Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

விடுதலை என்பது

விடுகதை இல்லை

வெற்றியும் எளிதில்லை

விடுவலை என்று

வெருட்டியே அழிப்போம்

வெருண்டோடும் சிங்களமே

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

சிங்களமே.. சிரி..

இது உனக்கு சிரிக்கின்ற

காலம் ..

ஒரு இனத்தை அழ வைத்து

அரக்கன் போல்

சிரிக்கிறாய்..

இல்லை

அரக்கனாகியே சிரிக்கிறாய்..

சிரி..

சிங்கமென்ற போர்வைக்குள்தான்..

இருக்கிறாய்..

நிஜப்புலிகள்.. வரும்

போர்ச் சங்கு ஊதும்..

அப்போது நீ எரிவாய்..

நாம் சிரிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்போம் சேர்ந்தே சிரிப்போம்

சிரித்து சிரித்தே கைகோர்த்து

சிங்காரமாய் நடந்திடுவோம்

சிரித்து சிரித்து கவலைகளை

சிட்டாய் பறக்க வைத்தே

சுதந்திரமான மனதை

சுகமாக்கி மகிழ்ந்திடுவோம்

வாய் விட்டு சிரித்தால்

நோய் விட்டுப் போகும் என்பதால்

வாய்விட்டு ஒருமுறை சிரிப்போம்

Link to comment
Share on other sites

"வாய்விட்டு ஒருமுறை சிரிப்போம்"

இதிலென்ன கஞ்சத் தனம்?

யார் வீட்டு சங்கதியேனும்

சந்திக்கு வந்தால்

சீர்கெட்டுப் போனதப்பா

அக்குடும்பமென

கொடுப்புக்குள் சிரிப்பதுவும்

வார்த்தையாலே வாள் சண்டை

பிடிப்பதுவும் இருக்கட்டும்...

"ஊர் ரெண்டுபட்டால்

கூத்தாடிக்கு கொண்டாட்டம்" எனும்

பழைய பழ மொழியை

எத்தனை நாள் காவடி தூக்குவாய்?

யோசித்துப் பார்...

கேலிப் பேச்சுக்கு மட்டும்

உதடுகளுக்கு சிரிக்கக்

கற்றுக் கொடுத்தாய்!

சிந்தனை மாற்றடா

சந்தனக் காற்று

மேனி தடுவுகையில்

காற்றின் கைகளை தட்டிவிட்டு

மெதுவாய் புன்னகை

அப்படியே நிலைக் கண்ணாடியில்

நின்றுன் மேனி ரசி

எத்தனை அழகடா

நீ

புன்னகைக்கும் போது என

உனை நீயே ரசி

கொஞ்ச நாளில் மறப்பாய்

கேலிச் சிரிப்பை

புன்னகைக்க மட்டுமே

உதடுகளுக்கு உத்தரவிடுவாய்

ஒன்று தெரி்ந்து கொள்

உன் உதடுகள் புன்னகைக்கும்

போதெல்லாம்

நீ அழகாவாய்...

உன்னைப் பார்ப்பவனும்

அழகாவான்...

ஆக

வீட்டுக்கு வரவேற்பறை போல

மனிதனுக்குப்

புன்னகை...

ஆகவே தயங்காது

இன்றே நீயும்

புன்னகை...!

Link to comment
Share on other sites

புன்னகை...

எந்நகை அணிந்தாலும்..

பெண்ணே..உனக்கு

அழகுந்தன்...புன்னகை

பூக்கள் வாடினாலும்..

என்றும் வாடாதது...

புன்னகை..

பள்ளியறையில்

சினங்கொண்ட கணவனின்

மனங்கொள்ளும்

மனையாளின் புன்னகை

கோடி இன்பங்கள்

கொட்டிக் கொடுத்தாலும்.

ஈடில்லா இன்பம்..

மழலையின் புன்னகை

நெஞ்சத்தே வஞ்சம்

நிலை கொண்ட

மாந்தர்க்கு மண்ணில்

வாராது..அழகுப் புன்னகை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகுப் புன்னகை சிந்திடும்

அழகு தேவதை அவள்

அழகு ஆபத்தாம்

ஆழம் அறியாமலே

அழகினை அணுஅணுவாய்

அள்ளி ரசித்திட முனைந்தேன்

Link to comment
Share on other sites

அழகினை அணுஅணுவாய்

அள்ளி ரசித்திட முனைந்தேன்

கிள்ளி எறிந்தாள்

தரையில் விழுந்த

மீனாய்

துள்ளி விழுந்தேன்

பள்ளி கொள்ளும் பாவனையில்

படுத்துறங்குவதாய்

பாசாங்கு செய்தாள்

கள்ளி - கன காலம்

எனை ஏமாற்றிய

பெருங் கள்ளி

முள்ளுள்ள கள்ளிச்

செடி பார்த்ததுண்டு

அழகுள்ள கள்ளிச் செடி

இங்கே கண்டேன்

பாசமுள்ள நெஞ்சத்திற்கு

மோசம் செய்யும்

இவள் வேண்டாமென

தள்ளியே நடக்கிறேன்

பழைய நினைவையும்

தள்ளியே நடக்கிறேன்!

Link to comment
Share on other sites

தள்ளியே நடக்கின்றேன்

பள்ளிகொள்ளும் உன்னை

மந்திகள் போல நான்

தொந்தரவு செய்யாமல்..

சாந்தமானவனே

நீ நன்றாக தூங்கு என்

காந்த விழிகள் உனை

ஈர்க்காதபடி கண்களை மூடி..

போர்வைக்குள் உன்

தேகத்தை மறைத்து

நிம்மதியாக தூங்கு

நிலவிவளின் சீண்டலின்றி..

Link to comment
Share on other sites

சீண்டலின்றி..

சிணுங்கலின்றி..

தூங்கலாமோ...பெண்ணே...

காதல் என்பது...

தேன்கூட்டைப்போல கண்ணே...

சத்தமின்றி..

முத்தமின்றி...

நித்திரையேன்.. பெண்ணே...

காதல் என்பது..

தீயைப்போல கண்ணே...

சிரித்திடாமல்..

உரித்திடாமல்...

துயிலுவதேன் பெண்ணே..

காதல் என்பது..

ஓடும் ஆற்றைப் போல கண்ணே...

உன் தூக்கமும்

தூக்கமில்லை..

என் ஸ்பரிசங்கள்..

பூக்கவில்லை..

உன் சுவாசத்தில்...

என் வாசனை..

என் யோசனை..

உன்னில் சோதனை..

பாசாங்குக்காரி நீ

என் பாதி நீ...

முடிச்சிட்ட கணவன்...

மூச்சுபட்டும்.. நீ..

தூக்கம் தொடரலாம்..

எதிர் கண்ணாடி சொன்னதே.. மெய்..

இதழ் களவாக பூத்த புன்னகை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை சிந்திடும் வேளைதனில்

புகுந்திடும் ஆனந்தம் மனசுக்குள்ளே

கோபம் கொள்ளும் வேளைதனில்

கொளுந்து விட்டேறியும் எண்ணங்கள்

அன்பு காட்டிடும் வேளையில்

பனியாய் உருகிடும் எந்தன்

உள்ளம் உன் மூச்சுக் காற்று பட்டு

மயங்கிடும் பொழுதுகளில்

எந்தனுயிர் இங்கில்லை

Link to comment
Share on other sites

என்னுயிர் இங்கில்லை

எழுந்து வாடி பெண்ணே - நீ

தான் என் உள்ளத்தில்

பூத்த முல்லை!

மன்னுயிர் காக்கும்

மன்னவன் போல்

உன்னுயிர் காப்பேன்

நான்...

புதிதாய் பயிர் வளர்க்கும்

விவசாயி போல்

கெதியாய் எனக்குள்

வளர்ந்த காதல் பயிர்

தினம் தினம் நான் பார்க்கிறேன்

வாடாமல் வதங்காமல்

நான் வளர்க்கிறேன்!

தனம் நீ மட்டும்

என்னோடு இருந்தால் போதும்

சினம் விடுகிறேன்

சிகரெட்டும் தொடேன்!

வரம் தாடி பெண்ணே

சிவன் பக்கம் பார்வதி போல் - என்

தனம் பக்கம் கவியிவனென

வரம் தாடி

இல்லையேல் இவன் வளர்க்கக்கூடும்

பெருந் தாடி!

உனக்குப் பிடித்தால்

பிரன்ஞ் தாடி! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சு தாடி! பிரெஞ்சு தாடி!

பிண்ணாக்குத் தின்னும் ஆட்டுக்கும் அதே தாடி!

கிடாயின் காலடியில் அதன் காதலிகள் கோடி!

இருந்தும் அதன் தாடையிலும் ஒரு தாடி.

பெண்கள் பின்னே பாய்ந்திடுவார் ஓடி!

அவளின்றேல் உடன் விட்டிடுவார் தாடி!

காதல் தோல்விக்கு விளம்பரமா தாடி!

பெற்றவள் பரிதவிக்க, பார்த்தவர்

பரிகசிக்க தேவையா தாடி!

Link to comment
Share on other sites

தேவையா தாடி

பாவையெனக்கு பிடிக்காத

கறுப்புத்தாடி ஏன் உனக்கு

முறுக்கிவிடும் மீசையும்

நறுக்கென்ற வீரமான பேச்சும்

வெண்மையாக பற்கள் காட்டி

பெண்மையை கவரும் சிரிப்பும்

இவையனைத்தும் உனதழகு

ஆகையால்.. :lol:

குறுந்தாடியை நீக்கிவிட்டு

குமரியிடம் வா காளையே

குதூகலமாக அணைப்பேன் :lol:

Link to comment
Share on other sites

அணைப்பேன் என்று

தான் நீயும்

சொல்கிறாய்

எவ்வளவு நேரமாய்

விளக்கு எரிகிறது...

முதலில் அதை அணை

பிறகு என்னை அணை

இருட்டில் உனக்கு நானும்

எனக்கு நீயும் துணை! (சேர்த்துப் படிக்காதீர்கள்... கடவுள் காக்க....)

Link to comment
Share on other sites

துணையென வந்து

அணைத்து எனை

கணையாழி தந்து

இணைத்து நெஞ்சோடு

பிணைத்தாய் அன்போடு

பிணைமான் என்னை

Link to comment
Share on other sites

என்னைப் படித்த முதல்

மாணவி...அவள்...

நான் ஒன்றும்..

சமஸ்கிரதம் அல்ல..

தெளிவான அரிச்சுவடிதான்..

ஆனால்..

இந்த அரிச்சுவடிக்குள்..

புதைந்து கிடந்த..

நூலகத்தை பார்த்தவள் அவள்...

படித்தவள் அவள்...

ரசித்தவள் அவள்..

சிரித்தவள் அவள்..

அவள்தான் என் தாய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் என்றாலே அன்பு

சேய் நான் இங்கே விரும்புவது

சாய்ந்தாட ஒரு மடி

வாய் விட்டு சொல்லமுடியா

துய்யும் துயரங்கள்

காயும் மனதினில் கரைந்தோட

அம்மா நீ வேண்டும்

Link to comment
Share on other sites

அம்மா நீ வேண்டும்..

உன் மடி வேண்டும்....

மரணமென்றாலும்....

உன் மடிமேல்..தலை

சாய்ந்தால் அது போதும்..

உதரம் மிதித்த கால்களை..

கையிலேந்தி முத்தமிட்டாய்..

கன்னம் கிள்ளிய நகக்குறிகளை

பெருமையாக சொல்லிக்கொண்டாய்..

பள்ளிசெல்ல மறுத்த நாளில்..

கூட வந்து காத்திருந்தாய்..

எனக்குப் பிடித்த உணவைத்தானே..

பார்த்து பார்த்து நீ சமைப்பாய்..

அப்பாவோடு சண்டை போட்டு..

என் ஆசைக்கெல்லாம்..

அங்கீகாரம் பெற்றுத் தந்தாய்..

அம்மா தெய்வம் கூட

ஒரு வரத்தோடு நிறுத்திக்கொள்ளும்..

கோடி வரந் தந்து

வாழ்வு தந்த என் அம்மா..

நீ எனக்காகவே வாழ்கிறாய்..

எனக்குள்ளும் வாழ்கிறாய்..

Link to comment
Share on other sites

வாழ்கிறாய் அம்மா

என்றென்றும்

வாழ்வாய் அம்மா

என்னுள்ளே சுவாசமாய்

என்னுள்ளே கவிதையாய்

எனக்கே எனக்காக

என்னுயிர் தாயே

அசையும் தெய்வம் அம்மா

நீ அசையும் தெய்வம்

Link to comment
Share on other sites

தெய்வம்

இருக்கிறதா.. இல்லலையா...

இருக்கின்றதென்றால்..

எங்கே.. எங்கே இருக்கிறது...

உருண்டு சுற்றிய வீதிகளும்..

காவடி எடுத்த தெருவிலும்..

பாற்செம்பு தூக்கிய பாதையிலும்..

அழுதழுது தொழுத தெருவிலும்..

கூட்டம் கூட்டமாய்க்.

கூடி இழுத்த தெருவிலும்..

சந்தன வாசமும்..

ஜவ்வாது வாசனையும்..

கற்பூர புகையில்...வெப்பத்தில்..

அரோகரா என்ற

பெருங்கோசத்தோடு..

கூவித்தொழுத கோபுர வாசலிலும்..

இதெல்லாம் வேண்டாம்..

கடவுளே..

மூலஸ்தானமூர்த்தியே..

உன்... மூலஸ்தானத்தில் கூட..

தர்மம் மீறி..

அப்பாவித் தமிழர்.. இரத்தம் சிந்துவதைக்..

கண்டு காணாமல்..

தெய்வமே...

நீ இருக்கிறாயா..இல்லையா..

Link to comment
Share on other sites

இருக்கிறாயா இல்லையா

கல்லாலே உன்னை

கட்டித் தொழுததாலே நீயும்

கல்லாக உன்மனதை ஆக்கிக்கொண்டாயோ

பொல்லாத இந்த மனிதர்

புழுத்துவிடும் உடம்பிற்காய்

காட்டிக்கொடுக்கின்றார் கழுத்தறுக்கின்றாரே என

கடவுளே நீயும் கண்மூடிக்கொண்டாயோ

இல்லை

காணாமல் போனாயோ

கண்காணிப்புக் குழுவினில் உன் பெயரும்

கடைசியில் வரும் என்று

காத்துத்தான் கிடைக்கின்றாயோ

Link to comment
Share on other sites

காத்துத்தான் கிடக்கின்றாயோ..

என் வீட்டுக் காவல்காரா...

நீ நன்றியுள்ளவனடா...

உன்னை மறந்து..

எம் உயிரை மட்டும்

நினைந்து ஓடி வந்தோம்...

நீ வீட்டையே சுற்றி சுற்றி

வருவதாக

அயலவர்கள் சொன்னார்கள்..

இப்போது நீ எங்கே..

எங்கே எப்படி சாப்பிடுகிறாய்..

என்ற என் கேள்ளவிகளே..

என்னை உறுத்துகிறது..

மன்னித்துக்கொள் டைசன்..

உன்னை நாயென்று

யாரும் சொன்னாலே..

கோபப்படும் நான்..

உன்னை மறந்துவிடவில்லை

என் நினைவில்

நீ இன்னமும்.. உண்டு..

டைசன்..ஓ என் டைசன்..

Link to comment
Share on other sites

ஓ என் டைசன்

என்ன கொடுமையடா

இது?

உனக்குக் கூட

ஆங்கிலத்தில் பெயரா?

பெயரில் என்ன

இருக்கு என்று சும்மா

குரைக்காதே...

உன்னை அடையாளப்படுத்துகின்ற

அவசிய முத்திரையடா அது...!

கொஞ்சம் யோசித்துப் பார்

நீ எப்படிக் குரைக்கின்றாய்?

"வள்... வள்..." என்று தானே

அது கூட தமிழ் என்று தானே

நான் சந்தோசப் பட்டேன்...

ஏனடா உன் எஜமானை

கோபித்துக் கொள்ளவில்லை...?

ஆனாலும் நீ கொடுத்து வைத்தவன்டா

ஈழத்தெருக்களில் தானே

உன் வாசம் இப்போதும்!

Link to comment
Share on other sites

இப்போதும்...

புரியவில்லையா...

மதியுகி..பார்த்தால்..

புரிந்திருக்குமே...

நான் சொன்னது

நடக்கின்றதென்பது...

இவன் இப்படித்தான்..

Link to comment
Share on other sites

இவன் இப்படித்தான்

கவன் இழுத்து

கல்லெறிந்து கண்ணாடி

உடைந்த பின்

காலில் விழுந்து

புலம்புவான்

இவன் இப்படித்தான்...!

சிவன் முன் போய் நின்று

நக்கீரப் பரம்பரையின்

கடைசி வாரிசு

நானென இறுமாந்து

சவால் விடுவான்

இவன் இப்படித் தான்...!

சரி விடு அண்ணா

சண்டை வேண்டாம்

பல வரி நான்

தமிழன்னையின் சொல்லழகு

காட்ட எழுதினால்

ஒரு வரி பிடித்து

தொங்குகின்றாயே...

நம் முன்னோரின் வீர

விளையாட்டு அது!

நாம் தான் பரிணாம வளர்ச்சியின்

உச்சியில் நின்று கொண்டு

ஆறறிவு ஆணவத்தில்

ஓரறிவு உயிரின்

குணம் கூட அறியோம்!

வீணே சீர் கெட்டுப்

போனோம்...

யாழில் வந்து

சடுகுடு, கிட்டிப் புள்,

தாச்சி மறித்தல் ஏதேனும்

விளையாடாமல்

சொலோடு விளையாடுகிறோம்

என்ன சின்னத் தனம் இது! (வீணான கற்பனைகளுக்கு இடம் கொடாதீர்... அடியேன் தன்னையே திட்டுவதாக அர்த்தம் கொள்க...)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.