Share on other sites

//

விகடகவி தாங்கள் இடும் கவிதைகள் ஏன் நீண்டு வருகின்றன. பத்திகளாக பிரிக்கப்படவில்லை. ஏதோ சிறு பிழை நடப்பதாக கருதுகிறேன். கவனிக்கவும். 

 

நன்றி. 

//

 

சந்திப்போம்

என்று சொல்லிப் 

போன அத்தான் 

கிஞ்சித்தும் என் நினைவின்றி 

இத்தனை நாள் 

இருந்து விட்டு 

முன் வந்து நின்றார் 

பேச்சிழந்து விட்டேன்!

 

 

அத்தான் அருகில் 

வெள்ளைத் தோல் காரி 

வெள்ளந்தியாய் சிரித்து நின்றாள்! 

 

 

Link to comment
Share on other sites

நின்றாள் கதவு நிலையோடு முகிலில் ஒழியும் நிலவு போல பாதி முகம் நாணம் கொப்புளிக்க இதழ்களில் இன்பம் புன்னகையாய் பூ விரிக்க ... விரல்களால் கோலோமிட்டு ஏக்கமும் காதலும் எனக்குள்ளும் ஒட்ட வைத்து ஓடி சென்றாள் உள்ளே..பாதங்கள் சிணுங்க ..பின்னே பின்னால் தலையசைத்த ...."என்ன காத்து செவிடா" இவளின் பேச்சில் மறைந்த அந்த மலராத காதல்..

Link to comment
Share on other sites

காதல்

காமம் 

கல்யாணம் 

கவலை 

கண்ணீர் 

கடைசியில் 

கல்லறை! 

Link to comment
Share on other sites

கல்லறை மேல் பூ வைத்து போபவளே. நீ. வைத்த ஒற்றை ரோஜாதான் பெண்ணே இவனை கல்லறைக்கனுப்ப. காரணமென்பதை. நீ மட்டுமே அறிவாய்

Link to comment
Share on other sites

அறிவாய் பெண்ணே 

அரிதாய் பூத்த 

காதல் பூவைக் கிள்ளி 

கள்ளி நீ மனதில் வைப்பாய் 

என்றிருந்தேன்...

தள்ளிக் காலால் மிதித்து 

எள்ளி நகைக்கின்றாய்

சொல்லி அழ 

சோகம் 

கிள்ளி எறிய 

துள்ளி அருகில் வராயோ 

நீயே

புள்ளி மான் போல்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 புள்ளி மான்  போல்

துள்ளி ஓடும் கன்னிமானே - ஓர்

புண்ணகையால் உரசிப் போவாயே

பொன்மானே - உன்

கடைக்கண் நோக்க

கால் கடுக்க  காத்திருக்கும்

அம்மானும்  நானே...!

Link to comment
Share on other sites

நானே குழம்பிக் கிடக்கேன்... அச்சில எத அடிச்சாலும் சும்மா நச்சுன்னு வருமே..... இப்ப வரி வரியா அடிச்சாலும் கூட்டம் கூட்டமா வருது... இறைவா..தமிழனுக்கும் சோதனை தமிழுக்கும் சோதனையா?

Link to comment
Share on other sites

சோதனையா தமிழுக்கு

என்று சோகம் வளர்க்கும் 

கவியே 

தட்டச்சு செய்யும் வேளை 

திரை வெட்டு ஒன்று எடுத்து 

அடியேனுக்கு அனுப்பினால்

ஆராய்ந்து ஏதேனும் 

ஆவன செய்யப்படும்! 

Link to comment
Share on other sites

ஆவன செய்யப்படும் என நம்பி..நண்பா உன்னை நம்பி.. உன் வார்த்தை நம்பி அனுப்புகிறேன் அஞ்சல்..சரி செய் இதை அதுவே என் கெஞ்சல்

Link to comment
Share on other sites

 

 கெஞ்சல்  கொஞ்சல் கொண்டு

கொஞ்சும்கிளியோடு

போன மாப்பிள்ளை

 கொஞ்சி கெஞ்சி  களைத்து

வந்தார் அப்பா மறுவீடு  

ஆரத்தி தட்டெடுத்து

வந்தேனப்பா வரவேற்க.....

 

Link to comment
Share on other sites

வரவேற்க வந்த 

மச்சாள் 

சுவடே இல்லாமல் 

மறைந்தே போனாள்! 

 

காதலில் களைப்பும் இல்லை 

களைத்துக் கலைந்து போனால்

அது காதலும் இல்லை! 

 

என்றும் உள்ள இக்காதல் 

உதட்டு முத்தத்தில் மட்டும் 

பூப்பதில்லை 

மௌனமாய் உள்ளங்கள் 

இளைப்பாறும் பொழுதில் 

தள்ளியிருந்து வேடிக்கை 

பார்க்கும் இக் காதல்! 

 

 

Link to comment
Share on other sites

காதல்   வந்து இன்பம்
கொண்டு துன்பம் வென்று
துயரம் மறந்து வானில்
பறந்த என் ஆசை மச்சான்
 சுமைகள் கூடி
சுயம்பரம் வெறுத்து  தனியாய்
புலம்பிட வந்தானோ!!என
எண்ணி தவித்து அக்கரையாய்
கேட்டேன்  இதில் தப்பில்லை
தவறில்லை  கிண்டலில்லை
கேலியில்லை அக்கரை  தான்
ஆசை மச்சான்
Link to comment
Share on other sites

ஆசை மச்சான் 

என்று முடித்தவுடனே 

எந்த மச்சானும் 

வந்து எழுதவில்லையே 

ஒரு கவி! 

 

பொறுமை இழந்து 

வந்தேன் நானும் 

அருமை அந்தாதியை 

அடுத்து நகர்த்தும் 

பொறுப்பில் எழுதுகிறேன் 

 

மூலைக் ஒருவராய் 

போனவர்களே 

பாலைக்கு நீர் வார்த்த 

புண்ணியவான் 

நீங்களே ஆவீர் 

 

வாருங்கள் ஐயா 

கவிதையில் கருத்தாடலாம் 

குதிரையே இல்லாது 

குதித்து ஓடலாம்

சண்டித்தனம் பண்ணலாம் 

சிண்டு முடியலாம் 

பெண்டு பிள்ளை கதையெல்லாம் 

இங்கே வந்து 

காவியமாக்கலாம்! 

சீவியம் முடியும் மட்டும் 

உம்மையே நினைத்து வாடும் 

ரசிகா் கூட்டம் பெறலாம்! 

 

பார்ப்போம் 

எத்தனை பேருக்கு 

வால் முளைக்கிறது என்று 

'கவி'க்கு வால் முக்கியம் தானே!!!

Link to comment
Share on other sites

தானே வாழக்கிழவி

தனியே வாழக்கிழவி

கொட்டைப்பாக்கை ண்டால்

உரலைத்தேடும் கிழவி

பாரதிதேடிய புமைதேடாக்கிழவி

கண்ணம்மாவாய் கண்கள்கசக்கும்கிழவி

அடுப்போடு அடிக்கடிசண்டையிடும் கிழவி

அரிசி பருப்பைின்றி அடிவயிற்றுக்கு

தண்ணீகொடுத்து வாழும்கிழவி

காவிபடிந்த பொக்கைவாய்

பாரதிராஐா கிராமத்தின்

வெள்ளைத்தலைக்கிழவி

வெறும்வாயை மென்று

மண்ணின்வாசலில் காத்திருக்கும் கிழவி

மண்ணுக்குள் புதைந்திட

 மரணத்தை சுமக்கும்கிழவிக்கு!

மாமனென்ன மச்சானென்ன

சந்தேகம் வேண்டாம் என் தேகமே

மருகள் அடிக்க மாமியார் வாங்க

மகனுக்கு பெண்தேடும்கிழவி

பெண்தேகத்தை சந்தேகம்

கொள்வது ஆண்தேகதிற்கு அழகல்ல!!

காதல் மச்சானோ கவிபாடு

சந்தேகவிட்டு சந்தோஷமாய்!!

 

Link to comment
Share on other sites

  • 4 months later...

சந்தோசமாய் 

தமிழோடு விளையாடி 

கவிதை பல 

இவ்வரங்கில் தந்த இவன் 

என் தேசமாய் 
இவ்வந்தாதி இருண்டது 

கண்டு 

வருந்திக் கிடக்கிறேன்!

 

எங்கே ஐயா

போனீர்? 

 

தமிழ் மறந்த 

தமிழர் போல் 

தேசம் மறந்த 

மக்கள் போல்

பாசம் மறந்த 

பிள்ளைகள் போல் 

 

எங்கே ஐயா 

போனீர்?

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 5 months later...

                                                                                          போனீர் போனயிடம்

போகநானும் முடியாது!!

பொறுப்பை  பொறுப்பற்று

பொறுப்பாய் என்னிடம் கொடுத்து!!

பொறுமை வாழ்வை சுமக்க வைத்து

போதிப்பர் சுற்றிட போதனை கசந்திட

என்னை தனியா விட்டு ஏன் போனீர்!!

சபைக்கு ஓர்செய்தி  தனியே ஓர்வாழ்வு

தலைக்கு பலதகவல் தனித்தனி கதையாக்கி

வாழ்பவர்மத்தியில்தனியாவிட்டு

ஏன்போனீர் !சரிந்து விழுந்த

இருளுக்குள் சரிசெய்யா கார்காலதிற்குள்

சொஞ்சமும் அன்பில்லா  நஞ்சுக்குள் வஞ்சகமாய்

தொலைத்துவிட்டு ஏன் போனீர் மாமா!!

                                                                                                    என்னைவிட்டு!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை விட்டு போகாதே  இளங்காற்றே  உயிர் மூச்சே

மண்ணை விட்டு  மரஞ் செடிதான் உயிர் வாழுமோ தலை சாயுமோ

பண்ணை விட்டு மாங்குயில்தான் பண்பாடுமோ தரை சேருமோ

உன்னை விட்டு என்னுளந்தான் பேதலித்திடுமோ விண்ணேகுமோ

 

கார்முகில் நீங்கி  விழும் துளிகள் முத்தாடுதே புவிமீதிலே

வண்டுவர நறுமலர்தான் இதழ் விரித்தே  தேன் சிந்துதே

மழைவர வண்ண மயில்தான் தோகை அசைத்து நடனமாடுதே

கலைமானோடு பெண்மானும் கலந்துறவாடுதே

 

 

பசும்புல் நிலங் கண்ட  பசுக் கூட்டம் போலே

ஓடும் அருவி கண்ட  களிறுகளின் களிப்புப் போலே

அம்மாவைக் கண்ட குழவி அணைக்கத் தாவுதல் போலே

உச்சிமோந்து உன்னிடம் உறவாடிட உள்ளம் ஏங்குதே...!!

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 months later...

ஏங்குதே என் உள்ளம் 

என்றோ பேசித் திரிந்த 

நாட்களை எண்ணி ஏங்குதே...

 

வாழ்க்கை வண்டியின் 

அச்சாணி முறியுமளவு சுமைகள்! 

 

அச்சாணி முறியும் தருணத்திலும் 

கழற்றி எறிந்து விட்டு 

புதிதாய் ஒன்றைப் போட்டு 

சுமக்கின்ற சாமத்தியசாலிகள் நாங்கள்! 

 

போதும் என்று ஓடிப் போகும் 

ஞானம் வந்து கூடவில்லை

 

குறை கூறிக் கொண்டே 

வாழும் வகையில் 

வாழ்க்கையோடு சமரசம் 

செய்து கொண்டோம்! 

 

அருகில் இருப்பது 

சொர்க்கமே எனினும் 

நரகமாக்கிக் கொள்ளும் சமத்தர் 

நாங்கள்! 

 

பல சமயங்களில் 

அருகில் இருப்பது 

மனைவி என்று உணர்ந்தவர் 

பாவ நிவர்த்தி செய்ய 

பகவானுக்கு கற்பூரம்

ஏற்றிக் கொள்க! ;-)

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.