Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி நீங்களா எழுதினீங்கள் சூப்பராய் இருக்குது...பாராட்டுகள்...தொடர்ந்தும் எழுதுங்கள்

ரதியவர்களுக்குப் பாராட்டி ஊக்கப்படுத்துகின்றமைக்கு நன்றிகள்.முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 1.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிற்பீரா நேர்கண்ட சிந்தனையுடன்

கற்ற கல்வி பார் எங்கும் பரப்பிட

நல்லதாய் நாலு வார்த்தைகள் உமிழுங்கள்

நலிந்து போன நல் இதயங்கள்

நா வரண்டு போகும் முன்னே

நவின்றிடுவீர் செல்வமதை விருப்புடனே

Link to comment
Share on other sites

விருப்புடனே எல்லையில் காத்து நின்றோம்!

சா வரினும் விழி பூத்து நின்றோம்!

காலமது காலைவார... - ஊர்

எல்லையையும் தாண்டி வந்தோம்!

காத்துநின்ற காரணத்தால் இரும்புக் கூண்டின் உள்ளே வைத்து

கதறக் கதற செத்துப் போக செந்நீரில் ஊற வைத்தார்!

பதறிப் போய் சொந்தமெல்லாம் எமக்காய்க் கதறுமென்று,

இன்னும் காத்திருக்கும் எஞ்சிய எம் (ஏ)மாந்தர்!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(ஏ)மாந்தர் பார்க்கும் மாந்திரீகங்கள்

சாத்தான் ஓதும் சாத்வீக சாத்திரங்கள்

பார்த்தால் தலை சுத்தும் தட்சணைகள்

வேண்டாம் என தள்ளி வைத்தவனே

வாழ்க்கையில் முன்னேறும் மனிதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் ஒரு மனிதனை

தேடுகிறான் மனித நேயங்களை

குழி தோண்டி புதைத்துவிட்டு

இன்னுமொரு மனிதன் அப்

புதை குழிகளின் மேல்

மனிதர்களை புதைக்கிறான்

இன்னுமொரு மனிதனின்

நப்பாசை புதைத்த புதைகளில்

இருந்து புது மனிதன்

மனித நேயங்களுடன்

பிறக்கமாட்டனா என்ற ஏக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் அறிவை

மழுங்கடிக்க வைக்கும்

காதல் துவர்ப்பாயிருந்தது

காதலிக்க தொடங்கும்வரை

இனித்தது காதலிக்கும் போது

கசந்தது ஊடல்கள் கூடிய போது

உறைத்தது ஏமாற்றப்படுகிற போது

கரித்தது கைவிடப்பட்ட போது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனை மனிதன்

அடிமை கொள்கிறான்,

அழிக்க முயல்கிறான்,

மனிதனை மனிதன்

சுரண்டி வாழ்கிறான்

அன்றுதொட்டு இன்றுவரை

மனிதனே மனிதனின்

முதன்மையான எதிரியாக

விளங்கி வருகிறான் - தேசிய தலைவர்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வருகிறான் பகைவனவன்

பல்வேறு வேடமுடன்

தமிழரே புரிந்து கொண்டு

தவமிருந்த தலைவனது

தடம் தொடர உறுதி கொள்வீர்!

காலம் போடுகின்ற

புரியாத கணக்கினிலே

விலையாகிப் போனோரை

எட்டப்பனைப் பேசுதற்காய்

கட்டப்பொம்மன் எடுத்தாண்ட

சொல்லிய வரிகளது

இவருக்கும் பொருந்துமென்று

சொல்லியா புரிய வேண்டும்!

வேண்டுமெக்கு ஈழமன்றோ

விடுவித்தல் எம் கடனன்றோ

தாழ்நிலையைத் தகர்த்தெழுவோம்

தமிழீழ மண் மீட்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மண் மீட்போம்!

தவழ்ந்து திரிந்த காலத்திலிருந்து,,

தந்தை செல்வாவும்,,

தானைத் தளபதிகளும்,,

திரும்பத் திரும்பக் கூறினர்,

தமிழீழ மண் மீட்போம்!

ஆண்டுகள், தசாப்தங்களாக,

ஆயிரமாயிரமாய் உயிரிழந்து,

ஆயுதங்களை மவுனித்து,

அகிம்சையின் பாதையில்,

உறுதியுடன் நிற்கிறோம்!

ஆனாலும்,

நாங்கள் உழுத வயல்களில்,

சிங்களம் விதைக்கின்றது!

எங்கள் கரங்களே! :wub:

கண்களைக் குத்துகின்றன!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்தேனே நான் இறந்தேனே-என்

இனம் அழிவது கண்டு தினம் இறந்தேனே

இறந்தேனே தினமிறந்தேனே -என்

அண்ணன் வருவானென்று இருந்தேனே

இருந்தேனே தவமிருந்தேனே -மனம்

மரத்தப் போகும் வரை தவ மிருந்தேனே

தவ மிருந்தேனே நான் இருந்தேனே-என்

தலைவன் நீடு வாழத் தவமிருந்தேனே

தொடருங்கள் நண்பர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை வள மண்ணின் வீரத்திருமகன்

வில்லென வருவான் மீண்டுமொரு முறை

சொல்வது என்னுடன் கோடித் தமிழர்கள்

நல்லதே நடந்திடும் நாடும் மலர்ந்திடும்

முள்ளி வாய்க்கால் முடி வல்ல மௌனம்

மெள்ளக் கலைந்திடும் விரை வினில் மௌனம்

துள்ளி எழுந்திடும் தமிழ்ப்படை வீரம்

தள்ளி ஓடிடும் சிங்களம் ஓரம்

சூரியத் தேவனின் சங்காரம் முழங்கும்

ஆரியச் சிங்களத்தின் சங்கு நசுங்கும்

சீரிய தலைவனின் சிரசது நிமிரும்

பாரிய படையுடன் சிங்களம் ஒதுங்கும்

முல்லை மண் சிரிக்கும் ஈழத்தில் முரசொலிக்கும்

வல்வை மைந்தனின் சாணக்கியம் ஜொலிக்கும்

எல்லைகள் நிமிரும் எக்காளம் முழங்கும்

பல்லாண்டு பிர பாகரன் நல்லாட்சி நடக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சி நடக்கும் _ இனி

நாடும் விலங் கொடித்திடும்!

புலம் பெயர்ந்தோர் ஒற்றுமை காண

புலர்ந்தது காண் பொழுது இன்று!

தீயவர் யாவரும் தொலைந்திட

ஏற்றிடுவோம் நிரைத் தீபங்கள்!

தேசமெங்கும் வீறுகொண்டெழ வே

வந்தது கார்த்திகை இருபத்தேழு !!!

(தயவுடன் அந்தாதி கவனித்து கவிதை யாப்பீர்)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை இருபத்தேழு

ஒன்றும் காலப் பெயரல்ல

தேசத் துயரத்தை

துடைத்தெறியும் துணிவோடு

தமிழீழத் திசையெங்கும்

தம்மை யுருக்கியோரின்

பாதச் சுவடுகளில்

ஒளியேற்றி வழிபட்டு

உங்கள் இலட்சியத்தை

உயிருள்ளவரை தொடர்வோமென

இப்பூமிப் பந்தனிலே

வாழும் தமிழினமே

உறுதி பூண்டெழுகின்ற

உன்னத எழுச்சிநாள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னத எழுச்சிநாள்!

தேரோட்டிப் போரறைந்து,

வீரம் விழைத்தவன்,

சோரம்போன கதையாகி,

பாரெங்கும் அடிமைகளாய்,

பறையறைந்து,

தூங்கிக் கிடந்தவன்,

துயில் கலைந்த நாள்!

விழியில் நெருப்பேந்தி,

பழியகற்றிய வீர்ரர்களை,

பாரினில் நினைவிலேந்தித்,

தீபமேற்றும் நாள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாள் எம் மா வீரர் நாள்

நாள் கார்த்திகை 27ம் நாள்

நாள் தியாகத்தின் நினைவு நாள்

நாள் நா மாராதிக்கும் நாள்

நாள் நாம் தீபமேற்றும் நாள்

நாள் தமிழ் வீரம் கூறும் நாள்

நாள் தமிழன் மானம் காத்த நாள்

நாள் நாம் சபதம் பூணும் நாள்!

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நாள் நல்ல நாள்!

நினைப்பதில்லை என்றும்

இன்றும் மறந்ததில்லை யதனால்!

மெல்லிய தென்றல்

மெல்லியலாள் மேனி தழுவ

"கசோரினா " கடலலைகள்

கால் கொலுசோடு கதைபேச

அநியாயத்துக்கு ஒரு நண்டு

ஆர்வமுடன் உன் கால்கடிக்க

"பாட்டா "வால் அதையடித்து

பட்டென்று எடுத்தெறிந்தாய் !

பார்த்தேன் ரசித்தேன்

பூவொன்று புயலானதை !!

Link to comment
Share on other sites

  • 5 months later...

பூவொன்று புயலானதை

புன்முறுவல் மாறாமல்

நான் ரசித்தேன்

ஏன் என்று நான் சொல்லவும்

வேண்டுமோ?

கட்டிலறைக் கதைகள் எல்லாம்

உமக்கெதற்கு

காதை மூடி

கதவை மூடி போங்கள் ஐயா

பொழுது விடியப் போகுது!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்தேனே உனை எண்ணி தினம் இறந்தேனே

இறந்தேனே என் இறப்பில் எனை மறந்தேனே

மறந்தேனேயெனை ஊனுறக்கமெலாம் துறந்தேனே

துறந்தேனே ஆணவம் துறந்தபின் மீண்டுமுனக்காய் பிறந்தேனே

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தேனே நான் !   பிறந்தேனா நான் !!

 

சின்னச் செடியொன்று வாடி நின்றது

அப்பா அதுக்கும் நீர் விட்டார்

அருகில் நின்ற கள்ளிக்கும் ,

அங்கு வந்த ஜிம்மிக்கும் ,

அதே வாத்சல்யம்.

 

நானும் தண்ணி ஊத்தினேன் ஒருநாள்.

கள்ளியை கவனிக்கவில்லை .

வாலாட்டி வந்த ஜிம்மிக்கு

வாளியால் ஓர் அடி.

 

முற்றத்தில் குந்தி இருக்கின்றோம்.

கலயத்தில் கஞ்சி சூடுபறக்க ,

வனத்தில் நிலா கஞ்சிக்குள் !

 

அம்மா ஊத்தித் தருகின்றாள்

கஞ்சியோடு  வெள்ளித் தட்டு என்னிடம் !

பூப்போட்ட மாக் கோப்பையில்

பூவாய் கஞ்சி  அக்காவிடம் !

தாமரை இலையில் கஞ்சி

தவழ்ந்தபடி  அப்பாவிடம் !

நாலு இலையைப் பிணைத்த

கல்லையில்  கஞ்சி அம்மாவிடம் !

 

சிந்தவில்லை அம்மா !

சிதறவில்லை  அப்பா !

ஒழுகவில்லை அக்கா !

அத்தனையும்  என்னிடம்

கதகளி  ஒப்பனையில்  என் முகம் !!

 

பாத்திரம்  எதுவானால் என்ன

பண்டம்தான்  அவசியம் !

பத்திரமாய்  உண்ணுவது

அதைவிட முக்கியம் !

 

செடியிலே பூக்கள் அதனுடன்

கள்ளியும் பூத்திருக்கு !

கூட கூர்மையாய் முட்களும் !!

 

அப்பா மடியில் ஜிம்மி ,

அக்கா கால் பிடிக்க ,

அம்மா பத்துப் போடுகிறாள் ,

நான் பாத்துப் போகிறேன் !!

 

தலைக்குள் மின்னல் -  அப்பா

விட்ட நீருக்கு பூக்கள் ,

நான் ஊத்திய தண்ணிக்கு முட்கள் !

நொண்டியபடி என்னருகே ஜிம்மி !

தூக்கி மடியில் வைத்து

காலைத் தடவுகிறேனா !

காலைப் பிடிக்கிறேனா !!

 

பிறந்தேனே நான் !   பிறந்தேனா நான் !!

இனியாவது பிறக்க வேண்டும் !!!

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டும் எமக்கு வேண்டும்

தலைவன் ஒருவன்  வேண்டும்

தளிர்த்த எம் விடுதலைப் பயிரிடையே 

முளைத்த ஒட்டுண்ணிகளை  மூலையில் 

ஒடுக்க ஒருவன் வேண்டும்

 

இன்று நம் நாட்டில் உயிரற்ற மானுடரை 

உயிர்ப்பிக்க அவன் வேண்டும் 

அரசியல் என்று அறுவடைக்குத் தயாராகும் 

எம்மினத்தின் அடிவருடிகளை  அடக்க 

மீண்டும் ஒருவன் வேண்டும்.

 

நெருப்பே இல்லாமல் புகைக்கும் 

விடுதலைத் தீ மீண்டும் சுடர்விட 

நாளை எங்கள் நன்னிலம் தழைக்க 

மீண்டும் எங்கள் தலைவன் வேண்டும் 

 

வருவான் ஒரு நாள் எம் தலைவன் 

அன்று திணறுவான்  எதிரி அவன் வருகையால்  

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வருகையால் பெருமை கொண்ட எம் அண்ணன்   - தன்

உள்ளத்தால் உயர்ந்தவன்தான்  மணிவண்ணன் !

தமிழ் ஈழம் வேண்டிக் குரல் கொடுத்தான் - புலிக்

கொடி  மார்பிலாடத்  துயில்கின்றான்.

 

கதைகள் சொல்லிக் கருத்தைக் கவர்ந்தான்

இயக்கம் செய்து இதயம் நிறைந்தான் !

நடிகனாய் தோன்றி விழியில் மலர்ந்தான்  - ஓர்

வேங்கையாய் வாழ்ந்து எம் உணர்வில் கலந்தான் !

 

அமைதிப் படையாய்  வந்து

அட்டூழியம் செய்த நாட்டில்

பாலைவன ரோஜாவாய்

பாசம் தந்த பண்பாளன் !

 

24 மணி நேரம் போதாது !

நூறுநாள் அழுதாலும் காணாது !

மாவீரர்களுக்கு என்றும் மரணமில்லை -ஐய

நின் கோபுரங்களும் சாய்வதில்லை !!

 

 

 

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கோபுரங்கள் சாய்வதில்லை  - தமிழர் 

கொள்கைகளும் வீழ்வதில்லை

முள்ளியில்  வெட்டுண்ட  மக்கள் 

வேரினில் மட்டும் உயிரோடு 

காளையரைக் கலங்கடித்தான்  -பாவிமகன் 

பாவையரைப்  பதற வைத்தான் 

 

நவிப் பிள்ளையும் வந்தார் 

நன்றாகத்தான் சொன்னார் !

 

புரட்டாசி இருபத்தொன்று - முள்வேலி

கட்டவிழ்க்க வந்ததின்று 

கல்வீடிழந்த மாந்தர்க்கு கிடைத்தது 

காகிதவீடு  புள்ளடியிட 

கையிலே மையைப்  பூசினர் - கயவர் 

முகத்திலே கரியைப் பூசினர் 

 

சிதறிய கால்கள்  சிலிர்த்து வந்தன 

வெட்டிய கைகள் வெகுண்டு வந்தன 

வாக்குப்  பெட்டிகள்  எல்லாம் 

வாக்குச் சீட்டால் நிரம்பின 

செல்வாக்கெல்லாம் 

செல்லா வாக்காகியது - மக்கள் 

சொல்வாக்கு  தமிழன் 

தோளைத் தாங்கியது 

 

மன்னவன் படைகள் 

மதியிழந்து விழித்து நிக்க 

ஒட்டுக் குழுக்களும்  ஓலமிட்டு 

ஒழுங்கைககால்  ஓடினர் 

 

ஈழத்து  வேரும் விக்கி ஈரம் தேடுதம்மா 

எழுந்து வந்தான் விக்கி இருகரம் நீட்டி 

விதையான  வீரரெல்லாம் 

செந்நீரைத் தந்தனர் 

கவலைப் பட்ட மாந்தரெல்லாம் 

கண்ணீரைத் தந்தனர் 

வீட்டிலேயே வென்ற வேந்தரெல்லாம் 

விரைந்தோடி வருகின்றார் 

வாக்குக் குவளையில் வருணனை வாரிக்கொண்டு 

 

பாரில் மாந்தர்க்கு பகல்கின்றார் நற்செய்தி 

மாவீரர் இல்லங்கள் மதிப்பாய் மிளிரும் என்றார்  அண்ணன் 

நாம் பயங்கரவாதியல்ல  விதலைப் போராளிகள் ,  அன்னை 

 

துப்பாக்கி விட்ட புலி  தூக்கம் கலையுதம்மா 

எழும்புலி முதுகில் வெண்புறாவும்  அமருதம்மா  !

பட்ட மரம் என்றிருக்க பசுந்தளிர்  தோன்றுதம்மா 

வெட்டிய வேர் பிளந்து வெள்ளை மலர் பூக்குதம்மா !! :D  :D  :icon_idea:

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி விட்ட புலி  தூக்கம் கலையுதம்மா 

எழும்புலி முதுகில் வெண்புறாவும்  அமருதம்மா  !

பட்ட மரம் என்றிருக்க பசுந்தளிர்  தோன்றுதம்மா 

வெட்டிய வேர் பிளந்து வெள்ளை மலர் பூக்குதம்மா !!  :D   :D   :icon_idea:

 

 

அருமை

இத்தனை  நாள் இதற்குள்   வராமல்  விட்டுவிட்டேன்

தொடருங்கள் அண்ணை

(இத்தனை  திறமையை  எதற்கு ஒழித்து வைத்தீர்கள்

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பூக்குதம்மா  காந்தள்தான் புலிவீரர் கல்லறையில்

பாக்குதம்மா பாரெல்லாம் பாலகர்கள் உறங்குவதை

வியக்குதம்மா தேசமெல்லாம் வேங்கைகளின் நெஞ்சுரத்தை

வாழ்த்துதம்மா தமிழினம்தான் வரலாற்றில் நிலைத்தவனை!

 

ஒரு தாயின் கருவறையில் ஜனித்து

ஒரு கோடி மனவறையில்  மலர்ந்திட்டார்

ஒரு ஈழ விடிவிற்காய் எழுந்து

ஓரயிரம் கிளைகலாய் பரந்த்ட்டார்

போர்களத்தின் செந் தனலில் கனிந்தெ

ஆயிரமாயிரம் விதைகளாய் நிறைந்திட்டார்

வித்துக்கலாய் வாழும் தருக்கலுக்கு

கார்த்திகையில் கரம்கூப்பித் தொழுகின்றோம்!

 

கண் கொட்டும்  கண்ணீ ரில்

கையில் புக்ஷ்பங்களும் நனையுதே

நெஞ்சிலே தகிக்கும் கனல்

நினைவெல்லாம் தமிழீழம்

மலர்ந்திடும் நாளும் அருகே

மங்கலாய்த் தெரியுதே!!!

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தெரியுதே ! அகல் தீபமின்று _ இனி

விரியுதே ஆதவன் பேரொளியாய் நின்று

சொரியுதே நறுமலர்கள் நின் சிரசில்

குவியுதே கோடிமலர்கள் உன்  தாளில் !

 

ஆயிரம் ஆண்டுகள் வாழும் பனைமரம்

ஆணியும் ஏறாதது  ஆணிவேரும் இல்லாதது _ இங்கு

ஆணிவேரோடு ஒரு மரம் மோகனமாய் அசைகிறது

அன்பு ஆள்வதால் ஆணிகளையும் சுமக்கிறது !

 

ஐந்து கை ஐராவதமே  உன் தோளில்

நம்பிக்கைகள்  ஐயாயிரம் _ தமிழ்

முகவரி தொலைத்த உறவுகளுக்கு

தேடிக் கொடுத்த கூகுள் நீயே !

 

பலநூறு காண வேண்டும்  முத்தமிழே _ யாழெ

பதிணாறில்  கால் பதிக்கும் நூலகமே

பாசம் கொண்டவர் பல்லாயிரம் காண் _இனி

பாசம் வீச எவன் துணிவான்...!

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.