Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

தள்ளிப்போகாதே நீ என

தடுக்குது உன் மனம்

நிம்மதியாக நீ இருக்க

நானே போகின்றேன்

சந்தோசமாக நீ இரு

சந்தேகம் எனக்கில்லை

உன் நிம்மதியைக் கலைக்க

நான் விரும்பவில்லை

என்ன கொண்டுவருவாய்

உன் மனம் வினாவுகையில்

விடையேதும் என்னிடமில்லை

விடைபெறுகின்றேன் உன்னிடமிருந்து

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

உன்னிடமிருந்து

பெரிதாக ஏதேனும்

நான் கேட்டேனா?

மூன்று இரவில்

மீண்டும் நீ வரும்போது

அன்பிற்குச் சான்றாக

தாஜ்மஹால் வேண்டாம்

அல்வாவேனும் கொண்டுவருவியா

என்று தானே கேட்டேன்?!

கைக் காசு செலவழிக்க

நீ விரும்பாது

மழுப்பலாக கதை ஏதோ

சொல்லிப் போவதென்ன?

இரு இதயம் இதமாக

கை குலுக்கும் போது

அன்பளிப்புகள் அன்பிற்கு

அடையாளமாகுமே!

இரு விழி உருட்டி

என்னைப் முறைக்காதே - நீ

வரும் வழி நோக்கி

விழித்திருப்பேன் நான்!

Link to comment
Share on other sites

விழித்திருப்பேன் நான்

பாதையெங்கும் உன் விம்பம்

தேடி

எங்கே நீயென தேடித் தேடியே

நித்தம் முத்ததில் நானிருப்பேன்

உனக்காக காத்திருந்து என்

உயிர் பிரியுமென்றால் அதைவிட

வேறன்ன வேண்டும் சொல்லன்பே

நான் விட்டமூச்சுக்கும்

நான் விடும்மூச்சுகுமான

சுவாசமே நீதானே

எத்தனை இரவை என் விழி

பகலாக்கியிருக்கும் எல்லாம்

அன்பே நிலா உன்னை காணத்தானே

என்று புரிவாய் எனை என

என்றும் காத்திருக்கும் உன்

காதலன் நானல்லவா.....

Link to comment
Share on other sites

நானல்லவா உன் காதலி

ஏனிந்த சந்தேகம் காதலனே

உனை நீங்கி சென்ற நான்

ஊனை மறந்து துடிக்கின்றேன்

மாசற்ற வெண்ணிலாவுக்கு

காசு பெரிதல்ல புரிந்திடு

தூசு பட்டும் கலங்காத கண்கள்

அழுகின்றன இன்று தனிமையில்

நிம்மதியாக நீ வாழ

உனை விட்டு நீங்கிய நான்

உன் கவிதை படித்த பின்

கவலையோடு நான் இன்று

அன்புக்கு அடையாளமான

அந்த தாஜ்மஹால் வேண்டாம்

அல்வாவும் உனக்கு வேண்டாம்

அன்பு முத்தங்கள் பல போதும்

அன்பானவனே வா என்னருகில்

அணைத்திடு ஒளியதனை

அணைத்திடு வெண்ணிலவை

அதரங்களைக் குவித்திடு

வருவேன் நாளை உனைத்தேடி

வடிப்பாயா கவிதைகள் பலநூறு

கவித்தென்றலே எனை நோக்கி

வீசு இதமான தென்றலை. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இதமான தென்றலை என்றும்

வீசுவேன் என்னருகே நீயிருந்தால்

உன் மடியில் நான் தூங்க

எங்கே நீ சென்றாலும் உன்னோடு

ஓடிவரும் நிழலாக நானிருப்பேன்

என்பதை நம்பிவிடு

ஆயிரம் சொன்னாலும் உலகம்

அன்பே உனை சேர அகிலமே

எதிர்த்தாலும் கோழையாய் நான்

முலையில் படுத்துறங்கமாட்டேன்

போராடியே போராளியாய்

உன் கை பிடிப்பேன் என்

உலகமே நீயாக வேண்டும்

என்பதே என் கொள்கை

எதிர்ப்பு இல்லாத வாழ்க்கை வேண்டாம்

எனக்காய் நீயும் ஓடி வரவேண்டாம்

விழுப்புண் அடைந்தாலும் வேங்கை நான்

உன்னைக் கேக்க வாசல் வருவேன்

அதுவரை பொறுத்திரு முடிந்தவரை

சமாதானமாய் பேசிப்பார்ப்போம்

சிறந்த வீரனுக்கு அழகு பொறுமையாம்

அழகு தேவதையே உன்னால் வீரனானேன்

உனக்கென பொறுக்க மாட்டேனோ

Link to comment
Share on other sites

*னோனா

நீ யார் வீட்டு மானோ?

வீணே நீயும் ஏன்

எனைத் தேடுகின்றாய்!

யாரேனும் வந்து

வழக்குப் போடுவர்

கவனம்!

உயிர் உருகும் சத்தம்

உனக்கு மட்டும் கேட்டால்

அது காதல்!

களத்தில் வந்து கனபேர்

காது கொடுத்துக் கேட்கினம்

பார் இனி வரும்

பல மோதல்!

'தயிர் கடையும் மத்தாக

உயிர் கடைகின்றாள்

என்னத்தை மகளென்று'

கவிதை பல செய்தவன்

நான்...!

சோகம் சுமக்கும்

சில கவிதை

சொந்தக் கதை

உரைக்குமடி!

வேகமெடுக்கும் என் தமிழின்

அழகில் எல்லாம்

மறையும் காண்!

பாவம் பல பேர்

வந்து நம் கவிதைக்

கோலம்

கண்டு கொடுப்புக்குள்

சிரிப்பார்!

சாபம் ஏதும்

இட வேண்டாம்

சல சலத்து ஓடும்

நம் கவி ஓடையில்

நீந்தி மகிழட்டும்

இவர்கள்!

---------------------

குறிப்பு : *னோனா - சிங்கள வார்த்தை பெண், மனைவி ஏதேனும் பொருளில் வரலாம் (பொருள் தவறு இருப்பின் திருத்துங்கள்.)

Link to comment
Share on other sites

இவர்கள் தன்னுடல்

தனை மறந்து

தனாக்காய் வாழாது

எமாக்காய் வாழும்

தியாக தீபங்கள் ஆனால்

இன்று

பூவுடலாய் பூமியில்

சரிந்த வேளை

இழிவின் மேல் இழிவு

செய்து ரசிக்கின்றான்

அரக்கன்...............

கொடுமைகளை ரசிக்கும்

இவனுக்கு மனித நேயம்

எப்படி புரியும்

Link to comment
Share on other sites

எப்படிப் புரியும்

இவர்களுக்கு

உனக்கும் எனக்குமிடையில்

உருகாத மெழுகுவர்த்தியொன்று

ஒளி தருவது...!

எப்படிச் சரியும்

இத் தேகம்

உன் பஞ்சுத் தலையணை மீது

பிஞ்சு விரல்கள்

ஸ்பரிசம் தராமல்!

எப்படி அறியும்

இவ் உலகம்

உனக்கும் எனக்குமிடையில்

பொதுவான மொழி

அன்பு என்பதை!

எப்படி அறிவார்

நம் பெற்றோர்

நம்மிருவர் வாழ்விலும்

நலம் வரும் என்பதை!

உன் நலனில் நானும்

என் நலனில் நீயும்

மனசுக்குள் அழுகின்றவேளை

நம் நலனில்

நமையாளும் இறைவன்

கை தரானா?

தருவான் என்கின்ற

நேர் சிந்தனையோடு மட்டும்

வாழ்கின்றேன்!

Link to comment
Share on other sites

வாழ்கின்றேன் நான்

உன்னில்

அல்ல உனக்காய்

யார் யாரோ வந்து

போன இதயத்தில்

யாவுமாய் நின்றவளே

நீயின்றி நான் வாழவும்

நீயே வேண்டுமடி

சீதனமா நான் கேட்டேன்

சீதனமாய்த்தானே உன்னைக்

கேட்டேன்

ஆயிரம் பிரச்சனைகளைத்

தாண்டிவர கூட இருந்த நீ

ஒரே ஒரு பிரச்சனையால்

தனியாய்ப் போக எப்படி

முடிந்தது உன்னால்........

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்

என்னை மறக்க

அதைத்தானே செய்கிறாய்

இதையேன் இங்குரைக்கிறாய்

நீ எனக்காகவும்

நான் உனக்காகவும்

இயன்றவரை வாழ்வோம்

இறைவன் நம்பிக்கையோடு

என் உயிர் உருகுவது

உனக்கு கேட்கிறதா

என்னவனே பதில்சொல்

உனக்காக நான்

Link to comment
Share on other sites

நான் நானாகவே

இருந்திருக்கலாம்

நீ நீயாகவே

இருந்திருக்கலாம்

எனக்கு நீயும்

உனக்கு நானும்

யாரோ என்றே

வாழ்ந்திருக்கலாம்

நீ என்னை

காதலோடு

பார்க்காமல்

போயிருந்தால்

நான்

உன்னிடம்

நேரம் கேக்காமல்

போயிருந்தால்

இப்பிடி சேர்ந்து

ஒன்றுக்குள் ஒன்றாக

வாழ்ந்துவிட்டு

ஒவ்வொன்றாக வலியோடு

பிரியாமல் போயிருப்போம்

Link to comment
Share on other sites

பிரியாமல் போயிருப்போம்

பிரியத்தோடு பேசியிருப்பின்

காத்திருப்போம் நாமிருவரும்

காதலோடு கலந்திருப்பின்

அனுதினமும் கண்டேன்

அழகிய உன்வதனத்தை.

அயராது உழைப்பினும்

சலியாது உன் புலமை

ஓடிவா பாடிவா தேடிவா

பேடி இவளை நாடிவா

வா வா தொடர்ந்து வா

வானிலவை கவிபாட வா :D

Link to comment
Share on other sites

கவி பாட வா

கண்மணியே உன்

கண்களில் தூங்கி

கனவு காணவா

கற்பனை உலகில்

மிதக்க வா கண்மணியே

உன் கவிதைகளில் பொருள்

சேரவா

காகித வானத்தை

கவிதையால் நிரப்ப வா

உன் கண்கள் இரண்டில்

இமையாக துடிக்கவா

கவி

பாட வா கண்ணே

கவி பாடவா காலம்

உள்ளவரை உனக்காக

கவிஞானாகவா

Link to comment
Share on other sites

கவிஞனாகவா.. ?

உனக்காக நான்

கலைஞனாகவா.. ?

முன்னொரு பொழுது

சாவினுள் சீவியஞ்செய்த

எனக்கு என்னை - நீ

விரும்பும் வகையில்

மாற்றி அமைப்பது

ஒரு பெரிய

விடயமே அல்ல!

எனினும்..

எனக்காக நீ

ஒன்றும் செய்யத்

தேவை இல்லை!!

ஆனால்..

என்றும் என்

உண்மைக் காதலியாக

நீ இருப்பாயா?

அப்படியாயின்..

கவிஞன் என்ன..

கலைஞன் என்ன...

விரைவில் நான்

என்னை கடவுளாகவே

மாற்றிக் காட்டுகின்றேன்!

உனக்காக.. !!

Link to comment
Share on other sites

உனக்காக

தருவதற்கு

என்னிடம் எதுவுமில்லை

உன் நினைவுகளைத்

தவிர...

தனக்காக

எதையும் சிந்திக்காது

காதல்...

நமக்காக என்ற

சிக்கன வார்த்தையில்

சிறைப்படுவதில்

தனிச் சுகம்!

உயிரையும்

தருவேன் என்று

உளறுவதெல்லாம்

மகா கிறுக்கு!

வாழ்கைப் புத்தகத்தை

புரட்டும் போது

கூடவே நானும்

இருப்பேன் என்பதில்

தான் சுகம் இருக்கு!

வார்த்தைகளில் ஜாலம்

காட்டிப் புரியவைப்பதில்

இல்லை அன்பு!

Link to comment
Share on other sites

அன்புக்கு அர்த்தமேது

அடியேனுக்கு புரியவை

அன்று பார்த்த உன்னில்

அமைதியை பார்த்தேன்

இன்றுதான் புரிந்தேன்

இதமாக சிரிக்க தெரிந்த

இனியவனே உனக்குள்

இவ்வளவு கவிப்புலமையை!

உன் வலைத்தளத்தில்

புன்முறுவலைக் கண்டதும்

புரிந்தேன் நீதான் அவனென

பக்கத்தில் இருந்த போது

பார்வைகள் மட்டுமே மோதின

பேச்சுக்கள் வெளிவரவே இல்லை

மூச்சுக்கள் தொட்டதுமில்லை

ஆனால் இப்போ....

பாசமாக கதைக்க

பாவையென் நா துடிக்கின்றன

என்னவனே நீ வருவாயா

என்னருகில் மீண்டும்?

Link to comment
Share on other sites

மீண்டும் அதிர்ந்தது

சிங்கள தேசம்

மீண்டு வந்தது

தமிழரின் தேசம்

நேற்று இருந்தவர் - இன்று

நினைவுகளாய்

நாளை அவர் கனவுகள்

நனவாகி நம்மை மகிழ்விக்கும்

Link to comment
Share on other sites

நம்மை மகிழ்விக்கும்

நம் இனிய கனவுகள்

கலைந்து போகுமுன்

கைப்பிடித்திடு என்னை

கைப்பிடித்த என்னை

கண்களுக்குள் பொத்திவை

காமுகர்கள் பலவுளர்

கன்னியிவளைக் கடத்திட

ஆதலால் தான்

காதலனே உனைநான்

நெருங்குகிறேன் எனை

நீ காக்க வைக்காதே

Link to comment
Share on other sites

வைக்காதே பெண்ணே..

வெள்ளைமனதில்

பாறாங்கல்லை...

இனியவன் எண்ணங்களை

இருட்டடிப்பு செய்யாதே...

தெளிந்த ஓடை நீரில்

திராவகம் ஊற்றாதே...

பாலொளி வீசிக்கொண்டே..

பாடையைக் காட்டாதே..

பாடலைப் பாடிக்கொண்டே..

படுகொலை செய்யாதே..

புன்னகை வீசிக்கொண்டே..

பெரும்பாவம் செய்யாதே..

முத்தங்கள் என்ற பேரில்..

இரத்ததை குடிக்காதே..

கட்டிலறைக் கதைகள் பேசி..

சுடுகாட்டில் திரியாதே..

மாலைகள் மாற்றியதும்

தேளாகிக் கொட்டாதே..

மஞ்சத்தில் வீழ்ந்தவனின்..

நெஞ்சத்தில் மிதிக்காதே..

வேண்டாம் பெண்ணே..

உன்னை நீயே..

உருமாற்றிக் கொள்ளாதே..

வேண்டாம் பெண்ணே..

உனக்கு நீயே..

குழி பறிக்காதே..

காதல் என்ற கடலில்..

குளிக்கிறேன்.. என்று..

மூழ்கிப் போனால்..

துளி கண்ணீரும் கிடைக்காதே..

Link to comment
Share on other sites

துளி கண்ணீரும் கிடைக்காதே..

துளி கண்ணீரும் கிடைக்காதே

என்று கவி பாடும் கவியே

களி கொண்டு துள்ள வேண்டாமா?

கண்ணீர் இல்லாது சந்தோசப்

பன்னீர் தெளிக்கும்

காதல் வாழ்க்கை

சத்தல்லோ?

இதை மறந்தது

தப்பல்லோ?

பழி சொல்வதெந்தன்

ஆசை இல்லை

கிலி காட்டிக்

கவி சொல்லல் என்ன

நியாயம்?

நீயும் நானும்

வந்த கதை

தெரியுமா?

காதல் கொள்ளல்

என்ன பாவமா?

அன்னை அப்பன்

காதல் நமை ஈன்றது!

காதல் எனில்

கடலை கொறித்து

கடலலை ரசித்து

கட்டழகை அணைப்பது

மட்டுமா?

சொந்தச் சோகத்தின்

சுமை தாங்காது

வந்த கோபத்தில்

காதல் பழித்தீர்

கூதல் வந்தால்

தேடும் போர்வை போல்

காதல் வந்தால்

கைகள் கூடல்

பாவமா?

நயத்திற்காக

கவி ரசத்திற்காக

கவி செய்தால்

எல்லாம் நிஜத்தில்

எழுந்து நடக்குமா?

பயம் தெளிக

நயம் புரிக!

Link to comment
Share on other sites

புரிக இளையவனே காதல்

மயக்கத்தில்

கட்டுண்டு கிடந்தவன்தான்..

காடு மேடெல்லாம்..

கற்புன்று களித்தவன்தான்..

காதல் இவளே என்று

கண்மூடிக்கிடந்தவன்தான்..

அவளே உயிரென்று

ஊதியத்தைக் கரைத்தவன்தான்..

மங்கை மடி சொர்க்கமென்றே..

மதியை இழந்தவன்தான்..

களிப்பு வரும்..

கல்யாண எல்லை வரை..

கல்யாண எல்லைக்கோட்டில்.

பெண் பெற்றோருக்கு

பொம்மை....நல்ல

காதலனுக்கு ஊமை..

சுடும்.. தீ

காதலென்றேன்..

விரலால் அணைப்பேன்..

இதழால் இனிப்பேன்..

வீரன் நானென நீ

வித்தகம் பேசினால்..

விட்டுவிடுகிறேன்..

பட்டு வா பாலகா..

கதை கேட்க அண்ணன்

யாழில்தான்.. இருப்பேன்.. :unsure:

Link to comment
Share on other sites

இருப்பேன் நான்

இறுதிவரை உன்னோடு

இன்முகத்தோடு

இனிய காதலியாக! :unsure:

இளஞ்சிட்டுக்களின்

இளமைப்பருவமிது

இயற்கையை ரசிக்க

இணைந்தே வா! :lol:

இனியவனே வா

இளநிலா இவளின்

இதழில் கவிவடிக்க

இன்றே வா வா! :blink:

Link to comment
Share on other sites

வா வா என்றே

வஞ்சி அழைத்தாள்...

வசந்தம் வருமோ....

பூவாய் அவள்

கொஞ்சி அழைத்தாள்..

பூமி வெட்கப்படுமோ...

வெட்கம்...என்ற

சொல்லுக்கிங்கே..

வேலையில்லையே..

வேகம் கொண்ட

காதல் கிளிகள்..

சேரவில்லையே..

முத்துப்போல

காதலையுள்ளே..

மூடிவைத்தல் பாவம்..

சிப்பி போல..

திறந்து கொண்டால்..

இன்ப ஒளியில் தேகம்.

முன்னும் பின்னும்..

நீயும் நானும்..

கட்டிக்கொள்ளவா..

மேலும் கீழும்

வானும் மண்ணும்

ஒட்டிக்கொள்ளுமா..

மாயை என்ற பேயையென்றும்

இளமை அறிவதில்லை..

அறியும் நிலை

அடையும் போது..

கரைகள் தெரிவதில்லை..

கரைகள் கண்ட மீனுக்கெல்லாம்..

நீந்த முடிவதில்லை..

நீந்த முடிந்த மீன்கள் கூட

கரையை அடைவதில்லை..

காலம் போல வாழ்க்கை என்று..

கரைத்து விடாதே..

கரையும் வாழ்வைப் பயனில்லாமல்..

குறைத்துவிடாதே..

இதுதான் பாதை.. இதுதான் பயணம்..

வெற்றி கிடைக்கும் மறந்து விடாதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடாதே பிடி என்றாய்

விட்டுவிட்டேன் பிடியை

விட்டுப்பிடி என்றாய்

விட்டுப்பிடிக்கத் தெரியவில்லை

விலகிப்போ என்றாய்

விலகிட போக முடியவில்லை

விரும்பியே வந்தாய்

விருந்தோம்பல் தந்தேன்

விக்கல் வந்தது உனக்கு

விக்கித்து போனது எனக்கு

Link to comment
Share on other sites

எனக்கு வலிக்கின்ற

கணங்களில்..

ரணங்களை நான்

உன்னிடம் காட்டிக்

கொண்டதில்லை..

உன்னைக் குற்றவுணர்ச்சிகள்..

உறுத்துவதைக் கூட

என்னால் தாங்கமுடியாது...

காதலுக்கு

கோட்டை கட்டுபவனும்..

காதலுக்கு கத்தி எடுப்பவனும்..

காதலர்கள் என்ற

வரையறையை உடைக்க..

என் மென்மையான காதலால்

முடியாமல்ப் போனதேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.