Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

இங்கே என் பாதையில்

இருள்களின் இடையே

மின்மினிப்பூச்சிகள்!

எங்கோ தொலைந்த

ஆதவன் வரும்வரை

மின்மினி வெளிச்சத்தில்

ஓட்டமும் நடையுமாய்!

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

ஓட்டமும் நடையுமாய்

பாட்டெடுத்த சோழியனே!

ஆதவன் தொலைந்ததென்று

ஆருக்கு இங்கு புலம்புகிறீர்?

இருளிடையே மின்மினிகள்

இதமான எழில் சேர்க்கும்.

இதை இரசிக்கா இதயமெனில்

உம்பாடு சோழிதான்!

Link to comment
Share on other sites

வரைகவே

புலவரே

வரைகவே

வந்து வந்து

நல்ல கவி

புணைகவே...

அடுக்கு மொழியில்

வார்த்தைகட்டி

ஆடவே

ஜயனே ஓடி

இங்கு வருகவே...

அர்த்தம் தெரிந்த

கவிஞர்

இங்கு வருகவே

நீர்

''ஆதி'' அந்தம்

கோர்த்துயிங்கு

படிக்கவே...

நீ

மூத்த கவி

என்றால்

இங்கு வருகவே...

நல்ல

முத்தமிழை

கோர்த்து

கவி படைக்கவே...

நஞ்சு மொழி

வார்த்தைகளை

எறிகவே

மாற்றான் நெஞ்சமதில்

குத்துவதை

நிறுத்தவே....

உன்னால்

முடிந்தால்

வந்து கவி

படைக்கவே...

நீ முள்ளு வரி

எறிவதை

இன்று நிறுத்தவே...!!

வன்னி மைந்தன் -

Link to comment
Share on other sites

நிறுத்தவே தேவையில்லை

நீட்டி முழங்கி

கவி அந்தாதி

களை கட்ட

வன்னிப் புதல்வா!

வானரத்தை அழைப்பதேன்?

சுருங்கச் சொல்கவியில்

அருங்கருத்தும் கரமிணைத்தால்

விரும்பும் ரசிகமனம்..... என்பது புரியாதா?

Link to comment
Share on other sites

புரியாதா?

என்றதுந்தன் உள்ளத்தை எரிக்க அல்ல.

செறிவான உன் கவிகள்

செழுமையுற்று இன்னுமின்னும்

உயர்கவிகள் படைத்தல் பொருட்டே!

அறியாது உன் உளம் குழம்பின்

ஆற்றுப்படுத்து!....

இது ஆதியின் குறும்பென்று!

Link to comment
Share on other sites

ஏன்..என்ற

கேள்வி

கேட்கின்ற பிள்ளையை..

தட்டிக்கொடு..

நான் என்று

சொல்லும்..பிள்ளைக்கு

அடக்கம்

சொல்லிக்கொடு..

எனதென்று வாழும்..

பிள்ளைக்கு..

கீதை கற்றுக்கொடு..

Link to comment
Share on other sites

கற்றுக்கொடு

தமிழா

கற்றுக்கொடு

உன்

கலாச்சார

பண்பாட்டை

கற்றுக்கொடு....

உன் பிள்ளை

வெளிநாட்டில்

இழந்தாச்சு

எம் தமிழர்

பண்பாடு

மறந்தாச்சு....

அவையாவும்

ஏனவை

மறந்தாச்சு....???

வெள்ளையர்

வாழ் நிலம்

புகுந்தாச்சு

அதனாலோ

உன் பிள்ளை

மறந்தாச்சு.....???

தாய்

மொழியாம்

தமிழ் மொழியும்

மறந்தாச்சு...

அவர்

தாய் நாடு

அது கூட

மறந்தாச்சு...

விடுதலை

அது கூட

மறந்தாச்சு...

அட

உன்

பிள்ளை

விடுகாலியாய

ஏனிங்கு

இன்றாச்சு....???

ஈது தான்

உன்

குடும்ப

வளர்ப்பாச்சோ....???

Link to comment
Share on other sites

வளர்ப்பாச்சோ..

என்று

வாய்பிளக்கும்..

உறவுக்காரா..

என் வளர்ப்பு

தொலைக்காட்சி தொடரோடு

நின்றுபோச்சு..

உன் வளர்ப்பு..

உன் பிள்ளை..யாரோடயோ

ஓடிப்போச்சு..

இப்ப..பேசுவீரோ..

ஆச்சோ..போச்சோன்னு..

முடியாதோ..

Link to comment
Share on other sites

முடியாதோ என் கனவு

மாண்டவர் மீண்டு வராரோ

ஈழத்தில் மகிழ்ச்சி திரும்பாதோ

அந்நியன் விலங்கு அறுபடாதோ

இதுவெல்லாம் ஒரு கனவோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவோ இல்லை இது நிஜம்

ஈழத்தில் மகிழ்ச்சி திரும்பாதோ

என்ற ஆதங்கத்துடன்

ஈழவன் அந்தாதியில் கவி படைத்து

நின்றதில் மகிழ்ச்சியின் உச்சம் எனக்கு

Link to comment
Share on other sites

எனக்கு வந்து தொலைகின்ற..

கனவே..கனமில்லாக் கற்பனையே..

சுகத்தோடு துயிலும்.. சுகமாய்..

சொப்பனத்தின் அற்புதமாய்..

மாண்டவரை மீண்டுங்காட்டி..

மங்கையர்தம்..மேனி காட்டி..

வயதைக்கூட குறைத்துக்காட்டி..

வர்ணங்கள் பல காட்டி..

இறக்கையின்றி பறந்து காட்டி..

ஆழ்கடலில் நீந்திக்காட்டி..

அசாத்தியங்கள் நிகழ்த்திக் காட்டி..

வலியின்றிக் குருதிகாட்டி..

வலிமையொடு வீரம் காட்டி..

அரசனாயாக்கிக் காட்டி..

அரியணையேற்றிக்காட்டி..

மணமாலை மாற்றிக் காட்டி..

முதலிரவு.....வரையில் காட்டி..

அந்தப்புரத்திருந்து அக்கணமே..

எனை விரட்டி..அதற்குமேல்..

கனவு..கலைகிறதே..தினமும்..

Link to comment
Share on other sites

தினமும் கண்விழிக்கையில்

இரத்தம் பாய்கிறது எம் மண்ணில்

சதைதுண்டங்களை கவ்வ

கழுகுகள் எம்மண்ணில் வட்டமிடுகின்றன

Link to comment
Share on other sites

தினமும் கண்விழிக்கையில்

இரத்தம் பாய்கிறது எம் மண்ணில்

சதைதுண்டங்களை கவ்வ

கழுகுகள் எம்மண்ணில் வட்டமிடுகின்றன

வட்டமிடுகின்றன கண்கள்

அவற்றுள் இருவிழிகள்

மகிழ்ச்சியின் உச்சத்திலாமே!

ஆகா.. ஈழவன்

இரசிகையாக கறுப்பி!! :P :rolleyes:

Link to comment
Share on other sites

வட்டமிடுகின்றன வல்லூறுகள்

மனிதம் புதைத்து நரபலி எடுக்க

திட்டம் தீட்டியே கொட்டம் போட்டே

தமிழினம் அழிக்க ஓரணி அவர்கள்

ஆனால்...

எமக்குள் சில கோடரிகள்

நக்கிப் பிழைக்கும் நாசச் செயலில்

நானா நீயா போட்டியில்!!

அம்மாவை உரிந்து அடுத்தவனுக்கு காட்டும்

அந்தகாரப் பிசாசுகள் அடுத்தவன் கழிவறையுள்!

இவர்கள் எல்லாம் நேரில் வந்தால்

தூசெனத் தூக்கித் துவம்சம் செய்ய

போதும் ஒரு தமிழ் மறக் கறுப்பி!

Link to comment
Share on other sites

கறுப்பி அவள் சில லகரம்

சீதனம் வேணுமெண்டது

ஒரு ஆண் விபச்சாரி

அதற்கு தலையாட்டியது

அக்கறுப்பனின் கறுத்த பெற்றோர்

படித்த பெண்தேவை சீதனத்தூடன்

அ ஆ எழுததெரியாத மேதைக்கு

வெளிநாட்டில் குப்பைகூட்டும் அறிஞருக்கு

சீதனம் வேணுமாம்

சீதனம் என்பது பிச்சை

அந்த பிச்சைகாரனைவிட

தன்னுடல் விற்று வயிற்றை கழுவும்

விபச்சாரி மேல்

எப்ப திருந்தும் எம்சனம்

எம் விடுதலை என்பது

நில மீட்பு மட்டுமல்ல

எம்மை பழமையிலிருந்தும்

மீட்பதே விடுதலை

Link to comment
Share on other sites

விடுதலை காணவே

எம்மவர் ஓடி

தொடுக்கிறார்

இன்றங்கு

யுத்தமே தேடி....

எங்களின்

மண்ணில்

அன்னிய படைகள்

ஆழ்வதோ

இன்று

சொல்லடா..தமிழா....???

எத்தனை

நாடகள்

அடிமையாய்

வாழ்வாய்....???

எத்னை காலம்

அகதியாய்

அலைவாய்....???

உன்

மண்ணில்

உனக்கு

இத்தனை கேடா....???

இதை

விதை;தவன்

அன்னியன்

இருப்பது

முறையோ....???

அவனை ஆழ

விடுவது

சரியோ....???

துன்பங்கள்

துயரங்கள்

நாம் இனி

சுமப்பதோ....???

எங்கள்

சுதந்திரம்

காணா

இனி இருப்பது

பிழையே....

இனி

அன்னிய

பேய்களை

அழிப்பதே சரி.....

Link to comment
Share on other sites

சரி யார் சொல்லுவது சரி

சிங்களம் சொல்லுவதா

சர்வதேசம் சொல்லுவதா அல்லது

எம்மினம் சொல்லுவதா

பிழை பிழை என்னும்

சர்வதேசம் சிங்களத்தின் பிழைகளை

சரியாக்க முயலுவதேனோ-ஏன்

நாம் அடக்கபட்ட இனமா

எம்முயிர் உயிரல்லவா

எம் இனபடுகொலை தீவிரவாதமில்லையா

தீவிரவாத்துக்கு இலக்கணம்தானுண்டா

சொல்லு உலகமே

உங்கள் நாட்டு குழந்தைக்கு-போர்

என்பதை தெரியுமா

ஏன் எம்மை அடக்குகிறீர்-அனால்

அடக்கப்பட்டது குமிறினால் எரிமலை

சிறுவயதிலேயே போர்வாழ்க்கை

பாண்வெட்டும் கத்திப்பிடி கூட

சன்னக்கோதுகள்-ஏன் பாடசாலை

தளபாடங்கள் ஆட்லெறி கோதுகள்

போரின் வலி விடுதலை வேட்கையை

கொழுந்துவிட்டெரிக்கிறது இதுக்கு

பதில் விபரீதமானது-அதை

எதிர்கொள்ளப்போகிறது சிங்களம்

Link to comment
Share on other sites

சிங்களம் கோரத் தாண்டவமாடுதே..என்..

தமிழ் ஊரிலே ஒன்றொன்றாய் சாகுதே..

இளைத்தலன் சளைத்தவன் ஈரலை அறுக்கிறான்..

வீரனின் நிழல் கண்டு சிறுநீரைக் கழிக்கிறான்

அப்பாவிக் குடிகளில் குண்டினைக் கொட்டுறான்..

பிஞ்சென்றும்..பூவென்றும்..பிய

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழக்கு முழக்கு தமிழனாய் வாழ முழங்கு

தமிழ் இனி மெல்லச் சாகும் என்பதை மறுத்தே

முழங்கு முழங்கு தமிழனாய் முழங்கு

பிறமொழி கலந்து கதைப்பதை எதிர்த்தே முழங்கு

தமிழ் வாழ உழைப்போருக்கு துணையாய் முழங்கு

தமிழை யார் எதிர்த்தாலும் எழுச்சியுடனே முழங்கு

தமிழா தமிழா தமிழ் வாழ பணி ஆற்று

Link to comment
Share on other sites

ஆற்று நீரின் வேகத்திலே

அடிபட் டோடிய சருகுகளாய்

சிதைந்து போன எம்வாழ்வு

சீர்படும் நாளும் வாராதோ

Link to comment
Share on other sites

வாராதோ அந்நாள் வாராதோ

வாசலில் கோலமிட்டு-அன்று

வாழ்ந்து நாம் வளர்ந்த பூமியிலே

வாழும் அந்தநாள் மீண்டும்-நம்

வாழ்க்கைப் பாதையில் வரும்

வாசலில் சுகந்திரப்பூக்கள் மலரும்

Link to comment
Share on other sites

மலரும் என்றே காத்திருந்தோம்

மலரும் மலரைக் காணவில்லை

புலரும் என்றே காத்திருந்தோம்

புலரும் பொழுதைக் காணவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணவில்லை உன்னைக் காணவில்லை

கண்டபோது கவனிக்கத் தவறிவிட்டேனே

காணாமல் போனபோது எங்கே என்று

கண் தேடுதே மனமும் தேடுதே

கணப்பொழுதும் உன் வரவை நினைத்தே

Link to comment
Share on other sites

நினைத்தே நின்றவேளை..

கண்கள் பனித்து..

இதயவறையில்..மூச்சடைத்து..

மூச்சடைத்து..

பேச்சிழந்து நின்ற பேதை

நீயா..கண்ணம்மா..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.