Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

பசுமரத்தாணியாய்

அவன் நினைவு

எனைத் துரத்த

பார்க்குமிடமெங்கும்

அவன் உருவம்

விம்பமாய்த் தோன்ற

பாவையிவள் தவித்தாள்

கண்ணிருந்தும் குருடாய்

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

கண்ணிருந்தும் குருடாய்

நான் தடக்கி விழுந்தபோது

கைகள் பிடித்து எனை

தூக்கி விட்ட உறவுகளான

என் அண்ணாக்கும் தம்பிக்கும்

என்றும் நான் அன்பாக

முத்தமிடத் துடிக்கையில்

சத்தமின்றி என் மனசினுள்

நுழைந்த காதலால்

அண்ணாவையும் தம்பியையும்

பிரியும் நிலை ஏற்படுவதை

நினைக்க என் கண்ணில்

கண்ணீர்த்துளிகள்

கண்ணிருந்தும் மீண்டும்

நான் குருடாய்.....

Link to comment
Share on other sites

குருடாய் இருந்தாலும் கோழி

குழம்பில் ருசிதானே...

பெண்ணாய் பிறந்தவர்கள்..

பிதற்றுவதும் இயல்புதானே..

கூடப்பிறந்தவரோடெல்லாம்

கூடிவாழ வேண்டுமென்றால்..

உன் கல்யாணக் கனாக்கள்..

கிட்டுமா கிடைக்கமா.. பெண்ணே..

பெண்ணாய்ப்பிறந்துவிட்டாள்..

பிறந்தவீடு உனக்கென்றும்..

நிரந்தரமில்லையம்மா..அழுகை விட்டு

புகுந்தவீட்டு அழுக்கு நீக்க

துடைப்பம் கையிலெடு தூயவளே..

Link to comment
Share on other sites

தூயவளே...

வாழ்கையின் கவர்ச்சி

நீ கொண்டு

அழகின் கவர்ச்சியால்

மயங்கா...

காதலின் கவர்ச்சிக்குள்

தொலைந்திடா?

உறவின் கவர்ச்சி

சொல்லி

உரிமையின் கவர்ச்சியை

தாய்மையின் அன்பால்

வென்று

வாழ்கையின் சிறப்பை

சொல்லி விடு

Link to comment
Share on other sites

சொல்லிவிடு சொல்லிவிடு

சொல்ல வந்த காதலை

ஒருமுறையாவது அவனிடம்

உதட்டை திறந்து சொல்லிவிடு

சொல்லாத காதல்

செல்லாத காதலாகிடுமே

சொல்லிவிடு சொல்லிவிடு

உதட்டை திறந்து சொல்லிவிடு

Link to comment
Share on other sites

சொல்லிவிடு வெண்ணிலாவிடம்

சொல்லாமல் தினம் கொல்லும் காதலை

அள்ளிவிடு உன் கவிமழையை

முக்கித்தவிக்கும் உன் நிலையை

அல்லி மலரிடம்

மல்லிக் கொடியிடம்

நெஞ்சில் பள்ளிகொள்ளும்

வெள்ளை நிலவிடம்

கொள்ளைகொள்ளையாய்

அள்ளிக்கொடு உன்காதலை

Link to comment
Share on other sites

உன்காதலை அள்ளிக்கொடு

உனை நினைத்து ஏங்கும் என்னிடம்

உன் அன்பைக் கொட்டிவிடு

உனை காண துடிக்கும் என்னிடம்

உன் கவிமழையை தூவிடு

உனை பாட தொடங்கும் என்னிடம்

Link to comment
Share on other sites

என்னிடம் மயங்கி

தன்காதல் இயம்பி

தன்னிலை மறந்து

தள்ளாடும் நிலவே

கவிபாட அழைத்தாய்

கடல்தாண்டி வந்தேன்

விண்ணேறி வரவும்

விண்ணோடம் இல்லை

மண்மீது பெண்ணாகி - நீ

என்னூஞ்சல் அமர்வாயோ !

மணமாலை நீ சூடி

மலர்வாசம் வீசாயோ ?

Link to comment
Share on other sites

மலர்வாசம் வீசாயோ

தென்றல் காற்றோ

கனிமொழியாள் படைப்பில்

கற்பனைக்குள் தோற்ற வாசம்

காலத்தால் அழிந்த வாசம்

இதயத்தில் மறந்த வாசம்

மலரோடு மறைந்து போக

சுமையாக வந்த வாசம்

என்னைச் சுட்டேரிக்க

வாசமில்லா கவி பிறந்தது

இன்று

Link to comment
Share on other sites

இன்று

நிஜமிழந்து நினைவிழந்து

நிர்க்கதியாய் புலம்பெயர்ந்து

உறவிழந்து ஊனிழந்து

உரிமையும் இழந்து

தவித்திடும் தமிழன் நான்

Link to comment
Share on other sites

தவிக்கும் தமிழன் நான்

உயிர்காக் ஒடி வந்தேன்

அயல் நாடு

அடைக்கலம் கிடைத்ததாலே...

கவியத்தமிழன் நான்

பக்தி வேண்டி கோவில்

வந்தேன ஆயுதமும்

கொண்டு வந்தேன்

என் உயிர் காத்த

கடவுளக்காய்

நன்றி சொல்லி

பலி கொடுத்தேன்

மனித உயிரை

நான் வாழ்வதற்காய்....

Link to comment
Share on other sites

வாழ்வதற்காய்

வம்சமறுப்பவனல்ல

தமிழன் வாழ்வதற்காய்

தன்னையே அழிப்பவன்

ஈனச்செயல்களால்

எம்மினத்தை இழிவுபடுத்தும்

சில காட்டேறிகளை

கண்டதுண்டமாக

வெட்டி வீசவேண்டும்

Link to comment
Share on other sites

வீசவேண்டும்..

வெறிநாய் உள்ளிருக்கும்..

வெளியே வீச வேண்டும்..

அன்பும்..எளிமையும் உள்

வாழ வேண்டும்..

உடல் வலிமை உன்

ஆரோக்கித்தை பாதுகாக்கும்..

கோபம்.. உன்னதும்..

உன்னவரதும் வாழ்வை

பறிக்கும்..

நேசமும்..நேயமும்..கொண்டு...

ஒற்றுமை கொண்டு உலகோடு

வாழும் நிலை மலரவேண்டும்..

கனாக்கள்தானா இதுவும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவும் உனக்கோர் பாடம்!

எட்டாக்கனி புளிக்கும் என

முட்டாள்கள் சொன்ன மூடக்

கதைகளை விட்டெறி!! எறும்பும்

ஊரக் கல்லும் குழியும்!. வல்லவனுக்கு

புல்லும் ஆயுதம்! போதும் உறக்கம்!

எழுந்திரு! இளைஞனே!

Link to comment
Share on other sites

இளைஞனே உன்

வாழ்கை உன்னிடம்

ஏதற்காய் தடுமாற்றம்

பாதைகள் பல மாறி

பருவங்கள் தனை

இழந்து

தோல்விகள் நீ கொண்டு

குடும்பத்தின் நின்மதி.தனைத்

தொலைத்து

உறவுகள் தனை வெறுதது்

தனிமை சிறை உனக்காய் எழுதி

ஏன்?

முதுமையில்

இளமை தேடுகின்றாய்.....

Link to comment
Share on other sites

தேடுகின்றாய் நீயும்

எனக்குள் உறங்கும்

இன்னொருவனை...

சூடுகின்ற மலரிலும்

சுந்தரத் தமிழிலும்

பாடுகின்ற பட்சியின்

குரல் விநோதத்திலும்

என் வாசம் கலந்திருக்கும்!

காது திருப்பி

மெய் சிலிர்த்து

மனசுக்குள் உள்வாங்கு

வடிவாய் விஷ்வரூபமாவேன்!

நண்பனாய் நான் சிரிப்பேன்

நல்ல உள்ளதோடு

உனை அணைப்பேன்!

கண்களை மூடி

நீ தூங்கு

கண்டறியாத உலகம்

காறியுமிழும்

விடு...

விழி மூடி தியானி

வழி காட்டாத

உலக செய்கை

உனக்கேன் பயணி!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணி.... உனக்குள்ளே பயணி!

புல், பூண்டுகள் மறைந்தன,

செடி, கொடி, மரங்கள் மறைந்தன!

மாடமாளிகைகள், கூடகோபுரங்கள் போயின!

பூமிப் பந்து ஒரு மண்சட்டியாக!

பக்கத்தில் நிலவு, பாதி தூரத்தில் செவ்வாயும், புதனும்!

எல்லாக் கோள்களினதும் எழிலான தரிசனம்!

எங்கும் சம தரிசனம்!.... இதற்காகவேனும்,

பயணி..... உனக்குள்ளே பயணி.

Link to comment
Share on other sites

பயணி

கஜனி முகமது போல்

எத்தனை முறை

வேண்டுமெனினும்

பயணி

கோட்டை உனக்குத் தான்!

வீணே சயனித்திருப்பதிலும்

'விசர்'க் கதை பேசி

சாதாரண நரனாய்

நீ இருப்பதிலும் என்ன பயன்?

நடந்தால் தான் நதி

நுரை கக்கினாலும்

கரை தொட்டால் தான் கடல்

குறை இருந்தாலும்

உனக்குள் நம்பிக்கை

நிரப்பி

கறை யளித்து

பிறையென வளந்து

முழு நிலவாய்

ஒளி கொடுத்தால் தான்

நீ மனிதன்!

Link to comment
Share on other sites

மனிதன் தன்

வாழ்விழந்து

ஊருக்கு உறவுசொல்லி

புரிதல் தனைமறந்து

பிரிந்தே சேர்த்து

நின்று உரிமை

தனக்கெழுதி

பல முகம்கள் தனைக்

கொண்டு சமூகத்திற்காய்

வாழ்கின்றான்

இருளுக்குள் தவித்துக்

கொண்டும்

Link to comment
Share on other sites

இருளுக்குள் தவித்துக்

கொண்டும்

பொல்லாத நினைவில்

என்னைத் தொலைத்துக்

கொண்டும்

எத்தனை காலம்

இருப்பேனடா கண்ணா?

உலகுக்குள்

உண்மையில்லை

மயங்கி மயங்கி

அலைபாய்கின்ற மனசினால்

நிம்மதியொன்றில்லை

சிலைகளுக்குப் பின்னால்

கடவுளைத் தேடியும்

சேலைகளுக்குப் பின்னால்

பெண்மையைத் தேடியும்

புரிந்து கொண்டது

எதுவுமில்லை!

நான், அவள்

சல்லாபிகின்ற எல்லாம்

ஐம்பூதச் சேர்கையின்றி

வேறெதுவுமில்லையெனும்

ஞானம் கூடவில்லை

வீணாகக் கரைகின்றது

காலம்

கோலங்கள் பல வரையும்

ஆசை மீன்கள் மனசுக்குள்

ஓடித் திரிந்தாலும்

சோம்பித் திரிகிறேன்

சோகமடா எல்லாம்!

கண்ணா

அண்ணாந்து பார்த்து

அரோகரா எனக்

கோஷம் போடும்

சராசரி மானிடனாக

என்னையும் ஆக்காதே

விண்ணெல்லாம்

தொட்டு

விண்மீன் அளைந்து

விளையாடும்

நீல மேனி வண்ணா

வாய் திறந்து

நான் சொன்னால் தான்

என் மனம் புரிவாயோ?

காலமெலாம்

உனை மனதில் ஏந்தி

உற்ற தோழானாக்கி

உறவு கொண்டேனே

மீதமெல்லாம் நான்

சொல்லவும் வேண்டுமோ?

மங்களங்கள் தருவாய்

என் ஈழ மண்ணின்

விடுதலை தருவாய்

கோல விளிப் பாவையர்

அழகில் லயித்து

கட்டற்ற கவி செய்யும்

புலமை தருவாய்!!!

Link to comment
Share on other sites

தருவாயா?

பூவின் மென்மை

பேச்சிலும் செயலிலும்

கொண்டவள்

பலர் ரசிக்க ..

கல்லைப் போன்ற

உறதி மனதில்

கொண்டு தோல்வியிலும்

வெற்றி கண்டாள்

சுகந்திர காற்றை

சுவாசித்து _ ஆனால்

பிரிவை தாங்கா இதயம்

இவள் கொண்டதால்

வெற்றியிலும் தோல்வி

கண்டாள் இவளுக்காய்

தருவாயா இறைவா ?

உறுதியான இதயத்தை...

Link to comment
Share on other sites

இதயத்தை தேடி

இளவயது பறக்கின்றுது

நொடியினுள் தீரும்

இன்பத்திற்காய்

நூற்றாண்டாய் தவம்

காத்திருந்து கனிந்து

கசங்கிய பிறகே

கனவிடயம் புரிகின்றது

Link to comment
Share on other sites

புரிகின்றது எனக்கெல்லாம் என்றே சொல்லி;

விரிகின்ற நவீனத்தின் அழுக்கைப் பற்றித்

திரிகின்ற இளசுகளின் நிலையை எண்ணி

எரிகின்ற மனத்தோடு வாழும் `பழசு'நான்

Link to comment
Share on other sites

நான் என்ற அகந்தையில்

நாமழிந்து போகின்றோம்

நானெல்லாம் ஓன்றானால்

நல்லதோர் தேசம் அமையும்

ஈழத்திலும் பூ மலரும்

இனிய உதயம் கிட்டும்

வாழ்க்கையும் வசந்தம் ஆகும்

வரவெல்லாம் அதிகமாகும்

வையகமும் வாய்பிளக்கும்

Link to comment
Share on other sites

வையகமும் வாய்பிளக்கும்

எம்மை நாம் உணர்த்தால்

ஆணவத்தின் உச்ச நிலை

மறந்து

சுயநலவாழ்வை

கொஞ்சம் மாற்றி எம்

திறமை எமக்காய் எழுதி

தலைக்கணம் தனை மறந்து

உண்மைத்தேடல் தனைக்

கொண்டு

உரிமைக்கரம் தனைப்

பற்றி வின்விவாதம்

சண்டை மறந்து புதிய

தேடல் கொள்வோம்

எமக்காய்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.