Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்சி ஒன்றே உயர்ச்சி தரும்!

அயர்ச்சி இன்றிப்போராடு!

வெற்றி உந்தன் கையில் வரும்!

நிமிர்ந்து நில் முதுகெலும்போடு!

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதுகெலும்போடு முட்டிநிக்கும் அரவு

முள்ளன்தன்டூடாய் தாவிடவே துடிக்கும்!

முயற்சி இன்றி நீயிருந்தால் - பாம்பும்

சுருன்டே தன் வாலை நக்கிக் கிடக்கும்!

அந்தி சந்தி அவனை நினைந்து மெய்வருந்த

அந்த அரவும் ஆறுசில்லையும் தாண்டியே

அசைந்து நெளிந்து துடித்து ஏறியே

அய்யனின் உச்சியில் அமுதம் ருசித்து ஆடிடுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிடுமே அவள் விழிகள்

காதல் நர்த்தனம்

தேடிய அவன் வதனம்

காணும் வரை

ஓடிடுமே அவள் மனம்

அலை பாய்ந்து

நாடிய அவன் நல்லுரை

கேட்கும் வரை

தேடிடுமே அவள் உள்ளம்

தெருவெங்கும் இசை

பாடிய அவன் குரல் ஓசை

ஒலிக்கும் வரை

பாடிடுமே அவள் விழிகள்

தேடிய அவன்

அவளைத் தேடி வந்து

மாலை சூட்டும் வேளை

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

தேடி வந்து மாலை

சூட்டும் வேளை

சுற்றிய சுற்றமும்

சூட்டும் மாலையும்

நித்தமும் ஏங்கிய மனசும்

மகிழ்ந்தாடும் உண்மை தான்

கட்டிய கனவு நினைவாகி

காலங்கள் உறவாகி

கனிந்த இதயம் நிறைவாகி

கொடுத்த உரிமை நி;யமாகி

வாழும் நாட்கள் உயிராகி

உண்மை அன்பு கொண்டாடி

உறியவள் வாழ்வு மகிழ்தாடி

உரிமையுள்ளவன் மீண்டும் மீண்டும்

வேண்டுமென சொல்லும் காலம்

எக்காலம்?..............

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எக்காலமும் எதிர்காலம் நோக்கியே நம் பயணம்

எப்போதும் நம் நிகழ்காலம் தொலைவதை

நாம் உணராத போதும் எம் நினைவெல்லாம்

இரை மீட்டு சுகம் காணும்,சோகம் காணும்

மீண்டுவரா இறந்த காலத்திலேயே!

Link to comment
Share on other sites

இறந்த காலத்திலேயே...

நித்தியமான என் நினைவுகள்..

நிழலுக்கு ஏங்கிய கோடைகாலம்..

நீருக்கு ஏங்கிய பாலை நிலம்..

காற்றில்லாத காட்டுக்குள்

நமத்துப்போன கனவுகள்..

நிறைவேறாமலே அடங்கிப்போன ஆசைகள்...

எனக்குள் கீறல்கள்

இயலாமை வடுக்கள்

எண்ணி ஏங்கி

மூச்சு முட்டி..

இறக்கும்போதும் இறக்காமலே...

இருக்கும் என் ஆசைகள்..

என் கட்டை வேகினும் வேகாமலே...

வடுவாய் கிடக்கும்-முள்ளி

வாய்க்கால் வலிகள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை

வலிகளின் வாசம் புரிந்தால் வேதனைகள் துச்சம்

வலிக்கும் எதுவும் ரணமாவதும் உண்டு அதன் தழும்புகள்

வருடும்போதும் இதமாய் அமைவதும் உண்டு

வலித்த போது அருகில் இல்லாத நட்பும் அதன் அருகாமையும்

வலிதீர்ந்தபோது ஒட்டுவது நகைச்சுவையின் வடிவம்

வலிகள் மனதின் ஓரத்தில் புரியாமல் புரியும் வார்த்தைகள்

வந்த வலியின் தார்ப்பரியங்கள் யாரிடம் சொல்வேன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்தேனே ஒரு துரோகத்தால் மனசு உடைந்தாலும்

பிறந்தேனே ஒரு நாள் மீண்டும் அக்கினிக்குஞ்சாய்

அலைந்தேனே ஒரு ஜீவனை தேடி அவை எல்லாம்

தொலைத்தேனே ஒரு நாள் அவர்தம் சுயரூபத்தின் முன்பு

தெளிந்தேனே அடங்கா கோபத்தினை அடக்கிய் போது

இழந்தேனே உயிரடங்கும் வேளையை கடந்த போது

புரிந்தேனே உறவுகளின் ஒட்டா மனதினை

திருமால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடடாமனதினை புரிந்த கவியே

அந்தாதி புரிந்து வடிப்பாய் இனியே

புது உறவு நீவிர் வடித்த கவி அழகு

அந்தாதியில் நும் வரவு நல்வரவாகுவதே

முதற் கவியின் அந்தமதை உம் கவியில்

ஆதியாக்கியே கற்பனைப் புரவி பாய்ந்தோடத்

தட்டிடுவாய் திரையினிலே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரையினிலே கண்ட கவி

ஒழுங்க்கு முறைமை திசைமாறக்கண்டு

அழகு தமிழில் நகைச் சுவை கொண்ட

கவி வடித்த் சுவைக்கவியே

திரைகடல் கடந்தாலும் திரவியத்தமிழ்

மறவா தமிழ் மகனை பார் புகழ

வாழ்த்துகிறேன் வார்த்தைகளை

தேடுகிறேன் தமிழ் மகனே வாழ்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரையினிலே கண்ட கவி

ஒழுங்க்கு முறைமை திசைமாறக்கண்டு

அழகு தமிழில் நகைச் சுவை கொண்ட

கவி வடித்த் சுவைக்கவியே

திரைகடல் கடந்தாலும் திரவியத்தமிழ்

மறவா தமிழ் மகனை பார் புகழ

வாழ்த்துகிறேன் வார்த்தைகளை

தேடுகிறேன் தமிழ் மகனே வாழ்க

நல்ல கவிதை சகோதரி :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க வென்றுரைத்தே வழியனுப்பி

வைத்தனர் தோழர்கள்

வெல்க வென்றுரைத்தே விருந்து

இட்டனன் எம் தலைமகன்

சூழ்க என விரைந்தே சூழ்ந்து

நின்றது கொடியவர் கூட்டம்

ஒழிக என்று அழித்தே தன்சுடர் தந்து

இருபத்தேழில் அகல்சுடர் கண்டனன் அந்தோ!

நீட்டிய காலை முறித்தவன் சிங்களன் - உதவி நாடி

உயர்த்திய கையை உடைத்தவன் இந்தியன் - இன்னொரு

கையையும் பிடித்தே இடை வேட்டியையும்

உருவினர் இணைந்தே இருவரும்!

எட்டுத் திசையெங்கணும் எமக்கா எதிரிகள்

எல்லோரும் எம்மை ஏதிலியாக்கி

பிச்சை இடுவதிலே கருத்தாயினர்.

பத்துக் கரம் தா பராசக்தி பத்துத் திக்கும் பரவிட

கொத்துச் சிரம் கொய்து நின்தாள் பணிந்திட

ஈழவேள்விக்காய் இளங்கன்றை ஈய்ந்தவன்

வேழமென முழங்கி மீண்டும் வருவானோ

காலமெல்லாம் எம்மிதயத்தில் வாழ்பவன்

கார்த்திகை இருபத்தேழில் இன்னுரை சொன்னவன் - ஐய

உன்னுரை மட்டும் இன்னும் நம் செவியில்

"எதிரி ஈவிரக்கமற்றவன்,

போர்வெறி கொண்டவன்

எம் தாயகத்தை சிதைப்பதும்

எம்மினத்தை அழிப்பதும்

அவனது இலட்சியமே!"

"எமது தேச வளத்தின் அடிப்படையில் நம்

தேசிய பொருளாதாரம் சுயநிறைவு காண வேண்டும்!"

"சுதந்திர எழுச்சியின் உந்துதலால் தான்

மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கிறது!"

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சுழல்கிறது

வாழ்க்கைச் சக்கரம்

எப்படியோ...

புலா்கின்ற பொழுதுகளில்

மலா்கின்ற பூக்களைப் போல்

விரிகின்ற கதிரின்

ஒளி பட்டு

விலகிப் போகாதோ

கவலையது எமை விட்டு!

தெரிகின்ற பாதையெங்கும்

நடந்தே திரும்பினேன்

ரணங்களின் வேதனையன்றி

வேறேதும் காண்கிலேன்!

சிரிக்கின்ற மழலை

கண்டு வியக்கிறேன்

நாமும் ஒரு நாள்

அவ்வாறு இருந்த

கதை நினைக்கிறேன்!

புரிக்கின்றது எல்லாம்

வீணே புலம்புவது வீணாம்!

மழலை போல் சிரிக்கப் பழகுவதே

கவலை போக்கும் அரு மருந்தாம்!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அருமருந்தாம் காலம் - அக்

காலம் கணமேனும் கூடக்

காத்திருப்பதில்லை!

கடல்தான் எழுந்து

கரையெல்லாம் விழுங்கிடினும்

மலைதான் புரண்டு

மாந்தரைப் புதைத்திடினும்

புயலும் சோலையை

பெயர்த்து வீசிடினும்

காதலும் விழுந்து

காதலர் துவண்டிடினும்

காலம் மட்டும் கவலையின்றி

காலடியை கடந்தே செல்லும்!

Link to comment
Share on other sites

கடந்தே செல்லும் எம் கவலைகள் என

காத்திருப்போம் மன உறுதியோடு

விடிந்திரும் ஒரு நாள் எம்மவருக்காய்

விழிப்போடிருப்போம் செயற்படுவோம் எம்

விடியலுக்காய் காத்திருப்போம்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

விடியலுக்காய் காத்திருப்போம்

என்று சொன்னவளே

கை நிறைய கரன்சியோடு

மாப்பிளை கண்டவுடன்

கை காட்டி சென்றாயே!

அடுக்குமாடி இது?

அடுக்கு மாடி கொண்டவன்

பின்னால்

செக்கு மாடு போல்

நீ போவது

அடுக்குமாடி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுக்குமாடி அந்தோ

அன்னை பராசக்தி

அருந்தவப் புதல்வனை

அவனிக்குத் தந்தவள்

அவ் அன்னையின் உயிரை

அழைத்துக் கொண்டனையோ!

பர்வதம் அம்மாவின்

பாசமிக்க ஆன்மாவை

முற்றம் பெருக்கு முன்னே

முதலாய் நீ கொண்டனையோ

வாசல் தெளிக்குமுன்னே

வாகாய் நீ வாரினையோ

கோலம் போடுமுன்னே

காலனை ஏவினையோ!

நஞ்சனிந்து கொண்ட மகன்

நாடிழந்து சென்ற மகன்

நாடுகொள்ள வரும் வரைக்கும்

பேரனுடன் விட்டனையோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விட்டனையோ தாயே உன் உயிர் மூச்சை!

கட்டியெழுப்பிய ஈழமாம் தேசத்தை

ஒட்டி நின்று அழித்த கோடாரிக்காம்புகளால்!

விட்டனையோ தாயே உன் உயிர் மூச்சை!

பெட்டிப்பாம்பாய் அடங்கிக் கிடந்தவர்கள்

கொட்டமடிக்கும் நிலை கண்டு

விட்டனையோ தாயே உன் உயிர்மூச்சை

எட்டி நின்றுதான் அழமுடியும்

எம் உறவுகளால்! முட்டி நிற்கின்ற

பகையின் தடைகளினால் எட்டி

நின்றுதான் அழமுடியும் எம் தாயே!

‘வெட்டிப் பகை முடித்து வேங்கை

வரும் செய்தி கேட்டு! எட்டுத்

திக்கும் வெளிக்கும் ஒருநாள்!

என் தாயே! !!!அதுவரை எம்முள்

மெளனமாய் அழுகின்றோம்!

Link to comment
Share on other sites

மெளனமாய் அழுகின்றோம்

மனமுடைந்து நிற்கின்றோம்

எம் அன்னையாய் உம்மை பாக்கின்றோம்

உம்மை பிரிய மனமின்றி பிரிகின்றோம்

நன்றி அம்மா தங்க தலைவனை தந்தமைக்கு

சென்று வாருங்கள் அம்மா சென்று வாருங்கள்

அங்கிருந்து பாருங்கள் எமக்கே எமக்காய்

என்றோ ஒருநாள் விடியப்போகும் ஈழமதை....!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈழமதை சுனாமியும் சூழ்ந்தே

கரையதை உடைத்து கரையுறை மாந்தரை

பெருவதை கொடுத்து ஆழ்கடலில் தள்ளியே

காலமதை கடந்து தடங்களை பதித்தது.

விட்ட சுவடுகளை தேடிய கடலும் _ வின்

முட்ட எழுந்தே கருக்கலில் கரை புகுந்தது.

பசிபிக்கின் மேல் சுவாசித்து நின்ற தீவுகளை

அலைக்கரம் நீட்டி அள்ளிச் சென்றது.

கப்பல்களை கரையில்லேற்றி

கார்கள் எல்லாம் தானெடுத்து

சங்குகள் வீசி அணுஉலைகள் உடைத்து

மீன்களை தந்து மாந்தரை கொண்டதே!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொண்டதே கோலம் என்றாகிப்போன நிலைதனில்

கண்டதை எல்லாம் அணிந்து காட்சிப்பொருளாய்

உலா வருவதில் ஆணுக்குப் பெண் நிகராய்

போட்டி போடும் உலகம் தற்கால உலகம் இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டதே கோலம் என்றாகிப்போன நிலைதனில்

கண்டதை எல்லாம் அணிந்து காட்சிப்பொருளாய்

உலா வருவதில் ஆணுக்குப் பெண் நிகராய்

போட்டி போடும் உலகம் தற்கால உலகம் இது

தற்கால உலகுக்கும்

கற்கால உலகுக்கும்

பேதம் அதிகமில்லை!

அன்று மரவுரி தரித்துத்

திரிந்தது பெண்குலம்,

இன்று,

அரை குறை ஆடையுடன்

'நரை' பெயர்ந்த பின்னும்

நடை பயில்வதைக் காணக்

கோடிக் கண் வேண்டும்

கறுப்பி!

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பின் வண்ணத்தில் சிரிக்கும் கண்ணன்

கம்சனின் சிறையில் பிறந்தான் __ நந்த

கோபனின் கோ மந்தையுடன் வளர்ந்தான்

காளிங்கன் சிரங்களில் தாவி ஆடினான்

கோபியர் மனங்களில் நீங்காமல் நிறைந்தான்

அன்னை தேவகி உதரத்தில் உதித்தான் __ தாய்

யசோதை மடியினில் தவழ்ந்தான்

இந்திரன் இடியாய் இறங்கவே __ கோ

வர்த்தன கிரியால் கோகுலம் காத்தான்!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

காத்தான் கூத்து விடிய விடிய

பார்த்த உற்சாகம் தணியுமுன்னே

காத்தவராயனிடம் மண்டியிட்டு

காத்திடுவாய் எம் உறவுகளை என்றே

காலைப் பிடித்து தொழுதபோதும்

கைவிட்டான் கைகளை

கால்களை பிடித்ததாலோ என்னவோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ கூறுங்கள்!

இலவு காத்த கிளி போன்ற,

எங்கள் இழிநிலை வாழ்வும்,

அந்நிய நாடுகளில் ,

அடையாளம் இழந்து, சொந்த

நிலத்துக்காய் ஏங்கும்,

புலத்துச் சொந்தங்களும்,

கண்ணீரில் கரையும்

வன்னி உறவுகளும்,

காத்திருக்கின்றன!

கால தேவனின்,

முடிச்சு அவிழும் வரை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.