Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

பிரமாக்களாவோம் எம்

தேசத்தில்

ஒரு நாள் சத்ருக்கள்

சங்கரிக்கப்பட்டு..

பீடைகள்.. நசுக்கப்பட்டு

வாசப்பூக்கள்..

வண்ணமஙமாக..ஒரு

ஈழம்..

தமிழீழம் செய்யும்..

பிரமாக்களாவோம்..

நாங்களும்... :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் விடிவுக்காய் மரணிப்போம் எம் மனிதர்களுக்காய்

நாங்களும் மீண்டும் எழுவோம் மக்களுகாய்

நாங்களும்புதிதாய் பிறப்போம் எம் விடுதலை மண்ணில்

நாங்களும் சிரிப்போம் எம் மக்களின் விடுதலையில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலையில் நீந்திடவே

வித்தாகிறோம் தினமும்

மீண்டு எழுவோம்

மீண்டும் நாம்

விழுத்தட்டும்

எத்தனை தடையெனிலும்

வீரமாக எழுவோம்

வீரர் நாம்

Link to comment
Share on other sites

நாம் நாளையை எண்ணிக்

கனாக் காண்கிறோம்..

அவர்கள்..

எம் இரவுத்தூக்கத்தை

இல்லாமல் செயவதனைப் பற்றி

சிந்தித்துக்கொண்டிருக்கிறா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்ததி சந்திகளாக

நாம் வாழ்ந்த பூமியில்

நடக்கக் கூட நாதியற்று

மந்தைகளாக

நடத்தப்படுகின்றோம்

என்று தீரும்

நம் துயரம்

Link to comment
Share on other sites

துயரம் தீரும் காலம்

தொலைவில் இல்லை

விடுதலை தூரமில்லை

நாம் தலைவணங்கி சாவதில்லை

சாதனைத் தலைவன்

சாதூர்யமாகத் தானே முடிவெடுப்பான்

அவன்

அரக்கர் தலை எடுப்பான்

அவன் சினப்பட்டால் சிங்களம் சிதறும்

அவன் விரல்களால் விடுதலை ஒளிரும்

அவன் பாதச் சுவட்டில் படரும் புல்லும்

வீரத்தமிழை புகழ்ந்தே மலரும்..

Link to comment
Share on other sites

மலரும் எல்லாம்

பூக்களும்

பூசைக்காகதான்

ஆனாலும்

மலர்ந்த சில

பூக்கள்

கல்லறைக்கு

சமர்ப்பனமாகின்றது

இது யார்

செய்த தவறே

நான் அறியேன்

ஆனாலும் அவை

கண்ணீர்க்குள் மலரும்

பூக்கள்

Link to comment
Share on other sites

பூக்கள்

மரங்கள்

தேனள்ளி வழங்கும்

குடங்கள்

வழிகின்ற

தேனுண்ண

ரீங்காரிக்கும்

வண்டுகள்

சில பூக்கள்

வண்டுகளின்

வருகைக்காக

காத்திருந்து

உடல் வாடி

உதிர்கின்றன...

சில பூக்கள்

வண்டுகளின்

ஸ்பரிச சுகத்தில்

மெய் சிலிர்த்து

சந்தோசமாய்

மடிகின்றன...

சில பூக்கள்

காற்றின்

பலாத்கார உறவில்

வேண்டாமென

தலையசைத்து

வேதனையோடு

மடிகின்றன

பூக்கள்

பூசைக்காகவென்று

யார் சொன்னது?

உண்மையில்

பூக்கள் மரங்களின்

புணர்ச்சி

உறுப்புக்கள்!

மரங்களின்

மகிழ்ச்சிக்காக

மலரும்

பூக்களை

மனிதர்கள் தங்கள்

மனங்களின் மகிழ்ச்சிக்காக

ரசிப்பதில்

தவறில்லை

கரங்கள் கொண்டு

காம்பு முறித்து

கிள்ளியெடுக்கும்

போதெல்லாம்

மரங்களும் கண்ணீர்

வடிக்கும் என்பதை மறவாதீர்

கடவுளுக்கு

அர்ச்சிக்கப்படும்

பூக்கள் எல்லாம்

ஏதோ ஒரு

புரியாத மொழியில்

புலம்புவதை கேட்கக்கூடாதென்றே

கடவுளும் கல்லானார்!

Link to comment
Share on other sites

கடவுளும் கல்லானார்

என்பார் சிலர்

கல்லை ஏன் கடவுளாக்கினார்

என்பார் சிலர்..

கடவுளை பார்க்க

வேண்டுமென்பார் சிலர்..

கடவுளட பார்வைக்கு

தெரியாதென்பார் சிலர்..

கடவுள் யார் என்பார்க்கு

நான் சொல்வேன்..

உன் செயல்தான் கடவுள்..

உன் மனம்தான் கோவில்

நீதான் புனிதன்..நீ

நீ இன்னோர் உயிருக்காய்

வேதனை கொண்டால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதனை கொண்டால்

வாழ்க்கையில்லை

வாழத்தெரிந்தால்

வாழ்வில் சோகமில்லை

உனை பிரிந்தேன்

வாழத்தெரியாமல்

உனை நினைத்தேன்

வாழ்வைத் தொலைத்தபோது

ஏனெனில் உன்னை

பிரிந்த போது

தெரியவில்லை எனக்கு

வாழ்வைத் தொலைக்கிறேனென்று

Link to comment
Share on other sites

தொலைகிறேனென்று

நீ சொன்னாய்

நான் நம்பவில்லை

உண்மையில்

தொலைந்து

விட்டாயே என்

உயிரே

Link to comment
Share on other sites

உயிரே

என்றென்னை

உருகி

அழைத்தவளே...

உயிர்

மறந்து போனதென்ன?

வீணே வாய்பிதற்றுகின்ற

வார்த்தைகளை

உண்மையென்று நான்

உணர்ந்தது தான் என்ன?

உண்மைதான் பலரும்

மனிதர்களைக்

காதலிப்பதை விட

வார்த்தைகளைக்

காதலிப்பதே

அதிகம்...

Link to comment
Share on other sites

அதிகம் அவள் பேசியதில்லை

உண்மை அவள் ஊமையில்லை

அவள் நிலாக்காலங்களில் மட்டும் வருவாள்..

நிலாக்காலங்களில்

வெளியே வர எனக்கு அனுமதியில்லை

அவளை நான் பார்த்ததில்லை

அவள் என்னைப் பார்த்ததில்லை

நாங்கள் காதலிக்கவும் இல்லை

எங்கள் காலம் முடிவதுமில்லை

அவளும் நானும் உங்கள் ஆர்வங்களை

அசைத்துப்பார்த்ததில்லை

எங்கள் அசைவுகள்

எங்களுக்கே தெரிவதில்லை

எனக்கு நேரம் அதிகமில்லை

என் அறிமுகம் முடியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியவில்லை என்று முடங்கிக்கிடந்தாலும்

முனைந்திடுவேன் உனக்காய் முப்பதுநாள் விரதமிருந்து

மூன்னூறு தடவை நின் நாமம் ஜெபித்தபடியே நின்நலனுக்காய்

முருகனை வேண்டியே அடிஅழித்து தவமிருப்பேன்

Link to comment
Share on other sites

தவமிருப்பேன் என்று

எப்படி உரைப்பேன்

என்னால் விரதம் கூட

இருக்கமுடியாதே..

வெள்ளிக்கிழமை கூட

விரும்புவேனே..

விதம்விதமாய்

அசைவ உணவுகளை...

பாவம் என்பாரே..

அது கொல்பவருக்கென்பேனே...

கொழுப்பு என்பாரே..

அது குறைந்திடுமென்பேனே..

அழகான மீன்களைப்பார் என்பார்..

அவை பொரித்தால் எப்படி இருக்குமென்பேனே..

சிறகடிக்கும் கோழியைப்பார் என்பாரே..

குழம்புவைத்தால் குதூகலமென்பேனே..

மாமியின் மகள் சொன்னால்

மாறுமோ பிறவிக்குணம்..

அவள் ஒருக்கால் ஒருவேளை விடச்சொன்னால்

யோசிக்கலாம்..

தவமாய் தவமிருக்கச்சொன்னால்..

அவள் வேண்டாம்..

அசைவம் போதும்..

Link to comment
Share on other sites

போதுமென்று

நீர் உரைத்தாலும்

மனசுக்குள்

ஆசை நரைக்கவில்லை...

'சாது'வாக தான்

இருப்பீர்

காவி

தரிப்பீர்

ஆனாலும்

காரில் வருகின்றீர்

வசை சொற்களை

வாந்தி எடுக்கின்றீர்

மனித நேயம்

மலரவேண்டிய

மனங்களில்

முட்களை பரப்பி

முட்டாளாகின்றீர்...

பிழைக்க பல

வழிகள்

உண்டய்யா...

புத்தன் என்னும்

புனிதன் பேரைச்

சொல்லிப்

பிழைக்க

வெட்கமில்லையா?

அரசின் கீழிருந்து

தியானம்

செய்யாமல்

அரசில் ஆசை

ஏனய்யா?

சிரசு தடவிச்

சொல்லும்

பரிசு கெட்டதனம்

இதுவய்யா...

புத்தபிட்சு சொல் கேட்டு

ஆசோகன்

போர்வாள் மறந்தான்

லட்சம் பிட்சு கூடி

போர் செய்

போர் செய் என்று

கூர் வாள்

கொடுக்கின்றீர்

பிட்சு இல்லை நீர்

மரந்தான்...!

Link to comment
Share on other sites

மரந்தான்

எவ்வளவு சிரமங்களுக்கு

மத்தியில் பூக்களையும் கிளைகளையும்..

தாங்கோ என்று தாங்குகின்றது

ஆனால் இந்தப்பூக்கள்..

பெண்ணிலேறி

மண்ணில் மடிவதிலேயே குறியாய்..

இருக்கிறது..

தெரிந்தும் தாங்கும்..மரம்...

பெற்ற தாய்தானே..

Link to comment
Share on other sites

பெற்ற தாய்தானே

உலகின் அதியமென்றேன்

உன்னைக் காணும்

வரை அதை

விட அதிசயமாய்

நீயே வந்தாய்

இன்பதை சிலகாலம்

தந்துவிடடு

என்னைப்பிரிந்து

நீ ஏன் சென்றாய்

என்னை

குழத்தையாக்கிவனே

உனைப் பிரிந்தும்

வாழ்கின்றேன்

பாசத்தைத்தேடும்

சேயாய்

Link to comment
Share on other sites

சேயாய்

சிறுபிள்ளையாய்

சின்னக்குழந்தையாய்

சிற்றாடைப்பூவாய்..

மார்பில் சேர்த்து..

மருதாணி தீட்டி

மஞ்சள் பூசி

மலர் சூடி

மாக்கோலம் தூவி

மணக்கோலங்கண்டு

மனம் நெகிழ்ந்து

துயர்மறைத்து

துவளும் உளம் தெரியாமல்

தூரம் அனுப்பி

தூவரமூடு தபாலுக்கு தவங்கிடந்து

துள்ளி வரும் பேரக்

குழந்கைக்காய்

குற்றுயிராய்க் காத்திருக்கும்

குழந்தைவேலு ஐயா..

இறுதிவரை ஏங்கிக்கிடந்த

இவள் முகமும் காணவில்லை..

இவள் ஈன்றதையும் காணவில்லை

ஆத்மதாகங்கள்..

அழிகின்ற கோலங்கள்

ஈழ அவலங்கள்..

அழுது தீர ஆழ்ந்த சோகங்கள்..

Link to comment
Share on other sites

சோகங்கள் மட்டுமே வாழ்க்கை என்றால்

சொப்பனங்கள் எதற்கு.

வீழ்ச்சிகள் மட்டுமே வாழ்க்கை என்றால்

வீரம் எதற்கு.

இறப்புகள் மட்டுமே நிரந்தரம் என்றால்

பிறப்புகள் எதற்கு.

மவுனம் மட்டுமே நிரந்தரம் என்றால்

கேள்விகள் எதற்கு.

வாழவே பிறந்தோம்

வழிவிடு.

Link to comment
Share on other sites

வழிவிடு வழிவிடு

வரிப்புலி வருவான் வழிவிடு...

வாளொடு வேங்கை

வருகின்ற போது

வம்புகள் வேண்டாம் ஒதுங்கிடு..

ஒட்டிடும் உடலில்

ஓராயிரம் துளைகள்

போட்டிடுவார்

புலி வழிவிடு

செய்தன பாவம் போதும் என்றால்

போகட்டும் திருந்தி வழிவிடு..

பட்டது போதும்

பாவங்கள் ஆயிரம்

ஈழம் வேண்டும்

வழி விடு

Link to comment
Share on other sites

வழிவிடு உலகே

எமக்காய் வழிவிடு

எம் உணர்வுகள்

எம் வலிகள்

உனக்கு மட்டும்

ஏன் வேடிக்கையாய்

உள்ளது

நாம்கேட்பது

எம் சுகந்திரம்

எம் விடுதலை

புரிந்தும் ஏன்

மெளனமானாய்

நாங்களும் மனிதர்கள்

தான்

Link to comment
Share on other sites

மனிதர்கள்தான் ..

நீங்களும்..

நாங்களும்..

நீங்கள்

உங்கள்

சிரிப்புக்காய்..

எங்களை

எரிப்பீர்கள்...

நாங்கள்

எங்கள்

சிரிப்புக்காய்

அகதிகளாய்

ஓடுவோம்..

மனிதர்கள்தான் ..

நீங்களும்..

நாங்களும்..

நீங்கள்

பசியை

அறியாமல்

புசிப்பீர்கள்...

நாங்கள்

புசிக்கக்

கிடைக்காது..

தவிப்போம்..

மனிதர்கள்தான் ..

நீங்களும்..

நாங்களும்..

நீங்கள்..

மெத்தையில்

தவழ்ந்து

உப்புவீர்கள்

நாங்கள்

கிழிந்த

பாய்

கிழிக்கத்

தேய்வோம்.

மனிதர்கள்தான் ..

நீங்களும்..

நாங்களும்..

நீங்கள்

பேசுதை

நாலுதிக்கும்

கேட்கும்

நாங்கள்

பேசுவது

நாலு

சுவருக்குள்

சாகும்

மனிதர்கள்தான் ..

நீங்களும்..

நாங்களும்..

இவையெல்லாம்

ஏன்

நீங்கள்

பெரும்பான்மை

நாங்கள்

சிறுபான்மை

என்பதாலா

இல்லை?

நம்

முன்னோடிகள்

பின்னோடிப்

பார்க்காததால்.!

Link to comment
Share on other sites

//நாங்களும் மனிதர்கள்

தான் //

நாங்களும்

மனிதர்கள் தான்

அடிக்கடி இப்படிச்

சொல்லிக் கொள்வது

அவசியமாகிறது

மறந்துவிடுகின்ற

அபாயம் உண்டு

அடுத்தவரின் கரிசனையை

எதிர்பார்க்கின்ற போதெல்லாம்

ஏமாற்றங்கள் தான்

புரிந்து கொள்ளாமை

புரிந்தும் உணர்ந்து கொள்ளாமை

இப்படிப் பல காரணங்கள்

பிரச்சனை புரியாதவரெல்லாம்

பாதை இதுவெனச்

சொல்வதில்

அர்த்தமுண்டோ?

தள்ளி நின்று

வேடிக்கை பார்த்து

வேண்டாமெனத் தடுப்பதை

விடுவீர்

கிட்ட வாரும்

பிரச்சனையின்

வேர் தேடும்

பிறகு சொல்லும்

எது வழியென...

நாங்களும்

மனிதர்கள் தான்

விலங்குகளோடு

சண்டைபோடுகிறோம்!!!

விலங்குகள்

உடையுமோ?

விரதங்கள்

முடியுமோ?

விரக்தியோடு

புன்னகைப்பதைத் தவிர

எதுவும் தோன்றவில்லை....

Link to comment
Share on other sites

எதுவும் தோன்றவில்லை - என்

நிலை விளங்கவில்லை

ஏந்திழை ஈட்டிப்பார்வையைத்தீட்டி

என்னுள் எறிந்தபோது

எதுவும் தோன்றவில்லை - என்

நிலை விளங்கவில்லை

உன் புன்னகை மெய்யா

பொய்யா ஊமைக்குசும்பா

என் எதிர்காலத்தை ஏழையாக்கும்

இராஜதந்திரமா

எதுவும் தோன்றவில்லை - என்

நிலை விளங்கவில்லை

என் கட்டுக்கடங்காத

ஹார்மோன்களை

சுண்டி இழுப்பதில்

உனக்கென்ன சுகமோ..

நான் எழுப்பி வைத்திருக்கும்

தீச்சுவரால் தடுக்கமுடியாத

புதுப்புது வைரஸ்களை

எப்படித்தான் கண்டுபிடிக்கிறாயோ..

எதுவும் தோன்றவில்லை - என்

நிலை விளங்கவில்லை

நீ டாம் நான் ஜெரி

இதுவா நீ எனக்கு

வைத்திருக்கும் பொறி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.