Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

விடுதலை என்பது

விடுகதை இல்லை

வெற்றியும் எளிதில்லை

விடுவலை என்று

வெருட்டியே அழிப்போம்

வெருண்டோடும் சிங்களமே

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

சிங்களமே.. சிரி..

இது உனக்கு சிரிக்கின்ற

காலம் ..

ஒரு இனத்தை அழ வைத்து

அரக்கன் போல்

சிரிக்கிறாய்..

இல்லை

அரக்கனாகியே சிரிக்கிறாய்..

சிரி..

சிங்கமென்ற போர்வைக்குள்தான்..

இருக்கிறாய்..

நிஜப்புலிகள்.. வரும்

போர்ச் சங்கு ஊதும்..

அப்போது நீ எரிவாய்..

நாம் சிரிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்போம் சேர்ந்தே சிரிப்போம்

சிரித்து சிரித்தே கைகோர்த்து

சிங்காரமாய் நடந்திடுவோம்

சிரித்து சிரித்து கவலைகளை

சிட்டாய் பறக்க வைத்தே

சுதந்திரமான மனதை

சுகமாக்கி மகிழ்ந்திடுவோம்

வாய் விட்டு சிரித்தால்

நோய் விட்டுப் போகும் என்பதால்

வாய்விட்டு ஒருமுறை சிரிப்போம்

Link to comment
Share on other sites

"வாய்விட்டு ஒருமுறை சிரிப்போம்"

இதிலென்ன கஞ்சத் தனம்?

யார் வீட்டு சங்கதியேனும்

சந்திக்கு வந்தால்

சீர்கெட்டுப் போனதப்பா

அக்குடும்பமென

கொடுப்புக்குள் சிரிப்பதுவும்

வார்த்தையாலே வாள் சண்டை

பிடிப்பதுவும் இருக்கட்டும்...

"ஊர் ரெண்டுபட்டால்

கூத்தாடிக்கு கொண்டாட்டம்" எனும்

பழைய பழ மொழியை

எத்தனை நாள் காவடி தூக்குவாய்?

யோசித்துப் பார்...

கேலிப் பேச்சுக்கு மட்டும்

உதடுகளுக்கு சிரிக்கக்

கற்றுக் கொடுத்தாய்!

சிந்தனை மாற்றடா

சந்தனக் காற்று

மேனி தடுவுகையில்

காற்றின் கைகளை தட்டிவிட்டு

மெதுவாய் புன்னகை

அப்படியே நிலைக் கண்ணாடியில்

நின்றுன் மேனி ரசி

எத்தனை அழகடா

நீ

புன்னகைக்கும் போது என

உனை நீயே ரசி

கொஞ்ச நாளில் மறப்பாய்

கேலிச் சிரிப்பை

புன்னகைக்க மட்டுமே

உதடுகளுக்கு உத்தரவிடுவாய்

ஒன்று தெரி்ந்து கொள்

உன் உதடுகள் புன்னகைக்கும்

போதெல்லாம்

நீ அழகாவாய்...

உன்னைப் பார்ப்பவனும்

அழகாவான்...

ஆக

வீட்டுக்கு வரவேற்பறை போல

மனிதனுக்குப்

புன்னகை...

ஆகவே தயங்காது

இன்றே நீயும்

புன்னகை...!

Link to comment
Share on other sites

புன்னகை...

எந்நகை அணிந்தாலும்..

பெண்ணே..உனக்கு

அழகுந்தன்...புன்னகை

பூக்கள் வாடினாலும்..

என்றும் வாடாதது...

புன்னகை..

பள்ளியறையில்

சினங்கொண்ட கணவனின்

மனங்கொள்ளும்

மனையாளின் புன்னகை

கோடி இன்பங்கள்

கொட்டிக் கொடுத்தாலும்.

ஈடில்லா இன்பம்..

மழலையின் புன்னகை

நெஞ்சத்தே வஞ்சம்

நிலை கொண்ட

மாந்தர்க்கு மண்ணில்

வாராது..அழகுப் புன்னகை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகுப் புன்னகை சிந்திடும்

அழகு தேவதை அவள்

அழகு ஆபத்தாம்

ஆழம் அறியாமலே

அழகினை அணுஅணுவாய்

அள்ளி ரசித்திட முனைந்தேன்

Link to comment
Share on other sites

அழகினை அணுஅணுவாய்

அள்ளி ரசித்திட முனைந்தேன்

கிள்ளி எறிந்தாள்

தரையில் விழுந்த

மீனாய்

துள்ளி விழுந்தேன்

பள்ளி கொள்ளும் பாவனையில்

படுத்துறங்குவதாய்

பாசாங்கு செய்தாள்

கள்ளி - கன காலம்

எனை ஏமாற்றிய

பெருங் கள்ளி

முள்ளுள்ள கள்ளிச்

செடி பார்த்ததுண்டு

அழகுள்ள கள்ளிச் செடி

இங்கே கண்டேன்

பாசமுள்ள நெஞ்சத்திற்கு

மோசம் செய்யும்

இவள் வேண்டாமென

தள்ளியே நடக்கிறேன்

பழைய நினைவையும்

தள்ளியே நடக்கிறேன்!

Link to comment
Share on other sites

தள்ளியே நடக்கின்றேன்

பள்ளிகொள்ளும் உன்னை

மந்திகள் போல நான்

தொந்தரவு செய்யாமல்..

சாந்தமானவனே

நீ நன்றாக தூங்கு என்

காந்த விழிகள் உனை

ஈர்க்காதபடி கண்களை மூடி..

போர்வைக்குள் உன்

தேகத்தை மறைத்து

நிம்மதியாக தூங்கு

நிலவிவளின் சீண்டலின்றி..

Link to comment
Share on other sites

சீண்டலின்றி..

சிணுங்கலின்றி..

தூங்கலாமோ...பெண்ணே...

காதல் என்பது...

தேன்கூட்டைப்போல கண்ணே...

சத்தமின்றி..

முத்தமின்றி...

நித்திரையேன்.. பெண்ணே...

காதல் என்பது..

தீயைப்போல கண்ணே...

சிரித்திடாமல்..

உரித்திடாமல்...

துயிலுவதேன் பெண்ணே..

காதல் என்பது..

ஓடும் ஆற்றைப் போல கண்ணே...

உன் தூக்கமும்

தூக்கமில்லை..

என் ஸ்பரிசங்கள்..

பூக்கவில்லை..

உன் சுவாசத்தில்...

என் வாசனை..

என் யோசனை..

உன்னில் சோதனை..

பாசாங்குக்காரி நீ

என் பாதி நீ...

முடிச்சிட்ட கணவன்...

மூச்சுபட்டும்.. நீ..

தூக்கம் தொடரலாம்..

எதிர் கண்ணாடி சொன்னதே.. மெய்..

இதழ் களவாக பூத்த புன்னகை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை சிந்திடும் வேளைதனில்

புகுந்திடும் ஆனந்தம் மனசுக்குள்ளே

கோபம் கொள்ளும் வேளைதனில்

கொளுந்து விட்டேறியும் எண்ணங்கள்

அன்பு காட்டிடும் வேளையில்

பனியாய் உருகிடும் எந்தன்

உள்ளம் உன் மூச்சுக் காற்று பட்டு

மயங்கிடும் பொழுதுகளில்

எந்தனுயிர் இங்கில்லை

Link to comment
Share on other sites

என்னுயிர் இங்கில்லை

எழுந்து வாடி பெண்ணே - நீ

தான் என் உள்ளத்தில்

பூத்த முல்லை!

மன்னுயிர் காக்கும்

மன்னவன் போல்

உன்னுயிர் காப்பேன்

நான்...

புதிதாய் பயிர் வளர்க்கும்

விவசாயி போல்

கெதியாய் எனக்குள்

வளர்ந்த காதல் பயிர்

தினம் தினம் நான் பார்க்கிறேன்

வாடாமல் வதங்காமல்

நான் வளர்க்கிறேன்!

தனம் நீ மட்டும்

என்னோடு இருந்தால் போதும்

சினம் விடுகிறேன்

சிகரெட்டும் தொடேன்!

வரம் தாடி பெண்ணே

சிவன் பக்கம் பார்வதி போல் - என்

தனம் பக்கம் கவியிவனென

வரம் தாடி

இல்லையேல் இவன் வளர்க்கக்கூடும்

பெருந் தாடி!

உனக்குப் பிடித்தால்

பிரன்ஞ் தாடி! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சு தாடி! பிரெஞ்சு தாடி!

பிண்ணாக்குத் தின்னும் ஆட்டுக்கும் அதே தாடி!

கிடாயின் காலடியில் அதன் காதலிகள் கோடி!

இருந்தும் அதன் தாடையிலும் ஒரு தாடி.

பெண்கள் பின்னே பாய்ந்திடுவார் ஓடி!

அவளின்றேல் உடன் விட்டிடுவார் தாடி!

காதல் தோல்விக்கு விளம்பரமா தாடி!

பெற்றவள் பரிதவிக்க, பார்த்தவர்

பரிகசிக்க தேவையா தாடி!

Link to comment
Share on other sites

தேவையா தாடி

பாவையெனக்கு பிடிக்காத

கறுப்புத்தாடி ஏன் உனக்கு

முறுக்கிவிடும் மீசையும்

நறுக்கென்ற வீரமான பேச்சும்

வெண்மையாக பற்கள் காட்டி

பெண்மையை கவரும் சிரிப்பும்

இவையனைத்தும் உனதழகு

ஆகையால்.. :lol:

குறுந்தாடியை நீக்கிவிட்டு

குமரியிடம் வா காளையே

குதூகலமாக அணைப்பேன் :lol:

Link to comment
Share on other sites

அணைப்பேன் என்று

தான் நீயும்

சொல்கிறாய்

எவ்வளவு நேரமாய்

விளக்கு எரிகிறது...

முதலில் அதை அணை

பிறகு என்னை அணை

இருட்டில் உனக்கு நானும்

எனக்கு நீயும் துணை! (சேர்த்துப் படிக்காதீர்கள்... கடவுள் காக்க....)

Link to comment
Share on other sites

துணையென வந்து

அணைத்து எனை

கணையாழி தந்து

இணைத்து நெஞ்சோடு

பிணைத்தாய் அன்போடு

பிணைமான் என்னை

Link to comment
Share on other sites

என்னைப் படித்த முதல்

மாணவி...அவள்...

நான் ஒன்றும்..

சமஸ்கிரதம் அல்ல..

தெளிவான அரிச்சுவடிதான்..

ஆனால்..

இந்த அரிச்சுவடிக்குள்..

புதைந்து கிடந்த..

நூலகத்தை பார்த்தவள் அவள்...

படித்தவள் அவள்...

ரசித்தவள் அவள்..

சிரித்தவள் அவள்..

அவள்தான் என் தாய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் என்றாலே அன்பு

சேய் நான் இங்கே விரும்புவது

சாய்ந்தாட ஒரு மடி

வாய் விட்டு சொல்லமுடியா

துய்யும் துயரங்கள்

காயும் மனதினில் கரைந்தோட

அம்மா நீ வேண்டும்

Link to comment
Share on other sites

அம்மா நீ வேண்டும்..

உன் மடி வேண்டும்....

மரணமென்றாலும்....

உன் மடிமேல்..தலை

சாய்ந்தால் அது போதும்..

உதரம் மிதித்த கால்களை..

கையிலேந்தி முத்தமிட்டாய்..

கன்னம் கிள்ளிய நகக்குறிகளை

பெருமையாக சொல்லிக்கொண்டாய்..

பள்ளிசெல்ல மறுத்த நாளில்..

கூட வந்து காத்திருந்தாய்..

எனக்குப் பிடித்த உணவைத்தானே..

பார்த்து பார்த்து நீ சமைப்பாய்..

அப்பாவோடு சண்டை போட்டு..

என் ஆசைக்கெல்லாம்..

அங்கீகாரம் பெற்றுத் தந்தாய்..

அம்மா தெய்வம் கூட

ஒரு வரத்தோடு நிறுத்திக்கொள்ளும்..

கோடி வரந் தந்து

வாழ்வு தந்த என் அம்மா..

நீ எனக்காகவே வாழ்கிறாய்..

எனக்குள்ளும் வாழ்கிறாய்..

Link to comment
Share on other sites

வாழ்கிறாய் அம்மா

என்றென்றும்

வாழ்வாய் அம்மா

என்னுள்ளே சுவாசமாய்

என்னுள்ளே கவிதையாய்

எனக்கே எனக்காக

என்னுயிர் தாயே

அசையும் தெய்வம் அம்மா

நீ அசையும் தெய்வம்

Link to comment
Share on other sites

தெய்வம்

இருக்கிறதா.. இல்லலையா...

இருக்கின்றதென்றால்..

எங்கே.. எங்கே இருக்கிறது...

உருண்டு சுற்றிய வீதிகளும்..

காவடி எடுத்த தெருவிலும்..

பாற்செம்பு தூக்கிய பாதையிலும்..

அழுதழுது தொழுத தெருவிலும்..

கூட்டம் கூட்டமாய்க்.

கூடி இழுத்த தெருவிலும்..

சந்தன வாசமும்..

ஜவ்வாது வாசனையும்..

கற்பூர புகையில்...வெப்பத்தில்..

அரோகரா என்ற

பெருங்கோசத்தோடு..

கூவித்தொழுத கோபுர வாசலிலும்..

இதெல்லாம் வேண்டாம்..

கடவுளே..

மூலஸ்தானமூர்த்தியே..

உன்... மூலஸ்தானத்தில் கூட..

தர்மம் மீறி..

அப்பாவித் தமிழர்.. இரத்தம் சிந்துவதைக்..

கண்டு காணாமல்..

தெய்வமே...

நீ இருக்கிறாயா..இல்லையா..

Link to comment
Share on other sites

இருக்கிறாயா இல்லையா

கல்லாலே உன்னை

கட்டித் தொழுததாலே நீயும்

கல்லாக உன்மனதை ஆக்கிக்கொண்டாயோ

பொல்லாத இந்த மனிதர்

புழுத்துவிடும் உடம்பிற்காய்

காட்டிக்கொடுக்கின்றார் கழுத்தறுக்கின்றாரே என

கடவுளே நீயும் கண்மூடிக்கொண்டாயோ

இல்லை

காணாமல் போனாயோ

கண்காணிப்புக் குழுவினில் உன் பெயரும்

கடைசியில் வரும் என்று

காத்துத்தான் கிடைக்கின்றாயோ

Link to comment
Share on other sites

காத்துத்தான் கிடக்கின்றாயோ..

என் வீட்டுக் காவல்காரா...

நீ நன்றியுள்ளவனடா...

உன்னை மறந்து..

எம் உயிரை மட்டும்

நினைந்து ஓடி வந்தோம்...

நீ வீட்டையே சுற்றி சுற்றி

வருவதாக

அயலவர்கள் சொன்னார்கள்..

இப்போது நீ எங்கே..

எங்கே எப்படி சாப்பிடுகிறாய்..

என்ற என் கேள்ளவிகளே..

என்னை உறுத்துகிறது..

மன்னித்துக்கொள் டைசன்..

உன்னை நாயென்று

யாரும் சொன்னாலே..

கோபப்படும் நான்..

உன்னை மறந்துவிடவில்லை

என் நினைவில்

நீ இன்னமும்.. உண்டு..

டைசன்..ஓ என் டைசன்..

Link to comment
Share on other sites

ஓ என் டைசன்

என்ன கொடுமையடா

இது?

உனக்குக் கூட

ஆங்கிலத்தில் பெயரா?

பெயரில் என்ன

இருக்கு என்று சும்மா

குரைக்காதே...

உன்னை அடையாளப்படுத்துகின்ற

அவசிய முத்திரையடா அது...!

கொஞ்சம் யோசித்துப் பார்

நீ எப்படிக் குரைக்கின்றாய்?

"வள்... வள்..." என்று தானே

அது கூட தமிழ் என்று தானே

நான் சந்தோசப் பட்டேன்...

ஏனடா உன் எஜமானை

கோபித்துக் கொள்ளவில்லை...?

ஆனாலும் நீ கொடுத்து வைத்தவன்டா

ஈழத்தெருக்களில் தானே

உன் வாசம் இப்போதும்!

Link to comment
Share on other sites

இப்போதும்...

புரியவில்லையா...

மதியுகி..பார்த்தால்..

புரிந்திருக்குமே...

நான் சொன்னது

நடக்கின்றதென்பது...

இவன் இப்படித்தான்..

Link to comment
Share on other sites

இவன் இப்படித்தான்

கவன் இழுத்து

கல்லெறிந்து கண்ணாடி

உடைந்த பின்

காலில் விழுந்து

புலம்புவான்

இவன் இப்படித்தான்...!

சிவன் முன் போய் நின்று

நக்கீரப் பரம்பரையின்

கடைசி வாரிசு

நானென இறுமாந்து

சவால் விடுவான்

இவன் இப்படித் தான்...!

சரி விடு அண்ணா

சண்டை வேண்டாம்

பல வரி நான்

தமிழன்னையின் சொல்லழகு

காட்ட எழுதினால்

ஒரு வரி பிடித்து

தொங்குகின்றாயே...

நம் முன்னோரின் வீர

விளையாட்டு அது!

நாம் தான் பரிணாம வளர்ச்சியின்

உச்சியில் நின்று கொண்டு

ஆறறிவு ஆணவத்தில்

ஓரறிவு உயிரின்

குணம் கூட அறியோம்!

வீணே சீர் கெட்டுப்

போனோம்...

யாழில் வந்து

சடுகுடு, கிட்டிப் புள்,

தாச்சி மறித்தல் ஏதேனும்

விளையாடாமல்

சொலோடு விளையாடுகிறோம்

என்ன சின்னத் தனம் இது! (வீணான கற்பனைகளுக்கு இடம் கொடாதீர்... அடியேன் தன்னையே திட்டுவதாக அர்த்தம் கொள்க...)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.