Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு உம் கவி பிடிச்சிருக்கு

கவலை மறந்து பாடல் ரசிக்க பிடிச்சிருக்கு

மழலைகளுடன் மழலையாய் மாற பிடிச்சிருக்கு

மழையில் நனைய பிடிச்சிருக்கு

மலர்கள் அழகில் மயங்கிட பிடிச்சிருக்கு

கண்ணாடி வழி விற்பனை பிடிச்சிருக்கு

தினம் தினம் செய்திகள் வாசிக்க பிடிச்சிருக்கு

விகடமாய் எழுதும் கவிதை பிடிச்சிருக்கு

விதண்டாவாதம் பண்ண பிடிச்சிருக்கு

வீசும் காற்று புயலாய் தழுவிட பிடிச்சிருக்க

இத்தனை பிடித்திருந்தும்

என்னை தான் எனக்கு பிடிக்கவில்லை

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

இல்லை..

என்னை எனக்குப் பிடிக்குதே..

என்னோட முதல் இரசிகன்..

நானேதானே...

அடுத்தபிறவி என்றாலும்..

இதே உடல்..

இதே அம்மையப்பன்..

இதே சகோதரங்கள்..

இதே நண்பர்கள்..

இதே.. உலகம்...

எல்லாமும் வேண்டும்...

ஆனால் அப்போதாவது..

தமிழனுக்கென சொந்தமாய்..

ஒரு நாடு வேண்டும்..

Link to comment
Share on other sites

ஒரு நாடு வேண்டும்

தமிழர் நாம் வாழ

ஒரு நாடு வேண்டும்!

ஒரு நாடு வேண்டும்

ஒரு நாளேனும் வாழ

ஒரு நாடு வேண்டும்!

ஒரு நாடு வேண்டும்

நமக்கென மட்டும்

ஒரு நாடு வேண்டும்!

ஒரு நாடு வேண்டும்

அது எப்போ கிடைக்கும்?

Link to comment
Share on other sites

ஒரு நாடு வேண்டும்

அது எப்போது கிடைக்கும்?

வெளியில் வந்து

புன்னகைத்து

பொது மேடைகளில்

ஆசையாக இப்படிக்

கேட்பதால் கிடைக்குமா?

ஒன்று செய்யலாம்

ஊரெல்லாம் வலம் வரும்

வானத்து வெண்ணிலாவை

உளவு பார்க்கச்

சொல்லலாம்!

ஏதேனும் சேதி

கிட்டின்

கேட்டுச் சொல்லுங்கள்

கனக்க எழுத

ஆசை தான்

எனக்கும்...

நேர முட்கள்

எந்தன் கட்டைவிரல்

உரசி அடுத்த வேலையின்

அவசியம் உரைப்பதால்

மீண்டொரு கணம்

வருவேன்

மெதுவாகப் பேசலாம்!

Link to comment
Share on other sites

மெதுவாக பேசலாம்

பதுமையே வா

பொது மைதானத்தில்

கை கோர்த்தபடி

மெல்லமாக நடந்து

செல்லமாக கொஞ்சி

Link to comment
Share on other sites

கொஞ்சி

விளையாடலாம் தான்

அஞ்சி அஞ்சி

நீ போனால்

ஆவதெப்போது?

பஞ்சி பார்க்காது

பக்கத்தில் வாவேன்

கஞ்சி குடித்தபடி

கதைக்க

பல கதை உண்டு!

குஞ்சி பார்த்தால்

குடும்பத்திற்கே

தெரியவரும்...

ஆதலால் யாரும்

பார்க்காமல் என்னிடம்

வா நீ!

கை கோர்த்தபடி

பொது மைதானத்தில்

நடை பழக

எனக்கு விருப்பமில்லை

மெல்லிய இருட்டில்

நட்சத்திர வானம்

பார்த்தபடி

நடப்பதெனில் கொள்ளைப்

பிரியம்...

என்ன ஒன்று

கூடவே வெண்ணிலாவும்

வரும்...

Link to comment
Share on other sites

வரும் வெண்ணிலா

தரும் வெளிச்சத்தில்

சேரும் இருவரையும்

யாரும் பார்த்தால்

என்ன நடக்கும் என்பதை

அன்ன நடை நடந்து என்

கன்ன்க் குழி ரசிச்சு உன்

சின்ன மனசினில் அசைபோடு

நடப்பது ஏது என நீ கூறின்

தடைகளை தாண்டி உடன்

வருவேன் உன் பக்கத்தில்

தருவாயா முத்தங்களை

Link to comment
Share on other sites

முத்தங்களை நான்

தருவேன்

அர்த்தங்களை நீ

புரிவாயா?

வித்தகக் கவியிவன்

விண்ணாளாவும் தமிழோடு

விளையாடும் வெள்ளை நிலாவே

கொள்ளையழகும் சின்னவிதழும்

நான் சுவைப்பேன்

சிணுங்காமல் சிறைப்பட்டு

நீ கிடப்பாயா?

பாஷை பல பேசி

நேர முட்களை

சோம்பலோடு நோக்குவதென்ன?

ஆசை புரிய வைக்க

அன்பால் சிறை வைக்க

மீசை குற்றினாலும்

மிடுக்காக நான் தரும்

முத்தங்களே பல

பாஷை பேசுமடி!

பதிலாக நீ ஏதும்

பேசாதே...

சரியாகக் கணக்கிட்டு

முத்தங்கங்களைத்

திருப்பித் தருவாயா?

Link to comment
Share on other sites

திருப்பித் தருவாயா

திருமகனே

பருவத்துடிப்பின்

இன்பமதை?

புள்ளி மானாய்

துள்ளி வருவேன்

கள்ளி நான்

உன் முன்னால்!

விண்ணிலாவின் ஒளியில்

மண்ணில் இருந்து நாம்

கண்கள் இறுக மூடி

நம்மை நாமே ரசிப்போமா?

ரசிப்போம்

மறப்போம்

சுவைப்போம்

துடிப்போம்

வா வா அன்பே வா

என்னருகே வா

உல்லாசமாக சிறகின்றி

பல்லக்கில் ஏறி

செல்லமாக கதைபேசி

நிலாவுக்கு செல்வோம்

Link to comment
Share on other sites

நிலாவுக்கு செல்வோம்...

உலாவவல்ல..

நிலாக்குழிகள்..

நீர் சுரக்கவில்லையாம்..

பூமியில் நீர் வாங்கி

நிலாவில் ஒரு குடித்தனம்...

நீயும் நானும்..

நெடுநேரம் பேசிக்கொண்டு...

பசி கேட்கும் வேளை..

உனக்கு நானும்..

எனக்கு நீயும்....

தூக்கம் சேரும்.

என்மடி உனக்கும்..

உன்மடி எனக்கும்..

காலப்போக்கில்..

உன் முகமெனக்கும்..

என் முகமுனக்கும் சலிக்கும்..

..தெரியும்..

மெய் வலிக்கும்..

ஆனால்..

உணமை அதுதான்..

அன்று பூமி திரும்புவதைக் காட்டிலும்.

இன்றிலிருந்தே..

பெண்ணே..

யதார்த்தவாதிகளாய்..

அழகான இந்த பூமியிலேயே..

அன்பாக வாழ்வோமே.. :blink:

Link to comment
Share on other sites

அன்பாக வாழ்வோமே

துன்பங்கள் மறந்து

இன்பங்கள் நிறைந்து

கண்களால் பேசி

கைகளால் அணைத்து

மெய்களை மூடி

யாருமேயில்லாத வேளை

இருவரும் தனித்திருந்து

வான்வெளியில் ஒலிக்கும்

நட்சத்திரத்தை பிழையின்றி

எண்ணுவோம் வா அன்பே

Link to comment
Share on other sites

அன்பே என்றழைத்தது..

யாரோ..

ஆள் மாறி அழைத்தாயோ..

வெண்ணிலாவே..

உன்னொளியில் பால் வெளியில்

துள்ளித்திரிந்த காலம்..

நெஞ்சிலிக்கிறதோ...

..

நேசம் மறந்த நிலை

மாறிப் பேசத்துடிக்கிறதோ...

இருளில் மூழ்கி இருந்தவன்தான்..

வெண்ணிலா வெளிச்சத்தில் தெரிந்தவன்தான்..

இன்று

நான்.. அவனில்லை

புஜங்கள் திணவெடுத்து..

எரிவிழியில்..தணலெடுத்து..

வெறுப்புமிழ்ந்து..

வேறான.. இவன்..

நிலாவுக்கும் பொருந்தான்.

உலாவுக்கும்.. பொருந்தான்..

எரிமலை மேல் பூவுக்கு

ஏதடி மெத்தை..என்..

இளையவன்..

வருவான்.. காட்டங்கே வித்தை.. :blink:

Link to comment
Share on other sites

வித்தை காட்ட

விருப்பப்பட்டே நானும்

இங்கே வந்தேன்!

மெத்தை மீது

தத்தை தவழ்கின்ற

காலம் எப்போது வரும்?

உலகுக்கு ஒளியூட்டும்

வானத்து நிலாவே...

மண்ணகத்தில் உலவுகின்ற

பெண்ணவளின் உள்ளத்தை

உளவு பார்த்துச் சொல்லாயோ?

களவு போனதெந்தன்

உள்ளம் மென்று

நிலவு நீயும்

சொல்லாயோ?

அழகு நிலா ஓடி வந்து

அருகில் அமர்ந்தால் போதும்...

பங்கயக் கன்னம் வருடி

என்கையில் முகத்தை ஏந்தி

இதழிலே எழுதுவேன்

பல கவிதை நான்!

எழுத எழுத

ஏதேதோ உளறுகிறேன்

கள்ளுண்டு மயங்கலாம்

கன்னியவள் இதழ் உண்டும் மயங்கலாம்

கன்னித் தமிழ் அறிய அறிய மயங்கலாம்

எதனால் நான் மயங்கினேன்?

ஏன் இப்படி உளறினேன்?

பெரியவர்(ன்) வந்து

என் சிந்தை

தெளிய வைப்பீர்(பான்) என்றெண்ணிப்

போகிறேன் - மீண்டும்

இங்கு ஏகுவேன்!

மிடுக்காகப்

பல கதை பேசுவேன்!

Link to comment
Share on other sites

பல கதை பேசுவேன்

மண்ணோடு நான்

சில நிமிடம் என்னை

மூடாதே முகிலே

விண்ணில் இருக்கும்

வெண்ணிலாவின்

செல்லக் காதலன்

மண்ணில் இருக்கிறான்

அவனோடு சற்று

அன்போடு பேச

என்னை மூடாதே

கரும் முகிலே

வித்தைகள் காட்ட

மெத்தையருகே வந்து

நத்தை போல ஊரும்

தத்தை எனை வாரி

அணைக்க வரும் என்

அன்பானவனைக் காண

கண்திறந்து காத்திருக்கிறேன்

கருமுகிலே எனை மூடாதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருமுகிலே எனை மூடாதே -- என

காவிறையும் காரிகையே

கருமுகில்தான் நினைத்தாலும்

கன்னியுன்னை மூடாதே!

கடுகி வரும் காற்று

கருமுகிலில் மோதிடும் போதே

கண்ணீராய்க் கொட்டிடுமே

காய்ந்த நிலம் களிகொள்ளுமே!

கன்னிநிலா முறுவலிக்க

கருங் குவளையும் ப+த்திடும்பார்.

Link to comment
Share on other sites

பார் வேடிக்கை

வினோத..இவர்

நிகழ்ச்சி..

ஏட்டில் முதலெழுதும்... நாள்...

"அ"வும்.. "ஆ"வும்...

கடமை என...

ஏடு தொடக்கல்..

இன்று..நாடு விட்டு நாடு வந்து..

நம் தமிழ் வளருதென்று..

பெருமை எதற்கு...

யாரைக்கேட்டாலு..

தமிழ் எழுதத் தெரியவில்லை..

படிக்கதெரியவில்லை...

பேசத்தெரியவில்லை..

கடமை..

ஏடு தொடக்குதல் அல்ல..

தமிழை நம் பிள்ளையிடம் வளர்த்தல்..

செய்வாயா

புலத்தே வாழ் தமிழா...

Link to comment
Share on other sites

தமிழா எனக்கொன்றும்

புரியவில்லையடா...

எங்கேயோ தொடங்கி

பேச்சை வேறு திசையில்

நகர்த்திப் போவதென்ன?

நிலாவொன்று முகம்

காட்டக் காத்திருக்க

நின்று ரசிக்கக் கூட

நேரமில்லையா?

ஒன்றுக்கு இரண்டு வேலை

ஓயாமல் "ஐ யாம் பிஸி"

சேர்த்துச் சேர்த்து

என்ன கண்டாய்?

பால் போல பல நிலா

இங்கே பவனி வருகையில்

கால் மேல் கால் போட்டு

கண்ணடிச்சு ரசிக்க வேண்டாமோ?

வேல் எறியும் விழிகளுக்கு

உன்னிதயம் காட்டவேண்டாமோ?

கீல்ஸ் போட்டு நடக்கும்

வெள்ளைக் காரி கதை விடு

பார்க்காமல் பார்கின்ற

நிலாவுக்காய் உயிரை விடு!

Link to comment
Share on other sites

நிலாவுக்காக உயிரை விடு

உன்னைச் சரணடைவேன்

வெள்ளைக் காரி கதை மற

என்னையே தினமும் நினை

எங்கோ தொடங்கி

எங்கோ முடிவதுதானே

எங்கள் வாழ்க்கை

ஏங்காதே கண்ணா நீ

பால்போல நிலா தினம்

உலா வருவாள் இங்கு

கால் மேல் கால்போட்டு

வேல்விழிகளை ரசித்திடு

கலங்காதே தயங்காதே

கலங்கரை வெளிச்சமாய்

ஒளித்திடு மங்கலாகாதே

ஓயாமல் நீ வரவேண்டும்

படைப்போம் நாம் காவியம்

உடைப்போம் நம் தடைகளை

வந்திடு கவிதை பல படைத்திடு

வானத்து நிலாவை பிடித்திடு

Link to comment
Share on other sites

நிலாவைப் பிடித்திடுவென்று

நிலாவே சொல்லும் போது

இன்னொரு

கலாவை நான் நினைப்பேனா?

கற்பனைத் தேரேறி

கவிதை கூட எதுமா என் பேனா!

பலாவை மொய்கின்ற

ஈயாவேன்...

மார்போடு உனை அணைத்து

உனக்கொரு தாயாவேன்!

இராவை இன்னும்

கொஞ்சம் நீளச்செய் - இந்தப்

புறாவை நான் இன்னும்

முத்தமிட!

நாம் காவியம்

படைக்கவேண்டாம் கண்ணே

நம் உறவு கண்டு

பலர் இங்கே கவிகளாவார்!

நாம் படைக்கின்ற காவியம்

உன் வயிற்றில் வளரப்போகும் ஓவியம்!

ஓயாமல் நான் வருவேன்

கலங்காதே கண்ணே

என் நெஞ்சில்

சாயாமல் சாய்ந்திடு

சல்லாபம் புரிந்திடு!

Link to comment
Share on other sites

புரிந்திடு என்னை

பிரியாதே என்னவனே

ஓவியம் என்னில் வளர

காவியங்கள் நீ எழுது

சிரித்திடுவேன் உனைக்கண்டு

சிலிர்த்திடுவேன் எனை மறந்து

அணைப்பேன் கனவில் உனை

துணையாவாயா நனவில் நீ

Link to comment
Share on other sites

நீ

எய்கின்ற கவிப் பூக்கள் நன்று

நிமிடத்தில் பல கவிதை

எனக்குள்ளே தோன்றதடி இன்று!

பூ

பூக்கின்ற மெல்லிய ஓசை

செடி அறிந்திடும்

பெண் மனசில் பூக்கின்ற

காதலின் பாஷை

அவள் கண்ணில் புரிந்திடும்!

விழியாலே அழைப்பாள்

விரதங்கள் உடைப்பாள்

மெளன மொழி பேசுவாள்

மயக்கத்தில் ஆழ்த்துவாள்

முதல் ஸ்பரிசத்தில்

இதயத்தில் சிறகு முளைக்கும்

அவள் அருகிருந்தால்

எல்லாமே அந்நியமாகும்!

காதல்

சொல்வது போல்

அழகானதல்ல - அது

அழகிய

அவஸ்தையானது!

Link to comment
Share on other sites

அவஸ்தையானது உன் காதலா

அருவருப்பாகின்றேன் நான்

உன்னதமானது நம் காதல் என

உன்னை எண்ணி நானிருந்தேன்

காதலால் தவித்தேன் அன்று

காதலால் துடிக்கின்றேன் இன்று

காதலே எனக்கு வேண்டாம்

காதலே என்னை நீ நெருங்காதே

காதலை மறக்கின்றேன்

கவிதையை துறக்கின்றேன்

உன்னிடமிருந்து விலகுகிறேன்

உத்தமனே நீ நீடூழி வாழ்க

Link to comment
Share on other sites

வாழ்கவென வாழ்த்தியென்னை

போகின்ற ஒளி நிலாவே...

மறக்கின்றேன் காதலையென்று

மற்றவர் அறியச் சொன்னாய்

துறக்கின்றேன் கவிதையையென்று

துறவறம் பேசி நின்றாய்

அவஸ்தையானது காதலென்று

நான் உரைத்தேன்

காதல் ஆகாதது என்று

எங்கேனும் நான் உரைத்தேனா?

'அழகிய' என்ற அடைமொழி

கவனிக்க கன்னியே...

சொல்லுகின்ற சொல்லுக்கு

நேர் பொருள் நோக்கின்

நேருகின்ற பெருந் தவறு

உன்னாலே அறிந்தேன்!

எழுதுகின்ற எழுத்துக்குள்

எழுதாத பொருள் ஒன்று

ஏங்கிக் தவிக்குமே

ஏனடி மறந்தாய்!

கட்டை விரல் மண் தேய்க

கடைக் கண் எனைப் பார்க்க

அறிந்தவர் சொல்வார்

இதற்குப் பெயர் காதலென்று

அறியாதவர் சொல்வார்

அவளுக்கு ஏதோ வியாதியென்று!

ஏதும் அறியாது

ஏங்கித் தவிக்கின்றாய்

போதும் விளையாட்டென்று

விலகிப் போகின்றாய்!

மண் மீது கொண்ட காதலை

வானத்து நிலா என்றேனும்

மறந்ததுண்டா...?

ஒளி தர மறுத்ததுண்டா?

கல் மனமடி பெண் மனம்

காட்சி புரியாவிட்டால்

கல் எறியும்!

புரிந்து விட்டால்

கற்கண்டு போல்

கசிந்துருகும்!

Link to comment
Share on other sites

கசிந்துருகும் கன்னி மனம் கண்டு

நேசித்திடு என்னவனே

குடைகள் மோதியதால்

கடைவிழி பார்வையில்

உன்னில் விழுந்தவள் நான்

என்னை விட்டு போகாதே

அழகிய அவஸ்தையை

அவசரத்தில் மறந்தேன்

மீண்டும் வருகின்றேன்

மாண்டு போகாத காதலோடு

போகாதே நீ போகாதே

வந்தேன் நான் வந்தேன்

உனக்காகவே வந்தேன்

எனக்காக நீ போகாதே

Link to comment
Share on other sites

போகாதே தள்ளிப்போகாதே

என் தேசம் விட்டுப்போகாதே

போர்மேகம் சூழுதடா

புலி வீரர் வெற்றிவாகை சூடுறாருடா

புகழ்பாடா வாடா நீயும்

புத்தம் சரணம் கச்சாமி

சத்தமில்லாமல் செத்தும்போச்சு

களமாடிய புலி எல்லாம் - இன்று

கரும்புலியாகி கொடியேற்றுதடா

விழியெல்லாம் நீர்சொரிய

தமிழன்னை வெற்றியள்ளித்தாறளடா

போகாதே தமிழா தள்ளிப்போகாதே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.