Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

பயன் இல்லை என்று

பயந்து போதல் வேண்டாம்

அயர்ந்து படுத்தல் விட்டு

முயன்று பார்த்தல் நன்று

வியக்க வைக்கும் தலைவனவன்

விளக்கம் சில நாளில் வரும்

வழக்கம் என்று எண்ணாதே

ழுழக்கம் போன்று அது இருக்கும்

கலக்கம் வேண்டாம் தமிழா!

வன்னி மைந்தன் எழுதியதை கவனிக்கவில்லை. மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

தமிழா

கல் தோன்றி

மண் தோன்றாக்

காலத்தில்

முன் தோன்றிய

மூத்த குடிமகனே..

அளவாகக் குடிமகனே..

Link to comment
Share on other sites

குடிமகனே விகடகவி

குடி குடியைகெடுக்கும் என்பர்

உன் குடியை நீ காப்பாற்ற

இன்றே மறந்துவிடு திருமணத்தை

Link to comment
Share on other sites

விடியலாய் எண்ணி நானும்

விமானத்தில் காலை வைத்தேன்

விட்டிலாய் விழுந்தேன் இங்கே

விமோசனம் எனக்கும் உண்டோ

மனம்நிறை கணவன் என்று

மகிழ்வுடன் வந்த என்னை

அறிவிலி என்று எள்ளி

ஆக்கினை பண்ணும் கோரம்

மதுவினை மணம் முடித்தான்

மங்கைகள் தேடி நின்றான்

அடிமையாய் வேலை செய்ய

அமர்த்தினான் என்னை இங்கே

புலத்திலே நிறைவே என்று

மனத்திலே கொண்ட எண்ணம்

தவறது உணர்ந்து விட்டேன்

தப்பிட வழியும் உண்டோ

உண்டோடி பெண்ணே விமோசனம் இவ்விதியிலிருந்து

உண்டேடி என்று சொல்வேன் என் மதியிலிருந்து

வெற்றி தோல்விகள் எங்கெங்கும் உலகம் வந்ததிலிருந்து

செப்பனிடு வாழ்கையை நீ சென்றதை மறந்து

Link to comment
Share on other sites

மறந்து போக நினைக்கின்றேன்

மங்கை மனம் கனக்கிறதே

பறந்து செல்ல துடிக்கின்றேன்

பேதை மனம் பதைக்கிறதே

தூர தேசம் செல்ல எத்தணிக்கிறேன்

தூயவளின் இதயம் துடிக்கிறதே

பரலோகம் நுழைய முனைகின்றேன்

சொர்க்கமே நீ என்னருகில் வருவாயா ஒருகணம்

Link to comment
Share on other sites

ஒருகணப் பார்வையில்

ஊறிய அன்பே..

மெய்யா..மாயமா..

இளமையின் வரம்பில்

நடந்திட நிழல்கள்

விழுமா..வாழுமா..

தனிமைக்குத் துணையாய்..

தேடிடும் காதல்..

முதுமை காணுமா.. மாறுமா..

காதல் என்பது..

இந்தக் காலத்தில்

மெய்யா.. பொய்யா..

Link to comment
Share on other sites

ஒருகணப் பார்வையில்

ஊறிய அன்பே..

மெய்யா..மாயமா..

இளமையின் வரம்பில்

நடந்திட நிழல்கள்

விழுமா..வாழுமா..

தனிமைக்குத் துணையாய்..

தேடிடும் காதல்..

முதுமை காணுமா.. மாறுமா..

காதல் என்பது..

இந்தக் காலத்தில்

மெய்யா.. பொய்யா..

மானுடம் பொய் மக்களும் பொய்

காதல் மட்டும் காணுமெப்படி மெய்

கடவுள் காசாகும் காலமப்பா இது

காதலும் காமமாகும் தடுப்பது எது

Link to comment
Share on other sites

பொய்யாக

வந்து

ஏனோ

பொய்யாக

பேசுகிறாய்...???

மெய்யான

என்

காதலதை

ஏன்

பொய்யாக

தூற்றுகிறாய்...???

என்

மனதில்

உன்

நினைவு....

உன்

மனதில்

யார்

நினைவு...???

சொல்லிடடி

பெண்ணே...

Link to comment
Share on other sites

பெண்ணே..

நீ பேசாதிருந்து

அன்று கொன்றாய்..

மணத்தின் பின்..

பேசிப்பேசியே..

என்னைக் கொல்கிறாயே..

Link to comment
Share on other sites

கொல்கிறாயே

கொல்கிறாயே

மகிந்தா

ஏனோ

கொல்கிறாயோ....???

எம் தமிழை

ஏனோ

வந்து

தினம் தோறும்

கொல்கிறாயோ...???

வானேறி

வந்து

எம்தன்

வாழ்விடங்கள்

அழிக்கிறாயே...

அகதியாக்கி

எம் தமிழை

ஏனோ தினம்

கலைக்கிறாயோ....???

ஆண்டாண்டாய்

நாம்

ஆண்ட

மண்ணை

அட பாவி

வந்து

பறிக்கிறியே...

உந்தன்

படை

கூட்டி வந்து

குந்த வேறு

வைக்கிறியே...

எம் தமிழை

விதைவையாக்கி

இன்று

வேறு

கலைக்கிறியே...

உனக்கே

இது

முறையோ....???

Link to comment
Share on other sites

முறையோ எனக்கேட்டு

முறை தவறி

நடக்கும்..

சர்வதேசம்..

தலைபோகும் முன்னே

முடமான

யாழ்நாட்டை

காக்க வா...

இல்லை..

காக்குமெம்மவரை

பார்க்காமல் போ..

Link to comment
Share on other sites

போ...போ...

தமிழா போ....

போர்களம்

நாடியே போ....

தேடியே

பகை

எம்மை

தாக்குறான்..

எங்கள்

திண்ணையில்

குண்டதை

வீசிறான்....

குந்தவே

இடமின்றி

கலைக்கிறான்....

எங்கள்

குடிகளை

வந்தவன்

பிய்க்கிறான்...

எம் தமிழ்

உயிர்களை

குடிக்கிறான்...

தெருவிலே

பிணங்களாய்

எறிகிறான்....

தெரு நாய்க்கு

உணவதாய்

கொடுக்கிறான்...

எத்தனை

கோரங்கள்

ஆடுறான்....

எம்

தமிழ்

என்னடா

செய்கிறான்....???

இத்தனையும்

கண்டேன்

இருக்கிறாய்...???

எழுந்தோடி

களமாடா

போடா....!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போடா என்ற சொன்னதற்கே கோபப்படுகிறாயே

பையன் என்பதால் தானே அப்படிச்சொன்னேன்

பதிலுக்கு நீயும் என்னை போடி என்று சொல்லியே

உரிமை கொண்டாடி உள்ளத்தினில் நெருங்காதே

Link to comment
Share on other sites

நெருங்காதே அன்பே நெருங்காதே

நெருப்பாக நீயும் என்னை தீண்டாதே

நெஞ்சினில் வந்து உறங்காதே

நெஞ்சத்தை வருடிப்போகாதே

Link to comment
Share on other sites

நெருங்காதே

பெண்ணே

நீ

நெருங்காதே....

நான் நீறு

புத்த

நெருப்பு

நெருங்காதே....

நெருங்கி

வந்து

என்னை

நீ

நெரிக்காதே....

நான்

தீண்டிவிடும்

அரவமடி

தீண்டாதே....

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

அவள்

போக்கிடமாய்

ஆக்கிடுவாள்

போகாதே...

ஆசை மொழி

பேசி

உன்னை

இழுத்திடுவாள்...

அம்போ

என்று

வீதியிலே

விட்டிடுவாள்....

காதல்

என்று

போலி

வேடம்

புண்டிடுவாள்...

உன்னை

கண்ணீரிலே

வாழும்படி

விட்டிடுவாள்...

நீ

காலம்

எல்லாம்

தேவதாசாய்

ஆகிடுவாய்...

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

அவள்

போக்கிடமாய்

ஆக்கிடுவாள்

போகாதே...

ஆசை மொழி

பேசி

உன்னை

இழுத்திடுவாள்...

அம்போ

என்று

வீதியிலே

விட்டிடுவாள்....

காதல்

என்று

போலி

வேடம்

புண்டிடுவாள்...

உன்னை

கண்ணீரிலே

வாழும்படி

விட்டிடுவாள்...

நீ

காலம்

எல்லாம்

தேவதாசாய்

ஆகிடுவாய்...

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

Link to comment
Share on other sites

தீண்டாதே தீண்டாதே

அவள் தீயானாலும்-நீ

தீண்டாதே என் அன்பே

பாம்பு தீண்டினால் விசம்

அவள் தீண்டினால் ரனம்

காதல் என்பது காட்டுத்தீ

அதற்கு நீயும் எரிதருவாகாதே B)

Link to comment
Share on other sites

இறந்தேனே உன்னை பிரியும் போதெல்லாம் இறந்தேனே

துறந்தேனே யாரின் பாசமெலாம் உனக்காய் துறந்தேனே

பறந்தேனே உன் அன்பு வானில் நான் சிட்டாய் பறந்தேனே

விழுந்தேனே உன் அவநம்பிக்கை அம்பு பட்டு நான்விழுந்தேனே

காயங்கள் மனதெல்லாம் ரணங்களின் வேதனைகள் கல்லாய்

போனதுன் இதயம் கனவாய் போனது உன் அன்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் கவி படைக்க வந்திட்ட அன்பானவனுக்கு

அன்புடன் வரவேற்புக்களுடன் வடித்த கவி தனி அழகே

கவியின் முடிவுச்சொல்லில் இருந்தே ஆரம்பித்திட வேண்டும்

கவிதை அந்தாதியின் நிபந்தனை நிஜமாய் வடித்திட வேண்டும்

Link to comment
Share on other sites

வேண்டும் வேண்டும்..

விலக்கவேண்டும்..

ஐயிரண்டு மாதங்கள்

ஈன்றெடுத்த அன்னைமனம்

நோகவைக்கும் பிள்ளைகுணம்

விலக்கவேண்டும்..

மனைவியவளிருக்க..பிறர்

மாதர் நாடும்..சில

ஆடவர் குணம் இன்றே

விலக்கவேண்டும்..

ஆடை விலக்கி-காளை

மனங்கெடுக்கும்..சில

மாதர்குணம் உடனே..

விலக்கவேண்டும்..

இன்சொல் பலவிருக்க

பிறர் இதயம் நொருக்கும்

வன்சொற்கள் பாவனையை

இக்கணமே விலக்கவேண்டும்..

வட்டியென்றும் குட்டியென்றும்

ஏழைவயிறடிக்கும்-பண

விற்பனையை ஒருநொடிக்குள்

விலக்கவேண்டும்..

உறவுஎன்ற பாலங்களை

உடைத்தெறியும் ஏற்றத்

தாழ்வுகளை இன்றே.

விலக்கவேண்டும்..

காதலென்ற வெள்ளைப்பூக்கள்

சேற்றிலிடும் பாதகரை

தேசம்விட்டு..உடனே..

விலக்கவேண்டும்..

பிஞ்சுகளின் நெஞ்சுகளில்

நஞ்சையிடும் வஞ்சகத்தை

செய்வோரை புவிவிட்டு

இன்றே விலக்கவேண்டும்..

ஆசைகளில் கோட்டைகட்டி

இராசலீலை நடத்துகின்ற

மன அலைபாய்ச்சல்

யாவற்றயும்..இந்நாளே..

விலக்கவேண்டும்..

எனக்குள்ளே இருந்துகொண்டு

சமயங்களில் கழுத்தறுக்கும்

அறியாமை அதனை

விலக்கவேண்டும்..

Link to comment
Share on other sites

விலக்கவேண்டும் விலக்கவேண்டும்

அடிமை விலங்கை தகர்க்கவேண்டும்

விடுதலை பெற்று நம் இனத்தின்

அவலங்கள் நீங்கிடவேண்டும்

பால்மா இல்லாது அழும்-எம்

பச்சிழம் குழந்தகளின் அவலம்

பாரினில் எங்கு உண்டு-எம்

பாச உறவுகளின் சோகம் போல்

Link to comment
Share on other sites

சோகம் போல்..

முகத்தை வைத்து..

விழிகளாலே..சுட்டெரித்து..

உண்ணாமல்..விட்டொளிந்து..

மாலையாக என் மங்கை..

போர்வைக்குள் போவாளே..

தொட்டால் சிணுங்குவதும்..விரல்

பட்டால் உறுமுவதும்..அன்பு

முத்தத்தில்..ஊடல் தொலைய..

பூப்பூக்கும் கூடலே..

Link to comment
Share on other sites

கூடலே

வந்து

என்னில்

கூடுதே....

அன்பே

என்னில்

வந்த நேரம்

வந்து கூடுதே...

கண்கள்

வந்து

உன்னுருவை

காவுதே...

எந்தன்

நெஞ்சமது

உன் உருவை

தாங்குதே....

நித்தம்

உன்னை

கனவுயதாய்

காணுதே....

உன்னை

காணவில்லை

என்றால்

நெஞ்சம்

ஏங்குதே ஏன்...???

Link to comment
Share on other sites

ஏங்குதே ஏன் அன்பே

ஏழை என் மனம்-இங்கு

ஏங்குதே கண்ணே

ஏனிந்த ஏக்கம்

ஏமாந்த என் வாழ்வில்

ஏன் இந்த மாற்றம்

Link to comment
Share on other sites

ஏங்குவது ஏனென்று

எனைப்பார்த்துக் கேட்டதென்ன?

ஈங்கு இளவேணில் தரும்

இனிய கவி காண்கிலேனே....

வார்த்தை கோர்த்து

வரிகள் செதுக்கி

பாடல் செய்யும் புலவீரே!

அர்த்தமுள்ள ஆயிரம் கவி

அந்தாதியில் வரைகவே!

Link to comment
Share on other sites

அ ஆ வரிகள்

அந்தாதியில் வரைகவே-என

ஆதங்கம் உந்தனதை

இனிய கவிதையாக

ஈந்த உந்தனுக்கு

உணர்வு அதிகம்-ஆதி

ஊக்கம்தனை நீயும்

என்னக்கருவாக்கி

ஏறிந்தாயே வசமாக

ஜயமில்லை உன் கவி

ஒளிக்கிறது வளமா

ஓசை நயத்துடன்

ஒளவைபோல யார்

அஃதே வரைவது

கவிதை இங்கே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.