Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரைமுறை இல்லா வாழ்வில்

கரை காணா உலகமதில்

இரை தேடும் பறவைகளாய்

ஊர் விட்டு ஊர் வந்த

ஊர்க்குருவிகளா நாங்களா

நிறைவு தேடி அலையும் பயணத்தில்

குறை என்ற காற்புள்ளியில்

அக்கரை பச்சைக்கு இக்கரையாயும்

இக்கரை பச்சைக்கு அக்கரையாய்

அலையும் ஊர்க்குருவிகளா நாங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பறக்கின்றோம்,

எங்களுக்கு இறக்கைகள்

இயல்பாக முளைக்கவில்லை!

வாழ்விழந்த எங்கள் மீது,

வலிந்து கட்டப் பட்டவை அவை!

அக்கரைப் பச்சை தேடி

அலைந்து திரிந்ததில்லை!

எக்கரையாயினும் போதுமென்று,

ஏதிலிகளாய் அலைகிறோம்!

இரை தேடும் பறவைகள் அல்ல,

இரையாகும் பறைவைகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறைவைகள் பறந்து திரிகையில்

இறைக்கைகள் எனக்கிருந்தால்

சிறைக்குள் அடங்கா வாழ்வாய்

மண்ணை விட்டு தொலைவில்

விண்ணைக் தொட்டு விளையாடும்

கண்சிமிட்டும் விண்மீனின் ஒளியில்

பா வரையும் பாவலனை ஒருமுறை

பார்த்திட வேண்டும் ஒரு நொடியில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நொடியில் உயிர் உலுக்கும்,

உனது விழிகளின் அசைவு கண்டு,

பெரு நெருப்பாய்க் கொதிக்கும்,

மூச்சுக்காற்றின் அனலில்,

முழுவதுமாய் எரிந்து,

கரியாகிப் போனாலும்,

ஒரு முறையேனும்,

உனது மலரிதழ் கவ்வின்,

பிறவியெடுத்த பெரும் பயனைப்,

பெற்றதாய் மகிழ்ந்து,

உன் மடியில்,

உயிர் விடுவேன்!!!

(வயது வந்தவர்களுக்கு, மட்டும் :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுவேன் உயிரை உனக்காக

உயிர் மூச்சின் வலி

அனலாய் கொதித்தெழுகையில்

ஸ்பரிசங்கள் தந்திடும்

நரம்புநாளங்களின் துடிப்பினில்

மயக்கத்தின் விளிம்பில்

வார்த்தைகள் சங்கீதமாய்

ஒலிக்கின்ற வேளையிலும்

எப்படி மறப்பேன் உன்னை நான்

என் இதயம் உயிரோடு இருக்கும்வரை

வாழ்வதும் வீழ்வதும் விதியின்

கைகளில்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைகளின் விரல்கள்,

காரிருள் நேரத்திற்காகக்

காத்திருந்து,

கருங்கூந்தல் தடவிக்

காதல் மொழி பேசுகையில்,

கனவுலகில் மிதக்கும் களிப்பில்,

ஓவியத்தின் கோடுகள் போல்,

ஒளிரும் உனது முகத்தின்,

உருவத்தின் வடிவமைப்பில்,

பிரமதேவனின் கைவண்ணம் கண்டு,

பித்துப் பிடித்தவனாய்,

பிரமிப்பின் உச்சத்தில்,

படைப்பின் மூலத்தைப்

புரிந்தும், புரியாதவனாய் நான்!!! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நானாகி என்ன கண்டேன்

எப்போது நாமாகி நாங்களாகி

எழுவோமென்ற எதிர்பார்ப்பில்

இப்போதும் வாழுகின்ற

தமிழீழப் பக்தர்களோ

ஏக்கத்தோடு வாழுகின்றார்

வாழ்க்கை வழமாக

வசமாக வேண்டுமெங்கள்

தமிழீழ தேசமன்றோ

தேசமது வசமாகத் தமிழருக்குத்

தேவையின்று ஒற்றுமையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையே உயர்வென்று,

ஓலமிட்டு, உரத்துக் கத்துகையில்.

காற்றில் பறந்து அந்த வார்த்தை,

கரைந்து விடும் முன்பே,

உறவா அன்றிப் பகையா எனப்

பிரித்துணர முடியாத வடிவங்களில்,

உருவெடுக்கும்,

உள் வீட்டுத் துரோகிகளை,

அடையாளம் கண்டு,

அவர்களது அடிக்கருத்துக்களின்,

ஆழங்கள் தெரிகையில்,

வானத்தில் தோன்றும்,

விடுதலையின் விடிவெள்ளி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடிவெள்ளி தந்ததோ வெளிச்சம்

விருட்சமாய் பற்றிப் படர்ந்து

வேருண்டிய வேளைதனில்

விடிவெள்ளியும் விடைபெற்றுச் சென்றதே

அசையா மனங்களின் நம்பிக்கைகளும்

அடி வேரும் அல்லற்பட்டு அசைந்ததுவே

அச்சாணி இழந்த வண்டிச் சக்கரங்களிடையே

ஆடிப்போன வாழ்க்கை

விடுதலை நிரப்பப்படாத ஓர்

இடைவெளிதனில் வாடிக்கையாகிப்போன

சோகங்களின் மத்தியில் உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளின் இருப்புக்காய்

உயிரீந்தோர் நிழலாக

உலகத் தமிழ் உறவுகளே

ஒருகொடியாய் திரண்டெழுந்தால்

பகைப்புலமே பொடியாகும்

பாரிலெங்கள் கொடியாடும்

கொடியாடும் நிலையென்று

இவ்வுலகில் வருகிறதோ

அன்றுதான் எங்களுக்கோர்

அர்த்தமுள்ள வாழ்வாகும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வு என்ற கானகத்தில்,

வாடிப் போய்ச் சருகுகளாகி,

வேர்களுக்கு உரமாகி,

கொம்புகள் வெட்டப் பட்ட,

கொப்பிழந்த மரங்கள் நாங்கள்!

புதிதாய் வளரும் கொப்புக்கள் கூடப்,

புத்தபெருமானின் பெயரால்,

பிடுங்கி எறியப் படுகின்றன!

காய்ந்த போன ரணங்களும்,

தீய்ந்து போன உடல்களுமாய்,

வானம் பார்த்துக் காத்திருக்கும்,

வாழ்விழந்த மரங்களாய் நாம்!

காலதேவனின் அழுங்குப் பிடிகள்,

விலகும் வேளையில், எங்கள்

பொழுதும் ஒரு நாள் விடியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடியுமென்ற நம்பிக்கையே

விடாமுயற்சியென்ற பொறியாக

ஒன்றுபட்டு உயர்ந்தெழுந்தே

விழுதூன்றிய தமிழர்களோ

வேருக்கு நீரானால்

பழுதேதும் இல்லாது

எம் தேசம் எமதாகும்!

எமதாகும் வேளைவரை

கரங்கோர்த்து நிரையாகிக்

காலமதை எமதாக்கி

எம் மக்கள் வாழ்வினிலே

இன்ப ஒளி ஏற்றிடலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றிடலாம்,

இதுவரை காலமும்,

எரிமலையாய்க் குமுறும்,

எமது விடுதலை என்னும்,

அணையாத தீபத்தை!

இடும்பன் கொடிபோல,

இணைந்து,

இறுக்கமாகப் பிணைந்து,

ஒரே மரமாகி,

அறுத்தெறிய முடியாத,

பெரு மரமாகும் போதில்,

ஏற்றிடலாம்,

எமது விடுதலை என்னும்,

அணையாத தீபத்தை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபத்தை ஏற்றுதற்கு

திடமான மனம் வேண்டும்

விலைபோகாக் குணம் வேண்டும்

அயராத உழைப்பு வேண்டும்

அலுக்காத செயல் வேண்டும்

அனைவரும் இணைய வேண்டும்

அயலகமும் உதவ வேண்டும்

புயலாக எழ வேண்டும்

அறிவோடு அணுக வேண்டும்

ஆற்றல்கள் அணியாக வேண்டும்

தூற்றல்கள் ஒழிய வேண்டும்

தூய்மையோடு பேச வேண்டும்

நாற்றிசை ஏக வேண்டும்

நாமெல்லாம் ஒற்றாக வேண்டும்

நமக்கானதைப் பெற வேண்டும்

நம் உள்ளமெல்லாம் மகிழ்ந்தாடும்

நாளொன்று மலராதோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலராதோ மங்கையின் புன்னகை

மலர்ந்திடாதோ அழகின் தரிசனம்

எல்லாம் நீயே என பாதந் தொட்டு

வெல்லம் போல அன்பைச்செறிந்து

மெல்ல கதைகள் பல பேசி பேசியே

வெல்லத்தான் முயல்கிறேன் நிதமும்

வலைத்த வலையில்தான் விழுவாயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலையில் தான் விழுவாயா பெண்ணே

வஞ்சகரின் பொய் முகம் அறியாது

போர் தந்தவடுக்களும் சுமைகளும்

முடிவில்லாத வேதனைகளும்

தந்தை இழந்த சோகமும்

கண் காணாத பிள்ளையின் ஏக்கமும்

தாயாய் தந்தையாய் வழி நடத்த

வேண்டிய நிர்பந்தமும் கண்டு

பெண்மையை சூறையாடும்

நெஞ்சு நிறை ந்த வஞ்சகரின்

சகவாசம் கண்டு விழித்தெழு பெண்ணே

Link to comment
Share on other sites

பெண்ணே விழுவாயா?

இல்லையடி.......

இன்று உன் செவ்வாய்

தனிமைதான்

என் தொல்லையடி

Link to comment
Share on other sites

தொல்லை செய்த

உன் செவ்வாயில்

விழுந்தேனே,

வடிந்த

கள்ளுண்டு மயங்கித்

தள்ளாடிப்போனது என் மோகமடி.....

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அந்தாதி

ஒருவர் கவிதை வடிக்க அதன் முடிவு சொல்லை அல்லது எழுத்தை வைத்து மற்றவர் கவிதை வடிக்க வேண்டும். கவிதை எதைப்பற்றியதாகவும் எத்தனை வரியாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

கவிதை அந்தாதி

ஒருவர் கவிதை வடிக்க அதன் முடிவு சொல்லை அல்லது எழுத்தை வைத்து மற்றவர் கவிதை வடிக்க வேண்டும். கவிதை எதைப்பற்றியதாகவும் எத்தனை வரியாகவும் இருக்கலாம்.

மாத்தினாப் போச்சு கறுப்பி..இப்ப சரியா..? கவிதை மேலே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தினாப் போச்சு கறுப்பி..இப்ப சரியா..? கவிதை மேலே

நன்றி நெருப்பு. :)

Link to comment
Share on other sites

கறுப்பி

ஆரம்பத்திலேயே நான்தான் பிழை விட்டேன். இனி திருத்தி பதிவுகளிடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி

ஆரம்பத்திலேயே நான்தான் பிழை விட்டேன். இனி திருத்தி பதிவுகளிடுகிறேன்.

நன்றி நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகமடி, உன்மீது!

முகத்தில் சிரிக்கும்,

முல்லைப்ப் பூக்களாய்,

ஒளிரும் உன் பற்கள் கண்டு!

காதலடி, உன்மீது,

கருக்கொண்ட நீல மேகமாய்,

கழுத்தை மறைத்துப்,

புரளும் கருங்கூந்தல் கண்டு!

நேசமடி, உன்மீது, நீ,

நிலாமதியாய் மாறி,

மலரொன்றின் மென்மையுடன்,

முகில் தடவும் போது,

நொச்சி இலைகளின் அசைவுகள்,

நீவி விடும் வாசத்தில்,

தாகத்தின் கொதி நெருப்பில், நான்

தப்பிலியாய் மாறமுன்பு, என்

கண்ணில் இருந்து மறைந்து,

கனவாக மாறிவிடு 'கறுப்பி!:

Link to comment
Share on other sites

கறுப்பி இருளரசியைக்

கலைத்துவிட்டு

வானேறி வலம்வந்த

கதிரவனின் கண்பட்ட

கணம்தொட்டுத் தனையிழந்து,

வான்நோக்கி

மோகித்து ஆவியாகித்

தானிருந்த நிலைமறந்து

திசைதொலைத்து,

வானலையும்

மேகத்துள் சிறைப்பட்டு

தப்பிலியாய்த் தானலைந்து,

மோகப்பித்தொழிந்து,

நிலாமதியின் குளிர்விப்பில்க்

கருக்கொண்டு

மழையாகி நிலம்நோக்கி

நொச்சிகள் தாலாட்டும்

புங்கையூரான் முற்றத்தில்

புகுந்தது தஞ்சமென்று,

தாய்வீடு நோக்கித்

தப்பித்த மழைத்துளி ஒன்று...

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.