Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சம்மதமா என் வாழ்க்கையில் ஒளியாய் நீ வர

சம்மதமா உன் வாசனை என்னருகிலே வேண்டும்

சம்மதமா எப்போதும் உன்நிழலில் நான் வாழ

சம்மதமா உன் அமுதவாயில் என்னை எற்றுகொண்டேன் என்று சொல்ல

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

ஏற்றுக் கொண்டேன் என்று

சொல்லச் சொல்லியதா

என் பெண்ணே உன் மனசு

இப்படியே..

அறியாத அறியாமை

உன்னை அறியாமல்

படுகுழிக்குள் தள்ளிச் சிரிக்க

நீ மட்டும் பலர் முன்

அடைமொழி குற்றவாளியாய்

தோன்றி;த் தவித்து

இழந்ததை இருளுக்குள்

தேடித் தேடி

ஏமாந்து ஏமாந்து

உன் மனசால்

உலகில் ஏமாழியாகி

விட்டாயே என் பெண்னே...

ஒரே முறை

சிந்தித்து எழுந்து

உன் சிந்தனையால்

உனைச் செதுக்கி

துயரத்தை எறிந்து

நிமிர்ந்து நில்லடி

என் பெண்ணே

நிலையான அழகை

இவ்வுலகில் படைத்திட..

பிடித்தால் படிக்கவும். படித்தால் சிந்திக்கவும். சிந்தித்;தால் வாழ்வு சிறக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படைத்திட முடியும் எதுவும் உன்னால்

முடியும் எனும் துணிவு கொண்டால்

துரத்திட வேண்டும் பகையை உன்

அறிவொடு உடலின் பலத்தால்

நடத்திட வேண்டும் எல்லாம்

யாவும் உந்தன் கைக்குள்

அகப்பட வேண்டும் அன்பின்

அன்பாய் நிற்கும் அணைப்பில்

விடுத்திட வேண்டும் துரோகம்

ஒன்றையே செய்யும் உறவை

எடுத்திடு இன்றே சபதம்

உன்னால் எல்லாம் முடியும்

Link to comment
Share on other sites

முடியும்...

முயன்றால்...

உன்னால்

என்னால்..எல்லாரோலும்...

வெல்லமுடியும்...

வெற்றிக்கு

உழைப்பு

வேண்டும்...

உழைப்பில் உண்மை வேண்டும்..

உண்மையில் வன்மை வேண்டும்

வன்மையில் நியாயம் வேண்டும்..

தூக்கம் தவிர்க்கவேண்டும்

துயரம் மறக்க வேண்டும்..

புயலாய்ச்சுழலவேண்டும்..

பூவாய்ச் சிரிக்கவேண்டும்..என்றும்

புதியவனாய் இருக்கவேண்டும்..

இரு..உன்னால் எல்லாம் முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதியவனாய் இருக்கவேண்டும்

தொடங்கிய தீர்மானம் செய்து முடிப்பதில்

நாலு பேருக்கு மத்தியில் நல்லவனாய்

நீதி நேர்மை காப்பதில் வீரனாய்

சமூக சேவை முனோடியாய்

சாதனை செய்வதில் வீரனாய்

சொன்ன சொல் தவறாமை

செயல்களில் திறமை வழுவாமை

அன்பு பண்பு ஆளுமை

தொட்டில் பழக்கம் தொடர்ந்துவர

கட்டுக்கோப்பாய் உடல் வலிமை

கருத்தாய் கடமை கண்ணியமாய் .....(கண்ணியமாய் தொடர்க )

Link to comment
Share on other sites

கண்ணியமாய்

தொடர்வேன் நான்

விண்மினியாய் நீ

இருந்தால்...

நிலாவாகிச்

சிரிக்கும் ஓரழகே

நின்று நிதானிக்கும்

நிலையில் நானில்லை

விண்மீன் கடலில்

குளிர் புன்னகை

தந்து

விளையாடுகின்றாய்

நெற்றி வியர்வை

ஒற்றி எடுக்க

மேகப் பஞ்சள்ளி

முகம் மறைக்கின்றாய்

மின்னலாய்

வெளியே வருகின்றாய்

மிருதுவாய்

எனைத் தொடுகின்றாய்

கண்ணியமாய்

நானிருக்க

கருத்தில் நினைத்தாலும்

தள்ளாடும் உன்னழகு

கண்டு

தாங்காது சரிகின்றேன்

கண்ணியமும் மறக்கின்றேன்!

அப்போதும்

அதே குளிர் புன்னகை

என் செய்கை

உனக்குப் பிடித்தது

என்று உணர்த்துமே!

சொல்லடி இப்போது

நான் என்ன செய்வேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்வேன் என்று சொன்னதினாலே அனைத்தையும் இழந்தேனே

செய்வேன் என்றவளோ மௌனபெருவெளியில்மலையாய்

செய்வேன் ஏன்ற வார்த்தையை நம்பிய இவனோ மடுவாய்

செய்வேன் என்று பண்ணிய வார்த்தைக் கோலங்கள்

Link to comment
Share on other sites

வார்த்தைக் கோலங்களை

வாயால் போட்டு

அழகாக்க அதுக்கு ஏற்ப

அசைவுகளும் காட்டி

எனை மயக்கிய

சிங்காரியே

இன்னும்

எத்தனை ஆடவரை

மயக்க நினைக்கின்றாய்

சொல் என் சிங்காரியே

Link to comment
Share on other sites

சிங்காரியே..சின்னவளே...

அழகை நிரப்பி..

ஆசையைப் பரப்பி..உன்

அனைத்து அசைவாலும்..என்னை

அசையாமல் செய்தவளே..

என் ஆன்மாவின் பிரதியே..

ஆசை மகளே..நீ

குழி விழச்சிரிக்கும்போதெல்லாம்..

செல்லமே நானல்லவா

அந்தப் பள்ளத்தில் விழுந்து போகிறேன்..

நீ கைகொட்டிச் சிரிக்கும்போதெல்லாம்

கண்ணே..எனக்கல்லவா வலிக்கிறது...

பிஞ்சுப்பூவே உன் பட்டுப்பாதங்களை

முத்தமிட்டே மோட்சம் கொள்ள

உன் தந்தை தயாராக உள்ளேனடி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேனடி இதயத்தில் என்றாய்

உச்சி முதல் உள்ளங்கால் வரை

உதறல் எடுத்தது எனக்கு உன்னால்

ஊதித் தள்ள முடியவில்லை உனதன்பை

உளறுவாய் என்ற பட்டத்தைத் தவிர

உனக்குத் தர என்னிடம் ஏதுவும் இல்லையே

Link to comment
Share on other sites

இல்லையே எதுவும்

இல்லையே என்று

தொலைந்த வாழ்வு தேடி

தொலைந்து நீயும்

வாடலாமா?

தொலையா வாழ்வு

அருகிருக்க

கூடிய உறவு உடனிருக்க

பொய்யாய் சிரிந்து

பொய்யாய் பேசி

உன்னை நீயே ஏமாற்றலாமா?

சங்கடம் கொண்டு

மற்றவரை சங்கடப் படுத்தி

நீ சங்கடப் படலாமா?

சங்கதி அறிந்து

சங்கடம் காத்து

சந்தோஷம் கொடுத்து விடு

என்றும் நீ சந்தோஷம்

கொடுத்து விடு.....

Link to comment
Share on other sites

கொடுத்து விடு..

கொடை வள்ளல் தானே நீ

உன் குட்டி இதயத்தை

என்னிடமே கொடுத்து விடு

அதில் காதலெனும் ஊசி ஏற்றி

ஏமாற்றம் ஆகிய

இரத்தம் ஊற்றிட ஆசை

மீண்டும் அதை உனக்கே

திருப்பி தருவேன்

கொடுத்தி விடு என்னிடம்

அன்பே உன் இதயத்தை

Link to comment
Share on other sites

இதயத்தை

கொடுத்து விடச்

சம்மதம்...

எத்தனை கைமாறி

எங்கிருக்கிறதோ

என் இதயம் என்று

அறிந்த பின்

இதயத்தை

கொடுத்து விடச்

சம்மதம்...!

காதலின் சின்னம்

இதயம்...

"லப்... டப்..."

அதன் மொழி!

இன்னொரு பார்வையில்

இதயம் எழுதும்

ஹைகூ கவிதை

இந்த

"லப்... டப்..."!

காதலுக்கும்

இதயத்திற்கும்

என்ன சம்மதமோ?

அடியேன் அறியேன்!

நான்கு அறைகள்

கொண்ட கூடு

அது...

உயிர் ஒழித்துப்

பிடித்து விளையாட

வசதியாய்...!

ஒருத்திக்கு

ஒரு அறை எனக்

கணக்கிட்டால்

நாலு பேரை

ஏக காலத்தில்

காதலிக்கலாம்! (அட பாவி - கவனிக்க கவிதையில் இது சேர்த்தியில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிருபன் ..

.மூன்று தடவை பதிந்து விட்டது போல் உள்ளது ? கவனிக்கவும் இதயத்தை ?

Link to comment
Share on other sites

அச்சோ கவிரூபன் என்ன கற்பனை இது ஆ?

ஹாஹா உரியவள் பார்ப்பின் இன்று சாப்பாடே இல்லை வீட்டில்... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்மதமா என் வாழ்க்கையில் ஒளியாய் நீ வர

சம்மதமா உன் வாசனை என்னருகிலே வேண்டும்

சம்மதமா எப்போதும் உன்நிழலில் நான் வாழ

சம்மதமா உன் அமுதவாயில் என்னை எற்றுகொண்டேன் என்று சொல்ல

சொல்ல நினைத்த பொழுதுகளில்

கேட்பதற்கு ஆட்களில்லை...

கேட்பதற்க்கு கோடியுண்டு...

சொல்வதற்கோ வார்தையில்லை....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில் சொல்ல நான் நினைக்க

பக்கத்தில் நீ இல்லை

பக்குவமாய் நான் இருக்க

பறந்து போனதென்ன

என் பைங்கிளியே

உன் நினைவில் நானுருகி

என் இரவு நீளுதடி

பறந்து வா பைங்கியே

பாவலனை தேடி.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவலனை தேடி

பறந்து நான் வந்தால்

பாதை திறந்திடுமா

பக்குவமாய் கரை ஒதுங்க

பாதகர் கண் பட்டால் ,

பத்தும்; பறந்திடுமே

பாங்குடனே வந்திடுவேன்

ஈழமது வந்திட்டால் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழமது வந்து விட்டால் - நம்

தமிழர் குறை தீந்திடுமோ...!

தமிழர் நாம் நீடுவாழ

நாடு ஒன்று வேண்டும் தான்...

நாடு ஒன்றே போதுமெனல்

வீடுமட்டும் காட்டிவைத்து

மனைவி தொலைத்த

கதையாகும்...!

நாடு மீட்க

உழைக்கும் போது

இலட்ச்சியம் ஒன்று...!

இலக்கும் ஒன்று...!

வேண்டி நிற்பது ஒன்றே ஒன்று....!

ஈழமது கிடைத்வுடன்

பருத்தித் துறை மூலை முதல்

ஈழத்து எல்லை தாண்டி வாழுகின்ற

தமிழரெலாம் துடித்து எழவேண்டும்....!

இரவுபகல் பாராமல்

தொழில்நுட்பம் கையிலேந்தி

இப்பாரை தமிழால் வெல்லும்வரை

தொடர்ந்தே உழைத்திடு....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உழைத்திடுவோம் உழைத்திடுவோம்

ஒன்றாக உழைத்திடுவோம்

நம் நாடு வளம் பெற

நாமெல்லாம் உழைத்திடுவோம்

அங்கிருந்த அகதி வாழ்கை

போதும் போதும்

ஈழ மண்ணில் கொடிஏற்றி

ஏற்றுவோம் தீபம்

தீபம் தீபம்.........

Link to comment
Share on other sites

தீபம் கொண்டு

சுடர் வளர்த்து

கொழுத்திட வந்தது

அறியாத பெண்ணென்று

அறியாமை இருள் கண்டு

புரியாத தீபங்கள்

விழுந்திட இருள் போக்கி

அறியாத வாழ்வின்

தெரியாத துன்பம்

துடைக்க தீபத்தை

கண்ணில் ஏற்றியது

துயர்துடைத்து.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துயர் துடைக்க வந்த என்னை

தூக்கியெறிந்து போனதென்ன

துள்ளி திரிந்த என் மனதை

கிள்ளி யெடுத்து சென்றதென்ன

பாவம் என்று பாராமல்

பாவை அவள் பறந்ததென்ன

என்னை விட்டு ஏங்க வைத்து

ஏன் இந்த நாடகமோ

பள்ளியிலே படிக்கும் போது

பார்த்து சிரித்தாயே

பாருடி உன் காவலனை

பஞ்ச பரதேசியாக

உன் நினைவை நான் சுமக்க

ஊர் விட்டு போனதென்ன

என் காதலியே....என் காதலியே

Link to comment
Share on other sites

காதலியே

உன்னைப் பற்றி

இதுவரை

ஒரு கவிதை

எழுதத் தோணலையே...

மூன்றாம் பிறையாய்

தான் நீ இருந்தாய்

முழு நிலாவாய்

எப்படி நீ எனக்குள்

வளர்ந்தாய்?

சும்மா இருந்த

முனியும்

உன் முகம் கண்டு

கனியும்!

சனியும்

உன்னிடம்

கொஞ்சம்

தணியும்!

பனியும்

மழையும்

பாவடை தாவணியில்

உன்னைக் கண்டபின்

கொஞ்சம் குறையும்!

விரியும்

இயற்கை கூடப்

ஒரு நாள் புரியும்!

நீயோ எனக்கு

என்றும் புரியாக்

கவிதை!

நீ செய்யும்

புரியாணியும்

கவிதை! ;-)

அது வரை

சரியாய் கவிதை

வராவிடினும்

வார்த்தையாய்

விதைப்பேன்

உன் வடிவழகை

என்றும் ரசிப்பேன்!

Link to comment
Share on other sites

ரசிப்பேன் நித்தம் நித்தம்

என்றேன்.....

உன்னை ரசித்து ரசித்து

என் ரசனையே மறந்து

போனதே ஏன் மாமா?

தப்பா சொல்லி விட்டேனே

சிந்திக்கிறேன் கொஞ்சம்

உனக்காய் என் மாமா....

Link to comment
Share on other sites

மாமா என்றழைத்த

மச்சாளே...!

உறவு முறை

ஏதுமெனக்கு விளங்கலையே...

சரி அஃதிருக்க

சந்தை போல்

கல கலக்கும்

கவிதை அந்தாதியில்

சண்டித்தனம்

செய்யக் கூட

ஆள் இல்லையே

இப்போது...

தொடக்கிய

கறுப்பி அக்கா

அடிக்கடி வந்து

கிறுக்குவதுமில்லை

விகடமாய் கவி செய்யும்

விகடகவி

கவி வரைய

வருவதுமில்லை

நிலவு கூட

நின்று பேசுவதில்லை

எல்லோரும் அவரவர்

வேலைகளில்

நீயும் நானும்

வேலையற்று

காலை எழுந்ததும்

சிந்தனை வேறின்றி

சிதறியே கிடக்கிறோம்

கவிதை அந்தாதியில்!

ஆளை விடு

அக்கா...

சோலை போல

சுற்றி வர

பல பூங்கா உண்டு...

அடுக்களையில்

முடங்கிக் கிடப்பது போல

கவிதை அந்தாதிக்குள்

முடங்கிக் கிடக்க

மாட்டேன் நான் இனி!

ஏதோ நீ சொல்வதால்

சாது ஆக

சண்டித்தனம்

செய்யாதிருக்கிறேன்!

சரி பார்ப்போம்

வரிக்கு வரி குறையாது

தமிழ் வார்ப்போம்

படிக்க ரசிக்க

நீ இருப்பதால்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.