Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

சித்தரிக்கின்றாய்...

மீன்விழிகள்....

செரிப்பழ இதழ்....

அப்பிள் கன்னங்கள்...

வெண்டைக்காய் விரல்...

புடலங்காய் இடுப்பு...

என இவ்வாறு...

அடேய் பாவி

உனக்கு உண்பதை தவிர

வேறு ஒன்றும் தெரியாதா?

சரி அதைவிடு...

எனக்கு

புற்றுநோய் உள்ளவிடயமாவது

உனக்கு தெரியுமா?

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

தெரியுமா வா..

தெரியுமே..நீ

எதைத் தெரியுமா

எனக் கேட்டாயோ

அது தெரியாமலா

தெரியுமென்று சொன்னேன்..

அதைப்பொய் எனக்கு

தெரியாதென்று

சின்னப்பிள்ளைத்தனமாக

நினைத்துவிட்டாய்..

தெரியும்..தெரியும்

எனக்கு அது தெரியும்..

அது எனக்குத் தெரியும் என்பது

உனக்கும் தெரியும் என்பது

எனக்குத் தெரியும் அதுசரி

இது மற்றவர்களுக்குத் தெரியுமா.. :unsure:

Link to comment
Share on other sites

எல்லாம் மாயை

எழுத்தறிவிததவன்..

இயக்கும் நாடகம்...

பலம் பலவீனமாகி

பலவீனம் பழிகளாகி..

பழிகள் சேர்ந்து

பாவமாகும்..வாழ்க்கை

நாடகங்கள்...

Link to comment
Share on other sites

நாடகங்கள் பல

நான் நடித்து

நீண்டகாலமாகி விட்டது...

இதனால்...

மீண்டும்..

இப்போது...

கோயிலுக்கு

சாமி கும்பிடப்

போகத் தொடங்கியுள்ளேன்...

நாடகத்தில்...

சேர்ந்து நடிப்பதற்கு

நீயும் என்னுடன்

கோயிலுக்கு வரலாமே?

உனது வசதி எப்படி?

Link to comment
Share on other sites

வசதி எப்படி என

வாய் தவறிக் கேட்டதற்கு

சாடை மாடையாக

அவள் தன்

கால் செருப்பைச்

செருப்பைக் காட்டினாள்..

ஓ..கோவிலுக்குள் செருப்பு

கூடாதெனக் கூறுகிறாள் Nபுhலும்

என நினைத்த எனக்கு..

எல்லாம் தெளிந்தது..

செருப்புக்கு வேறு

என்னமுடியுமென அறிந்தபோது..

அவளுடைய தோல் செருப்பு..

போட்டதால் தேய்ந்ததாய்

தெரியவேயில்லை.. :unsure:

Link to comment
Share on other sites

தெரியவேயில்லை

அன்பனே உனக்கு..

பூமியில்

மாந்தரை

ஏமாற்றுதல்....

காலை வாருதல்....

முதுகில் குத்துதல்....

பொய் சொல்லுதல்...

காதலித்து கைவிடல்...

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல்...

உயிருடன் கொள்ளி வைத்தல்...

எனவே...

இதுவரை நீ அங்கு

வாழ்ந்தது போதும்...

விரைவில்

என்னிடம் வந்து சேர்ந்துவிடு!

இப்படிக்கு

அன்புடன்,

ஆண்டவன்

Link to comment
Share on other sites

ஆண்டவன் யாரெனக்

கண்டேன்..நம்மை

ஆள்வதும் அவனெனக்

கொண்டேன்..

மாண்டவன் எல்லாம்

மீண்டான்...

வாழ்பவன் எல்லாம்

தொலைந்தான்

என்ற வாக்கினை

தானாயத் தெரிந்தான்..

இதுதானோ

சயன அசரீரீ

Link to comment
Share on other sites

அசரீரி ஒன்று கேட்டது....

அடியேனை

ஆண்டவனின் தூதனாக

சேவைகள் செய்து

இந்த உலகை இரட்சிக்கும்படி....

அழுது விட்டேன்..

ஆஆஆஆ....

எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பா?

ஆச்சரியம் தாங்க முடியவில்லை...

எனக்குள் இவ்வளவு ஆற்றல்களா???

நான்

உணர்ச்சிவசப்பட்ட போது...

அந்த இனிய...

கனவு கலைந்தது...

படுக்கையில் தலையணைக்கு

அருகில் கிடந்தது

பைபிள் வேதாகமம்!

Link to comment
Share on other sites

வேதாகமம் படித்ததும்

பாதகம் செய்யும்..

அராஜக மதமடங்கள்

ஆசை துறந்த

முனிக்கெல்லாம்

அள்ளிக்கொடுக்கும்..

அறியாமைப் பக்தர்கள்..

மாயாஜாலம் காட்டி மனதை

வசப்படுத்தும்

கள்ளச்சாமியார் வசியங்கள்..

எல்லாம்

ஏமாந்து போகும்

மாந்தரால் ஆகும்

மடமைகள்.

Link to comment
Share on other sites

மடமைகள் உள்ளது இந்த உலகம்

நீயாவது அறிவாளியாக இரு...

இவ்வாறு அடிக்கடி சொன்ன

எனது குருநாதன் ஒருநாள்...

என்னிடம் வந்து தனது

முதுகு சொறியச் சொல்லியபின்

கேள்வியொன்று கேட்டான்....

நான் இறந்துவிட்டால்

நீ என்ன செய்வாய்?

ம்ம்ம்ம்ம்ம்ம்......

இன்னொருவன் மூலம்

எனது முதுகை

சொறிய வைத்துக் கொண்டிருப்பேன்...

என் பதில் கேட்ட குருநாதன்

அக்கணமே பரலோகம்

போய்விட்டான்....

Link to comment
Share on other sites

பரலோகம் போய்விட்டான் அவன்

போனவன் தனியே போகவில்லை

துணைக்கு பலரையும் கூட்டிச்

சென்றுவிட்டான்,

யாரவன்.........?

அவன்தான் அரசியல் வாதி

Link to comment
Share on other sites

வாதிட

முடியவில்லை

அன்பே

உன்னுடன்

எனக்கு...

நான் வார்த்தை...

நீ மொழி..

நான் பற்கள்...

நீ சொற்கள்...

ஆதனிலால்..

நம் குடும்பத்தில்

இனியும்

என்னுடன் நீ

சண்டைபிடிக்க

விரும்பினால்..

முதலில்

எனக்கு

விவாகரத்து தா!

Link to comment
Share on other sites

தா

என

அடம்பிடித்து

கேட்கின்றாய்...

தருவதற்கு முன்

ஒரேயொரு நிபந்தனை....

உன்னிடம்

ஒப்படைத்த

என் உயிருக்கு

ஏதாவது ஒன்றென்றால்...

உன்னை நான்..

சும்மா விடமாட்டேன்...

போலிசீல் பிடித்துக்கொடுத்து விடுவேன்...

உனக்கெதிராக நீதிமன்றத்தில்

வழக்குத் தாக்கலும் செய்வேன்...

Link to comment
Share on other sites

வாழ்க்கை

ஒன்றும்

புதிரில்லை

நாளைய ஏக்கம்

நேற்றை கவலை

பலருக்கு...

இன்று, இந்த நிமிஷம்

நாமிருப்பதே

நிஜம்..

இன்றையப் பொழுதைக்

கொண்டாடுங்கள்

சந்தோஷங்களை

ஒத்தி வைக்க

இது ஒன்றும்

கூட்டத் தொடரில்லை!

வாருங்கள்

நண்பர்களே

வசந்தங்கள்

காத்திருப்பதில்லை

வசந்தாக்களும்

கூடத் தான்!!! :P

Link to comment
Share on other sites

கூடத் தான்

ஆசை

என் அன்பே

உன் நெஞ்சமெனும்

கூட்டில்

உன்னோடு

கூடத் தான்

ஆசை

ஆனாலும்

கூடத் தான்

ஆசை!!!

Link to comment
Share on other sites

ஆசைகள் நீ

உரைத்தாய்

கண்ணே - என்

மீசை துடிக்குதடி

பாஷைகள்

தேவையில்லை

பார்வைகள்

போதமடி

ரோஜாக்கள்

அழைப்பு விடுத்தால்

ராஜாக்கள்

மறுப்பாரோ?

தேனுண்ண

பூக்கள்

அழைப்பு விடுத்தால்

வண்டுகள்

மயங்காதோ?

வருவேனடி

கண்ணே நானும்

வாசலிலே

காத்திருப்பாய்

வாய் முத்தம்

தந்தே என்னை

மச்சத்துக்கு

அழைப்பாயா?

Link to comment
Share on other sites

அழைப்பாயா என்று

கேட்டபின்

முறைப்போடு

முறுவலா?

தமிழோடு விளையாடி

கவிதையால்

எனைச் சாடாமல்

மெளனியாகிப்

போனாயோ

பெண்ணே?

கற்பனையது ரசிக்க!

அது கண்டு நீ

தெளிந்தால்

மயக்கங்கள்

வாரா!

தயக்கங்கள்

வேண்டாம்

தடையிலாது

தமிழோடு

விளையாடு

பூனையென்றே

பிடிக்க வந்தால்

புலியாகி

அவர்தம்

உயிரோடு

விளையாடு!!!

Link to comment
Share on other sites

விளையாடுங் காலம்...

வினையான கோலம்...

மரண ஓலம்...

மடியினில் தோழன்...

குண்டு

அடிபட்டு

உயிர்விட்ட

நேரம்...

உருவான கோபம்...

என்றென்றும் என்நெஞ்சில்

தீ யாக கக்கும்...

தீயவனை

சுட்டு எரிக்கும்...

Link to comment
Share on other sites

சுட்டு எரிக்கும் சூரியனிடம்

ஆறு கேள்விகள்....

ஒன்று

உனக்கு ஏன்

இத்தனை கோபம்?

இரண்டு

நீ ஆணா

அல்லது பெண்ணா?

மூன்று

உன்னை ஏமாற்றிய

காதலி/லன் யார்?

நான்கு

உனக்கு திருமணமாகிவிட்டதா?

ஐந்து

நீ தேனிலவு கழிப்பதற்கு

போகுமிடம் எது?

ஆறு

நீ மரணமடைந்தால்

உன்னை எங்கே போட்டு எரிப்பது?

விரைவில்

விடைபகர்வாய்

பகலவா!

Link to comment
Share on other sites

பகலவா உன்

வருகைக்காய்

எந்தனை பூக்கள்

தவம்கிடக்கின்றன

அதிகாலை நீ

வருடும் போது

அந்த மெல்லிய

வெப்பத்தில் எந்தனை

அழகாய் துயிலெழுந்து

சிரிக்கின்றது பூக்கள்

அந்த

பனித்துளியை

உதறிக்கொண்டு

சிரித்திடும்

அழகை நீ

எப்போதாவது

ரசித்ததுண்டா?

நீ

ரசித்திருந்தால்

மதியவேளையில்

அவைகளை வாட்டி

வதைக்கமாட்டாய் எனியாவது

ரசித்துப்பாரேன்

Link to comment
Share on other sites

ரசித்துப்பாரேன்

என்னை உனக்கு

விருப்பமென்றால்....

வாயினுள்

நான்கு சூத்தைப்

பற்கள் இருக்கின்றது...

முதுகில் தேமல் இருக்கின்றது...

தலையில் மொட்டை

விழுந்துவிட்டது...

நிறம்

பார்ப்பதற்கு

சுமாரான கறுப்பு..

அடிக்கடி எனக்கு

காக்காய் வலிப்பு வரும்..

இதைவிட

நீரிழிவு வியாதியும் உண்டு...

ரசித்துப்பாரேன்

என்னை உனக்கு

விருப்பமென்றால்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருப்ப மென் றால்

அது மிக நன் றால்

ஒரு கையால் பற்றி

மறு கையால் நோண்டி

தண்ணீரில் முழுக்காட்டி

மஞ்சளுடன் மற்றும்

மசாலாக்களுடன் வதக்கி

நாவ+ற வாயூற

நல்ல பிட்டுடன் பிரட்டி

பசியாறவே என் மனம் நாடுதே!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.