Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீ இருப்பதால் வாழ்கிறேன்

உயிரே எனை விட்டு போகாதே

இன்பம் துன்பம் மாறலாம்

உறுதியோடு வாழ்ந்து விடு

கரைந்து போவதற்கு காதல்

என்ன கானல் நீரா மறைய

உயிர் கொண்டு ,கண்ணீர்

ஊற்றி செந்நீர் வார்த்து

உறக்கம் தொலைத்த

உயிரில் கலந்த உறவு .........உறவு என்று தொடங்க வும

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

உறவின் உயிரைக் காத்திட

முடியவில்லை

ஆனாலும் உணர்வில் ஓர் வலி

சொல்ல தெரியாவில்லை

உண்டேன் உறங்கினேன்

ஆனாலும் எதையோ இழந்ததாய்

ஒர் தவிப்பு எனக்குள்

தொலைத்து விட்டேன் கோழையாய்

என்னை

இழந்து விட்டேன் தமிழ் உணர்வை

ஆனாலும் துடிக்கின்றது இதயம்

எதனால் நானும் தமிழ் என்பதாலா

புரியவில்லை ராமா

ஆனாலும் நீயாவது

காத்திட தோன்றிடுவாயா?

கட்டத்தரையில் கண்ணீரோடு

என் உறவு..... வலிக்கு எனக்கு.........

Link to comment
Share on other sites

வலிக்குதெனக்கு என்ற வரி பார்த்த பின்னால்

கலக்கிக் கலங்க வைக்க கவி நான் எதற்கு?

கறுப்பியைக் காணாது கண் பூத்து போயிருக்கேன்

கவி விகடம் தத்துவக்காதலில் கரையுண்டு போயாச்சு

வெண்ணியை கவி செய்தால் வெட்டிப்புடுவா என் வாலை

மணிக்ஸ் கவியந்தாதியை மறந்து போட்டாராம்.

அடங்குவாரா?....

தொடங்குவாரா?...

முடங்குவாரா?... டங்குவார்

அடுத்தது ஆரப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அந்த பூனைக்கு மணி கட்டுவது ,

குஞ்சு என்றும் குழந்தை என்றும் பாராது

வஞ்சகம் கொண்ட அந்த நஞ்சுப் பூனை ,

கொன்று குவிகிறது ,இந்த பூனைக்கு மணி கட்ட

யாருமே இல்லையா ? முற்பகல் செய்தால்

பிற்பகல் விளையுமாம் எமக்கு

பிற்பகல் எப்போது ,?........

Link to comment
Share on other sites

எப்போது அடி விழும்

எப்போது கை சுடும்

என்று இப்போது

நாம் அறியோம்...

இப்போது நடப்பது

குருசேஷ்த்திரம் அல்ல..

பொல்லாத குளவிகள்

யாரோ எறிந்த கல்லில்

நில்லாது பறக்கின்றன!

விழுகின்றனவே

சில இலைகள்

என்று

மரம் அழுதால்

புதிதாக இலைகள்

துளிர்க்காது...!

சரித்திரம்

மறுபடி திரும்பும்

அதுவரை

பொறுத்திருந்தால்

உண்மை விளங்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்மை விளங்கும் போது

உலகமே வியக்கும்

உம்மை தேடி வரும்

உலகம் அன்று

அன்று சொல்வாய்

நான் இல்லை இந்த

மாவீரர்களே இந்த

மண்ணை மீட்டு

மானம் காத்து

உயிரை இழந்து

உறவை இழந்து

ஊரை இழந்து

உறங்கும் மாவீரர்கள்...........மாவீரர்கள்

தாய் மண்ணுக்காக தன் உயிரை

கொடையாக்கி தாய்மண்ணை

தழுவி உறங்கும் எங்கள் உறவுகளுக்கு

எப்பொழுதும் இரு கரம்

உங்களுக்காக...உங்களுக்காக...........

......

Link to comment
Share on other sites

உங்களுக்காக

எதுவும் செய்யவில்லை

நாம்...!

களமாடி வீழ்பவர்கள்

நீங்கள்...

பலமாடி கட்டி

இங்கு வந்து வாழ்பவர்கள்

நாங்கள்...!

போரின் புகைக்குள்

உடல் வருத்துபவர்கள்

நீங்கள்...

காரின் புகையை

மட்டுமே கண்டு பழகியவர்கள்

நாங்கள்...!

ஏதும் செய்யாது

எப்படி விமர்சிப்பதாம்?

போதும் நிற்பாட்டு

குறை சொல்லாது

வாழ்தலே பெரும் சிறப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்தலே பெரும் சிறப்பு

அந்த வாழ்கையே பெரும்

சலிப்பு...........

கூடி வாழ்ந்து விட்டு

கூத்தாடிகள் போல

அன்று அங்கு

இன்று இங்கு

என்ன வாழ்க்கை இது

ஏமாந்த வாழ்க்கை

ஏன் இந்த நாட்டில்

சொல்ல வார்த்தைகள் இல்லை

சோகத்தை சொல்ல

அலைகிறோம்........அன்றும்

இன்றும்............

அதிசயப் பிறவியா அல்லது

அடி பட்ட பிறவியா

புரியவில்லை எனக்கு

Link to comment
Share on other sites

எனக்கு உனக்கு என

ஏனோ வழக்கு...

உனக்குள் இருக்கும்

ஆசைப்பேயை விலக்கு

வானம் வசப்படாவிட்டாலும்

வாழ்க்கை உருப்படும்...

அன்பும் இல்லை

பண்பும் இல்லை

தீயது பேசுவதும்..

தீமைகள் செய்வதும்

தாயை மறப்பதும்..

தாய் மண்ணை இகழ்வதும்

வீரர் தீயாகத்தை வீணெண்பதும்..

எம் ஈழ கனவினை ஏனென்பதும்..

உன்னை நீ யாரென மறந்ததன்

உன் மதியை நீ இழந்ததன் வெளிப்பாடு..

இருந்து யோசி..தமிழனாய் வா..

நண்பனாய் வா...நல்லவனாய் வா..

நாங்கள் உன்னை ஏற்றுக்கொள்கிறோம்..

எங்கள் தலைவனும் உன்னை ஏற்பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்பார்! ஏற்பார்தான்!!

ஏற்பதற்கு எனக்கென்ன தகுதி!

மரமும் தன்னில் ஏற அனுமதிப்பது

தன்னடியைப் பற்றுகின்றவனையே!

தன்னலம் காணுதல் நன்றே! எம்

மண்னலம் பேணுதல் சாலவும் நன்றே!!

பாழுமுடலின் கல்லறை புலமாயினும்

வாழும் நினைவுகளின் கருவறை ஈழம், ஈழமே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் என்ற திருநாட்டில்

ஏற்றி வைத்த தீபம்

எரிகின்ற வேளையில்

எத்தனை இடர்கள்

அத்தனை இடர்களையும்

வெற்றி கொள்ள

முப்படை கொண்ட புலி படை இங்கே

வாரும் என்ற அழைத்த மக்கள்

வரிசையாக சோற்றுக்கு நிற்க!

ஏறி வந்து எம்மை மிதிக்க

எதிரி அவன் துடிக்க

அரவரணைத்த கைகள் இன்று

ஆயுதம் ஏந்த

அன்னை மண்ணை மீட்க

அனைவரும் இங்கே

சொல் ஒன்று சொல் தலைவா

புயல் போல வீசும் எம் புலிப்படை

எதிரி அவன் மீது எம் கால் மிதிபட

ஏறி வந்த பகை விரட்டி எம் தேசம்

ஒளி விட ஆணையிடு தலைவா.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவா உன் வழியில் நடக்கும் தமிழ் தேசம்

தனியே நீ இல்லை தாங்கும் சக்தியாய் அகிலமெல்லாம் தமிழர்

தனித்தமிழ் எங்கும் எந்தாய் போல் வாழும் நாள் வரும்

தன்னாலே கெட்டுப்போய் எதிரி எல்லாம் காற்றாய் அலையும் நாள் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்றாய் அலையும் நாள் காதோடு ஒரு சேதி கேட்கும் ,

தோற்றாய் எம் வீர புதல்வர்களிடம் என்று

ஆறாது அவர் செய்த வீர வேள்விகள்

தேற்றி கொள் புலம் பெயர் உறவே ,எம்

தலைவன் ,மெளனம் தீப்பிழம்பாய் வெடிக்கும்

அப்போது விளங்கும் எம் தலைவனின் வீரம்.

சர்வதேசமே இன்னும் புரியவில்லையா ?

அல்லது புரிந்தும் நடிக்கிறாயா ? மதி

கெட்ட மகிந்தன் பட்டு தெளியட்டும் என்று

ஆயுத பேரத்தில் ஆயிரம் ஆயிரமாய் அபகரிக்க

சீர் கெட்ட ஒரு கூட்டம் புழுகி தள்ள்ளுகிறது

அதை பிடித்தோம் ,இதை பிடித்தோம்

தேர்தலுக்கு காdடும் வான வேடிக்கையா

கொஞ்சம் பொறுங்கள் , எதுவும் கை மிஞ்சி

போய்விடவில்லை ,ஆட்டமெல்லாம் அடங்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்டமெல்லாம் அடங்கும்

பகைவனின் கோட்டையெல்லாம் சிதறும்

தலைவன் வழி வெல்லும்

தவித்த காலங்கள் ஓயும்!

மாவீரர் கனவு நனவாகும்

மலர்தூவி வணங்குவோம்

அன்னைத் தமிழ் பொங்கும்

அடைத்த துயரம் நீங்கும்!

தமி;ழீழம் மலரும்

தாய்நாடு செல்வோம்

தலைநிமிர்ந்து நிற்போம்

தலைவனோடு வாழ்வோம்!

Link to comment
Share on other sites

வாழ்வோம் நாம் என்று

வாழ்த்த ஒரு நாதி இல்லை

வீழ்வோம் விரைந்தே என்று

வாழ்த்த தேடி வருவார் பலர்!

காலன் கால்களுக்கு

சொடுக்கு எடுக்கும்

வித்தை அறிந்த ஒருவன்

விந்தை பல நடத்துவான்!

மொந்தை நிறைய

கள்ளருந்து

தள்ளாடி வரும் பதர்களே...

முன்னாடி வந்து

முக்குடைப்பர் வீர மைந்தர்...!

கண்ணாடி பார்த்து

தலை வாரிக் கொள்ளும்

கடைசியாக உன் முகம்

பார்த்த சந்தோசம்

உனக்கு ஆகட்டும்!

சுடலையில்

சிவனாடி முடிப்பான்

மனித வாழ்க்கை!

களத்தில்

இவனாடி முடிப்பான்

பகைவர் செருக்கை!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

செருக்கை கடந்தவன் தாழ் தணிதல் பக்தனுக்கு அழகு

செருக்கை கடந்தவன் தன்னை தான் அறிவான்

செருக்கை அணிந்தவன் மனதில் ஆங்காரம் குடிகொள்ளும்

செருக்கை மானிட வாழ்வின் அந்திமகாலத்தின் அடையாளம்

Link to comment
Share on other sites

அடையாளம் காட்டினர்

படையினர் என்னையும்

வரிப்புலி என்று...

இலங்கை பிரஜை என

அடையாள அட்டை

வைத்திருந்த பின்னரும்...

அப்போதுதான் எனக்குள்

நிறைய குழப்பங்கள்

நான் எப்போ புலியானேன்?

கண்ணாடியில் என் முகம் பார்க்க

விரும்பிய போதும்

என் முன்னே சிறைக்கம்பிகளேயன்றி

ஏது கண்ணாடி.....?

Link to comment
Share on other sites

ஏது கண்ணாடி

என்று

ஏங்கி நின்ற காளை...

உன்னிரு

கன்னக் கண்ணாடி

கண்டபின்

களிப்பில் துள்ளினான்! :wub:

Link to comment
Share on other sites

துள்ளினான் காளை இவன் - தன்

உள்ளம் அள்ளிச் சென்ற

கள்ளியை கண்டதும் உள்ளத்தில் கள்ளூர.. :wub:

அள்ளி எடுத்து முத்தமிட, அவள் கன்னம்

கிள்ளி பல காதல் கதை சொல்லிட... :) ஆனால்,

புள்ளி மானினத்தாள் தள்ளியே சென்றது கண்டு

முள்ளிலே விழுந்த புழுவினம் போல துடித்தான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிலே விழுந்த புழுவினம் போல துடித்தான் .....

முள்ளு எனத் தெரிந்தும் ஏன் அவன் விழுந்தான்

முட்களின் நடுவே மலர் என் நினைத்தானா ?

மலர்களின் பாதுகாப்பு முட்கள் அல்லவா ?

போகட்டும் வேறு மலர்கள் தென்படாமலா போகும்

தென்றல் வரும் நேரம் ,சேதி வரும் ,திருமண நாளும் வரும்

காதலும் , கனவாகும் ,கனவும் காதலாகும்

உறவுகள் என்றும் அழியாது தொடர் கதையாகும் ......

Link to comment
Share on other sites

தொடர்கதையாகும் காதல் தோல்விகள்..

தொடரில் புது இணைப்பு எந்தன் காதலன்றோ....?

படுத்தும்... பாழாய்ப்போன இந்தக் காதல் உன்னை

பாடாய்ப் படுத்தும் என அனுபவித்தோர் சொல்லிடவும்,

இடர்கள் தான் எத்தனை வந்தாலும்

தொடரும் எங்கள் தூய காதலென்று

மடையன் நான் செருக்குற்றேனே...

படிப்பையும் கோட்டை விட்டேனே... :wub:

அடுத்து வரும் என் தோழர்களே கேளிர்...

கொடுத்து வைத்தவர் நீர் காதல் வலையில் விழாவிட்டால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழாமலே இருக்க முடியுமா விழுந்து விட்டேன் காதல் வலையிலே

போராடி வெற்றியும் பெற்று விட்டேன் , அது நெருப்பாறு நீந்திவிடு

வாழும் வரை போராட்டம் வழியுண்டு , போராடு ,வெற்றியுண்டு

அது மின்சாரம் ,கவனமாக கையாளு ,அடித்து விடும்

வீரர்களுக்கு உரிய விளையாட்டு ,வாழ்வில் ஒரு முறை விளையாடு

வேட்டை யாடு விளையாடு ,விருப்பம் போல உறவாடு

வீரமான நடையை போடு வெற்றி எனும் கடலை நாடு ...........

Link to comment
Share on other sites

கடலை நாடும் எம் பிழைப்பு

நாட்டுக்கு உணவு தரும் எம் உழைப்பு

வீட்டிலே மனைவி மக்கள் நமக்காய் அங்கே

நடு கடலிலே படகின் மீது மீனவராய் நாமிங்கே

கொடிய கடற்படையது எங்களை சுடுவது போதாதோ?

ஆழிப்பேரலையே உனக்கும் ஏன் கடுப்பு எங்கள் மீது?

எளிய காடையர்கள் அவர்கள்... கருணை அவர்க்கில்லை

வாழிய இயற்கை அன்னையே... உனக்குமா அது இல்லை??!!

Link to comment
Share on other sites

உனக்குமா அது இல்லை

என்று என்னைக் கேட்டால்

எப்படி அப்பனே...

காதலெனும் அருமந்த

அனுபவத்தை

கடக்காது காதலெனக்கு

கசக்காது...!

தோல்வி எதில் இல்லை?

தோற்றபின் போதனை

செய்கின்ற உம் செயல்

ஏற்பில்லை காண்!

காதல் ஒரு தவம்

சில நேரம்

வரம் கிடைக்கிறது

சில நேரம்

சாபம் கிடைக்கிறது

அவ்வளவு தான்!

தேவதைகளை மட்டுமே

அர்ச்சிக்கப் பழகியவர்கள்

நாங்கள்...

தே(ள்)வதைகளையும்

தாங்கப் பழகவேண்டும்!

Link to comment
Share on other sites

புரிந்துணர்வு வேண்டும்

பழகவேண்டும் பெண்ணே உன்னோடு நான் நன்கு - என்

இளகிய உள்ளதின் உணர்வுகளை பகிரவேண்டும் - உன்

அழகிய மனதிலுள்ள எண்ணங்களை நான் அறியவேண்டும் - நம்

வாழ்வினில் தேவை எமக்கிடையே புரிந்துணர்வு

உரைக்க வேண்டும் ஏதேனும் நான் தப்பாக செய்துவிட்டால் - நீ

சரிய வேண்டும் என் மடியில் உன் மனதில் பாரமென்றால்

சிரிக்க வேண்டும் நான் செய்யும் குறும்பை நீ கண்டு - நான்

ரசிக்க வேண்டும் உன் சிரிப்பை என் உள்ளம் மகிழ்வுறவே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.