Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்சி ஒன்றே உயர்ச்சி தரும்!

அயர்ச்சி இன்றிப்போராடு!

வெற்றி உந்தன் கையில் வரும்!

நிமிர்ந்து நில் முதுகெலும்போடு!

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதுகெலும்போடு முட்டிநிக்கும் அரவு

முள்ளன்தன்டூடாய் தாவிடவே துடிக்கும்!

முயற்சி இன்றி நீயிருந்தால் - பாம்பும்

சுருன்டே தன் வாலை நக்கிக் கிடக்கும்!

அந்தி சந்தி அவனை நினைந்து மெய்வருந்த

அந்த அரவும் ஆறுசில்லையும் தாண்டியே

அசைந்து நெளிந்து துடித்து ஏறியே

அய்யனின் உச்சியில் அமுதம் ருசித்து ஆடிடுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிடுமே அவள் விழிகள்

காதல் நர்த்தனம்

தேடிய அவன் வதனம்

காணும் வரை

ஓடிடுமே அவள் மனம்

அலை பாய்ந்து

நாடிய அவன் நல்லுரை

கேட்கும் வரை

தேடிடுமே அவள் உள்ளம்

தெருவெங்கும் இசை

பாடிய அவன் குரல் ஓசை

ஒலிக்கும் வரை

பாடிடுமே அவள் விழிகள்

தேடிய அவன்

அவளைத் தேடி வந்து

மாலை சூட்டும் வேளை

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

தேடி வந்து மாலை

சூட்டும் வேளை

சுற்றிய சுற்றமும்

சூட்டும் மாலையும்

நித்தமும் ஏங்கிய மனசும்

மகிழ்ந்தாடும் உண்மை தான்

கட்டிய கனவு நினைவாகி

காலங்கள் உறவாகி

கனிந்த இதயம் நிறைவாகி

கொடுத்த உரிமை நி;யமாகி

வாழும் நாட்கள் உயிராகி

உண்மை அன்பு கொண்டாடி

உறியவள் வாழ்வு மகிழ்தாடி

உரிமையுள்ளவன் மீண்டும் மீண்டும்

வேண்டுமென சொல்லும் காலம்

எக்காலம்?..............

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எக்காலமும் எதிர்காலம் நோக்கியே நம் பயணம்

எப்போதும் நம் நிகழ்காலம் தொலைவதை

நாம் உணராத போதும் எம் நினைவெல்லாம்

இரை மீட்டு சுகம் காணும்,சோகம் காணும்

மீண்டுவரா இறந்த காலத்திலேயே!

Link to comment
Share on other sites

இறந்த காலத்திலேயே...

நித்தியமான என் நினைவுகள்..

நிழலுக்கு ஏங்கிய கோடைகாலம்..

நீருக்கு ஏங்கிய பாலை நிலம்..

காற்றில்லாத காட்டுக்குள்

நமத்துப்போன கனவுகள்..

நிறைவேறாமலே அடங்கிப்போன ஆசைகள்...

எனக்குள் கீறல்கள்

இயலாமை வடுக்கள்

எண்ணி ஏங்கி

மூச்சு முட்டி..

இறக்கும்போதும் இறக்காமலே...

இருக்கும் என் ஆசைகள்..

என் கட்டை வேகினும் வேகாமலே...

வடுவாய் கிடக்கும்-முள்ளி

வாய்க்கால் வலிகள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை

வலிகளின் வாசம் புரிந்தால் வேதனைகள் துச்சம்

வலிக்கும் எதுவும் ரணமாவதும் உண்டு அதன் தழும்புகள்

வருடும்போதும் இதமாய் அமைவதும் உண்டு

வலித்த போது அருகில் இல்லாத நட்பும் அதன் அருகாமையும்

வலிதீர்ந்தபோது ஒட்டுவது நகைச்சுவையின் வடிவம்

வலிகள் மனதின் ஓரத்தில் புரியாமல் புரியும் வார்த்தைகள்

வந்த வலியின் தார்ப்பரியங்கள் யாரிடம் சொல்வேன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்தேனே ஒரு துரோகத்தால் மனசு உடைந்தாலும்

பிறந்தேனே ஒரு நாள் மீண்டும் அக்கினிக்குஞ்சாய்

அலைந்தேனே ஒரு ஜீவனை தேடி அவை எல்லாம்

தொலைத்தேனே ஒரு நாள் அவர்தம் சுயரூபத்தின் முன்பு

தெளிந்தேனே அடங்கா கோபத்தினை அடக்கிய் போது

இழந்தேனே உயிரடங்கும் வேளையை கடந்த போது

புரிந்தேனே உறவுகளின் ஒட்டா மனதினை

திருமால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடடாமனதினை புரிந்த கவியே

அந்தாதி புரிந்து வடிப்பாய் இனியே

புது உறவு நீவிர் வடித்த கவி அழகு

அந்தாதியில் நும் வரவு நல்வரவாகுவதே

முதற் கவியின் அந்தமதை உம் கவியில்

ஆதியாக்கியே கற்பனைப் புரவி பாய்ந்தோடத்

தட்டிடுவாய் திரையினிலே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரையினிலே கண்ட கவி

ஒழுங்க்கு முறைமை திசைமாறக்கண்டு

அழகு தமிழில் நகைச் சுவை கொண்ட

கவி வடித்த் சுவைக்கவியே

திரைகடல் கடந்தாலும் திரவியத்தமிழ்

மறவா தமிழ் மகனை பார் புகழ

வாழ்த்துகிறேன் வார்த்தைகளை

தேடுகிறேன் தமிழ் மகனே வாழ்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரையினிலே கண்ட கவி

ஒழுங்க்கு முறைமை திசைமாறக்கண்டு

அழகு தமிழில் நகைச் சுவை கொண்ட

கவி வடித்த் சுவைக்கவியே

திரைகடல் கடந்தாலும் திரவியத்தமிழ்

மறவா தமிழ் மகனை பார் புகழ

வாழ்த்துகிறேன் வார்த்தைகளை

தேடுகிறேன் தமிழ் மகனே வாழ்க

நல்ல கவிதை சகோதரி :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க வென்றுரைத்தே வழியனுப்பி

வைத்தனர் தோழர்கள்

வெல்க வென்றுரைத்தே விருந்து

இட்டனன் எம் தலைமகன்

சூழ்க என விரைந்தே சூழ்ந்து

நின்றது கொடியவர் கூட்டம்

ஒழிக என்று அழித்தே தன்சுடர் தந்து

இருபத்தேழில் அகல்சுடர் கண்டனன் அந்தோ!

நீட்டிய காலை முறித்தவன் சிங்களன் - உதவி நாடி

உயர்த்திய கையை உடைத்தவன் இந்தியன் - இன்னொரு

கையையும் பிடித்தே இடை வேட்டியையும்

உருவினர் இணைந்தே இருவரும்!

எட்டுத் திசையெங்கணும் எமக்கா எதிரிகள்

எல்லோரும் எம்மை ஏதிலியாக்கி

பிச்சை இடுவதிலே கருத்தாயினர்.

பத்துக் கரம் தா பராசக்தி பத்துத் திக்கும் பரவிட

கொத்துச் சிரம் கொய்து நின்தாள் பணிந்திட

ஈழவேள்விக்காய் இளங்கன்றை ஈய்ந்தவன்

வேழமென முழங்கி மீண்டும் வருவானோ

காலமெல்லாம் எம்மிதயத்தில் வாழ்பவன்

கார்த்திகை இருபத்தேழில் இன்னுரை சொன்னவன் - ஐய

உன்னுரை மட்டும் இன்னும் நம் செவியில்

"எதிரி ஈவிரக்கமற்றவன்,

போர்வெறி கொண்டவன்

எம் தாயகத்தை சிதைப்பதும்

எம்மினத்தை அழிப்பதும்

அவனது இலட்சியமே!"

"எமது தேச வளத்தின் அடிப்படையில் நம்

தேசிய பொருளாதாரம் சுயநிறைவு காண வேண்டும்!"

"சுதந்திர எழுச்சியின் உந்துதலால் தான்

மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கிறது!"

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சுழல்கிறது

வாழ்க்கைச் சக்கரம்

எப்படியோ...

புலா்கின்ற பொழுதுகளில்

மலா்கின்ற பூக்களைப் போல்

விரிகின்ற கதிரின்

ஒளி பட்டு

விலகிப் போகாதோ

கவலையது எமை விட்டு!

தெரிகின்ற பாதையெங்கும்

நடந்தே திரும்பினேன்

ரணங்களின் வேதனையன்றி

வேறேதும் காண்கிலேன்!

சிரிக்கின்ற மழலை

கண்டு வியக்கிறேன்

நாமும் ஒரு நாள்

அவ்வாறு இருந்த

கதை நினைக்கிறேன்!

புரிக்கின்றது எல்லாம்

வீணே புலம்புவது வீணாம்!

மழலை போல் சிரிக்கப் பழகுவதே

கவலை போக்கும் அரு மருந்தாம்!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அருமருந்தாம் காலம் - அக்

காலம் கணமேனும் கூடக்

காத்திருப்பதில்லை!

கடல்தான் எழுந்து

கரையெல்லாம் விழுங்கிடினும்

மலைதான் புரண்டு

மாந்தரைப் புதைத்திடினும்

புயலும் சோலையை

பெயர்த்து வீசிடினும்

காதலும் விழுந்து

காதலர் துவண்டிடினும்

காலம் மட்டும் கவலையின்றி

காலடியை கடந்தே செல்லும்!

Link to comment
Share on other sites

கடந்தே செல்லும் எம் கவலைகள் என

காத்திருப்போம் மன உறுதியோடு

விடிந்திரும் ஒரு நாள் எம்மவருக்காய்

விழிப்போடிருப்போம் செயற்படுவோம் எம்

விடியலுக்காய் காத்திருப்போம்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

விடியலுக்காய் காத்திருப்போம்

என்று சொன்னவளே

கை நிறைய கரன்சியோடு

மாப்பிளை கண்டவுடன்

கை காட்டி சென்றாயே!

அடுக்குமாடி இது?

அடுக்கு மாடி கொண்டவன்

பின்னால்

செக்கு மாடு போல்

நீ போவது

அடுக்குமாடி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுக்குமாடி அந்தோ

அன்னை பராசக்தி

அருந்தவப் புதல்வனை

அவனிக்குத் தந்தவள்

அவ் அன்னையின் உயிரை

அழைத்துக் கொண்டனையோ!

பர்வதம் அம்மாவின்

பாசமிக்க ஆன்மாவை

முற்றம் பெருக்கு முன்னே

முதலாய் நீ கொண்டனையோ

வாசல் தெளிக்குமுன்னே

வாகாய் நீ வாரினையோ

கோலம் போடுமுன்னே

காலனை ஏவினையோ!

நஞ்சனிந்து கொண்ட மகன்

நாடிழந்து சென்ற மகன்

நாடுகொள்ள வரும் வரைக்கும்

பேரனுடன் விட்டனையோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விட்டனையோ தாயே உன் உயிர் மூச்சை!

கட்டியெழுப்பிய ஈழமாம் தேசத்தை

ஒட்டி நின்று அழித்த கோடாரிக்காம்புகளால்!

விட்டனையோ தாயே உன் உயிர் மூச்சை!

பெட்டிப்பாம்பாய் அடங்கிக் கிடந்தவர்கள்

கொட்டமடிக்கும் நிலை கண்டு

விட்டனையோ தாயே உன் உயிர்மூச்சை

எட்டி நின்றுதான் அழமுடியும்

எம் உறவுகளால்! முட்டி நிற்கின்ற

பகையின் தடைகளினால் எட்டி

நின்றுதான் அழமுடியும் எம் தாயே!

‘வெட்டிப் பகை முடித்து வேங்கை

வரும் செய்தி கேட்டு! எட்டுத்

திக்கும் வெளிக்கும் ஒருநாள்!

என் தாயே! !!!அதுவரை எம்முள்

மெளனமாய் அழுகின்றோம்!

Link to comment
Share on other sites

மெளனமாய் அழுகின்றோம்

மனமுடைந்து நிற்கின்றோம்

எம் அன்னையாய் உம்மை பாக்கின்றோம்

உம்மை பிரிய மனமின்றி பிரிகின்றோம்

நன்றி அம்மா தங்க தலைவனை தந்தமைக்கு

சென்று வாருங்கள் அம்மா சென்று வாருங்கள்

அங்கிருந்து பாருங்கள் எமக்கே எமக்காய்

என்றோ ஒருநாள் விடியப்போகும் ஈழமதை....!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈழமதை சுனாமியும் சூழ்ந்தே

கரையதை உடைத்து கரையுறை மாந்தரை

பெருவதை கொடுத்து ஆழ்கடலில் தள்ளியே

காலமதை கடந்து தடங்களை பதித்தது.

விட்ட சுவடுகளை தேடிய கடலும் _ வின்

முட்ட எழுந்தே கருக்கலில் கரை புகுந்தது.

பசிபிக்கின் மேல் சுவாசித்து நின்ற தீவுகளை

அலைக்கரம் நீட்டி அள்ளிச் சென்றது.

கப்பல்களை கரையில்லேற்றி

கார்கள் எல்லாம் தானெடுத்து

சங்குகள் வீசி அணுஉலைகள் உடைத்து

மீன்களை தந்து மாந்தரை கொண்டதே!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொண்டதே கோலம் என்றாகிப்போன நிலைதனில்

கண்டதை எல்லாம் அணிந்து காட்சிப்பொருளாய்

உலா வருவதில் ஆணுக்குப் பெண் நிகராய்

போட்டி போடும் உலகம் தற்கால உலகம் இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டதே கோலம் என்றாகிப்போன நிலைதனில்

கண்டதை எல்லாம் அணிந்து காட்சிப்பொருளாய்

உலா வருவதில் ஆணுக்குப் பெண் நிகராய்

போட்டி போடும் உலகம் தற்கால உலகம் இது

தற்கால உலகுக்கும்

கற்கால உலகுக்கும்

பேதம் அதிகமில்லை!

அன்று மரவுரி தரித்துத்

திரிந்தது பெண்குலம்,

இன்று,

அரை குறை ஆடையுடன்

'நரை' பெயர்ந்த பின்னும்

நடை பயில்வதைக் காணக்

கோடிக் கண் வேண்டும்

கறுப்பி!

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பின் வண்ணத்தில் சிரிக்கும் கண்ணன்

கம்சனின் சிறையில் பிறந்தான் __ நந்த

கோபனின் கோ மந்தையுடன் வளர்ந்தான்

காளிங்கன் சிரங்களில் தாவி ஆடினான்

கோபியர் மனங்களில் நீங்காமல் நிறைந்தான்

அன்னை தேவகி உதரத்தில் உதித்தான் __ தாய்

யசோதை மடியினில் தவழ்ந்தான்

இந்திரன் இடியாய் இறங்கவே __ கோ

வர்த்தன கிரியால் கோகுலம் காத்தான்!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

காத்தான் கூத்து விடிய விடிய

பார்த்த உற்சாகம் தணியுமுன்னே

காத்தவராயனிடம் மண்டியிட்டு

காத்திடுவாய் எம் உறவுகளை என்றே

காலைப் பிடித்து தொழுதபோதும்

கைவிட்டான் கைகளை

கால்களை பிடித்ததாலோ என்னவோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ கூறுங்கள்!

இலவு காத்த கிளி போன்ற,

எங்கள் இழிநிலை வாழ்வும்,

அந்நிய நாடுகளில் ,

அடையாளம் இழந்து, சொந்த

நிலத்துக்காய் ஏங்கும்,

புலத்துச் சொந்தங்களும்,

கண்ணீரில் கரையும்

வன்னி உறவுகளும்,

காத்திருக்கின்றன!

கால தேவனின்,

முடிச்சு அவிழும் வரை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.