Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

மறக்கமுடியுமா..

என் பள்ளி நாளை

மனதில்

பட்டாம்பூச்சி

பறந்தநாட்களை

மறக்கமுடியுமா..

சின்னவயதில்..

துள்ளிச்சிறகடித்த

பழைய நாளை

மறக்கமுடியுமா..

சோவென்று மழைகொட்ட

புத்தகப்பையை

தூக்கி

எறிந்து..

சேற்றில் காலடித்து..

குளித்து

மகிழ்ந்ததுவும்..

காய்ச்சல் வந்து..

வீட்டில்..எல்லாரும்..

விழுந்து விழுந்து

கவனித்ததுவும்..

மறக்கமுடியுமா..

சுற்றுலா நேரத்தில்..

வாத்தியாரை ஏய்த்துவிட்டு..

பிரிந்து சென்று..

மகிழ்ந்ததுவும்..

பேச்சு விழுமென்று..

விட்டுவிட்டு போனதாக.

அழுது நடித்ததுவும்

மறக்கமுடியுமா..

மேசைக்கரையில்.

அழுக்கைப்பூசி..

பெண்கள் வெள்ளாடையை..

கறைகள் செய்தததுவும்..

பெண்கள் பின்னல் இழுத்து..

சேட்டைகள் செய்ததுவும்..

மறக்கமுடியுமா..

அணிவகுப்பு வேளையில்..

கால்வலி

எனச்சொல்லி

வகுப்பறையில் அமர்ந்து..

வண்ணப்படம் ரசித்ததும்..

விளையாட்டுப்போட்டியில்..

வென்ற நாடகளையும்..

மறக்கமுடியுமா..

பிரியும் நாளில்

நெஞ்சு கனத்து..

நண்பரெல்லாம்

அழுததையும்..

கணக்காசிரியர் காலைத் தொட்டு

ஆசி பெற்றதையும்..

என்னாயுள் நாளில் என்றேனும்..

மறக்கமுடியுமா..

எப்படி முடியும்.

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

மறக்கமுடியுமா..

என் பள்ளி நாளை

மனதில்

பட்டாம்பூச்சி

பறந்தநாட்களை

மறக்கமுடியுமா..

சின்னவயதில்..

துள்ளிச்சிறகடித்த

பழைய நாளை

மறக்கமுடியுமா..

சோவென்று மழைகொட்ட

புத்தகப்பையை

தூக்கி

எறிந்து..

சேற்றில் காலடித்து..

குளித்து

மகிழ்ந்ததுவும்..

காய்ச்சல் வந்து..

வீட்டில்..எல்லாரும்..

விழுந்து விழுந்து

கவனித்ததுவும்..

மறக்கமுடியுமா..

சுற்றுலா நேரத்தில்..

வாத்தியாரை ஏய்த்துவிட்டு..

பிரிந்து சென்று..

மகிழ்ந்ததுவும்..

பேச்சு விழுமென்று..

விட்டுவிட்டு போனதாக.

அழுது நடித்ததுவும்

மறக்கமுடியுமா..

மேசைக்கரையில்.

அழுக்கைப்பூசி..

பெண்கள் வெள்ளாடையை..

கறைகள் செய்தததுவும்..

பெண்கள் பின்னல் இழுத்து..

சேட்டைகள் செய்ததுவும்..

மறக்கமுடியுமா..

அணிவகுப்பு வேளையில்..

கால்வலி

எனச்சொல்லி

வகுப்பறையில் அமர்ந்து..

வண்ணப்படம் ரசித்ததும்..

விளையாட்டுப்போட்டியில்..

வென்ற நாடகளையும்..

மறக்கமுடியுமா..

பிரியும் நாளில்

நெஞ்சு கனத்து..

நண்பரெல்லாம்

அழுததையும்..

கணக்காசிரியர் காலைத் தொட்டு

ஆசி பெற்றதையும்..

என்னாயுள் நாளில் என்றேனும்..

மறக்கமுடியுமா..

எப்படி முடியும்.

எப்படி முடியும் இந்த

சிங்களம் தனைத் துரத்த

என்றுநாம் ஏங்கி நிற்க

எழுந்துமே வந்த வீரர்

நாயெனச் சொல்லி எம்மை

ஏளனஞ் செய்த கூட்டம்

புலியெனச் சொல்லி யஞ்சும்

புரட்சியைச் செய்த வீரர்

தமிழினை காக்க வென்று

தம்நலம் துறந்து வந்தே

மண்ணினைக் காத்து நிற்கும்

மறவரே வாழி வாழி

Link to comment
Share on other sites

எப்படி முடியும்...???

என்னவளே

உன்னை

சுமக்கும்

என்

இதயத்தால்

உன்னை

மறக்க

என்னால்

எப்படி முடியும்...???

தவறாய்

வந்து

ஏதோ

தவறாய்

உரைக்கிறாய்...

தவறி

வந்து இனி

ஏதும்

தவறாய்

உரைக்காதே

உன்னை

என்னால்

மறக்க முடியாது...

என்

அன்பே

மன்னித்து விடு...

வன்னி மைந்தன்

அட..மன்னிக்கவும்..அதற்குள் ஜயா முந்தி விட்டார்..சரியான போட்டி..வாசன் இணைந்திருங்கள்...

வாழி..வாழி..என்ற தலைப்பில..தொடருங்கள்..இனி வருபவர்கள்

Link to comment
Share on other sites

வாழி..வாழி

தாய்த்தமிழ்

நீடூழி வாழி..

தரணியில்

புகழொடு

தளைத்திட

வாழி..

கனத்தவானம்..

கையொடு

வசப்பட வாழி..

காற்றிலும்..

கடலிலும்.

மழையிலும்..

மண்ணிலும்..

நாற்றிடும்

நெல்லிலும்

மழலையின்

சொல்லிலும்..

வாழி..எந்நாளும்..

எம்தமிழ்..

குறைவின்றி வாழி

ஆங்கிலமும்..டொச்சும்..

பிறஞ்சும்..பிறமொழியும்..

எல்லாமும்

கலந்தாலும்.

தாய்த்தமிழ் அழியாமல்..

எந்நாளும் வாழ்க

வளர்க..

Link to comment
Share on other sites

வளர்க

கவியே

வளர்க...

புரட்சி

கவியாய்

பாரினிலே

விகடகவியே

வளர்க...

உன்

திறமைகளை

இன்னும்

நீயே

திறம்படவே

வளர்க்க...

திரண்டு

வந்து

கவிகளையே

திரட்டி

வந்து படைக்க...

எத்தனையோ

திறமைகளை

உன்னகத்தே

வைத்திருக்காய்...

அட

உந்தன்

கவி

கண்டு

நானும்

வியந்து

எல்லோ

நின்று

போனேன்...

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

போனேன்..எனப்

பொய்யுரைத்தேன்..

பூங்கொடியே..

கோவிலுக்கு நான்..

போய்..

நான்கு வருடமடி

என் நாயகியே..

கோவிலுக்கு போகச்சொல்லி

பணிக்காதே..

அம்மணி..

வியாபார சந்தையாட்டம்

கண்ணுக்கு தெரியுதடி..

வருகின்ற கூட்டங்கள்..

நாடகமும்..நாட்டியமும்..

காணச்சகிக்ககேனே..

கண்மனியே..

கோவிலிக்குப்போகச்சொல்லி

என்னைக் கெஞ்சாதே..

வசதியில்லை என்று..

வருகின்ற காணிக்கை

சுருட்டும் கயவரும்..

சுருட்டவிடாததால்..

சிவலிங்கத்தை..

தும்புக்கட்டையால்..

தாக்கும் பூசகரும்..

காணச்சகிக்காத

கண்றாவி கண்மணி

வேண்டாமடி..

வீட்டிலிருந்தே..

வணங்கிடுவேன்..

கோவில்

போகக்கேட்காதே..

கண்மனியே..

Link to comment
Share on other sites

கண்மணியே!

காணச் சலிக்காத

காட்சிபல காண்பதற்காய்

கண்ணுள்ளே சிறையிருக்கும்

கணிமணியே நன்றியம்மா

Link to comment
Share on other sites

கண்மனி

என்றுன்னை

காலமெல்லாம்

நான்

உரைத்தேன்...

நெஞ்சமதில்

தூக்கி

வைத்து

நெசமாக

கொஞ்சி

நின்றேன்...

அடி

பாவி புள்ள

ஈற்றினிலே

வேறு மனம்

தவி விட்டாயே

இது

எனக்கே

நியாயமா...???

கண்மனி

என்றுன்னை

காலமெல்லாம்

நான்

உரைத்தேன்...

நெஞ்சமதில்

தூக்கி

வைத்து

நெசமாக

கொஞ்சி

நின்றேன்...

அடி

பாவி புள்ள

ஈற்றினிலே

வேறு மனம்

தவி விட்டாயே

இது

உனக்கே

நியாயமா...???

அட..ஒரே நேரத்தில் இருவரும்..வாசன்..வியப்பா இருக்குதய்யா..

நன்றியம்மா

அம்மா

உந்தனுக்கு

நன்றியம்மா

எனை

பெற்றெடுத்து

உத்தமியே

உந்தனுக்கு

நன்றியம்மா...

உன்

உதிரத்தை

பாலாக்கி

எனக்கு

ஊட்டியவளே..

உன்

கடன

அடைக்க

எனக்கு

ஜென்மாதி

ஜென்மம்

எடுத்தாலும்

போததம்மா..

Link to comment
Share on other sites

நியாயமா..

தோழர்களே..

விடுமுறை

நாளிலென்னை..

விடாமல் பிடித்து

வைத்து..என்ன

இது கவிக்கூத்து..

நடக்கட்டும்.

சலிக்காத..என்

தமிழ்..

சலித்திடுமோ

என்று பயம்..

இப்போது

வந்தென்னைக்

குடையுதே..

Link to comment
Share on other sites

குடையுதே

என்று

நீ

குழம்பாதே....

வீணாக

கிலி நீ

கொள்ளாதே...

தேனிலும்

இனியது

எம் தமிழ்...

தெவிட்டாது

உனக்கது

மறவாதே.....

விடுமறை

என்று

கெஞ்சிறாய்...

சரி

விடுமறை

தருகிறேன்

போய் வா....

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

குடையுதே தினம்தினம் மனதினைக் குடையுதே

பாதகச் செயலினைச் செய்திடக் கூசிடா

படையதன் அராஜகச் செயலெனைக் குடையுதே

தமிழிராய்ப் பிறந்ததால் தினம்தினம் இறந்திடும்

தமிழரை எண்ணினால் மனமது குடையுதே

பதறிடும் தமிழரைப் பகடையாய் பார்த்திடும்

பாதக முதல்வரின் செயலெனைக் குடையுதே

சரியான போட்டி!

கொஞ்சம் பிந்திவிட்டேன்.

வன்னிமைந்தனின் போய்வா என்ற தலைப்பிலேயே தொடரலாம்.

போய்வா என்று சொல்லிப்

போர்க்களம் அனுப்பி வைத்த

பிள்ளையை இழந்து நிற்கும்

பெற்றவர் மனதில் உள்ள

துயரினைக் களைவ தற்காய்

தூரவே வாழும் நாமும்

எதுவுமே செய்ய வில்லை

என்றதை நினைத்ததுண்டா?

Link to comment
Share on other sites

நினைத்ததுண்டோ..

நெஞ்சே..நீ

முன் செய்த தவறுகளை..

துடித்ததுண்டோ.. அது

பிழைகளெனவுணர்ந்து..

கண்ணில் நீர்..

வடித்ததுண்டோ..சொல்..

கடைசிப்பொழுதினிலேனும்..

குற்றமெனக்கறியினினும்..

சுற்றமறியாமல்..நெஞ்சக்கூட்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பு....எனும் சொல்லால்

மனிதத்தை தூக்கிலிட்டு

மனங்களை உடைத்து விட்டு

வலி செய்து, வலி செய்து

வாழ்வெடுத்து நடக்கிறது அநீதி

Link to comment
Share on other sites

அநீதி தீ வளர்க்கும்

அரசியல் யாகத்தில்

இலஞ்சமும் வஞ்சமும்

எரிபாகங்களாய்

இட்டு வளர்ந்த தீ

எல்லா ஜனங்களையும்

சுட்டெரிக்கும்

அவலம்

Link to comment
Share on other sites

அவலம்..

எது அவலம்.?

பிறந்த நாட்டில்..

தமிழன்

நாடுகடத்தப்பட்டதா..

பிள்ளைகள்

சிதைக்கு

பெற்றோர்

தீ மூட்டுவதா..

ஒரு கூட்டுக் குருவிகள்..

திசைக்கொன்றாய்ப்

பறந்த பின்..

கூட்டைச் சுமந்த

மரம்.. அது கூட

எரிகிறதே..அதுவா..

தலை நிமிர்ந்து நடந்த

கல்விமான்

தலைமுறைகள்..

கல்வி கலைந்திட்டதே..

அதுவா..

கவரிமான் இனம் போல

கற்புடைக் காத்துநின்ற..

மங்கையரை..

தொட்டதா..

அழித்ததா..

ஆயிரம் நடந்தபின்னும்..

யாருமதைக் கேட்காமல்..

அனுதாப வார்த்தை மட்டும்

அப்பப்போ சொல்வதுவா..

எது அவலம்..

அறியேனே.. ஐயா..

Link to comment
Share on other sites

ஜயா

மகிந்தா

ஆட்சியிலே

அவலம் தானுங்க..

ஜயோ

தாமிழர்

நிலையதுவோ

ஜயோ

பாவங்க...

உலகம்

எல்லாம்

ஏனோ அதை

காணவில்லைங்க...???

நித்தம்

நித்தம்

தமிழர் விழியில்

கண்ணீர் ஆறுங்க...

அதை

நிறுத்தவில்லை

இன்னும் ஏனோ

இந்த உலகுங்க....???

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

வன்னிமைந்தன் வரக்

கண்டு வனக்

குயில்கள் பாடும்..

வற்றாத தேனாறு

தெம்மாங்காய் ஓடும்..

பாக்கேட்டு..

இராக்கூட

தூங்கும்..

தாய்த்

தாலாட்டாய்...

தமிழ்ப்பிள்ளை

பாட்டு..

Link to comment
Share on other sites

பாட்டு ஒண்ணு

எழுதிடவே

பகலிரவாய்

நான்

முனைஞ்சேன்...

ஆனாலும்

என்ன பயன்

ஜயோ

எனக்கு

வரவில்லை...

வேதனையால்

வெந்து

போனேன்

வெட்கி தலை

குனிந்து

கொண்டேன்...

எத்தனை நாள்

முயன்று

பார்த்தேன்

தோல்வியதில்

தளுவி கொண்டேன்...

என்

எண்ணங்களை

கொண்டு போயு

எங்கோ

நானும்

அடைகு வைத்தேன்...???

எந்தனுக்கு

தெரியவில்லை

தெரிந்தால்

வந்து - நீ

பதில் கூறு....

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

பதில் கூறு..

பதில் கூறு

பாட்டாலே

பதில்கூறு...

ஐயா..

என்றழைத்து

கால் பிடித்து..

கைபிடித்து..

சேவகம் செய்து..

அரியாசனமேறும்..

ஏகவித்தை..

அரசியல் போல்..

வேறுலகில் உண்டோ..

பதில் கூறு..

பதில் கூறு

பாட்டாலே

பதில்கூறு...

முகம் பார்த்து ஒன்று

அகம் பேசும் ஒன்று...

சொல்லாலும் கொல்லும்

குணம் தேவர்களுக்குண்டோ..

பதில் கூறு..

பதில் கூறு

பாட்டாலே

பதில்கூறு...

பசியோடு பலபேர்

பல்லாக்கில் சிலபேர்

இளகாத இரும்பாய்

இருக்கின்ற நெஞ்சம்..

இந்திரருக்குமுண்டோ..

பதில் கூறு..

பதில் கூறு

பாட்டாலே

பதில்கூறு...

இல்லாமை வரும்போது

இகழ்கின்ற உறவும்..

இயலாமை வரும்போது

மறைகின்ற மனதும்..

எங்கெல்லாம் உண்டு

நானறியலாமோ..

Link to comment
Share on other sites

நானறியலாமோ

நாள்தோறும் நீவடிக்கும்

கவிப் புலமைக்கு

காரணம் யாதென?

நானறியலாமோ

நண்பனே உன்கவிவரியில்

உலாவரும் தேவதை

உன் உள்ளம் கவர்ந்தவளா

இல்லை கற்பனை நாயகியா?

Link to comment
Share on other sites

நானறியலாமா...???

அன்பே...

அன்றுன்னை

நான் கண்டு

என்னையதை

நான்

மறந்து

உன்னையன்று

தான் பார்த்தேன்...

நெஞ்சுக்குள்ளே

உனை சுமந்து

நெடு நாளாய்

தேடி வந்தேன்...

எங்கினுமே

உந்தனையே

இன்றுவரை

காணவில்லை...

எனையறிந்த

என்னவளே

உந்தனது

முகவரியை

இன்று

நானறியலாமா....???

Link to comment
Share on other sites

நானறியலாமோ

என நங்கையவள்

கேட்டதற்கு..

நல்ல பதில்

நான் தருவேன்..

என் மனையாள்..

அருகில்லையேல்..

Link to comment
Share on other sites

அருகில்லையேல்

அன்பே

நீ

அருகில்லையேல்...

இன்பம் கூட

எனக்கு

ஏனோ

துன்பாமாகுது...???

தூக்கம் கூட

எனக்கு

ஏனோ

தூக்காய்

தெரியுது...???

புன்னகைகள்

தொலைத்து

அகம்

வெளிச்சு கிடக்குது...

ஊரடங்கு

போட்டு

உதடு

மௌனம் காக்குது...

உண்ணா விரத

போராட்டம்

வேறு

நடத்துது...

என்னருகில்

நீ

இல்லை

என்றால்

ஏன்

இவைகள்

நடக்குது....???

Link to comment
Share on other sites

நடக்குது நடக்குது

எல்லாமே நடக்குது

பிறப்பும் நடக்குது

இறப்பும் நடக்குது

சமாதான முயற்சியும் கூடவே

யுத்தமும் நடக்குது

நிம்மதி ஒன்றில்லையேல்

இவையாவும் நடந்து

இங்கேது பயன்?

Link to comment
Share on other sites

பயன் காண

வந்த

பேச்சு

பயனற்று

ஏன் போச்சு....???

பாவிகளை

வந்து பகை

பகலிரவாய்

ஏன்

கொன்று போச்சு...??

குருதியிலே

தேசமதை

பகை

குளிப்பாட்டி

ஏனோ

போச்சு...???

குடிமனையில்

எறிகணையை

ஏவியின்று

அழித்திருச்சு....

கூடயிருந்த

உயிர்களையும்

கூட உண்டு

அது போச்சு...

அவலத்திலே

இலங்கையதை

ஏன்

உருவாக்கி

இன்று போச்சு...???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.