Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

கவிகள் தொங்கும்..

மரத்தடியில்..நான்

அமர்ந்தேன்....எதிரே...

அழகிய ஆறாய்....

அவள்..அசைந்தாடும் தென்றலாய்..

அவள் ஆடையாட

அதில் சேர்ந்தோடும்..

என் மனதை ஒரு

நிமிடம்...நிறுத்தியிழுத்து..

வந்தது.. நிஜதேவதையல்ல...

கனவு தேவதை..

அது அழகான ஆறல்ல..

கானல்..நீர்..

அது மரத்தடியல்ல..

என் கட்டில்..

அவை தொங்கும் கவியல்ல..

கவிப்பூங்காட்டின் மலர்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

மலர்கள் என

மங்கையெனை

மணந்தவனே

நிலவு என

நிலாவிவளை

நினைத்தவனே

கங்கையென

கன்னியெனை

காதலித்தவனே

நதியென

நங்கையெனில்

நனைந்தவனே

மேகமென

மெல்லமாக

மோதியவனே

முகிலென

முன்னின்று

முட்டியவனே

அலையென

அணங்கிவளை

அணைத்தவனே

பறவையென

பக்கத்திலேயே

பறந்தவனே

மின்னலென

கண்திறந்து

ரசித்தவனே

மலையென

விலகாமல்

மயங்கியவனே

கல்லென்றதால்

கல்லாகியதேனோ

கல்லுக்குள்ளும் ஈரமுண்டு

கல்லும் சிலையாகும்

எனைக் கையில் எடு

உளி கொண்டு தட்டு

வலிக்காமல் தட்டு

வடிவான சிலையாகும்வரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவான சிலையாகும் வரை

சிலையாக நின்றேன் சித்திரப்பதுமையாக

அலை பொங்கும் மன அலையோடு

கலைதனை ரசிக்கும் ரசிகையாய்

பதுமையாய் வடித்தது வெண்பனி

ததும்பும் சிலையா

அதுவும் இல்லைவே இல்லை

கருமை கொண்ட பெண்ணொன்று

சிலை கண்டு.............

Link to comment
Share on other sites

சிலை கண்டு..

அலை பாயும்...

நிலை பாரடி...

உனை யன்றி

எனை யாள

உறவேதடி....

பழி சொல்லும்..

புவி காதல்

வலி நூறடி..

வண்ண நிலவாக

பெண் உன்

கண்கள் ஒளிருதடி...

இடை ஆடும்.

கொடியாக நான்

கூட வரவா..

தடை போட

படை வரினும்..

உடையாதடி..காதல்..

ஜெயம் காணும்..

பயம் ஏனோ..

தயை செய்யடி

சிலை கண்டு..

அலை பாயும்...

நிலை பாரடி...

உனை யன்றி

எனை யாள

உறவேதடி....

Link to comment
Share on other sites

சிலை கண்டு..

அலை பாயும்...

நிலை பாரடி...

உனை யன்றி

எனை யாள

உறவேதடி....

பழி சொல்லும்..

புவி காதல்

வலி நூறடி..

வண்ண நிலவாக

பெண் உன்

கண்கள் ஒளிருதடி...

இடை ஆடும்.

கொடியாக நான்

கூட வரவா..

தடை போட

படை வரினும்..

உடையாதடி..காதல்..

ஜெயம் காணும்..

பயம் ஏனோ..

தயை செய்யடி

சிலை கண்டு..

அலை பாயும்...

நிலை பாரடி...

உனை யன்றி

எனை யாள

உறவேதடி....

தடியோடவள்

புருஷன் வந்தால்

உன் நிலை யென்னடா :icon_mrgreen:

சிலை கூட

சேலை போட்டால்

வாய் விரிக்கும் மனிதன்

நீ- இல்லைடா...!

அலை பாயும்

மனதிற்க்கு

விலங்கு போடடா...!

புவியாழப் பிறந்தவனே

தம்பி - நீ

பெண் மோகத்தில்

புதையாதேடா.... ! :icon_idea:

Link to comment
Share on other sites

தடியோடவள்

புருஷன் வந்தால்

உன் நிலை யென்னடா

சிலை கூட

சேலை போட்டால்

வாய் விரிக்கும் மனிதன்

நீ- இல்லைடா...!

அலை பாயும்

மனதிற்க்கு

விலங்கு போடடா...!

புதையாதேடா..அண்ணா

என் காதலை குழி தோண்டி...

யாரோ ஒருத்தியை காதலித்து

யாரோ ஒருத்தியை மணந்து வந்து

அண்ணியென்றாய்.. நான் கேட்டேனா..

அடுக்கடுக்காய் மூன்று பெற்று

அப்பனான பின்னும்..

வேலையிடத்தில்..அண்ணிக்கு

உலை வைக்கிறாய்..

யாரந்த சிறுக்கியென்று

நான் கேட்டேனா...

வயது வந்த காளை..

உன்னைவிட வெள்ளை..

பொறுப்பில் குறைவில்லை

இப்போதுதான்.. ஏதோ ஒருபிள்ளை..

உனக்கேன் அண்ணா பொறுக்கவில்லை..

வாழவிடு.. வழிவிடு..

இல்லை.. சாகவாவது விடு.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

விடு என்று சொல்லிவிட்டால்

விட்டு விடுவேனா..

என்னிடத்தில் வெறுப்பால்

ஏதோ உமிழுகின்றாய்

காதலித்த பெண்ணைத்தான்

கட்டிவந்தேன் கண்ணா

ஏறெடுத்தும் என்னொரு பெண்

என்றும் பார்த்ததில்லை !

நீ கூறிடும் உன்

கற்பனையில் - நான்

உண்மையாகவில்லை

இன்னும் அடுக்கிடு

உன் மொழியை -அது

எனக்கு வலிப்பதில்லை....! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

எனக்கு வலிப்பதில்லை

எவ்வளவு இலகுவாக சொன்னாய்

அண்ணா...மெய்யாய்..

எனக்கு வலிக்கிறது...

பொய் சொல்வதும் புறம் சொல்வதும்..

என்னிடம் இல்லை...

காதலர்கள்.. காயப்படுவார்கள்..

காயப்படுத்த மாட்டார்கள்..

அண்ணா நான் காயப்படுகிறேன்..

நீ வார்த்தைகளால்.. படுத்துகிறாய்..

உன் இல்லறத்தில் கல் எறியச்

சொல்லவில்லை..என் மீது

நீ சொல்லெறிந்தாய்..

சின்னவன்தானே..

உண்மையைக் கோபத்தில்.

பொதுஇடத்தில் உளறிவிட்டேன்..

மன்னித்துக்கொள் அண்ணா.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

அண்ணா என்று அழைத்தழைத்தே

எனக்கு வேட்டு வைப்பதாக

உனக்கு குழி பறிக்கின்றாய்.....!

மட்டுறுத்தும் நபர்கள் எல்லாம்

உனக்கு நண்பராகலாம்

ஆனால் எனக்கு

யாரும் இல்லை என்றுதான்...

நீ எழுதும் நாடகத்தில்

என்னை நடிக்க வைக்கிறாய்..! :icon_mrgreen:

உண்மை என்று இன்னும் - நீ

திரும்பத் திரும்பச் சொல்வதனால்

கட்டும் கதைகள் யாவுமே

உண்மையாகிப் போகுமா..?

என்னைத் தெரிந்ததாய்

என்ன தெரிந்தாய் ...?

''நேசக் கரத்துக்கு

கை கொடுங்கள் ''

நீ - கதவடைத்தாய்

உன் ஜன்னல் வழி நான்

கூச்சல் போட்டேன்

''கவிதை ஒன்றும்

பசித்த வயிறுக்கு

சோறு போடாதே...''

என் கூச்சல் பிடிக்காமல்

வசைபாடித் திரிகின்றாய்..!

என்னைத் தெரிந்ததாய்

ஏதும் சொல்லு

ஆனால் என் காதல் பற்றி

எதுவும் சொல்லாதே..

ஏனென்றால் அது என்

பேச்சல்ல மூச்சு..!

Link to comment
Share on other sites

மூச்சு முட்டுகிறதா...

முட்டட்டும்..

வம்புக்கிழுத்தவரே..

வாய் வலிக்கிறதா...

நேசக்கரம்...

முகவரி மறைத்தவனா நான்...

இருபதாயிரம் மக்கள்முன்

நின்று முகம் உரைத்தவன்...

பத்துக் காசு கொடுத்து பசியாற்றும்..

அண்ணா.. பந்தி போட்டு

பசியாற்றும்.. மக்களை

அறியாமல் இகழாதீர்கள்..

நகைச்சுவைக்கு கவி

வரைந்தால்..

சிரிக்காமல்

கரிக்கிறீர்கள்..

வம்பிழுத்தது..

நானல்ல

நீங்கள்தான்..

இளையவன் பிழை

என்றால்

பொறுத்துக்கொள்ளுங்கள்...

வறுத்து தள்ளாதீர்கள்..

:)

Link to comment
Share on other sites

தள்ளாதீர்கள் என்று சொல்லி

என்னை தள்ளிவிடப் பார்க்கின்றீர்

இல்லாக் கதைகள் பேசி நின்றால்

அந்த அல்லா கூட ஏற்பானா...? :wub:

கோபத்தில் சொன்னதென்றும்-பின்

நகைச்சுவைக்காய் வரைந்ததாக

நல்லாய் கதை முடிக்கலாம்...!

உள்ளத்தில் உள்ளதெல்லாம்

உன்னையன்றி யாரறிவார் ...

என்னைத்தானே தூற்றுகிறாய்

தம்பி நல்லாய் நீ தூற்று

இன்னும் கொஞ்சம் வேணும் என்றால்

கரி எடுத்து என்முகத்தில் பூசு

நாலுபேர்கள் சிரிக்கணும்னா

நானும் கோமாளி யாகுகின்றேன்

நல்லாய் கைகொட்டி

வாய்விட்டு சிரித்து

என் முகத்தில் கரியெடுத்து பூசு.... :)

காதல் எந்தன் மறு பிறப்பு

என் பிறப்பைப் பழித்தாய் தம்பி!

உந்தன் பிறப்பைப் பழிக்க வேணும்னா

அன்னை யுன் - அன்னை அழுவாள் பாரு!

அன்பினாலும் பண்பினாலும்

வளர்ந்து வந்த வீடு - என் வீடு!

உன்னைப் போல பொய்யுரைக்க

என்னால் ஒன்றும் முடிவதில்லை பாரு!

இன்னும் கதைகள் புனையணும்னா

அதை இங்கெடுத்து போடு!

ஆனால் விகடம் உந்தன் கவியில் இல்லை

அதையும் நீயும் பாரு...!!!! :rolleyes:

Link to comment
Share on other sites

பாரு பாரு என்றென்னை

சொற்போருக்கு அழைத்துவிட்டு..

காதலை இகழாதே..என்று

காவியமேன் இன்று

உங்கள்.. காதல் மெய்..

ஒத்துக்கொள்கிறேன்

நான் சொன்ன பொய்

குப்பையைக் கிளறியதா

கோபத்தைக் கிளறியதா..

புரியவில்லை... பெரும்

புதிரப்பா.. சில ஆணின்

ஆள்மனமும்..

படையைப் பார்த்து

பயந்து வந்த அகதி நான்..

வெறும் வாய்வீரன்..

வெறும் சொல்லாளன்..

சிறு தமிழ்பித்தன்..

வம்புக்கிழுத்தது..நேரில் என்றாயின்

வாய் பொத்தி போயிருப்பேன்..

களம் என்றதால்.. கண்டதும்

சொன்னேன்...ஆனால்..

கண்டதைத்தான் சொன்னேன்

என்று சொன்னேனா..

சினம் ஆறவேண்டும்..

வாழ்க்கை கண்ணாடி போல..

நீங்கள் சிரித்தால் சிரிக்கும்..

நீங்கள் முறைத்தால் முறைக்கும்..

நீங்கள் மேல் எறிந்த கல்

உங்கள் மேல் விழுந்தது..

எறிந்ததற்கு வருந்துங்கள்..

விழுந்ததற்கு எரியாதீர்கள்

ஜடப்பொருளை சினந்து

உதைக்கின் கால்தான் வலிக்கும்..

கரி பூசவில்லை உங்கள் காதலில்

கவி தூவினேன்..

சோதனைகள்.. தாண்டியதால்தான்

அரிச்சந்திரன்.. வாழ்கிறான்..

பழிசொல்லை கழிந்தால்தான்..

காதலும் வாழும்..

என் தவறை உணர்கிறேன்..

வலைப்பூ பார்த்து

வாழ்வை உணர்ந்தேன்..

பல்லாண்டு வாழ்க..

நெற்றிக்கண் திறந்தாலும்

என் கவி வழியை மாற்றியது..

உங்கள் குற்றமே..

மன்னிப்பு தேவையில்லை

மறந்து விடுகிறேன்..

அண்ணா... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா அண்ணா என்று

ஆசையுடன் தினம் அழைத்தாய்

கண்ணா இதுதானா பாசம் என்றே

ஆதரவு காட்டினேன்

பாசத்தையும் நேசத்தையும்

வேசமாய் மாற்றிவிட்டு

எங்கே பறந்தாய்

Link to comment
Share on other sites

எங்கே பறந்தாய்

என் செல்லக்கிளியே

உனை நான் கூண்டில்

என்றுமே அடைத்ததில்லையே

பாசமாகத்தானே கிளியே

பார்த்து பார்த்து வளர்த்தேன்

இதர கிளிகளோடு நீ

இன்பமாக பழகையிலும்

நான் உனை முறைத்தேனா

நீ எங்கு பறந்தாய்

எப்போ வருவாய் மீண்டும் என்னிடம்

சொல்லு கிளியே

செவ்விதழ் திறந்து

ஒரு வார்த்தை சொல்லிடு

Link to comment
Share on other sites

ஒரு வார்த்தை சொல்லிடு

என்று நீ

கெஞ்சினாலும்

கிட்ட வந்து கொஞ்சினாலும்

கிஞ்சித்தும் நான்

என் நிலை விட்டு இறங்கேன்

உன் மேல் இரங்கேன்...

கூட்டில் அடைத்தா

உனை வளர்த்தேன் என்று

கேள்வி கேட்கிறாயே

பெண் கிளியே...

உன் மனக் கூட்டில்

ஏனடி எனை

அடைக்கவில்லை என்று

நான் கேட்பேனடி....

பறந்த திசை

எங்கே என்று

முழிக்காதே

திறந்து கிடந்த

இன்னொரு மனக் கூட்டில்

மகிழ்ந்து நானே

அடைபட்டேன்

அறிவாய் நீ கிளியே!

Link to comment
Share on other sites

கிளியே நீ அறிவாய்

பிள்ளைபோல உனை

நான் அணைத்ததையும்

நா வருடி கதைக்க வைச்சதும்..

அன்று தந்தேன் சுதந்திரம்

இன்று எனை விட்டு நீ

இன்னோர் மனக்கூட்டில்

இன்பமாக இருந்து

என்னையே கேட்கிறாய்

எதிர்க்கேள்விகள் பல

ஆமாம் கிளியே உனை

அன்புக்கூட்டில் வைத்துவிட்டு

மனக்கூட்டில் அடைக்காதது

என் தப்புத்தான்...

அதற்காக பறந்து போய்

எதற்காக எனை நோகடிச்சு

என் கண்ணீர் பார்த்து

உவகை கொள்கிறாயோ

நானறியேன்..

ஆசைக் கிளியே நீ வா வா

அன்பு முத்தம் பல தா தா

நிலவோடு கிள்ளை மொழியில்

பலகதைகள் பேசிட வா வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசிட வா வா என்றழைத்தாய்

பேசிட வந்தால் வீண்

பேச்சு எதற்கு என்றே எனை

பேசாமடந்தையாக்கி விட்டு

பேச்சும் மூச்சும் நீதான் என்றே

பேசி பேசியே

பேரம் பேசுகின்றாய்

என்னிடம்

Link to comment
Share on other sites

என்னிடம்.. எத்தனையோ..

எனக்கே பிடிக்காமல்...

கொதிக்கும்.. தகட்டில்..

விழுந்த நீர்த்துளியாய்..

வெடிக்கும் என் கோபம்

எனக்கே பிடிக்கவில்லை...

தவறான கருத்தை..

சரியென வாதிடும்

என் தலைக்கனமெனக்கு

பிடிக்கவில்லை..

வேலைனை மறந்து..

மின்வலையில் உழலும்..

என்னை எனக்கு

பிடிக்கவில்லை

பிடிக்காத என்னை

நான் எப்படி விலகுவது?.

Link to comment
Share on other sites

விலகுவது சுலபம்

அப்பனே

விந்தைச் செயல்

ஏதும் இல்லை

முந்தைக் கதையெல்லாம்

முழுசாய் மற...

பழசாய்ப் போன

சங்கதி நமக்கெதற்கு?

ஆளுக்காள் கல்லெறிந்து

விளையாடி என்ன பயன்?

கல்லெறிந்தால் காயம்

ஆறும் - சுடு

சொல்லறிந்தால்

வடு மாறாது...

கொடு உன் கையை

முகத்தில் புன்னகை கீறு

மெதுவாய் குலுக்கு

சொன்னதற்கெல்லாம்

வருத்தம் தெரிவு

சொல்லாத கதையேதும்

காதுக்கு வரின்

நில்லாது ஓடிப் போய்

உன் நிலை விளக்கு

உன் மனசுக்குள்

ஒளி வரும்

பிறகேன் உனக்கு விளக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கு ஏற்ற பெண்

தேவை என்று

தேடிய பெண்ணை

விலக்கி விலக்கி

வைத்தார்கள் அந்த

மூன்று நாட்களும்

Link to comment
Share on other sites

நாட்களும் நாழிகையாய்..

கால் கொண்டு ஓடும்..

இயந்திர தேசத்தில்

வாழ்வை வளமாக்க

வர்ததகனாய்.. அதில்

வித்தகனாய்..இவன்..

இரவுபகலோடி....பல

திரவியங்கள் தேடி...

செல்வந்தன் ஆனான்..

சந்தோசப்பூரிப்பில்..

கண்ணாடி முன்..

புன்னகைப்பூவை

இரசித்தான்..உள்..

உள்ளம் சொன்னது.

ஏதோ தொலைத்துவிட்டாய்.. என்று..

ஆமாம்..

அவன் வாலிபம் தொலைந்து விட்டது..

அவன் உல்லாசம் கலைந்துவிட்டது..

அவன் இளநரையை..

பித்தநரை என்று சொல்லிக்கொண்டிருந்தான்..

பித்தநரையை முடிவு

செய்யும் முடியே.. உதிரந்து

விட்டதால்..அவனால்..

அவனுக்கே சமாதானம்

சொல்லமுடியவில்லை !...

Link to comment
Share on other sites

சொல்ல முடியாமல்

சுகம் காணமுடியாமல்

எண்ணொனா துன்பத்தால்

இத்துப்போகின்றான்

காலத்தின் சுழற்சியில்

காதல்தான் தப்பிடுமோ

தப்பிவிடும் காதலும்

தப்பாகி போய்விடுமோ ?

Link to comment
Share on other sites

தப்பாகி போய்விடுமோ..

நாம் போடும் தாளங்கள்...

நம் வாழ்க்கைப் போராட்டங்கள்..

எப்போதும் வலிதானா..

எம் தேசதாகங்கள்..

எத்தனை உயிர்த்தியாகங்கள்...

அப்போது நாம் வாழ்ந்த

அழகான வாழ்வை தினம்

அசைபோடும்.. நம் உள்ளங்கள்..

முப்போதும்..மூவுலகும்..

எவ்வகையில் வாழ்ந்தாலும்..

நியாயத்தில்.. நல்நெஞ்சங்கள்..

இப்போது சொல்லுங்கள்

நம்நாட்டின் செல்வங்கள்..

போராடும்..புலிவீரர்கள்..

போராடும்..புலிவீரர்கள்..

போராடும்..புலிவீரர்கள்..

போராடும்..புலிவீரர்கள்..

போராடும்..புலிவீரர்கள்..

Link to comment
Share on other sites

புலிவீரர்கள் புரியாத புதிர்கள்

புலியாகி புண்ணிய பூமிக்காய்

புதிதாய் பிறப்பவர்கள்

Link to comment
Share on other sites

புதிதாய்ப் பிறப்பவர்கள்

யார் அவர்கள்..

எண்ணிப் பார்க்கிறேன்...

என்றோ இறந்தவர்களா...

புதிய உயிர்களா...

இறந்தவர்கள் எங்கே...

எண்ணிப்பார்க்கிறேன்...

அலை பாய்ந்தும் அறியாத புதிராய்..

இறப்பும் பிறப்பும்..

உயிர் என்று..

மூச்சாய்.. பேச்சாய்..

அசைவாய்.. அனலாய்..

எரிபொருளாய்..

இயங்க வைக்கும் மின்சாரமாய்..

உள்ளே இருக்கிறதாம்..

அது இல்லாமல் போனால் நாம் பிணமாம்..

எண்ணிப்பார்க்கிறேன்..

நம் பிறப்புக்கும்..

இறப்பும் அதிக தூரமில்லை

நமக்கு நெருங்கிய

உறவு மரணம்தான் போல

மரணம்.. இருப்பவர்களுக்கு

துயரம்..

இறப்பவர்களுக்கு விடுதலை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.