Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

பயணமென்னவாகும்

எங்கள்

பயணம்

என்னவாகும்...???

எங்கள்

அணியில்

ஒரு சோடி....

இழந்து

இன்று

நாங்கள் வாடி...

வேதனைகள்

தினமும் கூடி

வருகுதேனோ

எம்மை தேடி....???

எங்கள்

மக்கள்

அவலங்களை

எடுத்து

சொன்னான்

உலகில் ஓடி....

அந்த

உத்தமனை

இழந்து

இன்று

நிக்கிறோமே

நாங்கள் வாடி....

மொத்த

மக்கள்

விழிகளிலே

பாயுதின்று

கண்ணீர் கூடி....

என்ன

செய்வோம்

என்ன

செய்வோம்....

எம்

தமிழை

காத்திடவே

இனி

எம் பணிகள்

என்

செய்வோம்.....!!!

பாடு பொருள் ரவிராஜ்..கூட்டமைப்பு

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

கூட்டமைப்பு எனும்

குருவிக்கூடு...அது

பாவிகள்..

தோட்டாவில்..

துடிக்கின்றதே..பேசப்

புலமை கொண்டவன்..

தமிழ் பேசி..

கூட்டங் கண்டவன்..

எங்களில் ஒருவன்..

நியாயம்..சொன்னதற்கா..

நீதி கேட்டதற்காக..

தமிழ் மூச்சை

விட்டதற்காக..

ரவியவர்கள்..

மூச்சை பறித்தனர்?.

சிங்களத்தில் யாரும்

செத்தால்..

கண்டனம்..

தமிழ் மக்கள்

nhதகையாயச் செத்தால்

கவலை..

அனுதாபம்..

சர்வதேசமே..

அடச்சீ..

எல்லாமே..

வேசம்தானா...

Link to comment
Share on other sites

வேசம் தானா

வேசம் தானே

வேடமதாய்

ஆட்சியிலே

போடுகிறார்

வேசம் தானே...

வகை

வகையாய்

வாகரையில்

வறிஞ்சு கட்டி

எறிந்தனரே...

எம் தமிழை

அழித்து விட்டு

வருத்தமதை

சொன்னனரே....

ஊனமாக்கி

எத்தனையை

உறக்கத்திலே

வைத்தனரே....

மக்களதை

அழித்துவிட்டு

மகா பொய்

சொல்லினரே...

புலி

புலியென்று

புளுகி வேறு

தள்ளினரே....

நித்தம்

நித்தம்

உயிர் பலிகள்

தினம் தோறும்

பறிக்கின்ராரே....

இத்தனையும்

கண்டுலகம்

மௌனமாக

இருப்பதேனோ....??

மொத்தத்திலே

உலகத்தாரும்

செய்கின்றார்

வேசம்தானா....???

வன்னி மைந்தன்-

Link to comment
Share on other sites

வேசமிட்டு வந்தவர் நாம் இவ்வுலகிற்கு

இயற்கை அரிதாரம் ராஜபாட்டை

திரையும் கீழ் விழ முடியும் இந்த நாடகம்

முடியாதே இறை நடத்தும் இந்த கூத்து

Link to comment
Share on other sites

கூத்துப் போட

நாற்பது பேர்..

பார்த்துப் போக..

நானூறுபேர்..

வாழக்கையெனும் மேடையில்..

நாம் போடும் நாடகங்கள்..

அடப்போடா..

எல்லாம்..

மாயை

Link to comment
Share on other sites

மாயை

தோற்றமதாய்

வந்துயவள்

மாறிப்

போனாள்...

சுற்றும்

முற்றும்

தேடிப்

பார்த்தேன்

ஜயோ

அவளை

காணவில்லை...

எங்கு போய்

மறைந்தாள்

அவள்....???

Link to comment
Share on other sites

அவள் நினைவில்

நான் கிடந்து வாட.

அவளோ....

புதுரோஜா போல

ஒவ்வொரு நாளும்..

ஜனவரியில் பார்த்தவளை..

நினைந்து நினைந்து

நாட்காட்டி

தேய்ந்து தேய்ந்து..

வருடம் முடிய நாட்காட்டியை

மாற்றிவிடலாம்..

என்னை....

என்னைக் கொஞ்சம்

நினைத்துப்பார்..

Link to comment
Share on other sites

நினைத்துபார்

என்

அன்பே...

உன்னருகில்

நான்

இருக்க...

என்

அருகில்

நீ

இருக்க....

ஒருவரை

ஒருவர்

மறந்து

வாழ்ந்த

அந்த

காலமதை...

என்னவளே

ஒருகணம்

உந்தனுக்குள்

நினைத்து பார்...

எத்தனை

ஆனந்தம்

எத்தனை

சில்மிசம்....

இன்னும்

என்னால்

மறக்க

முடியவில்லை...

மறவாமால்

என்னவளே

நீயும்

ஒரு முறை

நினைத்து பார்....

வன்னி மைந்தன்-

Link to comment
Share on other sites

பார்த்து பார்த்து காதலித்த காதல் குருடானது

பார்க்காமல் காதலித்து கோட்டை உருவானது

காணாமல் காதல் கண்டதும் போதலும் பார்த்தாயிற்று

காதல் போதை மறக்க மற்ற போதைகள் வந்தாயிற்று

காதல் கதைகளுக்காக கட்டிய கோவண்தையும் விற்றாயிற்று

ஆயிற்று அல்லது ஆகியது என்று தொடங்கலாம்

Link to comment
Share on other sites

ஆயிற்று

இன்று

வெள்ளி....

தருவாயா

நீ தான்

காசு அள்ளி...

பார்ப்பாயா

நீ தான்

வெள்ளி....???

பாவமடா

நான் தான்

தம்பி...

போறேன்

நான்

வண்டி தள்ளி....

ஊத்தனும்

பெற்ரோல தான்

அள்ளி...

அட...

தருவாயா

நீ தான்

காசு அள்ளி....

இல்லை

பார்ப்பாயா

நீ தான்

வெள்ளி....!!!

Link to comment
Share on other sites

வெள்ளிச் சலங்கை கட்டி

துள்ளி வரும் வெண்ணிலவே..

பள்ளி வரத் தாமதமேன்..

அள்ளியே நானணைக்க..

கொள்ளையாசையடி..தொடத்

தள்ளிப்போவதென்ன கண்ணம்மா..

வெட்கமா..நாணமா..

Link to comment
Share on other sites

நாணமா

அடி

பெண்ணே

உனக்கென்ன

நாணமா...???

என்னருகில் வர

உனக்கென்ன

இன்று

நாணமா....???

எத்தனை

காலங்கள்

காத்திருந்தேன்...

உனக்காக

நான்

பாத்திருந்தேன்...

கற்பணை

ஆயிரம்

வளர்த்து

நின்றேன்...

உனை

கட்டியணைக்கவே

துடித்து

நின்றேன்...

என்

ஆசையை

புரியா

நீ ஏனடி...

எட்டவே

நிக்கிறாய்

பாரடி...

என்

அன்பே

உனக்கென்ன

இன்னும்

நாணமா.....????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாணமா நானறியேன்

உன் பார்வையின்

அர்த்தம் அது புது புது

அர்த்தங்களின் வடிவங்கள்

புரிந்து கொண்டதே

என் பெண்மையின் உள்ளுணர்வுகள்

மனமோ விழிப்பின் விடியலாய்

Link to comment
Share on other sites

விடியலாய்

வந்துதித்த

விடியலொன்று

விடியு முன்னே

எங்கள் முன்

விழுந்ததின்று....

வீரமுடன்

வீறு கொண்ட

வீரப் புலியை

இன்று

வீரமில்லா

ஒன்று வந்து

வீழ்த்தியதே...

நெஞ்சமதில்

வேதனையை

மூட்டியதே....

நீதி கேட்டு

நின்றவனை

வீழ்த்தியதை

ஜெனநாயக

வாதியென்று

உரைப்பதுவோ....???

சாவறிந்தும்

சாவுக்குள்ளே

சாவனான்

எங்கள்

விடுதலையின்

வரலாற்றில்

பதிவானான்...

எத்தனையோ

பட்டங்களை

அவன் அடைந்தான்

இருந்தும்

மக்களுக்காய்

வாழ்ந்தேயின்று

அவன் மடிந்தன்....

மா மேதையாய்

எம் முன்னே

அவன் விரிந்தான்

இன்று

மா மனிதனாய்

எமை விட்டு

போய் மறைந்தான்...

-வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

விடியலாய் எண்ணி நானும்

விமானத்தில் காலை வைத்தேன்

விட்டிலாய் விழுந்தேன் இங்கே

விமோசனம் எனக்கும் உண்டோ

மனம்நிறை கணவன் என்று

மகிழ்வுடன் வந்த என்னை

அறிவிலி என்று எள்ளி

ஆக்கினை பண்ணும் கோரம்

மதுவினை மணம் முடித்தான்

மங்கைகள் தேடி நின்றான்

அடிமையாய் வேலை செய்ய

அமர்த்தினான் என்னை இங்கே

புலத்திலே நிறைவே என்று

மனத்திலே கொண்ட எண்ணம்

தவறது உணர்ந்து விட்டேன்

தப்பிட வழியும் உண்டோ

Link to comment
Share on other sites

ஐஐயோ தட்டச்சுச் செய்து போடுவதற்குள் மைந்தன் முந்திவிட்டார். மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

மறைந்தார் என்று சொல்லி

மறவரை மறக்க மாட்டோம்

மனத்திலே தினம் இருத்தி

மாண்புறக் காத்து நிற்போம்

நாட்டினைக் காப்ப தற்காய்

நன்னுயிர் தந்த வீரர்

மாவீரர் உங்கள் நாமம்

மறையுமோ தமிழர் நெஞ்சில்

Link to comment
Share on other sites

நெஞ்சில்

உன்கென்ன

காயமோ...???

அன்பே

காதல்

தந்ததது

ஞாயமோ...???

தேம்பியே

அழுகிறாய்

நீ

பாவமே...

இதை

செய்த

அந்த

பாவியோ

யாரம்மா...???

Link to comment
Share on other sites

யாரம்மா..நீ

அழுக்குத்துணியும்..

ஒட்டியவயிறும்..

குமட்டும் நாற்றமும்

என் சொத்து..

என் வயசுப் பிள்ளையெல்லாம்

பள்ளிக்கு போகையிலே..

பிச்சைக்கு வருகின்ற..

அநாதை மேல்..

இரங்கி..அள்ளி

அணைத்தவளே..

அம்மா நீ

யாரம்மா..

ஞானசம்பந்துனுக்கு

பால் கொடுத்த

உமையாளா..

கறுப்புக்குழந்தைகளைக்

கட்டித்தழுவிய..

வெள்ளை இளவரசி

டயானாவா..இல்லை

ஏழை ஜனங்களுக்காய்..

தன் வாழ்வை அர்ப்பணித்த

தாய் தெரசாவா..

யாரம்மா நீ

என் போல

அநாதைக்

குழந்தைகளை வாழ்விக்க

அன்னை போல்

தந்தை போல்..

அன்பு உள்ளங் கொண்டு

கோடி பேர்

வரவேண்டும்.

Link to comment
Share on other sites

வரவேண்டும்

வரவேண்டும்

இறைவா

நீ

வரவேண்டும்....

எந்தன்

வறுமைகள்

போகக்கிடவே

வரமொன்று

தர வேண்டும்...

நின்மதியை

வந்தெனக்கு

நிரந்தரமாய்

தரவேண்டும்...

கண்ணீரோடு

கவலைகளை

களைத்தெறிய

வேண்டும்...

எந்தன்

கஸ்ரமது

தொலைகின்ற

வாழவொன்று

தரவேண்டும்...

நாள்

எல்லாம்

புன்னகையில்

குழிக்கின்ற

முகம் வேண்டும்...

இத்தனையும்

நடந்திடவே

இறைவா

நீ

வரமொன்று

தரவேண்டும்....

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

தரவேண்டும்..நிம்மதி..

கொஞ்சம்-என்

நெஞ்சில்..

பணம் படைத்து..

புகழ் உடைத்து..

கூட்டம் சேர்ந்து..

குதூகலித்து..அட..

ஆடாத ஆட்டம்

எல்லாமும் போட்டு..

இல்லையப்பனே.. நிம்மதி..

கோவில் சன்னதியில்..

போயிரு வருமென்றார்..

ஐயரும் கும்பிட்டதால்..

அகந்தை பெருகியதே..அல்லால்..

அமைதி வரவில்லையே..

உலக சமனிலையை..

உயர்வும் தாழ்வுமற்ற

ஒப்பற்ற நிலையை..-ஐயனே..

உன் கோவிலிலும்

காணவில்லை.

Link to comment
Share on other sites

காணவில்லை

காணவில்லை

என் இனத்தை

காணவில்லை....

பள்ளி போன

பிள்ளை

இன்னும்

வீடு இன்னும்

திரும்பவில்லை...

தேடி போன

உறவு கூட

வீடு இன்னும்

திரும்பவில்லை...

எங்கள்

வீட்டில்

மொத்தத்தில

நின்மதியை

காணவில்லை...

ஜயா மகிந்தர்

ஆட்சியிலே

எத்தனையோ

காணவில்லை...

அவலத்திலே

எங்கள்

மக்கள்

ஜயோ உலகம்

காணவில்லை...

நித்தம்

நித்தம்

கொலைகள்

அங்கு

யாருமின்று

தடுக்கவில்லை...

மொத்தத்திலே

இலங்கையிலே

சுதந்திரத்தை

காணவில்லை...

-வன்னி மைந்தன் -

Link to comment
Share on other sites

(அடடா வன்னிமைந்தன் மீண்டும் காணவில்லையா..)

காணவில்லை -உன்

கண் பட்ட காயம்..

ஆறவில்லை ஏன்..

நீ வந்த இதயம்..

போதவில்லை..நான்

பெற்ற முத்தம்..

குறையவில்லை அடி

சிற்றின்பப் பித்தம்..

தூங்கவில்லை..நீயின்றி

மெத்தை முள் மெத்தை..

உண்ணவில்லை..உணவிருந்தும்..

பசியெனக்கு இல்லை..

தெரியவில்லை.. கணப்பொழுதில்..

என்னானேன். உன்னால்

வருந்தவில்லை..இதுகூட

இன்பந்தான் இந்நாள்...

Link to comment
Share on other sites

இந்நாள்

இன்று

நானும்

மறக்க

முடியுமா...???

நாங்கள்

இணைந்த

இந்த

திருநாளை

மறக்க

முடியுமா....??

சொர்க்கமதை

தந்த நாளை

மறக்க

முடியுமா....???

நல்ல

சுகந்தங்களை

தந்த நாளை

மறக்க

முடியுமா....???

வாழ்க்கையிலே

இந்த நாளை

மறக்க

முடியுமா....???

நாங்கள்

திருமணத்தில்

இணைந்த நாளை

மறக்க முடியுமா....????

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.