Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

எனக்குள் தோன்றி எனக்குள்

மறையா அர்தங்களை

அடிக்கடி கிறுக்கிய அந்தாதியோ

மறைந்து தொலைந்தது ஏன்?

தொல்லையாய் போனவாழ்வில்

தொலைந்தவருடன் நீயுமா?

வந்தவரும் போனவரும் வராது

போக

எடுதவருக்கும் தொடுந்தவருக்கும்

எடுக்காது போக

எடுக்கின்றேன் உன்னை

தொலையாது வாழ

எழுதிய கரங்கள் மீண்டும்

எழுதிட...................

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எழுதிட எழுதுகோல் எழுந்து நிக்கும்

விழுந்திடும் கண்ணீரில் கருத்தும் கரையும்!

வலிகளை மட்டும் வாழ்க்கையாய் கொண்டோம்

வழித்தடத்தையும் தொலைத்து உழல்கின்றோம்

மேதினியில் மாந்தரெல்லாம் கூடிக்களிக்க

மே18 ல் ஈழமெங்கும் கூடி மாரடிக்க

காரிருளும் விலகியோடும் காலமாகும்

கதிரவனும் வைகறையில் உதயமாகும்!

Link to comment
Share on other sites

கதிரவனும் வைகறையில் உதயமாகும்

கண்ணீரின் வழித்தடங்கள் மறைந்துபோகும்!

நீளுகின்ற கதிரின் கைகள் பற்று

கவலைகள் போகுமே அற்று!

விரயமாகும் காலத்துளிகளை எண்ணு

உயரமாகும் உனது வாழ்க்கை கண்ணு!

எழுந்து நில்லு நீயும் கொஞ்சம்

விழுந்து கிடந்த புல்லும்

எழுந்து நிற்கும் கோலமது பாரு

துணிந்து செல்ல பாதை பல உண்டு

குனிந்து நீயும் நிற்பது ஏன் இங்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இங்கு நான் வந்தேன் , என்னை நானே கேட்கின்றேன்! எழில் மிகுந்த நகரங்கள், எச்சில் துப்பலில்லாத சாலைகள்!

சொகுசான பயணங்கள், சுகமான வாழ்க்கைகள்!

சுத்தமான அங்காடிகள், சத்தான உணவுப் பொருட்கள்!

ஏமாறும் நுகர்வோரையும், ஏமாற்றத வியாபாரிகள்!

சுகாதாரமான வைத்திய சாலைகள், நவீன சோதனைக் கூடங்கள்!

கண்ணான வைத்தியர், கருணைமிகு செவிலியர்!

கண்ணியாமான காவல்துறை, காருண்யத்துடன் மாந்தர்!

கண்மூடி ஒரு கணம் கடந்த காலம் செல்கின்றேன்!

கொழும்பு செல்லும் யாழ்தேவி, கடுகி வருமே காங்கேசன்துறை!

காலத்தின் கோலத்தினால், கயவர் கை ஓங்கியதால்!

மதவாச்சியில் மண்டை உடைய மலைத்து நின்றது!

அனுராத புரத்தில் ஆட்களை வெட்ட அலறி நின்றது!

காலன் கையில் கையளித்து விட்டு, கட்டையின் மேல் கட்டையாய் நின்றது!

வீட்டினுள் கள்ளர் கூட்டம் வாசலால் வந்து, பொன்னும் பொருளும் புடுங்கிச் சென்றது!

விழி தூக்கி வியந்து பார்த்த விமானங்கள், விரைந்து வந்து குண்டெறிந்து பறந்தது!

பதங்கு குழியில் பாதிக்காலம், புழுவுடன் பாண் வாங்க மீதிக் காலம்!

அமைதிப்படை வந்து கொஞ்ச அமைதியையும் பறித்துச் சென்றது!

பாடசாலைகளும், கோவில்களும் புகலிடமாய்! அங்கும் அகோரச் செல்லடியும் அப்பப்ப விருந்தாளியாய்!

கண்முன்னே உறவுகளும், அயலவரும் உடல் சிதற, உதிரம் பெருக!

இன்னும் வேண்டுமா இந்த வாழ்க்கை, கணப்பொழுது தான்,

அம்மா நான் கண்முழித்து விட்டேன்!

Link to comment
Share on other sites

அம்மா நான் கண்முழித்து விட்டேன்!

பூனைக்கு யாரோ மணிகட்டுவர்,

பொல்லானை பொடியர் போக்கிடுவர்,

பாவிகளை பகலவர் பொசுக்கிடுவர்,

மிலேச்சர்களை மானிடர் மிதித்திடுவர்,

மிருத்துகாரனை மிருடன் மாய்த்திடுவர்,

என்று வாளாவிருந்தேன் - இப்போ

அம்மா நான் கண்முழித்து விட்டேன்!!!

Link to comment
Share on other sites

கண்முழித்துவிட்டேன்...

இட்டாரும்...தொட்டாரும்..

இளமை கலையக் காணோமே..

எனக் கதறி..கண்ணீர்

பாய்ந்தோடக் கண்டேதான்..

காலங்கள் தாமதமாய்

கண்முழித்துவிட்டேன்...

தொட்டுத் திலகமிடடான்..

தொடைநடுங்கி..அழகுக்கு

காவல் இருக்கமுடியாத ஆண்...

அலறலுக்கு ஓடிப்போன..

ஆடு அவன்..

இரப்பை காயாமல்..

அழகை மேயவிட்டு..

தொட்டான்..தொடர்ந்து

எவன் எருமை...

காய்ந்த புல்லில்

கவனம் விட்டு

பூத்த பூவில் நாட்டம்

கொண்டான்..அவன் மேயமுன்

பூவைக் காத்தல் அவசியமெனக்

கண்முழித்துவிட்டேன்!

Link to comment
Share on other sites

கண்முழித்துவிட்டேன்

கனவிலிருந்து

காரிகை உந்தன்

பட்டுக் கரங்கள் பட்டு!

முழித்தபின் உணா்ந்தேன்

காரிகை நீ வந்ததுவும்

கர ஸ்பரிசம் தந்ததுவும்

கனவென்று!

Link to comment
Share on other sites

கனவென்று ஆகிடுமோ...

அந்தக் கொடுங் கணங்கள்..

ஆழ் மனதில்

வீழ்ந்திட்ட துயர் வழியும்

கூர் ஈட்டிகள்..

உறவுகள்.. எரிந்ததும்..

உண்மைகள் புதைந்ததுமான..

அந்தக் கொடுங் கணங்கள்..

கனவென்று ஆகிடுமோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகிடுமா?( வீண்) நம் தலை முறை கண்ட கனவு

ஆண்டுகள் பல வீழந்த விதைகளாய் போராளிகள்

தியாகங்கள் அர்ப்பணிப்புகள் உழைப்புக்கள்

பசி மறந்துஉறவு மறந்து கண் துஞ்சாது ,

உன்னத நோக்கமாம் விடுதலை யுணர்ந்து

தணியாது இத்தாகம் .வீண் ஆகாது இந்த நோக்கம்

நானும் நீயும் மண்ணோடு போகலாம்

விடுதலை உணர்வும் வீரமும மறு பிறபெடுத்து

உன் சந்ததி மீண்டும் விடுதலைபெறும்.

Link to comment
Share on other sites

விடுதலை பெறும் நாள்

விரைவினில் வருமோ-வெறும்

வீறுடன் விரைந்தால் போதுமோ

அரசியல் என்பது

ஆழ்குழி ஆய்வெனின்-நம்

அறிஞர்கள் அறிவிலிதாமோ..

எத்தனை வீரம்...

எத்தனை தியாகம்-அத்தனையும்

எரிந்ததுமேனோ..

பகைமைக்கு கிடைத்த பரிசோ-எம்

பகைவருக்குள்ள மவுசோ

எதிரிக்கு கிடைத்த நட்போ-இது

எம் நேர்மைக்கு கிடைத்த பரிசோ

நியாயமும் தர்மமும்

நீதியும் மண்ணுக்கு புதைந்து போமோ-மற

வீரமும் தீரமும்..

வேங்கையர் தியாகமும்-இன்று

வீணென்று ஆகிடுமோ..

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்

தர்மம் மீண்டும் வெல்லும்..என்ற

இறை வாக்குகள் மெய்ப்படுமோ..

இறைவாக்குகள் மெய்ப்படுமோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவாக்குகள் மெய்ப்படுமோ...

கறைவாக்குகள் அரசாளுதே!

சிறைச்சாலையில் நல்லோர் நிறைய

பறைமேளங்கள் நாடெங்கும் முழங்குதே!

முள்ளிவாய்க்கால் தூர்ந்து போனதால்

கள்ளிச்செடிகள் வேர்விட்டு மெய்வருத்துதே!

பள்ளியறைகள் பாதகரின் பள்ளியறையானதால் _ செம்

புள்ளிப் பொட்டுகள் செங்குருதியோடு கரைந்தோடுதே!

பாரதத் தாயென்று நம்பினோம் _ படுபாவி

பாதகத் தாயாய் பல்லிளித்து போனாளே!

ஈழமாதர் தாலி காவுகொள்ள

இத்தாலியிலிருந்து இறங்கினாளே!

Link to comment
Share on other sites

இறங்கினாளே...இளவரசி...பல்லக்கு மேலிருந்து

உறங்குவாளே அழகரசி பஞ்சணை மேல் விழுந்து..

காண்பதெல்லாம் அழகுமாடங்களும்... அரசபீடங்களும்..

தெரிந்ததெல்லாம்..ஆயகலைகளும்..தங்கசிலைகளும்..

மேகத்தில் மிதந்தவள் சேரிக்குள் வருவாளோ...

சேவகத்தில் வாழ்ந்தவள் சேவகியாவாளோ...

ஆணையிட்டு வாழ்ந்தவள் ஆணைக்குள் வாழ்வாளோ..

ஆம்..அவள் இளமையில் காதல் துளிர்த்தால்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளிர்த்தால் துளிர்விடுமே காதல்

களிப்பில் கனவுலகின் சஞ்சாரத்தில் மனம்

சேரிக்குள் வாழ்ந்தவள் மணமேடைதனில்

சேவகியாய் சேர்ந்தவனுக்கு

சேவகம் செய்து செய்து

சே தாரமாய் வாழ

சேவகன் என்ன முடமா

ஆள வந்தவள் கேட்கிறாள் அன்பாய்

Link to comment
Share on other sites

அன்பாய் கேட்டதுவும்-பெண்

அகத்தே முளைந்த அகந்தைதானே..

சமைந்தவளுக்கெல்லாம் சமவுரிமை யழித்து

இல்லற இன்பத்தின் எல்லையைச்சுருக்கி...

விவாக இரத்துகளை விலை மலியச் செய்வதற்காய்...

ஆண் முடமாயும்..பெண் ஜடமாயும் வாழ்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க இம் மேதினி வளமுடன்!

பொழிக கார்மேகம் நிலமகள் குளிர்ந்திட!

ஆழ்க துன்ப,துயரம்,வஞ்சம்,பழி,குரோதம்!

வெல்க நம் தாய்நிலம், நிலைக்க நீங்காப் புகழுடன்!

சிறுவர்,சிறுமியர்,ஆடவர்,பெண்டிர்!

கூடிக் களித்திட குவலயம் செழிக்க!

இற்றை நாள் அயலவனும் எதிரியாய் இருந்திட்டான்!

இவன் மனம் இளகிட இறையருள் புரியணும்!

உடலெல்லாம் ரணங்கள்,மனமெல்லாம் குரோதம்!

நீரெல்லாம் இரத்தம், நிலமெல்லாம் பிணங்கள்!

மரங்கள் முறிந்ததினால், மரம்கொத்திகளும் சோம்பலுடன்!

யந்திரப்பறவை கண்டு வெருண்ட எம் பறவைகளும்!

தம்பயம் விட்டு கிளைகளிலே கூடும் கட்டி!

முயங்கி முட்டையிட்டு முழுசாய் அடை காக்கவேண்டும்!

வனத்து விலங்குகளும்,ஊரும் உயிரினங்களும்!

தம்மினம் பெருக்க உயிர்ப்புடன் உறவாட வேணும்!

நம் பிள்ளை சிந்தும் அன்னம் பொறுக்க,

முற்றத்து எறும்புகள் வரிசையாய் நகர வேணும்!

இனியொரு யுத்தமும் வேண்டாம்!

இனச் சேதமும் இனி வேண்டாம்!

அண்டை நாடுகளும், அயல் நாடுகளும்,

அநியாயமாய் விளையாடிய அரசியலும் அழியட்டும்!

பிரளயம் முடிந்து புது உலகம் பிறந்ததுபோல்!

யாழும் இன்று புதிதாய் பூத்தது போல்!

எம்மீழ உறவெல்லாம் சிரித்து மகிழ்ந்திட, உயர்ந்திட,

நின்று நிலைத்திட நாமெல்லாம் மனமுவந்து உதவ வேண்டும் தாயே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயே எந்தன் உயிர்த்தாயே-எனக்கு

நோயெ வந்ததில்லை உந்தன் அரவணைப்பில்

பந்த பாசம் என்னவென்று வாழ்ந்தாய்

சொந்த நலம் பாராமல் எம்மை வளர்த்தாய் - நீயே

மாசற்ற நேசத்தின் வரைவிலக்கணமாய்

காசற்றுக் கடமைகளைச் செய்தாய் -எமக்குத்

தேசத்தில் ஓர் அடையாளம் தந்தாய் - நீயோ

வேசத்தில் பலதாய் அடையாளம் கொண்டே

வாத்தியார்

...............

Link to comment
Share on other sites

பலதாய் அடையாளம் கொண்டே

அது இதுவெனக்

கை காட்டுவார்

கடவுளை!

கல்லன்றி ஏதும் காணாது

எது வெனத் தேடுவார்

மூடரும்!

உள்நின்று சிரிப்பான்

கடவுள்

உனக்குள் நின்று சிரிப்பான்

கடவுள்

கட உள்

காணாத காட்சி காணலாம்

கண்டபின்

ஆனந்தக் கூத்தாடலாம்!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கூத்தாடலாம் கும்மியடிக்கலாம்

சுதந்திரம் மட்டும் கிடைத்தால் போதும்!

தந்திரம் மிகுந்த உலகத்திடம்

சுதந்திரம் யாசிப்பதும் கேவலமே!

விரும்பியா அடிமைப் பட்டோம்

போராடியா அடிமையானோம்!

தந்திரமாய் அடிமை செய்யாவிடின்

இந்த சுதந்திரம்தான் எமக்கெதற்கு!

வலியவன் எளியவனை அடிமை கொள்வதும்!

எளியவன் சுதந்திரத்திற்காய் அல்லலுறுவதும்!

தொடர் கதையாய் தொடரு மென்றால்

தந்திரம் மலிந்த உலகத்திலே

சுதந்திரமும் கேவலமே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேவலமே கேவலமே இன்றைய ஈழத்தமிழன் நிலை கேவலமே

கோவலன் வாழ்ந்த ஊரான் நம்மை தாழ்ந்தவன் ஆக்கி விட்டான்

காவலன் கட்டிக் காத்த நம் தேசத்தை காட்டியே கொடுத்து விட்டான்

பாவலன் என்ற பெயரால் எம்மைப் பாடியே அழித்து விட்டான்

மேலவன் என்று வருவானோ அன்று நம் தானையின்

காலவன் வழி சென்று நம் கரிகாலனின் கனவை நனவாக்கும்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நனவாக்கலாம் நம்

கனவை என்றே

நினைத்திருந்த வேளைதனில்

கனவின் சுவடே தெரியாமல்

காட்டெருமைகளாய் கனவை

கலைத்தொழித்து விட்டனரே

இதயத்துக்குள்ளும் ஓர் ஆதங்கம்

எமக்கென ஓர் நாடு மலராத

எழுகிறது நித்தமுமாய் ஓர் கேள்வி

Link to comment
Share on other sites

கேள்வி கேட்க யாருமில்லையடி

நம் இனத்துக்கே நாதியில்லையடி...

மானமில்லா ஈனமும்..

பேராசைப் பேய்களும்..

எமக்குள் இருந்ததால்..

வீரம் குழிக்குள் விழுந்த கதை கேளடி

வெள்ளம் குடிகளை அழித்த கதை கேளடி

தன் இனத்துக்காக ஆசைப்பட்டு

தன் இனத்துக்காக கோபப்பட்டு

தன் இனத்துக்காக துன்பப்பட்ட

அந்த ஜீவ அவலத்தில்

மௌனம் காத்த உலகில்

கேள்வி கேட்க யாருமில்லையடி

நம் இனத்துக்கே நாதியில்லையடி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதியில்லையடியம்மா எனக்கு

உயிர் தந்தவள் அங்கே

ஆவி விட்டுப்போகையில்

பாவி நானிங்கே நாண் அறுந்த

ஏதிலியாய் ஏகாந்தமாய்

விதிமுறை வாழ்வு

எதுவரை போகும் என்றே

கதி கலங்கிப் போனேனே

அம்மா மடியில் அன்புமுகம்தேடி

அன்பின் அளவை சொல்லி

அளவிட முடியாத அம்மா

இழந்துவிட்டாலும் மனிதினில்

வாழ்பவள் என்றும் அம்மாதான்

தேடிய அம்மாவின் ஸ்பரிசம்

தேயாதா தேடலின் புதையல்

Link to comment
Share on other sites

தேடலின் புதையல்

தேடாமல் கைகளில்

ஏந்தியதால்

தேடாப் புதையல்

மண்ணில் புதைந்த பின்னர்

அழுகின்றது புதையல் தேடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதையல் தேடி அலையும்

உலகுக்கு புரியவில்லை ,

அகதிக்கு உதவுதல்

பெரும் புண்ணியம் என்று

தன் சுகம் தன வாழ்வு என

சுய நலமுடன் வாழ்வார்

எல்லோருக்கும் ஆறடி நிலம்

என அறியாமல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறியாமல் வாழும் மனிதா

உன்னையே அறியாமல்

வாழும் மனிதா எப்படி

அறிந்து கொள்வாய்

நீ வாழும் உலகத்தை

செப்படி வித்தை காட்டுவார் பலர்

சேர்ந்ததே கழுத்தறுப்பார் சிலர்

முற்றையும் துறந்ததாக

முனிவனே தானாக

பத்தையும் பார்த்ததாக

பலமாக கூறுவார்கள்.

நம்பாதே முடிந்தால்

உன்னையே அறிந்து

கொள்ள முயற்சி

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.