Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முடியாமல் போனதேன்

படிப்பை தொடரமுடியாமல்

இடிந்து போய் நிற்கின்றேன்

அடியாத மாடு படியாது என்றே

தடி கொண்டு படி படி என்றே

அடித்து அடித்து வளர்த்த அப்பா

அடிக்கு ஓடி ஒளிந்திட்ட என்னை

தேடி தேடி அணைத்திட்ட அம்மா

மடியாது நினைவுகள் என்றும் நெஞ்சினில்

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

நெஞ்சினில்..

நெருஞ்சியடி

வஞ்சியே..

வானவில்லே..

கொஞ்சமும்..

வஞ்சமில்லா

நெஞ்சிலே நீ..

மட்டும் இருந்தால்..

வசந்தம்..உன்..

தங்கையும்.

வந்ததால். இட

நெருக்கம்.

Link to comment
Share on other sites

நெருக்கமாய்...

நெஞ்சினில் நீ வந்த பின்னால் தான்

என்னையே நான் எனக்கு

அறிமுகமாக்கினேன்...!

அதுவரை நான் எங்கிருந்தேன்...???

உன்னினுள்தான் எங்கோ

ஒழிந்திருந்தேனா..?

இல்லை -உன் வரவால் தான்

தன் நிலை தெளிந்தேனா...?

இத்தனை நாளும்

என்னமோ செய்தேனே..??

உனைசந்தித்த பின்னால் தான்

உனக்காக - ஒவ்வொன்றும்

செய்கிறேன்...!!

அர்த்தமற்ற வாழ்க்கையை

அர்த்தப் படுத்தியவள் - நீ

வெற்றுக் கண்ணாடிக்கு

முலாமிட்டவள்

நீ தானே..... :wub:

Link to comment
Share on other sites

நீதானே எல்லாம்

என்றென்னை சுட்டுவிரலால்

தொட்டுக்காட்டி..

அழகான பொய்களை அடுக்கி கொண்டு

போகிறாயே.. அன்பே...

நீ என்ன அரசியல்வாதியா..

Link to comment
Share on other sites

அரசியல்வாதி மட்டுமா

அடுக்கடுக்கா பொய் சொல்லுறான்

ஆண்மகன் எல்லோருமே

அப்படித்தானே வாழ்கின்றனர்

பெண்களை ஏமாற்ற

ஆண்மகன் வாயில்

யாருமே அறியாவண்ணம்

பூசிய உதட்டுசாயமே

பொய்.. பொய்.. பொய்!

ஆமாம்

அது பொய் தான். :wub:

Link to comment
Share on other sites

பொய்.. பொய்.. பொய்!

ஆமாம்

அது பொய் தான் இன்று

புரியாத

உணர்வு வலிக்க

இதயம் கனக்க ஓர் கவி

ஒளியின் ஒளியாய்

சிரிப்பின் சிரிப்பாய்

உறுதியின் உறுதியாய்

வாழ்ந்திட்ட சரித்திரம்

பூமியில் சரிந்ததேனோ?

விதியென்று இருள்கொண்டு

வந்ததேனோ?

பல பூக்கள் சிகப்பாகி

சேர்ந்ததேனோ?

விடியலின் விடிவெள்ளி

விடிய முதல் சென்றதேனோ?

சாபங்கள் எம்மோடு

தொடர்வதேனோ?

Link to comment
Share on other sites

தொடர்வதேனோ என்னை?

நிமிர்ந்து பார்த்து

நிலவைக் கேட்டேன்!

தலை கவிழ்ந்து

முகம் பார்த்துச் சொன்னது

நிலவு...

களவு போன என்

உள்ளத்தை களவாடிய கள்வன்

இவனா என அறியத் தொடர்ந்தேன்!

Link to comment
Share on other sites

தொடர்ந்தேன் உன்னை

தொலைந்த என்னைத்தேடி

கண்ணாளனே என்னை நான்

கண்டெடுத்தேன் உன்னில்

நிஜமா இது நிஜமா

நீயா திருடினாய் எனை

நான் உனைப் பார்க்க

விண்ணில் இருந்து

மண்ணை நோக்கினேன்

மணவாளனே என்ன அதிசயம்

வெண்பஞ்சு மேகங்கள்

வெண்ணிலாவை மறைக்கின்றன

திருமகனே என் மனமகனே

ஒருமுறை எனை நோக்கு

உன் கண்ணொளி பட்டு

வெண்பஞ்சு மேகம் ஓடட்டும்.

Link to comment
Share on other sites

வெண்பஞ்சு மேகம்

ஓடட்டும்

வெள்ளி நிலா

ஒளி வீசட்டும்

விழியிரண்டும் அவனைத்

தேடட்டும்

கனவுக்குள் அவன்முகம்

தோன்றட்டும்

நினைவு சொன்ன நாட்கள்

அவனாகட்டும்

Link to comment
Share on other sites

அவனாகட்டும்

உன் காதல் வானம் - உன்

செவ்விதழாகட்டும்

அவன் பருகும் தடாகம்!

மொட்டு அவிழட்டும்

அவன் கைகள் பட்டு

சொட்டுச் சொட்டாய்

ஜீவன் உருகட்டும்

கட்டு அவனை

காதலில் கட்டு

விட்டுப் பறக்காது இனி

அவன் காமனின் சிட்டு!

காட்டு உன்னழகை

அவன் முன் காட்டு

பார்த்து கண்கள் இமைக்காது

பார்த்து எழுதுவான்

பல பாட்டு!

நிப்பாட்டு

மின்சாரத்தை

அவன் ஆழட்டும்

உன் அழகின் சாரத்தை!!!

Link to comment
Share on other sites

அழகின் சாரத்தை அடடா இங்கு கண்டேன்

காதல் இரசம் சொட்டும் காமபாணங்கள்

கவி அந்தாதியை காதல் அந்தாதியாக்கி

கறுப்பிக்காவை விரட்டி விட்டதோ? :wub::lol:

காதல் கிறுக்கர்களே!

கவி அந்தாதிக்கு விடுதலை கொடுப்பீர்!

புதிதாய் ஒரு திரியெடுத்து

காமரசம் சொட்டச் சொட்ட

காதல் லீலைகளின் காட்சி பகிர்ந்திடுக!

காதல் அந்தாதியில்

தின்ற ஊண் செறிக்காத தினவர்கள் பார்வையிடப் படைப்பீர்! :D:blink::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பீர் கவிதை அழகாய்

தடையேதும் இல்லை சுவைக்க

படை கொண்டு வந்து தடுத்திட்டாலும்

விடைகொடுத்து முடித்திடமுடியாத அந்தாதி

ஆதிமுதல்வனாய் அந்தாதியில் நனைய

ஆறுமுகனை நினைந்து கவிதை படைத்திடுவீர்

ஆதி அருள் கிடைத்திடும்

Link to comment
Share on other sites

ஆதி அருள் கிடைத்திடும்

என்று எத்தனை நாள்

காத்திருந்தேன்

பாதி அருள் கூடக் கிடைக்கவில்லை

இது வரை!

என்றாலும்

சோதி ஒரு நாள்

என் வாசல் வரும்

கூவி எனை அழைத்து

புகழ் குன்றில் எனை

ஏற்றிவிடும்...!

காவிப் பல் தெரிய

ஏளனமாய் சிரிக்காதீர்

ஆதி தமிழின்

செல்லப் பிள்ளை நான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்முகன் மைந்தர் நால்வர் நின்றனர்!

மௌன குருவிடம் மௌனம் பயின்றனர்!

நால்வரில் ஒருவன் ஆறுமுகமாயினன்!

ஆறுமுகமானவன் வேலெடுத்து வென்றனன்!

வான்மனளை மணந்தவன் வள்ளியையும் கவர்ந்தான்!

நானிலத்தோர் உய்வதற்காய் நல்லூரில் லுறைந்தான்.

Link to comment
Share on other sites

உறைந்தான் புன்னகையோடு..

ஊர்கிடந்தழ - தமிழ்

மகன்தான் மறைந்தான்

மண்ணோடுகல்கலங்க..

புன்னகைத்தீபத்தில்...

அமிலந்தெளித்தவனை

மாலையிட்டு கௌரவிக்கும்..

தேசமன்னர்கள்..ஆசைக்கே..

சமாதனப்புறாக்களை

சட்டியிடுவதென்ன.. ஆயுதக்கிடங்கை

அகலமாக்கி.. நவீன

பீரங்கியை விற்கவென்று...

உலகப்பூங்காவை சுடு

காடாய்ச்செய்த சர்வ அதிகாரர்களே...

மழலைப்பூவை ரசிக்க வாருங்கள்..

அம்மா அன்பை உணர்ந்து பாருங்கள்..

அன்பு காட்டி வாழ்ந் பாருங்கள்..

சிரித்து க்கலந்து வாழ்ந்து பாருங்கள்..

எளிமை இன்பம் நுகர்ந்து பாருங்கள்..

ஒருநாள் ஏழையாகி தூங்கிப்பாருங்கள்..

வியர்வை சிந்த உழைத்துப் பாருங்கள்..

இயற்கை காற்றில் நனைந்து பாருங்கள்..

வங்கிக்கணக்கை வளர்க்கும் நீங்கள்...

வாழ்க்கை எது நினைத்துப்பாருங்கள்

Link to comment
Share on other sites

நினைத்துப் பாருங்கள்

உன்னை காதலிக்கும்

என்னை ஒரே ஒரு கணம்

கண்ணிமைகளை மூடி..

உற்றுப்பாருங்கள்

வெற்றுத்தாள்தான் நான்

என்மேல் எழுதிடு

உன்கவிக் காவியத்தை

உனதழகி நிலவவள்

இன்றும் உனக்காக

உருகுகின்றேன் தினமும்

உயிரே வா கரம் கோர்க்க

Link to comment
Share on other sites

கரம் கோர்க்க

நான் வருவதானால்

சிரம் தாழ்த்தி

நீ ஒன்று கேட்கவேண்டும்

பரம் பொருள் காலடியன்றி

என் காலடி என்றும்

தொழக்கூடாது...!

ஏனெனில்,

கால் வாருகின்ற

ஆசை உனக்கேதும்

இருந்தால் அடியேன்

பாவமன்றோ...!

Link to comment
Share on other sites

அன்றோ அவள் பாவை..

அராதித்தேன்..

வார்த்தை யேதும் வாய்வழி

விழாதா எனத் தவங்கிடந்தேன்...

இன்றோ அவள் மேதை..

சிறிது வாய் மூட மாட்டாளாஎன

நொந்து போய் இருக்கிறேன்..

ஆசைபட்டதும் நான்தான்..

அதற்காக இப்படியா இறைவா..

Link to comment
Share on other sites

இறைவா உனை

இறைஞ்சுகின்றேன்

இந்த ஜென்மம் போல

இனிமையான நம் உறவு

இடைவிடாமல் தொடரணும்

இறுதிக்காலம் வரை

Link to comment
Share on other sites

இறுதிக் காலம் வரை

இடைவிடாது தொடரும்

உறுதிமொழி ஏதும்

தரமுடியாது என்னால்...

சும்மா உதட்டளவில்

உச்சரிக்கப்படும்

உறவுகளில் எனக்கு

உடன்பாடில்லை!

உள்ளத்தில் கொப்பளிக்கும்

அன்பருவியில்

நீராடுகின்ற உற்சாகத்தை

தருகின்ற உறவு

முற்றுப்புள்ளி எதுவுமின்றி

முடிவிலிக்கு அழைத்துச்செல்லும்!

ஆகவே இறைவா..

என் உள்ளத்தில் என்றும்

அன்புப் பூக்கள்

பூத்துக் குலுங்கவிடு...

அது போதும்

உறவு தொடர...!

Link to comment
Share on other sites

உறவுகள் தொடரும்

இறுதிவரை இதேபோல

உதட்டளவில் இல்லை

இதயத்தில் இருந்து

கூறு ஒருமுறை அன்பே

மறுப்பேதும் சொல்லாமல்..

நிம்மதியாக இருக்கின்றாயா

அம்மணியை நீங்கியதால்

வருவேன் நாளைமறுதினம்

வரவேற்பியா செங்கம்பளம்

விரித்து இவ்வெண்ணிலாவை...

Link to comment
Share on other sites

வெண்ணிலாவை

செங்கம்பளம் விரித்து

வரவேற்கின்ற அவசியம்

ஏதேனும் உண்டா?

நீலக் கம்பளம் விரித்து

இயற்கை வரவேற்பதை விட

அடியேன் பெரிதாக என்ன

செய்துவிட முடியும்?

நிம்மதி ஆளை நீங்குவதாலோ

ஆளோடு கூட இருப்பதாலோ

கிடைத்துவிடுமா என்ன?

மனதுக்குள் சாந்தப்

பன்னீர் தெளித்தால்

கூட்டத்தில் கூட

குட்டித் தூக்கம் போடலாம்...

என்றாலும் வரவேற்பியா

என்ற கேட்டபடியால்

யாழ் களம் எங்கணும்

போஸ்டர் அடிக்கலாம்

என்று இருக்கிறேன்...

செலவு மட்டும்

உன் பொறுப்பு..!

Link to comment
Share on other sites

உன் பொறுப்பு

என்று சொல்லி

சாதுரியமாக நழுவும்

சாந்தமானவனே

வெண்ணிலாவுக்கு

செங்கம்பளமும் வேண்டாம்

போஸ்டரும் வேணாம்

வரவேற்பும் வேண்டாம்

பலவர்ண வானவில்

புடைசூழ...

மின்னும் நட்சத்திரங்கள்

மிளிர..

சட்டென மறையும் மின்னல்

படமெடுக்க..

இடிகள் மேளச் சத்தம்

முழங்க..

பஞ்சு மேகங்கள் என்

பிஞ்சு விரல்களை பிடித்து

அழைத்து வர..

நீலவானமதில் நான்

உல்லாசமாக

உலா வருவேன்.!

எப்படித்தான் வலம்வரினும்

என்னால் உனை மறக்கமுடியாது

சிறு வயதில் நாமிருவரும்

மணல்வீடு கட்டி விளையாடியதை.!!

அன்று மணல்வீடு கட்டி

விளையாடிய நீயா

இணைய வழி ஊடாக வந்து

இன்று கவிதை அந்தாதிக்குள்

நக்கலென்ற பெரிய

கல்லெறிந்து காயப்படுத்துகிறாய்..!

Link to comment
Share on other sites

நக்கலென்ற பெரிய

கல்லெறிந்து காயப்படுத்துகிறாய்

என்று புலம்பியது கேட்டு

பல முறை எனக்கு

விக்கல் வந்தது

விருந்துண்ணும் போது!

நீ உன் புலம்பலில்

சொன்ன சேதி பல

என் சிந்தை கடைகின்றது...

முந்தை ஒரு நாள்

மணல் வீடு

கட்டி விளையாடியதாய்ச்

சொன்னாய்...

சிந்தை குடைந்து

நினைவு அலுமாரி எங்கும்

தேடியும் ஏதும்

கிடைக்கவில்லை அப்படி!

சில சமயம்

எனகெழுதும் வரிகளுக்கிடையில்

ஏதேனும் தூது

அனுப்புகின்றாயா

வேறெவருக்கும்?

சும்மா இப்படித்தான்

ஏதேனும் கேட்பேன்

மருண்டு போகாதே நீயும்!

Link to comment
Share on other sites

போகாதே நீயும்

பாவியெனை தவிக்கவிட்டு

காததூரம் நீ சென்றிடில்

ஆவியெனை விட்டு நீங்கும்

நான் புலம்பியது கேட்டு

நீ விக்கியபோதிலும்

வாஞ்சையோடணைத்து

வாய்முத்தம் தரநினைத்து

வஞ்சியிவள் முயன்றபோதும்

வார்த்தைகள் தடுமாறியதால்

வாய்பொத்தி உன்முன்னே

மெளனமாக தலைகுனிந்தேன்..

மண்வீடு கட்டி

வெண்ணிலைவை துரத்தி

ஓடியாடி விளையாடியதை

மறந்து அலுமாரியை

திறந்து தேடினாயா?

அதற்குப்பதில் உன்

இதயவறைகளை திறந்து

கண்மூடி சிந்தனை செய்

மண்வீடு என்ன மாளிகையே

உன் மனக்கண் முன்..!

உனக்கனுப்பும் சேதிகளை

நான் வேறெவருக்கும்

அனுப்பவே மாட்டேன் என

நன்கு தெரிந்தும்

அன்பே எதற்காக

மீண்டும் கல்லெறிகின்றாய்

என்மேல் உனக்கென்ன கோவம்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.