Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

பெண்ணில்லையே தாயே

நீயோ இறைவனுக்கும் மேல்

தாயே நீயில்லை எனில்

இவ்வுலகில் நானில்லை

எனக்குள் உயிர் கொடுத்து

்அதற்கு உருவம் தந்து

அன்பாலே எனை வளந்து

உன் துயரம்தனை மறைந்து

எனை வாழவைக்கும்

தெய்வம் நீயம்மா

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

தெய்வம் நீயம்மா

ஈரைந்து மாதம் சுமந்து

இந்த உலகத்திற்க்கு

என்னை அறிமுகப்படுதிய

உனக்கு என்ன செய்வேனோ.......?

என் தெய்வத் தாயோ.......

என் தாயாகி, குருவாகி

நண்பியாகி,காதலியாகி

என்னுள் வாழ்பவளே

எந்தன் உயிர் நீ கொடுத்த

பிச்சைதான் தாயே

என்னுயிரை எடுக்கும்

உரிமையும் உனக்கு மட்டும்தான்

என் தாயே.........

என்னை ஒரு தடவை

பார்த்து விடு உன்

கண்ணைத் திறந்து...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணில்லையே அவள்

பெரிய பெண்ணில்லையே!

சிறியவளவளிடம் நீவிர்

சிற்றின்பம் நாடலாமோ!

கணவனுக்கு தாசியாய்

வாழ்தல் முறையன்றோ!;

காதலுக்கு கணிகையாய்

நினைப்பது பிழையன்றோ!

சிறியவள் செய்யும்

சிறுபிழை யெல்லாம்!

பெரியவர் நீவிரெல்லாம்

பொறுப்பது நும் கடமையே!

(மண்ணிக்கவும் , பெண்ணில்லையே என்பதற்கு எழுதினேன். இடையில் இரு பாடல் வந்துவிட்டது)

Link to comment
Share on other sites

கடமையே கண்ணாய்

காலையில் எழுந்து..

காலைக்கடனையும் மறந்து

அவசரமாக ஆடைகள்

உடுத்தி..

வேகமாக வண்டியை மிதித்து

ஓட்டமும் நடையமாய்

உள்ளே..போனேன்...

அம்பாள் தரிசனம்..

அழகாய் கிடைத்தது..

உள்ளும் புறமும் சுற்றிய

பிறகு உற்றுப் பார்த்தால்..

எல்லாம் மாயை

Link to comment
Share on other sites

ஆய கலைகள் அறிவதெப்படி.......?

உன் கேள்விக்கு பதில் சொல்ல

பலருள்ளபர் களத்திலே,

வனத்திலே கூடி குலாவி

மரத்தில் ஓடித்திரியும்

வனாரங்களிற்க்கு

புரிவதெப்படி ஆய கலைகள்.........?

அந்த கலக்கத்தை

தீர்ப்பாயா நீ...........?

Link to comment
Share on other sites

தீர்ப்பாயா நீ?

நித்திரையின்றி

உன்னால்நான்

தினமும் தவித்தேனே!

களவாகக் கனவில் வந்து..

காற்சட்டைப் பின் பொக்கற்றில்

பிளேட்லால் கீறி..

எனது பணப்பையை

திருடிச் செல்லும்

நீ யார்?

Link to comment
Share on other sites

நீ யார்....?

என் கனவில் உதிக்கும்

பெண்ணே நீ யார்?

உன் தரிசனத்தை

எனக்கு எப்போது

கொடுப்பாய்...? என்

கனவுத் தேவதையே,

உன்னால் தூக்கம் இனிக்கிறது

பகல் எரிகிறது,

என்னை சுட்டெரிக்காமல்

என் கண்ணுக்கு

நேரில் தரிசனம் கொடு

உனக்கு வாழ்வு கொடுக்கிண்றேன்

என் உயிர் வாழும் வரை

Link to comment
Share on other sites

தீர்ப்பாயா நீ?

போர்க்குருவி எச்சமிடும்

புதினங்கள் அறிந்தபின்னும்

புறஞ்சொல்லி புலிமீது

அறம்பிழைத்த அயல்நாடே!

ரோ என்ற அதிவேக(வி)வேகிகளில்

புலன்கொண்ட கொண்ட புண்களுக்கு

மருந்திட்டுத் தீர்ப்பாயா?

ஓ! :lol: பிந்தி விட்டேனா?

Link to comment
Share on other sites

தீர்ப்பாயா?

வாழும்வரை எனது

வாழ்கை முடியும்வரை...

வையகத்தில் நான்வாங்கும்

யூனிவர்சிட்டி லோன்களை

நீ கட்டித் தீர்ப்பாயா?

படைத்தவனே பதில்சொல்லு!

Link to comment
Share on other sites

சொல்லி விடு

சொல்லி விடு

என் அன்பே

சொல்லி விடு....

உன் உள்ளமதில்

உள்ளவற்றை

என்னவென்று சொல்லிவிடு...

எத்தனை நாள்

யான் பொறுப்பேன்

என்னவளே முடியவில்லை...

இன்று வரை

உன் மனதில்

இருப்பவன் யான் தானெ...????

Link to comment
Share on other sites

யான் தானெ...????

என் மனதில்

இருப்பவன்

என நீ கேட்டு

எத்தனை நாள்

யான் பொறுப்பேன்

என்னவனே முடியவில்லை...

சொல்லி விடுகின்றேன்..

சொல்லி விடுகின்றேன்..

சொல்லி விடுகின்றேன்...

என் உள்ளமதில்

உள்ளவற்றை

என்னவென்று சொல்லிவிடுகின்றேன்!

ஆனால்...

அதற்கு முன்...

உன் சட்டைப் பையினுள்

எத்தனை டொலர்

கரன்சி நோட்டுக்கள்

உள்ளதென்று

நீ

சொல்லிவிடு..

சொல்லிவிடு...

சொல்லிவிடு!

Link to comment
Share on other sites

சொல்லிவிடு சொல்லிவிடு

என்னவனே சொல்விடு

உன் பையில் உள்ள பணம்

எத்தனைகோடி சொல்லிவிடு.....

பாவை நானே போதுமென்று

பல்லிழித்து வந்தவனே

இன்று வந்து ஏனோ

லட்சம் கோடி கேட்கிறாய்...??

இது தான் உன் காதலா...???

:lol::D :P :P

Link to comment
Share on other sites

காதலா?

இல்லையே..

கைப்பையினுள் கரன்சி வைத்திருக்காத

கருமிஉனை நான் எப்படி காதலிப்பேன்?

என் காதல் புனிதமானது...

தங்கக் கம்பளத்தில் மட்டுமே

எனது கால்கள் நடக்கவேண்டும்...

பார்வையில் பிளாற்றினக் கட்டிகள்

மட்டுமே படவேண்டும்...

சுவாசிக்கும் காற்றில்

ரோஜாப்பூ வாசம் மட்டுமே இருக்கவேண்டும்...

உன்னால் இவற்றை எனக்கு

தர முடியுமா?

Link to comment
Share on other sites

முடியுமா உன்னாலென்று

முண்டியடித்து கேட்கிறாய்

இதயமதை தந்தயெனக்கு

இதுவுமா முடியாது....??

என்னவனே

ஏன் இன்னும்

என் மனதை புரியவில்லை...??

ஏழையென்று

தெரிந்த பின்னேன்

என் மனதை வதைக்கிறாய்...??

இத்தனையும்

கேட்டிடவா

என்னையின்று

காதலித்தாய்...???

:P :P :lol:

Link to comment
Share on other sites

காதலித்தாய்

என்னை நீ...

இல்லையென்று சொல்லவில்லை...

ஆனால்..

என்னில் நீ கண்டதென்ன?

உதட்டுச் சிரிப்பு...

கட்டான உடல்..

வசீகரமான முகம்...

எனது அழகிய பேச்சு...

இவற்றைத் தானே நீ காதலித்தாய்?

உன்னால் என்

ஆன்மாவைக் கண்டுகொள்ள முடிந்ததா?

இல்லையே!

அவ்வாறாயின்...

ஏழையாகிய உனைநான்

கைகழுவி விடுவதில்

தவறேது உள்ளது?

பதில் சொல்வாய்

காதலா!

Link to comment
Share on other sites

இத்தனையும்

கேட்டிடவா

என்னையின்று

காதலித்தாய்...???

காதலித்தாய்

என்று கலக்கமின்றி

சொல்கிறாயே

மைந்தா

இந்தா

இதைப் பிடி

என்னவென்று படி

வடிவான உன்

அத்தை மகள்

உனக்குத் தானென்று

கொம்மான்

எழுதியுள்ளார்

அம்'மான் '

உனக்குக் கிடைத்தால்

எம் பெருமான்

ஆசியிது வென்பேன்

சும்மாவா தம்பி

சுருட்ட எவ்வளவோ

சொத்திருக்கு அவளிடம்

'சுருட்டை' எவ்வளவு

நாள் நானும்

சுருட்டுவது?

கையிரண்டைப்

பிசையாமல்

கடகடவென்றே

உன் நெஞ்சத்தில்

உள்ள சேதி

சொல்வாய்...

மைந்தா

குறிப்பு : சற்றே பிந்தியதால் எங்கோ பிழைத்து விட்டது...

Link to comment
Share on other sites

அவ்வாறாயின்...

ஏழையாகிய உனைநான்

கைகழுவி விடுவதில்

தவறேது உள்ளது?

பதில் சொல்வாய்

காதலா!

காதலா

உன் மேல்

எனக்குக்

காதலா?

கண்டபடி

கற்பனை செய்யாதே

எட்டி நின்று

பல்லிளித்தால்

உன் மனசுக்குள்

வலியா?

மயக்கங்கள்

வருதா?

களையான பெண்னென்னை

கண்டு கண்ணடிப்பீர்

முறுவலித்தால்

கிட்டவந்து

கையணைப்பீர்

கலியாணம் என்று

வந்தால்

கடைசி வரை

காணமல் போவீர்

போமய்யா

Link to comment
Share on other sites

காதலால் வந்தென்னை

கட்டி போட்டவளே

நெஞ்சத்தை கிழித்தேண்டி

கருவாடாய் போடுகிறாய்...??

வார்த்தை அம்பெடுத்து

வலிந்து வந்து தாக்குகிறாய்

என் செய்வேன் நானடி

எனக்குள்ளே அழுகிறேன்...

இத்தனை பிடிவாதம்

என்னவளே

ஏன் உனக்கு...???

தப்பேதும் செய்யாமல்

தண்டனை எனக்கேன்...??

உன்னாசை தீர்ந்ததுமா

உள்ளமதை நீயெறிந்தாய்...??

இல்லை நீ என்றானால்

என் உயிரை விட்டிடுவேன்

சத்தியமாய் சொல்கிறேன்

தட்டிடாமல் நீ கேள்...

Link to comment
Share on other sites

தட்டிடாமல் நீ கேள்...

எனது இதயத்தில்

ஏற்கனவே ஓட்டை விழுந்துவிட்டது...

இன்னொரு தட்டை

தாங்க அதற்கு

பலமில்லை...

ஆகையினால்...

தட்டிடாமல் நீ

எட்ட நின்று நீ கேள்...

என் இதயத்தில் உனக்கு

இடம் இருக்கின்றதா என்று!

Link to comment
Share on other sites

என்றுதான் சிந்திக்க

போகின்றீர்கள்

சிதைந்து போகும்

கலாச்சாரத்தை

அழித்து போகும

பண்பாட்டை

இருளில் தவிக்கும்

வாழ்கவை வறுமையில்

சிதையும்

கோலங்களை என்று தான்

சிந்திக்க போகின்றீர்கள்

வீணே

ஒடிப்போனவள்கதை

பேசிப்பேசி அழிந்து

போகும் உங்கள்

காலத்தை சிந்தித்தால்

நாம் இமயத்தையே

தொட்டிருப்போம்

எப்போது சிந்திப்பீர்கள்

Link to comment
Share on other sites

எப்போது சிந்தீப்பீர்கள்

என்றெனக்கு தெரியவில்லை

ஆனாலும் உன் நினைப்பை

அழிக்க என்னால் முடியவில்லை....

இல்லையது இதயமென்று

இன்று வந்து உரைத்துவிட்டாய்

எப்படித்தான் முடிந்ததுவோ

எனக்கு வந்து சொல்லாயா...??

ஈட்டி கொண்ட வார்த்தையாலே

இதயமதை கிழித்துவிட்டாய்

இரக்கமில்லா உன்னுடனே

எப்படி நான் வாழ்வேனோ...??

காலில் விழுந்து கதறையிலும்

காலால் எட்டி உதைக்கிறியே

இனியுமென்ன வாழ்வேனெக்கு

இறந்து நானே போகிறேன்...

எண்ணி எண்ணி ஒரு நாள்- நீ

எனை எண்ணி எண்ணி நீயழுவாய்

அன்றுனக்கு புரிந்து விடும்

அன்பு மனம் என்நிலை தான்...

நல்ல மனமொன்றுடனே

நலமுடனே வாழ்ந்து விடு

கையெடுத்து கெஞ்சுகிறேன்- எனக்கு

கருமாதி செய்து விடு....

Link to comment
Share on other sites

விடு விடுவென

எனை விட்டுப் போன

இதயமே..

கல்லறை சமாதிகளைப்

பார்

காதலில் தோத்த

பல ஆண்கள்..

காதலை வாழவைத்த

ஒருசில பெண்கள்..

புரிந்தால் மீண்டு வந்துவிடு

காதல் இல்லாமல் போனாலும்

போகட்டும்

நான் வாழவேண்டும்..

ஆண்கள் தோற்பதும்

மாள்வதும்

இல்லாதுபோகவேண்டும்.

வா வந்து விடு

Link to comment
Share on other sites

விடு விடுயென்றேன்

விடாமல் துரத்தினாய்

இன்றேன் வந்தெந்தன்

இதயத்தை கலக்கினாய்...???

காதல் பிச்சை கேட்டு

காலடியில் விழுந்தவளே

சீ..தூ..வென

சீறியேன் துப்புகிறாய்...???

பெண்ணெ;று உன்னையே

பெருமையாய் எண்ணியானை

கல் கொண்டடித்தவளே- உனை

கனவிலும் நினைப்பேனோ....???

வா வாவென

வந்தென்னை அழைக்கிறாய்

இத்தனையும் மறந்துவிட்டா

என்னையின்று அழைக்கிறாய்....??

வெட்கமில்லையா உனக்கு....???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.