Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

கோவம்...

குற்றாலத்திற்கும்..

குன்றிற்கும்..

என்னடி கோவம்...

குற்றாலம்.. குன்றேறிக்..

குளிப்பாட்ட ஏங்க...

குன்றுக்கோ

குற்றால நீராட

மனதார வாட..

ஏனிந்தக் கண்ணாமூச்சி..

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாமூச்சி விளையாட்டில்

கண்களைக்கட்டி இருளில்

உருவங்களைத் தொலைத்து

முகரும் சுவாச நொடிகளில்

தேடிப் பிடித்து

ஆடி முடிந்த ஆட்டங்களின்

ஞாபகங்கள்

மறக்க நினைத்தாலும்

மறுபடி மறுபடி வருகின்ற

நினைவுகள்

Link to comment
Share on other sites

நினைவுகள் இன்றும்

நீங்காமல் அன்றுபோல

நிழலாடுகின்றது

என் நெஞ்சில்

சிரட்டையில் சோறு சமைத்து

ருசித்து நாம் சாப்பிட்டதும்

உன் முதுகில் எனைச் சுமந்து

கூனிக் கூனி நீ நடந்ததையும்

கிட்டிப்புள் அடிச்சு பக்கத்துவீட்டு

சட்டிபானை நீ உடைச்சதும்

பிறந்தநாள் சட்டையில் நீ

சேறு பூச நான் அழுததையும்

அரும்பிய உன் மீசை கண்டு

குறும்பாக அதை நான் இழுக்க

அடிக்க ஓங்கிய உன்கைகள்

கட்டி எனை அணைத்ததையும்

இன்னும் இன்னும்

இனிய நினைவுகள்

எத்தனை எத்தனையோ

அவையனத்தையும்

உன்னோடு பகிரணும்

உடனே வா காளையே :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளையே எருமைத்தயிர் உண்டால்

நாளை சிங்களவளை எதிர்த்து

வாழலாம் என்றே அன்னை

பாலை தயிராக்கி ஊட்டி ஊட்டி

வளர்த்தாள் இப்போ

அன்னையோ சிங்களவன் நாட்டில்

காளையோ புலத்தில்

Link to comment
Share on other sites

புலத்தில்தான் பூவையே..

பொழுதெல்லாம்...ரணம்..

இதயம் தினம் அழும்..

ஈரநினைவுகள் எழும்..

அம்மா மனசுக்குள்...

அழைப்பதும்....

தங்கை காதை..நான்

திருகுவது போல் இருப்பதும்..

அப்பா அருகே கனைப்பது

போல் தோன்றுவதும்..

மாமா..மாமி..

சித்தி..சித்தப்பா..

எல்லோர் பிரியமும் பேச்சும்...

இழந்த காளை

புலத்தில்தானடி பூவே..

புலத்தில்தான்.

Link to comment
Share on other sites

புலத்தில் தானடி பூவே

புலத்தில் தான் என்று

சிரிக்கும் இதயங்கள்

காட்டும் கோபங்கள்

சொல்லா வார்தை கொண்டு

சொல்லி செல்லும்

மாயங்கள்....

கனத்திடும் பொழுதினில்

காயங்கள் சுமப்பவர்

காயத்தால் செய்திடும்

மாயங்கள்.......

புலத்தில் தானடி பூவே

புலத்தில் தானடி......

Link to comment
Share on other sites

புலத்தில்தானடி

வெள்ளைப் பூக்களும்..

கறுப்புத்தேனியும்.....

கறுப்புப்பூக்களும் காதல்

கொள்வதைக் காண்கிறேன்...

காதலுக்கு இது

வலுவென சந்தோசம்

கொண்டேன்..

சிரிக்க விரிந்த

இதழ்கள் மூடுமுன்னே...

செடியிழந்த பூக்கள்..

சிதறிக்கிடந்ததும்..

பூ உதறித்தள்ளியதாய்..

தேனீக்கள்..

மதுவருந்திக்கிடப்பதையும்..

கண்டேன்..

அடடா..

இங்கேயும்.. இப்படித்ததானா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்ததானா இடித்துரைப்பது நீ

இதயக்கரையில் விழுந்ததோ ஒர் கீறல்

கண்ணீர் விலக்கிய பார்வையின் ஒளியில்

நர்த்தனம் புரியும் உந்தன் உருவம்

Link to comment
Share on other sites

உருவம்..

பருவக்காலங்களால்

மாறக்கூடும்...

அலங்கோலமாகக்கூடும்...

என்னிதயம்.. தூய்மையாக

இருப்பதை என்னால் உணர முடியாமல்

போகின்ற காலத்தில்..

நான் உன்னருகே

இருக்கமாட்டேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டேன் வரவே மாட்டேன்

வாசல் தேடி வந்த என்னை

விழிமலர மொழி பேசி

வாவென்ற அழைக்காத

வாசல் தேடி எப்படி என்

பாதங்களை பதிப்பேன்

Link to comment
Share on other sites

பதிப்பேன் உன்

பாதம் அடி வைக்க

அங்கே என்

உள்ளங்கைகளை....

வேண்டாமா விடு..

நீ வராத வீட்டுக்கு...

உன் தங்கை வருவாளா...

கேட்டுப் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கிறேன் என் கன்னத்தை

பதிந்துவிட்ட உன் கைவிரல்

பதிப்புக்களை ஆஆஆஆஆஆ

வலிக்கின்றது மனமும் சேர்ந்து

பலிக்கடாவாகி விட்ட என்னை

காளிக்கு ஒப்பாகவா வர்ணிக்கிறாய்

Link to comment
Share on other sites

வர்ணிக்கிறாய் தினமும்

வெண்ணிலவை உன்கவிகளில்

வர்ணிப்புக்கு எல்லையே இல்லையா

வெள்ளையுள்ளம் கொண்டவனே..

கெஞ்சிக் கேட்கிறேன்

பஞ்சுமேகத்தை வர்ணி

கொஞ்சிக் கேட்கிறேன்

மஞ்சள்வானத்தை வர்ணி

கன்னி நான் கேட்கிறேன்

மின்னும் நட்சத்திரத்தை வர்ணி

சின்ன வாய்திறந்து கேட்கிறேன்

வர்ண வானவில்லதை வர்ணி

இனிமேல் உன்கவிகளில்

இவள் கேட்ட வர்ணனைகள்

மட்டுமே அலங்கரிக்கும் என்று

கட்டளை இடுகின்றேன் மன்னவனே..

Link to comment
Share on other sites

மன்னவனே என் மஞ்சத்தில்

கஞ்சமின்றி துயில் கொண்டவனே

கொஞ்சி பேசி காதல் சொன்னாய்

கொஞ்சமில்லாமல் விஞ்சியும் நின்றாய்

அஞ்சி அஞ்சி என் அந்தரங்கம் கண்டாய்

இந்த வஞ்சியை கஞ்சிக்கு

ஏங்க வைத்துவிட்டாயேடா ?

Link to comment
Share on other sites

ஏங்க வைத்துவிட்டாயேடா

நீங்கி எனைச் சென்றதனால்

எங்கே சென்றாய் என்னவனே

வீங்குகின்றன கண்களிரண்டும்

கொங்கைகள் துடிக்கையிலும்

மங்கலமான முகம்வாடுகையிலும்

மங்கையிவள் தவிக்கின்றாள்

வேங்கையே நீ வந்துவிடு...

வங்கக்கடல் அலைகல் போல

பொங்குகின்றன நினைவலைகள்

திங்களிவள் சோருகின்றாள்

சிங்கமே என்முன்னே வா..

இங்கிதமானவனே எனக்கு

தீங்கேதும் நேருமுன்னே

பங்கயக் கழுத்தில் முத்தமிட்டு

சங்கமம் ஆகிவிடு என்னுள்ளே

Link to comment
Share on other sites

என்னுள்ளே வசிப்பவளே

என்னையே சுவாசிப்பவளே

கண்ணிலே மணியாகி

கனவிலும் உறுத்துபவளே

காதல் என்று எண்ணி

கைபிடிக்க நினைத்தேன்

கானல் நீராய் கரைந்து போனாயே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போனாயே...

தமிழ் தந்த செல்வத்தின்

செல்வமே..!

தமிழ் வீரத்தின்

புன்முறுவலே..!

எதிரி படை தோற்கும் நாள்

எட்டும் தொலைவில் தான்

தமிழ் கண்ணே...!

Link to comment
Share on other sites

தமிழ் கண்னே

தமிழ் மண் தந்த

தமிழ்ச் செல்வனே

காலை வேளைதனில்

வானில் வந்த

காலனவன் உன்னோடு

சேர்த்து ஐவரையும்

முழுங்கியதை எப்படிதான்

மறக்க முடியுமோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறக்க முடியுமோ

மாவீரனே!

உன் புன்னகை சிந்தும் வதனத்தை

பாவியரின் வல்லூறுகள்

பறந்து வந்து உன் உயிர் குடித்ததே

உன் இழப்பின் வடுச் சுமந்து

எம் மன்னவன் சொல்லும்

சேதிக்காய் காத்திருப்போம்

Link to comment
Share on other sites

காத்திருக்கிறோம் என்று

கார்த்திகைப்பூக்கள் கண்ணைப்

பார்க்கும்.. தலைமகனே

உன்னைப் பார்க்கும்...

காலங்கள்.. எதுவோ

கண்ணீர்ப்பூக்கள்...

மெல்லப் பார்க்கும்....

கல்யாணக் கனவுகள்..

இல்லாமல் கன்னிப்பூக்கள்

போர்க் களம் பார்க்கும்..

சொல்லாமல் வேள்வியில்

வித்தாகும்... கரும்புலி

விண்ணில் நின்று

தமிழ் மண்ணைப் பார்க்கும்...

காத்திருக்கிறோம் என்று

கார்த்திகைப்பூக்கள் கண்ணைப்

பார்க்கும்.. தலைமகனே

உன்னைப் பார்க்கும்...

காலங்கள்.. எதுவோ

கண்ணீர்ப்பூக்கள்...

மெல்லப் பார்க்கும்....

கல்யாணக் கனவுகள்..

இல்லாமல் கன்னிப்பூக்கள்

போர்க் களம் பார்க்கும்..

சொல்லாமல் வேள்வியில்

வித்தாகும்... கரும்புலி

விண்ணில் நின்று

தமிழ் மண்ணைப் பார்க்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணைப் பார்க்கும்

கண்கள் இங்கே கருவறை சுமந்திடும்

கல்லறைகளில் நெய்விளக்கேற்றி

கண்ணீரை காணிக்கிட

வந்திடுவீர்

Link to comment
Share on other sites

வந்திடுவீர் என்றெண்ணி

வாசல் படி நோக்கித்

தவம் கிடந்தேன்!

படலை திறக்கும் ஓசை

கேட்டு

மழலை போல துள்ளியெழுந்து

வாசல் தாண்டி ஓடி

வந்தேன்

கையில் காகிதக் கட்டு

தோளில் தொங்கும் துணிப் பை

எல்லாம் பார்த்து

ஆவலோடு உன் முகம்

பார்த்தேன்...

வழமையாக உதடு சுளிக்கும்

உன் முகம்

புன்னகையோடு...!

மனசுக்குள் ஏதேதோ

இன்பத் துடிப்புகள்...

'அப்பாடா...' இன்றாவது

என் அத்தான் கோபம் தணிந்து

மடல் வரைந்தாரே...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரைந்தாரே ஓவியம்

உரைத்திட முடியா நினைவுதனை

கரை கண்டு புரளும் கற்பனையாலே

வரைந்து கவியாலே பாடல்

தொடுத்துடுவீரே

இரை தேடும் பறவைக்கு

இரை தருவது போலே களத்தில்

வரையும் ஓவியம் தருவதும் அழகு

கரைபுரண்டோடும் கவியும் அழகு

Link to comment
Share on other sites

கவியும் அழகு

கவி புனையும்

கவியும் அழகு

சுதியும் நயமும்

நெளியும்

நதி போல

என் நெஞ்சில் பாயும்

விரியும் கற்பனையில்

தெரியும் பல காட்சி

சரியும் பிழையும்

தெரியா

கவியொன்று பிறக்கும்!

அரியும் அவனிடை

தழுவும் உமையும்

விழி மலர்த்தி

கை உயர்த்தி

ஆசீர்வதிப்பார்!

நீயும் நானும்

வெறும் பேனைகள்

தமிழன்னை தன்னை நிரப்பி

தன்னையே தாளில்

எழுதுகிறாள்

நானும் வந்து களத்தில்

பிரதி செய்கிறேன்

அவ்வளவே என் கவி!

Link to comment
Share on other sites

என் கவிகள்

இயற்கையை தழுவும்

தென்றலாய்

பூக்களை வட்டமிடும்

தேனீக்களாய்

என்றும் உன்னையே

சுற்றி வட்டமிடுகின்றன...

என் கருவிழிப் பார்வையினிலே

நீ விழுந்த நாள் தொடக்கம்

என் மனதினிலே

ஊற்றெடுக்கிறது கவிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.