Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

உன்முகத்திலே முத்தாடும்

மூக்குத்தி போல்..

உன் நகத்திலே ஜொலிக்கின்ற

நட்சத்திரம் போல்

உன் பார்வையில் தெரிகின்ற

பால் நிலா போல்

உன் கூந்தலில் ஆடிடும்

கொடி மல்லி போல்

உன் இதழ்களில் ஊறுகின்ற

இன்பத்தேன் போல்

உன்சங்குக் கழுத்தாடும்

சத்தமிடும் மணிமாலைகள் போல்

வாழைமடல்க்கால்கள் போல்

வளைவுமிக்க இடையைப்போல்

குவிந்த அல்லி மொட்டுகள் போல்

கூப்பிடுகின்ற தேகக்கட்டுகள் போல்

பூம்பாதம் போல்..

புன்னகைவீச்சுப்போல்

பூங்குயில்ப்பேச்சுப்போல்...

அழகே..எல்லாம் ஒன்று

சேர்ந்த உன்னைக் கண்டு

பேச்சிழந்தேன்..

மூர்ச்சையானேனே..

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மூர்ச்சையானேனே உன்

மூச்சுக் காற்று பட்டு

மூர்ச்சையானது நான் மட்டுமா

கூந்தலில் சூடிய

வாசமிகு மலர்களுமே

வாசம் இழந்து போனதே

நேசமாய் நீயறிந்தால்

நெகிழ்ந்து போவாயா இன்றேல்

நெருப்பாய் சினந்து நிறம் மாறுவாயா

யென்பதை சொல்லிவிடு ஒருமுறை

Link to comment
Share on other sites

ஒருமுறை..ஒரேமுறை...

வரைமுறை மீறி..

அறைக்குள் உனை

அறைந்துவிட்டேன்...

மறைவாக நடந்ததற்கே..

குறைபேசிக்கூவி...எனைக்

கறை செய்த பாவியே...

இறைவனே..உனை நான்

இரைந்து கேட்கிறேன்..என்னில்

இரக்கங்காட்டி..இவளை

விரைந்து விரட்டிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரட்டிவிடும் இறைவா விரட்டிவடும்!

நெஞ்சில் ஈரம் சிறிதுமில்லா வீனரை!

கொஞ்சும் குழவிகளை கொடூரமாய் கொல்வோரை!

கெஞ்சும் குமரிகளை குதறும் பேய்களை!

கட்டுடல் வாலிபரை வெட்டிடும் பாதகரை!

தள்ளாடும் முதியோரை பொல்லாலடித்திடும் புலையரை!

பரம்பரை சொத்துகளை பம்பரால் விழுங்கும் பிசாசுகளை!

அரைமுழத்துக் கொரு ஆமி நட்டு சுதந்திரம்

அறுபதில் கொக்கரிக்கும் அரக்கரை!!!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அரக்கரைக் கண்டு அஞ்சிய என்னில்

அக்கறை கொண்டு அன்பாக பேசி

என் மனதுள் நுழைந்தவனே

உனக்கு என்னுடைய காதலர்தின

வாழ்த்துக்கள் கூறுகிறேன் காதலோடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலோடு உன்னை சேர்ந்தேன் கனவாக

போகாமல் தினம் உன்னை

கருத்தினில்வைத்தேன் காவியமானவனே

கனவும் இல்லை அதில் பிரிவும் இல்லை

என்னுடன் நீ எப்போதுமே இருப்பது நிஜம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பது நிஜம், இன்று கண்டது சுபம்!

இன்னல் பல கண்ட கொசொவா இன்று

இருள் கெட்டு புத்தொளி பெற்றதே!

அடிமை விலங்கறுந்து வீழ்ந்ததே!

சுதந்திரப் பறவைகள் சிறகு விரிந்ததே!

போரெனுமரக்கன் தோற்றோடிடவே!

அன்புத் தேவதைகள் மண்ணில் நிறைந்தனவே!

மணமுள்ள மலர்ச் சென்டுகள் தொடுத்து

மக்கள் கரத்தில் வைத்து வாழ்த்தினரே!!! <_<:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்தினரே மணமக்களை

புகுந்துவிட்ட இல்லறம்

நல்லறமாய் சிறக்க

ஒலித்த வாழ்த்துகள்

கெட்டிமேள சத்தத்துடன்

சங்கமம்

Link to comment
Share on other sites

சங்கமம் ஆனேன் உனக்குள் நான்

சந்தேகமின்றி எனை ஆதரி

மங்களாம் உண்டாகும் எமக்குள்

சிந்தனையின்றி எனை அணை

பங்கயக் கழுத்தில் முத்தமிடு

சந்திரன் முகிலில் சிக்கும்போது

Link to comment
Share on other sites

சிக்கும்போதும் சினக்கவில்லை..

சிந்தைக்குளம் அமிழ்ந்தபோதும்..

தெரியவில்லை-இதயத்தாமரை

மொட்டவிழ்ந்த கதை புரியவில்லை..

காதல் என்ற காட்டாறு..என்னை

அடித்துப்போன கதை புதிது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிது புதிதாய் எண்ணங்கள்

சதிராடும் மனதினில்

பதிவிரதைகளாய் பாரினில்

எதிர்த்துப்போராட வழியில்லா

கதி கலங்கிய வாழ்வினில்

விதியே என்றே விளம்பும்

பொறிக்குள் அகப்பட்டுவிட்ட

கொடுமை

Link to comment
Share on other sites

கொடுமை என்ற கோடாரி

விதி கையில் இருந்தால்..

மதி என்ற வாள் எடுத்து..

மகளாட மாட்டாயோ...

எதிர்நீச்சலில்லாமல்

எது வாழ்வு கண்ணே...

இயலாமை..முயலாமை..

அறியாமை பெண்ணே..

அவனி உனக்கே..நீ

கவனி மகளே..

வாழ்வும் தாழ்வும்

நாம் வைத்த புள்ளி

சமைக்கும் கோலமம்மா..

Link to comment
Share on other sites

கோலம் அம்மா

போட்டது - ஒரு

புள்ளியில் தொடங்கி

பல புள்ளிகள் சேர்த்து

அழகாக உருவானது!

வாழ்க்கையின் வடிவான

தத்துவம் கோலத்திற்குள்

தன் கோலம் மறைத்து

நிற்பது புரியாது

எத்தனை முறை

கடந்து போயிருப்போம்

கோலத்தை!

ஒரு புள்ளியில் கோலம்

ஒரு துளியில் மனிதன்!

கோலத்தை கூட்டி

அள்ளினால் ஒரு

பிடி...

உடலை எரியூட்டி

அள்ளினால்

ஒரு பிடி சாம்பல்!

அதிகாலையில்

மீண்டும் நேற்றுப்

போட்ட இடத்தில்

மறுபடிபடியும்

புதுக் கோலம்!

ம்...

வாழ்க்கை

இப்படித் தான்!

எம் கோலத்தை

நாமே போட முடிகின்ற

சலுகை மட்டும்

நம் கையில்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்கையில் இருக்கிறது

நம் தலை எழுத்து அதை

சரியாய் செய்வது நம்திறமை

நடைமுறையில் நடப்பதை சிந்தித்தால்

நடப்பது எல்லாம் நலமே

நடக்கும் காலம் நல்லதாக அமைய

நம் மனதும் செயலும் நன்றா இருந்தால்

நல்லவைகள் எல்லாம்

நம் வாசல் தேடிவந்து நிற்கும்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நிற்கும் மனதில் எல்லாம் நிழலான முகம்

நிற்கும் போதில் எல்லாம் நிலையாமை தத்துவம்

நிற்கும் காலங்கள் என்று எதுவும் இல்லை வயதைப்போல்

நிற்காதது அன்பு மட்டும் தான் அது பிரதி பலன் பார்ப்பது இல்லை

Link to comment
Share on other sites

இல்லை..அன்பே...

அன்பாலாகாதது எதுவுமில்லை...

இல்லை அடியே...

ஆணவத்தால் நன்மை

ஏதுமில்லை..ஏதுமில்லை!!!

Link to comment
Share on other sites

ஏதுமில்லை... ஏதுமில்லை

ஊருமில்லை உறவுமில்லை

உனக்கு நீயே சொந்தமில்லை

உலவிடும் உயிர் பறந்துபோனால்

தேடிவரப் பருந்துமில்லை இங்கே

போடா போ...

தமிழன் நீ என்பதால்

கோடி சாமி உனக்குண்டு

தேடி ஒரு சாமி வரவில்லை

உதவிட இன்று!

Link to comment
Share on other sites

இன்று உதவிட

அன்று உனைப்போல

இங்கில்லை யாரும்

எங்கிருக்கின்றாய் நீ

எப்போது வருவாய் நீ

கண்கள் அழுதுகொண்டே

உன்னைத் தேடுகின்றன

சொல்லு நீ எப்போ வருவாய்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருவாய் வானமதில் வெண் நிலவாய்

வசந்தமாய் நீயே எந்தன் வெண்ணிலாவாய் ஆனாய்

வட்ட வடிவமான உந்தன் வெள்ளை அழகுவதனத்துக்கு

வளம் சேர்ப்பது அந்த கறுப்பாயிருக்கும் உந்தன் மச்சம்

Link to comment
Share on other sites

மச்சம்..

எனக்கில்லையே...

இருந்திருந்தால்..

மச்சானாய் பிறந்திரேனா

உனக்கு?..

அழகு ஒளிர..

அறிவு மிளிர...

ஆயிரத்தில் ஒருத்தியாய்

நீயிருந்தும்..

தொலைவிலே இருக்கும் நான்..

மச்சக்காரனல்லடி..ஒரு

பிச்சைக்காரன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைகாரன் கண்ணில் ஜம்பது

காசிட்டவன் எல்லாம் தர்மவான்

ஆயிரம் கோடியில் புரள்பவனுக்கும்

அன்பில்லா உறவு கிடைத்தால்

அவனும் பிச்சைகாரன் அன்பு பிச்சைகாரன்

அவன் மனது சுயநலம் இல்லா மனதை தேடும்

சாதகபறவை போல் அன்பை மட்டும்

நினைத்தபடியே வாழ்க்கை பயணங்கள்

Link to comment
Share on other sites

பயணங்கள் முடிவதில்லையா

யார் சொன்னது...

தவழும் பயணம் நடக்கமுடியும்..

நடக்கும் பயணம்..படுக்கையில் முடியும்..

படுக்கைப்பயணம் பாடையில் முடியும்..

பாடைகொண்டான்.. சந்ததியிழந்தால்..

சரித்திரம் முடியும்..பயணங்கள்..

யாவும் என்றோ முடியும்!!

Link to comment
Share on other sites

யாவும் என்றோ முடியும்

ஆகும் அத்தனையும்

அழியும் என்ற விதியின் படி

யாவும் என்றோ முடியும்!

நீயும் நானும்

நொடியில்

மயான மடியில்!

சாவின் மடியில்

சண்டியனும் போவான்

நொடியில்!

தாயின் பாலில்

உடம்பில் ஓடும்

இரத்தம்

நோயில் விழுந்து

பாயில் படுத்த பின்னர்

ஓடி அடங்கும்!

வாழும் நாளில்

சூழும் சோகம்

வாடி வதங்கிச்

சோரும் நெஞ்சம்!

ஆழும் கடவுள்

அருள் ஒன்று தரவேண்டும்

நாளும் பொழுதும்

சோகச் சுவடறுத்து

சிந்தனைச் சுடர் வளர்த்து

தூய அன்பில்

உயிரத்தனையும் மூழ்கி

தேட வேண்டும்

பெரும் வாழ்வு தரும் ஜோதி!

Link to comment
Share on other sites

ஜோதி தெரிந்தது..

அவள் கண்கள் மோதி...

நினைவு பாதி

ஆசை பாதி...

வேறென்ன மீதி...

மோகம் அடித்துப்போகும் நதி

அவள் ஒரு ரதி

அவள் விழிகளின் சதி..

முடியுமொ ஆண் விதி...

இறைவா நீயே கதி..

ஆண்கள் நிர்க்கதி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்க்கதியென புலம்பும் மதி!

நித்தமும் நிர்மலன் தாளே கதி!

நிலையற்ற வாழ்வில் கானும் சுதி!

நீர்க்குமிழியாய் மாறும் விதி!

நினைவில் கனவில் செய்யும் சதி!

நீங்கினால் சிந்தையில் நிறையும் பசுபதி!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.