Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

எமக்காய் தன்னை

வெண்ணிலா மறைக்க..

ஏனோ விண்மீன் சிரிக்க...

அடடா காற்றுக்

கைகள் நீட்டி

உன் சேலையை

என்னிடம் இழுக்க..

வருவேன் என்றது சேலை

விடமாட்டேன்பதுன் லீலை..

தோளில்த் தோளாய்த்

ஒட்டிக்கொண்டு..தொடு

விரலால் கன்னம்

தொட்டுக்கொண்டு..

ஏதேதோ சொல்கின்றாய்..

எதுவுமே புரியவில்லை..

உன் புன்னகை மட்டும் வாசிக்கிறேன்..

உனை மடியில் ஏந்திட யாசிக்கிறேன்..

மாலையிடவா யோசிக்கிறேன்..மண

பெண்ணாய்நீ வர பரி காசிக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

எமக்காய் தன்னை

வெண்ணிலா மறைக்க..

ஏனோ விண்மீன் சிரிக்க...

அடடா காற்றுக்

கைகள் நீட்டி

உன் சேலையை

என்னிடம் இழுக்க..

வருவேன் என்றது சேலை

விடமாட்டேன்பதுன் லீலை..

தோளில்த் தோளாய்த்

ஒட்டிக்கொண்டு..தொடு

விரலால் கன்னம்

தொட்டுக்கொண்டு..

ஏதேதோ சொல்கின்றாய்..

எதுவுமே புரியவில்லை..

உன் புன்னகை மட்டும் வாசிக்கிறேன்..

உனை மடியில் ஏந்திட யாசிக்கிறேன்..

மாலையிடவா யோசிக்கிறேன்..மண

பெண்ணாய் நீ வர பரி காசிக்கிறேன்..

நீ வர பரிகாசிக்கின்றேன்-ஆனால்

உனையே தினமும் யாசிக்கின்றேன்...!

விண் முகில்கள் மோதி

இடிகள் கேட்டிடும் போதெல்லாம்

வெண்ணிலா உடைந்து வீழ்ந்ததோ....?

யோசிக்கிறேன்....!

வெளியில் வந்துனைத் தேடி

மதியே (நீ) இன்றி -நிம்

மதியே இன்றி வாடிடுவேன்...!

ஓ...

மழைக்கால மேகம் தான்...

மழை நீரில் நனையாமல்

வெண்ணிலா வீட்டை போச்சு....

வெளியே நான் வந்து

மழை நீரில் நனைகின்றேன்.....

மதியே இல்லாத மனிதன் நான்...! :P

Link to comment
Share on other sites

நான் எழுதிய கடிதம்

முகவரி நனைந்து கரைந்ததில்...

இடம் மாறி

உன்னிடத்தில் வராமல்

போயிருக்கலாம்.

ஆனால்..என்

காதல் உன்னிடத்தில் வந்து

சேர்ந்தது.. அறிந்தேன்...

என் முதற்கனவே...

பதிலுக்காக பாத்திருக்கிறேன்..

Link to comment
Share on other sites

பாத்திருக்கிறேன்

உன்னை

காத்திருக்கின்றேன்

உனக்காய் நீ

எடுத்த என்

இதயம் வேண்டி

நீ சிதைத்த என்

வாழ்வைக் கேட்டு

நீ எறிந்த என்

மனதைத் தேடி

காத்திருக்கின்றேன்

என்னை நானே

தேடிக்கொண்டு.....

Link to comment
Share on other sites

தேடிக்கொண்டு அலையும்

என் விழிகள்..

உன்னைக் காணவில்லை..

நீ பத்தடி அருகில் இருந்தாய்

என்இதயம் அறிந்தது..

இதய நாடிகள் எகிறித்துடிக்க..

எண்ணங்கள் விம்மி வெடிக்க..

என் காதலே..ஏழு வருடங்கள் தாண்டி..

ஏதோ ஓர் தூர தேசத்தில்.. எனக்கருகே. நீ

உன் முகம்காண விரும்பியும்..

விளைவுகள் எண்ணி..இருக்கிப்

பிடித்த என் உயிர்த்துடிப்பும்..

நானும் உன்னருகில் இருந்தது...

உனக்குத்தெரியாது.. ஆனால்..

உன் குழந்தையை

தூக்கி முத்தமிட்டேன்.

உன் கணவனை

வாழ்த்தி அனுப்பிவிட்டேன்..

நானும் நீயும் நேசித்த

காதலை விதி தூக்கி எறிந்ததே..

என்று எனக்கு இப்போது

வருத்தமில்லை..

அழகான குழந்தை..

அன்பான வாழ்க்கை..

உனக்கு கிடைத்திருக்கிறது..

உன் பூப்போன்ற

இதயம் எங்கிருந்தாலும் வாழ்க..

Link to comment
Share on other sites

வாழ்க வென

நீ வாழ்த்த

வாழ்த்து மழையில்

நான் நனைய

இணையா இதயத்தில்

மரணித்து போகா

காயங்கள்

மறைத்தே நான்

வாழ உன்னால்

மறத்துப் போனது

என் இதயமும்

கூட

Link to comment
Share on other sites

கூடவெனத் தோர் வனத்

தோகைமயிலாடும் -மனத்

தாமரையிலேறு முகத்துள்

பாவனைகள் மாறும்...

கூடிக்கழித் திடவேயாண்

கோமகனும் வாடும்-பெடைக்

கோழியினாள் தொடத்

காதைவிலகி யோடும்..

கூடமறுத்த வளோடி விட

மனத்துவலியாளவன் -தன்

அகத்தினால்த் துவள..கூட

முன்னோடல் வலித்தது காண்.

Link to comment
Share on other sites

'காண்" என்று சொன்னான் விகடம்

கண்டுவிட்டேன் அவன் மனவலி அகரம்

மானவளின் மறுப்பில் ஊறி

மாய்ந்ததென்ன மானுடக்கவியே!

தேனென்று அந்நினைவை ஏந்து

தினந்தினம் தித்திக்கும் உணர்வாய்!

தீண்டலைக் காட்டிலும் இன்பம்

திரண்டிட காண்பாய் நண்பா! B)

Link to comment
Share on other sites

நண்பா

நாற்று நட்டாய் அதில்

நயமும் கண்டாய்

சேற்றிலாடி நின்றாய் - இன்று

காற்றிலா தேசத்திலே

கவிதை பாடியுள்ளாய்

மாற்றம் என்ன ?

மாயம் என்ன ?

Link to comment
Share on other sites

மாயம் என்னயார் கண்டார்..

மாற்றம் என்ன நான் கண்டேன்..?

அவரவர் இரகசியம்..

அவரவர்... மறைப்பார்..

மறைப்பதை தேடுதல்

மானிட வழக்கம்..

இருப்பதை அறிந்தபின்..

இருக்கையும்.. கசக்கும்..

படுக்கையும் கசக்கும்..

என்.. பா..வையும் கசக்கும்

Link to comment
Share on other sites

கச்கும்போதே இனிக்கும் வாலிபம்

கனியும்போது தொடரும் வாழ்க்கை

விதை வீழ்ந்தால்தான்

நாளை விருட்சம்

நீ வாழ்ந்தால்தான்

நாளை ஈழம்

Link to comment
Share on other sites

நாளை ஈழம் மலரும்..

நம் இன்னல்கள்..

யாவும் மறையும்..

உலகம் யாவும் புகழும்..

தமிழ்த்தாயகப் பூமியில்

மழலைப் பூக்கள் சிரிக்கும்..

Link to comment
Share on other sites

சிரிக்கும் மழலை கண்டு

சிந்தை குளிரும் நமக்கு

வெந்த உள்ளம் யாவும்

விண்மழை ஏந்தி குளிரும்

எப்போதும் தமிழோடு

எம் புலம் வாழவேண்டும்

தப்பாமல் நாமெல்லாம்

தலைவணை வணங்கவேண்டும்

தேசத்தின் குரலினை

தினம் ஓலித்து

தேசியம் நாம்

காத்து நிற்கவேண்டும்

Link to comment
Share on other sites

காத்து நிற்க வேண்டும்

அதற்காய் ஆழக்காதல் செய்

உள்ளப் பூவை உறுதி ஆள

உயிர் பறவையில்

உன்னதம் வெளிக்கும்

தீயில் தகிக்கும்

தாயகம் காக்க

உலகதத்திசைகளில்

திரண்டது வலிமை

என்ற சொற்பதம்

மறவர் சேனைக்கு

மகுடம் ஏற்றும்.

விரைவு என்பது

உன்னிடம் என்னிடம்

உயிர்க்கும் எழுதுகோல்களில்

முனைகளில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளது என் காதல் உன்னிடத்தே!

இருந்தும் மறைப்பது நியாயமா

அன்பே! கருத்தில்! ஒன்றாய்

இணைந்தோம்! உன் விழிகளின்

மொழிகளில் சிக்குண்டது

என் அத்தனை கவிதையும்!

அடி பெண்ணே! இன்னுமா?

நாணம்?!! ஏற்றுக்கொள்! இல்லை

எனில்!! காதல் ஊற்றிக் கொல்!.

Link to comment
Share on other sites

கொல்லும் விடமாய் காதல்

கொல்லும் இதமாய்.....

அதை-வெல்லும் விதமாய் யாரும்

இப் புவியில் இல்லை உணர்வாய்..! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வாய் எந்தன் காதலை ஒருநாள்

கணக்கும் எந்தன் உள்ளக் குமுறல்

கனதியில் வெறுமைதான் ஆனாலும்

வேதனையின் வலியோ அதிகம்தான்

Link to comment
Share on other sites

அதிகம்தான்

பேசாமடந்தை உன்னிடத்தே..

நான் பேசியது அதிகம்தான்..

அதிகம்தான்..

முகம் ஏறிடா உன் முகத்தை

நான் பார்த்த நாழிகைகள்

அதிகம்தான்..

அதிகம்தான்..

எனக்காக நின்று பேசாத உனக்காக

நான் காத்திருந்த மணித்துளிகள்

அதிகம்தான்..

அதிகம்தான்..

எனக்காக ஒரு வரிப் பதிலெழுதாத

உனக்காக நான் எழுதிய கவிதைகள் அதிகம்தான்..

அதிகம்தான்..

எனக்காக ஒருதுளி கண்ணீர் சிந்தாத உனக்காக

என் குறிக்கோளிழந்தது அதிகம்தான்

அதிகம்தான்..

Link to comment
Share on other sites

தான் எனும்

தன்மை கூடி

மனிதம்

வீண் எனும்

எண்ணம் தோன்றுதம்மா!

வானென

விரிந்துகிடந்த

மனித மனம் - ஒரு

சாணென

சுருங்கியதும்

ஏனம்மா?

வாடிய பயிர்

கண்டபோதெல்லாம்

உருகிய வள்ளளார்

காட்டிய வழி

மறந்தான் தமிழன்

'யாதும் ஊரே

யாவரும் கேளீர்'

என்று உலக

சொந்தம் பேசியவன்

தமிழன்

எழுதியதெல்லாம்

ஏட்டிலே தூங்கிவிட

புழுதி படிந்த

மனங்களுடன்

நடக்கின்றான்

மனிதன்

வேறென்ன சொல்ல

அவன்

மரந்தான்!

Link to comment
Share on other sites

மரந்தான் மனிதன்

அவன் மறந்தான் மனிதம்

புரிந்தான் தன்னிலையினை

புரிவான் பல சாதனைகளை

கருந்தோள் கொண்டவன் - அவன்

கருத்தால் வெல்பவன்

Link to comment
Share on other sites

வெல்பவன் தூங்கவில்லை..

எம் வீரம் சோரவில்லை..

சத்தியம் செத்ததாய்..எங்கும்

வரலாறு வாழவில்லை..

கரிகாலன்..காத்திருப்பு..

எதிரியைக் கலங்கடிக்கும்..

ஊர்விட்டு வந்தாலும்..

எம்முறவே உரம் சேர்க்கும்..

உணர்வெல்லாம் ஊற்றி..

தலைமைக்கு பலம் சேர்ப்போம்..

ஒற்றுமையாய்.. தோழர்களே..

நம் மண்ணைக் காப்போம்.

Link to comment
Share on other sites

காப்போம் தமிழ்மானம்

காத்தோம் தமிழ்வீரம்

கல்லறையில் உறங்கினாலும்

கலங்கடிப்போம் எதிரியினை

கோவணம் அவிழ்ந்தாலும்

கோமகன் மானம் காப்போம்

வீரர் படையடா நாம்

வீழமாட்டோம் !

Link to comment
Share on other sites

வீழமாட்டோம்

அண்ணன் சொல்

மீறமாட்டோம்

காலனாவோம்

கரிகாலன்

ஆணையேற்று

சிங்களஞ் சேனை

முடித்து

வெற்றி வீரனாவோம்!

மங்களம்

பாடவேணும்

மற புலி வீரம்

காணவேணும்

அங்கிள்

அன்ரி எல்லாம்

கைசேருங்கோ

எம் தேசத்தின்

கங்குல் விடியும்

கோலம் பாருங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கோ பாருங்கோ

தாய்மண் மீதே நடந்தேறிடும்

படுகொலைகள்

பாருங்ககோ பாருங்கோ

வாழும் புலத்தினில்

நித்தம் நித்தம்

நடந்தேறிடும்

கொலை வெறியாட்டங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறியாட்டங்கள் அடக்கவே வேங்கைகள்

வெகுண்டு எழும்!! தங்கள் மண் என்று

தாரால் எழுதினாலும் செந்தமிழ்மண்

அது சிங்களமாய் ஆகுமா?!!

சந்தனத்தில் மீது சேறா?!! பூக்கடைகள்

நாறடிக்க சாக்கடைத் தெளிப்பா?!

சுட்டெரிக்கும் சூரியனும் தூங்கி

விடலாம் சில நொடிகள்!! எட்டப்பர்

கூட்டத்தை விட்டு வைப்போமோ?!!

விண் எட்டும் எங்கள் வீரம்

கைதட்டும் கடலலைகள்! எங்கணுமே

தமிழ் மணக்கும்! வீரக்குருதியில்

எம் மண் வெளிக்கும்! விரைவினில்

எம் ஈழம் மலர்ந்தே சிரிக்கும்! பார்!.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
    • நான் அறிந்த வரை காளியம்மாள் கிட்டதட்ட வெல்லும் நிலையாம்…. பயந்து போன தீம்கா….ஒரு வாக்குக்கு ஒரு கோடி வரை கொடுத்ததாம்🤣 🤣
    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.