Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

அற்புதம் தான்

அத்தான்

உன் கைவண்ணம்

யாரடித்தோ அழுத நான்

உன் கையணைப்பில்

உலகு மறந்தது

உனக்குத் தெரியாது!

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உனக்குத் தெரியாது செல்லம் உன்

விழி என்னை விழுங்கிய போதே

எனக்குள் காதல் விதை விழுந்தது

உனக்குத் தெரியாது செல்லம்!

உன் செல்லச் சிணுங்கலும்...ம் ..ம்

கொட்டிக் கொட்டிக் கதை இரசிக்கும்

அழகும் உன்னை எனக்குள் ஈர்த்தது

உனக்குத் தெரியாது செல்லம்!

என் நாசி நரம்பெங்கும் உன் பெயர்

சொல்லித் துடிக்கிறதே அறி கண்மணி

இதுதானடி 'காதல்"....

Link to comment
Share on other sites

காதல்

அவரவர் இஷ்டப்படி

தான் விரும்பிய

உருவமெடுப்பதால்

காதலும் கடவுளே!

வென்றவர்கள்

ஆஹா... அற்புதம்

என்றார்கள்

தோற்றவர்கள்

வெறும் கல்லென்று

காறி உமிழ்ந்தார்கள்!

Link to comment
Share on other sites

உமிழ்ந்தார்கள்...மெய்தான்..

பொய்யான ஒன்றைப்..

பொருளாக்க எண்ணி

இமைப்பொழுதும்..இளகிய..

நெஞ்சோடும்..நம்பிக்

கெட்ட பேதைப் பெண்ணை...

பார்த்தல்லவா உமிழ்ந்தார்கள்..

மரத்தால் விழுந்தவனை

மாடேறி மிதித்தாற்போல்...

நொந்தவனைத்தான்

நோகடிக்கின்றார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோகடிக்கின்றார்கள்.. மனதை

புறங்கூறி கூறியே

பிறந்துவிட்ட புத்தாண்டிலும்

இறந்துவிட்ட நிகழ்வுகள் தந்த

உறைந்துபோன வலிகள்

உறக்கத்திலும் ஊர்ந்து ஊர்ந்து

அரிக்கின்றது இதயத்தை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதயத்தை இலவம் பஞ்சாக்காதே!

இரும்பாக்கு! நிகழும் காலத்தில்

நடப்பவை ஏற்க உரமேற்று!

காலையில் எழுந்தால் காதில்

விழும் செய்திகள் யாவுமே!

களவு,கொலை, கொள்ளை

கடத்தல், ஆழிப்பேரலை

அளவற்ற மழை! தொடரும்

இந்த வேதனைச் செய்திகளால்

துவளாதே! போராட்டமே

வாழ்க்கை என்பதனை

மறவாதே!.

Link to comment
Share on other sites

மறவாதே என்னுயிரே...

மனதை தந்துவிட்டு..

கிடந்து தவிக்கிறேன்...

சுழன்று உடைகின்றேன்..

பகலில் தூங்கி முழிக்கிறேன்..

இரவில் விழித்து அழுகின்றேன்..

என்னை அடிமையாக்கி..

அலையவிடும் உன் சந்தோசம்..

எனக்கும் சந்தோசம்தான்...உன்

சந்தோசத்தில் சின்னத் திருத்தம்..

என்னிடம் வாங்கிய முத்தங்கள்..

கசப்பாக இருக்காது... இருந்தால்.

அடுத்த முறை வரும் போது திருப்பி தா..

Link to comment
Share on other sites

திருப்பித் தா

தந்த முத்தங்கள்

அனைத்தையும்

அன்போடு

எழுதித் தா

என்றுமே

"இவளே உன்னவள்" என

கையொப்பமிட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையொப்பமிட்டு

கைதாகிப் போனேன்

கைவிலங்கு தான் இல்லை

கைதியாகி நிற்கிறேன்

கைபாவையான என்னை தன்

கைவரிசை காட்டியே என்

பல்வரிசையும் நிலைகுலைந்து

தலைவிரித்தாடும் நிலை

Link to comment
Share on other sites

நிலை மாறலாம் பெண்ணே...

நீ நீயாயிரு...

விலகப் பார்க்காதே..

விலக நினைக்காதே..

திருத்தப்பார்.. அவனை..

அன்புக்குள் அடக்கு..

பந்தங்களை பாதியில் முறிப்பது..

பாவங்களில் ஒன்று...

அவனது மனது உன்னை நாடிட

அவனது அன்பு உன்னில் சேர்ந்திட..

உனக்காக வாழ்வான்..

நிலை குலைந்த உன் பல்வரிசையை

விலை கொடுத்து அவனே சீர் செய்வான்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீர் செய்வான் அண்ணன்

பார் போற்ற வாழ்ந்திடுவாள் தங்கை

ஏர் பூட்டி வாழ்ந்திடுவான் விவசாயி

சோர்வின்றி சொகுசாய் உண்பான் சோம்பேறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோம்பேறியாய் மாறினாலும்

சோடை போகவில்லை

சோகங்கள் சூழ்ந்திட்டாலும்

சொந்தங்கள் உண்டு என்றும்

பற்றிப் படர்ந்திட உறவு

Link to comment
Share on other sites

உறவு வெறுத்துப் போய்

துறவு கொள்ள ஆசைப்பட்டேன்

கண்ணே உனை என்

கண்கள் காணும் வரை

Link to comment
Share on other sites

காணும்வரை

களிப்போடு

நானிருந்தேன்

கண்டபின்தான்

புரிந்தேன்

உன்னை விட

அன்று எனக்கு நீ

அறிமுகப்படுத்திய

உன் நண்பன் அழகென

Link to comment
Share on other sites

அழகென அவனை

நினைத்தாய்

அவனிலும் அழகன்

அவன் நண்பனாகிவரில்

உன் நிலை

பாவம் அம்மா!

Link to comment
Share on other sites

அம்மா பாவம்தான்..

தினமும் எனக்காய்

கும்பிடுற சாமிகள்..

சமைக்கின்ற சாப்பாடுகள்..

தருகின்ற அறிவுரைகள்..

எல்லாம் எனக்கே எனக்காக..

ஆனால்..

தினமும் அம்மாவுக்கு நான்

கொடுக்கின்ற அறிவுரை தவிர

மரமண்டை என்னால்

இன்னும்தான் எனது அம்மாவுக்காய்

ஒரு தரம் சாமி கும்பிட முடியவில்லை..

ஒரு தரம் சமைச்சு கொடுக்கமுடியவில்லை..

இதுவும்..

எல்லாம் எனக்கே எனக்காக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எனக்கே எனக்காக!!

எங்கும் இன்பம் பொங்கும்!

எதிலும் எழில் துலங்கும்!

மேகம் அமிழ்தம் பொழியும்!

நதிகள் நிறைந்து வழியும்!

கொடியில் மலர்கள் சிலிர்க்கும்!

கிளையில் கனிகள் குலுங்கும்!

குலுங்கும் மடியில் ஆவின் பால் சுரக்கும்!

கிழவி மொண்டு சங்கால் ஊட்ட!

குழவி குடித்து குலுங்கிச் சிரிக்கும்!!!!!

Link to comment
Share on other sites

குழுங்கிச் சிரிக்கும்

உலகத்து உள்ளார்ந்தம்

விளங்கிய அப்பாவி

வெங்காயங்களே நீங்கள்,

அழுகிப் போகும்முன்

ஆக்களின் கண்களில்

கண்ணீரை வழியவிடும்

கைங்கரியம் தனை

என்னவென்று நான் சொல்வேன்?

எப்படித்தான் உங்களுக்கு

இப்படிப்பட்ட திறமையை

தந்தாரோ எங்கள்

தெய் வீகன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வீகன்! கண்ட தெய்வீகமே வெங்காயம்!

கண்ணில் நீர்காட்டி காரியம் சாதிக்க

கண்ணருகே வேண்டும் காரமான வெங்காயம்!

கணக்கு வாத்திக்கு டிமிக்கி கொடுக்க

காய்ச்சல் காட்டி லீவு போட

கக்கத்தில் வேண்டும் வெங்காயம்!

வெளியே விளையாடி லேட்டாய் வீடுவர

கண்ட அன்னை கட்டிவைக்க

கண்ணான அக்காள் கொண்டு வருவாள்

கண்ணில் பிழிய வெங்காயம்!

உண்ணாக்கு உரசி உரசி இருமித் தெலைக்க

அன்பான அம்மம்மா அழகான பூவரசம்மிலையில்

'காட்டுத் தேனிலே காரவெங்காயம் நறுக்கிவைத்து"

கடைவாயிலே அதக்கி சப்பியே விழுங்கிவைக்க

விலகியே நழுவிப்போகும் வீரமான உண்ணாக்கு!

பகுத்தறிவால் பழுத்த பெரியவர் பாரில் பெருமைகொண்ட

அடைமொழியுமாகுமே அந்த அழகிய வெங்காயம்!

உரிக்க உரிக்க உள்ளே ஒன்டுமில்லை! -- ஆனால்

உள்ளிருந்தே முளைவிட்டு உறைப்பு நீர்

சுரந்திடும் உன்னதம் வெங்காயம்!

வின்முகிலில் நீந்தும் விகாரையின் விதானம்போல்

மண்ணினுள்ளே முடிசூடி நிக்கும் மகத்துவமே வெங்காயம்!

Link to comment
Share on other sites

வெங்காயம் இதுவென

வெறுத்து ஒதுக்க முடியாது

உரிக்க உரிக்க

தன் காயம் பொறுத்து

தனக்காய் உனை அழவைத்து

சமையலுக்கு சுவை

சேர்ப்பதால்

வெங்காயம் இதுவென

வெறுத்து ஒதுக்கமுடியாது!

உன் காயம்

வெறும் உயிர் தாங்கும்

கூடு

பெருங்'காயம்' பட்டுவிட்டால்

தாங்காது வாடும்!

யமதூதன் உன் உயிர்

பறித்தபின்

உன் காயம்

சதத்திற்கும் உதவாது

மயான பூமியில்

தானே போய் எரியாது!

நாலு பேர் கத்தியழ

நாலு பேர் சுமந்தோட

நாலு பேர் நினைவில்

என்றும் இருக்க - நீ

செய்ய வேண்டிய

செயல் நாலல்ல பல!

ஆகவே

கறிக்குதவும் வெங்காயம்

போல் உன் காயம்

யாருக்கும் உதவாது

மரித்துப் போனால்

உன் பரம்பரை

சுமக்கும் பெரும் பாவம்!

Link to comment
Share on other sites

பெரும் பாவம்

சுமக்கும்

என் அன்பே

உன் பாவம் சுமக்க

நான் வந்தேன்

தேய்பிறையாய் தேய்யாது

வளர்பிறையாய் வந்து

விடு

இனிய உதயம் காண்போம்

என் நாளும்.....

Link to comment
Share on other sites

நாளும் பொழுதும்

நகர்கின்ற திசை நோக்கி

விளி திறந்து பார்

நீயும் நானும்

இன்னும் அதே

உவமை வட்டத்தில்

உழுதுகொண்டிருக்கிறோம்...

நிலவை விட்டால்

காதலியின் முகத்திற்கு

உவமை இல்லை...

தேய்பிறை... வளர்பிறை

எனும் வார்த்தை

விளையாட்டையே

கவிதை என்று

கற்பிதம் செய்கிறோம்...

கோபித்துக் கொள்ளாதே

என்னை...

யாரையும் இங்கே

திட்டுவதாக அர்த்தப்படுத்தாதே

என்னை நானே

வம்புக்கிழுக்கிறேன்...

சத்திர சிகிச்சை செய்து

கவிக் குழந்தை

பெறுவதில் எனக்குள்

உடன்பாடு ஏதும் இல்லை

தானே வலியெடுத்து

நெஞ்சுக் கூட்டில்

பல முறை முட்டி

காட்டாறாக வருகின்ற

கவிதையை

தாள் எடுத்து

ஒழுங்கமைத்து

நடை போட செய்வது

மட்டுமே என் பணி...

இப்படித் தான்

அருமையாய்

முடித்து வைத்த

உன் கவிதைக்கு

பதில் கவிதை

எழுத வந்து

ஏதோ எழுதி நிற்கிறேன்...!

என் செய்வேன் நான்

இன்னும் அதே

விளையாட்டுப் பிள்ளை

கூட கோபியர்

மட்டுத் தான் இல்லை!

இருந்துவிட்டால்

என் விளையாட்டுக்கு

ஏது எல்லை...?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏது எல்லை என்று தெரியா வாழ்க்கையில்

ஏதையோ தேடி தேடி நித்தம் நித்தம் ஓடுகின்றோம்

முனிவன் கூட தவத்தால் தேட முடியா

வானத்தின் கடலின் எல்லை அறியாவிடத்து

மனிதனின் ஆசையின் எல்லை எதுவரை

Link to comment
Share on other sites

எதுவரை அறியேன்

உன்மன ஆழம்..

ஆழ்கடலினும் பெரிதாமே..

அப்படியா பெண்ணே...

இருக்காது..என்ற

ஆண்களில்லை எந்தப்

பெண்ணும் கூட இதை

மறுக்கவில்லை..அன்பான

பெண்ணே...மெய்யாய்த்தான்

கேட்கிறேன்..பெண்ணின்

மனம் ரொம்பத்தான் ஆழமோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழமோ பெண்ணின் மனசு?

ஆழியில் ஆழ்ந்து ஆழ ஆழ

முழ்கித் தேடினாலும் கடலினடி

ஆழம் தெரியா கடலல்ல

பெண்ணின் மனம் என்ன என்று

மண் பார்த்து நிற்கும் அழகும்

கண் பார்த்து சொல்லும் கதையும்

எண்ணமாய் மலரும் முகத்திலே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373909
    • ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373977
    • அன்புள்ள நண்பரே அழகுப் பெண்களே ........!  😍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.