Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கும் உந்தன் விழிகள்

யாருக்கும் தெரியாமலே

கார்காலமதில் அதிகாலையில்

யார்க்கும் தினமும் கவிவரிகள்

ஈர்க்கும் மனதை காந்தமாய்

வடிக்கும் சொற்கள் ஒரிரண்டு

நெருப்பாய் நெஞ்சை தீச் சுடும்

நீர்த்து பூக்கும் கண்ணீர்த்திவலைகள்

தர்க்கம் புரிவதற்கோ நேரமில்லை

மார்க்கம் இதுவென்றே மனதினில்

புரியும் சமாதானங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

புரியும் சமாதானங்கள்

என்று

ஒதுங்கி நின்றோம்!

எரியும் நெருப்பில்

எண்ணை வார்ப்பதன்றி

எதுவும் புரியவில்லை

அந்த மடையருக்கு!

அரியும் புலியும்

மோதினால்

ஓட்டமிடும் அரியும்

தெரியும் நீல வானம்

அண்ணாந்து பார்

விரியும் வானவில்லில்

தெரியும் புலியின்

வரியும்!

சிரியும் ஐயா

சிரிசேன ஐயாக்களால்

சரிசமன் எமக்கு

என்றும் வராது

போலியாய் நெற்றியில்

பட்டையிடும் பக்தன் போல்

காவிப் பல் தெரிய

இவா்கள்

சமாதான வேதம்

ஓதுவது ஒன்றும்

புதிதி்ல்லை!

வேலியாய்

நாம் தான்

இருக்கவேணும் ஐயா!

ஆளிக் கடலலை

மேவி

விரியும் வானத்தில்

நீந்தி

வரிசையாய் புலிப்படை

நடத்தும்

அண்ணன் வீரத்தால்

பரிசாய் கிடைக்கும்

எமக்கு ஈழம்!

Link to comment
Share on other sites

ஈழத்து மண்னே

சின்னச்சின்னஆசைகள்

கற்பனைக்குள்

ஆனால் நான் வாழ்த்த

ஊரோ அழிவிற்குள்...

சுடகாடாய் என்

உறவுகள் கல்லறைக்குள்

இடம்தெரியாமல் போக

கோழையாய் நினைவு

சுமந்து வாழ்கின்றேன்

Link to comment
Share on other sites

வாழ்கின்றேன் என்று

தான் சொல்கிறாய்

நீயும்

உண்மையில் வாழ்தல்

என்றால் என்ன?

சூரியனுக்குப் பின்

எழுந்து

பல் துலக்கி

தேநீர் தயாரித்து

குடித்து முடிய

கணினியின்

உயிர் பொத்தான் அழுத்தி

இணையத்தில் கொஞ்சம்

நடந்து திரிந்து

நாலைந்து தொ(ல்)லை பேசி

நேரம் கரைத்து

மதியம் ஏதேனும்

சமைத்துப் புசித்து

குட்டித் தூக்கத்தில்

தேகக் களைப்பகற்றி

மீண்டும் கணினி,இணையம்

இரவுணவு என்று

அதே பழைய பல்லவி

பாடி

நீயும் சொல்கிறாய்

வாழ்கின்றேன் என்று!

என்ன இது

காலத்தின் கை பிடித்து

நடை பழகாமல்

என் விதி

இதுவென மண்வாரித் தூற்றி

சந்தோசம் தொலைக்கின்றாய்!

நான் சொன்னது

கேட்டாய்

சொல்லாத சேதி எல்லாம்

உய்த்தறிந்து

சொல்லாததும் புரிவாய்!

உலக இயக்கம்

இம்மியும் நிற்காது

விலகி நிற்பதால்

விந்தைகள் நடக்காது

விம்மி நீ அழுதால்

கையொன்று நீளவேண்டும்

உனை நோக்கியும்!

தொட்டுத் துடைக்க

கையொன்று நீளும்மெனின்

பொய்கை போல் நீர் கொண்டு

கண்கள் அழுவதில் கூட

சுகமுண்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகமுண்டு சோகத்திலும்

சொந்தங்கள் சேர்ந்திங்கே

சந்தோசமான நிகழ்வுகளில்

சங்கமிக்கும் பொழுதுகளில்

எல்லைமீறிய ஆனந்தம்

மனக்கதவை தட்டி

எட்டிப்பார்க்கையில்

சுகமுண்டு சுகமுண்டு

உச்சி மோந்து மகளை

அணைத்திடும் வேளையில்

சுகமுண்டு சுகமுண்டு

Link to comment
Share on other sites

சுகமுன்டா?

கண்கள் அழுவதில்

கூட

அறியாது நிற்கின்றேன்

நீ கூற

புரியாத காயங்கள்

தெரித்தே வந்ததால்

அறியாத மனசு

தெரிந்தே தேட

தனிமை சிறையிலும்

சுங்கள் கண்டேன்

தெரியா வாழ்வை

தெரித்த வலியை

சுமப்பதால் என்ன

பயன் நீ சொல்?

Link to comment
Share on other sites

நீ சொல் தாயே..

எங்கிருக்கிறாய்..

உன் நிழலில்..

சுகமுண்டு அம்மா..

எனைச் சோகமெல்லாம்

சூழ்ந்ததே.. தொலைவில்..

ஆரோரோ இல்லை ..

எவரெவராலோ தொல்லை..

அப்பாவிப்பிள்ளை..

படும்பாடெல்லாம் உன்னிடம்

நான் சொல்லவில்லை

உன்மடியில்

தூக்கத்திற்கு ஏங்கவில்லை..

இங்கே தூங்கவில்லை..

கொசுத்தொல்லை

கூட இல்லவே இல்லை

நிம்மதியும் இல்லை

பசி கேட்கும் வயிறு

பீஸாவைப் பேசாதுண்ணும்..

பசி மீண்டபின்

அம்மா கை உணவை எண்ணி

உள்ளம் ஏங்கும்..

அம்மா என்ற சொல்

உன்றுதான்.

அதில் இல்லாத

பொருள் இல்லை..

கனிவு இல்லை..

பரிவு இல்லை..

பாசம் இல்லை..

அம்மா நீ இல்லாமல்

எனக்கு உலகமே இல்லை

Link to comment
Share on other sites

உலகமே இல்லை

உலகை காட்டிய அம்மா

நீ அருகினில் இல்லை

ஆசைமொழி பழக்கி

அன்பை பாலால் புகட்டி

அறிவெல்லாம் திகட்டாமல்

தினம் ஊட்டி

பொத்தி பொத்தி எனை

வளர்த்தாய் - இங்கு

பொட்டலாய் என் வாழ்க்கை

உறக்கத்தை தேடுகின்றேன்

உறவைத் தேடுகின்றேன்

உணவையும் தேடுகின்றேன்

முடிவினில் விடையாய் நீதான்

தேசத்தின் இருளகலட்டும்

தேசிய விடுதலை கிட்டட்டும்

நானும் ஓர் நாள் ஈழம் வருவேன்

உன்தன் மடியில் தவழ்வேன்

இதுவரை இழந்த யாவற்றையும்

இறுதிவரை உன்னிடம் பெறுவேன்

Link to comment
Share on other sites

பெறுவேனா?

அன்னையே உன்

பிரிவால் நான்

இழந்த நாட்கள்

காயத்தை எழுத

நீ செய்த தியாகங்கள்

என் வலியில் தெரிய

உன் விம்பம்

எனக்காய் வாழக்

கண்டு என்னை

நான் வெறுக்க

மீண்டும்

உன் மகளாய்

உன் அன்பை

பெறுவேனா?

இறுதிவரை....

Link to comment
Share on other sites

இருப்போமா

என்று கேட்டாய்

வெண்ணிலா...

கசக்குமா

கரும்பு தின்ன?

வெறுக்குமா

நிலா ஒளியில்

மேனி நனைய?

பலாச் சுளையில்

பதுங்கியிருக்கும்

இனிப்பாக

இனிக்குமே நம்

வாழ்க்கை!

எதுகைக்கு மோனை

தேடும் இவன்

கவிதையில்

கன அர்த்தம்

உள்ளதென்று

வெள்ளை நிலா

எண்ணுமாயின்

அரச மர நிழலில்

வீற்றிருக்கும் என்னப்பன்

விநாயகன் முன்

கற்பூரமணைத்து

சத்தியம் செய்வேன்

அப்படி எதுவுமில்லையென்று!

சொன்ன கதையெல்லாம்

நம்புவாயா நீ?

அம்புகள் விடும்

உன் விழி

என்று பல

அடுக்கடுக்காய்

கவிதையில்

புழுகுவேன் நான்!

ஒரு வித மயக்கத்தில்

எல்லாம்

கடந்து போகும்

வேறேதும்

எண்ணாதே நிலா

எழுத எழுத

வந்து விழும்

தமிழ் சொல் மயக்கத்தால்

வந்த வினை காண்!

Link to comment
Share on other sites

தமிழ் சொல் மயக்கத்தில்

வந்த வினை காண்

பலர் வாழ்விலும்

சரித்த நிலையோ!!

கற்பனைகள் பல கண்டு

கனவுகள் சில கொண்டு

உன்னேடு நானிருக்க

ஏதுகை மோனைக்காய்

பக்கத்து பெண்ணவளை

கற்பனையாய் ரசித்து

பொல்லாப் பிள்ளையாரை

துணைக்கழைத்து

சத்தியம் செய்து

என்னை ஏமாற்றிய

பொய்யா கவியே..

கவிதையாய் நானிருக்க

என் காதல் தனை

மறந்து ஒரு நொடி

நீ போனதால்

உன்னை நான் மறந்து

போகின்றேன் பல நொடிகள்

Link to comment
Share on other sites

பல நொடிகள்

மறந்து போனால்

என்னம்மா?

காதல் இலக்கியத்தில்

ஊடலுக்குமோர் இடம்

உள்ளதம்மா!

மோதல் கனிந்து

காதலாகிக் கசிந்துருகுதல்

காதலின் ஒர் நிலையம்மா!

ஆடல் கலையின் தலைவன்

சிவனும்

விழி மூன்றும் சிவந்து

சக்தியைக் கோபித்ததுவும்

பின் தணிந்த கோபம்

உடலில் சரிபாகம்

தந்ததம்மா!

விண்ணோடம் ஏறி

விரைந்தே நீ

போனாலும்

உன் மனசில்

சிறகடிக்குமே என்

நினைவுப் பறவை!

என் செய்வாயோ?

பாவம் நீ யம்மா!

Link to comment
Share on other sites

பாவம் நீயம்மா

என பரிதாம்

தனைக்கொண்டு என்னேடு

அனுதாபம் வேண்டாம்

பல வேடங்கள்

தனைமாற்றி

சண்டைகள் போட்டு

என்னேடு சமாதானம்

கொள்ள வேண்டாம்

பார்வதி சிவன்

கதை பேசி என்னை

வம்பாய் இழுத்து

என் மனதைத் தேடவும்

வேண்டாம்

உன்னேடு நான் கொண்ட

கோபம் கொண்டது

தான்

Link to comment
Share on other sites

தான் தோன்றியாய்

ஈஸ்வரன் தோன்ற

தானாட தன் தசையாடும்

மானாட வண்ணமயிலாடும்

கர்வத்தில் மிதந்த

கயவர் நாமடா !

Link to comment
Share on other sites

நாமடா எல்லோர்

மனங்களும் ஆட

கானகத்து மயிலாட

புள்ளிமானோட

குயிலினம் பாட

மங்கையிவள்

மாட்டிக்கொண்டாள்

கனகத்தில்

தத்தித் தாவும்

குரங்கினம் சேட்டைகள்

செய்ய வேல் விழியாள்

பயத்தால் வாட

எங்கோயிருத்து

வந்தான் வேடன்

இவள் அருகில்

விழிமிரன்டு பயத்தால்

விலக கரம்பற்றி

காரணம் கூறாது

அழைத்து போகின்றான்

கானகத்திலிருந்து

எங்கே எனத்தெரியாது

தவிக்கின்றாள்

Link to comment
Share on other sites

தவிக்கின்றாள் தமிழ்மங்கை அங்கே

தன்னுயிரான பதியினுடல் கண்டே

தறிகெட்ட எட்டப்பர் கொண்டே

தறிக்கின்றார் தமிழர்வாழ்வை இன்றே

தரம்கெட்ட அன்னியரின் பின்னே

தயைகேட்டுக் கிடக்கின்ற பதர்கள்

தலைசாயும் நாள்நல்ல நாளே

தமிழ்வாழ்வு சிறக்கின்ற நாளே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளே சிறக்கும்

நல்லன நடக்கும்

நலிந்திட்ட துயரங்கள்

நகர்ந்தே ஓடிடும்

நடைப்பிணங்கள்

நாங்கள் அல்ல

நாட்பொழுதில்

நாளொறு பொழுதாய்

நன்மதிப்பாய் உழைத்த

நூறு ரூபா நோட்டுக்களை

நம் தாய் நாட்டுக்காய்

நல்மனதுடன்

தருவதே நம் பணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணி செய்வது என் கடமை

மண் மீது கொண்ட காதல்

எண் மொழியோணைந்த பற்று

கண் போல் வளர்த்த அன்னை

கண்ணாய் இருப்பதால் மனதினை

வெண்மையாக்கும் செயலும்

தண்ணொளி வீச வைத்திடும்

தரணியில்

Link to comment
Share on other sites

துணைக்கு யார் உளர்

தள்ளாடும் வயதிலும்

துன்பங்கள் பல சுமந்து

தனிமையில் வாழும் உனக்கு?

Link to comment
Share on other sites

உனக்கு நான்

எனக்கு நீ

தள்ளாடும் வயதல்ல

பல்லோடும்

சொல்லோடும்

மல்லாடும் வயது

Link to comment
Share on other sites

வயது ஒன்று ஆனபோது

வாரியணைத்தாய்

வயது பதினாறு ஆனபோது

வாஞ்சையோடணைத்தாய்

வயது அறுபத்தாறு ஆகும்போது

எப்படி அணைப்பாயோ?

Link to comment
Share on other sites

எப்படி அணைப்பாயோ?

என்னவள் கேட்டாள்..

காளை இன்று நீ

என்னை யென்னை

சுற்றிச் சுற்றி

வந்தாய்....

காதலாலே மொழி

பேசிப் பேசி

என்னுயிரில்

பாதியாகிப் போனாய்..

கூடி வாழும் போது

கூடலென்றும்... ஊடலென்றும்

கொன்று ...கொன்று போட்டாய்...

இனி

கூன் விழுந்து

தலை நரைத்து

தடி பிடிக்கும் போதும்

அன்று போலும்

இன்று போலும்

என்றும் எனை யணைப்பாயோ...??

என்ன கேள்வி கேட்டாய்

பெண்ணே...

என்னைக் கேள்வி கேட்டாய்..!! :)

Link to comment
Share on other sites

என்னைக் கேள்வி கேட்டாய்

கண்ணைப் பார்த்து

பதில் சொல்ல சொன்னாய்

பாவையிவள் தவித்தாள்

உன் கண்ணில் தெரிந்த

காதல்கனல் கண்டு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.