Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு உம் கவி பிடிச்சிருக்கு

கவலை மறந்து பாடல் ரசிக்க பிடிச்சிருக்கு

மழலைகளுடன் மழலையாய் மாற பிடிச்சிருக்கு

மழையில் நனைய பிடிச்சிருக்கு

மலர்கள் அழகில் மயங்கிட பிடிச்சிருக்கு

கண்ணாடி வழி விற்பனை பிடிச்சிருக்கு

தினம் தினம் செய்திகள் வாசிக்க பிடிச்சிருக்கு

விகடமாய் எழுதும் கவிதை பிடிச்சிருக்கு

விதண்டாவாதம் பண்ண பிடிச்சிருக்கு

வீசும் காற்று புயலாய் தழுவிட பிடிச்சிருக்க

இத்தனை பிடித்திருந்தும்

என்னை தான் எனக்கு பிடிக்கவில்லை

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

இல்லை..

என்னை எனக்குப் பிடிக்குதே..

என்னோட முதல் இரசிகன்..

நானேதானே...

அடுத்தபிறவி என்றாலும்..

இதே உடல்..

இதே அம்மையப்பன்..

இதே சகோதரங்கள்..

இதே நண்பர்கள்..

இதே.. உலகம்...

எல்லாமும் வேண்டும்...

ஆனால் அப்போதாவது..

தமிழனுக்கென சொந்தமாய்..

ஒரு நாடு வேண்டும்..

Link to comment
Share on other sites

ஒரு நாடு வேண்டும்

தமிழர் நாம் வாழ

ஒரு நாடு வேண்டும்!

ஒரு நாடு வேண்டும்

ஒரு நாளேனும் வாழ

ஒரு நாடு வேண்டும்!

ஒரு நாடு வேண்டும்

நமக்கென மட்டும்

ஒரு நாடு வேண்டும்!

ஒரு நாடு வேண்டும்

அது எப்போ கிடைக்கும்?

Link to comment
Share on other sites

ஒரு நாடு வேண்டும்

அது எப்போது கிடைக்கும்?

வெளியில் வந்து

புன்னகைத்து

பொது மேடைகளில்

ஆசையாக இப்படிக்

கேட்பதால் கிடைக்குமா?

ஒன்று செய்யலாம்

ஊரெல்லாம் வலம் வரும்

வானத்து வெண்ணிலாவை

உளவு பார்க்கச்

சொல்லலாம்!

ஏதேனும் சேதி

கிட்டின்

கேட்டுச் சொல்லுங்கள்

கனக்க எழுத

ஆசை தான்

எனக்கும்...

நேர முட்கள்

எந்தன் கட்டைவிரல்

உரசி அடுத்த வேலையின்

அவசியம் உரைப்பதால்

மீண்டொரு கணம்

வருவேன்

மெதுவாகப் பேசலாம்!

Link to comment
Share on other sites

மெதுவாக பேசலாம்

பதுமையே வா

பொது மைதானத்தில்

கை கோர்த்தபடி

மெல்லமாக நடந்து

செல்லமாக கொஞ்சி

Link to comment
Share on other sites

கொஞ்சி

விளையாடலாம் தான்

அஞ்சி அஞ்சி

நீ போனால்

ஆவதெப்போது?

பஞ்சி பார்க்காது

பக்கத்தில் வாவேன்

கஞ்சி குடித்தபடி

கதைக்க

பல கதை உண்டு!

குஞ்சி பார்த்தால்

குடும்பத்திற்கே

தெரியவரும்...

ஆதலால் யாரும்

பார்க்காமல் என்னிடம்

வா நீ!

கை கோர்த்தபடி

பொது மைதானத்தில்

நடை பழக

எனக்கு விருப்பமில்லை

மெல்லிய இருட்டில்

நட்சத்திர வானம்

பார்த்தபடி

நடப்பதெனில் கொள்ளைப்

பிரியம்...

என்ன ஒன்று

கூடவே வெண்ணிலாவும்

வரும்...

Link to comment
Share on other sites

வரும் வெண்ணிலா

தரும் வெளிச்சத்தில்

சேரும் இருவரையும்

யாரும் பார்த்தால்

என்ன நடக்கும் என்பதை

அன்ன நடை நடந்து என்

கன்ன்க் குழி ரசிச்சு உன்

சின்ன மனசினில் அசைபோடு

நடப்பது ஏது என நீ கூறின்

தடைகளை தாண்டி உடன்

வருவேன் உன் பக்கத்தில்

தருவாயா முத்தங்களை

Link to comment
Share on other sites

முத்தங்களை நான்

தருவேன்

அர்த்தங்களை நீ

புரிவாயா?

வித்தகக் கவியிவன்

விண்ணாளாவும் தமிழோடு

விளையாடும் வெள்ளை நிலாவே

கொள்ளையழகும் சின்னவிதழும்

நான் சுவைப்பேன்

சிணுங்காமல் சிறைப்பட்டு

நீ கிடப்பாயா?

பாஷை பல பேசி

நேர முட்களை

சோம்பலோடு நோக்குவதென்ன?

ஆசை புரிய வைக்க

அன்பால் சிறை வைக்க

மீசை குற்றினாலும்

மிடுக்காக நான் தரும்

முத்தங்களே பல

பாஷை பேசுமடி!

பதிலாக நீ ஏதும்

பேசாதே...

சரியாகக் கணக்கிட்டு

முத்தங்கங்களைத்

திருப்பித் தருவாயா?

Link to comment
Share on other sites

திருப்பித் தருவாயா

திருமகனே

பருவத்துடிப்பின்

இன்பமதை?

புள்ளி மானாய்

துள்ளி வருவேன்

கள்ளி நான்

உன் முன்னால்!

விண்ணிலாவின் ஒளியில்

மண்ணில் இருந்து நாம்

கண்கள் இறுக மூடி

நம்மை நாமே ரசிப்போமா?

ரசிப்போம்

மறப்போம்

சுவைப்போம்

துடிப்போம்

வா வா அன்பே வா

என்னருகே வா

உல்லாசமாக சிறகின்றி

பல்லக்கில் ஏறி

செல்லமாக கதைபேசி

நிலாவுக்கு செல்வோம்

Link to comment
Share on other sites

நிலாவுக்கு செல்வோம்...

உலாவவல்ல..

நிலாக்குழிகள்..

நீர் சுரக்கவில்லையாம்..

பூமியில் நீர் வாங்கி

நிலாவில் ஒரு குடித்தனம்...

நீயும் நானும்..

நெடுநேரம் பேசிக்கொண்டு...

பசி கேட்கும் வேளை..

உனக்கு நானும்..

எனக்கு நீயும்....

தூக்கம் சேரும்.

என்மடி உனக்கும்..

உன்மடி எனக்கும்..

காலப்போக்கில்..

உன் முகமெனக்கும்..

என் முகமுனக்கும் சலிக்கும்..

..தெரியும்..

மெய் வலிக்கும்..

ஆனால்..

உணமை அதுதான்..

அன்று பூமி திரும்புவதைக் காட்டிலும்.

இன்றிலிருந்தே..

பெண்ணே..

யதார்த்தவாதிகளாய்..

அழகான இந்த பூமியிலேயே..

அன்பாக வாழ்வோமே.. :blink:

Link to comment
Share on other sites

அன்பாக வாழ்வோமே

துன்பங்கள் மறந்து

இன்பங்கள் நிறைந்து

கண்களால் பேசி

கைகளால் அணைத்து

மெய்களை மூடி

யாருமேயில்லாத வேளை

இருவரும் தனித்திருந்து

வான்வெளியில் ஒலிக்கும்

நட்சத்திரத்தை பிழையின்றி

எண்ணுவோம் வா அன்பே

Link to comment
Share on other sites

அன்பே என்றழைத்தது..

யாரோ..

ஆள் மாறி அழைத்தாயோ..

வெண்ணிலாவே..

உன்னொளியில் பால் வெளியில்

துள்ளித்திரிந்த காலம்..

நெஞ்சிலிக்கிறதோ...

..

நேசம் மறந்த நிலை

மாறிப் பேசத்துடிக்கிறதோ...

இருளில் மூழ்கி இருந்தவன்தான்..

வெண்ணிலா வெளிச்சத்தில் தெரிந்தவன்தான்..

இன்று

நான்.. அவனில்லை

புஜங்கள் திணவெடுத்து..

எரிவிழியில்..தணலெடுத்து..

வெறுப்புமிழ்ந்து..

வேறான.. இவன்..

நிலாவுக்கும் பொருந்தான்.

உலாவுக்கும்.. பொருந்தான்..

எரிமலை மேல் பூவுக்கு

ஏதடி மெத்தை..என்..

இளையவன்..

வருவான்.. காட்டங்கே வித்தை.. :blink:

Link to comment
Share on other sites

வித்தை காட்ட

விருப்பப்பட்டே நானும்

இங்கே வந்தேன்!

மெத்தை மீது

தத்தை தவழ்கின்ற

காலம் எப்போது வரும்?

உலகுக்கு ஒளியூட்டும்

வானத்து நிலாவே...

மண்ணகத்தில் உலவுகின்ற

பெண்ணவளின் உள்ளத்தை

உளவு பார்த்துச் சொல்லாயோ?

களவு போனதெந்தன்

உள்ளம் மென்று

நிலவு நீயும்

சொல்லாயோ?

அழகு நிலா ஓடி வந்து

அருகில் அமர்ந்தால் போதும்...

பங்கயக் கன்னம் வருடி

என்கையில் முகத்தை ஏந்தி

இதழிலே எழுதுவேன்

பல கவிதை நான்!

எழுத எழுத

ஏதேதோ உளறுகிறேன்

கள்ளுண்டு மயங்கலாம்

கன்னியவள் இதழ் உண்டும் மயங்கலாம்

கன்னித் தமிழ் அறிய அறிய மயங்கலாம்

எதனால் நான் மயங்கினேன்?

ஏன் இப்படி உளறினேன்?

பெரியவர்(ன்) வந்து

என் சிந்தை

தெளிய வைப்பீர்(பான்) என்றெண்ணிப்

போகிறேன் - மீண்டும்

இங்கு ஏகுவேன்!

மிடுக்காகப்

பல கதை பேசுவேன்!

Link to comment
Share on other sites

பல கதை பேசுவேன்

மண்ணோடு நான்

சில நிமிடம் என்னை

மூடாதே முகிலே

விண்ணில் இருக்கும்

வெண்ணிலாவின்

செல்லக் காதலன்

மண்ணில் இருக்கிறான்

அவனோடு சற்று

அன்போடு பேச

என்னை மூடாதே

கரும் முகிலே

வித்தைகள் காட்ட

மெத்தையருகே வந்து

நத்தை போல ஊரும்

தத்தை எனை வாரி

அணைக்க வரும் என்

அன்பானவனைக் காண

கண்திறந்து காத்திருக்கிறேன்

கருமுகிலே எனை மூடாதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருமுகிலே எனை மூடாதே -- என

காவிறையும் காரிகையே

கருமுகில்தான் நினைத்தாலும்

கன்னியுன்னை மூடாதே!

கடுகி வரும் காற்று

கருமுகிலில் மோதிடும் போதே

கண்ணீராய்க் கொட்டிடுமே

காய்ந்த நிலம் களிகொள்ளுமே!

கன்னிநிலா முறுவலிக்க

கருங் குவளையும் ப+த்திடும்பார்.

Link to comment
Share on other sites

பார் வேடிக்கை

வினோத..இவர்

நிகழ்ச்சி..

ஏட்டில் முதலெழுதும்... நாள்...

"அ"வும்.. "ஆ"வும்...

கடமை என...

ஏடு தொடக்கல்..

இன்று..நாடு விட்டு நாடு வந்து..

நம் தமிழ் வளருதென்று..

பெருமை எதற்கு...

யாரைக்கேட்டாலு..

தமிழ் எழுதத் தெரியவில்லை..

படிக்கதெரியவில்லை...

பேசத்தெரியவில்லை..

கடமை..

ஏடு தொடக்குதல் அல்ல..

தமிழை நம் பிள்ளையிடம் வளர்த்தல்..

செய்வாயா

புலத்தே வாழ் தமிழா...

Link to comment
Share on other sites

தமிழா எனக்கொன்றும்

புரியவில்லையடா...

எங்கேயோ தொடங்கி

பேச்சை வேறு திசையில்

நகர்த்திப் போவதென்ன?

நிலாவொன்று முகம்

காட்டக் காத்திருக்க

நின்று ரசிக்கக் கூட

நேரமில்லையா?

ஒன்றுக்கு இரண்டு வேலை

ஓயாமல் "ஐ யாம் பிஸி"

சேர்த்துச் சேர்த்து

என்ன கண்டாய்?

பால் போல பல நிலா

இங்கே பவனி வருகையில்

கால் மேல் கால் போட்டு

கண்ணடிச்சு ரசிக்க வேண்டாமோ?

வேல் எறியும் விழிகளுக்கு

உன்னிதயம் காட்டவேண்டாமோ?

கீல்ஸ் போட்டு நடக்கும்

வெள்ளைக் காரி கதை விடு

பார்க்காமல் பார்கின்ற

நிலாவுக்காய் உயிரை விடு!

Link to comment
Share on other sites

நிலாவுக்காக உயிரை விடு

உன்னைச் சரணடைவேன்

வெள்ளைக் காரி கதை மற

என்னையே தினமும் நினை

எங்கோ தொடங்கி

எங்கோ முடிவதுதானே

எங்கள் வாழ்க்கை

ஏங்காதே கண்ணா நீ

பால்போல நிலா தினம்

உலா வருவாள் இங்கு

கால் மேல் கால்போட்டு

வேல்விழிகளை ரசித்திடு

கலங்காதே தயங்காதே

கலங்கரை வெளிச்சமாய்

ஒளித்திடு மங்கலாகாதே

ஓயாமல் நீ வரவேண்டும்

படைப்போம் நாம் காவியம்

உடைப்போம் நம் தடைகளை

வந்திடு கவிதை பல படைத்திடு

வானத்து நிலாவை பிடித்திடு

Link to comment
Share on other sites

நிலாவைப் பிடித்திடுவென்று

நிலாவே சொல்லும் போது

இன்னொரு

கலாவை நான் நினைப்பேனா?

கற்பனைத் தேரேறி

கவிதை கூட எதுமா என் பேனா!

பலாவை மொய்கின்ற

ஈயாவேன்...

மார்போடு உனை அணைத்து

உனக்கொரு தாயாவேன்!

இராவை இன்னும்

கொஞ்சம் நீளச்செய் - இந்தப்

புறாவை நான் இன்னும்

முத்தமிட!

நாம் காவியம்

படைக்கவேண்டாம் கண்ணே

நம் உறவு கண்டு

பலர் இங்கே கவிகளாவார்!

நாம் படைக்கின்ற காவியம்

உன் வயிற்றில் வளரப்போகும் ஓவியம்!

ஓயாமல் நான் வருவேன்

கலங்காதே கண்ணே

என் நெஞ்சில்

சாயாமல் சாய்ந்திடு

சல்லாபம் புரிந்திடு!

Link to comment
Share on other sites

புரிந்திடு என்னை

பிரியாதே என்னவனே

ஓவியம் என்னில் வளர

காவியங்கள் நீ எழுது

சிரித்திடுவேன் உனைக்கண்டு

சிலிர்த்திடுவேன் எனை மறந்து

அணைப்பேன் கனவில் உனை

துணையாவாயா நனவில் நீ

Link to comment
Share on other sites

நீ

எய்கின்ற கவிப் பூக்கள் நன்று

நிமிடத்தில் பல கவிதை

எனக்குள்ளே தோன்றதடி இன்று!

பூ

பூக்கின்ற மெல்லிய ஓசை

செடி அறிந்திடும்

பெண் மனசில் பூக்கின்ற

காதலின் பாஷை

அவள் கண்ணில் புரிந்திடும்!

விழியாலே அழைப்பாள்

விரதங்கள் உடைப்பாள்

மெளன மொழி பேசுவாள்

மயக்கத்தில் ஆழ்த்துவாள்

முதல் ஸ்பரிசத்தில்

இதயத்தில் சிறகு முளைக்கும்

அவள் அருகிருந்தால்

எல்லாமே அந்நியமாகும்!

காதல்

சொல்வது போல்

அழகானதல்ல - அது

அழகிய

அவஸ்தையானது!

Link to comment
Share on other sites

அவஸ்தையானது உன் காதலா

அருவருப்பாகின்றேன் நான்

உன்னதமானது நம் காதல் என

உன்னை எண்ணி நானிருந்தேன்

காதலால் தவித்தேன் அன்று

காதலால் துடிக்கின்றேன் இன்று

காதலே எனக்கு வேண்டாம்

காதலே என்னை நீ நெருங்காதே

காதலை மறக்கின்றேன்

கவிதையை துறக்கின்றேன்

உன்னிடமிருந்து விலகுகிறேன்

உத்தமனே நீ நீடூழி வாழ்க

Link to comment
Share on other sites

வாழ்கவென வாழ்த்தியென்னை

போகின்ற ஒளி நிலாவே...

மறக்கின்றேன் காதலையென்று

மற்றவர் அறியச் சொன்னாய்

துறக்கின்றேன் கவிதையையென்று

துறவறம் பேசி நின்றாய்

அவஸ்தையானது காதலென்று

நான் உரைத்தேன்

காதல் ஆகாதது என்று

எங்கேனும் நான் உரைத்தேனா?

'அழகிய' என்ற அடைமொழி

கவனிக்க கன்னியே...

சொல்லுகின்ற சொல்லுக்கு

நேர் பொருள் நோக்கின்

நேருகின்ற பெருந் தவறு

உன்னாலே அறிந்தேன்!

எழுதுகின்ற எழுத்துக்குள்

எழுதாத பொருள் ஒன்று

ஏங்கிக் தவிக்குமே

ஏனடி மறந்தாய்!

கட்டை விரல் மண் தேய்க

கடைக் கண் எனைப் பார்க்க

அறிந்தவர் சொல்வார்

இதற்குப் பெயர் காதலென்று

அறியாதவர் சொல்வார்

அவளுக்கு ஏதோ வியாதியென்று!

ஏதும் அறியாது

ஏங்கித் தவிக்கின்றாய்

போதும் விளையாட்டென்று

விலகிப் போகின்றாய்!

மண் மீது கொண்ட காதலை

வானத்து நிலா என்றேனும்

மறந்ததுண்டா...?

ஒளி தர மறுத்ததுண்டா?

கல் மனமடி பெண் மனம்

காட்சி புரியாவிட்டால்

கல் எறியும்!

புரிந்து விட்டால்

கற்கண்டு போல்

கசிந்துருகும்!

Link to comment
Share on other sites

கசிந்துருகும் கன்னி மனம் கண்டு

நேசித்திடு என்னவனே

குடைகள் மோதியதால்

கடைவிழி பார்வையில்

உன்னில் விழுந்தவள் நான்

என்னை விட்டு போகாதே

அழகிய அவஸ்தையை

அவசரத்தில் மறந்தேன்

மீண்டும் வருகின்றேன்

மாண்டு போகாத காதலோடு

போகாதே நீ போகாதே

வந்தேன் நான் வந்தேன்

உனக்காகவே வந்தேன்

எனக்காக நீ போகாதே

Link to comment
Share on other sites

போகாதே தள்ளிப்போகாதே

என் தேசம் விட்டுப்போகாதே

போர்மேகம் சூழுதடா

புலி வீரர் வெற்றிவாகை சூடுறாருடா

புகழ்பாடா வாடா நீயும்

புத்தம் சரணம் கச்சாமி

சத்தமில்லாமல் செத்தும்போச்சு

களமாடிய புலி எல்லாம் - இன்று

கரும்புலியாகி கொடியேற்றுதடா

விழியெல்லாம் நீர்சொரிய

தமிழன்னை வெற்றியள்ளித்தாறளடா

போகாதே தமிழா தள்ளிப்போகாதே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.