Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

பயன் இல்லை என்று

பயந்து போதல் வேண்டாம்

அயர்ந்து படுத்தல் விட்டு

முயன்று பார்த்தல் நன்று

வியக்க வைக்கும் தலைவனவன்

விளக்கம் சில நாளில் வரும்

வழக்கம் என்று எண்ணாதே

ழுழக்கம் போன்று அது இருக்கும்

கலக்கம் வேண்டாம் தமிழா!

வன்னி மைந்தன் எழுதியதை கவனிக்கவில்லை. மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

தமிழா

கல் தோன்றி

மண் தோன்றாக்

காலத்தில்

முன் தோன்றிய

மூத்த குடிமகனே..

அளவாகக் குடிமகனே..

Link to comment
Share on other sites

குடிமகனே விகடகவி

குடி குடியைகெடுக்கும் என்பர்

உன் குடியை நீ காப்பாற்ற

இன்றே மறந்துவிடு திருமணத்தை

Link to comment
Share on other sites

விடியலாய் எண்ணி நானும்

விமானத்தில் காலை வைத்தேன்

விட்டிலாய் விழுந்தேன் இங்கே

விமோசனம் எனக்கும் உண்டோ

மனம்நிறை கணவன் என்று

மகிழ்வுடன் வந்த என்னை

அறிவிலி என்று எள்ளி

ஆக்கினை பண்ணும் கோரம்

மதுவினை மணம் முடித்தான்

மங்கைகள் தேடி நின்றான்

அடிமையாய் வேலை செய்ய

அமர்த்தினான் என்னை இங்கே

புலத்திலே நிறைவே என்று

மனத்திலே கொண்ட எண்ணம்

தவறது உணர்ந்து விட்டேன்

தப்பிட வழியும் உண்டோ

உண்டோடி பெண்ணே விமோசனம் இவ்விதியிலிருந்து

உண்டேடி என்று சொல்வேன் என் மதியிலிருந்து

வெற்றி தோல்விகள் எங்கெங்கும் உலகம் வந்ததிலிருந்து

செப்பனிடு வாழ்கையை நீ சென்றதை மறந்து

Link to comment
Share on other sites

மறந்து போக நினைக்கின்றேன்

மங்கை மனம் கனக்கிறதே

பறந்து செல்ல துடிக்கின்றேன்

பேதை மனம் பதைக்கிறதே

தூர தேசம் செல்ல எத்தணிக்கிறேன்

தூயவளின் இதயம் துடிக்கிறதே

பரலோகம் நுழைய முனைகின்றேன்

சொர்க்கமே நீ என்னருகில் வருவாயா ஒருகணம்

Link to comment
Share on other sites

ஒருகணப் பார்வையில்

ஊறிய அன்பே..

மெய்யா..மாயமா..

இளமையின் வரம்பில்

நடந்திட நிழல்கள்

விழுமா..வாழுமா..

தனிமைக்குத் துணையாய்..

தேடிடும் காதல்..

முதுமை காணுமா.. மாறுமா..

காதல் என்பது..

இந்தக் காலத்தில்

மெய்யா.. பொய்யா..

Link to comment
Share on other sites

ஒருகணப் பார்வையில்

ஊறிய அன்பே..

மெய்யா..மாயமா..

இளமையின் வரம்பில்

நடந்திட நிழல்கள்

விழுமா..வாழுமா..

தனிமைக்குத் துணையாய்..

தேடிடும் காதல்..

முதுமை காணுமா.. மாறுமா..

காதல் என்பது..

இந்தக் காலத்தில்

மெய்யா.. பொய்யா..

மானுடம் பொய் மக்களும் பொய்

காதல் மட்டும் காணுமெப்படி மெய்

கடவுள் காசாகும் காலமப்பா இது

காதலும் காமமாகும் தடுப்பது எது

Link to comment
Share on other sites

பொய்யாக

வந்து

ஏனோ

பொய்யாக

பேசுகிறாய்...???

மெய்யான

என்

காதலதை

ஏன்

பொய்யாக

தூற்றுகிறாய்...???

என்

மனதில்

உன்

நினைவு....

உன்

மனதில்

யார்

நினைவு...???

சொல்லிடடி

பெண்ணே...

Link to comment
Share on other sites

பெண்ணே..

நீ பேசாதிருந்து

அன்று கொன்றாய்..

மணத்தின் பின்..

பேசிப்பேசியே..

என்னைக் கொல்கிறாயே..

Link to comment
Share on other sites

கொல்கிறாயே

கொல்கிறாயே

மகிந்தா

ஏனோ

கொல்கிறாயோ....???

எம் தமிழை

ஏனோ

வந்து

தினம் தோறும்

கொல்கிறாயோ...???

வானேறி

வந்து

எம்தன்

வாழ்விடங்கள்

அழிக்கிறாயே...

அகதியாக்கி

எம் தமிழை

ஏனோ தினம்

கலைக்கிறாயோ....???

ஆண்டாண்டாய்

நாம்

ஆண்ட

மண்ணை

அட பாவி

வந்து

பறிக்கிறியே...

உந்தன்

படை

கூட்டி வந்து

குந்த வேறு

வைக்கிறியே...

எம் தமிழை

விதைவையாக்கி

இன்று

வேறு

கலைக்கிறியே...

உனக்கே

இது

முறையோ....???

Link to comment
Share on other sites

முறையோ எனக்கேட்டு

முறை தவறி

நடக்கும்..

சர்வதேசம்..

தலைபோகும் முன்னே

முடமான

யாழ்நாட்டை

காக்க வா...

இல்லை..

காக்குமெம்மவரை

பார்க்காமல் போ..

Link to comment
Share on other sites

போ...போ...

தமிழா போ....

போர்களம்

நாடியே போ....

தேடியே

பகை

எம்மை

தாக்குறான்..

எங்கள்

திண்ணையில்

குண்டதை

வீசிறான்....

குந்தவே

இடமின்றி

கலைக்கிறான்....

எங்கள்

குடிகளை

வந்தவன்

பிய்க்கிறான்...

எம் தமிழ்

உயிர்களை

குடிக்கிறான்...

தெருவிலே

பிணங்களாய்

எறிகிறான்....

தெரு நாய்க்கு

உணவதாய்

கொடுக்கிறான்...

எத்தனை

கோரங்கள்

ஆடுறான்....

எம்

தமிழ்

என்னடா

செய்கிறான்....???

இத்தனையும்

கண்டேன்

இருக்கிறாய்...???

எழுந்தோடி

களமாடா

போடா....!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போடா என்ற சொன்னதற்கே கோபப்படுகிறாயே

பையன் என்பதால் தானே அப்படிச்சொன்னேன்

பதிலுக்கு நீயும் என்னை போடி என்று சொல்லியே

உரிமை கொண்டாடி உள்ளத்தினில் நெருங்காதே

Link to comment
Share on other sites

நெருங்காதே அன்பே நெருங்காதே

நெருப்பாக நீயும் என்னை தீண்டாதே

நெஞ்சினில் வந்து உறங்காதே

நெஞ்சத்தை வருடிப்போகாதே

Link to comment
Share on other sites

நெருங்காதே

பெண்ணே

நீ

நெருங்காதே....

நான் நீறு

புத்த

நெருப்பு

நெருங்காதே....

நெருங்கி

வந்து

என்னை

நீ

நெரிக்காதே....

நான்

தீண்டிவிடும்

அரவமடி

தீண்டாதே....

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

அவள்

போக்கிடமாய்

ஆக்கிடுவாள்

போகாதே...

ஆசை மொழி

பேசி

உன்னை

இழுத்திடுவாள்...

அம்போ

என்று

வீதியிலே

விட்டிடுவாள்....

காதல்

என்று

போலி

வேடம்

புண்டிடுவாள்...

உன்னை

கண்ணீரிலே

வாழும்படி

விட்டிடுவாள்...

நீ

காலம்

எல்லாம்

தேவதாசாய்

ஆகிடுவாய்...

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

அவள்

போக்கிடமாய்

ஆக்கிடுவாள்

போகாதே...

ஆசை மொழி

பேசி

உன்னை

இழுத்திடுவாள்...

அம்போ

என்று

வீதியிலே

விட்டிடுவாள்....

காதல்

என்று

போலி

வேடம்

புண்டிடுவாள்...

உன்னை

கண்ணீரிலே

வாழும்படி

விட்டிடுவாள்...

நீ

காலம்

எல்லாம்

தேவதாசாய்

ஆகிடுவாய்...

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

Link to comment
Share on other sites

தீண்டாதே தீண்டாதே

அவள் தீயானாலும்-நீ

தீண்டாதே என் அன்பே

பாம்பு தீண்டினால் விசம்

அவள் தீண்டினால் ரனம்

காதல் என்பது காட்டுத்தீ

அதற்கு நீயும் எரிதருவாகாதே B)

Link to comment
Share on other sites

இறந்தேனே உன்னை பிரியும் போதெல்லாம் இறந்தேனே

துறந்தேனே யாரின் பாசமெலாம் உனக்காய் துறந்தேனே

பறந்தேனே உன் அன்பு வானில் நான் சிட்டாய் பறந்தேனே

விழுந்தேனே உன் அவநம்பிக்கை அம்பு பட்டு நான்விழுந்தேனே

காயங்கள் மனதெல்லாம் ரணங்களின் வேதனைகள் கல்லாய்

போனதுன் இதயம் கனவாய் போனது உன் அன்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் கவி படைக்க வந்திட்ட அன்பானவனுக்கு

அன்புடன் வரவேற்புக்களுடன் வடித்த கவி தனி அழகே

கவியின் முடிவுச்சொல்லில் இருந்தே ஆரம்பித்திட வேண்டும்

கவிதை அந்தாதியின் நிபந்தனை நிஜமாய் வடித்திட வேண்டும்

Link to comment
Share on other sites

வேண்டும் வேண்டும்..

விலக்கவேண்டும்..

ஐயிரண்டு மாதங்கள்

ஈன்றெடுத்த அன்னைமனம்

நோகவைக்கும் பிள்ளைகுணம்

விலக்கவேண்டும்..

மனைவியவளிருக்க..பிறர்

மாதர் நாடும்..சில

ஆடவர் குணம் இன்றே

விலக்கவேண்டும்..

ஆடை விலக்கி-காளை

மனங்கெடுக்கும்..சில

மாதர்குணம் உடனே..

விலக்கவேண்டும்..

இன்சொல் பலவிருக்க

பிறர் இதயம் நொருக்கும்

வன்சொற்கள் பாவனையை

இக்கணமே விலக்கவேண்டும்..

வட்டியென்றும் குட்டியென்றும்

ஏழைவயிறடிக்கும்-பண

விற்பனையை ஒருநொடிக்குள்

விலக்கவேண்டும்..

உறவுஎன்ற பாலங்களை

உடைத்தெறியும் ஏற்றத்

தாழ்வுகளை இன்றே.

விலக்கவேண்டும்..

காதலென்ற வெள்ளைப்பூக்கள்

சேற்றிலிடும் பாதகரை

தேசம்விட்டு..உடனே..

விலக்கவேண்டும்..

பிஞ்சுகளின் நெஞ்சுகளில்

நஞ்சையிடும் வஞ்சகத்தை

செய்வோரை புவிவிட்டு

இன்றே விலக்கவேண்டும்..

ஆசைகளில் கோட்டைகட்டி

இராசலீலை நடத்துகின்ற

மன அலைபாய்ச்சல்

யாவற்றயும்..இந்நாளே..

விலக்கவேண்டும்..

எனக்குள்ளே இருந்துகொண்டு

சமயங்களில் கழுத்தறுக்கும்

அறியாமை அதனை

விலக்கவேண்டும்..

Link to comment
Share on other sites

விலக்கவேண்டும் விலக்கவேண்டும்

அடிமை விலங்கை தகர்க்கவேண்டும்

விடுதலை பெற்று நம் இனத்தின்

அவலங்கள் நீங்கிடவேண்டும்

பால்மா இல்லாது அழும்-எம்

பச்சிழம் குழந்தகளின் அவலம்

பாரினில் எங்கு உண்டு-எம்

பாச உறவுகளின் சோகம் போல்

Link to comment
Share on other sites

சோகம் போல்..

முகத்தை வைத்து..

விழிகளாலே..சுட்டெரித்து..

உண்ணாமல்..விட்டொளிந்து..

மாலையாக என் மங்கை..

போர்வைக்குள் போவாளே..

தொட்டால் சிணுங்குவதும்..விரல்

பட்டால் உறுமுவதும்..அன்பு

முத்தத்தில்..ஊடல் தொலைய..

பூப்பூக்கும் கூடலே..

Link to comment
Share on other sites

கூடலே

வந்து

என்னில்

கூடுதே....

அன்பே

என்னில்

வந்த நேரம்

வந்து கூடுதே...

கண்கள்

வந்து

உன்னுருவை

காவுதே...

எந்தன்

நெஞ்சமது

உன் உருவை

தாங்குதே....

நித்தம்

உன்னை

கனவுயதாய்

காணுதே....

உன்னை

காணவில்லை

என்றால்

நெஞ்சம்

ஏங்குதே ஏன்...???

Link to comment
Share on other sites

ஏங்குதே ஏன் அன்பே

ஏழை என் மனம்-இங்கு

ஏங்குதே கண்ணே

ஏனிந்த ஏக்கம்

ஏமாந்த என் வாழ்வில்

ஏன் இந்த மாற்றம்

Link to comment
Share on other sites

ஏங்குவது ஏனென்று

எனைப்பார்த்துக் கேட்டதென்ன?

ஈங்கு இளவேணில் தரும்

இனிய கவி காண்கிலேனே....

வார்த்தை கோர்த்து

வரிகள் செதுக்கி

பாடல் செய்யும் புலவீரே!

அர்த்தமுள்ள ஆயிரம் கவி

அந்தாதியில் வரைகவே!

Link to comment
Share on other sites

அ ஆ வரிகள்

அந்தாதியில் வரைகவே-என

ஆதங்கம் உந்தனதை

இனிய கவிதையாக

ஈந்த உந்தனுக்கு

உணர்வு அதிகம்-ஆதி

ஊக்கம்தனை நீயும்

என்னக்கருவாக்கி

ஏறிந்தாயே வசமாக

ஜயமில்லை உன் கவி

ஒளிக்கிறது வளமா

ஓசை நயத்துடன்

ஒளவைபோல யார்

அஃதே வரைவது

கவிதை இங்கே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.