Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

விடுதலை என்பது

விடுகதை இல்லை

வெற்றியும் எளிதில்லை

விடுவலை என்று

வெருட்டியே அழிப்போம்

வெருண்டோடும் சிங்களமே

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

சிங்களமே.. சிரி..

இது உனக்கு சிரிக்கின்ற

காலம் ..

ஒரு இனத்தை அழ வைத்து

அரக்கன் போல்

சிரிக்கிறாய்..

இல்லை

அரக்கனாகியே சிரிக்கிறாய்..

சிரி..

சிங்கமென்ற போர்வைக்குள்தான்..

இருக்கிறாய்..

நிஜப்புலிகள்.. வரும்

போர்ச் சங்கு ஊதும்..

அப்போது நீ எரிவாய்..

நாம் சிரிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்போம் சேர்ந்தே சிரிப்போம்

சிரித்து சிரித்தே கைகோர்த்து

சிங்காரமாய் நடந்திடுவோம்

சிரித்து சிரித்து கவலைகளை

சிட்டாய் பறக்க வைத்தே

சுதந்திரமான மனதை

சுகமாக்கி மகிழ்ந்திடுவோம்

வாய் விட்டு சிரித்தால்

நோய் விட்டுப் போகும் என்பதால்

வாய்விட்டு ஒருமுறை சிரிப்போம்

Link to comment
Share on other sites

"வாய்விட்டு ஒருமுறை சிரிப்போம்"

இதிலென்ன கஞ்சத் தனம்?

யார் வீட்டு சங்கதியேனும்

சந்திக்கு வந்தால்

சீர்கெட்டுப் போனதப்பா

அக்குடும்பமென

கொடுப்புக்குள் சிரிப்பதுவும்

வார்த்தையாலே வாள் சண்டை

பிடிப்பதுவும் இருக்கட்டும்...

"ஊர் ரெண்டுபட்டால்

கூத்தாடிக்கு கொண்டாட்டம்" எனும்

பழைய பழ மொழியை

எத்தனை நாள் காவடி தூக்குவாய்?

யோசித்துப் பார்...

கேலிப் பேச்சுக்கு மட்டும்

உதடுகளுக்கு சிரிக்கக்

கற்றுக் கொடுத்தாய்!

சிந்தனை மாற்றடா

சந்தனக் காற்று

மேனி தடுவுகையில்

காற்றின் கைகளை தட்டிவிட்டு

மெதுவாய் புன்னகை

அப்படியே நிலைக் கண்ணாடியில்

நின்றுன் மேனி ரசி

எத்தனை அழகடா

நீ

புன்னகைக்கும் போது என

உனை நீயே ரசி

கொஞ்ச நாளில் மறப்பாய்

கேலிச் சிரிப்பை

புன்னகைக்க மட்டுமே

உதடுகளுக்கு உத்தரவிடுவாய்

ஒன்று தெரி்ந்து கொள்

உன் உதடுகள் புன்னகைக்கும்

போதெல்லாம்

நீ அழகாவாய்...

உன்னைப் பார்ப்பவனும்

அழகாவான்...

ஆக

வீட்டுக்கு வரவேற்பறை போல

மனிதனுக்குப்

புன்னகை...

ஆகவே தயங்காது

இன்றே நீயும்

புன்னகை...!

Link to comment
Share on other sites

புன்னகை...

எந்நகை அணிந்தாலும்..

பெண்ணே..உனக்கு

அழகுந்தன்...புன்னகை

பூக்கள் வாடினாலும்..

என்றும் வாடாதது...

புன்னகை..

பள்ளியறையில்

சினங்கொண்ட கணவனின்

மனங்கொள்ளும்

மனையாளின் புன்னகை

கோடி இன்பங்கள்

கொட்டிக் கொடுத்தாலும்.

ஈடில்லா இன்பம்..

மழலையின் புன்னகை

நெஞ்சத்தே வஞ்சம்

நிலை கொண்ட

மாந்தர்க்கு மண்ணில்

வாராது..அழகுப் புன்னகை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகுப் புன்னகை சிந்திடும்

அழகு தேவதை அவள்

அழகு ஆபத்தாம்

ஆழம் அறியாமலே

அழகினை அணுஅணுவாய்

அள்ளி ரசித்திட முனைந்தேன்

Link to comment
Share on other sites

அழகினை அணுஅணுவாய்

அள்ளி ரசித்திட முனைந்தேன்

கிள்ளி எறிந்தாள்

தரையில் விழுந்த

மீனாய்

துள்ளி விழுந்தேன்

பள்ளி கொள்ளும் பாவனையில்

படுத்துறங்குவதாய்

பாசாங்கு செய்தாள்

கள்ளி - கன காலம்

எனை ஏமாற்றிய

பெருங் கள்ளி

முள்ளுள்ள கள்ளிச்

செடி பார்த்ததுண்டு

அழகுள்ள கள்ளிச் செடி

இங்கே கண்டேன்

பாசமுள்ள நெஞ்சத்திற்கு

மோசம் செய்யும்

இவள் வேண்டாமென

தள்ளியே நடக்கிறேன்

பழைய நினைவையும்

தள்ளியே நடக்கிறேன்!

Link to comment
Share on other sites

தள்ளியே நடக்கின்றேன்

பள்ளிகொள்ளும் உன்னை

மந்திகள் போல நான்

தொந்தரவு செய்யாமல்..

சாந்தமானவனே

நீ நன்றாக தூங்கு என்

காந்த விழிகள் உனை

ஈர்க்காதபடி கண்களை மூடி..

போர்வைக்குள் உன்

தேகத்தை மறைத்து

நிம்மதியாக தூங்கு

நிலவிவளின் சீண்டலின்றி..

Link to comment
Share on other sites

சீண்டலின்றி..

சிணுங்கலின்றி..

தூங்கலாமோ...பெண்ணே...

காதல் என்பது...

தேன்கூட்டைப்போல கண்ணே...

சத்தமின்றி..

முத்தமின்றி...

நித்திரையேன்.. பெண்ணே...

காதல் என்பது..

தீயைப்போல கண்ணே...

சிரித்திடாமல்..

உரித்திடாமல்...

துயிலுவதேன் பெண்ணே..

காதல் என்பது..

ஓடும் ஆற்றைப் போல கண்ணே...

உன் தூக்கமும்

தூக்கமில்லை..

என் ஸ்பரிசங்கள்..

பூக்கவில்லை..

உன் சுவாசத்தில்...

என் வாசனை..

என் யோசனை..

உன்னில் சோதனை..

பாசாங்குக்காரி நீ

என் பாதி நீ...

முடிச்சிட்ட கணவன்...

மூச்சுபட்டும்.. நீ..

தூக்கம் தொடரலாம்..

எதிர் கண்ணாடி சொன்னதே.. மெய்..

இதழ் களவாக பூத்த புன்னகை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை சிந்திடும் வேளைதனில்

புகுந்திடும் ஆனந்தம் மனசுக்குள்ளே

கோபம் கொள்ளும் வேளைதனில்

கொளுந்து விட்டேறியும் எண்ணங்கள்

அன்பு காட்டிடும் வேளையில்

பனியாய் உருகிடும் எந்தன்

உள்ளம் உன் மூச்சுக் காற்று பட்டு

மயங்கிடும் பொழுதுகளில்

எந்தனுயிர் இங்கில்லை

Link to comment
Share on other sites

என்னுயிர் இங்கில்லை

எழுந்து வாடி பெண்ணே - நீ

தான் என் உள்ளத்தில்

பூத்த முல்லை!

மன்னுயிர் காக்கும்

மன்னவன் போல்

உன்னுயிர் காப்பேன்

நான்...

புதிதாய் பயிர் வளர்க்கும்

விவசாயி போல்

கெதியாய் எனக்குள்

வளர்ந்த காதல் பயிர்

தினம் தினம் நான் பார்க்கிறேன்

வாடாமல் வதங்காமல்

நான் வளர்க்கிறேன்!

தனம் நீ மட்டும்

என்னோடு இருந்தால் போதும்

சினம் விடுகிறேன்

சிகரெட்டும் தொடேன்!

வரம் தாடி பெண்ணே

சிவன் பக்கம் பார்வதி போல் - என்

தனம் பக்கம் கவியிவனென

வரம் தாடி

இல்லையேல் இவன் வளர்க்கக்கூடும்

பெருந் தாடி!

உனக்குப் பிடித்தால்

பிரன்ஞ் தாடி! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சு தாடி! பிரெஞ்சு தாடி!

பிண்ணாக்குத் தின்னும் ஆட்டுக்கும் அதே தாடி!

கிடாயின் காலடியில் அதன் காதலிகள் கோடி!

இருந்தும் அதன் தாடையிலும் ஒரு தாடி.

பெண்கள் பின்னே பாய்ந்திடுவார் ஓடி!

அவளின்றேல் உடன் விட்டிடுவார் தாடி!

காதல் தோல்விக்கு விளம்பரமா தாடி!

பெற்றவள் பரிதவிக்க, பார்த்தவர்

பரிகசிக்க தேவையா தாடி!

Link to comment
Share on other sites

தேவையா தாடி

பாவையெனக்கு பிடிக்காத

கறுப்புத்தாடி ஏன் உனக்கு

முறுக்கிவிடும் மீசையும்

நறுக்கென்ற வீரமான பேச்சும்

வெண்மையாக பற்கள் காட்டி

பெண்மையை கவரும் சிரிப்பும்

இவையனைத்தும் உனதழகு

ஆகையால்.. :lol:

குறுந்தாடியை நீக்கிவிட்டு

குமரியிடம் வா காளையே

குதூகலமாக அணைப்பேன் :lol:

Link to comment
Share on other sites

அணைப்பேன் என்று

தான் நீயும்

சொல்கிறாய்

எவ்வளவு நேரமாய்

விளக்கு எரிகிறது...

முதலில் அதை அணை

பிறகு என்னை அணை

இருட்டில் உனக்கு நானும்

எனக்கு நீயும் துணை! (சேர்த்துப் படிக்காதீர்கள்... கடவுள் காக்க....)

Link to comment
Share on other sites

துணையென வந்து

அணைத்து எனை

கணையாழி தந்து

இணைத்து நெஞ்சோடு

பிணைத்தாய் அன்போடு

பிணைமான் என்னை

Link to comment
Share on other sites

என்னைப் படித்த முதல்

மாணவி...அவள்...

நான் ஒன்றும்..

சமஸ்கிரதம் அல்ல..

தெளிவான அரிச்சுவடிதான்..

ஆனால்..

இந்த அரிச்சுவடிக்குள்..

புதைந்து கிடந்த..

நூலகத்தை பார்த்தவள் அவள்...

படித்தவள் அவள்...

ரசித்தவள் அவள்..

சிரித்தவள் அவள்..

அவள்தான் என் தாய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் என்றாலே அன்பு

சேய் நான் இங்கே விரும்புவது

சாய்ந்தாட ஒரு மடி

வாய் விட்டு சொல்லமுடியா

துய்யும் துயரங்கள்

காயும் மனதினில் கரைந்தோட

அம்மா நீ வேண்டும்

Link to comment
Share on other sites

அம்மா நீ வேண்டும்..

உன் மடி வேண்டும்....

மரணமென்றாலும்....

உன் மடிமேல்..தலை

சாய்ந்தால் அது போதும்..

உதரம் மிதித்த கால்களை..

கையிலேந்தி முத்தமிட்டாய்..

கன்னம் கிள்ளிய நகக்குறிகளை

பெருமையாக சொல்லிக்கொண்டாய்..

பள்ளிசெல்ல மறுத்த நாளில்..

கூட வந்து காத்திருந்தாய்..

எனக்குப் பிடித்த உணவைத்தானே..

பார்த்து பார்த்து நீ சமைப்பாய்..

அப்பாவோடு சண்டை போட்டு..

என் ஆசைக்கெல்லாம்..

அங்கீகாரம் பெற்றுத் தந்தாய்..

அம்மா தெய்வம் கூட

ஒரு வரத்தோடு நிறுத்திக்கொள்ளும்..

கோடி வரந் தந்து

வாழ்வு தந்த என் அம்மா..

நீ எனக்காகவே வாழ்கிறாய்..

எனக்குள்ளும் வாழ்கிறாய்..

Link to comment
Share on other sites

வாழ்கிறாய் அம்மா

என்றென்றும்

வாழ்வாய் அம்மா

என்னுள்ளே சுவாசமாய்

என்னுள்ளே கவிதையாய்

எனக்கே எனக்காக

என்னுயிர் தாயே

அசையும் தெய்வம் அம்மா

நீ அசையும் தெய்வம்

Link to comment
Share on other sites

தெய்வம்

இருக்கிறதா.. இல்லலையா...

இருக்கின்றதென்றால்..

எங்கே.. எங்கே இருக்கிறது...

உருண்டு சுற்றிய வீதிகளும்..

காவடி எடுத்த தெருவிலும்..

பாற்செம்பு தூக்கிய பாதையிலும்..

அழுதழுது தொழுத தெருவிலும்..

கூட்டம் கூட்டமாய்க்.

கூடி இழுத்த தெருவிலும்..

சந்தன வாசமும்..

ஜவ்வாது வாசனையும்..

கற்பூர புகையில்...வெப்பத்தில்..

அரோகரா என்ற

பெருங்கோசத்தோடு..

கூவித்தொழுத கோபுர வாசலிலும்..

இதெல்லாம் வேண்டாம்..

கடவுளே..

மூலஸ்தானமூர்த்தியே..

உன்... மூலஸ்தானத்தில் கூட..

தர்மம் மீறி..

அப்பாவித் தமிழர்.. இரத்தம் சிந்துவதைக்..

கண்டு காணாமல்..

தெய்வமே...

நீ இருக்கிறாயா..இல்லையா..

Link to comment
Share on other sites

இருக்கிறாயா இல்லையா

கல்லாலே உன்னை

கட்டித் தொழுததாலே நீயும்

கல்லாக உன்மனதை ஆக்கிக்கொண்டாயோ

பொல்லாத இந்த மனிதர்

புழுத்துவிடும் உடம்பிற்காய்

காட்டிக்கொடுக்கின்றார் கழுத்தறுக்கின்றாரே என

கடவுளே நீயும் கண்மூடிக்கொண்டாயோ

இல்லை

காணாமல் போனாயோ

கண்காணிப்புக் குழுவினில் உன் பெயரும்

கடைசியில் வரும் என்று

காத்துத்தான் கிடைக்கின்றாயோ

Link to comment
Share on other sites

காத்துத்தான் கிடக்கின்றாயோ..

என் வீட்டுக் காவல்காரா...

நீ நன்றியுள்ளவனடா...

உன்னை மறந்து..

எம் உயிரை மட்டும்

நினைந்து ஓடி வந்தோம்...

நீ வீட்டையே சுற்றி சுற்றி

வருவதாக

அயலவர்கள் சொன்னார்கள்..

இப்போது நீ எங்கே..

எங்கே எப்படி சாப்பிடுகிறாய்..

என்ற என் கேள்ளவிகளே..

என்னை உறுத்துகிறது..

மன்னித்துக்கொள் டைசன்..

உன்னை நாயென்று

யாரும் சொன்னாலே..

கோபப்படும் நான்..

உன்னை மறந்துவிடவில்லை

என் நினைவில்

நீ இன்னமும்.. உண்டு..

டைசன்..ஓ என் டைசன்..

Link to comment
Share on other sites

ஓ என் டைசன்

என்ன கொடுமையடா

இது?

உனக்குக் கூட

ஆங்கிலத்தில் பெயரா?

பெயரில் என்ன

இருக்கு என்று சும்மா

குரைக்காதே...

உன்னை அடையாளப்படுத்துகின்ற

அவசிய முத்திரையடா அது...!

கொஞ்சம் யோசித்துப் பார்

நீ எப்படிக் குரைக்கின்றாய்?

"வள்... வள்..." என்று தானே

அது கூட தமிழ் என்று தானே

நான் சந்தோசப் பட்டேன்...

ஏனடா உன் எஜமானை

கோபித்துக் கொள்ளவில்லை...?

ஆனாலும் நீ கொடுத்து வைத்தவன்டா

ஈழத்தெருக்களில் தானே

உன் வாசம் இப்போதும்!

Link to comment
Share on other sites

இப்போதும்...

புரியவில்லையா...

மதியுகி..பார்த்தால்..

புரிந்திருக்குமே...

நான் சொன்னது

நடக்கின்றதென்பது...

இவன் இப்படித்தான்..

Link to comment
Share on other sites

இவன் இப்படித்தான்

கவன் இழுத்து

கல்லெறிந்து கண்ணாடி

உடைந்த பின்

காலில் விழுந்து

புலம்புவான்

இவன் இப்படித்தான்...!

சிவன் முன் போய் நின்று

நக்கீரப் பரம்பரையின்

கடைசி வாரிசு

நானென இறுமாந்து

சவால் விடுவான்

இவன் இப்படித் தான்...!

சரி விடு அண்ணா

சண்டை வேண்டாம்

பல வரி நான்

தமிழன்னையின் சொல்லழகு

காட்ட எழுதினால்

ஒரு வரி பிடித்து

தொங்குகின்றாயே...

நம் முன்னோரின் வீர

விளையாட்டு அது!

நாம் தான் பரிணாம வளர்ச்சியின்

உச்சியில் நின்று கொண்டு

ஆறறிவு ஆணவத்தில்

ஓரறிவு உயிரின்

குணம் கூட அறியோம்!

வீணே சீர் கெட்டுப்

போனோம்...

யாழில் வந்து

சடுகுடு, கிட்டிப் புள்,

தாச்சி மறித்தல் ஏதேனும்

விளையாடாமல்

சொலோடு விளையாடுகிறோம்

என்ன சின்னத் தனம் இது! (வீணான கற்பனைகளுக்கு இடம் கொடாதீர்... அடியேன் தன்னையே திட்டுவதாக அர்த்தம் கொள்க...)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.