Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அந்தாதி

ஒருவர் கவிதை வடிக்க அதன் முடிவு சொல்லை அல்லது எழுத்தை வைத்து மற்றவர் கவிதை வடிக்க வேண்டும். கவிதை எதைப்பற்றியதாகவும் எத்தனை வரியாகவும் இருக்கலாம்.

குறிப்பாக புதிதாக கவிதை எழுத இருப்போரும் மற்றும் கவிகள் படைக்கும் பலரும் தங்கள் கவித்திறமையை வளர்க்க ஒர் அடித்தளமாகவும் அமையும் என்பதே எண்ணம்.

எங்கே நீங்களும் இந்தப்பகுதியை அலங்கரித்துத்தான் பாருங்களேன்.

முதலில் நான் எழுதிய முதற்கவிதையோடு தொடக்கி வைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காயாத ரணங்கள் கொண்ட மனது

கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால்

கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும்

அழகில் நான் கறுப்பி ஆகிவிட்டதால்

நிலைக்கண்ணாடியும் என் நிறத்தின்

நிஜமாய் நிதர்சனமாய் சொல்கிறதே

Link to comment
Share on other sites

சொல்கின்றதே அழகின் மகிமையதை உன் கவி

கறுப்பும் அழகுதானே இறைவன் படைப்பில்

கவிதையின் சோகங்கள் என்னையும் -எழுத

தூண்டியது அந்தாதி உன் செயலால் பெண்ணே :wink:

Link to comment
Share on other sites

சொல்கிறதே..என்றறிந்து

கண்ணாடி முன் நின்று..

இறந்த கவலைகளை

மீண்டும் மீண்டும் பிரசவித்தேன்..

ஏதோ அழுகுரல்..

ஜன்னல்வழி எட்டிப்பார்த்தேன்..

ஓர் காடு சுவாலை

விட்டெரிகிறது..

அடடா..

அது.. மானிடத்தின்

சுடுகாடு..

தானில்லையென்றால்..

இயங்காது உலகென்ற..

பல தலைவர்கள்..

எரிகிறார்கள்..

தன்னைவிட அழகி

யாருமில்லை..என்ற

மோகினிகள் எரிகிறார்கள்..

தன்னைவிட அழகி..

யாருமில்லையென்ற

மோகினிகள் எரிகிறார்கள்

விம்பம் எரிகிறது..

அழ..அழ..அழகு எரிகிறது..

ஆசை எரிகிறது..

ஆணவம் எரிகிறது..

மதம்..பணம்..பந்தா..பகட்டு..

கௌரவம்..

எல்லாமே.. எரிசிறது..

மீண்டும் பார்த்தேன்..

உண்மை புரிந்தது..

கண்ணாடிவழியே..

ஓர் பேரழகி..

அடடா.. அது

நானேதான்..

ஓ.. பிரகாசிக்கும்..

அழகு..

மிளிர்கிறது..

எண்ணங்கள் ஊடாக..

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் சற்றுத் தாமதமாகிவிட்டது..

பெண்ணே..

பேசத்துடிக்கும்..

ஊமையானேன்..

பறக்கத் துடிக்கும்

விழுதானேன்..

நீந்த நினைத்த

நெருப்பானேன்..

எண்ணங்கள்..

ஈடேற்ற முடியாத

ஏழையானேன்.

எல்லாம் விதைத்த

பெண்ணே..

நீ மடடும்

பார்க்க முடிந்தும்...

பார்க்காமல்..

பழக முடிந்தும்

பழகாமல்..

அருகிலிருந்தும் தழுவாமல்

ஆளைக் கொல்வதேன்..

Link to comment
Share on other sites

கறுப்பி எழுதியது:

"காயாத ரணங்கள் கொண்ட மனது

கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால்

கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும் "

இதற்கு என்ன அர்த்தம்? இது கூட விளங்கவில்லையா என்று கேட்காதீர்கள். சத்தியமாக எனக்கு விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

ஆளைக் கொல்வதேன்?

வாளாய் ஒரு வீச்சு

காயத்தில் காயமில்லை

மாயமென்னடி மாயமிது?

பாயுமுன் அறியவில்லை - எனைப்

பாடையிலும் வாட்டுமென்று

தீயெரியும் அடர் நடுவே - உன்

தீண்டலின் இன்பம் கண்டு

நான் எரிந்து விட்டேனடி!

நான்.................. எரிந்து விட்டேனடி!

Link to comment
Share on other sites

எரித்தாரே பட்டினத்தார்

பாட்டாலே பாடையை

எரிகிறார் ஆதியவர்

:P :P :P

படையினில் போகுமுன்

காயமது வேகும் காலம்

காலமதின் கோலம்

அதில் நீயென்ன

நானென்ன

எல்லோரும்தான்

அதற்கிடையில்

கறுப்பென்றும்

சிவப்பென்றும்

கலக்கமேன்

(காயம் என்றால் உடைலையும் குறிக்கும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி எழுதியது:

"காயாத ரணங்கள் கொண்ட மனது

கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால்

கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும் "

இதற்கு என்ன அர்த்தம்? இது கூட விளங்கவில்லையா என்று கேட்காதீர்கள். சத்தியமாக எனக்கு விளங்கவில்லை.

காயாத ரணங்கள் கொண்ட மனதில் கஷ்டங்கள் மேலும் எழுவதால் பழைய ரணங்கள் (மறைந்தே) தற்தொலை செய்யும்.

எல்லாம் இருகோடுகள் சென்டிமென்ட் தான் சபேசன் சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கமேன் கலங்குவதேன என்றே

கேட்டுவிட்ட கணப்பொழுதுகள்

பரந்தமனதுடன் பக்குவமாய்

பல கவிகள் படைத்திட்ட

களஉறவுகள் மேலும் மேலும்

தொடர்ந்திட காத்திருக்கும்

மனதுடன் இங்கே

Link to comment
Share on other sites

கலக்கமேன் கலங்குவதேன என்றே

கேட்டுவிட்ட கணப்பொழுதுகள்

பரந்தமனதுடன் பக்குவமாய்

பல கவிகள் படைத்திட்ட

களஉறவுகள் மேலும் மேலும்

தொடர்ந்திட காத்திருக்கும்

மனதுடன் இங்கே

இங்கே ஒருவரில்லை இருவரில்லை

தமிழ்த்தாயின் கவிக்குழந்தைகளுக்கு பஞ்சமில்லை

விழிவழியோ வாய்வழியோ வார்த்தைகள் வருவதில்லை

மதிவழிவரும் வார்த்தைகள் வற்றுவதில்லை

வற்றாத வார்த்தைகள் கொண்டு வாருமய்யா கவிபடைக்க

படைக்க என்று தொடங்குங்ள் நண்பர்களே

Link to comment
Share on other sites

படைக்கத் தெரிந்த இறைவா- உனக்கு

காக்கத் தெரியாதோ.

தமிழர் எங்கள் நிலையை உன்னால்

உணர முடியாதோ

அழிவைச் செய்யும் அரசை - உன்னால்

அடக்க முடியாதோ

அழுது புலம்பும் மக்கள் துயரை

அறிய முடியாதோ உன்னால்

அறிய முடியாதோ

முடியாதோ என்று தொடங்குவோமா?

Link to comment
Share on other sites

முடியாதோ..

மூத்ததமிழ்..

குடி

மடியேறத் தாய்மண்ணில்..

தடையாவும் உடையாதொ..

தனி.

தமிழ்ஈழம்..காணேனோ..

மதத்திற்காய் மதம்

கொண்ட..

மக்கள் யாமல்ல..

பணத்திற்காய்.

பிணம் செய்யும்..

அமெரிக்கர் யாமல்ல..

எம்மண்ணில்

நாம் வாழ

வழி காணல் பிழையோ..

இது தடையாகும் தவறோ..

Link to comment
Share on other sites

முடியாதோ..

மூத்ததமிழ்..

குடி

மடியேறத் தாய்மண்ணில்..

தடையாவும் உடையாதொ..

தனி.

தமிழ்ஈழம்..காணேனோ..

மதத்திற்காய் மதம்

கொண்ட..

மக்கள் யாமல்ல..

பணத்திற்காய்.

பிணம் செய்யும்..

அமெரிக்கர் யாமல்ல..

எம்மண்ணில்

நாம் வாழ

வழி காணல் பிழையோ..

இது தடையாகும் தவறோ..

தவறோ என பிறர் கேட்க செய்த பல தவறுகள்

கொல்வதும் தவறுதான் கொல்லப்படுவதும் தவறு

புரட்சிகளில் சிறந்தது காந்தி சொன்ன அஹிம்சை புரட்சி

வாள் தூக்கியவன் வாளால் சாவான் வரலாறு அத்தாட்சி

நீ சுட்டாலும் சுடும் நான் சுட்டாலும் சுடும்

இதற்கு முடிவு இல்லாவிடில் அமைதி எப்படி புறப்படும்

அடுத்து புறப்படும்....

Link to comment
Share on other sites

புறப்படும் மகனை..

போருக்கு அனுப்புகையில்..

நெற்றியிலே..திலகமிட்டு..

நேசத்துடன் முத்தமிட்டு..

பெருமையோடு அனுப்பும்..

அருமை மாதர் வழி..

வந்த மறத்தமிழ்பெண்..

மார்போடு குண்டு கட்டி..

வீரத்தின் விளைநிலத்தில்..

சுதந்திரத்தை விதைக்கவென

தூள்தூளாய் போவாளடா..

காவியம் ஆவாளடா..

கோடி காலங்கள் வாழ்வாழடா..

அவள் அணையாத தீபமடா..

Link to comment
Share on other sites

அடுத்து புறப்படும்....

அடுத்து புறப்படும்- எதுவோ?

தமிழர் ஆவி அடுக்கடுக்காய்

சரியும் அதுவோ?

விதியே என்ன செய்ய

சொல்கிறாய்-?

எம் உடல்

எலாம் - தெருவோர

நாய்களுக்கு - தீனியா...

ஆகவா?

அதையும்...

நீயே சொல்லுவாய்!

மலைகளில் முட்டினால்..

மண்டை உடையுமென்றே....

சருகுகளுக்கு - தீ

மூட்டூறார்.- கவனி

சகியே -!!

ஆற்றை கடக்க

ஒரு துடுப்பு தா...!

இல்லை-ஆன்மீகம்

வேண்டாம்-போகிறேன்..

உன் அணைப்பிலிருந்து

ஒரு விடுப்பு- தா!

Link to comment
Share on other sites

தீபம் ஏற்ற பலர் வாழ்வில் தீக்குச்சியே போதும்

சிறு தொழில் செய்து பெரு வாழ் வாழும்

குண்டுகள் எரிந்து நாம் வெளிச்சமே தேடினால்

வெளிச்சம் வந்த பின் குருடராவோமே

வேண்டாம் இந்த நெருப்புடன் இவ்விளையாட்டு

துப்பாக்கிகள் வெறும் தீபாவளியில் கேப்பைமட்டும் வெடிக்கட்டும்

பெண்ணின் வயிறு பிள்ளை சுமக்க மட்டுமே வலிக்கட்டும்

ஆணின் நெஞ்சுறம் உலக அமைதிக்கே நிற்கட்டும்.

நிற்கட்டும் என்றே துவங்கலாம்.

Link to comment
Share on other sites

நிற்கட்டும் என

கடிவாளம் இட்டுமென்..

கற்பனையைக் கட்டி வைத்தேன்..

ஆனாலுமடங்காமல்..

ஆவேசப்புரவியென..

அது

உனைக்காண ஓடுதடி..

வார்ததை..வரியாகப் பாயுதடி..

கவிழ்ந்திருந்த பிறைகள்..

கருந்திராட்சையிரண்டைக்

காக்க காக்க..

ரோஜா இதழிரண்டால்..

மூடிமூடி அவை திறந்து

என்னைப் புூவை

பார்க்க பார்க்க

பரவசமானேனே..

என் பத்தினியை மறந்தேனே..

அழகே..

என் பத்தினியை மறந்தேனே..

Link to comment
Share on other sites

மறந்தேனே என் மூச்சை விட மறந்தேனே

பிறந்தேனே உன்னைக்கண்டு மீண்டும் பிறந்தேனே

பறந்தேனே காதல் விமானத்தில் பறந்தேனே

இறந்தேனே மீண்டும் பிறக்க இறந்தேனே

இறந்தேனே என்று தொடங்கலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தேனே என்று சொல்லி எற்றி விட்டார்கள்

படத்துக்கு விளக்கு ஆனாலும் வாழ்கிறார்கள் பலர்

வேண்டும் வரம் இறந்த பின்னும் வாழும் வாழ்க்கை

வேண்டும் வேண்டும் நிரந்தரமாய்

Link to comment
Share on other sites

நிரந்தரமாய்

வந்து

அன்பே

உன்னை

எனக்கு

தந்து விடு...

நாம்

நிரந்தரமாய்

இணைந்திடுவோம்

நிரந்தரமாய்

வந்து விடு....

கண்ணீரோடு

கவலைகளை

எத்தனை

நாள்

நான்

சுமப்பேன்....???

உன்னை

பிரிந்து

தனிமையிலே

எத்தனை நாள்

நான்

தவிப்பேன்...???

நேரமது

ஓடுதடி

காலமது

கழியுதடி....

காத்திருந்த

போதுமடி

என்னருகில்

வந்து விடு....

உன்னை

எனக்கு

தந்து விடு......

நன்றி

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

தந்துவிடு

ஏந்திழையே..

உந்தன் மடி...

நான் தவிக்கலாமோ..

நாளும்..

வந்துவிடு..

வானவில்லே நீயும்

என்னை

வதைக்கலாமோ

நாளும்..

Link to comment
Share on other sites

நாளும்

நல்ல

நாளுமாச்சு....

நம்ம

சேரும்

காலமாச்சு....

காத்திருந்த

காலமது

கனியும்

நேரம்

இன்று ஆச்சு....

எத்தனையோ

கஸ்ரங்களை

நாமயன்று

பட்டிருச்சு...

இன்று

வந்து

திருமணத்தில்

நாமயின்று

கூடயிலே

எல்லமிப்போ

மறந்து போச்சு....

-வன்னி மைந்தன் -

Link to comment
Share on other sites

மறந்துபோச்சுடா..தமிழா..

காசு பணம் வந்தவுடன்..

கஸ்டப்பட்ட காலமெல்லாம்

எனக்கிப்போ..

மறந்துபோச்சுடா..

தெரிஞ்சுபோச்சுடா..தமிழர..

பாசம்..நேசம்

உறவு எல்லாம்..

காசிருந்தாக் கூடுமென்று

தெரிஞ்சுபோச்சுடா..

கணவன்..மனைவி

வாழக்கை..

இரட்டை மாட்டுவண்டி..

இப்ப வாழ்க்கை வண்டி..

அட

ரெண்டு மாடும் நொண்டி..

பாதை எங்கு போகும்..

எங்கள் பயணமென்னவாகும்?..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.