Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முடியாமல் போனதேன்

படிப்பை தொடரமுடியாமல்

இடிந்து போய் நிற்கின்றேன்

அடியாத மாடு படியாது என்றே

தடி கொண்டு படி படி என்றே

அடித்து அடித்து வளர்த்த அப்பா

அடிக்கு ஓடி ஒளிந்திட்ட என்னை

தேடி தேடி அணைத்திட்ட அம்மா

மடியாது நினைவுகள் என்றும் நெஞ்சினில்

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

நெஞ்சினில்..

நெருஞ்சியடி

வஞ்சியே..

வானவில்லே..

கொஞ்சமும்..

வஞ்சமில்லா

நெஞ்சிலே நீ..

மட்டும் இருந்தால்..

வசந்தம்..உன்..

தங்கையும்.

வந்ததால். இட

நெருக்கம்.

Link to comment
Share on other sites

நெருக்கமாய்...

நெஞ்சினில் நீ வந்த பின்னால் தான்

என்னையே நான் எனக்கு

அறிமுகமாக்கினேன்...!

அதுவரை நான் எங்கிருந்தேன்...???

உன்னினுள்தான் எங்கோ

ஒழிந்திருந்தேனா..?

இல்லை -உன் வரவால் தான்

தன் நிலை தெளிந்தேனா...?

இத்தனை நாளும்

என்னமோ செய்தேனே..??

உனைசந்தித்த பின்னால் தான்

உனக்காக - ஒவ்வொன்றும்

செய்கிறேன்...!!

அர்த்தமற்ற வாழ்க்கையை

அர்த்தப் படுத்தியவள் - நீ

வெற்றுக் கண்ணாடிக்கு

முலாமிட்டவள்

நீ தானே..... :wub:

Link to comment
Share on other sites

நீதானே எல்லாம்

என்றென்னை சுட்டுவிரலால்

தொட்டுக்காட்டி..

அழகான பொய்களை அடுக்கி கொண்டு

போகிறாயே.. அன்பே...

நீ என்ன அரசியல்வாதியா..

Link to comment
Share on other sites

அரசியல்வாதி மட்டுமா

அடுக்கடுக்கா பொய் சொல்லுறான்

ஆண்மகன் எல்லோருமே

அப்படித்தானே வாழ்கின்றனர்

பெண்களை ஏமாற்ற

ஆண்மகன் வாயில்

யாருமே அறியாவண்ணம்

பூசிய உதட்டுசாயமே

பொய்.. பொய்.. பொய்!

ஆமாம்

அது பொய் தான். :wub:

Link to comment
Share on other sites

பொய்.. பொய்.. பொய்!

ஆமாம்

அது பொய் தான் இன்று

புரியாத

உணர்வு வலிக்க

இதயம் கனக்க ஓர் கவி

ஒளியின் ஒளியாய்

சிரிப்பின் சிரிப்பாய்

உறுதியின் உறுதியாய்

வாழ்ந்திட்ட சரித்திரம்

பூமியில் சரிந்ததேனோ?

விதியென்று இருள்கொண்டு

வந்ததேனோ?

பல பூக்கள் சிகப்பாகி

சேர்ந்ததேனோ?

விடியலின் விடிவெள்ளி

விடிய முதல் சென்றதேனோ?

சாபங்கள் எம்மோடு

தொடர்வதேனோ?

Link to comment
Share on other sites

தொடர்வதேனோ என்னை?

நிமிர்ந்து பார்த்து

நிலவைக் கேட்டேன்!

தலை கவிழ்ந்து

முகம் பார்த்துச் சொன்னது

நிலவு...

களவு போன என்

உள்ளத்தை களவாடிய கள்வன்

இவனா என அறியத் தொடர்ந்தேன்!

Link to comment
Share on other sites

தொடர்ந்தேன் உன்னை

தொலைந்த என்னைத்தேடி

கண்ணாளனே என்னை நான்

கண்டெடுத்தேன் உன்னில்

நிஜமா இது நிஜமா

நீயா திருடினாய் எனை

நான் உனைப் பார்க்க

விண்ணில் இருந்து

மண்ணை நோக்கினேன்

மணவாளனே என்ன அதிசயம்

வெண்பஞ்சு மேகங்கள்

வெண்ணிலாவை மறைக்கின்றன

திருமகனே என் மனமகனே

ஒருமுறை எனை நோக்கு

உன் கண்ணொளி பட்டு

வெண்பஞ்சு மேகம் ஓடட்டும்.

Link to comment
Share on other sites

வெண்பஞ்சு மேகம்

ஓடட்டும்

வெள்ளி நிலா

ஒளி வீசட்டும்

விழியிரண்டும் அவனைத்

தேடட்டும்

கனவுக்குள் அவன்முகம்

தோன்றட்டும்

நினைவு சொன்ன நாட்கள்

அவனாகட்டும்

Link to comment
Share on other sites

அவனாகட்டும்

உன் காதல் வானம் - உன்

செவ்விதழாகட்டும்

அவன் பருகும் தடாகம்!

மொட்டு அவிழட்டும்

அவன் கைகள் பட்டு

சொட்டுச் சொட்டாய்

ஜீவன் உருகட்டும்

கட்டு அவனை

காதலில் கட்டு

விட்டுப் பறக்காது இனி

அவன் காமனின் சிட்டு!

காட்டு உன்னழகை

அவன் முன் காட்டு

பார்த்து கண்கள் இமைக்காது

பார்த்து எழுதுவான்

பல பாட்டு!

நிப்பாட்டு

மின்சாரத்தை

அவன் ஆழட்டும்

உன் அழகின் சாரத்தை!!!

Link to comment
Share on other sites

அழகின் சாரத்தை அடடா இங்கு கண்டேன்

காதல் இரசம் சொட்டும் காமபாணங்கள்

கவி அந்தாதியை காதல் அந்தாதியாக்கி

கறுப்பிக்காவை விரட்டி விட்டதோ? :wub::lol:

காதல் கிறுக்கர்களே!

கவி அந்தாதிக்கு விடுதலை கொடுப்பீர்!

புதிதாய் ஒரு திரியெடுத்து

காமரசம் சொட்டச் சொட்ட

காதல் லீலைகளின் காட்சி பகிர்ந்திடுக!

காதல் அந்தாதியில்

தின்ற ஊண் செறிக்காத தினவர்கள் பார்வையிடப் படைப்பீர்! :D:blink::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பீர் கவிதை அழகாய்

தடையேதும் இல்லை சுவைக்க

படை கொண்டு வந்து தடுத்திட்டாலும்

விடைகொடுத்து முடித்திடமுடியாத அந்தாதி

ஆதிமுதல்வனாய் அந்தாதியில் நனைய

ஆறுமுகனை நினைந்து கவிதை படைத்திடுவீர்

ஆதி அருள் கிடைத்திடும்

Link to comment
Share on other sites

ஆதி அருள் கிடைத்திடும்

என்று எத்தனை நாள்

காத்திருந்தேன்

பாதி அருள் கூடக் கிடைக்கவில்லை

இது வரை!

என்றாலும்

சோதி ஒரு நாள்

என் வாசல் வரும்

கூவி எனை அழைத்து

புகழ் குன்றில் எனை

ஏற்றிவிடும்...!

காவிப் பல் தெரிய

ஏளனமாய் சிரிக்காதீர்

ஆதி தமிழின்

செல்லப் பிள்ளை நான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்முகன் மைந்தர் நால்வர் நின்றனர்!

மௌன குருவிடம் மௌனம் பயின்றனர்!

நால்வரில் ஒருவன் ஆறுமுகமாயினன்!

ஆறுமுகமானவன் வேலெடுத்து வென்றனன்!

வான்மனளை மணந்தவன் வள்ளியையும் கவர்ந்தான்!

நானிலத்தோர் உய்வதற்காய் நல்லூரில் லுறைந்தான்.

Link to comment
Share on other sites

உறைந்தான் புன்னகையோடு..

ஊர்கிடந்தழ - தமிழ்

மகன்தான் மறைந்தான்

மண்ணோடுகல்கலங்க..

புன்னகைத்தீபத்தில்...

அமிலந்தெளித்தவனை

மாலையிட்டு கௌரவிக்கும்..

தேசமன்னர்கள்..ஆசைக்கே..

சமாதனப்புறாக்களை

சட்டியிடுவதென்ன.. ஆயுதக்கிடங்கை

அகலமாக்கி.. நவீன

பீரங்கியை விற்கவென்று...

உலகப்பூங்காவை சுடு

காடாய்ச்செய்த சர்வ அதிகாரர்களே...

மழலைப்பூவை ரசிக்க வாருங்கள்..

அம்மா அன்பை உணர்ந்து பாருங்கள்..

அன்பு காட்டி வாழ்ந் பாருங்கள்..

சிரித்து க்கலந்து வாழ்ந்து பாருங்கள்..

எளிமை இன்பம் நுகர்ந்து பாருங்கள்..

ஒருநாள் ஏழையாகி தூங்கிப்பாருங்கள்..

வியர்வை சிந்த உழைத்துப் பாருங்கள்..

இயற்கை காற்றில் நனைந்து பாருங்கள்..

வங்கிக்கணக்கை வளர்க்கும் நீங்கள்...

வாழ்க்கை எது நினைத்துப்பாருங்கள்

Link to comment
Share on other sites

நினைத்துப் பாருங்கள்

உன்னை காதலிக்கும்

என்னை ஒரே ஒரு கணம்

கண்ணிமைகளை மூடி..

உற்றுப்பாருங்கள்

வெற்றுத்தாள்தான் நான்

என்மேல் எழுதிடு

உன்கவிக் காவியத்தை

உனதழகி நிலவவள்

இன்றும் உனக்காக

உருகுகின்றேன் தினமும்

உயிரே வா கரம் கோர்க்க

Link to comment
Share on other sites

கரம் கோர்க்க

நான் வருவதானால்

சிரம் தாழ்த்தி

நீ ஒன்று கேட்கவேண்டும்

பரம் பொருள் காலடியன்றி

என் காலடி என்றும்

தொழக்கூடாது...!

ஏனெனில்,

கால் வாருகின்ற

ஆசை உனக்கேதும்

இருந்தால் அடியேன்

பாவமன்றோ...!

Link to comment
Share on other sites

அன்றோ அவள் பாவை..

அராதித்தேன்..

வார்த்தை யேதும் வாய்வழி

விழாதா எனத் தவங்கிடந்தேன்...

இன்றோ அவள் மேதை..

சிறிது வாய் மூட மாட்டாளாஎன

நொந்து போய் இருக்கிறேன்..

ஆசைபட்டதும் நான்தான்..

அதற்காக இப்படியா இறைவா..

Link to comment
Share on other sites

இறைவா உனை

இறைஞ்சுகின்றேன்

இந்த ஜென்மம் போல

இனிமையான நம் உறவு

இடைவிடாமல் தொடரணும்

இறுதிக்காலம் வரை

Link to comment
Share on other sites

இறுதிக் காலம் வரை

இடைவிடாது தொடரும்

உறுதிமொழி ஏதும்

தரமுடியாது என்னால்...

சும்மா உதட்டளவில்

உச்சரிக்கப்படும்

உறவுகளில் எனக்கு

உடன்பாடில்லை!

உள்ளத்தில் கொப்பளிக்கும்

அன்பருவியில்

நீராடுகின்ற உற்சாகத்தை

தருகின்ற உறவு

முற்றுப்புள்ளி எதுவுமின்றி

முடிவிலிக்கு அழைத்துச்செல்லும்!

ஆகவே இறைவா..

என் உள்ளத்தில் என்றும்

அன்புப் பூக்கள்

பூத்துக் குலுங்கவிடு...

அது போதும்

உறவு தொடர...!

Link to comment
Share on other sites

உறவுகள் தொடரும்

இறுதிவரை இதேபோல

உதட்டளவில் இல்லை

இதயத்தில் இருந்து

கூறு ஒருமுறை அன்பே

மறுப்பேதும் சொல்லாமல்..

நிம்மதியாக இருக்கின்றாயா

அம்மணியை நீங்கியதால்

வருவேன் நாளைமறுதினம்

வரவேற்பியா செங்கம்பளம்

விரித்து இவ்வெண்ணிலாவை...

Link to comment
Share on other sites

வெண்ணிலாவை

செங்கம்பளம் விரித்து

வரவேற்கின்ற அவசியம்

ஏதேனும் உண்டா?

நீலக் கம்பளம் விரித்து

இயற்கை வரவேற்பதை விட

அடியேன் பெரிதாக என்ன

செய்துவிட முடியும்?

நிம்மதி ஆளை நீங்குவதாலோ

ஆளோடு கூட இருப்பதாலோ

கிடைத்துவிடுமா என்ன?

மனதுக்குள் சாந்தப்

பன்னீர் தெளித்தால்

கூட்டத்தில் கூட

குட்டித் தூக்கம் போடலாம்...

என்றாலும் வரவேற்பியா

என்ற கேட்டபடியால்

யாழ் களம் எங்கணும்

போஸ்டர் அடிக்கலாம்

என்று இருக்கிறேன்...

செலவு மட்டும்

உன் பொறுப்பு..!

Link to comment
Share on other sites

உன் பொறுப்பு

என்று சொல்லி

சாதுரியமாக நழுவும்

சாந்தமானவனே

வெண்ணிலாவுக்கு

செங்கம்பளமும் வேண்டாம்

போஸ்டரும் வேணாம்

வரவேற்பும் வேண்டாம்

பலவர்ண வானவில்

புடைசூழ...

மின்னும் நட்சத்திரங்கள்

மிளிர..

சட்டென மறையும் மின்னல்

படமெடுக்க..

இடிகள் மேளச் சத்தம்

முழங்க..

பஞ்சு மேகங்கள் என்

பிஞ்சு விரல்களை பிடித்து

அழைத்து வர..

நீலவானமதில் நான்

உல்லாசமாக

உலா வருவேன்.!

எப்படித்தான் வலம்வரினும்

என்னால் உனை மறக்கமுடியாது

சிறு வயதில் நாமிருவரும்

மணல்வீடு கட்டி விளையாடியதை.!!

அன்று மணல்வீடு கட்டி

விளையாடிய நீயா

இணைய வழி ஊடாக வந்து

இன்று கவிதை அந்தாதிக்குள்

நக்கலென்ற பெரிய

கல்லெறிந்து காயப்படுத்துகிறாய்..!

Link to comment
Share on other sites

நக்கலென்ற பெரிய

கல்லெறிந்து காயப்படுத்துகிறாய்

என்று புலம்பியது கேட்டு

பல முறை எனக்கு

விக்கல் வந்தது

விருந்துண்ணும் போது!

நீ உன் புலம்பலில்

சொன்ன சேதி பல

என் சிந்தை கடைகின்றது...

முந்தை ஒரு நாள்

மணல் வீடு

கட்டி விளையாடியதாய்ச்

சொன்னாய்...

சிந்தை குடைந்து

நினைவு அலுமாரி எங்கும்

தேடியும் ஏதும்

கிடைக்கவில்லை அப்படி!

சில சமயம்

எனகெழுதும் வரிகளுக்கிடையில்

ஏதேனும் தூது

அனுப்புகின்றாயா

வேறெவருக்கும்?

சும்மா இப்படித்தான்

ஏதேனும் கேட்பேன்

மருண்டு போகாதே நீயும்!

Link to comment
Share on other sites

போகாதே நீயும்

பாவியெனை தவிக்கவிட்டு

காததூரம் நீ சென்றிடில்

ஆவியெனை விட்டு நீங்கும்

நான் புலம்பியது கேட்டு

நீ விக்கியபோதிலும்

வாஞ்சையோடணைத்து

வாய்முத்தம் தரநினைத்து

வஞ்சியிவள் முயன்றபோதும்

வார்த்தைகள் தடுமாறியதால்

வாய்பொத்தி உன்முன்னே

மெளனமாக தலைகுனிந்தேன்..

மண்வீடு கட்டி

வெண்ணிலைவை துரத்தி

ஓடியாடி விளையாடியதை

மறந்து அலுமாரியை

திறந்து தேடினாயா?

அதற்குப்பதில் உன்

இதயவறைகளை திறந்து

கண்மூடி சிந்தனை செய்

மண்வீடு என்ன மாளிகையே

உன் மனக்கண் முன்..!

உனக்கனுப்பும் சேதிகளை

நான் வேறெவருக்கும்

அனுப்பவே மாட்டேன் என

நன்கு தெரிந்தும்

அன்பே எதற்காக

மீண்டும் கல்லெறிகின்றாய்

என்மேல் உனக்கென்ன கோவம்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.