Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு உம் கவி பிடிச்சிருக்கு

கவலை மறந்து பாடல் ரசிக்க பிடிச்சிருக்கு

மழலைகளுடன் மழலையாய் மாற பிடிச்சிருக்கு

மழையில் நனைய பிடிச்சிருக்கு

மலர்கள் அழகில் மயங்கிட பிடிச்சிருக்கு

கண்ணாடி வழி விற்பனை பிடிச்சிருக்கு

தினம் தினம் செய்திகள் வாசிக்க பிடிச்சிருக்கு

விகடமாய் எழுதும் கவிதை பிடிச்சிருக்கு

விதண்டாவாதம் பண்ண பிடிச்சிருக்கு

வீசும் காற்று புயலாய் தழுவிட பிடிச்சிருக்க

இத்தனை பிடித்திருந்தும்

என்னை தான் எனக்கு பிடிக்கவில்லை

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

இல்லை..

என்னை எனக்குப் பிடிக்குதே..

என்னோட முதல் இரசிகன்..

நானேதானே...

அடுத்தபிறவி என்றாலும்..

இதே உடல்..

இதே அம்மையப்பன்..

இதே சகோதரங்கள்..

இதே நண்பர்கள்..

இதே.. உலகம்...

எல்லாமும் வேண்டும்...

ஆனால் அப்போதாவது..

தமிழனுக்கென சொந்தமாய்..

ஒரு நாடு வேண்டும்..

Link to comment
Share on other sites

ஒரு நாடு வேண்டும்

தமிழர் நாம் வாழ

ஒரு நாடு வேண்டும்!

ஒரு நாடு வேண்டும்

ஒரு நாளேனும் வாழ

ஒரு நாடு வேண்டும்!

ஒரு நாடு வேண்டும்

நமக்கென மட்டும்

ஒரு நாடு வேண்டும்!

ஒரு நாடு வேண்டும்

அது எப்போ கிடைக்கும்?

Link to comment
Share on other sites

ஒரு நாடு வேண்டும்

அது எப்போது கிடைக்கும்?

வெளியில் வந்து

புன்னகைத்து

பொது மேடைகளில்

ஆசையாக இப்படிக்

கேட்பதால் கிடைக்குமா?

ஒன்று செய்யலாம்

ஊரெல்லாம் வலம் வரும்

வானத்து வெண்ணிலாவை

உளவு பார்க்கச்

சொல்லலாம்!

ஏதேனும் சேதி

கிட்டின்

கேட்டுச் சொல்லுங்கள்

கனக்க எழுத

ஆசை தான்

எனக்கும்...

நேர முட்கள்

எந்தன் கட்டைவிரல்

உரசி அடுத்த வேலையின்

அவசியம் உரைப்பதால்

மீண்டொரு கணம்

வருவேன்

மெதுவாகப் பேசலாம்!

Link to comment
Share on other sites

மெதுவாக பேசலாம்

பதுமையே வா

பொது மைதானத்தில்

கை கோர்த்தபடி

மெல்லமாக நடந்து

செல்லமாக கொஞ்சி

Link to comment
Share on other sites

கொஞ்சி

விளையாடலாம் தான்

அஞ்சி அஞ்சி

நீ போனால்

ஆவதெப்போது?

பஞ்சி பார்க்காது

பக்கத்தில் வாவேன்

கஞ்சி குடித்தபடி

கதைக்க

பல கதை உண்டு!

குஞ்சி பார்த்தால்

குடும்பத்திற்கே

தெரியவரும்...

ஆதலால் யாரும்

பார்க்காமல் என்னிடம்

வா நீ!

கை கோர்த்தபடி

பொது மைதானத்தில்

நடை பழக

எனக்கு விருப்பமில்லை

மெல்லிய இருட்டில்

நட்சத்திர வானம்

பார்த்தபடி

நடப்பதெனில் கொள்ளைப்

பிரியம்...

என்ன ஒன்று

கூடவே வெண்ணிலாவும்

வரும்...

Link to comment
Share on other sites

வரும் வெண்ணிலா

தரும் வெளிச்சத்தில்

சேரும் இருவரையும்

யாரும் பார்த்தால்

என்ன நடக்கும் என்பதை

அன்ன நடை நடந்து என்

கன்ன்க் குழி ரசிச்சு உன்

சின்ன மனசினில் அசைபோடு

நடப்பது ஏது என நீ கூறின்

தடைகளை தாண்டி உடன்

வருவேன் உன் பக்கத்தில்

தருவாயா முத்தங்களை

Link to comment
Share on other sites

முத்தங்களை நான்

தருவேன்

அர்த்தங்களை நீ

புரிவாயா?

வித்தகக் கவியிவன்

விண்ணாளாவும் தமிழோடு

விளையாடும் வெள்ளை நிலாவே

கொள்ளையழகும் சின்னவிதழும்

நான் சுவைப்பேன்

சிணுங்காமல் சிறைப்பட்டு

நீ கிடப்பாயா?

பாஷை பல பேசி

நேர முட்களை

சோம்பலோடு நோக்குவதென்ன?

ஆசை புரிய வைக்க

அன்பால் சிறை வைக்க

மீசை குற்றினாலும்

மிடுக்காக நான் தரும்

முத்தங்களே பல

பாஷை பேசுமடி!

பதிலாக நீ ஏதும்

பேசாதே...

சரியாகக் கணக்கிட்டு

முத்தங்கங்களைத்

திருப்பித் தருவாயா?

Link to comment
Share on other sites

திருப்பித் தருவாயா

திருமகனே

பருவத்துடிப்பின்

இன்பமதை?

புள்ளி மானாய்

துள்ளி வருவேன்

கள்ளி நான்

உன் முன்னால்!

விண்ணிலாவின் ஒளியில்

மண்ணில் இருந்து நாம்

கண்கள் இறுக மூடி

நம்மை நாமே ரசிப்போமா?

ரசிப்போம்

மறப்போம்

சுவைப்போம்

துடிப்போம்

வா வா அன்பே வா

என்னருகே வா

உல்லாசமாக சிறகின்றி

பல்லக்கில் ஏறி

செல்லமாக கதைபேசி

நிலாவுக்கு செல்வோம்

Link to comment
Share on other sites

நிலாவுக்கு செல்வோம்...

உலாவவல்ல..

நிலாக்குழிகள்..

நீர் சுரக்கவில்லையாம்..

பூமியில் நீர் வாங்கி

நிலாவில் ஒரு குடித்தனம்...

நீயும் நானும்..

நெடுநேரம் பேசிக்கொண்டு...

பசி கேட்கும் வேளை..

உனக்கு நானும்..

எனக்கு நீயும்....

தூக்கம் சேரும்.

என்மடி உனக்கும்..

உன்மடி எனக்கும்..

காலப்போக்கில்..

உன் முகமெனக்கும்..

என் முகமுனக்கும் சலிக்கும்..

..தெரியும்..

மெய் வலிக்கும்..

ஆனால்..

உணமை அதுதான்..

அன்று பூமி திரும்புவதைக் காட்டிலும்.

இன்றிலிருந்தே..

பெண்ணே..

யதார்த்தவாதிகளாய்..

அழகான இந்த பூமியிலேயே..

அன்பாக வாழ்வோமே.. :blink:

Link to comment
Share on other sites

அன்பாக வாழ்வோமே

துன்பங்கள் மறந்து

இன்பங்கள் நிறைந்து

கண்களால் பேசி

கைகளால் அணைத்து

மெய்களை மூடி

யாருமேயில்லாத வேளை

இருவரும் தனித்திருந்து

வான்வெளியில் ஒலிக்கும்

நட்சத்திரத்தை பிழையின்றி

எண்ணுவோம் வா அன்பே

Link to comment
Share on other sites

அன்பே என்றழைத்தது..

யாரோ..

ஆள் மாறி அழைத்தாயோ..

வெண்ணிலாவே..

உன்னொளியில் பால் வெளியில்

துள்ளித்திரிந்த காலம்..

நெஞ்சிலிக்கிறதோ...

..

நேசம் மறந்த நிலை

மாறிப் பேசத்துடிக்கிறதோ...

இருளில் மூழ்கி இருந்தவன்தான்..

வெண்ணிலா வெளிச்சத்தில் தெரிந்தவன்தான்..

இன்று

நான்.. அவனில்லை

புஜங்கள் திணவெடுத்து..

எரிவிழியில்..தணலெடுத்து..

வெறுப்புமிழ்ந்து..

வேறான.. இவன்..

நிலாவுக்கும் பொருந்தான்.

உலாவுக்கும்.. பொருந்தான்..

எரிமலை மேல் பூவுக்கு

ஏதடி மெத்தை..என்..

இளையவன்..

வருவான்.. காட்டங்கே வித்தை.. :blink:

Link to comment
Share on other sites

வித்தை காட்ட

விருப்பப்பட்டே நானும்

இங்கே வந்தேன்!

மெத்தை மீது

தத்தை தவழ்கின்ற

காலம் எப்போது வரும்?

உலகுக்கு ஒளியூட்டும்

வானத்து நிலாவே...

மண்ணகத்தில் உலவுகின்ற

பெண்ணவளின் உள்ளத்தை

உளவு பார்த்துச் சொல்லாயோ?

களவு போனதெந்தன்

உள்ளம் மென்று

நிலவு நீயும்

சொல்லாயோ?

அழகு நிலா ஓடி வந்து

அருகில் அமர்ந்தால் போதும்...

பங்கயக் கன்னம் வருடி

என்கையில் முகத்தை ஏந்தி

இதழிலே எழுதுவேன்

பல கவிதை நான்!

எழுத எழுத

ஏதேதோ உளறுகிறேன்

கள்ளுண்டு மயங்கலாம்

கன்னியவள் இதழ் உண்டும் மயங்கலாம்

கன்னித் தமிழ் அறிய அறிய மயங்கலாம்

எதனால் நான் மயங்கினேன்?

ஏன் இப்படி உளறினேன்?

பெரியவர்(ன்) வந்து

என் சிந்தை

தெளிய வைப்பீர்(பான்) என்றெண்ணிப்

போகிறேன் - மீண்டும்

இங்கு ஏகுவேன்!

மிடுக்காகப்

பல கதை பேசுவேன்!

Link to comment
Share on other sites

பல கதை பேசுவேன்

மண்ணோடு நான்

சில நிமிடம் என்னை

மூடாதே முகிலே

விண்ணில் இருக்கும்

வெண்ணிலாவின்

செல்லக் காதலன்

மண்ணில் இருக்கிறான்

அவனோடு சற்று

அன்போடு பேச

என்னை மூடாதே

கரும் முகிலே

வித்தைகள் காட்ட

மெத்தையருகே வந்து

நத்தை போல ஊரும்

தத்தை எனை வாரி

அணைக்க வரும் என்

அன்பானவனைக் காண

கண்திறந்து காத்திருக்கிறேன்

கருமுகிலே எனை மூடாதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருமுகிலே எனை மூடாதே -- என

காவிறையும் காரிகையே

கருமுகில்தான் நினைத்தாலும்

கன்னியுன்னை மூடாதே!

கடுகி வரும் காற்று

கருமுகிலில் மோதிடும் போதே

கண்ணீராய்க் கொட்டிடுமே

காய்ந்த நிலம் களிகொள்ளுமே!

கன்னிநிலா முறுவலிக்க

கருங் குவளையும் ப+த்திடும்பார்.

Link to comment
Share on other sites

பார் வேடிக்கை

வினோத..இவர்

நிகழ்ச்சி..

ஏட்டில் முதலெழுதும்... நாள்...

"அ"வும்.. "ஆ"வும்...

கடமை என...

ஏடு தொடக்கல்..

இன்று..நாடு விட்டு நாடு வந்து..

நம் தமிழ் வளருதென்று..

பெருமை எதற்கு...

யாரைக்கேட்டாலு..

தமிழ் எழுதத் தெரியவில்லை..

படிக்கதெரியவில்லை...

பேசத்தெரியவில்லை..

கடமை..

ஏடு தொடக்குதல் அல்ல..

தமிழை நம் பிள்ளையிடம் வளர்த்தல்..

செய்வாயா

புலத்தே வாழ் தமிழா...

Link to comment
Share on other sites

தமிழா எனக்கொன்றும்

புரியவில்லையடா...

எங்கேயோ தொடங்கி

பேச்சை வேறு திசையில்

நகர்த்திப் போவதென்ன?

நிலாவொன்று முகம்

காட்டக் காத்திருக்க

நின்று ரசிக்கக் கூட

நேரமில்லையா?

ஒன்றுக்கு இரண்டு வேலை

ஓயாமல் "ஐ யாம் பிஸி"

சேர்த்துச் சேர்த்து

என்ன கண்டாய்?

பால் போல பல நிலா

இங்கே பவனி வருகையில்

கால் மேல் கால் போட்டு

கண்ணடிச்சு ரசிக்க வேண்டாமோ?

வேல் எறியும் விழிகளுக்கு

உன்னிதயம் காட்டவேண்டாமோ?

கீல்ஸ் போட்டு நடக்கும்

வெள்ளைக் காரி கதை விடு

பார்க்காமல் பார்கின்ற

நிலாவுக்காய் உயிரை விடு!

Link to comment
Share on other sites

நிலாவுக்காக உயிரை விடு

உன்னைச் சரணடைவேன்

வெள்ளைக் காரி கதை மற

என்னையே தினமும் நினை

எங்கோ தொடங்கி

எங்கோ முடிவதுதானே

எங்கள் வாழ்க்கை

ஏங்காதே கண்ணா நீ

பால்போல நிலா தினம்

உலா வருவாள் இங்கு

கால் மேல் கால்போட்டு

வேல்விழிகளை ரசித்திடு

கலங்காதே தயங்காதே

கலங்கரை வெளிச்சமாய்

ஒளித்திடு மங்கலாகாதே

ஓயாமல் நீ வரவேண்டும்

படைப்போம் நாம் காவியம்

உடைப்போம் நம் தடைகளை

வந்திடு கவிதை பல படைத்திடு

வானத்து நிலாவை பிடித்திடு

Link to comment
Share on other sites

நிலாவைப் பிடித்திடுவென்று

நிலாவே சொல்லும் போது

இன்னொரு

கலாவை நான் நினைப்பேனா?

கற்பனைத் தேரேறி

கவிதை கூட எதுமா என் பேனா!

பலாவை மொய்கின்ற

ஈயாவேன்...

மார்போடு உனை அணைத்து

உனக்கொரு தாயாவேன்!

இராவை இன்னும்

கொஞ்சம் நீளச்செய் - இந்தப்

புறாவை நான் இன்னும்

முத்தமிட!

நாம் காவியம்

படைக்கவேண்டாம் கண்ணே

நம் உறவு கண்டு

பலர் இங்கே கவிகளாவார்!

நாம் படைக்கின்ற காவியம்

உன் வயிற்றில் வளரப்போகும் ஓவியம்!

ஓயாமல் நான் வருவேன்

கலங்காதே கண்ணே

என் நெஞ்சில்

சாயாமல் சாய்ந்திடு

சல்லாபம் புரிந்திடு!

Link to comment
Share on other sites

புரிந்திடு என்னை

பிரியாதே என்னவனே

ஓவியம் என்னில் வளர

காவியங்கள் நீ எழுது

சிரித்திடுவேன் உனைக்கண்டு

சிலிர்த்திடுவேன் எனை மறந்து

அணைப்பேன் கனவில் உனை

துணையாவாயா நனவில் நீ

Link to comment
Share on other sites

நீ

எய்கின்ற கவிப் பூக்கள் நன்று

நிமிடத்தில் பல கவிதை

எனக்குள்ளே தோன்றதடி இன்று!

பூ

பூக்கின்ற மெல்லிய ஓசை

செடி அறிந்திடும்

பெண் மனசில் பூக்கின்ற

காதலின் பாஷை

அவள் கண்ணில் புரிந்திடும்!

விழியாலே அழைப்பாள்

விரதங்கள் உடைப்பாள்

மெளன மொழி பேசுவாள்

மயக்கத்தில் ஆழ்த்துவாள்

முதல் ஸ்பரிசத்தில்

இதயத்தில் சிறகு முளைக்கும்

அவள் அருகிருந்தால்

எல்லாமே அந்நியமாகும்!

காதல்

சொல்வது போல்

அழகானதல்ல - அது

அழகிய

அவஸ்தையானது!

Link to comment
Share on other sites

அவஸ்தையானது உன் காதலா

அருவருப்பாகின்றேன் நான்

உன்னதமானது நம் காதல் என

உன்னை எண்ணி நானிருந்தேன்

காதலால் தவித்தேன் அன்று

காதலால் துடிக்கின்றேன் இன்று

காதலே எனக்கு வேண்டாம்

காதலே என்னை நீ நெருங்காதே

காதலை மறக்கின்றேன்

கவிதையை துறக்கின்றேன்

உன்னிடமிருந்து விலகுகிறேன்

உத்தமனே நீ நீடூழி வாழ்க

Link to comment
Share on other sites

வாழ்கவென வாழ்த்தியென்னை

போகின்ற ஒளி நிலாவே...

மறக்கின்றேன் காதலையென்று

மற்றவர் அறியச் சொன்னாய்

துறக்கின்றேன் கவிதையையென்று

துறவறம் பேசி நின்றாய்

அவஸ்தையானது காதலென்று

நான் உரைத்தேன்

காதல் ஆகாதது என்று

எங்கேனும் நான் உரைத்தேனா?

'அழகிய' என்ற அடைமொழி

கவனிக்க கன்னியே...

சொல்லுகின்ற சொல்லுக்கு

நேர் பொருள் நோக்கின்

நேருகின்ற பெருந் தவறு

உன்னாலே அறிந்தேன்!

எழுதுகின்ற எழுத்துக்குள்

எழுதாத பொருள் ஒன்று

ஏங்கிக் தவிக்குமே

ஏனடி மறந்தாய்!

கட்டை விரல் மண் தேய்க

கடைக் கண் எனைப் பார்க்க

அறிந்தவர் சொல்வார்

இதற்குப் பெயர் காதலென்று

அறியாதவர் சொல்வார்

அவளுக்கு ஏதோ வியாதியென்று!

ஏதும் அறியாது

ஏங்கித் தவிக்கின்றாய்

போதும் விளையாட்டென்று

விலகிப் போகின்றாய்!

மண் மீது கொண்ட காதலை

வானத்து நிலா என்றேனும்

மறந்ததுண்டா...?

ஒளி தர மறுத்ததுண்டா?

கல் மனமடி பெண் மனம்

காட்சி புரியாவிட்டால்

கல் எறியும்!

புரிந்து விட்டால்

கற்கண்டு போல்

கசிந்துருகும்!

Link to comment
Share on other sites

கசிந்துருகும் கன்னி மனம் கண்டு

நேசித்திடு என்னவனே

குடைகள் மோதியதால்

கடைவிழி பார்வையில்

உன்னில் விழுந்தவள் நான்

என்னை விட்டு போகாதே

அழகிய அவஸ்தையை

அவசரத்தில் மறந்தேன்

மீண்டும் வருகின்றேன்

மாண்டு போகாத காதலோடு

போகாதே நீ போகாதே

வந்தேன் நான் வந்தேன்

உனக்காகவே வந்தேன்

எனக்காக நீ போகாதே

Link to comment
Share on other sites

போகாதே தள்ளிப்போகாதே

என் தேசம் விட்டுப்போகாதே

போர்மேகம் சூழுதடா

புலி வீரர் வெற்றிவாகை சூடுறாருடா

புகழ்பாடா வாடா நீயும்

புத்தம் சரணம் கச்சாமி

சத்தமில்லாமல் செத்தும்போச்சு

களமாடிய புலி எல்லாம் - இன்று

கரும்புலியாகி கொடியேற்றுதடா

விழியெல்லாம் நீர்சொரிய

தமிழன்னை வெற்றியள்ளித்தாறளடா

போகாதே தமிழா தள்ளிப்போகாதே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.